புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒவ்வாமை - Allergy Poll_c10ஒவ்வாமை - Allergy Poll_m10ஒவ்வாமை - Allergy Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
ஒவ்வாமை - Allergy Poll_c10ஒவ்வாமை - Allergy Poll_m10ஒவ்வாமை - Allergy Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வாமை - Allergy Poll_c10ஒவ்வாமை - Allergy Poll_m10ஒவ்வாமை - Allergy Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒவ்வாமை - Allergy Poll_c10ஒவ்வாமை - Allergy Poll_m10ஒவ்வாமை - Allergy Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஒவ்வாமை - Allergy Poll_c10ஒவ்வாமை - Allergy Poll_m10ஒவ்வாமை - Allergy Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒவ்வாமை - Allergy Poll_c10ஒவ்வாமை - Allergy Poll_m10ஒவ்வாமை - Allergy Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒவ்வாமை - Allergy Poll_c10ஒவ்வாமை - Allergy Poll_m10ஒவ்வாமை - Allergy Poll_c10 
20 Posts - 3%
prajai
ஒவ்வாமை - Allergy Poll_c10ஒவ்வாமை - Allergy Poll_m10ஒவ்வாமை - Allergy Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒவ்வாமை - Allergy Poll_c10ஒவ்வாமை - Allergy Poll_m10ஒவ்வாமை - Allergy Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒவ்வாமை - Allergy Poll_c10ஒவ்வாமை - Allergy Poll_m10ஒவ்வாமை - Allergy Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒவ்வாமை - Allergy Poll_c10ஒவ்வாமை - Allergy Poll_m10ஒவ்வாமை - Allergy Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒவ்வாமை - Allergy Poll_c10ஒவ்வாமை - Allergy Poll_m10ஒவ்வாமை - Allergy Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வாமை - Allergy


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 14, 2012 11:42 pm

''ஒவ்வாமை ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு எதிராக ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதனை இம்யூனோக்ளோபியூலின் 'இ’(Immunoglobulin - E) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்த எதிர்ப்பாற்றல் புரதம் முதலில் உருவாகி தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துவிடும். மீண்டும் மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளோடு சேர்ந்து, ரத்தத்தில் உள்ள மாஸ்ட் செல்களின் குழிவுகளில் சேரும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் தூண்டப்பட்டு ஹிஸ்டமைன் (Histamine) என்ற வேதிப் பொருளை வெளியேற்றும். இந்தப் பொருட்கள்தான் ஒவ்வாமையை உண்டாக்குகின்றன.

பிடிக்காத ஒரு பொருள் நாசி வழியாக நுழைந்தால், நாசி ஒவ்வாமை, சுவாசக் குழலுக்குள் நுழைந்தால் ஆஸ்துமா, தோலில் பட்டால் சரும ஒவ்வாமை எனப் பல வகைகளில் தொந்தரவுகளை உண்டாக்கும்.

தூசி ஒவ்வாமை: வீட்டுத் தூசியில் உள்ள ஹவுஸ் டஸ்ட் மைட் (House dust mite) என்ற நுண்ணியக் கிருமி, இந்த ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. தூசி ஒவ்வாமைக்கு ஆளானவர்களது மூக்கின் உட்சவ்வு பாதிக்கப்படுவதால் சளி சேர்ந்து, மூக்கடைப்பு ஏற்படுவதுடன் மூக்கைச் சுற்றி உள்ள 'சைனஸ்’ எனப்படும் பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படும். மேலும், மகரந்தத் தூள், வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை, சாம்பிராணி - ஊதுபத்தி மணம், நெடிகொண்ட ரசாயனப் பொருட்கள், திரவங்கள், வாசனைத் திரவியங்கள், மரத் துகள், கரப்பான் பூச்சியின் கழிவு, பூனை - நாய்களின் ரோமம் ஆகியவைகூட நாசி ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனை நாசி உட்சுவர் பரிசோதனையிலும் சளிப் பரிசோதனை மூலமும் கண்டறியலாம். எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை மூலமும் கண்டறியலாம்.

நகை ஒவ்வாமை : 'நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் 'சரும ஒவ்வாமை’ நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். அப்படி நேரும்போது, சருமம் தடிமனாவதுடன், சொரசொரப்பாகவும் ஆகிவிடும். இதற்கு 'கான்டக்ட் டெர்மடைட்டிஸ்’ (Contact Dermatitis – Eczema) என்று பெயர். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப், பவுடர், எண்ணெய், க்ரீம், தோல் பொருட்கள், ரப்பர், ரசாயனப் பொருட்கள், பூச்சிக்கொல்லிகள், பெயின்ட் முதலியவையும் சரும ஒவ்வாமைக்குக் காரணமாக அமையலாம். உட்கொள்ளும் உணவுகளினாலோ அல்லது மருந்துகளினாலோகூட சரும ஒவ்வாமை உருவாகும். இந்த ஒவ்வாமையைக் கண்டறிய ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களின் மூலப்பொருளை தோலில் செலுத்தி சருமப் பரிசோதனை செய்வார்கள்.

உணவு ஒவ்வாமை: குறிப்பிட்ட ஓர் உணவைச் சாப்பிட்டு, அதனால் தோல் தடிப்பு, அரிப்புபோன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால் அது உணவு ஒவ்வாமை. பால், முட்டை, வேர்க்கடலை, கொட்டை வகை உணவுகள், கடல் மீன்கள், இறால், நண்டு, செர்ரி வகைப் பழங்கள் ஆகியவை பெரும்பாலும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. உணவு ஒவ்வாமையால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ரத்தப் பரிசோதனை மூலமும், மூலப்பொருட்களை கொடுத்து பரிசோதனை செய்தும் இந்த ஒவ்வாமையைக் கண்டறியலாம்.

மருந்து ஒவ்வாமை: உணவைப் போலவே, எந்த மருந்தும் யாருக்கும் அலர்ஜியை ஏற்படுத்தலாம். என்றாலும்கூட ஆஸ்பிரின், பென்சிலின், சல்ஃபா மருந்துகள், மலேரியாவுக்கான மருந்துகள், இன்சுலின், தடுப்பு ஊசி மருந்துகள், உலோக மருந்துகள் (Heavy Metals - Gold) ஆகியவை பெருமளவு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. சாதாரண அரிப்புப் பிரச்னையில் தொடங்கி, உயிருக்கே ஆபத்து ஏற்படுத்துவது வரையிலான பாதிப்புகளையும் மருந்து ஒவ்வாமை ஏற்படுத்தலாம். ரத்தப் பரிசோதனை மூலமும், நோயாளி சொல்லும் மருந்துகளின் விபரங்களைக்கொண்டும் இந்த ஒவ்வாமையைக் கண்டுபிடிக்கலாம்.

கண் ஒவ்வாமை: வீட்டுத் தூசி, புகை, மகரந்தத் தூள் போன்ற சுவாசப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் கண்களில் விழும்போது அவை கண் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது பெரும்பாலும் நாசி ஒவ்வாமை உடன் சேர்ந்தே ஏற்படும். இதனால், இவர்களுக்கு கண் வீக்கம், எரிச்சலுடன் கண் சிவந்துபோதல், கண்ணில் நீர் வழிதல் போன்ற தொந்தரவுகளும் ஏற்படலாம். நாசி ஒவ்வாமைக்கான பரிசோதனை மூலமாகவே இதைக் கண்டறியலாம்.

பூச்சிக்கடியினால் ஏற்படும் ஒவ்வாமை: எறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு போன்ற பூச்சி வகைகள் கடித்தாலும், கொட்டினாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். தோல் தடிப்பு, அரிப்பு, எரிச்சல், வீக்கம், தோல் சிவந்துபோதல் போன்ற தொந்தரவுகள் இதன் விளைவாக ஏற்படலாம். ஒவ்வாமையினால் சில சமயங்களில் நினைவு இழக்கவும் நேரலாம். சருமப் பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறிவார்கள். எந்த ஒவ்வாமை என்றாலும், அது எதனால் ஏற்பட்டது என்பதை நோயாளி கூறும் சம்பவங்களில் இருந்தே யூகிக்க முடியும்.

சிகிச்சை முறைகள்: ஒவ்வாமை எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்து அவற்றைத் தவிர்க்க வேண்டும். என்றாலும் ஒவ்வாமையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள ஸ்டீராய்டு வகை மருந்துகள் பயன்படுகின்றன. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல், ஒவ்வாமையை ஏற்படுத்திய பொருளின் ஆன்டிஜினை மிகச் சிறிய அளவில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுப்பதன் மூலம் நோயாளிக்கு ஒவ்வாமைத் தொல்லைகளைக் குறைக்க முடியும். இதனை இம்மினோதெரபி (Immunotherapy) என்கிறார்கள். இதனை ஊசி மூலமாகவோ அல்லது நாக்கின் அடியில் வைத்துச் சாப்பிடும் மருந்தாகவோ கொடுப்பார்கள்.

சரி, ஒவ்வாமையில் இருந்து விடுதலை பெற என்ன வழி?

சுய சிகிச்சை செய்யாதீர்கள்: ஒருவருக்கு எதனால் ஒவ்வாமை உண்டாகிறது என்பதை மருத்துவரின் உதவியோடு கண்டறிவதுடன், எந்தப் பொருள் ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதோ, அந்தப் பொருளை விலக்கிவைக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட மருந்து மாத்திரைகள் ஏதாவது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்று தெரியவந்தால், அந்த மருந்து மாத்திரைகளின் பெயர்களை டைரியில் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். காய்ச்சல், தலைவலி என எந்தப் பிரச்னைக்கு மருத்துவரைப் பார்த்தாலும், உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் மருந்து விவரங்களையும் அவரிடம் சொல்லிவிடுவது மிக மிக அவசியம். நாசி ஒவ்வாமை உள்ளவர்கள் பூக்களை (மகரந்தம்) நுகர்ந்து பார்க்க வேண்டாம்!''

விகடன்



ஒவ்வாமை - Allergy Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 15, 2012 10:44 am

பயனுள்ள மருத்துவ கட்டுரை சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக