புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் ரசிகர்களை கவர்ந்த நாயகன் இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா மரணம்
Page 1 of 1 •
இந்தி திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டாரும், பெண் ரசிகர்களை கவர்ந்த நாயகனுமான ராஜேஷ் கன்னா நேற்று திடீரென மரணம் அடைந்தார். திரைப்பட நட்சத்திரங்களும், ரசிகர்களும் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.
பெண் ரசிகர்களை கவர்ந்தவர்
இந்தி திரைப்பட உலகில் முதலாவது `சூப்பர் ஸ்டார்', பெண் ரசிகர்களை கவர்ந்த நாயகன் என போற்றப்படுபவர் ராஜேஷ் கன்னா. 69 வயதான அவர் மும்பை பாந்திராவில் உள்ள `ஆசிர்வாத்' பங்களாவில் வசித்து வந்தார். சமீபகாலமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இந்த நிலையில் ராஜேஷ் கன்னா கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
மீண்டும் அனுமதி
ஆனால் அடுத்த 2 நாட்களில் எதிர்பாராதவிதமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் 2 வார காலம் ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். பின்னர் கடந்த 8-ந் தேதி வீடு திரும்பினார்.
இந்த நிலையில் ராஜேஷ் கன்னா கடந்த 14-ந் தேதி திடீரென மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற மும்பை லீலாவதி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆஸ்பத்திரி தரப்பில் அவரது நோய் தொடர்பாக பகிரங்கமாக எதையும் அறிவிக்கவில்லை.
ராஜேஷ்கன்னாவை நீண்டகாலமாக பிரிந்து வாழ்ந்த மனைவி டிம்பிள் கபாடியா மற்றும் மகள் ரிங்கி ஆகியோர் ஆஸ்பத்திரியில் உடன் இருந்து கவனித்து வந்தனர். ராஜேஷ் கன்னா மீண்டும் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் பூரண உடல் நலம் பெற பிரார்த்தனை செய்து வந்தனர்.
திடீர் மரணம்
இந்த நிலையில் 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை மதியம் 1.30 மணி அளவில் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். அவரது மனைவி டிம்பிள் கபாடியா உடன் இருந்து கவனித்து வந்தார். ராஜேஷ் கன்னா உடல் நலத்தோடு இருப்பதாகவும், அவர் நீர் ஆகாரம் மற்றும் பழச்சாறு போன்ற உணவுகளை சாப்பிடுவதாகவும் டிம்பிள் கபாடியா தெரிவித்தார்.
உடல் நலக்குறைவோடு வீட்டில் இருந்த ராஜேஷ் கன்னா நேற்று காலை திடீரென இறந்தார். இந்த மரண செய்தி கேட்டு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் விட்டபடி அவரது வீட்டுக்கு திரண்டு வந்தனர். உலகத்தை விட்டு பிரிந்தாலும், தங்களது இதயத்தை விட்டு என்றும் பிரியாத கதாநாயகனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல திரைப்பட நட்சத்திரங்களும் திரண்டு வந்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
மரணம் அடைந்த ராஜேஷ் கன்னாவின் இறுதிச்சடங்கு இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.
தாக்கிய நோய் எது?
ராஜேஷ் கன்னா புற்றுநோய் காரணமாக இறந்ததாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அவருக்கு ஏற்பட்ட நோய் குறித்து பதிலளிக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்து விட்டது. இது பற்றி ஆஸ்பத்திரியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "ராஜேஷ் கன்னா உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கான காரணம் பற்றி எங்களால் தெரிவிக்க முடியாது. இதுபற்றி தயவுசெய்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்'' என்றார். இதேபோல குடும்ப உறுப்பினர்களும் இதுபற்றி பதிலளிக்க மறுத்து விட்டனர்.
ராஜேஷ் கன்னாவின் நெருங்கிய நண்பர் விஜய் கூறுகையில், "ராஜேஷ் கன்னா கடந்த சில நாட்களாக உணவு சாப்பிடுவதை குறைத்து கொண்டார். இது அவரது உடல் நலனை மிகவும் பலவீனப்படுத்தி விட்டது'' என்றார்.
ராஜேஷ்கன்னாவின் மருமகனும், நடிகருமான அக்ஷய் குமார் கூறுகையில், "எனது மாமா உலகத்தை விட்டு பிரிந்து, கடவுளிடத்துக்கு சென்று விட்டார். அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்றார்.
நடிகர் ராஜேஷ் கன்னா மறைவு செய்தியை அறிந்து இந்தி திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அவருடைய மறைவுக்கு பல்வேறு நடிகர், நடிகைகளும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.
வைஜெயந்தி மாலா
பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா கூறுகையில், ராஜேஷ் கன்னாவின் மறைவு இந்தி திரையுலகிற்கு பெரிய இழப்பு. என்னுடைய துரதிர்ஷ்டம், அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை என்றார்.
நடிகை ஹேமமாலினி கூறுகையில், ராஜேஷ் கன்னாவின் மறைவு மிகப்பெரும் இழப்பு. அவருடைய இடத்தை யாரும் பிடிக்க இயலாது. அவருடைய அன்பும், பங்களிப்பும் என்றென்றும் நினைவு கூரப்படும் என்றார்.
நடிகர் ஷாருக்கான் கூறுகையில், ராஜேஷ் கன்னா நம்முடைய சகாப்தம். வாழ்க்கை எப்போதெல்லாம் கஷ்டமாக தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் அதனை அன்பினால் எப்படி மாற்ற முடியும் என்பதை உணர்த்தியவர் என்றார்.
மாதுரி தீட்சித்
நடிகை மாதுரி தீட்சித் கூறுகையில், இந்தி சினிமா உலகின் மேலும் ஒரு ஜாம்பவான் காலமாகி விட்டார்.
நடிகை ஷில்பா ஷெட்டி கூறுகையில், ஈடு செய்ய முடியாத இழப்பினால் வாடும் ராஜேஷ் கன்னாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜேஷ் கன்னா, என்றுமே சூப்பர் ஸ்டார்தான் என்றார்.
சப்னா ஆஸ்மி
நடிகை சப்னா ஆஸ்மி கூறுகையில், ராஜேஷ் கன்னாவை போன்ற சூப்பர் ஸ்டார் வேறு யாரும் இல்லை. அவருடன் 10 படங்களில் இணைந்து நடித்துள்ளேன். கடைசியாக ஒரு விருது வழங்கும் விழாவில் அவரை சந்தித்தேன். அப்போது அவரது தோற்றம் வெளுத்துப்போய் இருந்தது. இருப்பினும் மற்றவரை வெற்றி கொள்ளும் புன்னகை அப்படியே இருந்தது என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆராதனா படத்தின் மூலம் தமிழக மக்களை கவர்ந்த ராஜேஷ் கன்னா
திரையுலகில் ஒவ்வொரு கலைஞருக்கும் வாழ்நாள் சாதனை படம் என்று ஒன்று இருக்கும். ராஜேஷ் கன்னாவுக்கு அந்தப் படம் `ஆராதனா'. இந்தப் படத்தின் மூலம் அவர் ஒட்டு மொத்த இந்தியாவிலும் ரசிகர்களைப் பெற்றார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் பிரபலம் ஆனது. ஆராதனாவில் ராஜேஷ்கன்னாவுக்கு பின்னணி பாடல்களை கிஷோர் குமார் பாடினார்.
ராஜேஷ் கன்னா-கிஷோர் குமார் ஜோடி இந்தப்படத்தின் மூலம்தான் பிரபலம் பெறத் தொடங்கினர். 1991 வரை இந்த ஜோடியை அசைக்க முடியவில்லை.
`ஆராதனா' படத்தில் இடம் பெற்ற `ரூப் தேரா மஸ்தானா, மேரே சப்னோ கி ரானி' பாடல்கள் தமிழ்நாட்டில் நகரங்களில் இருந்து பட்டிதொட்டிகள் வரை மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலித்தன.
`ஆராதனா' படத்துக்கு இசை அமைத்துக் கொண்டிருந்தபோது இசை அமைப்பாளர் எஸ்.டி.பர்மனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அவரது மகன் ஆர்.டி.பர்மன் மீதி இசையை சேர்த்து படத்தை முடித்துக் கொடுத்தார். அந்த வகையில் ராஜேஷ் கன்னா, கிஷோர் குமார், ஆர்.டி.பர்மன் என்ற மூவரணியும் `ஆராதனா'வில் உதயமானது.
ஆராதனாவை தொடர்ந்து `கட்டி பத்தங்க், அமர் பிரேம், அப்னாதேஷ், ஆக் கி கசம், நமக் ஹராம், ஆகர் தும் னா ஹோத்தே, அவாஸ், ஹம் தோனோ, அலக் அலக்' ஆகிய படங்களில் இந்த மூவரணியின் ராஜ்யம் கொடி கட்டிப் பறந்தது இப்போதும் நினைவு கூரத்தக்கது.
திரையுலகில் ஒவ்வொரு கலைஞருக்கும் வாழ்நாள் சாதனை படம் என்று ஒன்று இருக்கும். ராஜேஷ் கன்னாவுக்கு அந்தப் படம் `ஆராதனா'. இந்தப் படத்தின் மூலம் அவர் ஒட்டு மொத்த இந்தியாவிலும் ரசிகர்களைப் பெற்றார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் பிரபலம் ஆனது. ஆராதனாவில் ராஜேஷ்கன்னாவுக்கு பின்னணி பாடல்களை கிஷோர் குமார் பாடினார்.
ராஜேஷ் கன்னா-கிஷோர் குமார் ஜோடி இந்தப்படத்தின் மூலம்தான் பிரபலம் பெறத் தொடங்கினர். 1991 வரை இந்த ஜோடியை அசைக்க முடியவில்லை.
`ஆராதனா' படத்தில் இடம் பெற்ற `ரூப் தேரா மஸ்தானா, மேரே சப்னோ கி ரானி' பாடல்கள் தமிழ்நாட்டில் நகரங்களில் இருந்து பட்டிதொட்டிகள் வரை மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலித்தன.
`ஆராதனா' படத்துக்கு இசை அமைத்துக் கொண்டிருந்தபோது இசை அமைப்பாளர் எஸ்.டி.பர்மனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அவரது மகன் ஆர்.டி.பர்மன் மீதி இசையை சேர்த்து படத்தை முடித்துக் கொடுத்தார். அந்த வகையில் ராஜேஷ் கன்னா, கிஷோர் குமார், ஆர்.டி.பர்மன் என்ற மூவரணியும் `ஆராதனா'வில் உதயமானது.
ஆராதனாவை தொடர்ந்து `கட்டி பத்தங்க், அமர் பிரேம், அப்னாதேஷ், ஆக் கி கசம், நமக் ஹராம், ஆகர் தும் னா ஹோத்தே, அவாஸ், ஹம் தோனோ, அலக் அலக்' ஆகிய படங்களில் இந்த மூவரணியின் ராஜ்யம் கொடி கட்டிப் பறந்தது இப்போதும் நினைவு கூரத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
காதல் மன்னனுக்கு எனது கண்ணீர் அஞ்சலி
இந்தி உலகின் முதல் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றவர் நடிகர் ராஜேஷ் கன்னா.
இந்திப்பட உலகில் பிரவேசம்
ராஜேஷ் கன்னா 1942-ம் ஆண்டு, டிசம்பர் 29-ந் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பிறந்தார். இயற்பெயர் ஜதின் கன்னா. வளர்ப்பு பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார். பள்ளியில் படிக்கும்போதே இவருக்கு நடிப்பில் நாட்டம் வந்து விட்டது. எண்ணற்ற நாடகங்களில் நடித்தார். சினிமா உலகில் பிரவேசிக்கும் தருணத்தில் அவரது மாமாதான், ஜதின் கன்னா என்ற பெயரை ராஜேஷ் கன்னா என மாற்றினார்.
1965-ம் ஆண்டு, யுனைட்டெட் புரடிïசர்ஸ் மற்றும் பிலிம்பேர் இணைந்து அகில இந்திய அளவில் நடத்திய திறமை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து 1966-ம் ஆண்டு, இந்திப்பட உலகில் `ஆக்ரி கத்' படத்தின் மூலம் நுழைந்தார். இந்தப்படத்தை இயக்கியவர் சேட்டன் ஆனந்த். தொடந்து `ராஸ்' என்ற படத்தில் நடித்தார்.
காலத்தை வென்ற பாடல்கள்
அதன்பின்னர் ராஜேஷ் கன்னா நடித்த பஹாரான் கே சப்னே, ஆரத், டோலி, இட்டேபக் உள்ளிட்ட படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டன. 1969-ல் ஷர்மிளா தாகூருடன் ஜோடி சேர்ந்து ராஜேஷ் கன்னா நடித்த `ஆராதனா' படம்தான் அவரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது. மேலும், கிஷோர் குமாருக்கு புதுவாழ்வை அளித்தது. ராஜேஷ் கன்னாவுக்காக கிஷோர்குமார் பின்னணி பாட ஆரம்பித்தார். இவர்கள் இணைந்து வழங்கிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். காலத்தை வென்றவை. மேரே சப்னோ கி ரானி, ரூப் தேரா மஸ்தானா போன்றவை இன்றைக்கும் காதுகளில் தேனாகப் பாய்பவை.
முறியடிக்கப்படாத சாதனை
1972-ம் ஆண்டு ராஜேஷ் கன்னா நடித்து வெளிவந்த `ஹாத்தி மேரே சாத்தி' படம், அதற்கு முன் வந்த அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தது.
163 படங்களில் நடித்துள்ள ராஜேஷ் கன்னா, 1969-ம் ஆண்டிலிருந்து 1972-ம் ஆண்டு வரை தொடர்ந்து 15 படங்களில் நடித்து அத்தனை படங்களும் வெற்றிப்படங்களாக பரிமளித்தன. அந்த சாதனை இன்று வரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. 3 முறை பிலிம்பேர் சிறந்த நடிகர் விருதையும், 2005-ம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் தட்டிச்சென்றவர் ராஜேஷ் கன்னா.
காதல் திருமணம்
தன்னை விட 15 வயது குறைவான நடிகை டிம்பிள் கபாடியாவை நடிகர் ராஜேஷ் கன்னா காதலித்து மணந்தார். இந்த காதல் ஜோடிக்கு டுவிங்கிள் கன்னா, ரிங்கி கன்னா என இரண்டு மகள்கள்.
1984-ம் ஆண்டு ராஜேஷ் கன்னாவும், டிம்பிள் கபாடியாவும் பிரிந்து விட்டனர். ஆனாலும் அவர்கள் முறையாக விவாகரத்து செய்துகொள்ளவில்லை.
எம்.பி. ஆனார்
1990-ன் தொடக்கத்தில் ராஜேஷ் கன்னா சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார். அதைத்தொடர்ந்து அரசியல் உலகில் காலடி பதித்தார்.
1991-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் டெல்லி தொகுதியில் போட்டியிட்டு 5 ஆண்டுகள் எம்.பி.யாக திகழ்ந்தார். முழு நேர அரசியல்வாதியாக விளங்கினார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்தார். (பஞ்சாப்தான், ராஜேஷ் கன்னாவின் சொந்த மாநிலம்).
காருக்கு முத்தம் தந்த ரசிகர்கள்
இந்திப் படஉலகின் முதலாவது சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெற்ற ராஜேஷ் கன்னாவின் அங்க அசைவுகள், நடனம், வசன உச்சரிப்பு பாங்கு அத்தனையும் அவருக்கு லட்சோப லட்ச ரசிகர்களை பெற்றுத்தந்தது. பொது இடங்களுக்கு வந்தபோது, ரசிகர்கள், ரசிகைகள் ராஜேஷ் கன்னாவின் காருக்கு முத்தம் கொடுத்து, காரில் பார்க்கும் இடமெல்லாம் லிப்ஸ்டிக் தடங்கள் பதிவானது சுவாரசியமான கதை. இது ஒரு பக்கம் என்றால் ரசிகைகள் ரத்தக் கையெழுத்தில் கடிதம் எழுதி, ராஜேஷ் கன்னா மீதான தங்கள் நேசத்தைக் காட்டிக்கொண்டது இன்னொரு பக்கம்.
அந்த ராஜேஷ் கன்னாவை இப்போது 69-வயதில் புற்றுநோயும் விட்டு வைக்கவில்லை. அவர் மீது புற்றுநோயும் நேசம் காட்டி, பறித்துக்கொண்டு விட்டது. காகா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிற ராஜேஷ் கன்னாவின் சகாப்தம் முடிவுக்கு வந்து இருக்கிறது. அவரது ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தி இருக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நடிகர் ராஜேஷ் கன்னா மறைவுக்கு மன்மோகன்சிங், சோனியா இரங்கல்
பழம்பெரும் இந்தி நடிகர் ராஜேஷ் கன்னாவின் மறைவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "மறைந்த நடிகர் ராஜேஷ் கன்னாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், எண்ணற்ற ரசிகர்கள், அனுதாபிகள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்'' என கூறப்பட்டுள்ளது.
இதே போன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "ராஜேஷ் கன்னாவின் மறைவு மிகுந்த துயரத்தை, வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' என கூறி உள்ளார்.
பழம்பெரும் இந்தி நடிகர் ராஜேஷ் கன்னாவின் மறைவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "மறைந்த நடிகர் ராஜேஷ் கன்னாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், எண்ணற்ற ரசிகர்கள், அனுதாபிகள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்'' என கூறப்பட்டுள்ளது.
இதே போன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "ராஜேஷ் கன்னாவின் மறைவு மிகுந்த துயரத்தை, வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' என கூறி உள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கருணாநிதி, ரஜினிகாந்த் ஆறுதல்
இந்தி திரைப்பட முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கிய நடிகர் ராஜேஷ்கன்னா மரணமடைந்தார். இதையடுத்து அவரது துணைவியாருக்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆறுதல் தெரிவித்து தந்தி அனுப்பியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ``இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய நடிகர் ராஜேஷ்கன்னா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தி திரைப்பட முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கிய நடிகர் ராஜேஷ்கன்னா மரணமடைந்தார். இதையடுத்து அவரது துணைவியாருக்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆறுதல் தெரிவித்து தந்தி அனுப்பியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ``இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய நடிகர் ராஜேஷ்கன்னா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் ஆர்.சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகரன் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்திய திரையுலகில் ஜொலித்த நட்சத்திரங்களில் மறைந்த ராஜேஷ்கண்ணாவும் ஒருவர். அவர் மறைவு செய்தி கேட்டு, தென்னிந்திய திரையுலகம் குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. அவர் நடித்த இந்தி திரைப்படங்கள் பல, தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், மும்பை திரையுலகினருக்கும் ஏற்பட்டுள்ள சோகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் பங்கேற்பதுடன் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் ஆர்.சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகரன் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்திய திரையுலகில் ஜொலித்த நட்சத்திரங்களில் மறைந்த ராஜேஷ்கண்ணாவும் ஒருவர். அவர் மறைவு செய்தி கேட்டு, தென்னிந்திய திரையுலகம் குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. அவர் நடித்த இந்தி திரைப்படங்கள் பல, தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், மும்பை திரையுலகினருக்கும் ஏற்பட்டுள்ள சோகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் பங்கேற்பதுடன் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|