புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
71 Posts - 47%
heezulia
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
52 Posts - 34%
Dr.S.Soundarapandian
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
14 Posts - 9%
mohamed nizamudeen
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
4 Posts - 3%
i6appar
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
3 Posts - 2%
Barushree
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
2 Posts - 1%
prajai
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
2 Posts - 1%
லதா மெளர்யா
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
148 Posts - 41%
heezulia
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
146 Posts - 40%
Dr.S.Soundarapandian
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
18 Posts - 5%
i6appar
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
11 Posts - 3%
Anthony raj
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
3 Posts - 1%
prajai
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
3 Posts - 1%
Barushree
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_m10சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jul 26, 2012 8:50 am

வேகமாக சென்ற பள்ளி பஸ் ஓட்டையிலிருந்து தவறி விழுந்து 2ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தாள். ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்தனர். பள்ளி பஸ்சுக்கு தீவைக்கப்பட்டது. சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் எம்டிசி நகரை சேர்ந்தவர் சேதுமாதவன் (32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா (28). இவர்களுக்கு பிரனவ் (9), ஸ்ருதி (6) என்ற 2 குழந்தைகள். பிரனவ் அதே பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான்.

சேலையூர் இந்திரா நகரில் உள்ள சீயோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ருதி 2ம் வகுப்பு படித்து வந்தாள். ஸ்ருதி தினமும் வீட்டில் இருந்து தந்தையின் ஆட்டோவில் முடிச்சூர் அட்டை கம்பெனி பஸ் நிறுத்தம் சென்று அங்கிருந்து பள்ளி பஸ்சில் பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து அப்பாவின் ஆட்டோவில் முடிச்சூர் அட்டை கம்பெனி பேருந்து நிறுத்தம் வந்த ஸ்ருதி, பின்னர் பள்ளி பஸ்சில் சென்றாள். மாலையில் வகுப்பு முடிந்த உடன் பள்ளி பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டாள். பஸ்சில் 60 மாணவ, மாணவிகள் இருந்தனர்.

சேலையூரில் இருந்து முடிச்சூருக்கு புறப்பட்ட பள்ளி வாகனம் முடிச்சூர் இ.பி. காலனி பேருந்து நிறுத்தம் அருகே யு டர்ன் போட்டு வரதராஜபுரம் நோக்கி மின்னல் வேகத்தில் சென்றது. உள்ளே இருந்த மாணவிகள் தங்களுக்குள் சீட் மாறி விளையாடினர். அந்த பஸ்சின் நடுவில் பெரிய ஓட்டை இருந்தது. பஸ் சென்ற வேகத்தில், சிறுமி ஸ்ருதி நிலைதடுமாறி அந்த ஓட்டை வரூ.யாக கீழே விழுந்தாள். பஸ்சின் பின் சக்கரம் ஸ்ருதி மீது ஏறி இறங்கியது. அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் உடல் நசுங்கி ஸ்ருதி இறந்தாள்.
இதைக் கண்டு பஸ்சுக்குள் இருந்த மாணவிகள் கூச்சலிட்டனர். இதை கவனிக்காமல் டிரைவர் சீமான் (58) பஸ்சை வேகமாக ஓட்டி சென்றார்.

இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து சாலையில் இருந்தோர் பதறினர். வேகமாக சென்ற பஸ்சை வரூ.மறித்து தடுத்து நிறுத்தி, டிரைவரை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர். அப்படியும் ஆத்திரம் அடங்காமல், குழந்தைகள் அனைவரையும் இறக்கிவிட்டு, பஸ்சை தீவைத்துக் கொளுத்தினர். தகவல் அறிந்து தாம்பரம், பீர்க்கன்கரணை போலீசார் சம்பவ இடம் விரைந்து மாணவியின் சடலத்தை மீட்டு குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக தாம்பரம் , முடிச்சூர் சாலை, காஞ்சிபுரம் , தாம்பரம் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து படப்பையை சேர்ந்த பஸ் டிரைவர் சீமான் கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக பள்ளி வாகனத்தின் உரிமையாளர் யோகேஷ்வரன், பள்ளி தாளாளர் விஜயன் ஆகிய இருவரையும் பிடித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தாம்பரத்தில் இருந்து 2 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து எரிந்து கொண்டிருந்த பஸ் தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் எரிந்து எலும்புக்கூடானது. பள்ளி பஸ்சுக்குள் இருந்த ஓட்டை வரூ.யாக மாணவி விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி விழுந்தது எப்படி?

பஸ்சின் நடுவில் மிகப்பெரிய ஓட்டை இருந்துள்ளது. அந்த ஓட்டையை சாதாரண பலகை வைத்து மூடியுள்ளனர். அது அசையாமல் இருக்க ஆணி ஏதும் அடிக்கவில்லை. யு டர்ன் அடித்து பஸ் வேகமாக சென்றபோது, அந்த பலகை விலகி விட்டது. பஸ்சுக்குள் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஸ்ருதி, நிலைதடுமாறி அந்த ஓட்டை வரூ.யாக கீழே விழுந்துள்ளார்.

பராமரிப்பு இல்லாத பள்ளி பஸ்

சீயோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை அலுவலகம் சேலையூர் இந்திரா நகரில் உள்ளது. இந்த பள்ளி மாடம்பாக்கத்தில் மேல்நிலைப் பள்ளியாகவும், செம்பாக்கத்தில் உயர்நிலைப் பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது. சேலையூரில் ஆல்வின் மெமோரியல் என்ற பெயரில் சிபிஎஸ் பள்ளியாக இயங்குகிறது. இந்த பள்ளிகளில் கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், சேலையூர், சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கம், மேடவாக்கம், சந்தோஷ புரம், முடிச்சூர், மணி மங்கலம், படப்பை, வண்டலூர், கூடுவாஞ்சேரி, குரோம்பேட்டை, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

மாணவ, மாணவிகளை அழைத்து வர மற்றும் வீட்டில் கொண்டு விட பள்ளி பஸ், வேன், மினி வேன், டாடா மேஜிக் என 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. சில தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்தும் மாணவர்களை அழைத்துச் செல்கின்றனர். இதற்கு மாணவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது. ஆனாலும் பஸ்களை சரியாக பராமரிப்பது இல்லை என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வாகன ஆய்வாளர் அலட்சியம்

விபத்துக்குள்ளான வாகனத்தின் உரிமையாளர் யோகேஸ்வரன். பெருங்களத்துரைச் சேர்ந்தவர். இவருக்கு சீயோன் பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் 3 பஸ், 3 வேன் இயங்குகின்றன. விபத்துக்குள்ளான பஸ் எப்சி முடித்து 14 நாட்களே ஆகிறது என்று கூறப்படுகிறது. எப்சி செய்யும் போது மோட்டார் வாகன ஆய்வாளர் பஸ் சரியான கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று ஓட்டி பார்க்க வேண்டும். ஆனால், அவர் எதையும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதுவே விபத்துக்கு காரணமாகவும் அமைந்துவிட்டது.

பள்ளி முன்பு போலீஸ் பாதுகாப்பு

சீயோன் மெட்ரிகுலேசன் பள்ளி பஸ் விபத்துக்குள்ளானதால், அந்த பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிடலாம் என்ற தகவல் கிடைத்ததால், அந்த பகுதியில் உள்ள 4 பள்ளிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் தாம்பரம் பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

போக்குவரத்து துறை ஆணையரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சேலையூரில் பள்ளி பஸ் விபத்து குறித்து சம்பந்தப்பட்ட ஆர்டிஓ முழுமையாக விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். அறிக்கை வந்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறை மீறும்பட்சத்தில் போக்குவரத்து விதிப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

''பள்ளி திறந்தவுடன் பள்ளி வாகனங்களில் சோதனை செய்யப்படுகிறது. சோதனையின் போது, வாகனங்களின் கியர் பாக்ஸ், பிரேக், இருக்கைகள், கண்ணாடிகள், லைட்டுகள், அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றி செல்கிறார்களா.. என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வு நடத்தும் போது ஏதேனும் குறை இருந்தால், சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு அளிக்கப்படும் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்படும்.

மேலும், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால், பர்மிட் ரத்து செய்யப்படும். வாகனங்கள் இவ்வளவு ஆண்டுகள் தான் ஓட்ட வேண்டும் என்ற உத்தரவு இல்லை. ஆனால், வாகனங்களில் குறை இருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி உள்ளது.'' என்றும் அவர் கூறினார்.

விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி பேட்டி

பள்ளி பஸ்சில் இருந்து மாணவி தவறி விழுந்ததை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் கூறியதாவது: பெருங்களத்தூர் முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம்: படப்பையில் இருந்து பைக்கில் வந்து கொண்டிருந்தேன். அப்போது என் முன்னால் சென்ற பஸ்சில் இருந்து ஏதோ ஒன்று கீழே விழுந்தது. அதிர்ச்சியுடன் பார்த்தபோதுதான் அது குழந்தை என தெரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சின் பின்பக்க டயர் குழந்தையின் மீது ஏறி இறங்கியது. அதைப் பார்த்து நான் கூச்சலிட்டேன். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் வேகமாக போய்க் கொண்டிருந்தார். சாலையில் இருந்த அனை வரும் ஓடிச் சென்று பஸ்சை மறித்தனர். டிரைவரை வெளியே இழுத்து அடித்தனர். சிலர் குழந்தைகள் அனைவரையும் பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு, பஸ்சுக்கு தீவைத்தனர்.

ஓய்வு பெற்ற அரசு ஊரூ.யர் தவமணி: என்னுடைய பைக்குக்கு பெட்ரோல் போட்டுவிட்டு திரும்பினேன். அப்போது குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது. ஓடிச் சன்று பார்த்தபோது பள்ளி குழந்தையின் மீது பேருந்தின் டயர் ஏறி இறங்கியிருந்தது. குழந்தை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில், மூளை சிதறி இறந்து கிடந்தது.
சுரேஷ் (38): தனியார் பள்ளிகள் பணத்தில் மட்டுமே குறிக்கோளாக உள்ளனர். பேருந்தின் தரத்தை கவனிப்பதில்லை. இதனால், ஒரு குழந்தையின் உயிரே போய்விட்டது. பேருந்தை முறையாக பராமரிக்காத, பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கங்காதரன் (38): இந்த பிரச்னைக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வருத்தம் தெரிவிக்கவில்லை. சம்பவ இடத்துக்கு யாரும் வரவில்லை. பஸ் தனியாருக்கு சொந்தமாக இருந்தாலும், பஸ்சின் தரத்தை பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால், கமிஷனுக்காக பஸ் பராமரிப்பு பற்றி அக்கறை காட்டாமல் இருந்துள்ளனர். கட்டணம் செலுத்த ஓரிரு நாட்கள் ஆனாலும், குழந்தைகளை வண்டியில் ஏற்றமாட்டார்கள். குழந்தைகளை சாலையில் விட்டு சென்றுவிடுவார்கள்.

குழந்தைசாமி (40): பள்ளி பஸ்சை டிரைவர்கள் கண்மூடித்தனமாக ஓட்டுகின்றனர். இந்த பஸ்சில் இருந்து குழந்தை கீழே விழுந்த பிறகும், டிரைவர் வண்டியை நிறுத்தாமல் சென் றார். பொதுமக்கள் அனைவரும் சத்தம் போட்ட பிறகு பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர் ஓடிவிட்டார். பஸ்சை முறையாக பராமரிக்காத உரிமையாளர், அதனை கண்காணிக்காத பள்ளி நிர்வாகம் மற்றும் ஆர்டிஓ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன்: எங்கள் பகுதியில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த பகுதியில் காலை நேரங்களில் ஏராளமான பள்ளி பேருந்துகள் மற்றும் வாகங்கள் வந்து செல்கிறது. பேருந்துகளை சாலையின் நடுவிலேயே நிறுத்தி மாணவ, மாணவிகளை ஏற்றுவார்கள். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

சில நேரங்களில் சிறு சிறு விபத்துகளும் நடைபெறும். பள்ளி வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மாணவ, மாணவிகளை ஏற்றுகின்றனர். போக்குவரத்து விதிகளின்படி, வாகனங்களை ஓட்டுவதில்லை. வாகனங்களை சரியாக பராமரிப்பதில்லை. சட்ட திட்டங்களை கடைப்பிடிப்பதில்லை. ஆட்டுமந்தை போல பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகங்களை ஆர்டிஓ மற்றும் போலீசார் கண்டுகொள்வதில்லை.

முதல்வருக்கு அறிக்கை

‘‘பஸ்சில் இருந்து பள்ளிக் குழந்தை கீழே விழுந்து இறந்த சம்பவம் குறித்து அறிந்த மெட்ரிகுலேஷன் இயக்குநர் செந்தமிழ்ச் செல்வி, இணை இயக்குநர் கார்மேகம், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தமிழ்மணி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சீயோன் பள்ளிக்கு சென்று அந்த பள்ளி நிர்வாகியிடமும் விசாரணை நடத்தினர். பள்ளி வாகனம் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்துள்ளார்களா என்பது குறித்து நேற்று இரவு 10 மணி வரை கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டு, அந்த அறிக்கையை முதல்வருக்கு அனுப்புவோம். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.

மயங்கி விழுந்த தாய்

பலியான மாணவி ஸ்ருதி வீட்டு அருகே பள்ளி பஸ் வராது. எனவே, அவரது தந்தை தனது ஆட்டோவில் முடிச்சூர் அட்டை கம்பெனி பேருந்து நிறுத்தத்தில் விட்டுச் செல்வார். மாலையில் அவரது அம்மா பிரியா கூட்டி செல்வார். நேற்று மாலை வழக்கம்போல மகளை அழைத்து வர பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது, யாரோ ஒரு பள்ளி மாணவி விபத்தில் சிக்கி பலியானதாக தகவல் பரவியது. கடைசியில் இறந்தது மகள் ஸ்ருதிதான் என்பதை அறிந்ததும் தாய் பிரியா அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.


தினகரன்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 26, 2012 11:49 am

மிகவும் சோகமான விஷயம்.

தனியார் பள்ளிகள் பணத்தை மட்டுமே குறியாக உள்ளது என்பது உண்மைதான்.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 26, 2012 12:00 pm

ஓட்டை பஸ்சுக்கு எப்சி கொடுத்த ஆர்டிஓ அதிகாரி மீ்து இதுவரை நடவடிக்கை இல்லை-மக்கள் கொதிப்பு
சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி 26zionschoolbus
சென்னை: சென்னை ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி மிகப் பரிதாபமான சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டை பஸ்சுக்கு ஓட்ட தகுதியானது என்று எப்சி அளித்த வட்டாரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அரசின் செயல் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில்தான் சமீபத்தில் ஜியோன் பள்ளியின் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு எப்சி வாங்கியுள்ளதாக தெரிகிறது. மொத்தம் நான்கு பள்ளிகளை இந்த நிறுவனம் இயக்கி வருகிறது. அத்தனை பேருந்துகளுக்கும், வேன்களுக்கும் சமீபத்தில்தான் எப்சி வாங்கியுள்ளனர்.

அப்படி வாங்கப்பட்ட பேருந்தில் இருந்த பெரிய ஓட்டை வழியாகத்தான் ஸ்ருதி கீழே விழுந்து உயிரை விட்டுள்ளாள். இப்படிப்பட்ட ஓட்டை பஸ்சுக்கு எப்படி ஆர்டிஓ அலுவலகத்தில் எப்சி கொடுத்தார்கள் என்று மக்கள் கேட்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் உள்ளிட்ட நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் எப்சி போட்டுக் கொடுத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை எதுவும் பாயவில்லை.

இது மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏன் போலீஸார் இந்த விவகாரத்தில் ஆர்டிஓ அலுவலகம் மீது பாராமுகமாக உள்ளனர் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் இதுவரை பள்ளியின் பிற வாகனங்கள் தகுதியுடன் இருக்கிறதா என்பதை அவற்றை போலீஸார் பறிமுதல் செய்யாமல் இருக்கின்றனர். அத்தனை வாகனங்களும் பத்திரமாக பள்ளி வளாகங்களிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதுவும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜியோன் பள்ளியின் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்து அவை அனைத்தும் ஓட்டத் தகுதியான நிலையில்தான் உள்ளனவா, ஓட்டை உடைசல் உள்ளனவா என்பது குறித்து முழுமையான ஆய்வு செய்ய வேண்டும். அது முடியும் வரை அந்த வாகனங்களை இயக்கத் தடை விதிக்க வேண்டும் என்று அப்பாவி பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 26, 2012 12:05 pm

சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி 26shrutichild

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 26, 2012 12:22 pm

ரொம்ப வருத்தமா இருக்கு சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jul 26, 2012 1:46 pm

அநியாயம் சோகம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 26, 2012 2:53 pm

பிரச்சனைனு வந்தா மட்டும் நம்ம மக்கள் சண்டைக்கு போயிடுறாங்க....

தவறு முதலில் நம்மளோடது......

நன்றாக வகுப்புப்பாடம் சொல்லிக்கொடுத்து கட்டணங்களை இலவசமாக்கி அதற்கும் உதவித்தொகை அளிக்கும் அரசாங்க பள்ளிகளில் மாணவர்களை சேர்க்காமல் கயிறு மேல் வாழ்க்கை நடத்தி வரும் பணத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து மாணவனின் எதிர்காலத்தையே சீரழிக்கிறார்கள்.

நன்றாக படிக்கும் மாணவனுக்கு அமைதி தேவை. எவன் ஒருவன் வீட்டில் கஷ்டம் , பள்ளிக்கட்டணம் கூட செலுத்த முடியவில்லை என்று நினைக்கிறானோ நிச்சயமாக சொல்கிறேன் அவனால் ஒழுங்காகவே படிக்கமுடியாது. அரசாங்க பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்போம் அவன் வாழ்க்கையை பிரகாசமாய் ஒளிர வைப்போம்...........





சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jul 26, 2012 9:03 pm

முஹைதீன் wrote:மிகவும் சோகமான விஷயம்.

தனியார் பள்ளிகள் பணத்தை மட்டுமே குறியாக உள்ளது என்பது உண்மைதான்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் வெட்க கேடான உண்மை ஆமோதித்தல் ஆமோதித்தல்



செந்தில்குமார்
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Thu Jul 26, 2012 9:05 pm

மிகவும் சோகமான விஷயம் அதிர்ச்சி



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக