புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
’வைகோ’’… இந்தப் பேரைக் கேட்டாலே எழுச்சியடையும் இளைஞர் கூட்டம் இருந்தது ஒரு காலம். ம.தி.மு.க.வை நிஜமாகவே தமிழகத்திற்கான மறுமலர்ச்சியாக படித்தவர் முதல் நடுநிலைமையாளர்கள் வரை நம்பியது ஒரு காலம். பம்பரம் என்ற தேர்தல் சின்னம் மிக வேகமாய் மக்களிடம் பரவியது ஒரு காலம்.
ஆனால் இன்றைய நிலை?...
வைகோ என்ற தனிப்பெரும் சக்தி அறிமுகமான அளவுக்கு ம.தி.மு.க. என்ற பேரும், பம்பரம் என்ற சின்னமும் மக்களிடம் நிலைப்படாமல் மறந்தேபோனது. தேர்தல் சின்னம் பலமிழக்கும் போது கட்சி பலமும் கபளீகரமாகிப்போகும். (வேட்பாளரைப் பார்க்காமல் வெறும் சின்னத்துக்காக மட்டுமே வாக்களிக்கும் கூட்டம் இன்னமும் மாறவில்லை நம் நாட்டில்) கட்சி பலம் இல்லாதபோது அரசியல் பலமும் அழிந்து போகக்கூடும். அரசியல் பலமின்றி வெறுமனே ஒரு தனிமனிதரின் செல்வாக்கினால் மட்டும் இங்கே பெரிதாய் மக்களுக்காக எதையும் சாதித்து விடமுடியாது.
ஒரு காலத்தில் தி.மு.க. என்ற மிகப்பெரிய திராவிடக்கட்சியின் போர்வாளாய், பிரச்சாரப்பீரங்கியாய், தளபதியாய், கலைஞரின் அன்புத்தம்பியாய் விளங்கியவர்தான் வை.கோபால்சாமி என்ற ‘’வைகோ’’. எப்படி அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் ராஜதந்திரத்துடன் கலைஞர் கட்சியைக் கைப்பற்றினாரோ, அதே ராஜதந்திரத்துடன் தனக்குப்பிறகு கட்சி தனது வாரிசுகளுக்கே சொந்தம் என்ற நிலையை உருவாக்கியதுதான் தி.மு.க.வை விட்டு வைகோ வெளியேறியதற்கான ஒரே காரணம். தி.மு.க.விலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டார் என்பதே வைகோவின் வளர்ச்சியைப்பார்த்து மிரண்ட கலைஞரால் வரலாற்றில் பதியப்பட்ட செய்தி. அவர் வெளியேற்றப்பட்டாரோ… இல்லை வெளியேறினாரோ… எப்படியிருந்தாலும் சரி… அந்நேரத்தில் தி.மு.க… இல்லையன்றால் அ.தி.மு.க. என்று சலித்துப் போயிருந்த தமிழக மக்களுக்கு வைகோ ஒரு மாபெரும் மாற்று சக்தியாகத் தோன்றத் தொடங்கியது, காலம் அவருக்கு வழங்கி அவர் சரியாய் உபயோகப்படுத்திக் கொள்ளாத மிகப்பெரிய வாய்ப்பு.
1944ல் பிறந்த வைகோ, 1994ல் ம.தி.மு.க என்ற தனிக்கட்சியின் தலைவரானார். தனிக்கட்சி தொடங்கிய வைகோவின் பின்னால் அப்போது அணி திரளத்தொடங்கிய இளைஞர் கூட்டம் தமிழக வரலாற்றில் மறக்கமுடியாத செய்தி. அவருடைய கட்சியின் கொள்கைகளை விளக்க தமிழகம் முழுவதும் முதன் முதலில் அவர் மேற்கொண்ட நடைப்பயணம் அவருக்கு வழங்கிய அரசியல் வளர்ச்சியை பிற்காலத்தில் அவர் மேற்கொண்ட எந்த நடைப்பயணமும் வழங்கவில்லை. இனிமேலும் அவர் எத்தனை நடைப்பயணம் மேற்கொண்டாலும் எதுவும் நடக்கப்போவதுமில்லை.
அக்காலக்கட்டத்தில் வைகோவின் வளர்ச்சியைப் பார்த்த நடுநிலையாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் அனைவருமே தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டுக்கும் மாற்றாக மக்கள் வைகோவை ஆதரிக்கத்தொடங்கியதால், வெகுவிரைவிலேயே வைகோ தமிழக முதல்வராகும் நிகழ்வு நடக்கும் என்றே நம்பினர். (அவ்வாறு நம்பிய கூட்டத்தில் நானும் ஒருவன். ஆனால் அப்போது எங்களுக்குத்தெரியாது அதை வைகோ இப்படி புஷ்வானமாக்குவாரென்று!)
வைகோ எதிர்கொண்ட அப்போதைய சட்டசபைத் தேர்தலில் அவர் வெளியிட்ட ஓர் அறிக்கைதான் அவருடைய அரசியல் அழிவுக்கான பிள்ளையார் சுழியைப் போட்டது. ‘’ம.தி.மு.க ஜெயித்து ஆட்சியைப் பிடித்தால், ஜெயலலிதா மற்றும் அனைத்து அ.தி.மு.கவினரிடமிருந்தும் அவர்கள் ஊழல் செய்த அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று பகிரங்கமாக அறிவித்து தேர்தலை எதிர்கொண்டார். அந்தத்தேர்தலில் ம.தி.மு.க பெரிதாய் எதையும் சாதிக்கவில்லை. அ.தி.மு.க.வும் ஜெயலலிதாவின் ஊழலினால் அத்தேர்தலில் படுதோல்வியைத் தழுவியது. அதன் பிறகு வைகோவின் அரசியல் களம் மெள்ள மெள்ள வளர்ச்சியடைந்து கொண்டேயிருந்தது. வைகோ என்ற தனிமனிதர் ஒரு நேர்மையாளராய், புரட்சியாளராய், தமிழினத்திற்காக போராடும் ஒரு தலைவனாய் மக்கள் மனதில் ஆழப்பதிந்து போனார். கறைபடியாத ஒரே அரசியல்வாதியாய் அவருடைய பிம்பம் மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்திருக்கிறது.
மிகச்சிறந்த அரசியல் அடித்தளம் கிடைத்தும், வைகோ அதைச் சரியாக உபயோகப்படுத்தத் தவறிய மனிதராகிப்போனார். 2001ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது. 2002ல் வைகோ தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப்பேசியதாக போடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அதன் பிந்தைய நிகழ்வுகள்தான் மெள்ள மெள்ள வைகோவின் அரசியல் வளர்ச்சிக்கு மூடுவிழா நடத்தத்தொடங்கியது.
சிறையிலடைக்கப்பட்ட வைகோவை அரசியல் சாணக்கியர் கலைஞர் ஒருசில அரசியல் ஆதாயத்துக்காக சந்தித்துப்பேசி ஆதரவளித்தார். அதன் பின்னர் வைகோ சிறையிலிருந்து வெளியில் வந்ததும் கலைஞருடனே பல பொது மேடைகளில் தோன்றினார். பாசத்தம்பி… அப்படி இப்படியென்று மேடையிலேயே கண்ணீர் விட்டு பல பச்சோந்தி நாடகங்கள் அரங்கேறின. அப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டம். ஏற்கனவே கலைஞருடன் மீண்டும் இணைந்து தோன்றியதில் வைகோவின் இமேஜ் மக்கள் மனதில் சரியத்தொடங்கியிருந்தது. வைகோவும் ஒரு சாதாரண சந்தர்ப்ப அரசியல்வாதிதானா என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் முளைத்தது. இது எல்லாவற்றுக்கும் மேலாக தி.மு.க. கூடாரத்திலிருந்த வைகோ கடைசி நிமிடத்தில் அ.தி.மு.க கூடாரத்துக்குத் தாவினார். வைகோ தனது அரசியல் வளர்ச்சியை தானே குழி தோண்டி புதைத்துக்கொண்டது அப்போதுதான்.
தி.மு.க விலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கி, மீண்டும் தி.மு.க.வுடன் ஒரே மேடையில் தோன்றி, இறுதி நிமிடத்தில் அத்தனை நாள் எதிர்த்து வந்த ஜெயலலிதாவின் அ.தி.மு.க கூட்டணிக்குத்தாவி… இப்படி திடீரென்று பைத்தியக்காரத்தனமான பல முடிவுகளை அமல்படுத்தி ம.தி.மு.க. என்ற ஒரு கட்சியை மீட்டெடுக்க முடியாத அதள பாதாளத்துக்குள் தள்ளியது வைகோதான். மக்கள் வைகோ மீது வைத்திருந்த நம்பிக்கை அனைத்தும் மறைந்து போனது. வைகோ ஒரு மறுமலர்ச்சி மாற்றுசக்தியல்ல என்ற நிலைமை வைகோவாலேயே உருவாக்கிக் கொள்ளப்பட்டது.
இன்று விஜயகாந்த் மக்களால் ஒரு மாற்று சக்தியாய் உணரப்படுகிறார். ஆனால் இந்நேரம் மிகப்பெரிய சக்தியாய் வளர்ந்திருக்கவேண்டிய ம.தி.மு.க அழிவின் விளிம்புக்கு வந்தாகிவிட்டது. அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்துக்கொண்டு தேர்தலில் தோற்றபின்பு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாய் வைகோவுக்கு தோன்றிய ஞானோதயங்கள் எல்லாம் மக்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது. அரசியல் பல்டிகளால் தானே கெடுத்துக்கொண்ட தனது இமேஜை நிலைநிறுத்த தொடர்ந்து ஒரே கூடாரமாய் அ.தி.மு.க வுடனே இருந்த காலகட்டத்தில்தான் ம.தி.மு.க தனது தனித்துவத்தை சுத்தமாய் இழந்து போனது. கட்சியையே ஜெயலலிதாவின் காலடியில் அடகு வைத்து நசுக்கிய கதையாகிவிட்டது. இன்று இறுதியாய் ஜெயலலிதாவாலும் ம.தி.மு.க கைவிடப்பட்டாகிவிட்டது.
வைகோவின் இன்றைய நிலை என்ன? வைகோ ஒரு சிறந்த பேச்சாற்றல் மிக்க மனிதர். நாடாளுமன்றத்தில் கருத்துப்பூர்வமான விவாதங்களை எடுத்து வைக்கும் திறமைமிக்க மனிதர். இளைஞர்களை இப்போதும் தன்வசமிழுக்கும் நாவன்மை மிகுந்தவர். இவ்வளவும் வைகோ என்ற தனிமனிதனுக்கு மட்டுமே இன்னமும் மீதமிருக்கிறதேயொழிய ம.தி.மு.க.வும், பம்பரமும் காணாமல் போய் வெகு காலமாகிவிட்டதால் அரசியல் பலம் எதுவுமின்றி வெறும் ஈழ ஆதரவு கோஷமிட்டுக்கொண்டிருப்பது மட்டும்தான் இனி வைகோவின் வேலையா?
வைகோ என்ற தனிப்பெரும் சக்தி நிச்சயமாய் முடிந்து போன சகாப்தமல்ல. ஆனால் ம.தி.மு.கவும் பம்பரமும் சத்தியமாய் மீட்டெடுக்க முடியாத ஒரு முடிந்து போன சகாப்தமே…!
நன்றி_கதம்பமாலை
செந்தில்குமார்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவரு யாருன்னு கேட்கும் நிலை தான் செந்தில் இன்று.
நல்ல மனிதராய் இருக்கலாம்
அறிவிற் சிறந்தவராய் இருக்கலாம்
அரசியல் தெரியாதவராய் இருக்காறே?
நல்ல மனிதராய் இருக்கலாம்
அறிவிற் சிறந்தவராய் இருக்கலாம்
அரசியல் தெரியாதவராய் இருக்காறே?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இவருடைய கேட்ட நேரம் தான் சொல்லவேண்டும் சட்டசபை தேர்தலின் போது தப்பான கூட்டணியால் வந்த விளைவு.
இனிமேல் வைகோ தேமுதிக கம்னியூஸ்ட் மூன்று பேரும் கூட்டணி வைத்தால் மீண்டும் எழுச்சி பெறலாம்.!
இனிமேல் வைகோ தேமுதிக கம்னியூஸ்ட் மூன்று பேரும் கூட்டணி வைத்தால் மீண்டும் எழுச்சி பெறலாம்.!
இக்கட்ச்ச்யின் இன்றைய நிலை இதுதான் என்பது உண்மைதான்...,ஆனால் எக்கட்ச்சியானாலும் இதுதான் நிலை.ஆமாம் அன்று ம.தி.மு.க. என்ற ஒரு கட்சி இவ்வாறு ஆனது என்பதைவிட ஆக்கப்பட்டது என்பதே சரியானது.
அது அரசியல் தந்திரம்.எதிரிக்கு எதிரி நண்பன் என நினைத்த வை.கோ. அவர் அகப்படாமலும் அவரது கட்சி அழியாமலும் இருக்க வேணும் என்று தான் நினைத்தாரே ஒழிய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்,எப்படியாவது நல்லது செய்ய வேண்டும் என்று தன்னலம் பாராதிருந்தால்...மக்களாலேயே அவரும் அவரது கட்ச்சியும் காப்பாற்றப்பட்டிருக்கும்.
இதே நிலையில் தான் இன்று தே.தி.மு.க. தலைவர் அவர்களும்.மூன்றாவது அணி எப்போது வரும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் சரியான சமயத்தில் அரசியலில் பிரவேசித்தார் இவர்...மக்களிடையே நல்ல ஆதரவு இவருக்கு இருந்தது.தனது முதல் தேர்தலிலேயே கணிசமான ஓட்டுகளை பெற்றவர்.
அனால் அவரை இன்று ஆளும் அணியினரும் அன்று ஆண்ட அணியினரும் எவ்வாறு ஏளனம் செய்தனர் என்று இங்கு கோடிட்டு காட்ட விரும்பவில்லை.
எவனும் வரக்கூடாது இங்கு அது தான் திராவிட கட்ச்சிகளின் கொள்கை.
வேறு எதுவும் சொல்வதற்கில்லை இங்கு.நன்றி செந்தில் அண்ணா.
வாழ்க பாரதம்
வளர்க தமிழகம்(இன்னும் எவ்ளோ நாளுக்குத்தான் வளர்ந்துகொண்டே இருக்கணுமோ)
அது அரசியல் தந்திரம்.எதிரிக்கு எதிரி நண்பன் என நினைத்த வை.கோ. அவர் அகப்படாமலும் அவரது கட்சி அழியாமலும் இருக்க வேணும் என்று தான் நினைத்தாரே ஒழிய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்,எப்படியாவது நல்லது செய்ய வேண்டும் என்று தன்னலம் பாராதிருந்தால்...மக்களாலேயே அவரும் அவரது கட்ச்சியும் காப்பாற்றப்பட்டிருக்கும்.
இதே நிலையில் தான் இன்று தே.தி.மு.க. தலைவர் அவர்களும்.மூன்றாவது அணி எப்போது வரும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் சரியான சமயத்தில் அரசியலில் பிரவேசித்தார் இவர்...மக்களிடையே நல்ல ஆதரவு இவருக்கு இருந்தது.தனது முதல் தேர்தலிலேயே கணிசமான ஓட்டுகளை பெற்றவர்.
அனால் அவரை இன்று ஆளும் அணியினரும் அன்று ஆண்ட அணியினரும் எவ்வாறு ஏளனம் செய்தனர் என்று இங்கு கோடிட்டு காட்ட விரும்பவில்லை.
எவனும் வரக்கூடாது இங்கு அது தான் திராவிட கட்ச்சிகளின் கொள்கை.
வேறு எதுவும் சொல்வதற்கில்லை இங்கு.நன்றி செந்தில் அண்ணா.
வாழ்க பாரதம்
வளர்க தமிழகம்(இன்னும் எவ்ளோ நாளுக்குத்தான் வளர்ந்துகொண்டே இருக்கணுமோ)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வைகோ எங்கேன்னு கேக்கறாங்க - நீங்க ராரா எங்கேன்னு கேக்குறீங்களே பகவதி.
போன தேர்தலில் கிடைத்த அறிய வாய்ப்பை இந்த மூன்றாம் அணி கோட்டை விட்டுட்டு கோட்டை வாசலை அம்மா திராவிடக் கட்சிக்கு திறந்து வெச்சுட்டாங்க.
போன தேர்தலில் கிடைத்த அறிய வாய்ப்பை இந்த மூன்றாம் அணி கோட்டை விட்டுட்டு கோட்டை வாசலை அம்மா திராவிடக் கட்சிக்கு திறந்து வெச்சுட்டாங்க.
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
இரா.பகவதி wrote:வைகோ பற்றிய தகவலா இங்கு ரா ரா அண்ணா இப்போது இல்லாமல் போயிட்டாரே
ஏன்னேன்??????
செந்தில்குமார்
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
அவரும் நம்மலபோல தானாஇரா.பகவதி wrote:விநாயகாசெந்தில் wrote:இரா.பகவதி wrote:வைகோ பற்றிய தகவலா இங்கு ரா ரா அண்ணா இப்போது இல்லாமல் போயிட்டாரே
ஏன்னேன்??????
ராஜசேகர் அண்ணாவுக்கு வைகோவின் கருத்துகளும் கொள்கைகளும் அதிகம் பிடிக்கும் மேலும் அதை பற்றி அதிகமாக பேசுவார்
செந்தில்குமார்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|