புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
21 Posts - 70%
heezulia
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
1 Post - 3%
viyasan
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
213 Posts - 42%
heezulia
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
21 Posts - 4%
prajai
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபலத்தின் சம்பளம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 19, 2012 11:36 am




பரமேஷ்வருக்கு காரை செலுத்துவதில் கவனம் செல்ல மறுத்தது. உடம்பெங்கிலும் ஒருவித படபடப்பும் பரபரப்பும் நிறைந்து கிடந்தது. மாலை ஐந்து மணி பூந்தமல்லி டிராபிக் ஒருபக்கம் காரை நிதானமாக செலுத்தவிடாமல் அவரை படுத்த ... மனதோ அதைவிடப் படுத்திற்று. ஐம்பத்தைந்து வயது ஆசாமிக்கு பெண் சபலம் வரக்கூடாது. கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மகளும், தனியார் நிறுவனமொன்றில் உயர் பதவியில் மனைவியும் இருக்க... ஏன் இப்படி புத்தி தறிகெட்டுப் போயிற்று?

ஆயிரமாவது முறையாய் மனதுக்குள் கேள்வி எழுந்தது.

விட்டில் வேலை செய்யும் வேலைக்காரிக்கு ஆறுமாத காலமாய் விதம்விதமான தூண்டில் வீசி... ரகசியமாய் பணம் பொருள் கொடுத்து அவளின் ஏழ்மை சூழ்நிலையை பயன்படுத்தி... காலையில் மனைவி அலுவலகத்திற்கு சீக்கிரமாய் கிளம்பி இருக்க... மகளும் ஏதோ காரணமாய் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றிருக்க.. வீடு பெருக்கி முடித்தவளை நைச்சியமாய் பேசி மடக்கி...

ஆனால் வீட்டுக் கதவு சரியாக தாழ்ப்பாள் போடாமல் இருக்க.... முதலாவது மாடியில் இருக்கும் அவரது மகள் வயதுடைய கல்லூரி முதலாமாண்டு படிக்கும் சியாமளா... திடுமென சுந்தரியைப் பார்க்க வீட்டிற்குள் பிரவேசிக்க... கையும் களவுமாய்...

அந்தக் காட்சியை கண்டு திடுக்கிட்டு திகைத்துப்போன சியாமளாவின் முகம் போன போக்கு அழிய மறுத்து நெஞ்சிலேயே ஒட்டிக் கொண்டது. இந்நேரம் தனது மகள் சுந்தரியிடம் சொல்லி இருப்பாளோ?

சுந்தரி, அம்மாவிடம் சொல்லியிருப்பாளோ...

வீட்டிற்குள் நுழைந்ததும் பிரளயம் வெடிக்குமோ?

சிக்னலை கடந்து அண்ணா நகர் ரவுண்டானாவை ஒரு சுற்று வந்தபோது அந்த கூட்டத்தை கவனித்தார். பெரும் கூட்டம். ஏராளமான கால்களுக்கிடையே ஒரு டூ வீலர் கீழே தாறுமாறாய்க் கிடப்பது தெரிந்தது...

சியாமளாவின் ஸ்கூட்டரே தான்... சந்தேகமில்லை.

சாலையில் வழிந்திருந்த ரத்தம் பார்த்ததும் இனம் பிரிக்க முடியாத ஒரு உணர்வு அவருக்குள் எழுந்தது. சந்தோஷம்?

சின்னப் பொண்ணு சார்... டிப்பர் லாரிக்காரன் அடிச்சிட்டான்... உயிர் இருக்கான்னு தெரியல... மண்டைல அடி... நூத்தியெட்டு ஆம்புலன்ஸ் தூக்கிட்டுப் போயிருக்கு...''

அவரது தோற்றத்தைப் பார்த்து ஒருவர் விளக்கம் கூறினார்.

"இப்ப தான் சார்.... பத்து நிமிஷம் இருக்கும்.... பொண்ணுகிட்ட செல்போன் இல்ல... வண்டில ரிகார்ட்ஸ் ஏதும் இல்ல... வீட்டுக்கு எப்படி தகவல் சொல்றதுன்னு யாருக்கும் தெரியல சார்...''

சியாமளாவின் உயிருக்கு ஆபத்து என்பது இப்போதைய அவரது மனநிலைக்கு ஒருவித ரிலாக்ஸான விஷயமாய் இருந்தது. மேல் வீட்டுப் பெண். ஆறு வருடங்களாக பழக்கம். மகளுக்கு நெருக்கமான தோழி. அவரைப் பார்க்கும்போதெல்லாம் `ஹலோ' சொல்லாமல் போக

மாட்டாள்...விபத்தில் சிக்கி இருக்கிறாள்... மண்டையில் அடி... ஏராளமான ரத்தப் பெருக்கு... ஆனால் தனக்கு பதட்டம் ஏதும் ஏற்படவில்லையே... அது ஏன்?

உயிருக்கு ஆபத்து... எங்கே கொண்டு சென்றிருக்கிறார்கள் என்று விசாரித்து உடனடியாக அங்கே செல்லலாம்... அவள் வீட்டுக்கு தகவல் கொடுக்கலாம்...

ஆனால்... சியாமளா காப்பாற்றப்பட்டு விட்டால்...?

காலையில் அவள் பார்த்த அந்த காட்சி...

பரமேஷ்வர் மனிதம் மறந்தார்.

ஏனோ மனது உற்சாகமாய் இருக்க காரை ஸ்டார்ட் செய்து குழப்பமின்றி வீட்டை நோக்கிச் செலுத்தினார். அப்பாட்மெண்ட் அமைதியாக இருந்தது. காரை பார்க் செய்து இறங்கினார். யாருக்கும் தகவல் தெரியவில்லை. தெரிந்தால் இந்நேரம் பரபரப்பாக இருக்கும். அவருக்கும் தகவல் வந்திருக்கும். எப்படி சியாமளாவை அடையாளம் காண்பார்கள்? பிழைப்பாளா... மண்டையில் அடி என்றார்களே... ஒரு சமயம் உயிர்பிழைத்து ஆனால் நினைவுகள் தப்பி..

இந்த இரண்டில் எது நடந்தாலும் ஓகே தான்...

மனைவி லெட்சுமி கதவைத் திறந்தாள்.

உள்ளே நுழைந்தவரிடம் படபடப்பாகப் பேசினாள்... "ஏங்க... இந்த சுந்தரிப் பொண்ணுக்கு எப்பதான் பொறுப்பு வருமோ? அவ பைக் பங்ச்சர்... ஏதோ அவசரம் அண்ணாநகர்ல ஒரு பிரெண்டை பார்க்கணும்னு மேல் வீட்டு சுந்தரி பைக்கை வாங்கிட்டு போயிருக்கா... செல்போனை விட்டுட்டுப் போயிட்டா... போயி ரெண்டு மணி நேரமாகுதுங்க... என்னமோ தெரியல... நெஞ்சு முழுக்க பக்பக்ன்னு இருக்குதுங்க...'

- திருவாரூர் பாபு



சபலத்தின் சம்பளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 19, 2012 2:11 pm

சபலத்துக்கு சம்பளம் என்று சொல்வதைவிட மனித நேயம் மறந்ததுக்கு சம்பளம் என்று சொல்லலாம்
பகிர்வுக்கு நன்றி சிவா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக