புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கம் போற்றிய கல்வி  Poll_c10சங்கம் போற்றிய கல்வி  Poll_m10சங்கம் போற்றிய கல்வி  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
சங்கம் போற்றிய கல்வி  Poll_c10சங்கம் போற்றிய கல்வி  Poll_m10சங்கம் போற்றிய கல்வி  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கம் போற்றிய கல்வி  Poll_c10சங்கம் போற்றிய கல்வி  Poll_m10சங்கம் போற்றிய கல்வி  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
சங்கம் போற்றிய கல்வி  Poll_c10சங்கம் போற்றிய கல்வி  Poll_m10சங்கம் போற்றிய கல்வி  Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கம் போற்றிய கல்வி


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 28, 2012 8:13 pm

சங்கம் போற்றிய கல்வி

“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று கூறி தன் நாட்டைப் பற்றி. பெருமைப் பட்டுக்கொள்வான் பாரதி. அது எத்தனை உண்மை. பன்னெடுங்க காலத்திற்கு முன்பே கல்விக்கு முதன்மை இடம் கொடுத்த இனம் தமிழினம். சங்கத் தமிழன் பிரிவு என்பதைக் கூறுமிடத்து கல்வியாற் பிரிவு மூன்று ஆண்டுகள் வரை என்ற இலக்கணம் வகுப்பான். இந்த இலக்கணத்தால் குடும்பத்தைப் பிரிந்து சென்று கல்வியைத் தேடியுள்ளனர், கல்விக்காக நாடு விட்டு நாடு சென்றுள்ளனர் என்பது வெளிச்சமாகிறது.
“கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்கா கசடர்க்குத் தூக்கு மரம் அங்கே உண்டாம்”

என்று கூறும் பாரதிதாசன் ஆட்சியாளர்கள் நாட்டு மக்களுக்குக் கல்வியைத் தருவதில் அக்கறை காட்ட வேண்டும், அதற்கே முதலிடம் தரவேண்டும் என்பதை வெளிப்படையாகச் சற்றுக் கோபத்துடனே சுட்டிக்காட்டுவார். இன்றும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு வழங்கும் சலுகைகளில் முதன்மையான இடம் கல்விக்கே தரப்படுகிறது.

இது ஒரு பெரிய செய்தியே அல்ல. ஏனெனில் போர் யுகமாகவும் ஏர் யுகமாகவும் இருந்த சங்க காலத்திலேயே சங்கத்தமிழன் கல்விக்கு அளித்த இடத்தைப் பார்க்கும்போது நமக்குப் பெரிதும் வியப்பாக உள்ளது.

“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்பு உடையன்”


என்று கல்வியிற் சிறந்த பழம்பெரும் தமிழ் மூதாட்டி ஒளைவை கூறுவார். ஏனெனில் மாசறக் கற்றோன் அறிவுடையவனாக ஆகிவிடுகிறான். எனவேதான் ஒரு குடியில் பிறந்த மக்களில் செல்வந்தர், கொடைவள்ளல், வீரன் என்று பலர் இருந்தாலும் ஒரு மன்னன் கல்வியில் சிறந்த சான்றோனையே தன்னருகில் அழைத்துப் போற்றி வைத்துக்கொள்வானாம். அவன் கூறும் வழியில்தான் ஆட்சியைச் செலுத்துவானாம். இதைக் கூறுவது அனுபவம் மிக்க ஒரு மன்னனே. ஆம் ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்,

“ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்”


என்று கூறுகிறான். இது வீரயுகமாக இருந்த சங்க காலத்தில் எழுந்த பாடல், அதுவும் நாட்டை ஆண்ட ஒரு மன்னனின் மனத்தில் எழுந்த கருத்து என்பதை எண்ணிப் பார்க்கும் போது, நம் முன்னோர்களின் கல்வி பற்றிய கண்ணோட்டம் புலனாகிறது.

இந்தக் காரணம் கருதிதான் தன்னாட்டுப் புலவர்கள் பிறநாட்டுப் புலவர்கள் என்று கல்வியிற் சிறந்தவர்கள் எல்லோரையும் புரவலர்கள் புரந்து வந்தனர். அவர்கள் கூறிய அறிவுரையின் படி நாட்டை ஆண்டு வந்தனர். சோழ நாட்டு மன்னன் கோப்பெருஞ்சோழன் பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையார் இருவரது நட்பும் அறிவின் தளத்தில் அமைந்தது எனில் மிகையாகாது.
இது மன்னராட்சி காலத்துக்கு மட்டும் பொருந்தி வருவதா? மன்னராட்சி, மக்களாட்சி என்னும் எக்காலத்திற்கும் பொருந்தி வருவது. ஆம் இன்றும் அமைச்சர்கள் கற்றவர்களோ கல்லாதவர்களோ ஆனால் ஆட்சியர்கள் கற்றவர்களாக இருப்பதில் இருந்து இக்கூற்றின் உண்மையை உணர முடிகிறது. கற்றோர் பலரின் அறிவுரையின் படி அமையும் ஆட்சியே நல்லாட்சியாக அமைகிறது என்பதையும் நாம் கண்ணுற்று வருகிறோம்.

நாட்டுக்கே கல்வியாளர்களால் நன்மை என்னும் போது கற்ற ஒருவனுக்குக் கிடைக்கும் பெருமையும் புகழும் எல்லாவற்றுக்கும் மேலாக பொருளும் அவன் கற்ற கல்வியால் மட்டுமே கிடைத்துச் சிறக்கிறான்.

பொதுவாகத் தான் பெற்ற பிள்ளைகள் எல்லோரையும் ஒரே மாதிரிதான் தாய் பார்ப்பாள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தாயும் கல்வியறிவு உள்ள பிள்ளையையே பெரிதும் விரும்புவாளாம். இதனையும் சங்கத்தமிழனே கூறுகிறான்.

“ பிறப்புஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்”


என்று கூறி வேறுபாடு பார்க்கக் கூடாத தாயே, கற்றவன், அறிவுடையவன் என்றால் சற்று கூடுதல் மதிப்பு செலுத்துவாள் என்கிறான். ஈன்ற தாயையும் ஏற்றத்தாழ்வு பார்க்கச் செய்வது கல்வி. தாய்மையையே மாற்றும் அல்லது வெல்லும் வல்லமை பெற்றுள்ளது கல்வி, என்று கூறும் இவர், இதனாலேயே எப்பாடு பட்டாகிலும் கற்றல் தேவை என்று வலியுறுத்துகிறார். இதனையும் அதே பாடலில் பின்வருமாறு கூறுகிறார்.

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே”

பிறருக்கு பெரிய செல்வத்தைக் கொடுத்தாகிலும் அடிமை போலத் தொண்டு செய்தாகிலும் கற்க வேண்டிய அவசியத்தையும் இப்பாடல் நன்கு தெளிவுறுத்துகிறது.

இப்படியெல்லாம் கற்ற கல்வியின் பயன் எதுவாக இருக்கும்? எதுவாக இருக்க வேண்டும்? என்று எண்ணிப் பார்த்த அதே அரச புலவன் கல்வி கற்ற சமுதாயத்தில்தான் சாதியால், மதத்தால், இடத்தால் வேற்றுமைகள் அகலும் என்பதையும் சொல்கிறான். இதுவே கல்வியால் கிடைக்கும் நன்மைகள் எல்லாவற்றுள்ளும் மேலான நன்மையாக இருக்கக் கூடும். இருக்கவும் வேண்டும். கல்வியைப் பால் வேற்றுமை பாராமல் கொடுக்கவும் பெறவும் வேண்டும். கல்வி ஒன்றே வேற்றுமைகளை அறவே அகற்றும் அழிப்பான் என்று அனைவரும் அறிந்து கொள்ள வெண்டும் என்பதை வலியுறுத்த எண்ணிய எம் புலவன் அன்றே,

“வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே”


என்றும் கூறுகிறான். நாற்பால் என்பதை நால்வருணம் என்று கூறி மேல்சாதி, கீழ்சாதி என்னும் சாதி வேற்றுமை என்று கூறுவாரும் உளர். அவன் கண்ட இக்கனவு இக்காலத்தில் ஓரளவு நனவாகிக் கொண்டு வருகிறது எனலாம். இந்தக் கண்ணோட்டமே தமிழனைத் தமிழன் என்று தலை நிமிர்ந்து நிறகச் செய்கிறது.

வருணபேதம் மட்டுமன்றி நாடு என்னும் பேதமும் கல்வியால் அகலும் என்பதையும் இவ் அடிகள் அழுத்தமாக வலியுறுத்துகின்றன. நால்வகை நிலப்பகுதியில் கீழ்பால் எனப்படும் தாழ்ந்த நிலமாகிய மருத நிலத்தில் வசிப்பவன் கற்றவனாக இருப்பின் மேட்டுப்பகுதியான குறிஞ்சி நிலத்தில் உள்ள ஒருவன் அவனது கல்வியைக் கேட்டுப் பெற அவனைத் தேடி வருவான் என்பது பொருள். இங்கு சாதி, சமயம் தாண்டி, நாடு என்னும் எல்லையையும் கடந்து கல்வி எல்லோரையும் ஈர்க்கும் தன்மையது, வன்மையதும் கல்வி என்பது புலனாகிறது.

இப்பாடலடிகள் தேனீக்களாகக் கற்றவர்கள் உள்ள இடம் தேடி நாடு விட்டு நாடு சென்றும் கல்வியைப் பெற்றுள்ள பாங்கை எடுத்து இயம்புகிறது. சங்கத்தமிழனின் கல்விக் கொளைகையைப் பறை சாற்றுகிறது. இதனையே,

“மன்னனுக்குத் தன் தேசமல்லால் சிறப்பில்லை;
கற்றோனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”


என்னும் ஒளைவையின் வாக்கும் உறுதிப் படுத்துகிறது. இதனால் மேல்ப்பால், கீழ்ப்பால் என்னும் வேற்றுமை ஆண்பால் பெண்பால் என்னும் வேற்றுமை எல்லாவற்றையும் களையும் கதிர் அரிவாள் கல்வியே என்பது திண்ணம்.



(இந்தக் கட்டுரை 25, 26/08/12 ஆகிய இரு நாட்கள் சென்னையில், உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையமும் எத்திராஜ் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய கல்வி மாநாட்டு மலரில் இடம்பெற்றது)





சங்கம் போற்றிய கல்வி  Aசங்கம் போற்றிய கல்வி  Aசங்கம் போற்றிய கல்வி  Tசங்கம் போற்றிய கல்வி  Hசங்கம் போற்றிய கல்வி  Iசங்கம் போற்றிய கல்வி  Rசங்கம் போற்றிய கல்வி  Aசங்கம் போற்றிய கல்வி  Empty
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Aug 28, 2012 8:20 pm

அருமையிருக்கு சூப்பருங்க நன்றி அன்பு மலர்
நீங்க எழுதினதா அம்மா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 28, 2012 8:30 pm

பது wrote: அருமையிருக்கு சூப்பருங்க நன்றி அன்பு மலர்
நீங்க எழுதினதா அம்மா
ஆமாம் பது. நான் எழுதினதுதான்.



சங்கம் போற்றிய கல்வி  Aசங்கம் போற்றிய கல்வி  Aசங்கம் போற்றிய கல்வி  Tசங்கம் போற்றிய கல்வி  Hசங்கம் போற்றிய கல்வி  Iசங்கம் போற்றிய கல்வி  Rசங்கம் போற்றிய கல்வி  Aசங்கம் போற்றிய கல்வி  Empty
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Aug 28, 2012 8:33 pm

Aathira wrote:
பது wrote: அருமையிருக்கு சூப்பருங்க நன்றி அன்பு மலர்
நீங்க எழுதினதா அம்மா
ஆமாம் பது. நான் எழுதினதுதான்.
அதையும் இணைத்திருக்கலாம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 04, 2012 9:11 pm

பது wrote:
Aathira wrote:
பது wrote: அருமையிருக்கு சூப்பருங்க நன்றி அன்பு மலர்
நீங்க எழுதினதா அம்மா
ஆமாம் பது. நான் எழுதினதுதான்.
அதையும் இணைத்திருக்கலாம்
பெரும்பாலும் நான் என்னோடதத் தான் பதிவிடுகிறேன் பது. அதனால் எழுதல. மேலும் யாருடையதையாவது பதிவிட்டால் அவங்க பேரை குறிப்பிட்டு நன்றி சொல்லாமல் இருக்க மாட்டேன். அதனால்தான்.



சங்கம் போற்றிய கல்வி  Aசங்கம் போற்றிய கல்வி  Aசங்கம் போற்றிய கல்வி  Tசங்கம் போற்றிய கல்வி  Hசங்கம் போற்றிய கல்வி  Iசங்கம் போற்றிய கல்வி  Rசங்கம் போற்றிய கல்வி  Aசங்கம் போற்றிய கல்வி  Empty
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Sep 05, 2012 4:44 pm

மகிழ்ச்சி சூப்பருங்க பதிர்வுக்கு நன்றி நன்றி மகிழ்ச்சி
விநாயகாசெந்தில்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விநாயகாசெந்தில்



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக