புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_m10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_m10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10 
77 Posts - 36%
i6appar
அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_m10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_m10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_m10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_m10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_m10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_m10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_m10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_m10அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து


   
   
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Mon Aug 13, 2012 1:19 pm

அமெரிக்கா வந்து இந்த இரண்டரை மாதங்களில், தவிர்க்கவே முடியாமல், இந்த நாட்டை நான் தினம் தினம் இந்தியாவுடன் ஒப்புமைப்படுத்தி புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். இந்தச் சூழலில் கடந்த ஞாயிறு அங்காடித்தெரு படம் பார்த்தேன். ஏற்கனவே அங்காடித்தெரு குறித்த தமிழ்ப் பதிவுகள் பலவற்றை படித்து படம் குறித்த ஒரு முன் தீர்மானத்தோடுதான் போனேன். ஆயினும் படம் என்னை உலுக்கிவிட்டது. படத்திலுள்ள சில குறைகளையும் (ஏற்கனவே பலரும் சுட்டிக்காட்டியதுதான்) மீறி இப்படம் குறிப்பாலுணர்த்தும் கடையிலும் அதைப் போன்ற மற்ற கடைகளிலும் படத்தில் காட்டுவதுபோல் நிகழ்வுகள் நடப்பதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ளதான யதார்த்தம் முகத்தில் அறைகிறது. படத்தின் அத்தனை செயற்கையான காட்சியமைப்புகள், அபத்தங்களையும் மீறி படம் பார்த்த அனைவரையுமே பாதித்திருக்கிறது. ஆயினும் இது திரைப்பட விமரிசனம் அல்ல. படத்தின் கரு ஏற்படுத்திய அதிர்வுகளை புரிந்துகொள்ள முயற்சிப்பதே என் நோக்கம்.

ஏன் இப்படி நடக்கிறது? இதைத் தடுக்க முடியாதா என்ற கேள்விகள் இயல்பாக எழுகின்றன. இவ்வாறான காட்சிகளை நேரிலேயே நாம் பார்த்திருந்தாலும், அனுபவித்திருந்தாலும், காட்சி ஊடகங்களில் பார்க்கும்போது அது வேறுவிதமான மனநிலையைத் தோற்றுவிக்கிறது. அமெரிக்கா வந்து இங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை, அமெரிக்க வெள்ளை இன மக்களைத் தவிர்த்து, ஊடகங்கள் வழியாக அறியும்போது எனக்கு சில எண்ணங்கள் தோன்றுகின்றன. எனக்கு இது குறித்து தெளிவான கருத்துக்கள் ஏதும் இன்னும் உருவாகவில்லை.

நான் தற்போது இருக்கும் கலிபோர்னியா மாநிலம் பெர்க்லியில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சார்ந்த ரெட்டிகாரு ஒருவர் நாற்பது வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் உடன் உணவகமும் நடத்துகிறார். இந்த ஊரின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவரது உணவகத்தில் வேலை செய்ய ஆந்திராவிலுள்ள அவரது பூர்வீக கிராமத்திலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் ஏழைச் சிறுமிகளை கொண்டுவந்து வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். வேலை நேரமும் அமெரிக்கச் சட்டத்திற்குப் புறம்பாக மிக அதிகமானதோடு இல்லாமல் அவர்களின் தங்குமிடம், உணவு போன்றவையும் இந்த நாட்டின் குறைந்த பட்ச தரத்தைவிடவும் குறைவு. இதையெல்லாம் விட கொடுமையானதாக அச் சிறுமிகளை தன் பாலியல் இச்சைகளை துய்க்கவும் பயன்படுத்தியிருக்கிறார். இவை எல்லாம் தெரிய வந்தது, அவ்வாறு அழைத்து வரப்பட்ட சிறுமிகளில் ஒருத்தி தான் தங்கவைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட கார்பன் மோனாக்சைடு வாயுக் கசிவால் உயிரிழந்த சோகம் நடைபெற்ற பின்புதான். இவை நடந்து தற்போது பத்து வருடங்களாகிவிட்டன. ரெட்டிகாருவும் எட்டு வருட சிறைத் தண்டனை அனுபவித்து தற்போது வெளிவந்து விட்டார்.

இதை போன்று பதிவர் வாஞ்சூர் அவர்கள் அமெரிக்கச் சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள் என்ற ஒரு இடுகை இட்டுள்ளார். அதன் மூலம் எப்படி சீனா மற்றும் தென்கிழக்காசிய ஏழைத் தொழிலாளர்கள் வால்மார்ட், கே மார்ட் போன்ற நிறுவனங்களால் அங்காடித்தெரு படத்தில் காட்டப்படுள்ளதைப் போன்று கசக்கிப் பிழியப்படுகிறார்கள்; மேலும் அவ்வாறு ஏழைத் தொழிலாளர்களை அழைத்து வருபவர்கள் அவர்களது சொந்த நாட்டு 'அண்ணாச்சிகளான' ஏஜண்டுகள் என்றும் தெரிய வருகிறது. அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்ச கூலி இவ்வளவு என்று கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆயினும் இதைவிடக் குறைவான சம்பளத்திற்கும் இங்கு ஆட்கள் கிடைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். மெக்சிகோவிலிருந்து கலிபோர்னியாவிற்கு சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் மிகக் குறைந்த கூலிக்கும் வேலைக்கு வர சம்மதிக்கிரார்கள், அவர்களை இங்குள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

நம்ம ஊர் மென்பொருள் நிறுவனங்களும் இதில் சேர்த்தி. என்ன, மேலதிகாரிகளிடம் அங்காடித்தெரு பணியாளர்கள் மாதிரி அடியுதை வாங்குவது இல்லை என்பது தான் ஒரே வேறுபாடு. மற்றபடி வேலையில் கசக்கிப் பிழிவது, நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் குறைவாகக் கொடுப்பது, இரண்டுபேர் எனக் கணக்குக் காட்டி ஒருவரை வைத்தே வேலை வாங்குவது என அடுக்கிக் கொண்டே போகலாம். நம்நாட்டின் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்கள் இதைபோன்ற காரியங்களை அமெரிக்காவிலும் செய்துவருகின்றன. ஆனால், பொதுவாக அமெரிக்கர்களினால் நடத்தப்படும் கம்பெனிகள் இவ்வாறு இல்லை எனச் சொல்லப்படுகிறது.

அதைப்போன்றே, என் துறையிலும், இந்தியாவில் ஆராய்ச்சி உதவியாளர்களாக சேர்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தைவிட குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. ஒருவரையே இரண்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துதல் போன்ற எல்லா புறம்பான காரியங்களும் நடக்கின்றன. இது நல்கை வழங்குபவர்களுக்கும் தெரியும். ஆயினும் அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள், ஏனெனில் அவர்களும் அப்படித்தான். கடந்த பத்து வருடங்களாக நான் வாங்கும் சம்பளமும் என் படிப்புக்கேற்ற சம்பளத்தைவிட கம்மிதான். ஆயினும் பல்வேறு காரணங்களுக்காக நான், குறை சொல்லிக்கொண்டே, தொடர்கிறேன். அமெரிக்காவில் அத்தைகைய மோசடிகள் என் துறையில் எனக்குத் தெரிந்து இல்லை. இவற்றைவிட, நம்ம வீட்டில் வேலைக்கு வரும் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் இருப்பதிலேயே குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு சம்மதிக்கும் ஆட்களைத்தான் நாம் சேர்க்கிறோம். அவர்கள் அதில் எப்படி குடும்பம் நடத்துவார்கள் என்பதைப் பற்றி எல்லாம் நாம் பொதுவாக நினைத்துப் பார்ப்பதே கிடையாது. இதன் பிரம்மாண்டமான வடிவம்தான் அங்காடித்தெரு அண்ணாச்சிகள்.

தற்போதைய என் அறை நண்பனுடன் முன்னொரு சந்தர்ப்பத்தில் இந்தியாவில் ஏன் இத்தகைய அத்து மீறல்கள் நடக்கிறது என உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார், நம் நாட்டில் ஒரே வேலைக்கு நூறு பேர் போட்டிபோடுகிறார்கள்; அதனால் இது சகஜம் என்று. இது எல்லா மூன்றாம் உலக நாடுகளுக்கும் பொருந்தும். அங்காடித்தெரு அண்ணாச்சி சொல்லும் 'எச்சிக் கையை உதறினால் ஆயிரம் பேர் வருவார்கள்' என்ற யதார்த்தம். இது இனம், நாடு, மொழி, உறவு போன்ற அனைத்தையும் தாண்டியது. இயல்பான மனித ஆசை. ஏன் அமெரிக்கர்கள், எனக்குத் தெரிந்தவரை, பெரும்பாலும் இவ்வாறான உரிமை மீறல்களை (தற்போது) செய்வதில்லை. அவர்கள் ஒன்றும் வானத்திலிருந்து குதித்தவர்கள் இல்லை. வெள்ளையின அமெரிக்கர்களும் அவர்களது மூதாதையர்களான ஐரோப்பியர்களுமே வரலாற்றில் அதிக மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியவர்களாக இருப்பர். அம்மனித சுரண்டல்கள் மற்றும் புதிய தேசமான அமெரிக்காவில் அவர்களுக்கு கிடைத்த எல்லையற்ற இயற்கை வளம் போன்றவை அவர்களை பொருளாதார வளர்ச்சியுறச் செய்தது. நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைக்கப் பெற்றது. அடிப்படைத்தேவைகள் பூர்த்தியானதால் போட்டி குறைந்தது. எனவே அடிமட்டக் கூலி போன்ற மனித உரிமை மீறல்கள் அமெரிக்கர்களால் தன் சக நாட்டவர்களுக்கு நிகழ்த்தப்படுவது இன்று பெருமளவில் இல்லை. ஏனெனில் சக நாட்டவர் எவரும் அத்தைகைய வேலைக்கு வருவதில்லை. மேலும் மனித உரிமை மீறல்கள் குறித்த சட்ட திட்டங்கள் கடுமையானதால் ஒருவகையான பயம் சராசரி அமெரிக்கனிடம் இருக்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு சட்டத்தை மீறுதல் ஒரு சாதாரண விஷயம். அதை அமெரிக்காவிலும் சென்று சிலர் செய்கின்றனர், மாட்டிக்கொள்ளாதவரை பிரச்சனை இல்லை என்ற வகையில்.

எல்லா நாடுகளும் பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டால் இத்தகைய அவலங்கள் நடக்காது என அனுமானிக்க முடியுமா? இது முதலாளித்துவ பொருளாதாரத்தின் பக்க விளைவா? மார்க்சியம் இதற்குத் தீர்வா? இவற்றை என்றாவது மனித சமூகத்திலிருந்து அகற்ற முடியுமா? தெரியவில்லை. காந்திய பொருளாதாரமும், காந்திய அறிவியல் தொழில் நுட்பமும் ஓரளவிற்காவது இத்தகைய அவலங்களை குறைக்கும் என்பது என்னுடைய எண்ணம். மனிதன் ஆசையை ஒழித்தால் இவற்றையும் வென்றெடுக்கலாம். ஆயினும் அது நடைமுறைச் சாத்தியமா?!

இவ்வகையிலேனும் சிந்திக்க வைத்த அங்காடித் தெருவிற்கு நன்றி.

நன்றி : புளியமரம்



அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து  Signaturexn
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 13, 2012 2:19 pm

இந்த அவலங்கள் அனைத்து துறைகளிலும், நாடுகளிலும் இருப்பதே கொடுமை.

பகிர்வுக்கு நன்றி வாசு செல்வா.




விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Aug 13, 2012 4:58 pm

மகிழ்ச்சி உங்கள் கருத்து மிகவும் நியாயமானது நண்பரே ஆறுதல் மகிழ்ச்சி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக