புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
48 Posts - 32%
i6appar
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
1 Post - 1%
prajai
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
48 Posts - 32%
i6appar
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
1 Post - 1%
prajai
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமசிவன் படும் பாடு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 02, 2012 6:28 pm

(டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதியது )

காலைப்பொழுது; தேர் ஓடும் திருவீதியில் பெருமுழக்கம்; “திருத்தொண்டர் சங்கம் – வாழ்க! வாழ்க!” “சிவனடியார் திருக்கூட்டம் – வெல்க! வெல்க! “பசியின் கொடுமை – வீழ்க! வீழ்க!” என்று இரைந்து கொண்டு சென்றது ஒரு திருக்கூட்டம். இடையிடையே ‘பம் பம்’ என்று ஆயிரம் சங்குகள் சேர்ந்து ஒளித்தன.

அத்திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர் பல்லாயிரவர்; அவர்கள் கையிலே திருவோடு; மெய்யிலே திருநீறு; கழுத்திலே தாழ்வடம்; இடுப்பிலே கந்தைத் துணி; அப்பண்டாரப் படையைப் பார்ப்பதற்கு ஊரெல்லாம் திரண்டு எழுந்தது.

ஊருக்கு மேற்கே ஒரு பூந்தோட்டம்; அங்கே போய்ச் சேர்ந்தது திருக்கூட்டம். தலைவர் சுந்தரமூர்த்தி எழுந்து நின்றார். தொண்டர்கள் கைதட்டி ஆரவாரித்தனர். தலைவர் தலைவணங்கிப் பேசலுற்றார். “தோழர்களே! திருத்தொண்டர்களே! நெடுங்காலமாக நமது சங்கம் உறங்கிக் கிடந்தது. ஆயினும் இன்று விழித்துக் கொண்டோம்; ஒற்றுமைப் பட்டோம். திருத்தொண்டர் படை திரண்டு எழுந்துவிட்டது. இதைத் தடுக்க வல்லவர் இவ்வுலகில் உண்டோ? (ஒரு குரல்: “இல்லை; இல்லை”, பலத்த ஆரவாரம்! “தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதே” என்று பாடிய காலம் பழங்காலம். இன்று திருத்தொண்டர்களாகிய நாம் சோற்றுக்குத் தாளம் போடுகின்றோம். நம் திருவோடுகள் எல்லாம் வெறும் ஓடுகளாய்விட்டன. அன்னத்துக்கு அலைந்து போய்விட்டோம். கட்டிக்கொள்ளக் கந்தைத் துணியும் கிடைக்கவில்லை.

நம் தலைவன் – பரமசிவன். நாம் படும் துயரையெல்லாம் அறிவார். அறிந்தும் ஏனோ பாராமுகமாக இருக்கின்றார்! அவர் இருக்கும் இடம் தேடி, நாம் இப்பொழுதே செல்வோம். அவரிடம் என்ன கேட்கவேண்டும் என்பது நமக்குத் தெரியும். நம் திருவோடுகள் ஒவ்வொன்றும் அமுதசுரபியாக வேண்டும். பருத்திச் செடிகள் நாம் தொடும் போதெல்லாம் நாலு முழத்தில் நல்ல ஆடை தரவேண்டும். இவ்விரண்டும் – அன்னமும் ஆடையும் – இப்பொழுதே கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் தீபாவளிக்குத் தலைநாள் வேளை நிறுத்தம் செய்வோம். இது உங்கள் அனைவருக்கும் சம்மதமாயிருக்கும் என்று நம்புகிறேன்” என்று பேசி நின்றார். அப்போது அடியார் எல்லாம் கைகொட்டி எழுப்பிய பேரோசை கைலாசத்தை எட்டியது.

திருவோடு எழுதிய கொடியைக் கையில் எடுத்து முன்னே சென்றார் சுந்தரமூர்த்தி. பரமசிவனுடைய இருப்பிடத்தை நோக்கிப் பண்டாரப்படை நடந்தது. ஒரு பழங்காட்டினுள்ளே இருந்தார் பரமசிவன். அக்காட்டை காத்து நின்றான் நந்தி என்ற சேவகன்.
அவனைக்கண்டு வணங்கினார், சுந்தரம்; திருத்தொண்டர் சங்கத்தின் தீர்மானங்களை அவனிடம் தெரிவித்தார்.

அது கேட்ட நந்தி, “அப்பா சுந்தரம்! திட்டமெல்லாம் சரியாய்ப் போட்டுவிட்டாய்! ஆனால் இப்போது பரமசிவன் படும்பாடு உனக்குத் தெரியுமா? பட்டாடை என்ற பேச்சே அவர் குடும்பத்தில் இல்லை. பார்வதியும் கங்கையும் பருத்தி நூலாடைகள் தாம் கட்டிக் கொள்கிறார்கள். பரமசிவனோ, அதுவுமின்றிப் புலித்தோலை எடுத்து உடுத்தியிருக்கிறார்; குளிர் தாங்கமாட்டாமல் கரித்தோலைப் போர்த்துக் கொண்டிருக்கிறார். உலகத்துக்கெல்லாம் அவர் படியளக்கிறார் என்று பெயர்.

இப்போது அவர் குடும்பத்திற்கே அரிசி பங்கிட்டுக் கொடுக்கப்படுகின்றது. அவரிடம் வேலை பார்க்கும் நான் வயிறாரச் சோறுண்டு அறுபது நாளாயிற்று. மூத்த பிள்ளைக்குச் சாதம் போதாது; தம்பியாகிய முருகனை ஏய்த்து அவன் பங்கையும் சேர்த்துச் சாப்பிடுகிறான். முருகன் ஒரு விளையாட்டுப்பிள்ளை. சாப்பாட்டு வேளையில் ஒரு மயில் ஆடினால் அதையே பார்த்துக் கொண்டிருப்பான்; ஒரு கோழி கூவினால் அதைக் கொண்டுவர ஓடுவான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பாள் பார்வதியம்மை. பிள்ளைகளைத் தட்டி வளர்க்கத் தெரியாத தாய் அவள். அவளுக்கும் கங்கைக்கும் எப்பொழுதும் சண்டை. இருவரும் பிரிந்து தனித்தனியே குடியிருக்க வேண்டுமென்று பரமசிவனிடம் விண்ணப்பம் செய்தார்கள். இப்பொழுது வீட்டுக்கும் பஞ்சம் அல்லவா? தனித்தனி வீடு தருவதற்கு வழியில்லை என்று உணர்ந்த தியாகமூர்த்தியாகிய தலைவர் தம் உடம்பில் ஒரு பாகத்தைப் பார்வதிக்குக் கொடுத்தார்; காடு போன்ற தம் சடையில் கங்கையை வைத்துக் கொண்டார். இப்படி இருக்கிறது பரமசிவன் நிலை. உள்ளதைச் சொல்லி விட்டேன்; இனி உன் சித்தம்” என்று கூறினான்.

“நந்தியின் பேச்சால் சுந்தரத்தின் மன உறுதி உலையவில்லை; பரமசிவனைப் பார்த்தே தீரவேண்டும் என்று வற்புறுத்தினார். அப்படியானால் அதோ தெரிகிறதே, அந்த மயானத்தில் இருக்கிறார் தலைவர். போய்ப்பார்”

(தொடரும்)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக