புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
1 Post - 1%
mruthun
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
101 Posts - 47%
ayyasamy ram
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
2 Posts - 1%
manikavi
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
2 Posts - 1%
mruthun
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நான் பெற்ற பெண்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 21, 2012 10:38 pm

திருமயிலாப்பூரிலே சிவநேசஞ்செட்டியார் என்றொருவர் வாழ்ந்து வந்தார். பரமேசுவரனிடத்திலே மிகுந்த ஈடுபாடு. ஒரு கோடிக்குச் சொத்திருக்கும். அவர் மனைவியார் மிக்க உத்தமி. அவர் வீட்டில் கட்டில் இருந்தது. தொட்டில் இல்லை. கட்டில் நம்ம விருப்பத்துக்கு வரும். தொட்டில் இறைவன் கொடுத்து வர வேண்டும். குழந்தை இல்லையே என்று ஏங்கினார்.

தானம், தர்மம், தவம் முதலியன செய்தார். பிரதோச விரதம், கார்த்திகை விரதம், சோமவார விரதம் முதலியன அனுட்டித்தார்.
அவர் செய்த தவத்தின் பயனாக அந்த அம்மை மணிவயிறு வாய்க்கப் பெற்றாள். பத்துமாதம் பொறுத்து ஒரு பெண் குழந்தை இலட்சுமியைப் போலப் பிறந்தது. பூம்பாவை என்று பெயர் சூட்டினார்.

ஐந்து வயதானவுடனே ஆசிரியர்கள் எல்லாம் வந்து பயிற்றுவித்தனர். கற்பூரத்தில் தீ வைக்கிற மாதிரி கல்வி ஞானம் உண்டாயிற்று. வயது ஏழானது. தலைவாரிப்பின்னிச் சடையிட்டால் நிலத்தில் வந்து விழும் நடுவில் ஒட்டில்லாமல். தந்தையாருக்கு அளவற்ற மகிழ்ச்சி.

என் குழந்தையை ஞானசம்பந்தருக்குத் தருவேன் என்றும் உற்றாரும் ஊராரும் அறிய பிரகடனம் செய்தார். அவர்களது திருமாளிகைக்குப் பின்புறம் நந்தவனம். அங்கே மலர் பறிக்க பூம்பாவை போனாள். அங்கிருந்த அரவம் தீண்டியது. எத்தனை எத்தனையோ மருத்துவம். எத்தனை எத்தனையோ மாந்திரீகம் செய்தும் குழந்தைப் பிழைக்கவில்லை. விதியை வென்றவர்கள் யார்?
குழந்தை மாண்டுவிட்டது. தாய் தந்தையருக்கு அளவு படாத துன்பம். அழுது அழுது நின்றனர். பின்னர் பிரேதத்தைச் சுட்டுச் சாம்பலையும் எலும்பையும் ஒரு மண் ஏனத்திலே வைத்து குழந்தை பூண்டிருந்த அணிகலன்களை இட்டுப் பார்த்துப் பார்த்து அழுகின்றார்கள்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஐந்தாண்டுகள் அப்பாலே ஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு எழுந்தருளினார். அவரை திருமயிலாப்பூருக்கு அழைத்துச் சென்றார்கள். சம்பந்தப் பெருமான், கற்பகவல்லி அம்மையையும் கபாலீச்சுரப் பெருமானையும் வணங்கினார். அப்போது செட்டியார் சம்பந்தப்பெருமானுடைய திருவடியில் வீழ்ந்து அந்த மண் பானையை வைத்தார். அதிலேயிருந்த எலும்பும் சாம்பலும் கள்டு, “செட்டியாரே இது என்ன’” என்று பெருமான் கேட்டார்.

அவர் அழுது கொண்டே, “குருநாதா, குழந்தையில்லாத அடியேன் தவஞ்செய்து ஒரு பெண் மகவைப்பெற்றேன். பூம்பாவை என்று பெயரிட்டேன். அப்பெண்ணைத் தங்களுக்குத் தருவதாகப் பிரகடனம் செய்தேன். ஐயனே, நீங்கள் தீண்டவில்லை. அரவம் தீண்டி விட்டது. உடையவரிடத்திலே உடமையை ஒப்புவித்து விட்டேன்” என்றார்.

சுற்றிலும் சமண முனிவர்கள் இருந்து வேடிக்கை பார்க்கின்றார்கள். அப்போது சம்பந்தர், :செட்டியார், உங்கள் குழந்தை பிழைக்கும். ஏனென்றால், உடம்புதானே போய் விட்டது. ஆன்மாவுக்கு அழிவில்லையே. ஆன்மா என்றைக்கும் உண்டு என்றார். பின்வரும் பதிகத்தையும் பாடினார்.

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடலானே றூரும் அடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.

நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.

உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.

.
பதிகம் பாடியவுடன் குடம் வெடித்துப் பன்னிரண்டு வயதுப் பெண் வெளியே வந்தாள். ஆயிரமாற்றுத் தங்க விக்கிரகம் போல் விளங்கினாள். சமணர்கள் கண்டு வெட்கினர்.

தாய் தந்தையர் அளவற்ற மகிழ்ச்சியடைந்தனர். சிவநேசஞ்செட்டியார், சம்பந்தப் பெருமானை வணங்கி “ சுவாமி, ஒரு கோடி சொத்து சீர்வரிசைக்கும் குறைவில்லை. என் பெண்ணை எற்றுக் கொள்ளுங்கள்.என்றார். பெற்ற அப்பாவே பெண்ணைத்தர சம்மதித்தால் எந்தக் கிழவன் வேண்டாமென்பான்?

சைவத்திலே வந்தவர்கள் ஆசாபாசம் துறந்தவர்கள். ஞானசம்பந்தப் பெருமகனார், “செட்டியார், நீங்கள் பெற்ற பெண் மாண்டுவிட்டது. இது நான் பெற்ற பெண். இது என்னுடைய குழந்தை” என்றார்.

(திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவில் இருந்து)


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 21, 2012 10:43 pm

பகிர்விற்கு நன்றி சாமி அண்ணா நன்றி

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Jul 23, 2012 9:41 am

சைவத்திலே வந்தவர்கள் ஆசாபாசம் துறந்தவர்கள். ஞானசம்பந்தப் பெருமகனார், “செட்டியார், நீங்கள் பெற்ற பெண் மாண்டுவிட்டது. இது நான் பெற்ற பெண். இது என்னுடைய குழந்தை” என்றார்.

இப்படிப்பட்ட சம்பந்தர் ஆரம்பித்த மதுரை ஆதீன மடத்தில் இப்போது நடக்கும் கொடுமையை என்ன சொல்வது?

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue Jul 24, 2012 9:36 am

நல்ல பதிவு!!! புன்னகை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 25, 2012 11:12 pm

ஆரூரன் wrote:சைவத்திலே வந்தவர்கள் ஆசாபாசம் துறந்தவர்கள். ஞானசம்பந்தப் பெருமகனார், “செட்டியார், நீங்கள் பெற்ற பெண் மாண்டுவிட்டது. இது நான் பெற்ற பெண். இது என்னுடைய குழந்தை” என்றார்.

இப்படிப்பட்ட சம்பந்தர் ஆரம்பித்த மதுரை ஆதீன மடத்தில் இப்போது நடக்கும் கொடுமையை என்ன சொல்வது?


மதுரை ஆதின மடம் சம்பந்தர் ஆரம்பித்தது அல்ல ஆரூரன். அந்தப் பக்கம் வந்தபொழுது அங்கே தங்கியுள்ளார்.. அவ்வளவே!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக