புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் - விமர்சனம்
Page 1 of 1 •
- GuestGuest
விஜய் ஆன்டனி நடித்து தயாரித்திருக்கும் படம். விஜய் ஆன்டனியின் இசையில் 25வது படமாக வெளிவந்திருக்கிறது நான்.
தனது அம்மாவும் மாமாவும் தவறாக நடந்து விடுவதை சிறு வயதிலேயே பார்த்துவிடுகிறான் கார்த்திக். இதை அப்பாவிடம் சொல்ல அவரோ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அம்மாவையும் மாமாவையும் வீட்டோடு தீக்கிரையாகிவிடும் கார்த்திக்கை போலீஸ் சீர் திருத்தப் பள்ளியில் அடைக்கிறது. தண்டனை காலம் முடிந்து வெளியே வரும் போது இளைஞனாகியிருக்கிறான். தனது சித்தப்பாவீட்டிற்கு அவன் போக கொலைகாரன் என்கிறாள் சித்தி. அதைக் கேட்டு அங்கிருந்து கிளம்பும் கார்த்திக் சென்னை போவதற்காக வண்டி பிடிக்கிறான். அந்த பேருந்து விபத்தில் சிக்குகிறது. தனது அருகில் உட்கார்ந்து பயணம் செய்த மெடிக்கல் காலேஜில் சேருவதற்காக சென்னை செல்லும், சலீம் அந்த விபத்தில் இறந்துவிட, சலீமின் பெட்டியையும் பையையும் எடுத்துக் கொண்டு சென்னை போகிறான் கார்த்திக். தனது பெயரை மாற்றிக் கொண்டு சலீமாக மருத்துவக் கல்லூரியில் சேருகிறான். அங்கு அதன் பிறகு சந்திக்கும் பிரச்சனைகளும் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதை முழு நீளப் படத்தில் விரிவாக சொல்கிறது நான்
படம் துவங்கிய சில நிமிடங்கள்… அதாவது, கார்த்திக் அவன் அம்மாவையும் மாமாவையும் தீவைத்துக் கொழுத்தி விடுவது ரசிகர்களை இழுத்து சீட்டோடு உட்கார வைத்துவிடுகிறது. அதே போல கடைசி காட்சியில் வரும் க்ளைமேக்ஸ் நம் மனதையே உருக்கிவிடுகிறது. இடைப்பட்ட காட்சிகள், சலீமாக மாறும் கார்த்திக்… அதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள். கல்லூரியில் அவனுக்கு கிடைக்கும் நண்பன், கடைசியில் அவனையே எதிர்பாராத விதமாக கொலை செய்துவிடும் சலீம். அடுத்து இன்னொரு கொலை… அடுத்து என்ன நடக்குமோ என்கிற ரீதியில் படத்தை நகர்த்திச் செல்கிறது திரைக்கதை.
விஜய் ஆன்டனிக்கு இது முதல் படமாம் நம்ப முடியவில்லை. எப்போதும் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் அவர் கார்த்திக் & சலீம் கேரக்டருக்கு நன்றாகவே செட் ஆகியிருக்கிறார். நண்பன் தனது துண்டை உருவி அம்மணமாக்கிவிட்ட போதும், புகைப்படத்துக்காக நண்பனை விரட்டிச் செல்லும் போதும், எதிர்பாராதவிதமாக நண்பன் கீழே விழுந்து அடிபட்டு இறந்து விட, ஓ… என உரக்க அழும் விஜய் ஆன்டனி செம எக்ஸ்பிரஸனை கொடுத்திருக்கிறார்.
விஜய் ஆன்டனிக்கு நண்பனாக வருகிறார் சித்தார்த். இவருக்கு ஜோடியாக வருகிறார் ரூபா மஞ்சரி. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில்தான் நடித்திருக்கிறார். மக்கஎல பாட்டுக்கு இவர் போடுகிற நடனம் இருக்கிறதே… அடேங்கப்பா… ரூபாவின் நடிப்பு கூடியிருக்கிறதோ இல்லையோ அவரது அழகு மட்டும் எக்கச்சக்கமாக கூடியிருக்கிறது.
அனுயாவும் படத்தில் இருக்கிறார். சில காட்சிகள் மட்டுமே வந்து போகிறார். இன்னொரு அழகான புதுமுக நடிகையும் படத்தில் வருகிறார். செம க்யூட்.
படத்திற்கு இசை விஜய் ஆன்டனி. தான் நடிகராக அறிமுகமாகும் படம் என்பதாலும், தனது 25வது படம் என்பதாலும் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இசையை போட்டுத் தாக்கியிருக்கிறார். உலகினில் மிக உயரம்… செம டச்சிங்கான பாடல். மக்கஎல மக்கஎல பாடல் ஆட்டம் போட வைக்கிற ரகம். இனிமேல் பல பப்களில் இந்த பாடலுக்குதான் மவுசு. ‘தப்பெல்லாம் தப்பே இல்லை…’ பாடல் தத்துவ பாடல் போல் வருகிறது.
நான் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஜீவா சங்கர். இவர் மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர். முதல் காட்சியில் ரசிகர்களை ரொம்பவே இம்பரஸ் பண்ணும் ஜீவா சங்கர். க்ளைமேக்ஸில் செம டச்சிங்கான சீனை வைத்து நம்மை அப்படியே மௌனமாக்கிவிடுகிறார்.
--
தமிழ் டிஜிட்டல் சினிமா
தனது அம்மாவும் மாமாவும் தவறாக நடந்து விடுவதை சிறு வயதிலேயே பார்த்துவிடுகிறான் கார்த்திக். இதை அப்பாவிடம் சொல்ல அவரோ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அம்மாவையும் மாமாவையும் வீட்டோடு தீக்கிரையாகிவிடும் கார்த்திக்கை போலீஸ் சீர் திருத்தப் பள்ளியில் அடைக்கிறது. தண்டனை காலம் முடிந்து வெளியே வரும் போது இளைஞனாகியிருக்கிறான். தனது சித்தப்பாவீட்டிற்கு அவன் போக கொலைகாரன் என்கிறாள் சித்தி. அதைக் கேட்டு அங்கிருந்து கிளம்பும் கார்த்திக் சென்னை போவதற்காக வண்டி பிடிக்கிறான். அந்த பேருந்து விபத்தில் சிக்குகிறது. தனது அருகில் உட்கார்ந்து பயணம் செய்த மெடிக்கல் காலேஜில் சேருவதற்காக சென்னை செல்லும், சலீம் அந்த விபத்தில் இறந்துவிட, சலீமின் பெட்டியையும் பையையும் எடுத்துக் கொண்டு சென்னை போகிறான் கார்த்திக். தனது பெயரை மாற்றிக் கொண்டு சலீமாக மருத்துவக் கல்லூரியில் சேருகிறான். அங்கு அதன் பிறகு சந்திக்கும் பிரச்சனைகளும் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதை முழு நீளப் படத்தில் விரிவாக சொல்கிறது நான்
படம் துவங்கிய சில நிமிடங்கள்… அதாவது, கார்த்திக் அவன் அம்மாவையும் மாமாவையும் தீவைத்துக் கொழுத்தி விடுவது ரசிகர்களை இழுத்து சீட்டோடு உட்கார வைத்துவிடுகிறது. அதே போல கடைசி காட்சியில் வரும் க்ளைமேக்ஸ் நம் மனதையே உருக்கிவிடுகிறது. இடைப்பட்ட காட்சிகள், சலீமாக மாறும் கார்த்திக்… அதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள். கல்லூரியில் அவனுக்கு கிடைக்கும் நண்பன், கடைசியில் அவனையே எதிர்பாராத விதமாக கொலை செய்துவிடும் சலீம். அடுத்து இன்னொரு கொலை… அடுத்து என்ன நடக்குமோ என்கிற ரீதியில் படத்தை நகர்த்திச் செல்கிறது திரைக்கதை.
விஜய் ஆன்டனிக்கு இது முதல் படமாம் நம்ப முடியவில்லை. எப்போதும் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் அவர் கார்த்திக் & சலீம் கேரக்டருக்கு நன்றாகவே செட் ஆகியிருக்கிறார். நண்பன் தனது துண்டை உருவி அம்மணமாக்கிவிட்ட போதும், புகைப்படத்துக்காக நண்பனை விரட்டிச் செல்லும் போதும், எதிர்பாராதவிதமாக நண்பன் கீழே விழுந்து அடிபட்டு இறந்து விட, ஓ… என உரக்க அழும் விஜய் ஆன்டனி செம எக்ஸ்பிரஸனை கொடுத்திருக்கிறார்.
விஜய் ஆன்டனிக்கு நண்பனாக வருகிறார் சித்தார்த். இவருக்கு ஜோடியாக வருகிறார் ரூபா மஞ்சரி. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில்தான் நடித்திருக்கிறார். மக்கஎல பாட்டுக்கு இவர் போடுகிற நடனம் இருக்கிறதே… அடேங்கப்பா… ரூபாவின் நடிப்பு கூடியிருக்கிறதோ இல்லையோ அவரது அழகு மட்டும் எக்கச்சக்கமாக கூடியிருக்கிறது.
அனுயாவும் படத்தில் இருக்கிறார். சில காட்சிகள் மட்டுமே வந்து போகிறார். இன்னொரு அழகான புதுமுக நடிகையும் படத்தில் வருகிறார். செம க்யூட்.
படத்திற்கு இசை விஜய் ஆன்டனி. தான் நடிகராக அறிமுகமாகும் படம் என்பதாலும், தனது 25வது படம் என்பதாலும் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இசையை போட்டுத் தாக்கியிருக்கிறார். உலகினில் மிக உயரம்… செம டச்சிங்கான பாடல். மக்கஎல மக்கஎல பாடல் ஆட்டம் போட வைக்கிற ரகம். இனிமேல் பல பப்களில் இந்த பாடலுக்குதான் மவுசு. ‘தப்பெல்லாம் தப்பே இல்லை…’ பாடல் தத்துவ பாடல் போல் வருகிறது.
நான் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஜீவா சங்கர். இவர் மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர். முதல் காட்சியில் ரசிகர்களை ரொம்பவே இம்பரஸ் பண்ணும் ஜீவா சங்கர். க்ளைமேக்ஸில் செம டச்சிங்கான சீனை வைத்து நம்மை அப்படியே மௌனமாக்கிவிடுகிறார்.
--
தமிழ் டிஜிட்டல் சினிமா
- GuestGuest
படம் பார்க்கலாம் .. தப்பே இல்லை
பாடல்கள் , ஒளிப்பதிவு , பின்னணி இசை அருமை ,,,
பாடல்கள் , ஒளிப்பதிவு , பின்னணி இசை அருமை ,,,
- GuestGuest
தயாரிப்பு - விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் - பாத்திமா விஜய் ஆண்டனி
கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் - ஜீவா சங்கர்
இசை - விஜய் ஆண்டனி
பாடல்கள் - ப்ரியன், அண்ணாமலை, அஸ்மின்
வசனம் - நீலன் கே. சேகர், ஜீவா சங்கர்
படத்தொகுப்பு - சூர்யா
கலை - விதேஷ்
நடனம் - ஷோபி
சண்டை - ராஜசேகர்
நடிப்பு - விஜய் ஆண்டனி, சித்தார்த், ரூபா மஞ்சரி, அனுயா, விபா, மற்றும் பலர்.
தமிழ் சினிமாவில் த்ரில்லர் வகை கதைகளை அதிகம் பார்க்க முடியாது. வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் வந்தாலே அதிகம். அவற்றிலும் ஒரு சில படங்கள்தான் சூப்பர் ஹிட் வகையில் அமைந்தவை. ஏனோ, இயக்குனர்களும் த்ரில்லர் கதைகளை அதிகம் விரும்பி படமாக்குவதில்லை. அதுவும், சமீப காலமாக வெறும் காதல் படங்களை தமிழ்த் திரையுலகை ஆக்கிரமித்து வந்துள்ள சூழ்நிலையில் இயக்குனர் ஜீவா சங்கர் துணிச்சலாக ஒரு த்ரில்லர் கதையை எடுத்துக் கொண்டு இந்த ‘நான்’ படத்தைக் கொடுத்திருக்கிறார்.
இயக்குனர்கள் சிலர் நடிகர்களாக மாறியிருக்கிறார்கள், ஒளிப்பதிவாளர்கள் சிலர் நடிகர்களாக மாறியிருக்கிறார்கள். ஆனால் இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறுவது அபூர்வமான ஒன்று. இரட்டை இசையமைப்பாளர்களான சங்கர் - கணேஷ் இருவரில் கணேஷ் மட்டும் 70களின் இறுதியில் சில படங்களில் நாயகனாக நடித்தார். அதோடு, ஏறக்குறைய 40 வருடங்கள் கழித்து தற்போது வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி துணிச்சலாக ஒரு படத்தைத் தயாரித்து, நடிகராகவும் அறிமுகமாகி, ஒரு திறமையான இயக்குனரையும் அறிமுகப்படுத்துவது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
சிறுவனாக இருக்கும் போது, அம்மா செய்த மிகப் பெரிய தவறைப் பார்க்கும் விஜய் ஆண்டனி, அப்பாவின் தற்கொலையால் மனமுடைந்து, அம்மாவை உயிருடன் வீட்டோடு எரித்து விடுகிறார். சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்து வளரும் விஜய் ஆண்டனி, பின்னர் சென்னைக்கு புறப்படுகிறார். சென்னைக்குச் செல்லும் வழியில் பேருந்து விபத்தில் சிக்க, பக்கத்து சீட்டில் பயணமான ஒருவர் இறந்து விட, அவருடைய உடமைகளை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்கிறார். விபத்தில் பலியான பயணியின் பெயர் சலீம். நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ள சலீமின் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு மாறாட்டம் செய்து சலீம் ஆக மாறுகிறார் கார்த்திக்கான விஜய் ஆண்டனி.
மருத்துவக் கல்லூரியல் சேரும் விஜய் ஆண்டனிக்கு, பணக்காரரான சித்தார்த்தின் நட்பு கிடைக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் விஜய் ஆண்டனியில் ஆள் மாறாட்டம் பற்றி சித்தார்த்துக்குத் தெரிய வர, அதனால் நடக்கும் சண்டையில் விஜய்யால் கீழே தள்ளப்பட்ட சித்தார்த் இறந்து விடுகிறார். இதன் பின் விஜய்யே, சித்தார்த்தாகவும் நாடகமாடுகிறார். அதற்கு சிறுவயதில் இருந்தே அவருக்கு வரும் மிமிக்ரி உதவுகிறது. பிறகு....ஸாரி, ஒரு த்ரில்லர் படத்தின் முழு கதையையும் சொல்லிவிட்டால் படம் பார்க்கும் போது அதன் சுவாரசியம் போய்விடும். மீதிக் கதையை வெள்ளித் திரையில் காண்க.
திரைக்குப் பின்னால் இருந்து திரைக்கு முன்னால் வந்திருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அவருடைய தோற்றத்திற்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி பெற்று விட்டார். மீதி வெற்றியும் அவருடைய நடிப்பில் கிடைத்து விட்டது. எப்போதும் எதையோ பறி கொடுத்த உணர்விலேயே இருப்பது அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அமைந்து விட்டது. சோகம், கோபம், ஆவேசம், பாசம் என அசத்தினாலும் படத்தில் அவருக்கென்று எந்த காதலையும் இயக்குனர் வைக்காமல் விட்டு விட்டார். அடுத்த படத்தில் பார்ப்போம், காதலிலும் அசத்துவாரா என்று ?
இரண்டாவது கதாநாயகனாக சித்தார்த். இன்றைய சென்னை வாழ் பணக்கார இளைஞரை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார். கல்லூரியில் அவரை விட சீனியரான விபாவை அவர் வலையில் விழ வைக்கும் காட்சிகள்....சரியான ரோமியோத்தனம்.
படத்தின் கதாநாயகியாக ரூபா மஞ்சரி. சித்தார்த்தை காதலித்து ஏங்கும் சராசரி பெண். கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார். பல காட்சிகளில் மேக்கப் ஓவராக இருக்கிறது.
அனுயா சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்.
விஜய் ஆண்டனி, சொந்த படம் என்பதால் பின்னணி இசையில் கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. மக்கயலா....பாடல் டிபிக்கல் விஜய் ஆண்டனி ஹிட். தப்பெல்லாம் தப்பே இல்லை....வித்தியாசமான குரலில் வசீகரிக்கிறது.
பெரும்பாலான காட்சிகள் வீட்டுக்குள் நகர்ந்தாலும் அழகான ஒளியமைப்பு மூலம் அந்த காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகவும், தேவையற்ற காட்சிகள் எதுவும் இல்லாமலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜீவா சங்கர்.
ஆனாலும் சில காட்சிகளில் கேள்விகள் எழாமல் இல்லை. படத்தின் வேகத்தை கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம் படத்தொகுப்பாளர். இறுதியில் படம் திடீரென முடிந்து விட்டதோ என்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ செய்வதை நியாயப்படுத்துவதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் ?
இருந்தாலும் , இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் முதல் படம் என்பதால் சில குறைகளை மறந்து விட்டு, இந்த ‘நான்’ படத்தை ‘நாம்’ தாராளமாக ரசிக்கலாம்.
--
ஸ்க்ரீன் 4 ஸ்க்ரீன்
கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் - ஜீவா சங்கர்
இசை - விஜய் ஆண்டனி
பாடல்கள் - ப்ரியன், அண்ணாமலை, அஸ்மின்
வசனம் - நீலன் கே. சேகர், ஜீவா சங்கர்
படத்தொகுப்பு - சூர்யா
கலை - விதேஷ்
நடனம் - ஷோபி
சண்டை - ராஜசேகர்
நடிப்பு - விஜய் ஆண்டனி, சித்தார்த், ரூபா மஞ்சரி, அனுயா, விபா, மற்றும் பலர்.
தமிழ் சினிமாவில் த்ரில்லர் வகை கதைகளை அதிகம் பார்க்க முடியாது. வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் வந்தாலே அதிகம். அவற்றிலும் ஒரு சில படங்கள்தான் சூப்பர் ஹிட் வகையில் அமைந்தவை. ஏனோ, இயக்குனர்களும் த்ரில்லர் கதைகளை அதிகம் விரும்பி படமாக்குவதில்லை. அதுவும், சமீப காலமாக வெறும் காதல் படங்களை தமிழ்த் திரையுலகை ஆக்கிரமித்து வந்துள்ள சூழ்நிலையில் இயக்குனர் ஜீவா சங்கர் துணிச்சலாக ஒரு த்ரில்லர் கதையை எடுத்துக் கொண்டு இந்த ‘நான்’ படத்தைக் கொடுத்திருக்கிறார்.
இயக்குனர்கள் சிலர் நடிகர்களாக மாறியிருக்கிறார்கள், ஒளிப்பதிவாளர்கள் சிலர் நடிகர்களாக மாறியிருக்கிறார்கள். ஆனால் இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறுவது அபூர்வமான ஒன்று. இரட்டை இசையமைப்பாளர்களான சங்கர் - கணேஷ் இருவரில் கணேஷ் மட்டும் 70களின் இறுதியில் சில படங்களில் நாயகனாக நடித்தார். அதோடு, ஏறக்குறைய 40 வருடங்கள் கழித்து தற்போது வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி துணிச்சலாக ஒரு படத்தைத் தயாரித்து, நடிகராகவும் அறிமுகமாகி, ஒரு திறமையான இயக்குனரையும் அறிமுகப்படுத்துவது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
சிறுவனாக இருக்கும் போது, அம்மா செய்த மிகப் பெரிய தவறைப் பார்க்கும் விஜய் ஆண்டனி, அப்பாவின் தற்கொலையால் மனமுடைந்து, அம்மாவை உயிருடன் வீட்டோடு எரித்து விடுகிறார். சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்து வளரும் விஜய் ஆண்டனி, பின்னர் சென்னைக்கு புறப்படுகிறார். சென்னைக்குச் செல்லும் வழியில் பேருந்து விபத்தில் சிக்க, பக்கத்து சீட்டில் பயணமான ஒருவர் இறந்து விட, அவருடைய உடமைகளை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்கிறார். விபத்தில் பலியான பயணியின் பெயர் சலீம். நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ள சலீமின் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு மாறாட்டம் செய்து சலீம் ஆக மாறுகிறார் கார்த்திக்கான விஜய் ஆண்டனி.
மருத்துவக் கல்லூரியல் சேரும் விஜய் ஆண்டனிக்கு, பணக்காரரான சித்தார்த்தின் நட்பு கிடைக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் விஜய் ஆண்டனியில் ஆள் மாறாட்டம் பற்றி சித்தார்த்துக்குத் தெரிய வர, அதனால் நடக்கும் சண்டையில் விஜய்யால் கீழே தள்ளப்பட்ட சித்தார்த் இறந்து விடுகிறார். இதன் பின் விஜய்யே, சித்தார்த்தாகவும் நாடகமாடுகிறார். அதற்கு சிறுவயதில் இருந்தே அவருக்கு வரும் மிமிக்ரி உதவுகிறது. பிறகு....ஸாரி, ஒரு த்ரில்லர் படத்தின் முழு கதையையும் சொல்லிவிட்டால் படம் பார்க்கும் போது அதன் சுவாரசியம் போய்விடும். மீதிக் கதையை வெள்ளித் திரையில் காண்க.
திரைக்குப் பின்னால் இருந்து திரைக்கு முன்னால் வந்திருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அவருடைய தோற்றத்திற்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி பெற்று விட்டார். மீதி வெற்றியும் அவருடைய நடிப்பில் கிடைத்து விட்டது. எப்போதும் எதையோ பறி கொடுத்த உணர்விலேயே இருப்பது அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அமைந்து விட்டது. சோகம், கோபம், ஆவேசம், பாசம் என அசத்தினாலும் படத்தில் அவருக்கென்று எந்த காதலையும் இயக்குனர் வைக்காமல் விட்டு விட்டார். அடுத்த படத்தில் பார்ப்போம், காதலிலும் அசத்துவாரா என்று ?
இரண்டாவது கதாநாயகனாக சித்தார்த். இன்றைய சென்னை வாழ் பணக்கார இளைஞரை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார். கல்லூரியில் அவரை விட சீனியரான விபாவை அவர் வலையில் விழ வைக்கும் காட்சிகள்....சரியான ரோமியோத்தனம்.
படத்தின் கதாநாயகியாக ரூபா மஞ்சரி. சித்தார்த்தை காதலித்து ஏங்கும் சராசரி பெண். கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார். பல காட்சிகளில் மேக்கப் ஓவராக இருக்கிறது.
அனுயா சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்.
விஜய் ஆண்டனி, சொந்த படம் என்பதால் பின்னணி இசையில் கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. மக்கயலா....பாடல் டிபிக்கல் விஜய் ஆண்டனி ஹிட். தப்பெல்லாம் தப்பே இல்லை....வித்தியாசமான குரலில் வசீகரிக்கிறது.
பெரும்பாலான காட்சிகள் வீட்டுக்குள் நகர்ந்தாலும் அழகான ஒளியமைப்பு மூலம் அந்த காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகவும், தேவையற்ற காட்சிகள் எதுவும் இல்லாமலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜீவா சங்கர்.
ஆனாலும் சில காட்சிகளில் கேள்விகள் எழாமல் இல்லை. படத்தின் வேகத்தை கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம் படத்தொகுப்பாளர். இறுதியில் படம் திடீரென முடிந்து விட்டதோ என்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ செய்வதை நியாயப்படுத்துவதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் ?
இருந்தாலும் , இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் முதல் படம் என்பதால் சில குறைகளை மறந்து விட்டு, இந்த ‘நான்’ படத்தை ‘நாம்’ தாராளமாக ரசிக்கலாம்.
--
ஸ்க்ரீன் 4 ஸ்க்ரீன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|