புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_lcapபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_voting_barபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_lcapபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_voting_barபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_lcapபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_voting_barபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_lcapபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_voting_barபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_lcapபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_voting_barபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_lcapபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_voting_barபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_lcapபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_voting_barபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_lcapபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_voting_barபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_lcapபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_voting_barபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_lcapபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_voting_barபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_lcapபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_voting_barபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_lcapபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_voting_barபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_lcapபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_voting_barபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_lcapபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_voting_barபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_lcapபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_voting_barபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_lcapபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_voting_barபேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 13, 2012 4:05 pm


'பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..!. முகநூலில் மூழ்கினால் முன்னேரமுடியாது.!!.

பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! 75391387
அண்மையில் என் முகநூல் பக்கத்தில் நண்பர் கோரிக்கை ஒன்று வந்தது. எங்கோ கேள்வி பட்ட பெயர் போல் இருந்ததால் உள்ளே சென்று பார்த்தேன். ஒரு சிறிய அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள என் சித்தி பையனின் முகநூல் பக்கம் அது. சிறிய வயதிலேயே கணினி பயன்பாட்டை தெரிந்து வைத்துள்ளான் என்ற சந்தோஷம் ஆயினும், அவன் தேர்வு செய்துள்ள முகநூலில் உள்ள தீமைகளை நினைத்து வருத்தமும் கூட.

பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! 67867575
பதினாறே வயதான அந்த சின்னப் பையனின் முகநூல் பக்கத்தில் சென்று பார்த்தால், நூற்றுக்கணக்கான நண்பர்கள். அதில் பலர் பெண்களே!. நாங்கள் 10-ம் வகுப்பு படிக்கும் பொழுது ஆண் நபர்களே அதிகம் (இன்று வரையிலும் நமக்கு அப்படித்தான் ). இந்த சின்ன வயதில் இத்தகைய என்னத்தை அவன் மனதில் விதைத்ததற்கு இன்றைய கால அநாகரீக ஆபாச ஊடகங்களுக்கும் சினிமாக்களுக்கும் முக்கியப் பங்குண்டு. பெற்றோர்கள் இந்த விசயத்தில் மிகுந்த கவனம் கொள்ளவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

இவன் பரவாயில்லை ஆண்பிள்ளை. ஆனால் டிவியும் சீரியலுமாக இருந்த இளம் பெண்கள் இன்று மொபைல் கையுடனும் கணினி மடியுடனும் இருப்பது கூடுதல் கவலை. இணையதளத்தின் மூலம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம் ஏராளம் இருப்பின், இதுபோன்ற சமூக இணைப்பு சேவைத் (SNS- Social Networking Service) தளங்களால் மாணவர்களும் இளம் வயது பெண்களும் வழிகெட்டு சீரழிவது சுலபமே. இவர்களின் எதிர்காலக் கனவுகள் இந்த கணினியின் கதிர்வீச்சில் அழிந்து போக அதிக வாய்ப்பும் உண்டு.
பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! 38960054
இது போன்ற சமூக இணைப்பு சேவை அளிக்கும் ஊடகங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த ஒன்றாக இருந்தாலும், அதன் நன்மையையும் தீமையையும் எடை போட்டால் தீமையின் பக்க தராசு தான் சற்று தரை தட்டுகின்றது . கல்வி கற்கும் இளைஞர்கள் அவர்களது 'கிளாஸ்புக்கில்' நேரத்தை செலவிடுவதை விட 'பேஸ்புக்கில்' தான் அதிகம் கழிக்கின்றனர். இவை எதிர்கால கிளைகளின் இலைகளை கருக வைக்கும் அதே சமயம் நூற்றுக்கணக்கான அசிங்கங்களும் ஆபாசங்களும் இவற்றில் அரங்கேறுவது வாடிக்கை ஆகிவிட்டது.

பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! Freechat
சமீபத்தில் படித்த செய்தி “பேஸ்புக்கில் காதல் வயப்பட்டு கர்ப்பை பறிகொடுத்த இரண்டு பெண்கள்” பற்றியது. இது இவர்களுக்குத் தேவையா? பக்கத்து வீட்டுக்காரனையே நம்ப முடியாத இக்காலத்தில் இது போன்ற இணையவழி காதலை நினைத்து பார்த்தாலே முகம் சுளிக்க வைக்கின்றது. “முகநூல் நட்பது நட்பன்று – கொஞ்சம் அகநூல் கற்பதும் நன்று” என்று சொல்லும் அளவுக்கு இந்த ‘முகநூல்’ இளைஞர்களிடையே மிகவும் வேரூன்றி விட்டது. தான் நேரில் பார்க்க சுமாராக இருந்தால், அவர்களின் முகநூல் புகைப்படமோ சினிமாக்காரர்களின் அல்லது விளம்பர மாடல்களின் படங்களைக் கொண்டதாக மாறிவிடும். இப்பொழுது முகநூல் யாருடைய முகத்தை காட்டுகிறது என்பதே தெரியவில்லை.

இது ஒருவரை பற்றிய மாயையை ஏற்படுத்துமே தவிர உண்மையான முகத்தை (குணத்தை ) காட்டாது. சிலர் இதில் விதிவிலக்கு. கடந்த காலத்தில் நட்பை வளர்த்தது போல் இன்றைய கால நட்பு இல்லை. குட்டிச்சுவர் ஏறி உட்கார்ந்து, பேசி, கிண்டலடித்து, சண்டை இழுத்து பின்பு சமாதானம் ஆகும் சுகம் இந்த முகநூலில் உண்டோ?.

சுகமான தென்றல் காற்று, மரத்தடி ஊஞ்சல், சீட்டுக்கட்டு, கில்லி, பம்பரம், கோலிக்குண்டு, கண்ணாமூச்சி இவற்றை நழுவவிட்டு கணினியின் மடியில் கற்பனை சருகுகள் ஆகிவிட்டனர். பாவம் இந்த காலத்து இளஞர்கள் கண்ணியும் கணினியுமாக காலத்தை கழிக்க கடைசியில் மிஞ்சுவது கற்பனையின் சாம்பல் மட்டும் தான். இவ்வாறு ஒரு புறம் இருக்க செல்போன்களில் தவழும் முகநூல் மென்பொருள் வசதி, இப்பொழுது தனது சேவையை படுக்கை முதல் பாத்ரூம் வரை நீளச் செய்துள்ளது. வாழ்த்துக்கள்!.

முகநூலில் ஒரு நல்ல கருத்தை பதிவு செய்தால் அதை ‘லைக்” செய்ய ஒருவரும் இல்லை. அதே நேரம் ஒரு பெண் “நான் தூங்கப் போறேன்” என்று பதிவு செய்த பத்து நிமிடத்தில் 63 பதில்கள் மற்றும் எண்ணற்ற “லைக்குகள்”. அதில் 98% ஆண்களே. இவள் தூங்க இத்தனை அக்கப்போர்களா?. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை “செல்போன்களும் மாணவர்களும்” என்ற தலைப்பில் ஏராளமான விமர்சனங்கள். அதில் கூட ஒரு பெண் ஒரு ஆண் என்ற அளவுகோல் இருந்தது. இன்று இந்த முகநூலில், அறிவை கழற்றி வைத்து விட்டு நாகரீகம், பண்பாடு, கலாசாரம் மறந்து, ஆட்டு மந்தையாக மாறிவிட்டனர்.

ஒரு பெண்ணின் முகநூல் பக்கத்தில் எண்ணற்ற ஆண்கள். தொழில்நுட்ப வளர்ச்சி இவர்களின் மதிநுட்ப வளர்ச்சிக்கு பங்கம் விளைவித்து விட்டதோ?. என்னுடன் படித்த நண்பர்கள் பலரின் இன்றைய முகவரியை முகநூல் காட்டியது. ஆனால், அவர்களிடம் அன்று இருந்த நட்பையும் அன்பையும் இன்று அதே தரத்துடன் காட்டத் தவறிவிட்டது. எனது பிறந்த நாள் என்று என் முகநூல் காட்ட, வந்து குவிந்தது பல நூறு வாழ்த்துக்கள். ஆயிரம் பேர் சொல்லும் அந்த வாழ்த்துக்களில் ஏனோ எனக்கு மகிழ்ச்சி இல்லை. காரணம், முகநூல் நண்பர்களின் பட்டியலில் இருக்கும் பலர் எனக்கு முகம் தெரியா நண்பர்கள் தாம். அவர்களை நேரில் பார்த்தால் கூட எனக்கு அடையாளம் தெரியாது!. இது போன்ற அதிருப்திகள் பல உண்டு முகநூலில். ஆயினும் என் உண்மையான நட்புகள் இந்த முகநூலையும் கடந்து வந்து வாழ்த்து சொல்லும் என்பது உறுதி!. ஜாதி மத பேதமில்லாமல் நட்பையும் கற்பையும் கடைவிரிக்கும் பெருமை முகநூலூக்கே உரியது.

முகநூல் ஆற்றும் இந்த சீரிய சமூகப் பணிகளுக்கெல்லாம் நம் நேரமும், கனவுகளும், பொருளாதாரமும் உரமாக அதன் விளைச்சலோ சமூக சீரழிவையும் ஒழுக்கக்கேட்டையும் தவிர வேறென்ன? முகநூலில் நட்பையும் காதலையும் வளர்ப்பது முடி இல்லா தலைக்கு சீப்பு போடுவதை போலத் தான் என்பதை இந்த சமூகம் என்று உணருமோ?. காலம் பதில் சொல்லும் முன் விழித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளை கண்காணியுங்கள். அறிந்தே அவர்களை வழிகேட்டில் விட்டு விடாதீர்கள். அவர்களின் சீர்கேட்டிற்கு நீங்களும் காரணம் ஆகிவிடாதீர்கள். தகுந்த முன் எச்சரிக்கைகளுடனும், நேரக் கட்டுப்பாட்டுடனும் முகநூலை பயன்படுத்துவது சிறந்தது. அறியாமையில் நம் முகத்தை முகநூலில் புதைத்தால் மக்கப்போவது நம் வாழ்க்கை தான் என்பதை நினைவில் கொள்வோம்.

ராஸிக் http://www.inneram.com/
Posted by அதிரை முஜீப்
http://www.adiraimujeeb.blogspot.com/2012/06/blog-post.ஹ்த்ம்ல்





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 13, 2012 4:06 pm

கத்தி
இதனால் காய்கறிகளை நறுக்கலாம்
சமயலறை தேவைகளை நிறைவேற்றலாம்
இன்னும் பல
இதே போல்தான் முக நூலும்
நீங்கள் பயன் படுத்தும் விதம் தான்
அடிப்படையான ஒரு விஷயம்
உங்கள் வீட்டில் pc அதாவது கணிணியை வீட்டு ஹாலில் வைக்கவும்.
2- சில்ட்ரன் லாக் செய்யலாம்
3- உங்கள் குழந்தைகள் எந்த வெப் சைட்டிற்கு போகலாம் என சொல்லிதரலாம்.
4- தனியாக லேப்டாப் இருந்தாலும் அவவப்போது செக் செய்யலாம்.
தொழில் நுட்பம் முன்னேறொயுள்ள இந்த காலத்தில் இப்படி குழந்தைகளை தடுத்தால்
அவர்கள் திருட்டுத்தனமாக தன் நண்பர்களுடன்
இணையத்தினை பயன் படுத்த சென்று கெட்டழிவதை தடுக்க இயலாது.
குறிப்பாக நமது பெண் குழந்தைகளுக்கு நாம் வசதியிருந்தும் இத்தகைய தடைகளை
ஏற்படுத்தினால் அவங்க நெட்கஃபே, நெட் ப்ரௌஸிங் செண்டர் போவார்கள்.
கல்வி பயன் பாட்டுக்கு மட்டும்தான் கணிணியை பயன் படுத்த அனுமதியுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 13, 2012 4:10 pm

குடும்பத்தில் யாரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை, ஆனால் முகநூலில் அதிக நேரம் செலவு செய்ய யாரும் தயங்குவதில்லை. சமுதாயச் சீரழிவில் முகநூலின் பங்கு மிக அதிகம்.



பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 13, 2012 4:21 pm

பயனுள்ள பகிர்வு.

ஜேனுக்கு ஆப்பா? புன்னகை




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 13, 2012 4:30 pm

இந்த திரிக்கு முகநூலின் முகவரி ஜேன் அவர்களின் விளக்கம் என்ன







http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 13, 2012 4:36 pm

வை.பாலாஜி wrote:இந்த திரிக்கு முகநூலின் முகவரி ஜேன் அவர்களின் விளக்கம் என்ன
அவருக்கு முகநூலில் நூல் விட புதிய முகவரி ஒன்று கிடைத்துள்ளது
நூல் விட்டு முடிந்தவுடன் விளக்கம் தருவார் ஒன்னும் புரியல




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jul 13, 2012 4:42 pm

முஹைதீன் wrote:கத்தி
இதனால் காய்கறிகளை நறுக்கலாம்
சமயலறை தேவைகளை நிறைவேற்றலாம்
இன்னும் பல
இதே போல்தான் முக நூலும்
நீங்கள் பயன் படுத்தும் விதம் தான்
அடிப்படையான ஒரு விஷயம்
உங்கள் வீட்டில் pc அதாவது கணிணியை வீட்டு ஹாலில் வைக்கவும்.
2- சில்ட்ரன் லாக் செய்யலாம்
3- உங்கள் குழந்தைகள் எந்த வெப் சைட்டிற்கு போகலாம் என சொல்லிதரலாம்.
4- தனியாக லேப்டாப் இருந்தாலும் அவவப்போது செக் செய்யலாம்.
தொழில் நுட்பம் முன்னேறொயுள்ள இந்த காலத்தில் இப்படி குழந்தைகளை தடுத்தால்
அவர்கள் திருட்டுத்தனமாக தன் நண்பர்களுடன்
இணையத்தினை பயன் படுத்த சென்று கெட்டழிவதை தடுக்க இயலாது.
குறிப்பாக நமது பெண் குழந்தைகளுக்கு நாம் வசதியிருந்தும் இத்தகைய தடைகளை
ஏற்படுத்தினால் அவங்க நெட்கஃபே, நெட் ப்ரௌஸிங் செண்டர் போவார்கள்.
கல்வி பயன் பாட்டுக்கு மட்டும்தான் கணிணியை பயன் படுத்த அனுமதியுங்கள்.
ஆமோதித்தல்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 13, 2012 4:43 pm

முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:இந்த திரிக்கு முகநூலின் முகவரி ஜேன் அவர்களின் விளக்கம் என்ன
அவருக்கு முகநூலில் நூல் விட புதிய முகவரி ஒன்று கிடைத்துள்ளது
நூல் விட்டு முடிந்தவுடன் விளக்கம் தருவார் ஒன்னும் புரியல


இது வேறயா , அப்போ பன்முக மன்னன் ஜேன் என்று சொல்லுங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jul 13, 2012 4:53 pm

வை.பாலாஜி wrote:
முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:இந்த திரிக்கு முகநூலின் முகவரி ஜேன் அவர்களின் விளக்கம் என்ன
அவருக்கு முகநூலில் நூல் விட புதிய முகவரி ஒன்று கிடைத்துள்ளது
நூல் விட்டு முடிந்தவுடன் விளக்கம் தருவார் ஒன்னும் புரியல




இது வேறயா , அப்போ பன்முக மன்னன் ஜேன் என்று சொல்லுங்க

பன் முகம்!!!!! சோகம் எதிர்ப்பு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 13, 2012 4:55 pm

ஜேன் செல்வகுமார் wrote:பன் முகம்!!!!! சோகம் எதிர்ப்பு
ஒ பலான முகம்ன்னு சொல்லனுமா? புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக