புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10 
12 Posts - 86%
Manimegala
குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10 
9 Posts - 3%
Jenila
குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 20, 2012 10:40 am

First topic message reminder :

என் ஈகரை உறவுகளுக்கு....

25.07.12 நாளிட்ட குமுதம் இதழில் ‘அம்மா வந்தாள்’ என்னும் என் சிறுகதை பிரசுரமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

சுஜாதா முதலிய பெரிய பெரிய ஜாம்பவான்களின் எழுத்துகளைத் தாங்கி வந்த குமுதம் இதழில் என் எழுத்தும் பதிந்துள்ளது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

மனம் கவர் ஓவியர் ஜெ (ஜெயராஜ்) அவர்களின் ஓவியம் என் கதையை அழகாக்கியுள்ளது என்பது மேலும் ஒரு மகிழ்ச்சி.

சிறுகதை


அம்மா வந்தாள்...


வர்ஷாவின் வருகைக்குப் பின்தான் நரேனுக்கு வியாபாரம் சூடு பிடித்தது என்று சொல்லலாம். வீடு வாங்கியது; ஒன்றுக்கு இரண்டாக கார் வாங்கியது; நளினிக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணி கிடைத்தது எல்லாம் வர்ஷாவின் வருகைக்குப் பின்புதான் ஒவ்வொன்றாக நிகழ்ந்தது என்றே சொல்லலாம். வீடு என்றால் அரசு அலுவலர்கள் வாங்குவது போல ஃபிளாட்டில் ஒரு டபுள் பெட்ரூம் வீடு அல்ல. தனியாக ஒரு பங்களாவே வாங்கி இருந்தார்கள்.

நரேன் தொடங்கிய சிறு வியாபாரத்தில் இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு வளர்ச்சி வந்திருக்கும் என்பதை எவராலும் நினைத்துப் பார்க்க முடியாது. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் பங்கு பெற்றால் கூட பனிரெண்டு இலட்சத்தை எட்டுவது சிரமம். ஆனால் நரேன் தன் வியாபாரத்தில் பனிரெண்டு கோடிகளை எளிதாகவே தாண்டியிருந்தான். இத்தனைக்கும் அவன் செய்தது அலாரம் வியாபாரம்தான். அப்படி என்ன விசித்திரமான அலாரம் என்று கேட்கிறீர்களா? திருடர்கள் கதவைத் திறந்தால் திறந்தவுடன் கத்தி, காட்டிக் கொடுக்குமே அந்த அலாரம். ‘டோர் அலாரம்’ என்பார்களே அதுதான். திருடர்களிடம் இருந்து வீட்டைக் காக்கும் காவல் அதிகாரி அது.


அவன் அந்த வியாபாரத்தைத் தொடங்கிய போது யாரிடமோ வாங்கி தான் விற்றுக் கொண்டிருந்தான். வீடு வீடாக ஒரு நாள் முழுவதும் அலைந்தாலும் ஒரு அலாரம் விற்பதே குதிரைக் கொம்பாக இருக்கும். சலிப்புடன் திரும்புவான்.

“பூட்டிய வீட்டில் கொள்ளை ” என்று செய்தித்தாள்களில் அடிக்கடி செய்திகள் வந்ததைப் பார்த்தான். இவனுக்கு ஒரு யுக்தி உதித்தது. அந்தத் திருட்டுப் போன பகுதிகளில் வியாபாரத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தான். செய்தித்தாள்களில் இந்தச் செய்தியைத் தேடிப் பிடித்துப் படிப்பான். திருட்டுப் போன பகுதிக்கு உடனே சென்று விடுவான். ‘கெட்டிக்காரன் பூட்டுக்கு எட்டுச் சாவி என்பது போல’ அவர்கள் அந்த அச்சத்தில் இருக்கும் போதே, தன் வியாபாரத்தை ஏக போகமாக முடித்து விடுவான். அப்பரமென்ன? திருடர்களுக்குத் திண்டாட்டம். இந்த அலாரப் புலிக்குக் கொண்டாட்டம்.

சிலர் “இந்தச் சத்தம் போதாது. இன்னும் வால்யூமை அதிகப் படுத்திக் கொடுங்கள்” என்றனர். சிலர் “வேறு மாடல் வேண்டும்” என்றனர். கொஞ்சம் வியாபாரம் சூடு பிடித்ததும் யார் யார் எப்படி கேட்டாலும் அப்படியே செய்து கொடுக்க வேண்டி தானே அலாரம் செய்யும் தொழிற்சாலையைத் தொடங்கினான். இப்போதெல்லாம் மொத்த ஆர்டர்கள்தான். வெளி நாடுகளுக்கு மட்டும் மாதத்திற்குப் பத்தாயிரம் டோர் அலாரம் ஏற்றுமதி ஆகின்றன. இதைத் தவிர உள்நாட்டு வியாபாரம் வேறு.

ஆனால் என்ன? அன்று வீடு வீடாக அலைந்ததால் வீடு வர வெள்ளி முளைத்து விடும். சுமார் 500 பேர் கொண்ட தொழிற்சாலையை நிர்வகிப்பது என்பது சும்மாவா. இப்போதும் அதே நிலைதான்.

நரேன் தினமும் வர்ஷா தூங்கிய பின் வருவான். அவள் விழிப்பதற்கு முன் சென்று விடுவான். ஞாயிற்றுக் கிழமையில் அல்லது என்றாவது வர்ஷா சீக்கிரம் விழித்தாலோ தான் தன் அப்பாவைப் பார்ப்பாள். அம்மாவுடன் தினமும் மூன்று அல்லது நான்கு மணி நேரம் இருக்க முடியும். மற்ற நேரமெல்லாம் வர்ஷாவுக்கு ஒரே அடைக்கலம் சாந்திதான்.

சாந்தி ப்ரெத்யேகமாக வர்ஷாவைப் பார்த்துக் கொள்வதற்காகவே வந்தவள். அவர்கள் வீட்டிலேயே தங்கி வர்ஷாவைப் பார்த்துக் கொள்ளும் பதிமூன்று வயது பெண் அவள். அவள் திருநெல்வேலிக்கு அருகில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவள். அவளுக்கு இங்கு புதிய வசதி. புதிய வாழ்க்கை. அவசர அவசரமாக, அரையும் குறையுமாக வேலை முடிப்பாள். மற்ற நேரமெல்லாம் டிவியே கதி என்று அதன் முன்னால் தன்னை மறந்து உட்கார்ந்திருப்பாள்.

சில நேரம் சீரியலைப் பார்த்துக்கொண்டே வர்ஷாவின் மூக்கில் சோற்றை ஊட்டி விடுவாள். பாவம் குழந்தை தும்மி, இருமி.. தானே, கைக்கு எட்டாத வாஷ் பேசினில் ஸ்டூல் போட்டு ஏறி தன் சின்னஞ்சிறு கையால் மூக்கையும் முகத்தையும் கழுவிக் கொள்வாள். சில நேரங்களில் மியூசிக் பார்த்துக் கொண்டே ஜட்டி மாற்றி விடுகிறேன் என்று ஒரே கால் ஓட்டையில் இரண்டு கால்களையும் மாட்டி விட்டு விடுவாள். வர்ஷா திண்டாடி திணறி கழட்டி மீண்டும் தானே சரியாகப் போட்டுக்கொள்வாள். இப்படி தினம் தினம் குட்டி குட்டி சீரியல் கலாட்டாக்கள். ஆனால் அவளும் நல்ல பெண் தான். என்ன டி.வி. பைத்தியம் அவ்வளவுதான்.

அவள் அப்படி டி.வி பார்ப்பதனாலோ என்னவோ வர்ஷாவுக்கு டி.வி என்றாலே பிடிக்காமல் போனது. விளம்பரங்கள் வரும்போது மட்டும் கண்களைச் சிமிட்டாமல் பார்ப்பாள். ஆனால் சாந்தி விளம்பரங்கள் வந்தாலே சேனலை மாற்றிவிடுவாள்.

அம்மா அருகில் இல்லாத ஏக்கம், சாந்தி அடிக்கும் லூட்டி எல்லாம் சேர்ந்து வர்ஷா நளினியைப் பார்த்தவுடன் ஏதாவது ஒரு சாக்கில் அழத்தொடங்குவாள்.

“எனக்கு மட்டும் ஏம்மா முடி நீளமா இல்லை” என்று விளம்பரத்தைப் பார்த்து வர்ஷாவும் அதே கேள்வியை நளினியிடம் கேட்டு நச்சறிப்பாள். நளினியும் “நானும் அந்த ஆண்ட்டி மாதிரி வேலைக்குப் போகிறேன்லம்மா, அதனாலதான் தலைக்கு எண்ணெயெல்லாம் தேச்சி குளிப்பாட்டி விட நேரமில்லை. நீ வளந்து பெரியவளா ஆனதும் உன்னை மாதிரியே பெரிசா முடியும் வளத்து ஜடை பின்னிக்கலாம்” என்று சொல்லி சமாதனப்படுத்துவாள். வர்ஷாவும் கோபத்துடன் பாய்கட் பண்ணிய தன் குட்டிக் கூந்தலைக் கோபத்துடன் பிய்த்துக்கொண்டு இதையேதான் நீ எப்பவும் சொல்லுவே, நான் எப்ப வளருவேன் என்று கண்ணீருடன் குதித்துக் கொண்டே கேட்பாள்“ இன்னும் இரண்டே வருடத்தில் வளந்துருவடா கண்ணு” என்று நளினி கட்டியணைத்துச் சமாதானப்படுத்துவாள்.

இன்னொரு நாள் ”எங்க ஸ்கூல்ல இன்னைக்கு ஸ்போர்ட் டே, நீங்க மட்டும் ஏம்மா வரவே மாட்டேங்கறீங்க? என்று தொடங்குவாள். “அடுத்த வருஷம் ஸ்போர்ஸ் டேக்கு நானும் அப்பாவும் கண்டிப்பா வரோம்மா” என்பாள் நளினி. இப்படியே சொல்லி ஏமாத்தறதத் தவிர உனக்கு வேற எதுவும் தெரியாதா? நீ நல்ல அம்மாவே இல்ல போ….” என்று கோபித்துக் கொண்டு டைனிங் டேபிளுக்குக் கீழே போய் உக்கார்ந்து கொள்வாள் வர்ஷா. கெஞ்சி கூத்தாடி அவளைச் சாப்பிட வைக்கும்போதே அவளுக்கும் தூக்கம் வந்துவிடும். நளினிக்கும் அரைத்தூக்கம் வந்துவிடும்.

தினந்தோறும் நளினி வந்தவுடன் வர்ஷாவிடமிருந்து சாந்தியைப் பற்றி ஒரு கம்ப்ளெயிண்டாவது இருக்கும். ஒரு அடமாவது இருக்கும். அன்று தொடங்கியது புது வித அடம். “அம்மா இந்த சாந்தி என்னோட கொஞ்ச நேரம் கூட விளையாட மாட்டேங்கறா. எனக்கு விளையாட ஒரு தங்கச்சிப் பாப்பா வேணும்” என்று லேசாகத்தான் அழ ஆரம்பித்தாள். எப்போதும் போல கூட அடம் கூட செய்யவில்லை.

ஆனால் நளினிக்கு ஒரு அமைதியான குளத்தில் கல்லை எரிந்தது போல ஒரு கலக்கம். ஒரே குழப்பமாக இருந்தது. குழந்தை மூலமாக கடவுள் தன்னிடம் ஏதோ உரைத்ததாக உனர்ந்தாள். அவள் மனத்தில் ஏன் இன்னொரு குழந்தையைத் தத்து எடுக்கக் கூடாது என்ற எண்ணம் முளை விட்டது.
அன்றும் நரேன் வழக்கம் போல லேட்டாகத்தான் வந்தான். ஆனால் மிகவும் உற்சாகமாக இருந்தான். அவனிடமும் ஒரு பரபரப்பு இருந்தது. வந்தவன் ”நளினி நான் பார்ட்டியில ஃபுல்லா பிடிச்சுட்டு வந்துட்டேன். எனக்கு சாப்பாடு வேண்டாம்; சீக்கிரம் வா ஒரு குட் நியுஸ் சொல்லனும்” என்று சொல்லிக்கொண்டே உடை மாற்றி விட்டு படுக்கையில் விழுந்தான்.

“சாந்தி! இந்தா பால்” என்று அவளுக்கு ஒரு டம்ளர் பாலைக் கொடுத்து விட்டு நரேனுக்குப் பாலை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள் நளினி. நரேன் பாய்ந்து அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு “என்னை வணிகர்கள் சங்கத்தலைவராகத் தேர்ந்தெடுத்து இருக்காங்கடா” என்றான் மகிழ்ச்சியாக. நளினியும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். இவர்களின் துள்ளலில் பாலும் துள்ளிக் குதித்தது. நல்ல வேளை கீழே சிந்தவில்லை.

டேபிளில் பாலை வைத்த நளினி “அவனைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்தாள். எனக்குத் தெரியும் நீங்க சாதிப்பீங்கன்னு….. இது எவ்வளவு பெரிய பெருமை…. உங்க உழைப்புக்குக் கெடச்ச பரிசுங்க இது” என்று சொல்லும் போதே அவளது கண்களில் கண்ணீர் அரும்பியது. ”அட என்னடா செல்லம், சந்தோஷமான நேரத்துல அழற……” என்று அவளை அப்படியே அள்ளி எடுத்துத் தன் மடிமீது சாய்த்துக்கொண்டான். தன் இதழ்களால் அவள் கண்களில் துளிர்த்த கண்ணீரை ஒற்றி எடுத்தான். மென்மையாக அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான். அவள் முகத்தருகே குனிந்து, இதை நாம் எப்படிடா கொண்டாடலாம்? என்று கொஞ்சலாகக் கேட்டான்.

“வர்ஷா வந்தப்பரந்தான் நமக்கு எல்லாம் வந்ததுன்னு நான் நெனக்கிறேன் நரேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்றாள் அவன் கைகளை மெல்ல வருடிக்கொண்டே.

“அதிலென்ன சந்தேகம், நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லன்னு தெரிஞ்சதுக்கப்பரம் இந்த நல்ல முடிவை நீதானே தைரியமா சொன்னே. நானும் தலையாட்டினேன். வர்ஷாவும் வந்தா. கூடவே வசந்தத்தையும் கூட்டிட்டு வந்தா; சந்தோஷமா இருக்கோம். இப்ப என்னடா செல்லம் அதைப்பத்தி” என்றான் நெகிழ்வாக.

“அப்படின்னா அவ சந்தோஷமா இருக்கனுமா இல்லையா நரேன்?” என்று ஒரு வினாவைத் தொடுத்தாள். அதிர்ந்த நரேன் “ஏன் அவளுக்கென்ன? என்ன நடந்துச்சு? தத்து எடுத்த விவரம் தெரிஞ்சு போச்சா?” என்று படபடத்தான்.

“இல்ல….. இல்ல… அவளோட விளையாட யாருமே இல்லைன்னு அழறா. ஒரு தங்கச்சி வேணும்னு அடிக்கடி அடம் பிடிக்கறா. எனக்கும் ஏன் இன்னொரு குழந்தையைத் தத்து எடுக்கக் கூடாதுன்னு தோனுது நரேன். கடவுள் நமக்கு இவ்வளவு வசதியைக் கொடுத்திருக்கும் போது நாம ஏன் இன்னொரு குழந்தைக்கு நல்ல வசதியைச் செஞ்சு கொடுக்கக் கூடாதுன்னு தோனுது நரேன்” என்றாள் கெஞ்சலாக.

“அப்பாடா கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன். அம்மா.. தாயே…. இதுக்கு நீங்க கெஞ்சவெல்லாம் வேண்டாம். அம்மா ஆணை… தட்டமுடியுமா? ஆனா என்ன, ஏன் இதெல்லாம் எம் மரமண்டைக்குத் தோனவே மாட்டேங்குது….” என்று விளையாட்டாகத் தலையில் தட்டிக்கொண்டான். அவள் “போதும் விளையாடாதீங்க…. சீரியசா பேசிட்டு இருக்கும்போது..” என்று அவன் கன்னத்தில் செல்லமாக ஒரு அறை கொடுத்தாள். “செஞ்சிடலாம். நாளைக்கே வர்ஷாவோட பிறந்த இடத்திற்குப் போகலாம். குட்டி வர்ஷாவோட வரலாம், போதுமா?” என்று சொல்லிக் கொண்டே விளக்கை அணைத்தான்.

மறுநாள் நளினி வர்ஷாவிடம் “உனக்கொரு தங்கச்சிப் பாப்பாவைக் கூட்டிட்டு வரப் போறோம். வாடா… வாடா செல்லம்…; சீக்கிரம் கிளம்பு..” என்று வர்ஷாவைத் தயார் படுத்தினாள். ஹையா! என்று குதித்துக் கொண்டே வர்ஷா வேக வேகமாகக் கிளம்பியது.

வர்ஷாவுக்கு, விளையாடத் தனக்கு ஒரு துணை வருவதில் சொல்லத் தெரியாத சந்தோஷம். நளினிக்கு நல்ல காரியம் ஒன்னு செய்யப் போகிறாள் என்பதால் சொல்ல முடியாத சந்தோஷம். நரேனுக்கு நளினியின் ஆசையை நிறைவேற்றுவதில் அளவில்லாத சந்தோஷம். விஷ்ராந்தி இல்லத்திற்குள் நுழைந்த நளினி நரேன் தம்பதியினரைக் கண்டதும் இல்ல நிர்வாகிகளுக்கும் அதை விடவும் சந்தோஷம்.

நளினி கொண்டு போயிருந்த இனிப்பையும் டிரஸ்ஸையும் ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுத்தாள். அப்படியே வர்ஷாவின் தங்கையாக இருக்க, பொருத்தமான ஒரு குழந்தையையும் தேர்ந்தெடுத்தாள். அது நகத்தைக் கடித்தபடி நளினியைப் பார்த்து ஞே என்று விழித்தபடி நின்றிருந்தது.

பக்கத்தில் அரிசியைப் புடைத்துக் கொண்டிருந்த ஒரு பாட்டியம்மாவின் கருப்பும் வெள்ளையுமாக நீண்ட முடியைப் பிடித்துக் கொண்டு “உங்களுக்கு மட்டும் இவ்வளவு முடி இருக்கு…... எனக்கும் இப்படி வளத்துத் தருவீங்களா?” என்று கேட்டுக்கொண்டிருந்தாள் வர்ஷா.
அவளை அழைத்தாள் நளினி. அருகில் வந்த வர்ஷாவிடம், “இந்தத் தங்கச்சியை உனக்குப் பிடிச்சிருக்காடா செல்லம்? நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாமா” என்று நளினி கேட்டாள்.

“இல்லம்மா இந்த கிரேண்ட்மாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்மா” என்றாள் ஓடிப் போய் அந்தப் பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு. அம்மா இவங்கள வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்மா. பாட்டி வந்தா எனக்கு நிறைய கதை சொல்வாங்க. நான் தூங்கும்போது என்னைத் தட்டிக் கொடுப்பாங்க. நிலாவைக் காட்டி எனக்குச் சாப்பாடு ஊட்டுவாங்க. எனக்கு உடம்பு சரியில்லேன்னா கஷாயம் வச்சுக் கொடுப்பாங்க. என் தலைமுடி நல்லா வளர மூலிகை எண்ணெய் காய்ச்சிக் கொடுப்பாங்க. தங்கச்சி பாப்பாவை விட இவங்க வந்தாங்கன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. நீங்க வரதுக்கு லேட்டானா கூட நான் இவங்களோட விளையாடிக்கிட்டு இருப்பேன். இவங்க வந்தாங்கன்னா கிரேன் பேரண்ட் டே அன்னக்கு இவங்கள எங்க ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போய் இவங்கதான் எங்க பாட்டின்னு எல்லார்கிட்டயும் சொல்லுவேன். அதனால இந்தப் பாட்டிய வீட்டுக்குக் கூட்டிட்டுப் பொலாம்மா” என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தாள் வர்ஷா.

நளினி நரேனைப் பார்த்தாள். நரேன் லேசாகத் தலையை ஆட்டி சம்மதத்தைச் சொன்னான். பாட்டியும் வந்தாள் வர்ஷாவுக்கு.

வர்ஷாவைத் தூக்கிக் கொண்டு வீட்டு வாசலில் நின்ற கமலாவை (பாட்டியை) ஆரத்தி எடுத்து வரவேற்றனர் நளினியும் நரேனும்.

”வாங்க! வாங்க! கிரேன்மா நான் என் பொம்மையெல்லாம் காட்டறேன்” என்று பாட்டியின் சுருக்கம் நிறைந்த கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக உள்ளே போனாள் வர்ஷா. பாட்டியும் குழந்தையாக அவள் பின்னே உள்ளே போனாள்.

“ஒரு மகளைக் கொடுத்தான். இப்ப நமக்கு ஒரு அம்மாவக் கொடுத்திருக்கான். கடவுள் ஒரு கதவை மூடினா இன்னொரு கதவைத் திறப்பான்னு சொல்லுவாங்க. நமக்கு ஒரு கதவை மூடிட்டு, ரெண்டு கதவைத் திறந்திருக்கான்ல நரேன்” என்று நரேனின் காதில் ரகசியமாகச் சொன்னாள் நளினி.……….



(இந்தக் கதையைப் பிரசுரம் செய்த குமுதம் இதழுக்கும் இதழாசிரியருக்கும் அழகான ஓவியக் கொடை தந்து கதைக்கு மேலும் சிறப்பு செய்த ஓவியர் ஜெயராஜ் அவர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.)


ஏறத்தாழ நாற்பது பாராட்டுக் கடிதங்கள் வந்துள்ளதாகச் சொல்லி வாழ்த்து மின்னஞ்சல் குமுதம் அலுவலகத்தில் இருந்து வந்திருந்தது. மிக்க மகிழ்ச்சி.

அடுத்த குமுதம் இதழில் வெளியான என் சிறுகதை பற்றிய ஒரு விமர்சனம் இதோ.

//ப. பானுமதி எழுதிய ‘அம்மா வந்தாள்’ சிறுகதை சமீபத்திய சிறுகதை வராலாற்றிலேயே வெகு டீசண்டான சிறுகதை. உமது கோணல் புத்தி மண்டை எப்படித்தான் இந்தக் கதயை செலக்ட் செய்ததுவோ! சும்மா சொல்லக்கூடாதையா - இப்படி ஏதாவது அதிசயம் செய்து எங்களைத்தொடர்ந்து குமுதம் வாங்க வைத்து விடுகிறீர்.//

விமர்சனம் மூலம் என் சிறுகதைக்கு வெளிச்சம் பாய்ச்சிய அந்த ஒளிர்க்கரங்களுக்கு நன்றி.




குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Empty

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 22, 2012 10:56 am

சூப்பருங்க வாழ்த்துக்கள் அக்கா , கதை மிக அருமையாக இருக்கிறது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 22, 2012 11:10 am

தொடருங்கள் அக்கா! மகிழ்ச்சி மகிழ்ச்சி
கதை உணர்வு பூர்வமாக இருக்கிறது வரும் இதழில் உங்கள் கைவண்ணத்தை காண ஆவலாய் உள்ளோம்.!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 22, 2012 11:43 am

கதையை படித்ததும் எதோ ஒரு உணர்வு என்னவென்று சொல்லத் தெரியவில்லை ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க அக்கா ....மேலும் தொடர வாழ்த்துகள் அக்கா.... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
vaira31
vaira31
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Postvaira31 Wed Aug 22, 2012 7:09 pm

அன்புள்ள ஆதிராஅக்கா,
விச்ராந்தி இல்லத்தில் குழந்தையைத் தத்து கொடுப்பது கிடையாது. முதல் குழந்தை தத்தெடுத்தாலும் அடுத்த குழந்தைக்கும் எல்லாஃபார்மாலிட்டிஸ் உண்டு.சிறுகதையாக இருந்தாலும் நீங்கள் பெரிய எழுத்தாளர் கதைகளை-திறனாய்வு செய்யும்போது கவனித்திருக்கலாமே?இது ஒரு வாசகரின் தாழ்மையான விமர்சனம்தான்.முடிவு அபாரம்!கருத்துக்கு மட்டும் முக்கியத்துவமளித்து நாவலோ, சிறுகதையோ அமைப்பதில்லை.கதைப்பின்னலும் அவசியம்.கதை நிகழ்வுகளும் அவசியம்.
என்னுடைய பாஸ்வேர்ட் மறந்ததால் எனது கணவர் பெயரில் நான்தான் அனுப்பினேன்.
முனைவர் பட்டத்திற்காகக் காத்திருக்கும்
புலவர்பி.ஆர் லட்சுமி.,பி.லிட்.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்ஃபில்.,பிஜிடிசிஏ

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Aug 22, 2012 9:28 pm

அருமையான சிறுகதை,
படித்து முடித்ததும் கண்களில் கண்ணீர்,
கதையானலும் மனதை நெகிழச் செய்துவிட்டது.
நன்றி

சிவபாலன்
சிவபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 22/08/2012

Postசிவபாலன் Wed Aug 22, 2012 9:51 pm

கதையை படித்தேன் நன்றாக உள்ளது உங்கள் படைப்பு மேலும் மேலும் வளர என் அன்பு வாழ்த்துக்கள் ஆதிரா அக்கா அருமையிருக்கு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 22, 2012 10:07 pm

சிவபாலன் wrote:கதையை படித்தேன் நன்றாக உள்ளது உங்கள் படைப்பு மேலும் மேலும் வளர என் அன்பு வாழ்த்துக்கள் ஆத்திர அக்கா அருமையிருக்கு
இது எழுத்துப்பிழை என்றால் உங்களுக்கு மன்னிப்பு உண்டு நண்பரே! இல்லையேல் எச்சரிக்கை புள்ளிகள் பெறுவீர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என் பதிவு கண்டு உடனே திருத்தாவிடில் இதை நீங்கள் வேன்டுமென்றே செய்ததாக எண்ணி உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்.

அன்புடன்
ஈகரை நிர்வாகம்


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Aug 23, 2012 12:43 am

vaira31 wrote:
முனைவர் பட்டத்திற்காகக் காத்திருக்கும்
புலவர்பி.ஆர் லட்சுமி.,பி.லிட்.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்ஃபில்.,பிஜிடிசிஏ
நன்றி



குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Aug 23, 2012 12:44 am

ராஜா wrote: சூப்பருங்க வாழ்த்துக்கள் அக்கா , கதை மிக அருமையாக இருக்கிறது.
நன்றி ராஜா.



குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Aug 23, 2012 12:46 am

அருண் wrote:தொடருங்கள் அக்கா! மகிழ்ச்சி மகிழ்ச்சி
கதை உணர்வு பூர்வமாக இருக்கிறது வரும் இதழில் உங்கள் கைவண்ணத்தை காண ஆவலாய் உள்ளோம்.!
மிக்க நன்றி அருண். தொடர்வோம். அடுத்த கதை அடுத்த வாரமே கேட்டு விட்டார்கள். எனக்குத்தான் நேரமில்லை. விரைவில் வரும்.



குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா - Page 3 Empty
Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக