புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_m10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_m10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10 
77 Posts - 36%
i6appar
கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_m10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_m10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_m10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_m10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_m10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_m10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_m10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_m10கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் (பரம்பொருளின்) ஐந்தொழில்கள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 13, 2012 6:19 am

மனித உயிரில் அநாதியாக படிந்திருக்கிற அழுக்கைப் போக்கி, அவ்உயிரை தூய்மைப்படுத்தி, அதை இன்ப நிலையில் வைக்கிறார் கடவுள். உயிருடன் கலந்துள்ள அழுக்கைப் (பாசம்) போக்கி இன்பநிலையை தருவதற்காகக் கடவுள் ஐந்தொழில் செய்கிறார். இந்த ஐந்தொழிலையும் ஒருங்கே காட்டுவதுதான் கூத்தரசனின் (நடராச) திருவுருவம். கூத்தரசனின் உருவம் கண்ணுக்குங் கருத்துக்கும் இன்பம் தருகிற வெறும் கலைப் பொருள் மட்டும் அன்று. கலையைக் கடந்து அதற்கப்பாற்பட்ட உண்மையை விளக்குகின்ற ஒரு தத்துவம்.

அநாதி காலம் முதல் உயிருடன் படிந்திருக்கிற பாசம் என்னும் அழுக்கைப் போக்கி, உயிர்களுக்கு ஞானத்தை விளங்கச் செய்து, இன்ப நிலையைத் தருகிறார் கடவுள் என்று கூறினோம். இப்படிச் சுருக்கமாக கூறினால் முழுக் கருத்தையும் விளங்கிக் கொள்ள முடியாது. ஆகவே இதனைச் சற்று விளக்கமாகக் கூறுவோம். இந்த விளக்கத்தை முப்பொருள், ஐஞ்செயல், ஐஞ்செயல் நோக்கம் என்னும் மூன்று பிரிவுகளில் பார்ப்போம்.

(தொடரும்)


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Jun 13, 2012 10:51 am

நல்ல கட்டுரை தொடருங்கள் சாமி!! மகிழ்ச்சி

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Wed Jun 13, 2012 9:37 pm

[quote="சாமி"
அநாதி காலம் முதல் உயிருடன் படிந்திருக்கிற பாசம் என்னும் அழுக்கைப் போக்கி, உயிர்களுக்கு ஞானத்தை விளங்கச் செய்து, இன்ப நிலையைத் தருகிறார் கடவுள் என்று கூறினோம். இப்படிச் சுருக்கமாக கூறினால் முழுக் கருத்தையும் விளங்கிக் கொள்ள முடியாது. ஆகவே இதனைச் சற்று விளக்கமாகக் கூறுவோம். [/quote]

நன்று தொடருங்கள் சாமி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 16, 2012 10:17 pm

முப்பொருள்:
முப்பொருளானவை கடவுள் (பதி), உயிர் (பசு), அழுக்கு (பாசம்) என்பவை. இம்மூன்று பொருளும் அநாதியானவை. அதாவது, இவற்றை ஒருவரும் படைக்கவில்லை; இவை எக்காலத்திலும் உள்ளன.இம்மூன்று பொருள்களில் கடவுள் அழுக்கினால் கட்டுப்படாமல் தூயவராகத் தனித்திருக்கிறார். அவர் என்றும் தூய்மையாக இருக்கிறார். மற்ற பொருளாகிய உயிரும் அழுக்கும் (பசுவும் பாசமும்) ஒன்றையொன்று பற்றிக் கொண்டுள்ளன. ஆகையினாலே, உயிர் தூயமையாக இல்லாமல் அழுக்கு (மலம்) படிந்து ஒளி மழுங்கிக் கிடக்கின்றது. தன்னிடமுள்ள அழுக்கை உயிர், தானே நீக்கிக் கொள்ளமுடியாமலிருக்கிறது. கடவுள்தான் உயிரின் அழுக்கைப் போக்க வேண்டும். அழுக்காகிய பாசம் உயிர் அற்ற சடப்பொருள். சடப்பொருளாகிய பாசம் உயிரைப்பற்றிக் கொண்டு, அதன் ஒளியை மங்கச் செய்கிறது. இவற்றை சுருக்கமாக பார்ப்போம்.

கடவுள்: 1
எல்லாம் வல்ல கடவுள் ஒருவர் இருக்கிறார். அவர் நிறைந்த அன்பும், இன்பமும், தூய்மையும், ஆற்றலும் உடையவர். எங்கும் நிறைந்துள்ளவர். ஆதியும் அந்தமும் இல்லாதவர். அதாவது பிறப்பும் இறப்பும் இல்லாதவர். அவரை ஒருவரும் படைக்கவில்லை. அனாதியாக இருக்கிறார். உயிர்களிடத்தில் படிந்துள்ள மாசுக்களை நீக்கி, அவற்றை தூய்மைப்படுத்தி இன்பநிலையடையச் செய்கிறார். இத்தொழிலைப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துவிதமாகச் செய்கிறார்.

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 22, 2012 10:59 pm

உயிர்: 2
எண்ணிறைந்த உயிர்கள் உள. உயிர்களைக் கடவுள் படைக்கவில்லை. கடவுளைப் போலவே உயிர்களும் அனாதியாக உள்ளன. ஆனால், இவை கடவுளைப் போன்று தூய்மையாக இல்லை. தூய்மை கெட்டு மாசு படிந்து உள்ளன. செம்பில் களிம்பு போலவும், நெல்லில் உமி போலவுல், உப்பில் நீர் போலவும், மாசானது அனாதியாகவே உயிர்களிடத்தில் படிந்து, அவற்றின் தூய்மையை மறைத்துக் கொண்டிருக்கிறது.

அழுக்கு: 3
உயிர்களிடத்தில் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றுவித அழுக்குகள் (மலம்) படிந்துள்ளன. அழுக்குகளைக் கடவுள் உண்டாக்கவில்லை. கடவுளைப் போலவும் உயிர்களைப் போலவும் இந்த அழுக்குகளும் அநாதியாகவே இருக்கின்றன. அவை அறிவற்ற சடப்பொருள்கள். மேலே கூறியபடி இவை உயிர்களிடத்தில் படிந்து அவற்றின் தூய்மையை மறைத்துக் கொண்டு இருக்கின்றன.

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jul 17, 2012 7:08 pm

ஐஞ்செயல்
உயிர்களிடத்தில் படிந்திருக்கிற அழுக்கை உயிர்கள் தாமே நீக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையன அல்லவென்றும், கடவுள்தாம் அவ்வழுக்கைப்போக்கி உயிர்களைத் தூய்மைபடுத்த வேண்டுமென்றும் அறிந்தோம். கடவுள் தமக்கு இயற்கையாயுள்ள பெருங்கருணையினாலே, உயிர்களிடத்தில் படிந்திருக்கிற அழுக்கைத் துடைத்து அவற்றைத் தூய்மைப்படுத்துகிறார். இந்தச் செயலுக்கு ஐஞ்செயல் என்று பெயர். ஐஞ்ச்செயல்களை அவர் எப்போதும் இடைவிடாமல் செய்துகொண்டேயிருக்கிறார். அவர் இயற்றும் ஐந்து செயல்களாவன: ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன. இவற்றை தெளிவாக விளக்குவோம்.

1 ஆக்கல்:
ஆக்கல் அல்லது படைத்தல் என்றால், கடவுள் உயிர்களைப் படைக்கிறார் என்பது பொருள் அன்று. கடவுளைப்போலவே உயிர்களும் அனாதியாக உள்ளவை. அவற்றைக் கடவுள் படைக்கவில்லை. அப்படியானால் கடவுள் எதைப் படைக்கிறார்? உயிர்கள் தாம் செய்த வினைப் பயன்களுக்குத் தக்கபடி அவ்வவ்வினைப் பயன்களைப் புசிப்பதற்காக அவ்வுயிர்களுக்கு உடம்பையும், புலன்களையும், வாழ வேண்டிய இடத்தையும், வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களையும் கடவுள் படைத்துக் கொடுக்கிறார். ஆகவே ஆக்கல் என்பது உயிர்களின் புண்ணிய பாவத்துக்குத் தக்கபடி உடம்பு, அது வாழும் இடம், அது புசிக்கும் பொருள் இவற்றைப் படைத்தலாகும்.

2 காத்தல்:
ஆன்மா செய்த வினைப் பயன்களைத் துய்க்கும் பொருட்டுக் கடவுளால் உண்டாக்கிக் கொடுக்கப்பட்ட உடல், புலன், உலகம், போகப் பொருட்கள் ஆகியவற்றை ஆன்மா புசிக்கவேண்டிய காலம் வரையில் நிலைநிறுத்தி வைப்பதுதான் காத்தல் என்பது.
நல்வினை, தீவினை என்னும் இருவினைப் போகங்களை உயிர்களுக்கு உண்பிப்பது காத்தல் செயலாகும்.

(தொடரும்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக