புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_m10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10 
9 Posts - 90%
mruthun
ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_m10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_m10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_m10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_m10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_m10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_m10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_m10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_m10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_m10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_m10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_m10ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம்


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Aug 02, 2012 7:31 am

ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம் Gallerye_233113730_520531

ஆடிப்பெருக்கின் போது கரை புரண்டோடும் காவிரி ஆறு, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல்வெளியாகக் காட்சியளிப்பது, காவிரி கரையோர மக்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. காவிரி மட்டுமல்லாமல், தமிழகத்தில் எந்த ஆறுகளிலும் தண்ணீர் இல்லாததால், ஆடிப்பெருக்கு பண்டிகையை இன்று, மக்கள் வழக்கமான கோலாகலத்துடன் கொண்டாட முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். கர்நாடகாவின் குடகுமலையில், "ஆடு தாண்டும்' அளவுக்கே உள்ள சிறிய இடத்தில் இருந்து உருவாகும் காவிரி, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் மழை நீர், பல்வேறு கிளை ஆறுகளின் உபயத்தால் பிரவாகமாக உருவெடுக்கிறது.

மரபு: "காவிரி என்ற பெண் ஆடியில் பெருக்கெடுத்து (வாலிபமடைந்து), சமுத்திர ராஜனான கடலை அடைகிறாள்' என்ற ஐதீகத்தின் அடிப்படையில், தங்களுக்கு வளங்களை வழங்கும் காவிரிக்கு மங்கலப்பொருட்களை மக்கள் சீராக வழங்குவது, தொன்று தொட்டு மரபாக இருக்கிறது. திருச்சியை பொறுத்தவரை, ஆடிப்பெருக்கன்று பரந்து விரிந்து கடல் போல கரை புரண்டோடும் காவிரியின் கரையோரங்களில் பெண்கள், காதோலை, கருகமணி, மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப்பொருட்கள், பழங்கள் படைத்து ஆற்றில் விடுவர். சுமங்கலி பெண்களின் கைகளால் மஞ்சள் கயிற்றை ஆண், பெண் வேறுபாடு இன்றி கட்டிக்கொள்வர். குறிப்பாக, புதுமணத் தம்பதிகள், "சீரும் சிறப்பாக வாழ வேண்டும்' என்று திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, காவிரியை வணங்குவர். ஆடிப்பெருக்கு விழா, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். அன்று, ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காவிரித் தாய்க்கு சீர் கொடுக்கும் வைபவம் வெகு பிரசித்திப் பெற்றது.

செயற்கை காவிரி: தற்போது தண்ணீர் வற்றி மணல்வெளியாக காவிரி ஆறு காட்சியளிப்பதால், ஆற்றுக்குள் பள்ளம் தோண்டி, "போர்வெல்' மூலம் தொடர்ந்து தண்ணீர் விட, திருச்சி மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. "செயற்கை' காவிரிக் கரைகளில் பெண்கள் தங்களது சம்பிரதாய சடங்குகளை செய்து கொள்ளலாம். வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி, காவிரி என ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் திருவையாற்றில், ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். சோழர்கள் காலத்தில் இருந்தே ஆடிப்பெருக்கு விழா, தஞ்சையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக செவி வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. விஜயநகர அரசர்கள் காலத்தில், தஞ்சை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா மிகச்சிறப்பாக நடந்ததாக சரித்திரக் குறிப்புகள் காணப்படுகின்றன. தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள், ஆடிப்பெருக்கு நாளில், "காவிரி கல்யாணம்' என்ற நாட்டிய நாடகத்தை திருவையாற்றில் நடத்துவது மரபாக வைத்திருந்தனர். இத்தகைய சிறப்புமிக்க விழா, திருவையாற்றில், "போர்வெல்' மூலம் கொண்டாடப்படுகிறது. ஆற்றில் பொட்டுத்தண்ணீர் கூட இல்லாததால், வீடுகளில் உள்ள கிணறுகள், அடி பைப்புகள், குழாய்களில் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் கொண்டாட இருக்கின்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், காவிரி ஆற்றுக்குள் ஊற்று தோண்டி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நாகை மாவட்டம் மயிலாடுதுறை - பூம்புகார் வழியாக காவிரி, கடலில் கலக்கிறது. ஆடிப்பெருக்கின்போது தண்ணீர் இல்லாத காவிரியைப் பார்த்து, மக்கள் கண்ணீரில் கரைகின்றனர். இதே நிலை தான், தமிழகம் முழுவதும் எல்லா ஆறுகளிலும் உள்ளது. ஆறு மற்றும் நீர் நிலைகளில் ஆடிப்பெருக்கை கொண்டாட முடியாமல், மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தவிப்பு: உடுமலை திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆடிப் பட்டம் சிறக்க ஆண்டுதோறும், இப்பகுதி விவசாயிகள், இங்கு சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம். மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அருவிகள், பாலாறாக மாறி திருமூர்த்தி அணைக்கு, அமணலிங்கேஸ்வரர் கோவில் வழியாகச் செல்கிறது. இந்த ஆற்றில், ஆடிப்பட்டத்துக்கு பயன்படுத்தப்படும் விதைகளை வைத்து, ஆடிப்பெருக்கன்று சிறப்பு பூஜை நடத்துவர். இது போல், புதுமணத் தம்பதியினரும், தாலிக்கயிற்றை இந்த ஆற்றங்கரையில் மாற்றி, பூஜைகள் நடத்துவது வழக்கம். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை பெய்யாததால், மலையிலுள்ள பஞ்சலிங்க அருவி மற்றும் திருமூர்த்தி அணைக்கு வரும் பாலாறு உட்பட ஆறுகள் முற்றிலுமாக வறண்டுள்ளன. இதனால், விவசாயிகள் மற்றும் பக்தர்கள், ஆடிப் பெருக்கையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடத்துவது கேள்விக்குறியாகியுள்ளது.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 02, 2012 7:49 am

வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஆடி ௧௮ க்கு தண்ணீர் திறந்து விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு............... சோகம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Aug 02, 2012 8:19 am

மகா பிரபு wrote:வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஆடி ௧௮ க்கு தண்ணீர் திறந்து விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு............... சோகம்
ஆறுதல் ஆறுதல் ஆறுதல் உங்கள் வ ருத்தம் புரியுது,,,,கிணற்றடி . குழாயடியை தவிர வேறு வழியில்லை



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 02, 2012 9:42 am

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஆடி ௧௮ க்கு தண்ணீர் திறந்து விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு............... சோகம்
ஆறுதல் ஆறுதல் ஆறுதல் உங்கள் வ ருத்தம் புரியுது,,,,கிணற்றடி . குழாயடியை தவிர வேறு வழியில்லை
தெரிஞ்சு போச்சா சிரி


சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Thu Aug 02, 2012 10:32 am

ஈரோட்டில் இரண்டு தடுப்பணைகள் இருப்பதால் இங்கு மக்கள் எப்போதும் போல் கொண்டாடுகிறார்கள்



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக