புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_m10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10 
6 Posts - 46%
heezulia
மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_m10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_m10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_m10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_m10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_m10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10 
372 Posts - 49%
heezulia
மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_m10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_m10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_m10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_m10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10 
25 Posts - 3%
prajai
மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_m10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_m10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_m10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_m10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_m10மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களின் மனநிலையும் பெற்றோரின் செயல்பாடுகளும்


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 10, 2012 10:17 pm

நண்பர்களே எங்கள் பள்ளியில் கடந்த வெள்ளியன்று ஒரு சம்பவம் நடைபெற்றது. அந்த செயலை தொடர்ந்து நடைபெற்ற ஒழுங்கு நடவடிக்கைளை இங்கு நான் தொகுத்து தருகிறேன்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று வழக்கம் போல எனது கணினி வகுப்பிற்கு மாணவர்களை அழைத்துச்சென்றேன். அதில் ஒரு மூன்று மாணவர்கள் மட்டும் தாங்கள் கெமிஸ்டிரி பரிட்சைக்காக படிக்கவேன்டும் சார் என்றனர். நானும் சரியென்று சொல்லி அவர்களை கணினியில் வேலை கொடுக்காமல் படிக்கச்சொன்னேன்.

வழக்கமாக நான் எனது கணினி அறையை வலம் வந்து ஒவ்வொரு மாணவனும் என்ன செய்கிறான், நான் கொடுத்த பாடங்களை பயிற்சி செய்கிறானா என்று சோதிப்பது வழக்கம். நான் உட்கார்ந்த இடத்திலேயே எனது கணினியில் உள்ள ஒரு மென்பொருள் துணைக்கொண்டு மாணவர்களின் கணினித்திரையை என்னால் காண முடியும். ஆனால் அவர்கள் அருகில் சென்று என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கவேன்டும் என்று விரும்பி அவ்வாறு உலா வந்தேன்.

கெமிஸ்டரி படிப்பதாக சொன்ன மூன்று மாணவர்களும் ஒரு நோட்டு புத்தகத்தை வைத்துக்கொண்டு உற்று பார்ப்பதையும் என்னை கண்டவுடன் அவர்கள் அந்த நோட்டை முடுவதையும் கவனித்தேன். சட்டென்று அந்த நோட்டை அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டேன். அவர்கள் கெஞ்சினார்கள், நான் விடவில்லை... எல்லா பக்கங்களையும் திருப்பி திருப்பி பார்த்தேன். அது கெமிஸ்டரி நோட்ஸ் உள்ள நோட்டு தான்.

சரி பிறகு தருவதாக சொல்லி அவர்களை கணினிக்கு போகுமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர்கள் விடுவதாக இல்லை. சார் நாங்க எந்த தப்பும் செய்யல, அடுத்த வகுப்பு பரீட்சை அதனால் நோட்டை கொடுங்க என்றார்கள். நான் தருவதாக இல்லை. பிறகு அவர்களை கணினிக்கு அனுப்பிவிட்டு நான் எனது இருக்கைக்கு வந்து அந்த நோட்டின் பக்கங்களை புரட்டினேன். ஒரு பக்கத்தில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தொடரும்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 10, 2012 10:20 pm

2 பிறகு அந்த நோட்டின் ஒரு பக்கத்தை கவனித்தேன். அதில் எல்லாமே எழுத்துக்கள் தான். முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகு அதை தலைகீழாக திருப்பி பார்த்தேன். அதில் ஆசிரியர்களை பற்றியும் மற்ற சக மாணவர்களை பற்றியும்.. மேலும் தனக்கு தெரிந்த பெண் நண்பிகளை பற்றியும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் மிக மிக படுமோசமான விலங்கு புணர்ச்சியையும் சேர்த்து அவர்கள் இருபக்கத்திற்கு எழுதி வைத்து அதை படித்து ரசித்துக்கொண்டிருந்தனர். சோகம்

உடனே அந்த மாணவன் என்னிடம் கெஞ்ச ஆரம்பித்தான். சார் சார் விட்டுருங்க இனி இப்படி செய்ய மாட்டேன் என்றான். இதை இரு மாணவர்கள் பார்த்துவிட்டதால் என்னாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. பிறகு ஒரு பேப்பரில் நடந்தவற்றை எழுதி அந்த நோட்டு புத்தகத்துடன் பள்ளி முதல்வருக்கு அனுப்பி வைத்தேன். முதல்வர் அதில் உள்ளவற்றை படித்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். மிகவும் வருந்திய அவர் அன்று அந்த மாணவனை அழைத்து இப்படியெல்லாம் செய்வது சரியல்ல என்றும், யார் யார் இதற்கு உதவியாக இருந்தார்கள் என்று கேட்க அவன் கைகாட்டியது கிட்ட தட்ட பாதி மாணவர்களை.. அந்த பன்னிரென்டாம் வகுப்பின் பாதி மாணவர்கள் இந்த செயல்களுக்கெல்லாம் உடந்தை.. அனைவருக்கும் இது தெரியும். ஆனால் இவன் நோட்டில் தான் அந்த விசயம் இருந்தது.

பிறகு பள்ளி முதல்வர் என்னை அழைத்து இதுகுறித்து விவாதித்தார். நான் முதல்வரிடம் சொன்னேன், பையன் பாவம் சார், அவன் கூனி குறுகியிருப்பான், இதை விட்டுவிடுவோம், பிறகு பிரச்சனையாக ஆனால் அவன் வாழ்க்கை பாதித்துவிடும் என்று சொன்னேன், அவர் அன்று பையனை ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு போக சொல்லிவிட்டார். சனி ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள் வந்தது. பள்ளி முதல்வர் மற்றும் நான் இன்னும் சில சீனியர் ஆசிரியர்களுடன் இதுகுறித்து விவாதித்து பெற்றோருக்கு இந்த விசயத்தை தெரியப்படுத்துவது என்று கருதி அந்த பையனின் அப்பாவிற்கு தகவல் சொல்லி பள்ளிக்கு வரச்சொன்னார் பள்ளி முதல்வர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 10, 2012 10:23 pm

துப்பறிந்த ஆசிரியர் துப்பறியும் கதை போலவே துவங்கியது நன்றாக இருக்கிறது.

ஆனால் மாணவர்கள் செய்ததுதான் நன்றாக இருக்காதுபோல.

(உங்க மாணவர்கள் ஆச்சே பின்ன எப்புடீ!!! புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 10, 2012 10:35 pm

3. பள்ளிக்கு வந்த பையனின் தந்தை முதல்வரை சந்தித்தார், நாங்கள் வெளியில் காத்திருந்தோம். உடனே ஒரு தொலைபேசி முதல்வருக்கு வந்தது.. அதில் பள்ளிக்கல்வி செயலாளர் திருமதி... ச..... அவர்கள் தொடர்புகொண்டு ஏன் பையனை பிடிச்சீங்க, ஏன் எழுதி வாங்கினீங்க, அவன் டிப்ரஸ் ஆகியிருப்பான். ஏன் பெற்றோருக்கு சொன்னீங்க.. அந்த ஆசிரியர் யார், அவரு என்ன வகுப்புல ..............இருந்தாரு.... அவரு இருக்கும் போது இவன் எழுதுறான்னா அவரு என்ன கால் ஆட்டிக்கிட்டு இருந்தாருன்னு சகட்டுமெனிக்கு முதல்வரை அடி நொறுக்கி தள்ளிட்டாங்க... ஆசிரியருக்கு மெமோ கொடுக்கவேன்டும் என்ற தொனியில் பேசிக்கொண்டிருந்தார். பையனின் தந்தை ஒரு ஐ.ஏ.எஸ் அதனால் பெரிய இடத்து பொல்லாப்பை அசுரன் பெற்றுவிட்டார் பாவம்.

பிறகு முதல்வர் அந்த பையனின் நோட்டுபக்கத்தை பேக்ஸ் மூலம் கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்தார். அடுத்த முனையில் பேச்சே இல்லை... சரிங்க பாதர் நீங்க என்ன நடவடிக்கை எடுக்கனுமோ எடுங்க... என்றார் அந்த பெண் அதிகாரி.

பையனின் அப்பா பள்ளிக்கு வருவதற்கு முன், கல்வித்துறை செயலாளரிடம் சென்று இதுகுறித்து சொல்லியிருக்கிறார். பள்ளி என் மகனை டி.சி கொடுத்துவிடுவார்கள் நீங்க தான் காப்பாத்தனும்னு கெஞ்சியிருப்பாரு.. அதான் அந்தம்மா இந்த போடு போட்டுச்சி

பிறகு அந்த பையனின் நோட்டு பேப்பரை பையனின் அப்பாவிடமே கடைசியாக பள்ளி முதல்வர் காட்டினார், அதை பார்த்த அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணை மூடிக்கொண்டார், சே என் மகன் இவ்வளவு கேவலமானவனா என்று கண்கலங்க ஆரம்பித்தார். பிறகு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நாங்க ஏத்துக்கறோம் என்றார். பள்ளி முதல்வர் டி.சிக்கு ரெடி பண்ண... மீண்டும் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. பையனின் அப்பாவை வைத்துக்கொண்டே (அசுரன்) சார் நீங்க இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க என்றார் பள்ளி முதல்வர்.

இன்றைய மாணவர்களின் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தான் பாதர், இவனுக்கு தண்டனை தருவதாக இருந்தால் டி.சி கொடுக்காதீர்கள், அதற்கு பதில் இவனை ஒருவாரம் சஸ்பென்ட் செய்து அந்த ஒருவாரமும் இந்த மாணவன் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் சேவை செய்து அங்கிருந்து ஒரு சான்றிதழ் பெற்று வந்தப்பின் பள்ளியில் சேரட்டும் என்று சொல்லிவிட்டு, வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்... வெளியில் வந்தால் நம்ம ராஜா போன் வந்தது.. அவருடன் ஒரு 1 மணி நேரம் கதை அடிச்சிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

பையனின் தகப்பன், இவனை ஒருநாளும் கண்டுக்கொள்வதே இல்லை, எப்பவும் வேலை வேலை என்று இருந்ததால் இவன் பலான பலான விசயங்களில் நன்கு தேர்ந்து எல்லாம் தெரிந்தவனாக ஆகிவிட்டான். இறுதியில் பள்ளியை குறித்து தான் செயலாளரிடம் தவறாக கூறியமைக்கு என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பிறகு பையனை கவுன்சிலிங் செய்துவிட்டு அனுப்பி வைத்தேன்.. தண்டனையின் விவரத்தையும் செயலாளருக்கு அனுப்பிவைத்தோம். அவர் இந்த தண்டனையை பார்த்து ஆச்சர்யப்பட்டு தனது பக்க ஆதரவையும் தெரிவித்தார்.

கடைசியாக அப்பா மகன் இருவருக்கும் ஒரு மனபாரம் இறங்கியது போன்ற உணர்வில் இருவரும் பள்ளியை விட்டு சென்றார்கள். ஆனாலும் மகனின் செய்கையால் தந்தை மனம் என்ன பாடுபட்டது என்பதை நான் நேரில் கண்டதும் கலங்கிவிட்டேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 10, 2012 10:37 pm

நம்ம அசுரனனைப் பத்தி தெரியாம அவருக்கே ஆப்படிக்க
நினைப்பவனுக்கு வெப்பாரு ஆப்பிலே பெரிய ஆப்பு நம்ம அசுரன்.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 10, 2012 10:58 pm

இப்போது உள்ள கல்வித்துறை அதிகாரிகள் ஊருக்கு இளைச்சவங்களான ஆசிரியர்களை தாக்குவதில் நன்கு கவனம் செலுத்துகின்றனர். மாணவன் எது செய்தாலும் ஆசிரியர் பொறுப்பு என்று ஒரு ஸ்டேட்மென்ட் விடுவாங்க... கொடுக்கப்படும் நாற்பது நிமிடங்களில் மாணவர்களின் செயல்பாடுகளை எப்படி கவனிப்பது... கடுமையான வேலைகள் கொண்ட பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி ஆசிரியர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் அரசு.. மாணவன் பள்ளி முடிந்தது் வீடு செல்கிறானா அல்லது வேறு எங்காவது செல்கிறானா என்பதை கவனிக்கும் பொறுப்பு பெற்றவரையே சாரும்.

பள்ளியில் மாணவன் வெளியில் என்ன கற்றானோ அதை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்கிறான். இதில் அவனை பிடித்தாலும் தவறு, பிடிக்காவிட்டாலும் தவறு... பிடித்து அவன் தற்கொலை பண்ணிக்கொண்டாலும் தவறு... பிடித்து தண்டனை தந்தாலும் தவறு... எதைத்தான் செய்வது.

பாடம் முடிக்கவில்லையென்றாலும் பள்ளி கண்டிக்கும், பாடத்தை வேகவேகமாக முடித்தாலும் பெற்றோர் திட்டுவர். பாடத்தை கவனமுடன் நடத்தலாமென்றால், இதுபோன்ற ஒழுங்கீனமான குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களின் தொல்லைகளால் நாற்பது நிமிடங்களும் போர்க்களம் தான்.

போன வாரம் ஒரு பணக்கார இஸ்லாம் மாணவன் ஒரு ஆசிரியரை பிடித்து கீழே தள்ளிவிட்டான். வயதில் பெரியவரான அவர் கரும்பலகையில் தலை மோதி அடிபட்டு விட்டது. பணபலம் படைத்த அவன் வீட்டில் ஆசிரியர் டார்ச்சர் தாங்காமல் தான் இப்படி செய்தேன் என்று சொல்லிவைக்க, பெற்றோர் பள்ளி முதல்வரை அனுகி முறையிட கடைசியில் ஒன்றும் அறியாத அந்த ஆசிரியர் அந்த மாணவனிடமும் பெற்றோரிடமும் பிரச்சனையை சுமூகமாக முடிக்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சோகம்

என்ன கொடுமை இது.

தொடரும்

avatar
asaswin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 29/06/2009

Postasaswin Tue Sep 11, 2012 11:23 am

நமது எதிர்காலம் எங்கே செல்கின்றது? மாணவர்களின் தவறுகளுக்கு பெற்றோர் 90சத காரணம். மீதி 10சதவீதம் சமுதாயம் பொறுபேற்க வேண்டும். குழந்தைகள் சரியில்லை என எவராது சொன்னால் பெற்றோற் உண்மையை ஆராயாமல் சொல்பவரிடமே கோபம்கொள்கின்ரனர். மாணவர்-ஆசிரியர் உறவு தாய் மற்றும் தந்தை உறவை விட மேலானது. அன்று அம்பேத்கர் அவர்களுக்கும்,கலாம் அவர்களுக்கும் நல்லாசிரியர்கள் கிட்டாவிடில் நாம் இருவரையும் இழந்திருப்போம். நல்லாசிரியர்கள் தன் பிள்ளை தேர்வில் தவறினாலும் தம் மாணவரின் வெற்றியைக் கொண்டாடுவர். தம் மாணவர்க்கு துயரம் என்றால் வருந்தி உதவுவர். ஆகவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தமது பொறுப்பறிந்து செயல்பட வேண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக