புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
32 Posts - 55%
heezulia
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
32 Posts - 55%
heezulia
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபலத்தின் சம்பளம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 19, 2012 11:36 am




பரமேஷ்வருக்கு காரை செலுத்துவதில் கவனம் செல்ல மறுத்தது. உடம்பெங்கிலும் ஒருவித படபடப்பும் பரபரப்பும் நிறைந்து கிடந்தது. மாலை ஐந்து மணி பூந்தமல்லி டிராபிக் ஒருபக்கம் காரை நிதானமாக செலுத்தவிடாமல் அவரை படுத்த ... மனதோ அதைவிடப் படுத்திற்று. ஐம்பத்தைந்து வயது ஆசாமிக்கு பெண் சபலம் வரக்கூடாது. கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மகளும், தனியார் நிறுவனமொன்றில் உயர் பதவியில் மனைவியும் இருக்க... ஏன் இப்படி புத்தி தறிகெட்டுப் போயிற்று?

ஆயிரமாவது முறையாய் மனதுக்குள் கேள்வி எழுந்தது.

விட்டில் வேலை செய்யும் வேலைக்காரிக்கு ஆறுமாத காலமாய் விதம்விதமான தூண்டில் வீசி... ரகசியமாய் பணம் பொருள் கொடுத்து அவளின் ஏழ்மை சூழ்நிலையை பயன்படுத்தி... காலையில் மனைவி அலுவலகத்திற்கு சீக்கிரமாய் கிளம்பி இருக்க... மகளும் ஏதோ காரணமாய் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றிருக்க.. வீடு பெருக்கி முடித்தவளை நைச்சியமாய் பேசி மடக்கி...

ஆனால் வீட்டுக் கதவு சரியாக தாழ்ப்பாள் போடாமல் இருக்க.... முதலாவது மாடியில் இருக்கும் அவரது மகள் வயதுடைய கல்லூரி முதலாமாண்டு படிக்கும் சியாமளா... திடுமென சுந்தரியைப் பார்க்க வீட்டிற்குள் பிரவேசிக்க... கையும் களவுமாய்...

அந்தக் காட்சியை கண்டு திடுக்கிட்டு திகைத்துப்போன சியாமளாவின் முகம் போன போக்கு அழிய மறுத்து நெஞ்சிலேயே ஒட்டிக் கொண்டது. இந்நேரம் தனது மகள் சுந்தரியிடம் சொல்லி இருப்பாளோ?

சுந்தரி, அம்மாவிடம் சொல்லியிருப்பாளோ...

வீட்டிற்குள் நுழைந்ததும் பிரளயம் வெடிக்குமோ?

சிக்னலை கடந்து அண்ணா நகர் ரவுண்டானாவை ஒரு சுற்று வந்தபோது அந்த கூட்டத்தை கவனித்தார். பெரும் கூட்டம். ஏராளமான கால்களுக்கிடையே ஒரு டூ வீலர் கீழே தாறுமாறாய்க் கிடப்பது தெரிந்தது...

சியாமளாவின் ஸ்கூட்டரே தான்... சந்தேகமில்லை.

சாலையில் வழிந்திருந்த ரத்தம் பார்த்ததும் இனம் பிரிக்க முடியாத ஒரு உணர்வு அவருக்குள் எழுந்தது. சந்தோஷம்?

சின்னப் பொண்ணு சார்... டிப்பர் லாரிக்காரன் அடிச்சிட்டான்... உயிர் இருக்கான்னு தெரியல... மண்டைல அடி... நூத்தியெட்டு ஆம்புலன்ஸ் தூக்கிட்டுப் போயிருக்கு...''

அவரது தோற்றத்தைப் பார்த்து ஒருவர் விளக்கம் கூறினார்.

"இப்ப தான் சார்.... பத்து நிமிஷம் இருக்கும்.... பொண்ணுகிட்ட செல்போன் இல்ல... வண்டில ரிகார்ட்ஸ் ஏதும் இல்ல... வீட்டுக்கு எப்படி தகவல் சொல்றதுன்னு யாருக்கும் தெரியல சார்...''

சியாமளாவின் உயிருக்கு ஆபத்து என்பது இப்போதைய அவரது மனநிலைக்கு ஒருவித ரிலாக்ஸான விஷயமாய் இருந்தது. மேல் வீட்டுப் பெண். ஆறு வருடங்களாக பழக்கம். மகளுக்கு நெருக்கமான தோழி. அவரைப் பார்க்கும்போதெல்லாம் `ஹலோ' சொல்லாமல் போக

மாட்டாள்...விபத்தில் சிக்கி இருக்கிறாள்... மண்டையில் அடி... ஏராளமான ரத்தப் பெருக்கு... ஆனால் தனக்கு பதட்டம் ஏதும் ஏற்படவில்லையே... அது ஏன்?

உயிருக்கு ஆபத்து... எங்கே கொண்டு சென்றிருக்கிறார்கள் என்று விசாரித்து உடனடியாக அங்கே செல்லலாம்... அவள் வீட்டுக்கு தகவல் கொடுக்கலாம்...

ஆனால்... சியாமளா காப்பாற்றப்பட்டு விட்டால்...?

காலையில் அவள் பார்த்த அந்த காட்சி...

பரமேஷ்வர் மனிதம் மறந்தார்.

ஏனோ மனது உற்சாகமாய் இருக்க காரை ஸ்டார்ட் செய்து குழப்பமின்றி வீட்டை நோக்கிச் செலுத்தினார். அப்பாட்மெண்ட் அமைதியாக இருந்தது. காரை பார்க் செய்து இறங்கினார். யாருக்கும் தகவல் தெரியவில்லை. தெரிந்தால் இந்நேரம் பரபரப்பாக இருக்கும். அவருக்கும் தகவல் வந்திருக்கும். எப்படி சியாமளாவை அடையாளம் காண்பார்கள்? பிழைப்பாளா... மண்டையில் அடி என்றார்களே... ஒரு சமயம் உயிர்பிழைத்து ஆனால் நினைவுகள் தப்பி..

இந்த இரண்டில் எது நடந்தாலும் ஓகே தான்...

மனைவி லெட்சுமி கதவைத் திறந்தாள்.

உள்ளே நுழைந்தவரிடம் படபடப்பாகப் பேசினாள்... "ஏங்க... இந்த சுந்தரிப் பொண்ணுக்கு எப்பதான் பொறுப்பு வருமோ? அவ பைக் பங்ச்சர்... ஏதோ அவசரம் அண்ணாநகர்ல ஒரு பிரெண்டை பார்க்கணும்னு மேல் வீட்டு சுந்தரி பைக்கை வாங்கிட்டு போயிருக்கா... செல்போனை விட்டுட்டுப் போயிட்டா... போயி ரெண்டு மணி நேரமாகுதுங்க... என்னமோ தெரியல... நெஞ்சு முழுக்க பக்பக்ன்னு இருக்குதுங்க...'

- திருவாரூர் பாபு



சபலத்தின் சம்பளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 19, 2012 2:11 pm

சபலத்துக்கு சம்பளம் என்று சொல்வதைவிட மனித நேயம் மறந்ததுக்கு சம்பளம் என்று சொல்லலாம்
பகிர்வுக்கு நன்றி சிவா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக