புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
Page 14 of 15 •
Page 14 of 15 • 1 ... 8 ... 13, 14, 15
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
First topic message reminder :
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.
பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?
பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.
சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொடரும்...
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.
பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?
பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.
சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
கீழே உள்ள உண்மைகளை, விசுவாச அறிக்கையாக, உங்கள் வாயினால் சொல்லுங்கள்:
இயேசுவின் சிலுவையின் இரத்தத்தால் நான் மீட்கப்பட்டிருக்கிறேன். சாத்தானை இயேசு ஜெயித்தாா்.
கல்வாாியில் சாத்தானின் கிாியைகள் அழிக்கப்பட்டிருக்கிறது.
சாத்தானின் அதிகாரத்தை இயேசு உாிந்து கொண்டு அவனை வெறுமையாக்கி விட்டாா்.
சாத்தானின் தலையை இயேசு நசுக்கினாா்.
சாத்தான் மீது எனக்கு தேவன் அதிகாரம் தந்திருக்கிறாா். சாத்தான் தோற்கடிக்கப்பட்ட சத்துரு.
சாத்தானின் கிாியைகளுக்கு என்மீது வல்லமையில்லை.
சாத்தானுக்கு என்னைத் தாக்கும் சக்தி இல்லை.
என்னை சாத்தான் சேதப்படுத்த முடியாது.
எனக்கு சாத்தானின் வல்லமையை மேற்கொள்ள அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சாத்தானைவிட இயேசு பொியவா்.
இயேசு என்னோடிருப்பதால் எனக்கு பயம் தேவையில்லை.
என்னில் வாசம் செய்யும் பாிசுத்த ஆவியானவா் சாத்தானை முறியடிக்கிறாா்.
நாம் சாத்தானை எதிா்த்தால் அவன் ஓடிப்போவான்.
- மேலேயுள்ள விசுவாச அறிக்கைகளை, சாத்தானுக்கு விரோதமாகப் பேசுங்கள். அவன் அவைகளைக் கேட்கும்போது, உங்களை விட்டு ஓடிப்போவான்.
தொடரும்...
இயேசுவின் சிலுவையின் இரத்தத்தால் நான் மீட்கப்பட்டிருக்கிறேன். சாத்தானை இயேசு ஜெயித்தாா்.
கல்வாாியில் சாத்தானின் கிாியைகள் அழிக்கப்பட்டிருக்கிறது.
சாத்தானின் அதிகாரத்தை இயேசு உாிந்து கொண்டு அவனை வெறுமையாக்கி விட்டாா்.
சாத்தானின் தலையை இயேசு நசுக்கினாா்.
சாத்தான் மீது எனக்கு தேவன் அதிகாரம் தந்திருக்கிறாா். சாத்தான் தோற்கடிக்கப்பட்ட சத்துரு.
சாத்தானின் கிாியைகளுக்கு என்மீது வல்லமையில்லை.
சாத்தானுக்கு என்னைத் தாக்கும் சக்தி இல்லை.
என்னை சாத்தான் சேதப்படுத்த முடியாது.
எனக்கு சாத்தானின் வல்லமையை மேற்கொள்ள அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சாத்தானைவிட இயேசு பொியவா்.
இயேசு என்னோடிருப்பதால் எனக்கு பயம் தேவையில்லை.
என்னில் வாசம் செய்யும் பாிசுத்த ஆவியானவா் சாத்தானை முறியடிக்கிறாா்.
நாம் சாத்தானை எதிா்த்தால் அவன் ஓடிப்போவான்.
- மேலேயுள்ள விசுவாச அறிக்கைகளை, சாத்தானுக்கு விரோதமாகப் பேசுங்கள். அவன் அவைகளைக் கேட்கும்போது, உங்களை விட்டு ஓடிப்போவான்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
”பிசாசுக்கு இடம் கொடாதிருங்கள்”
சாத்தானும் அவனுடைய சேனைகளும், பூமியிலுள்ள மக்களை மோசம் போக்கி, தேவனையும் அவரடைய நித்திய ஜீவனையும் அறிந்து கொள்ளவிடாதபடி வேறு திசைகளில் நடத்தி, முடிவில் அவா்களைத் தனக்கு சொந்தமாக்கி, தன்னை வணங்கவும், சேவிக்கவும் செய்து, நரகத்தின் பங்காளிகளாக்குகின்றன.
ஜனங்களை மோசம்போக்க, எண்ணிறந்த உபாயங்களை பிசாசு மக்களிடையே செய்து வந்தாலும், ஜனங்கள் பெரும்பாலும் அதை அறிவதுமில்லை - அறிய விரும்புவதுமில்லை. ஏற்கனவே, கூறியபடி... உலகில் மக்கள் அனுபவிக்கும் வியாதி, வறுமை, கடன், கவலை, பயம், சாபம், பகை, சோதனை, துன்பம், கஷ்டம், நஷ்டம், தோல்வி, வேதனை, மரணம் அனைத்துமே பிசாசால் உண்டானவைகளே.
இவைகள் ஒன்றாகிலும் தேவனிடமிருந்து வந்தவையல்ல. அவைகளில் எதையாவது நீங்கள் வாழ்க்கையில் அனுபவிப்பது, தேவனுக்குச் சித்தமல்ல. மேற்கூறிய தண்டனைகளை அனுபவிக்கிறவா்கள் அவைகள் பிசாசின் கிாியைகள் என்பதை அறிந்து, நிரந்தரமான விடுதலை பெற வேண்டும்.
தொடரும்...
சாத்தானும் அவனுடைய சேனைகளும், பூமியிலுள்ள மக்களை மோசம் போக்கி, தேவனையும் அவரடைய நித்திய ஜீவனையும் அறிந்து கொள்ளவிடாதபடி வேறு திசைகளில் நடத்தி, முடிவில் அவா்களைத் தனக்கு சொந்தமாக்கி, தன்னை வணங்கவும், சேவிக்கவும் செய்து, நரகத்தின் பங்காளிகளாக்குகின்றன.
ஜனங்களை மோசம்போக்க, எண்ணிறந்த உபாயங்களை பிசாசு மக்களிடையே செய்து வந்தாலும், ஜனங்கள் பெரும்பாலும் அதை அறிவதுமில்லை - அறிய விரும்புவதுமில்லை. ஏற்கனவே, கூறியபடி... உலகில் மக்கள் அனுபவிக்கும் வியாதி, வறுமை, கடன், கவலை, பயம், சாபம், பகை, சோதனை, துன்பம், கஷ்டம், நஷ்டம், தோல்வி, வேதனை, மரணம் அனைத்துமே பிசாசால் உண்டானவைகளே.
இவைகள் ஒன்றாகிலும் தேவனிடமிருந்து வந்தவையல்ல. அவைகளில் எதையாவது நீங்கள் வாழ்க்கையில் அனுபவிப்பது, தேவனுக்குச் சித்தமல்ல. மேற்கூறிய தண்டனைகளை அனுபவிக்கிறவா்கள் அவைகள் பிசாசின் கிாியைகள் என்பதை அறிந்து, நிரந்தரமான விடுதலை பெற வேண்டும்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சிலா் மேற்கூறியவைகளிலிருந்து தற்காலிக நிவாரணம் பெற விரும்பி, ஏதேதோ செய்து கொள்ளுகின்றனா். நிரந்தரமான விடுதலையை இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே பெற முடியும் என்ற உண்மையை அறிந்தவா்கள், தெய்வீக விடுதலையை நாடி, பூரண விடுதலையை அடைவா்கள். வாழ்க்கையில் வெறுப்பும் - கசுப்பும் பிசாசின் மூலமாகவே உண்டாகிறது என்றால், அவைகள் எப்படி? எப்பொழுது இடம் பெறுகின்றன என்பதையும் நாம் தொிந்து கொள்ளுவது அவசியம்.
ஒருவருடைய வீட்டில், வேறு ஒருவரக்குச் சொந்தமான ஒரு பொருள் இருக்குமானால், தன் பொருளை வைத்திருப்பவா் வீட்டுக்குள் உாிமையுடன் நுழைய வாய்ப்பு உண்டாகிறது. அவ்விதமே நமது வாழ்விலும் சாத்தானுக்குச் சொந்தமான காாியங்கள் இருக்குமானால், அவன் உாிமையுடன் நம் வாழ்வில் பிரவேசித்து கிாியை செய்ய முடியும். இதன் விளைவாக வாழ்வில் கசப்பும் - வெறுப்பும் ஏற்படும். ஆகவே, பிசாசின் தொல்லைகளிலிருந்து தப்பிக் கொள்ளும்படி பிசாசுக்கு இடம் கொடாமல் ஜீவிக்க வேண்டும்.
பிசாசுக்கு உாிமையளிக்கும் சில காாியங்களைக் கீழே கவனிப்போம்:
தொடரும்...
ஒருவருடைய வீட்டில், வேறு ஒருவரக்குச் சொந்தமான ஒரு பொருள் இருக்குமானால், தன் பொருளை வைத்திருப்பவா் வீட்டுக்குள் உாிமையுடன் நுழைய வாய்ப்பு உண்டாகிறது. அவ்விதமே நமது வாழ்விலும் சாத்தானுக்குச் சொந்தமான காாியங்கள் இருக்குமானால், அவன் உாிமையுடன் நம் வாழ்வில் பிரவேசித்து கிாியை செய்ய முடியும். இதன் விளைவாக வாழ்வில் கசப்பும் - வெறுப்பும் ஏற்படும். ஆகவே, பிசாசின் தொல்லைகளிலிருந்து தப்பிக் கொள்ளும்படி பிசாசுக்கு இடம் கொடாமல் ஜீவிக்க வேண்டும்.
பிசாசுக்கு உாிமையளிக்கும் சில காாியங்களைக் கீழே கவனிப்போம்:
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
1. உலக சிநேகம்:
"உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிரங்கள்." (1யோவான்: 5:19).
"உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது என்றும் அறிந்திருக்கிறோம்" (1யோவான்: 5:19).
இன்றைய உலகம் பொல்லாங்கனாகிய பிசாசுக்குள் இருப்பதால், நாம் உலகத்தை மட்டும் நேசித்து, உலக மக்களாகப் போய் விடக் கூடாது. இந்த உலகம் நமக்கு சதமல்ல. நம்முடைய நிரந்தர வாழ்வு பரலோகத்தில் இருக்கிறது.(பிலிப்பியர்: 3:20).
ஆகவே, உலகத்தில் உள்ளவைகளில் மட்டும் தன் முழு கவனத்தையும் செலுத்தி, ஆத்தும ஈடேற்றத்துக்கேதுவானவைகளை மறந்து போகிறவர்கள், பிசாசுக்கு இடம் கொடுப்பார்கள்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
2. பயம்:
வாழ்க்கையில் நேரிடக் கூடிய எல்லா பயங்களிலிருந்தும் மனிதரை விடுவிப்பதற்காகவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். (லூக்கா: 1:7; 1:74). நாம் பயமின்றி ஜீவிப்பதையே தேவன் விரும்புகின்றார். பயப்படுவதன் மூலம் சாத்தான் நம்மில் இடம் பெறவும் - கிரியை செய்யவும் முடிகிறது.
யோபு என்ற பரிசுத்தவான், சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார். ஆயினும், அவருக்குள் காரணமின்றி ஒரு பயம் ஏற்பட்டது. தான் அனுபவித்து வரும் ஆசீர்வாதங்கள் அனைத்தும் தன்னை விட்டு போய்விடக் கூடும் என்று பயப்பட்டார். இவ்விதமான பயத்துக்கு அவர் இடம் கொடுத்ததனால், அவர் பயந்த பிரகாரம் செய்ய சாத்தானால் முடிந்தது. (யோபு: 3:25,26). எனவே, உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பயம் இருந்தால், அதை அகற்றி, கிறிஸ்துவுக்குள் உங்களைத் திடப்படுத்தங்கள்.
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே! அதனாலே, நாம் தைரியம் கொண்டு, "கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன். மனுஷன் எனக்கு என்ன செய்வான்" என்று சொல்லலாமே" (எபிரேயர்: 13:5,6).
அன்பிலே பயமில்லை. பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும். பயமானது வேதனை உள்ளது. பயப்படுகிறவன் அன்பிலே பூரணப்பட்டவன் அல்ல. (1யோவான்: 4:18).
ஆகையால், பயத்தக்கு இடம் கொடாமல் கிறிஸ்துவின் அன்பில் நடந்து கொள்ளுங்கள். அப்பொழுது அன்பு, பயத்தை புறம்பே தள்ளும். பிசாசுக்கு நீங்கள் இடம் கொடுத்தாலன்றி, அவன் உங்களைத் தொடமுடியாது.
தொடரும்...
வாழ்க்கையில் நேரிடக் கூடிய எல்லா பயங்களிலிருந்தும் மனிதரை விடுவிப்பதற்காகவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். (லூக்கா: 1:7; 1:74). நாம் பயமின்றி ஜீவிப்பதையே தேவன் விரும்புகின்றார். பயப்படுவதன் மூலம் சாத்தான் நம்மில் இடம் பெறவும் - கிரியை செய்யவும் முடிகிறது.
யோபு என்ற பரிசுத்தவான், சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார். ஆயினும், அவருக்குள் காரணமின்றி ஒரு பயம் ஏற்பட்டது. தான் அனுபவித்து வரும் ஆசீர்வாதங்கள் அனைத்தும் தன்னை விட்டு போய்விடக் கூடும் என்று பயப்பட்டார். இவ்விதமான பயத்துக்கு அவர் இடம் கொடுத்ததனால், அவர் பயந்த பிரகாரம் செய்ய சாத்தானால் முடிந்தது. (யோபு: 3:25,26). எனவே, உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பயம் இருந்தால், அதை அகற்றி, கிறிஸ்துவுக்குள் உங்களைத் திடப்படுத்தங்கள்.
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே! அதனாலே, நாம் தைரியம் கொண்டு, "கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன். மனுஷன் எனக்கு என்ன செய்வான்" என்று சொல்லலாமே" (எபிரேயர்: 13:5,6).
அன்பிலே பயமில்லை. பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும். பயமானது வேதனை உள்ளது. பயப்படுகிறவன் அன்பிலே பூரணப்பட்டவன் அல்ல. (1யோவான்: 4:18).
ஆகையால், பயத்தக்கு இடம் கொடாமல் கிறிஸ்துவின் அன்பில் நடந்து கொள்ளுங்கள். அப்பொழுது அன்பு, பயத்தை புறம்பே தள்ளும். பிசாசுக்கு நீங்கள் இடம் கொடுத்தாலன்றி, அவன் உங்களைத் தொடமுடியாது.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
3. பண ஆசை:
பண ஆசை, பொரளாசை அவைகள் மூலம் சாத்தான் மனிதருக்குள் இடம் பெற முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். யூதாஸ் என்னும் சீடன் முப்பது வெள்ளிக் காசுகள் மேல் ஆசை வைத்தபோது, சாத்தான் அவனுக்குள் புகுந்தான் என்று சத்திய வேதம் கூறுகின்றது. (யோவான்: 13:2,27).
இவ்வுலகில் நமக்குத் தேவையான சகலவித பாக்கியங்களும் ஐசுவரியமும், தேவனிடமிருந்து அவ்வப்போது நமக்குக் கிடைக்கும்படியான ஒழுங்கைத் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு வைத்திருப்பதால், பணத்தின் மீது ஆசை கொண்டு, அதற்காகவே உலகத்தில் ஜீவிப்பது மதியீனமாகும்.
"ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும், கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும், அமிழ்த்துகிற மதிகேடும், சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்." (1தீமோத்தேயு: 6:9).
"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளினால் தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்" (1தீமோத்தேயு: 6:10).
மனத்தாழ்மையோடு, தேவனுக்குப் பயந்து ஜீவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, இவ்வுலகில் ஜீவிக்க நீங்கள் முன் வந்தால், தேவ ஒழுங்கின்படி ஐசுவரியம், மகிமை, ஜீவன், ஆகிய மாபெரும் ஆசீர்வாதங்கள் உங்களைத் தேடி வரும். நீங்கள் பணத்தை தேடி அலையத் தேவையில்லை. ஐசுவரியம் உங்களைத் தேடிவரும்படியாக, தேவனால் கற்பிக்கப்பட்ட இந்த அதிசய வழியில் நடக்க ஏன் இப்பொழுதே ஒரு தீர்மானம் செய்யக் கூடாது?
"நீங்கள் பண ஆசை இல்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதும் என்று எண்ணுங்கள்".
"கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும், அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." (நீதிமொழிகள்: 10:22).
"தாழ்மைக்கும், கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும், மகிமையும், ஜீவனுமாம்" (நீதிமொழிகள்: 22:4).
தொடரும்...
பண ஆசை, பொரளாசை அவைகள் மூலம் சாத்தான் மனிதருக்குள் இடம் பெற முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். யூதாஸ் என்னும் சீடன் முப்பது வெள்ளிக் காசுகள் மேல் ஆசை வைத்தபோது, சாத்தான் அவனுக்குள் புகுந்தான் என்று சத்திய வேதம் கூறுகின்றது. (யோவான்: 13:2,27).
இவ்வுலகில் நமக்குத் தேவையான சகலவித பாக்கியங்களும் ஐசுவரியமும், தேவனிடமிருந்து அவ்வப்போது நமக்குக் கிடைக்கும்படியான ஒழுங்கைத் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு வைத்திருப்பதால், பணத்தின் மீது ஆசை கொண்டு, அதற்காகவே உலகத்தில் ஜீவிப்பது மதியீனமாகும்.
"ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும், கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும், அமிழ்த்துகிற மதிகேடும், சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்." (1தீமோத்தேயு: 6:9).
"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளினால் தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்" (1தீமோத்தேயு: 6:10).
மனத்தாழ்மையோடு, தேவனுக்குப் பயந்து ஜீவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, இவ்வுலகில் ஜீவிக்க நீங்கள் முன் வந்தால், தேவ ஒழுங்கின்படி ஐசுவரியம், மகிமை, ஜீவன், ஆகிய மாபெரும் ஆசீர்வாதங்கள் உங்களைத் தேடி வரும். நீங்கள் பணத்தை தேடி அலையத் தேவையில்லை. ஐசுவரியம் உங்களைத் தேடிவரும்படியாக, தேவனால் கற்பிக்கப்பட்ட இந்த அதிசய வழியில் நடக்க ஏன் இப்பொழுதே ஒரு தீர்மானம் செய்யக் கூடாது?
"நீங்கள் பண ஆசை இல்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதும் என்று எண்ணுங்கள்".
"கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும், அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." (நீதிமொழிகள்: 10:22).
"தாழ்மைக்கும், கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும், மகிமையும், ஜீவனுமாம்" (நீதிமொழிகள்: 22:4).
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
4. பொறாமை:
பொறாமை என்ற பதம் சிறியதாக இருப்பினும், இதனால் விளையும் தீமைகள் கொடியவை.
"மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்." (பிரசங்கி: 4:4).
"சொஸ்த மனம் உடலுக்கு ஜீவன். பொறாமையோ எலும்புருக்கி" (நீதிமொழிகள்: 14:30).
பிறருடைய வெற்றி, உயர்வு, உடமைகளைக் கண்டு, அவர்கள் மீது பொறாமை கொள்வது, தனக்கே கேடு விளைவிப்பதாகும். அதன் மூலம் சாத்தானும் இடம் பெறுகிறான்.
இரட்சகனாகிய கோலியாத்தைக் கொன்றதினாலே, தாவீதின் மேன்மையும், புகழும் பெருகிற்று. அதைக் கண்ட சவுல் அரசனுக்கு பொறாமை ஏற்பட்டதனால், ஒரு பொல்லாத ஆவி அவனுக்குள் பிரவேசித்தது. (1சாழுவேல்: 18:7-10).
எந்த நிலையில் உள்ளவர்கள் மீதும், நீ பொறாமை கொள்ளாதே என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு கற்பிக்கிறது.
"பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே" (நீதிமொழிகள்: 24:1).
:உன் மனதை பாவிகள் மேல் பொறாமை கொள்ள விடாதே" (நீதிமொழிகள்: 23:17).
"கொடுமை உள்ளவன் மேல் பொறாமை கொள்ளாதே"
யார் மீதேனும் உங்களுக்கும் பொறாமை இருக்குமேயானால், இன்றே அதை அகற்றி,ஆவர்களை ஆசீர்வதியுங்கள். அப்பொழுது சாத்தான் உங்களில் இடம் பெற முடியாது. உங்களுக்கும் ஆசீர்வாதம் பெருகும். மற்றவர்களின் மேன்மை - செல்வம் - வெற்றி - ஊழியம் - செல்வாக்கு ஆகியவைகளைக் கண்டு உங்களுக்கு பொறாமை ஏற்படுகிறதா?
தொடரும்...
பொறாமை என்ற பதம் சிறியதாக இருப்பினும், இதனால் விளையும் தீமைகள் கொடியவை.
"மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்." (பிரசங்கி: 4:4).
"சொஸ்த மனம் உடலுக்கு ஜீவன். பொறாமையோ எலும்புருக்கி" (நீதிமொழிகள்: 14:30).
பிறருடைய வெற்றி, உயர்வு, உடமைகளைக் கண்டு, அவர்கள் மீது பொறாமை கொள்வது, தனக்கே கேடு விளைவிப்பதாகும். அதன் மூலம் சாத்தானும் இடம் பெறுகிறான்.
இரட்சகனாகிய கோலியாத்தைக் கொன்றதினாலே, தாவீதின் மேன்மையும், புகழும் பெருகிற்று. அதைக் கண்ட சவுல் அரசனுக்கு பொறாமை ஏற்பட்டதனால், ஒரு பொல்லாத ஆவி அவனுக்குள் பிரவேசித்தது. (1சாழுவேல்: 18:7-10).
எந்த நிலையில் உள்ளவர்கள் மீதும், நீ பொறாமை கொள்ளாதே என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு கற்பிக்கிறது.
"பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே" (நீதிமொழிகள்: 24:1).
:உன் மனதை பாவிகள் மேல் பொறாமை கொள்ள விடாதே" (நீதிமொழிகள்: 23:17).
"கொடுமை உள்ளவன் மேல் பொறாமை கொள்ளாதே"
யார் மீதேனும் உங்களுக்கும் பொறாமை இருக்குமேயானால், இன்றே அதை அகற்றி,ஆவர்களை ஆசீர்வதியுங்கள். அப்பொழுது சாத்தான் உங்களில் இடம் பெற முடியாது. உங்களுக்கும் ஆசீர்வாதம் பெருகும். மற்றவர்களின் மேன்மை - செல்வம் - வெற்றி - ஊழியம் - செல்வாக்கு ஆகியவைகளைக் கண்டு உங்களுக்கு பொறாமை ஏற்படுகிறதா?
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
5. பகை - விரோதங்கள்:
முன் கூறப்பட்டவைகள் போலவே, நாம் யாரிடமாவது பகை விரோதம், மனக் கசப்பு கொள்ளும்போது, சாத்தானுக்கு நம்மில் இடம் கிடைக்க ஏதுவாகிறது.
மனித உள்ளத்திலிருந்து தோன்றும் உணர்ச்சி வசப்பட்ட எண்ணங்கள் வெளியே போய், அதே விதமான பலன்களை அவர்களுக்குள் கொண்டுவரும். ஒருவரிடமிருந்து பகை விரோத உணர்ச்சிகள் வெளிப்பட்டால், இந்த உணர்ச்சிகள் வெளியே சென்று, அதேவிதமான பகை - விரோதங்களை அந்த மனிதனின் வாழ்வில் சம்பவிக்கும்படி செய்யும்.
இது ஒரு ஆவிக்குரிய விதியாக இருப்பதால், நம்மிலிருந்து வெளிப்படும் எண்ணங்கள், வார்த்தைகளைக் குறித்து, நாம் மிகவும் ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இதன் காரணமாகவே இயேசு கிறிஸ்து, சத்துருக்களை சிநேகிக்கும்படி நமக்குப் போதித்திருக்கிறார்.
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்." (மத்தேயு: 5:44).
சாத்தான் மூலமாகவே, சகோதரருக்குள் பகை - விரோதம் ஏற்படுவதால், நாம் சாத்தானை எதிர்க்க வேண்டுமேயன்றி, மனிதரை அல்ல.
ஆகவே, சகோதரரிடம் பகை - விரோதம் உள்ளவர்கள் இன்றே அவர்களிடம் ஒப்புரவாகுங்கள்.
ஆரம்பத்திலேயே ஜாக்கிரதையுடன், பிசாசுக்கு இடம் கொடுக்கக்கூடிய கிரியைகளை ஜீவியத்திலிருந்து அகற்றுவது அவசியம். இயேசு கிறிஸ்துவிடம் சாத்தான் பல தடவை வந்தும் அவர் அவனுக்கு சற்றும் இடம் தரவில்லை.
"இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" (யோவான்: 14:30).
ஒருவேளை பிறர் நம்மைக் குற்றம் சாட்டி, நிந்தித்து, பகைத்து அவதூறாகப் பேசி - எழுதி, குழப்பங்களை உண்டு பண்ணினாலும் கூட, அவ்விதம் கிரியை செய்கிறவர்களைப் பகைக்க நாம் இடம் கொடுக்க வேண்டாம். அப்படிப்பட்டவர்களை பகைத்து விரோதிப்பதன் மூலம், நாமும்கூட சாத்தானுக்கு சேவை செய்கிறவர்களாகி விடலாம்.
அப்படிப்பட்டவர்களை கிறிஸ்துவுக்குள் மன்னித்து, ஆசீர்வதிப்பதன் மூலம், சாத்தானின் தந்திரங்களை முறியடிக்கிறவர்களாயிருப்பீர்கள்.
நாம் இடம் கொடுத்தால் மட்டுமே, சாத்தான் நம்மில் கிரியை செய்ய முடியும். எனவே, சாத்தானின் போராட்டம், உபத்திரவங்களால் அவதிப்படுவோர், சாத்தான் தங்களில் கிரியை செய்யும்படி இடம் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டு பிடித்து சரிப்படுத்த வேண்டும்.
தொடரும்...
முன் கூறப்பட்டவைகள் போலவே, நாம் யாரிடமாவது பகை விரோதம், மனக் கசப்பு கொள்ளும்போது, சாத்தானுக்கு நம்மில் இடம் கிடைக்க ஏதுவாகிறது.
மனித உள்ளத்திலிருந்து தோன்றும் உணர்ச்சி வசப்பட்ட எண்ணங்கள் வெளியே போய், அதே விதமான பலன்களை அவர்களுக்குள் கொண்டுவரும். ஒருவரிடமிருந்து பகை விரோத உணர்ச்சிகள் வெளிப்பட்டால், இந்த உணர்ச்சிகள் வெளியே சென்று, அதேவிதமான பகை - விரோதங்களை அந்த மனிதனின் வாழ்வில் சம்பவிக்கும்படி செய்யும்.
இது ஒரு ஆவிக்குரிய விதியாக இருப்பதால், நம்மிலிருந்து வெளிப்படும் எண்ணங்கள், வார்த்தைகளைக் குறித்து, நாம் மிகவும் ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இதன் காரணமாகவே இயேசு கிறிஸ்து, சத்துருக்களை சிநேகிக்கும்படி நமக்குப் போதித்திருக்கிறார்.
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்." (மத்தேயு: 5:44).
சாத்தான் மூலமாகவே, சகோதரருக்குள் பகை - விரோதம் ஏற்படுவதால், நாம் சாத்தானை எதிர்க்க வேண்டுமேயன்றி, மனிதரை அல்ல.
ஆகவே, சகோதரரிடம் பகை - விரோதம் உள்ளவர்கள் இன்றே அவர்களிடம் ஒப்புரவாகுங்கள்.
ஆரம்பத்திலேயே ஜாக்கிரதையுடன், பிசாசுக்கு இடம் கொடுக்கக்கூடிய கிரியைகளை ஜீவியத்திலிருந்து அகற்றுவது அவசியம். இயேசு கிறிஸ்துவிடம் சாத்தான் பல தடவை வந்தும் அவர் அவனுக்கு சற்றும் இடம் தரவில்லை.
"இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" (யோவான்: 14:30).
ஒருவேளை பிறர் நம்மைக் குற்றம் சாட்டி, நிந்தித்து, பகைத்து அவதூறாகப் பேசி - எழுதி, குழப்பங்களை உண்டு பண்ணினாலும் கூட, அவ்விதம் கிரியை செய்கிறவர்களைப் பகைக்க நாம் இடம் கொடுக்க வேண்டாம். அப்படிப்பட்டவர்களை பகைத்து விரோதிப்பதன் மூலம், நாமும்கூட சாத்தானுக்கு சேவை செய்கிறவர்களாகி விடலாம்.
அப்படிப்பட்டவர்களை கிறிஸ்துவுக்குள் மன்னித்து, ஆசீர்வதிப்பதன் மூலம், சாத்தானின் தந்திரங்களை முறியடிக்கிறவர்களாயிருப்பீர்கள்.
நாம் இடம் கொடுத்தால் மட்டுமே, சாத்தான் நம்மில் கிரியை செய்ய முடியும். எனவே, சாத்தானின் போராட்டம், உபத்திரவங்களால் அவதிப்படுவோர், சாத்தான் தங்களில் கிரியை செய்யும்படி இடம் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டு பிடித்து சரிப்படுத்த வேண்டும்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
6. உலகக் கவலைகள்:
கடந்த கால சம்பவங்களையும், நிகழ்கால நிகழ்ச்சிகளையும் எதிர்காலம் குறித்த எதிர்ப்புக்களையும் மனதில் சதா நினைத்துக் கவலைப்பட்டு வருந்துவோர் உண்டு.
ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் உள்ளவர்கள், கவலையற்றவர்களாக ஜீவிக்க முடியும். கவலைப்படுகிறவர்களை 'அஞ்ஞானிகள்' என்று இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு: 6:32).
வேத வசனங்களின் வாக்குத்தத்தங்களைப் பிடித்துக் கொண்டு ஜீவிக்கும் வழிகளை நீங்கள் அறிந்து கொள்ளுவதன் மூலம் உங்கள் கவலைகளும், துக்கங்களும் சந்தோஷமாக மாறும்!
கவலைகளுக்கு இடம் கொடுப்பதன் மூலம் சாத்தான் நம்மில் கிரியை செய்வதற்கு நாம் இடம் கொடுக்கிறோம். அதன் பயனாக பலவித இருதய நோய்கள் ஏற்படும். மரணமும் சம்பவிக்கும்.
"மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு நம்முடைய துக்கங்களை சுமந்தார்." (ஏசாயா: 53:4).
மேலேயுள்ள தேவனுடைய வார்த்தைகளை நீங்கள் விசுவாசிக்கக்கூடுமானால் உங்கள் கவலைகளை உதறித் தள்ளுங்கள். விடுதலையாவீர்கள்!
தொடரும்...
கடந்த கால சம்பவங்களையும், நிகழ்கால நிகழ்ச்சிகளையும் எதிர்காலம் குறித்த எதிர்ப்புக்களையும் மனதில் சதா நினைத்துக் கவலைப்பட்டு வருந்துவோர் உண்டு.
ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் உள்ளவர்கள், கவலையற்றவர்களாக ஜீவிக்க முடியும். கவலைப்படுகிறவர்களை 'அஞ்ஞானிகள்' என்று இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு: 6:32).
வேத வசனங்களின் வாக்குத்தத்தங்களைப் பிடித்துக் கொண்டு ஜீவிக்கும் வழிகளை நீங்கள் அறிந்து கொள்ளுவதன் மூலம் உங்கள் கவலைகளும், துக்கங்களும் சந்தோஷமாக மாறும்!
கவலைகளுக்கு இடம் கொடுப்பதன் மூலம் சாத்தான் நம்மில் கிரியை செய்வதற்கு நாம் இடம் கொடுக்கிறோம். அதன் பயனாக பலவித இருதய நோய்கள் ஏற்படும். மரணமும் சம்பவிக்கும்.
"மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு நம்முடைய துக்கங்களை சுமந்தார்." (ஏசாயா: 53:4).
மேலேயுள்ள தேவனுடைய வார்த்தைகளை நீங்கள் விசுவாசிக்கக்கூடுமானால் உங்கள் கவலைகளை உதறித் தள்ளுங்கள். விடுதலையாவீர்கள்!
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
7. மாமிச சிந்தை:
அநேக விதமான சிந்தைகளைக் குறித்து வேதத்தில் வாசிக்கிறோம்.
வீணான சிந்தை
கேடான சிந்தை
அசுத்த சிந்தை
பொல்லாத சிந்தை
மாமிச சிந்தை
உலக சிந்தை
அக்கிரம சிந்தை
மேட்டிமையான சிந்தை
துர்ச்சிந்தை
- இவை போன்ற தேவையற்ற பல சிந்தைகளை மனதில் அனுமதிப்பது, பிசாசுக்கு இடம் கொடுப்பதேயாகும்.
இன்றைய உலகில் பிரதான பாகம் வகிக்கும் 'கண்களின் இச்சை, மாமிசத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை' ஆகிய இம்மூன்றையும் பிதாவாகிய தேவன் உண்டு பண்ணவில்லை. இவை மூன்றும் உலகத்தின் ஆவியாகிய பிசாசினால் உண்டாக்கப்பட்டவைகள்.
பிசாசுக்கு சொந்தமான இம்மூன்றில் ஏதேனும் ஒன்று நம் மனதில் சிந்தை அல்லது நினைவின் மூலம் உட்புக இடம் கொடுப்பதன் மூலம், சாத்தான் நம்மில் கிரியை செய்ய அவனுக்கு இடமுண்டாகிறது.
ஏக சிந்தையாகிய ஒரே சிந்தையையும், பரிசுத்த சிந்தை என்று அழைக்கப்படும் கிறிஸ்துவின் சிந்தையையும் உங்கள் மனதில் உருவாக்குவதன் மூலம், சாத்தானால் உண்டாகும், அசுத்த சிந்தைகளுக்கு நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியும்.
தொடரும்...
அநேக விதமான சிந்தைகளைக் குறித்து வேதத்தில் வாசிக்கிறோம்.
வீணான சிந்தை
கேடான சிந்தை
அசுத்த சிந்தை
பொல்லாத சிந்தை
மாமிச சிந்தை
உலக சிந்தை
அக்கிரம சிந்தை
மேட்டிமையான சிந்தை
துர்ச்சிந்தை
- இவை போன்ற தேவையற்ற பல சிந்தைகளை மனதில் அனுமதிப்பது, பிசாசுக்கு இடம் கொடுப்பதேயாகும்.
இன்றைய உலகில் பிரதான பாகம் வகிக்கும் 'கண்களின் இச்சை, மாமிசத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை' ஆகிய இம்மூன்றையும் பிதாவாகிய தேவன் உண்டு பண்ணவில்லை. இவை மூன்றும் உலகத்தின் ஆவியாகிய பிசாசினால் உண்டாக்கப்பட்டவைகள்.
பிசாசுக்கு சொந்தமான இம்மூன்றில் ஏதேனும் ஒன்று நம் மனதில் சிந்தை அல்லது நினைவின் மூலம் உட்புக இடம் கொடுப்பதன் மூலம், சாத்தான் நம்மில் கிரியை செய்ய அவனுக்கு இடமுண்டாகிறது.
ஏக சிந்தையாகிய ஒரே சிந்தையையும், பரிசுத்த சிந்தை என்று அழைக்கப்படும் கிறிஸ்துவின் சிந்தையையும் உங்கள் மனதில் உருவாக்குவதன் மூலம், சாத்தானால் உண்டாகும், அசுத்த சிந்தைகளுக்கு நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியும்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Page 14 of 15 • 1 ... 8 ... 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 15
|
|