புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்  I_vote_lcapஅதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்  I_voting_barஅதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்  I_vote_rcap 
30 Posts - 86%
heezulia
அதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்  I_vote_lcapஅதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்  I_voting_barஅதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்  I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்  I_vote_lcapஅதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்  I_voting_barஅதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்  I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
அதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்  I_vote_lcapஅதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்  I_voting_barஅதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 22, 2012 1:46 pm

ஆள் நடமாட்டமேயில்லாத அந்த நெடுஞ்சாலையில், பிரியாணி மீது வைக்கப்பட்ட முட்டையைப் போல அந்த போர்டு பளிச்சென்று தெரிந்தது.

”எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட்

கிட்டாமணி ஹாரன் அடித்ததும், இரும்புக்கதவு திறந்தது. உள்ளே நுழைந்து வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, கிட்டாமணியும் பாலாமணியும் ‘அலுவலகம்’ என்ற பலகையிருந்த கட்டிடத்தில் நுழைந்தார்கள்.

”வாங்க வாங்க!” என்று ஜிப்பில்லாத பையைப் போலச் சிரித்தபடி வரவேற்றார் கந்துவட்டிவலசு கந்தசாமி. ”உட்காருங்க! என்ன சாப்படறீங்க? ஒட்டகப்பால் காப்பியா, ஒட்டகப்பால் டீயா?”

“என்னது? ஒட்டகப்பாலா?” என்று உட்காருமுன்னரே அதிர்ந்தனர் கிட்டாமணியும் பாலாமணியும்.

”வேண்டாமா? சரி விடுங்க, போகையிலே ஒட்டகப்பால்கோவா தர்றேன். வாங்கிட்டுப்போயி வீட்டுலே மிக்ஸியிலே போட்டுப் பொடிபண்ணிச் சாப்பிடுங்க! உடம்புக்கு நல்லது.”

”உடம்புக்கு நல்லது சரி, மிக்ஸிக்கு ஒண்ணும் ஆகாதே?” என்று சந்தேகமாகக் கேட்டாள் பாலாமணி.

”என்னம்மா, ஒரு தம்ளர் ஒட்டகப்பால் பத்து தம்ளர் பசும்பாலுக்கு சமம் தெரியாதா? அதுனாலதான் நாங்க இந்த ஒட்டகப்பண்ணை ஆரம்பிச்சிருக்கோம். பசுமாடு வளர்க்கிறதைவிட இதுலே பத்துமடங்கு லாபம் கிடைக்கும்.” என்று கந்துவட்டிவலசு கந்தசாமி சொன்னதும், கிட்டாமணி பாலாமணி முகத்தில் பிரகாசம் ஏற்பட்டது.

”அதைக் கேள்விப்பட்டுத்தானே நானே வீடு,வாசல், நகை, நட்டு எல்லாத்தையும் வித்து காசை இன்வேஸட் பண்ண வந்திருக்கோம்.” என்று குதூகலத்துடன் சொன்னார் கிட்டாமணி.

”சார், அது In-Waste இல்லை; Invest!” என்று கந்தசாமி திருத்தினாலும், மனதுக்குள் ’இவருக்கு எப்படி உண்மை தெரிந்தது?’ என்ற கிலி ஏற்படத்தான் செய்தது.

”அத விடுங்க சார்! உங்க விளம்பரத்துலே என்னோட அபிமான நடிகர் குஜால்குமார் வந்து சொன்னதைக்கேட்டதும், மொத்தப் பணத்தையும் உங்க ஒட்டகப்பண்ணையிலே தான் முதலீடு பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன் சார்!” என்று வாயெல்லாம் பல்லாகச் சொன்னாள் பாலாமணி.

”இதுக்கு முன்னாடி எதுலயாவது முதலீடு பண்ணின அனுபவம் இருக்கா உங்களுக்கு?”

”ஓ! பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சென்னையிலே கார் ஃபைனான்ஸ் கம்பனியிலே ரெண்டு லட்ச ரூபா கட்டி கோட்டை விட்டோம். அப்புறம் உஸ்மான் ரோட்டு நகைக்கடையிலே சீட்டுக்கட்டி மூணு லட்ச ரூபா கோட்டை விட்டோம். அப்புறம் பத்து வருஷத்துக்கு முன்னாடி தேக்குமரத் திட்டத்துலே அஞ்சு லட்ச ரூபாய் கட்டி ஏமாந்தோம். அப்புறம் அஞ்சு வருசத்துக்கு முன்னாடி கண்ணம்மாபேட்டை பெனிஃபிட் ஃபண்டுலே ஆறு லட்சம் கட்டி அம்பேலானோம். இப்ப சமீபத்துலே ஈமு கோழியிலே மூணு லட்சம் கோட்டை விட்டோம். நிறைய அனுபவம் இருக்கு!” என்றார் கிட்டாமணி.

”வெரிகுட்! இவ்வளவு கோட்டை விட்டும் எங்க ஒட்டகப்பண்ணையிலே முதலீடு பண்ணனும்னு உங்களுக்கு எப்படித் தோணிச்சு?”

”பணத்தை விட்ட இடத்துலேதானே சார் பிடிக்கணும்? சரவணபவனிலே சாப்பிட்டுட்டு வசந்தபவனிலே போயா வாய் கொப்பளிக்க முடியும்?”

”ரொம்ப கரெக்ட்!” கந்தசாமி பாராட்டினார். “உங்களை மாதிரி புத்திசாலிங்க இருக்கிறவரைக்கும் எங்களை மாதிரி பிசினஸ் பண்றவங்களுக்குக் கவலையே இல்லை!”

”ஒரு சந்தேகம் சார்!” என்று குறுக்கிட்டாள் பாலாமணி. “ஒட்டகப்பால் காப்பின்னு சொன்னீங்களே? ஒட்டகத்துக்கிட்டே எப்படி பால் கறப்பீங்க?”

”ஏணி வைச்சுத்தான்!” என்ற கந்தசாமி உடனே, “என்னம்மா, உங்க மாதிரி ஆளுங்ககிட்டேயிருந்து லட்சலட்சமாப் பணத்தையே கறக்கிறோம். ஒட்டகத்துக்கிட்டே பால் கறக்கிறதா பெரிய விஷயம்?” என்று கேட்டார்.

”உங்க ஸ்கீம் பத்திச் சுருக்கமா சொல்லுங்க சார்!”

”முதல்லே ஒரு அஞ்சு லட்ச ரூபாய் கட்டினீங்கன்னா, ஒரு ஆம்பிளை ஒட்டகமும் ஒரு பொம்பளை ஒட்டகமும் தருவோம். ஒட்டகத்தாலே மூணு நாள் தண்ணிகுடிக்காம இருக்க முடியும். அதுனாலே மாசம் பத்து கேன் வாட்டரும், முப்பது கிலோ புல்லும் சப்ளை பண்ணுவோம். தப்பித்தவறி அதை நீங்க யூஸ் பண்ணிராதீங்க!”

”ஐயோ, நாங்க புல்லெல்லாம் சாப்பிட மாட்டோம் சார்!”

”நான் தண்ணியைச் சொன்னேன் சார்! அப்புறம் ஒரு வருசத்துலே ஒட்டகம் எப்படியும் குட்டி போட்டிரும். அந்தக் குட்டியை எங்க கிட்டே சரண்டர் பண்ணினீங்கன்னா, அதுக்குப் பதிலா இன்னொரு பொம்பளை ஒட்டகம் கொடுப்போம். ஆக வருஷா வருஷம் ஒட்டகத்தோட எண்ணிக்கை அதிகரிக்கும். நீங்க ஓட்டகப்பால் வியாபாரம் பண்ணியே போட்ட பணத்தை எடுத்திரலாம்.”

”ஒரு சந்தேகம் சார்! ஒட்டகம் கண்டிப்பா ஒரு வருஷத்துலே குட்டி போட்டிருமா சார்?” தயங்கியவாறு கேட்டார் கிட்டாமணி.

”அதுக்குத்தான் கூடவே நாங்க ஒரு மல்லிகா ஷெராவத் போஸ்டரும், இலா அருணோட ராஜஸ்தானிய இசை கேசட்டும் தருவோம். நீங்க ஒட்டகங்களோட கண்ணுலே படும்படியா படத்தை மாட்டிட்டு,தினமும் ராத்திரி அந்தப் பாட்டைப் போட்டீங்கன்னா, ஒட்டகத்துக்கு மூடு வந்திரும். அப்புறம் வருஷா வருஷம் குட்டிதான்!”

”ஏன் சார்? ஒட்டகத்துக்கு சீமந்தம் பண்ணனுமா?”

”சேச்சே! அதெல்லாம் வேண்டாம்! சீர் செனத்தி பண்ணுற வழக்கமிருந்தா எங்களுக்கு ஒரு மணியார்டர் பண்ணிருங்க போதும்!”

”என்னமோ சார், உங்களையும் ஒட்டகத்தையும் நம்பித்தான் பணத்தைப் போடப்போறோம்.” என்று கொண்டுவந்திருந்த மஞ்சள்பைக்குள் கையை நுழைத்தார் கிட்டாமணி.

”ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்திட்டேன். பெட்ரோல், டீஸல் விலை ஏறிட்டே போகுதில்லே! ஒரு கல்யாணம் காட்சின்னா நீங்க ஒட்டகத்து மேலேயே ஏறிப்போயிரலாம். செலவு மிச்சம்!”

”ஏனுங்க? முக்கியமான சந்தேகத்தைக் கேட்கவேயில்லையே!” என்று கிட்டாமணியின் தொடையைக் கிள்ளினாள் பாலாமணி.

”அட ஆமாம்! ஏன் சார், ஒட்டகம் பாலைவனத்துலே தான் இருக்கும்னு சொல்றாங்களே? நம்ம ஊரு கிளைமேட் அதுக்கு ஒத்துவருமா? செத்துக்கித்துப் போயிடாதே!” என்று கேட்டார் கிட்டாமணி.

”என்ன சார் புரியாமப் பேசறீங்க? பேப்பரே படிக்கிறதில்லையா?” என்று கேட்டார் கந்துவட்டிவலசு கந்தசாமி. “நமக்கோ அண்டை மாநிலத்துக்காரன் தண்ணி தர மாட்டேங்குறான். நம்மாளுங்களும் அறிக்கை விடுறதோட நிறுத்திக்குவாங்களே தவிர தண்ணி கொண்டுவர ஒரு முயற்சியும் பண்ண மாட்டான். ஆத்து மணலை அவனவன் கொள்ளையடிச்சிட்டிருக்கான். ஏரி, குளம் எல்லாத்தையும் ரொப்பி பிளாட் போட்டு வித்திட்டிருக்கான். இருக்கிற கொஞ்ச நஞ்ச மரத்தையும் வெட்டி வித்துக் காசாக்கித் தின்னு தீர்த்துட்டோம். இப்படியே போச்சுன்னா இன்னும் அஞ்சு வருஷத்துலே நம்ம காவிரி டெல்டாவே பாலைவனமாயிரும். அப்புறம், தமிழ்நாடு முழுக்க எங்க ஒட்டகப்பண்ணைங்க தான்! கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம். என்ன சொல்றீங்க?”

கிட்டாமணியும், பாலாமணியும் முகமலர்ச்சியுடன் ‘எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ் பி. லிட்’டில் பணத்தை முதலீடு செய்து விட்டு, இரண்டு ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு வீடுவந்து சேர்ந்தன

பின் குறிப்பு:

முதலீடுகள் வரவேற்கப் படுகின்றன... கண்ணடி

-- நன்றி : சேட்டை





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 22, 2012 2:17 pm

ஆஹா சுதா அண்ணா! எப்ப இந்த தொழில் ல இறங்குனிங்க.!
உங்க தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.!
அப்படியே In-Waste இல் எனக்கு 2 ஒட்டகம் பார்சல்.! புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 22, 2012 2:54 pm

சூப்பர் சுதானந்தன் - ஒட்டக முட்டையில் லாபம் இன்னும்
அதிகம்ன்னா அதுலயும் பணம் போட நாங்க ரெடியா இருக்கோம்.

ஆனா முட்டைய உக்காரும்போது போட சொல்லுங்க
நின்னுட்டே போட்டா உடைஞ்சிடும்.

நாடு என்னிக்கு திருந்தப் போவுதோ? புன்னகை




avatar
Guest
Guest

PostGuest Wed Aug 22, 2012 4:41 pm

சிரி சிரி எப்படி எல்லாம் யோசிகிரைங்க .. அருமையிருக்கு
அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக