புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாிசுத்த வேதாகம உபதேசங்கள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jun 19, 2012 9:57 pm

First topic message reminder :

“கிறிஸ்தவ விசுவாசத்தின் மூலைக் கற்கள்”
ஒவ்வொருவரும் தேவனைப்பற்றியும், மரணத்திற்கு அப்பால் உள்ள வாழ்க்கை மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைப் பற்றியும் சிறிது விசுவாசிக்கிறோம். சிலர் தேவன் இல்லை என்று கூறுகிறார்கள். சிலர் ஆயிரக்கனக்கான தேவர்களை வணங்குகிறார்கள். சிலர் தங்கள் அறிவு தெளிவு பெற தேடுகிறார்கள். சிலர் பொருள்களுக்கு அல்லது இயற்கை சக்திகளுக்கு ஆவியின் சக்தி இருப்பதாக கூறுகிறார்கள். சிலர் தங்களையே வணங்கிக் கொள்கிறார்கள்.

நிச்சயமாகவே மக்கள் ரொம்பவுமே ஆன்மீகவாதிகளாக இருக்கிறார்கள். இன்றும், தொழில் நுட்பவியலின் வளர்ச்சிகளின் மத்தியிலும், மக்கள் வாழ்க்கையின் அடிப்படை அர்த்தத்தை தெரிந்து கொள்ள வாஞ்சிக்கிறார்கள். அன்றாட வாழ்க்கைக்கும் மேலான நோக்கத்திற்காகவும், அறிவிற்காகவும் மக்கள் “அறிவுப் பசி” கொண்டவர்களாய் உள்ளார்கள். “நாம் பார்த்து, கேட்டு, உணர்ந்து, ருசித்து, தொடக் கூடிய காரியங்களுக்கும் மேலாக இன்னும் வாழ்க்கையில் ஏதேனும் உண்டா?” என மக்கள் யோசிக்கிறார்கள்.

இந்த கேள்விகள் தேவன் மனித இனத்தை எவ்வாறு படைத்தார் என்று காட்டுகிறது. நாம் தேவனையும், அவரது நோக்கங்களையும் தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ள உண்டாக்கப்பட்டோம். (ஆதியாகமம்: 1:26,27; எரேமியா: 29:11-13). துர்ப்பேற்றின் பயனாக, மனதன் பாவம் செய்வதை தெரிந்து கொண்டது. அவன் தன் சிருஷ்டிகரிடம் கொண்டிருந்த கள்ளங்கபடற்ற ஐக்கியத்தை அழித்துப் போட்டது. இப்படி ஆவிக்குரிய இருளில் சென்று விட்ட மனிதனின் தவிர்க்க முடியாத பெரிய வீழ்ச்சியை வேதாகமம் வெளிப்படுத்துகிறது.

ஆனால், வேதாகமம் ஒரு சிறந்த சத்தியத்தையும் வெளிப்படுத்துகிறது. மனிதனை மீண்டும் தன்னிடமாய் இழுத்துக் கொள்ளும் கிரியையில் தேவன் ஈடுபட்டிருக்கிறார். மனித குலம் மீண்டும் தேவனிடம் சோ்க்கப்படும்படியாக தேவன் ஒரு இரட்சிப்பின் வழியை ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார்.

ஆனாலும், சாத்தானும் அவனது பிசாசுகளும் கூட கிரியை செய்கின்றன. அவைகள் மனிதனை தேவனுடைய சத்தியத்தினிடமிருந்தும் அவருடைய இரட்சிப்பின் திட்டத்தினின்றும் விலக்கி வைக்க, வஞ்சகத்தையும், பொய்களையும் பயன்படுத்தி இடைவிடாமல் முயன்று வருகின்றன. பாவத்தின் அடிமைத்தனத்தினின்று சத்தியம் மனித குலத்தை விடுதலையாக்கும் என்பதை சாத்தான் அறிவான் (யோவான்: 8:32).

தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தைப் பற்றிய உங்கள் புரிந்து கொள்ளுதலை இன்னும் கொஞ்சம் தெளிவுபடுத்தவே இப்பகுதியில் எழுத விரும்புகிறேன். மெய்யான வேதத்தின்படியான கிறிஸ்தவத்திற்கும், இன்றைய உலகில் உலவி வரும் பிற மார்க்கங்களுக்கும் உள்ள தெளிவான வித்தியாசத்தைக் காட்டும். அந்திக்கிறிஸ்துவின் ஆவியே எல்லா ஆவிக்குரிய வஞ்சகத்தையும் அடக்கி ஆளும் சக்தி என வேதாகமம் வெளிப்படுத்துகிறது. தேவ ஜனத்தை “வஞ்சக ஆவி” யின் (1யோவான்: 4:6) அடிமைத்தனத்திலிருந்து வெளிநடத்தி, கிறிஸ்து இய‌ேசுவின் மூலமாய் நித்திய இரட்சிப்புக்குள் கொண்டுவர உங்களை ஆயத்தப்படுத்த விரும்புகிறேன். இப்பகுதியில் யாரையும் புண்படுத்தவோ, குற்றப்படுத்தவோ, தாக்கும் நோக்கமோ கொண்டதல்ல. தொடர்ந்து வாசியுங்கள். தேவாசீர்வாதம் பெறுங்கள். கிறிஸ்துவின் மூல உபதேசங்களை கற்றறிவோம் வாருங்கள். நல்லாதரவு தாருங்கள். பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550 பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550 பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550


தொடரும்...



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jun 24, 2012 4:18 am

இயேசு கிறிஸ்து தேவன் என்பதற்கு வேத ஆதாரம்:

இந்த உலகில் அவர் ஊழியம் செய்தபோது தாம் தேவன் என்று கூறினார். (யோவான்: 5:18; 8:58; 10:30). இயேசு கிறிஸ்து திமிர்வாதக்காரனின் பாவங்களை மன்னித்தார் என்று மாற்கு: 2:5-12 ல் காண்கிறோம்.

அப்பொழுது, அப்படி மன்னிப்பதற்குத் தேவனாகிய தமக்கு உரிமையும் அதிகாரமும் இருப்பதை நிரூபிக்க, இயேசு கிறிஸ்து அவனை குணமாக்கினார். இயேசு கிறிஸ்து நித்திய ஜீவனைத் தருகிறார் (யோவான்: 10:28). அற்புதங்களை நடப்பிக்கத் தம்முடைய சீஷர்களுக்கு அதிகாரங் கொடுக்கிறார். (மத்தேயு: 10:1,8). அவரும் பிதாவும் ஒன்றே என அறிவித்தார். (யோவான்: 10:31-33). யூதர்கள் இயேசு தான் தேவன் என்று கூறுவதை விளங்கிக் கொண்டனர். இதுதான் அவர்கள் அவரை வெறுத்ததற்கு காரணமாயிற்று.

இயேசு கிறிஸ்து, அவரும் பிதாவாகிய தேவனும் குணாதிசயத்திலும், நோக்கத்திலும், பணியிலும் ஒன்றாயிருப்பதாகக் கூறினார். (யோவான்: 14:9). அவர் பிதாவின் கிரியைகளைச் செய்தார். (யோவான்: 5:17; 10:37,38).

இயேசு கிறிஸ்து மக்களின் சிந்தனைகளை அறிந்தார். (மாற்கு: 2:8; லூக்கா: 6:8; யோவான்: 2:23-25). அவருக்கு ஜீவனின் மேலும் மரணத்தின் மேலும் அதிகாரம் இருந்தது (யோவான்: 6:63; லூக்கா: 7:11-17; யோவான்: 11:1-44). மேலும், அவரைப் பின்பற்றினோர் அவருடைய நாமத்தில் ஜெபிக்கும்படி போதித்தார். (யோவான்: 16:23,24). இயேசுவானவர் (யாத்திராகமம்: 34:14; மத்தேயு: 4:10). ஆராதனையை ஏற்றுக் கொண்டார் (மத்தேயு: 2:2,11; 14:33; 28:9,10,17; யோவான்: 9:38; எபிரேயர்: 1:6). இயேசுவானவர் உண்மையிலேயே தேவனாயிருப்பதால் ஆராதனையை ஏற்றுக் கொண்டார்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jun 24, 2012 4:39 am

இயேசு கிறிஸ்து : “முழுவதும் தேவன், முழுவதும் மனிதன்”


புதிய ஏற்பாடு இயேசுவானவர் தேவன் என ஆணித்தரமாய்க் கூறுகிறது. இயேசுவானவரைப் பற்றி விவரிக்கும்போது, அவருடைய (தேவனுடைய) மகிமையின் பிரகாசமும், “அவருடைய (தேவனின்) தன்மையின் சொரூபமுமாயிருந்தார்” (எபிரேயா்: 1:3). “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம் (கொலோசெயர்: 1:15). தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப் பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது (கொலோசெயர்: 2:9) என்று விவரிக்கப்பட்டிருக்கிறது.

இயேசுவானவரும் பிதாவாகிய தேவனும் ஒன்றாயிருக்கிறார்கள் (யோவான்: 10:30). கிரேக்க மொழியின்படி இது அவர்கள் சாராம்சத்தில் ஒன்றாயிருக்கிறார்கள். ஆனால், ஒரே ஆளில்லை எனக் குறியிட்டுக் காட்டுகிறது. இது திரித்துவத்தைக் குறித்த இறையியல் கருத்தை ஆதரிக்கிறது.

“மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து” (தீத்து:2:13). என் ஆண்டவரே! என் தேவனே! (யோவான்: 20:28) என்றார். “தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்” (1தீமோத்தேயு: 3:16) என இயேசு அழைக்கப்படுகிறார்.

கிறிஸ்து தேவனுடைய குணாதிசயத்தைக் கொண்டிருந்ததோடு , அதைத் தம்முடைய வாழ்க்கை, ஊழியம், தியாக பலியான மரணத்தினால் வெளிப்படுத்திக் காட்டினார்.

கிறிஸ்து காட்டிய நன்னெறிப் பண்புகள்:


- அன்பு - யோவான்: 3:16; 13:34; 15:12,13; ரோமர்: 8:35.

- சத்தியம் - யோவான்: 8:31-36; 14:6; வெளிப்படுத்தல்: 3:7.

- பணிவிடை செய்தல் - மத்தேயு: 20:25-28; யோவான்: 13:13-17; பிலிப்பியர்: 2:5-8.

- பரிசுத்தம் - லூக்கா: 1:35; அப்போஸ்தலர்: 4:27,30.

- நீதி - ரோமர்: 5:17-21; 2தீமோத்தேயு: 4:8; 1யோவான்: 2:1,29; 3:7.

இயேசு கிறிஸ்து தேவனாயிருந்தார்; தேவனாயிருக்கிறார் என்று வேத வாக்கியங்கள் போதிப்பது ஏராளமான சான்றுகள் மூலம் தெளிவாகிறது.

அவர் ஒரே சமயத்தில் முழு மனிதனாகவும் முழுவதும் தேவனாகவும் இருந்தார். வேதாகமத்தின் கூற்றுப்படி இயேசு கிறிஸ்து யார் என்பதை மறுதலிக்கும் எந்த ஒரு போதனையும் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டும்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jun 25, 2012 3:39 am

இயேசு கிறிஸ்துவின் பணி

இயேசு, "நானும் என் பிதாவும் ஒன்றாயிரக்கிறோம்" (யோவான்: 10:30) என்று கூறிய தம்முடைய தெய்வீக சுபாவத்தை உறுதிப்படுத்தினார். இயேசுவானவர் சொன்னதின் உட்பொருளை, அவர் தம்மை தேவன் என்று உரிமை பாராட்டியதை யுதர்கள் விளங்கிக் கொண்டதை அவர்களின் பிரதிக்கிரியை காட்டுகிறது.

ஆனால், இயேசுவானவர் எந்தக் காரணமுமின்றி தம்மை தேவன் என்று கூறிக் கொள்ளவில்லை. அது உண்மையாக இருந்தாலும் கூட அவர் தம்மைப் பற்றி கூறிக் கொண்ட யாவற்றையும் தம்முடைய கிரியைகளினால் நிருபித்தார். அவர் திரும்பத் திரும்ப தமது போதனையைக் கேட்டவர்களிடம்...

அ) அவருடைய கிரியைகள் தேவனுடையவை

ஆ) அவருடைய கிரியைகள் தாம், அன்றும், இன்றும் தேவனாயிருக்கிறார் என நிருபித்தன என்றும் கூறினார்.

என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள்" என்றார் (யோவான்: 10:37,38; 5:17,36: 9:4; 10:25; 14:10,11; 15:25).

1. அவருடைய ஊழியம்:

இயேசுவானவர் புமியில் ஊழியம் செய்யும்போது:

- பிணியாளிகள், குருடர், செவிடரை சுகமாக்கினார்.

- மரித்தோரை உயிரோடு எழுப்பினார்.

- பிசாசுகளைத் துரத்தினார்.

- இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் , பசியுற்றோரை பசியாற்றினார்.

- பிசாசை முறியடித்தார்.

- பக்தி மார்க்கத்தை சேர்ந்த சுயநீதிக்காரரை எதிர்கொண்டார்.

- பாவங்களிலிருந்து மனந்திரும்புதலைப் போதித்து பாவங்களை மன்னித்தார்.

- தம்மாலும் தம் போதனையாலும் தேவனாகிய பிதாவின் அன்பான இதயத்தையும் அவரது குணாதிசயத்தையும் வெளிப்படுத்தினார்.

தொடரும்...

[right][/center]



பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jun 25, 2012 3:49 am

2. சிலுவை:

மரணமும், தேவனிடமிருந்து நித்தியமாய் பிரிக்கப்படுதலும், மனிதனுடைய பாவத்தின் விளைவாகும். இருப்பினும், இயேசு கிறிஸ்து, 'நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிருந்து எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்தார்" (கொலோசெயர்: 2:14).

மனுக்குலத்திற்காக பாவமில்லாத பலியாக சிலுவையில் மரித்ததன் மூலம் இயெசு கிறிஸ்து நம்முடைய பாவத்திற்கான தண்டனையை செலுத்தித் தீர்த்து நம்மை மறுபடியும் தேவனோடு ஒப்புரவாக்கினார்.

தொடரும்...



பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jun 25, 2012 4:06 am

3. அவருடைய உயிர்த்தெழுதல்:

இயேசு கிறிஸ்துவினுடைய மரணத்திற்குப் பின் அவருடைய சரீர உயிர்த்தெழுதல், பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது (சங்கீதம்: 16:10; அப்போஸ்தலர்: 2:31). ஆனால், அதற்கும் மேலாக இயேசு கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் இரட்சிப்புக்கு அது அடித்தளமாக அமைகிறது (ரோமர்: 10:9,10). கிறிஸ்தவ விசுவாசம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் பற்றிய சத்தியத்தின் அடிப்படையில்தான் எனப் பவுல் உறுதிபடக் கூறுகிறார்.

1கொரிந்தியர்: 15:14-19 ன் படி இயெசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் உண்மையில்லாவிடின்:

- அப்போஸ்தலரின் பிரசங்கம் வீணாயிருக்கும் (வசனம்:14)

- கொரிந்து பட்டணத்தின் விசுவாசிகளின் விசுவாசம் வீணாயிருக்கும் (வசனம்:14)

- அப்போஸ்தலர்களும் பிறரும் பொய் சாட்சிகளாயிருப்பார்கள் (வசனம்: 15)

- கொரிந்திய சபை இன்னமும் பாவத்திலிருப்பார்கள் (வசனம்: 17)

- கிறிஸ்துவை விசுவாசித்தவர்களாய் மரித்தவர்கள், இரட்சிப்பு இல்லாமல் இருப்பார்கள் (வசனம்:18)

- எல்லா மனிதர்களிலும் கிறிஸ்தவர்களே மிகவும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்பார்கள். (வசனம்:19)

மரித்தோரிலிருந்து இயேசு கிறிஸ்து திட்டவட்டமாய் உயிரோடெழும்பியது சுவிசேஷத்தின் முக்கிய பகுதியாயுள்ளது (1கொரிந்தியர்: 15:4; 2தீமோத்தேயு: 2:8).

முழு வரலாற்றிலும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அதன் முக்கியத்துவத்திலும் தனித்தன்மையிலும் தனித்துயர்ந்து நிற்கிறது.

தொடரும்...



பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jun 25, 2012 4:27 am

கீழ்க்கண்ட வேத வாக்கிய உண்மைகள், கிறிஸ்தவின் உயிர்த்தெழுதலின் முக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்ள உதவுகிறது:

அ) இயேசு கிறிஸ்து உண்மையாகவே, முழுவதுமாகவே சரீரத்தில் மரணமடைந்தார். அவர் சாதாரண மயக்கமடையவோ, தற்காலிக செயலிழந்த கோமா நிலையிலோ இருக்கவில்லை. (மாற்கு: 15:44,45; யோவான்: 19:33-35; வெளிப்படுத்தல்: 1:18)

ஆ) இயேசு கிறிஸ்து சரீரத்தில் உயிரோடு எழுப்பப்பட்டார். உயிர்த்தெழுந்த கிறிஸ்து சரீரமற்ற ஆவியோ, ஒரு மாயத் தோற்றமோ அல்ல (லூக்கா: 24:36,39; சங்கீதம்: 16:10; அப்பொஸ்தலர்: 2:31)

இ) இயேசு கிறஸ்து அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின், அவருடைய சரீரத்தில்தானே அநேக சாட்சிகளுக்குக் காணப்பட்டார் (லூக்கா: 24:30-36; யோவான்: 20:19,26; 1:3,21,22; 1கொரிந்தியர்: 15:3-8)

ஈ) அவர் இனி ஒருபோதும் மரிப்பதில்லை. ஏனென்றால், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் தனித்தன்மை வாய்ந்தது. (அப்போஸ்தலர்: 13:34; ரோமர்: 6:9,10; 2தீமோத்தேயு: 1:10; வெளிப்படுத்தல்: 1:18). வேறு சிலர் அற்புதமான விதமாக மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்பட்ட ◌ார்கள். (யோவான்: 11:1-44). ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் புமியில் வாழ்ந்து முடித்த பிறகு தங்கள் சரீரத்தில் மரணமடைந்தார்கள்.

உ) இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், தமது தெய்வத்தன்மையை பற்றிக் கூறியதை நிரபிக்கிறது (மத்தேயு: 12:38-40; யோவான;: 2:18-22; ரோமர்: 1:4)

ஊ) இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் சிலுவையில் அவர் செலுத்திய பலி தேவனாகிய பிதாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் காட்டுகிறது (ரோமர்: 4:25; எபிரேயர்: 9:23-28; 10:11-14).

தொடரும்...



பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Rajenderam
Rajenderam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 24/06/2012

PostRajenderam Mon Jun 25, 2012 4:43 am

வணக்கம் நண்பர் சார்லஸ் அவர்களே, நான் அண்மையில் கிறிஸ்தவத்தின் போதனைக்குள் வந்தவர். பைப்லை ஒரு தடவை முழுதிலும் வாசித்து இயேசு தேவன் இல்லை என்ற
முடிவைக் கொண்டு இருக்கிறேன்!!! உங்கள் பதிவின் படி இயேசுதான் தேவன் என்றால் நீங்கள் மேலே எழுதிய பதிவுகள் அவசியம் அற்றது என்றே கருதுகிறேன் அல்லது இந்த சந்தேகம் யாருக்கும் எழவேண்டிய அவசியம் இருந்து இருக்காது. மற்றும் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் ஆக்கப் பூர்வமாக இருக்கின்றன. தொடர்ந்து வருகின்ற காலங்களில் இதைக் குறித்து விவாதிப்போம். நன்றி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jun 25, 2012 4:52 am

இயேசுவானவர் உயிரோடிருக்கிறார்

இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார். பின்னர் மூன்றாம் நாள் உயிரோடெழுப்பப்பட்டார். நித்தியமாகவும் வல்லமையிலும் மகிமையிலும் ஆளுகை செய்யும் ஒரு உயிரோடிருக்கும் ஒரு இரட்சகரைப் பற்றி மட்டுமே பின் வரும் கருத்துக்கள் உண்மையாயிருக்க முடியும்:

- சபைக்கு கிறிஸ்து எல்லாவற்றிற்கும் மேலான தலையாயிருக்கிறார் (எபேசியர்: 1:19-23)

- பரம பிதாவை நமக்கு எடுத்துக் காட்டும் பிரதான ஆசாரியராகவும் தேவனாகிய பிதாவிடமும் நம்முடைய பிரதிநிதியாகவும் கிறிஸ்து இருக்கின்றார் (ரோமர்: 8:27; எபிரேயர்: 2:17; 3:1; 4;14,15; 5:5-11; 6:20; 7:25,26; 9:11)

- கிறிஸ்து சபைக்கு ஆவிக்குரிய வரங்களைத் தந்திருக்கிறார் (எபேசியர்: 4:8-13)

- கிறிஸ்து "மரித்தோரிலிருந்து எழுந்த முதற் பேறானவர்" (கொலோசெயர்: 1:18) ஆக இருப்பது, அவருடைய இரண்டாம் வருகையின்போது அனைத்து விசுவாசிகளுக்கும் சரீர உயிர்த்தெழுதல் உண்டென உறுதிப்படுத்துவதோடு , மனுக்குலத்தோர் நியாயத்தீர்ப்பின் நாளிலே உயிரோடெழுந்திருப்பர் எனவும் உறுதியாக கூறுகிறது (அப்போஸ்தலர்: 17:31; 26:23; ரோமர்: 8:11; 1கொரிந்தியர்: 15:20-24, 50-52; பிலிப்பியர்: 3:7-11; கொலோசெயர்: 1:18; வெளிப்படுத்தல்:20:11-15).

"கிறிஸ்து மரித்தோரிலிருந்தெழுந்து , நித்திரையடைந்தவர்களில் (மரித்தவர்களில்) முதற்பலனானார் (1கொரிந்தியர்: 15:20). அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழந்தார்! இப்படி கிறிஸ்து மரணத்தை ஜெயித்தினால் அவரோடு நாமும் எழும்பி நித்தியத்தில் ஆளுவோம்.

நாம் கஷ்டம், துக்கம், உபத்திரவத்தின் மத்தியிலும் நாம் நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாயிருப்போம்!

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jun 25, 2012 4:57 am

Rajenderam wrote:வணக்கம் நண்பர் சார்லஸ் அவர்களே, நான் அண்மையில் கிறிஸ்தவத்தின் போதனைக்குள் வந்தவர். பைப்லை ஒரு தடவை முழுதிலும் வாசித்து இயேசு தேவன் இல்லை என்ற
முடிவைக் கொண்டு இருக்கிறேன்!!! உங்கள் பதிவின் படி இயேசுதான் தேவன் என்றால் நீங்கள் மேலே எழுதிய பதிவுகள் அவசியம் அற்றது என்றே கருதுகிறேன் அல்லது இந்த சந்தேகம் யாருக்கும் எழவேண்டிய அவசியம் இருந்து இருக்காது. மற்றும் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் ஆக்கப் பூர்வமாக இருக்கின்றன. தொடர்ந்து வருகின்ற காலங்களில் இதைக் குறித்து விவாதிப்போம். நன்றி

தொடர்ந்து வாசியுங்கள்.

உண்மையை கண்டறியுங்கள்.

நலமானதை பிடித்துக் கொள்ளுங்கள்.

தேவாசீர்வாதம் பெறுங்கள். நன்றி அன்பு மலர்


அதே சமயம் தங்களை முதலில் உறுப்பினர் பகுதியில் சென்று அறிமுகப்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக