புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெசோ மாநாடும்.....ஈழத்தமிழர் விடியலும்....! ஒரு ஆய்வுப் பார்வை....!
Page 1 of 1 •
- GuestGuest
![டெசோ மாநாடும்.....ஈழத்தமிழர் விடியலும்....! ஒரு ஆய்வுப் பார்வை....! 200689_190643737639434_100000814275402_405179_1967939_n](https://2img.net/h/2.bp.blogspot.com/-KEG3T5vasKk/UB9jIxSIxZI/AAAAAAAAAoE/3ifu360kkYs/s400/200689_190643737639434_100000814275402_405179_1967939_n.jpg)
தமிழ் ஈழ ஆதரவாளர்கள் இயக்கம் மீண்டும் சோம்பல் முறித்து எழுந்து ஒரு மாநாடும் நடத்தியும் விட எல்லாவிதமான முஸ்தீபுகளையும் செய்ய ஆரம்பித்தாகி விட்டது. ஈழ ஆதரவு இயக்கம் என்று கடும் ஆக்ரோசத்தோடு 1985லே ஆரம்பிக்கப்பட்டு இலங்கை அரசை நடு நடுங்கச் செய்த டெசோவும் இந்த டெசோவும் ஒன்றுதானா என்ற கேள்வி நமக்குள் எழுவதற்கு காரணமாய் பல்வேறு விடயங்களை இங்கே முன் வைக்கலாம். ஈழம் பற்றிய இந்தியாவின் பார்வை எப்போது தனி ஈழம் பெற்று தருவதாய் ஒருபோதும் இருந்திருக்கவே இல்லை.
சர்தார் வல்லபபாய் படேல் என்னும் இரும்பு மனிதர் தைத்துக் கொடுத்த ஒட்டுப்போட்ட துணியைத்தான் இன்று நாம் இந்திய தேசம் என்று ஏந்திப் பிடித்துக் கொண்டு தேசிய உணர்வென்னும் தொடர்ச்சியாய் பரப்பப்பட்ட பொது புத்தியில் இந்தியர்கள் என்று கூறிக் கொண்டு இறையாண்மையையும், தேசப்பற்றினையும் வலுக்கட்டாயமாக நமது தோளிலே சுமந்து கொண்டிருக்கிறோம். இந்தியா என்ற ஒரு தேசத்தின் ஸ்திரத்தன்மை எப்போதும் வலுவான பிராந்திய உணர்வுகளுக்கு எதிரானது. இந்தியாவில் இந்தியனாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை மட்டுமே இந்த தேசம் தங்கு தடையின்றி எப்போதும் வழங்கி வந்திருக்கிறது. மாறாக ஒவ்வொரு பிராந்தியத்திலும் இருக்கும் இன குழுக்கள் ஒரு போதும் தங்களை இனத்தின் அடிப்படையில் வரையறுத்துக் கொண்டு ஒரு போதும் தனித்து இயங்க முடியவே முடியாது.
இனத்தின் அடிப்படையில் கோசங்கள் எழுப்பியவர்களை எல்லாம் பொற்கோவில்களுக்குள் காலணிகளோடு சென்று இயந்திரத் துப்பாக்கிகள் சுட்டுக் கொன்றிருக்கின்றன என்பதுதான் வரலாறு. இந்தியா என்னும் தேசத்தின் ஒற்றுமைக்கு ஏதோ ஒரு வகையில் குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு விசயத்தையும் இந்திய தேசம் ஆதரிக்காது என்பது சிறு பிள்ளைகளுக்குக் கூட தெரியும். இப்படியான ஒரு மனோநிலையோடும் மிகப்பெரிய அச்சத்தோடும்தான் தனித் தமிழ் ஈழம் என்ற ஒரு விடயத்தை இந்தியப் பேரரசு பார்த்து வருகிறது.
தனித் தமிழ் ஈழம் ஒரு வேளை அமைந்து விட்டால் அதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களும் தாங்கள் தனியாய்ப் பிரிந்து சென்று ஈழத்தையும் உள்ளடக்கிய தமிழர் குடியரசு ஒன்றை உருவாக்கி விடுவார்களோ என்ற பேரச்சம் எப்போதும் இந்திய உள்துறை அமைச்சகத்தை நிம்மதியாக இருக்கவிட்டது கிடையாது. இந்தியாவில் தமிழர்களுக்கான ஒரு நிலப்பரப்பு இல்லாமல் இருந்திருந்தால் ஒரு வேளை இந்தியாவே தனித் தமிழ் ஈழத்தை தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுத்தும் இருக்கலாம் என்பதும் நிதர்சனமே...!
காங்கிரஸ் என்னும் பெரும் கட்சி இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த ஒரு கட்சியாகவே தொடர்ந்து பாமரர்களிடம் இன்று வரை தன்னை அடையாளப்படுத்தி வருவதோடு இந்தியா என்னும் ஒருங்கிணைந்த பல்வேறு தேசிய இனங்களை ஒருங்கிணைக்கவும் எப்போதும் வலுவாய் பயன்பட்டது என்னவோ உண்மைதான்.... என்றாலும் வெவ்வேறு மத, மன, இன உணர்வுகளைக் கொண்ட பல்வேறு பட்ட மக்களை பேதமில்லாமல் இணைக்க இந்தியாவை பெரும்பான்மையான நாட்கள் ஆண்ட, ஆளுகின்ற காங்கிரஸ் கட்சியால் முடியவில்லை. அடிப்படையில் காங்கிரஸ் கட்சி என்பது முதலாளிகளின், மேல்தட்டு வர்க்க மக்களின் அதுவும் குறிப்பாய் வட இந்தியர்களின் ஆளுமையைக் கொண்ட ஒரு கட்சி. தன்னை இந்தியாவின் பொது அடையாளமாய்க் காட்டிக் கொண்டாலும் வடநாட்டு தலைவர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் பிரதமர் நாற்காலி படியளக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதையும் அறிவோமாக;
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பதவியும் அரசியலும் வேண்டாம் என்று ஒதுங்கிய மகாத்மா காந்தியின் நிலைபாட்டினை நேரு தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்டதை இன்று வரை நேருவின் குடும்பத்தினராய் அடையாளம் காணப்படும் சோனியா அம்மையாரின் குடும்பம் விட்டு விடாமல் உடும்புப் பிடியாய் பிடித்து தொங்கிக் கொண்டுதானிருக்கிறது. இந்தியாவில் யாதொரு கிளர்ச்சிகளும் வெடித்து விடாமல் கவனமாய் பார்த்துக் கொள்வதின் மூலம் நேருவின் குடும்பம் பாரம்பரியமாய் இந்த தேசத்தின் தோள்களில் ஏறி நின்று சவாரி செய்ய முடியும் என்ற உண்மையை ராகுல் காந்தி வரை சரியாய் புரிந்து வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
இந்தியா ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்ற நினைப்பே தங்களின் சுயநலத்தில் இருந்து விளைந்த ஒரு போலியான உணர்வு என்பதை இன்று வரை நேருவின் குடும்பத்தினர் கவனமாய் பாதுகாத்தும் வருகின்றனர். நியாயங்களை நியாங்களாய் பார்க்கும் போக்கு இந்த சுயநலத்தால் அடிப்பட்டுப் போனது வேதனை என்று சொல்லும் அதே நேரத்தில்....
இந்த சுயநலம் இலங்கையில் அடக்கி ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் மீது இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பெயரில் தனது கோரப்பற்களை பதிக்கவும் செய்தது. இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கோரத்தாக்குதல்களையும், வன்முறைகளையும் தாங்க முடியாமல் தங்களின் சொந்த மண்ணை மீட்டெடுக்க அங்கே தமிழர்கள் போராடிக் கொண்டிருக்க, இந்திய அரசு இலங்கையோடு இந்தியா இலங்கை அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது. தமிழர் பிரச்சினையில் தலையிட்ட இந்திய அரசு தமிழர்களுக்கான சம உரிமை வாழ்க்கையைப் பெற்றுக் கொடுப்பதற்கு சிங்கள பேரினவாத அரசு இடம் கொடுக்கவில்லை. தமிழர் சம உரிமை என்பதற்கான சாத்தியக் கூறினை சிங்கள அரசு கொடுக்காமல் முரண்டு பிடிக்க, தனித்தமிழ் ஈழம் என்ற விசயத்தை இந்திய அரசு ஆதரிக்க முடியாமல் விலகிக் கொள்ள.....நடுவில் ஈழத்தமிழர்கள் யாரை நம்புவது யாரை எதிர்ப்பது என்ற குழப்பத்தில் தங்களுக்கான போராட்டத்தை தாங்களே வலுவாக முன்னெடுக்கத் துணிந்தார்கள்...
இந்திய அரசு தங்களுக்கு உதவும் என்று நம்பிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கம், தங்களின் எண்ணத்திற்கு மாறாக இந்திய அமைதிப்படை என்ற பெயரில் தமிழர்களைக் கொன்றழித்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. சற்றேறக்குறைய சுமார் 70,000 தமிழர்கள் இந்திய அமைதிப்படையால் சின்னாபின்னமாக்கபட்ட துயரத்தில் வேறு வழியின்றி இந்திய படையினரை எதிர்த்து தாக்கி சற்றும் சளைக்காமல் கதிகலங்கச் செய்தனர்....
இலங்கையில் இருந்து இந்தியா திரும்பிய இந்திய படையினர் சென்னை வந்த போது அப்போதைய தமிழக முதல்வராய் இருந்த ஐயா கருணாநிதி அவர்கள் வரவேற்க செல்லாமல் இந்திய அரசுக்கு மெளனமாய் தனது கண்டனத்தை வலுவாய் தெரிவித்தார். கருணாநிதி என்றாலே ஈழப் போருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உதவும் ஒருவன் என்ற ரீதியில்தான் வடநாட்டு தலைவர்கள் 1983களிருந்து தொடர்ச்சியா 1989 வரை உறுதியாய் நம்பினார்கள் என்றாலும் கருணாநிதியும் தமிழ் ஈழ விசயத்தில் தனது முழு ஆதரவையும் விடுதலைப்புலிகளுக்கு கொடுத்தவராகவே இருந்து வந்தார்.
இந்திய அமைதிப்படை தமிழர்களைத் தாக்கியழித்ததை விடுதலைப் புலிகள் சர்வசாதாரணமாய் ஏற்றுக் கொள்ளவில்லையாதலால் மீண்டும் ராஜிவ் 1991 தேர்தலில் வெற்றி பெற்று இந்திய பிரதமரானல் தங்களின் தமிழ் ஈழ போராட்டத்திற்கு முட்டுக்கட்டையாயிருப்பார் என்று கருதி 1991 மே 21ல் ராஜிவை மனித வெடி குண்டு தாக்குதல் மூலம் கொன்றனர். இந்திய அரசியல் சுழலை விடுதலைப் புலிகள் சரியாய் திட்டமிட்டு ஆராயமல் செய்த இந்த நடவடிக்கையால் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு தமிழகத்தில் சுத்தமாய் செத்துப் போனது. போபர்ஸ் பீரங்கி ஊழலின் அதிர்வுகள் நாடு முழுதும் அலையலையாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது, அதன் விளைவாய் ராஜிவ் மீண்டும் பிரதமராவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவுதான் என்பதையும், தமிழகத்தில் 1989ல் விடுதலைப்புலிகளால் ஆட்சியை இழந்த கருணாநிதிக்கு வெற்றி வாய்ப்புக்கள் இருந்ததையும் புலிகள் கணிக்கத் தவறியது....வரலாற்றில் பெரும் பிழையாய் பொறிக்கப்பட்டு விட்டது.
கால சுழற்சியில் ராஜிவ் கொலை என்னும் விடயத்தால் தமிழகத்தின் ஆதரவுக் குரல்கள் முடங்கிக் கொள்ள, புலிகள் எதிர்ப்பு முழக்கம் தமிழகத்தில் ஜெயலலிதா போன்ற தலைவர்களாலேயே கடுமையாக ஆதரிக்கப்பட்டு புலிகளின் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. தாய்த் தமிழகத்திலிருந்து கிடைத்த பெரும் ஆதரவு இதன் மூலம் முடக்கப்பட புலிகளின் இயக்கம் தனித்து விடப்பட்டு முடக்கப்பட்டது. இப்படியாய் புலிகள் நிர்கதியாய்ப் போனதற்கு ராஜிவ் கொலையும், புலிகளை ஆரம்பத்திலிருந்தே வெறுத்த தமிழக பாசிச தலைவர்களுமே காரணமாய்ப் போனார்கள்...
ஒட்டு மொத்த தமிழகமும் புலிகளைப் பற்றியும் ஈழ விடுதலைப் பற்றியும் பேச முடியாத ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுப் போனது. காலத்தின் ஓட்டத்தில் காங்கிரஸ் தலைமை ராஜிவ் கொலைக்கு பலிக்கு பலி வாங்கும் ஒரு சூழலை எதிர்ப்பார்த்து காத்திருந்ததும், தமிழகத்தில் அதற்கு சரியான கூட்டணியாய் திமுகழகம் அமைந்ததும், திமுகவை கிடுக்கிப் பிடி போட்டு கழுத்தில் கத்தி வைத்து காய் நகர்த்துவது போல காய் நகர்த்தி ஈழத்தில் தமிழர்க்ள் மீது தாக்குதலை பாரிய அளவில் சிங்கள அரசு நடத்திய போது தாய் தமிழகத்திலிருந்து ஆதரவு குரல்களை தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் செய்யாவண்ணம் பல விதமான சூழல்களை இங்கே சூட்சுமமாய் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு புகுத்தியிருந்தது.கூட்டணி என்ற போர்வையில் திமுகவை பிணைக்கைதியாய் பிடித்து வைத்துக் கொண்ட காங்கிரஸ், அதிமுகவிலிருந்து ஈழப்போர் நடக்கும் போது பெரிய எதிர்ப்பு வராது என்பதையும் அறிந்தே வைத்திருந்தது. இதனால்தான் ஈழத்தில் தமிழர்கள் கொன்றழிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளுமே மிகப்பெரிய தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் போரட்டங்களை நடத்த முடியாமல் போனது.
தமிழர் தலைவராய் அடையாளம் காணப்பட்ட திமுகவின் தலைவரிடம் உலக தமிழ்ச் சமுதாயம் எதிர் பார்த்ததிற்கு காரணமாய் திமுகவின் கடந்தகால வரலாறும், கலைஞரின் தீவிரமான ஈழ ஆதரவுப் போக்கும் இருந்தன. மூன்றாம் ஈழப் போர் நடந்த போது கொடை நாட்டில் உய்யலாலா பாடிக் கொண்டிருந்த ஜெயலலிதாவிடம் மக்கள் தமிழர் ஆதரவு குரலை எதிர்ப்பார்க்கவில்லை என்பதே நிதர்சனம். 2011 தேர்தலின் போது கலைஞரின் சூழலையும் தமிழக மக்களின் மனோநிலையையும் சரியாய் அவதானித்த ஜெயலலிதா....யாருமே எதிர்ப்பார்க்காத அளவிற்கு குபீர் ஈழத்தாய் வேடத்தைப் போட்டு அதை தேர்தலில் ஓட்டாகவும் மாற்றிக் காட்டினார். புலிகளுக்கு ஆதரவாய் பேசியதாலேயே வைகோவை ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையிலடைத்த ஜெயலலிதா ஈழம் ஒன்றே தீர்வு என்று பேசியதை சீமான் போன்றவர்கள் நம்பி ஜெயலலிதாவின் காலடியில் தஞ்சம் அடைந்து ஈழம் மலர அவர் உதவுவார் என்றும் இன்று நம்பிக் கொண்டு அவரின் சூட்சும அரசியலை மறந்து போயிமிருக்கின்றனர்.
ஆட்சி இழந்து மக்களால் நிராகரிக்கப்பட்ட கலைஞர் வேறு வழியின்றி தமிழர் ஆதரவு அரசியல் ஒன்றே மீண்டும் தம்மையும் தமது கட்சியையும் மக்கள் அங்கீகரிக்க ஒரே வழி என்று தீர்மானித்து மீண்டும் டெசோவை கையிலெடுத்து தமிழ் ஈழம் அமைவதே தனது ஆசை, அதுவே தமது இலக்கு என்பது போல எல்லாம் பேட்டிக் கொடுத்து விட்டு....மத்திய அரசின் தனித்தமிழ் ஈழம் எதிர்நிலைப்பாட்டினை எதிர்த்தால் தனக்கும் தனது கட்சிக்கும் இன்னும் பெரும் இக்கட்டான சூழலை ஆளும் காங்கிரஸ் கட்சி உருவாக்கும் என்ற காரணத்தினால் ஈழ ஆதரவுக் குரலை சற்றே தாழ்த்தி, இலங்கையில் தமிழர் மறுவாழ்வு, புணரமைப்பு, மருத்துவ உதவி என்று ஏதேதோ பேசும் ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
ஆழ்ந்த அரசியல் அனுபவம் கொண்ட கலைஞருக்கு ஈழ ஆதரவுக் குரல் கொடுத்தால் மத்திய அரசு எந்த மாதிரியான இக்கட்டான சூழல்களை கொடுக்கும் என்பது தெரியாதது அல்ல....அதே நேரம் ஈழம் வென்றெடுக்க டெசோ அமைப்பு சாதகமான சூழல்களை அகில உலக அளவில் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதையும் அறியாதவர் அல்ல....
சாதாரண மனிதர்கள் கொடுக்கும் குரலை விட தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கொடுக்கும் குரல் வலிமையானதாக, இந்திய அரசை அசைத்துப் பார்ப்பதாக, உலக தலைவர்களை கூர்ந்து நோக்கச் செய்வதாக, சிங்கள பேரினவாத அரசை அச்சம் கொள்ளச் செய்வதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை....
போரின் போது தொடங்கப்படாத டெசோ இயக்கம் இப்போது ஏன் தொடங்கப்படவேண்டும் என்பன போன்ற விதண்டாவாதங்களை எல்லாம் விலக்கி விட்டு, உண்மையான ஈழ விடுதலை வேண்டும் தமிழக அரசியல் கட்சிகள் கலைஞரோடு தனித்தனியாய் சந்திப்பு நடத்தி, அவருக்கு அழுத்தங்கள் கொடுத்து சர்வ தேச சமுதாயத்திற்கு நிர்ப்பந்தங்கள் கொடுக்குமாறு பணித்து ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் ஓரணியில் திரள்வதின் மூலம்......
தனித் தமிழ் ஈழம் மலர்வதற்கான எல்லா விதமான சாத்தியக்கூறுகளையும்.... தாய்த்தமிழ் மண் ஏற்படுத்திக் கொடுக்கும்....என்பது மட்டும்...உண்மை....!
--
கழுகு
ஆகத்து 06 2012
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
//கருணாநிதி என்றாலே ஈழப் போருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உதவும் ஒருவன்///
- GuestGuest
பேகன் wrote://கருணாநிதி என்றாலே ஈழப் போருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உதவும் ஒருவன்///
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
கருணாநிதி ஒரு பச்சையான சந்தர்ப்பவாதி. ஈழப்போரில் ஈடுபட்டிருந்த அமைப்புகளின் தலைவர்களை அழைத்து அவர்களுக்கு சொற்ப தொகையைக் கொடுத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, பத்திரிகையில் செய்தியாக வெளியிட்டு அதன்மூலம் விளம்பரம் தேட முயன்ற சுயநலவாதி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- GuestGuest
Rangarajan Sundaravadivel wrote:கருணாநிதி ஒரு பச்சையான சந்தர்ப்பவாதி. ஈழப்போரில் ஈடுபட்டிருந்த அமைப்புகளின் தலைவர்களை அழைத்து அவர்களுக்கு சொற்ப தொகையைக் கொடுத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, பத்திரிகையில் செய்தியாக வெளியிட்டு அதன்மூலம் விளம்பரம் தேட முயன்ற சுயநலவாதி.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
தமிழீழ தேசியத்தலைவரே ஒரு முறை கூறியிருந்தார்,
கருணாநிதியை விட மகிந்த எவ்வ்வளவோ மேல் என்று
கருணாநிதியை புரிந்து கொள்ள இதை விட ஒரு வார்த்தை தேவையில்லை.
கருணாநிதியை நம்பினால் தமிழீழம் கிடைக்கக்கூடிய நிலை வந்தாலும் தன்னுடைய நலனுக்காக அதை தடுக்கக்கூடியவர்.
கருணாநிதியை விட மகிந்த எவ்வ்வளவோ மேல் என்று
கருணாநிதியை புரிந்து கொள்ள இதை விட ஒரு வார்த்தை தேவையில்லை.
கருணாநிதியை நம்பினால் தமிழீழம் கிடைக்கக்கூடிய நிலை வந்தாலும் தன்னுடைய நலனுக்காக அதை தடுக்கக்கூடியவர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டெசோ மாநாடும்.....ஈழத்தமிழர் விடியலும்....! ஒரு ஆய்வுப் பார்வை....! 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் உண்மை என்றே சொல்ல வேண்டும்.அகிலன் wrote:தமிழீழ தேசியத்தலைவரே ஒரு முறை கூறியிருந்தார்,
கருணாநிதியை விட மகிந்த எவ்வ்வளவோ மேல் என்று
கருணாநிதியை புரிந்து கொள்ள இதை விட ஒரு வார்த்தை தேவையில்லை.
கருணாநிதியை நம்பினால் தமிழீழம் கிடைக்கக்கூடிய நிலை வந்தாலும் தன்னுடைய நலனுக்காக அதை தடுக்கக்கூடியவர்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|