புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
3 Posts - 4%
Guna.D
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
1 Post - 1%
mruthun
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
102 Posts - 48%
ayyasamy ram
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
3 Posts - 1%
manikavi
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
2 Posts - 1%
mruthun
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பைரவரை வழிபாடும் முறை  Poll_c10பைரவரை வழிபாடும் முறை  Poll_m10பைரவரை வழிபாடும் முறை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைரவரை வழிபாடும் முறை


   
   
knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Postknesaraajan Sun Jun 17, 2012 8:47 pm

:வணக்கம்: தடைகளை நீக்கும் கால பைரவர்

பைரவர் இல்லாத ஆலயங்களே வடநாட்டில் கிடையாது எனக் கூறும அளவிற்கு பெருமை பெற்றவர் பைரவர் . தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் திரிசூலம் , உடுக்கை, வெட்டிப்பட்ட ஒரு தலை என அனைத்தையும் வைத்திருந்தபடி, உடலெங்கும் வீபுதியை பூசிக்கொண்டு, நாய் மீது அமர்ந்தபடி பயங்கரமாகக் காட்சி
தருகின்றவரை வணங்குவதினால் பல பலன்கள் ஏற்படும் என்பது பெரும்பாலோரது நம்பிக்கை. அவர் மயானத்தில் வசிப்பவராம் , பூதங்களின் அதிபதியாம். சிவபுராணம் மற்றும் லிங்க புராணத்தில் அவரைப் பற்றிய செய்திகள் நிறையவே உள்ளன.


கால பைரவர் அவதரித்த கதை

பைரவர் அவதரித்தது எப்படி என்பது குறித்து கூறப்படும் கதை இது. இந்த கதை ஸ்கந்த புராணத்தில் உள்ளதாகக் கூறுகின்றனர் . பைரவரை கால பைரவர் என்றும் கூறுகின்றனர் . அவருடைய மனைவியின் பெயர் பைரவியாம் . ஒரு முறை பிரும்ம லோகத்தில் அமர்ந்திருந்த தெய்வங்கள் பல விஷயங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தனர் . அப்பொழுது ஒரு தேவதை தெய்வங்களில் மிகவும் உத்தவமானவர் யார் எனக்கேட்க அங்கு அமர்ந்திருந்த பிரும்மா இறுமாப்பு கொண்டு சற்றும் தாமதிக்காமல் இதில் என்ன சந்தேகம் என்னைவிட உத்தவமானவர் எவர் இருக்க முடியும்? என்றார்.

அதைக் கேட்ட மகாவிஷ்ணு கோபம் அடைந்தார் . இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. விவாதம் முடிவிற்கு வராமல் அவர்கள் நான்கு வேதங்களையும் அழைத்து அவற்றின் கருத்தைக் கேட்டனர் . அந்த வேத அதிபதிகளும் சற்றும் தயங்காமல் எவர் தன்னை வேண்டி நிற்கும் பக்தர்களுக்கு உடனே சென்று அருள் பாளிக்கின்றரோ , எவர் மிக சக்தி வாய்ந்தவர் என மக்களால் கருதப்படுகின்றாரோ, எவர் உலகனைத்தையும் ஆட்டுவித்தபடி அமர்ந்திருக்கின்றாரோ அவரே உத்தமமானவர் என்பதினால் , அந்த அனைத்தையும் பெற்றுள்ள சிவபெருமானே அனைவரையும் விட உத்தமமானவர்' எனக் கூறினர் .

அதைக்கேட்ட பிரும்மா இன்னும் அதிக ஆத்திரம் அடைந்து சிவபெருமானுடைய உருவத்தைக் குறித்து கண்டபடி பேசலானார் . ' யார் அந்த சிவன் , உடலெங்கும் சாம்பல் பூசிக் கொண்டு, சடைமுடியுடன் , மயான சாமியர்கள் போல தூசி படிந்த உடலுடன் இருந்து கொண்டு. கழுத்து நிறைய மாலைகளுக்குப் பதில் பாம்புகளை தொங்க விட்டுக்கொண்டு ஒரு மாட் டின் மீது அமர்ந்து கொண்டு சுற்றித் திரிகின்றாரே அவரா என்னை விட மேன்மையானவர் ?' என மேலும் மேலும் ஏசிக் கொண்டே இருக்கையில் கைலாயத்தில் இருந்த சிவன் காதுகளில் அவை அனைத்தும் விழுந்தன.

கொதித்துப் போனார் சிவனார் . விஷ்ணு மற்றும் பிற கடவுட்களும் தேவதைகளும் பிரும்மா உரத்த குரலில் சிவனைப் பற்றி ஏசிக்கொண்டிருந்ததைக் கேட்டு பிரமித்து நிற்கையில் , அவர்கள் முன் ஒரு பெரும் சப்தத்துடன் கூடிய ஒளி வெள்ளம் தோன்றியது. அதன் இடையே ஒரு மனிதன் தோன்ற பிரும்மா அவரைப் பார்த்துக் கத்தினார் ' ஏய் , நீ யார் , இங்கு எங்கே வந்தாய் ?'. அந்த மனிதன் உடனடியாக ஒரு குழந்தை உருவில் மாறி அழத்துவங்கியது. அதைக்கண் ட பிரும்மா இன்னமும் இறுமாப்புடன் ' ஏ குழந்தாய், நீ என் தலையில் இருந்து முளைத்திருக்கின்றாய் , இப்போது என்னை நீ சரணடைந்து அழுவதினால் உனக்கு ருத்திரா எனப்பெயர் தருகின்றேன் . நீ சென்று உலகைப் படைக்கத் துவங்கு, அழுவதை நிறுத்தி விட்டு என்னிடம் ஓடிவா. நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன் என்றார் .

அவ்வளவுதான் அந்த குழந்தை உடனடியாக ஒரு பயங்கரமான உருவம் கொண்டவராக மாறி அவர் எதிரில் நிற்க மீண்டும் பிரும்மா கூறினார் , 'ஏ மனிதா, இப்படிப்பட்ட பயங்கரமான முகத்துடன் வந்து நிற்கும் உன்னை காலத்தைக் காக்கும் மனிதனாக நியமித்து உன் பெயரை காலபைரவர் என மாற்றுகின்றேன். நீ மக்களுடைய பாபங்களை ஏற்றுக் கொண்டு, தீயவர்களை அழிப்பாய். இறந்தவர்கள் மோட்சம் அடையச் செல்லும் காசி நகரத்திற்கு நீ சென்று காசிராஜனாக இருந்து கொண்டிருந்து சித்திரகுப்தன் கூட கணக்கெடுக்க முடியாமல் உள்ள பாபங்களைக் போக்கிடுவாய்' என ஆசிர்வதித்தார் .

அதுவரை அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்த பயங்கர உருவில் இருந்த சிவனார் துள்ளி எழுந்தார் , பிரும்மாவின் ஐந்து தலைகளில் தன்னை ஏசிய ஒரு தலையை நகத்தினால் கீறி துண்டித்து எடுத்து தன் கைகளில் ஏந்தினார் . தன் சுய உருவைக் காட்டி, ' ஓபிரும்மனே உன்னுடைய எந்த தலை என்னை நிந்தித்து பாபத்தைப் பெற்றதோ அந்த தலையை பைரவர் அழித்து விட்டார்' எனக் கூற அப்பொழுதுதான் பிரும்மா மற்றும் அனைவருக்கும் புரிந்தது வந்துள்ளவர் சிவபெருமானே. அவரே தன் ஒரு ரூபமாக பைரவரை தோற்றுவித்துள்ளார் .
ஆலயங்களில் கால பைரவர்
தம்முன் நின்ற சிவபெருமானை அனைவரும் வணங்கினர் . அடுத்து தன்னால் தோற்றுவிக்கப்பட்ட பைரவரிடம் சிவபெருமான் கூறினார் 'நீ பிரும்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை துண்டித்ததினால் ஏற்பட்டுள்ள பாபத்தைத் தொலைக்க, அந்த தலையை பைரவர் உருவில் ஏந்தியவண்ணம் உலகெங்கும் சுற்றிக் கொண்டு பிட்சை பெற்றுக் கொண்டவண்ணம் காசியை அடைந்து அந்த பாபத்தைத் தொலைக்க வேண்டும்' எனக் கூறினார் . அவர் அப்படிக் கூறிய மறுகணமே மற்றொரு பயங்கர முகத்தைக் கொண்ட இரத்தம் கக்கிக் கொண்டு இருந்த பெண் அங்கு தோன்றினாள் . அவளிடம் சிவபெருமான் கூறினார் ' நீ பைரவர் பின்னால் அவரை பயமுறுத்திக் கொண்டே துரத்திச் சென்றவண்ணம் இருக்க வேண்டும் . அவர் காசியை அடைந்ததும் அவரை பயமுறுத்துவதை நிறுத்திவிட் டு சென்று விட வேண்டும் . உன்னால் காசியில் பிரவேசிக்க முடியாது' என்றார் .

பைரவரும் கபால ஓட் டையும் , பிரும்மாவின் தலையையும் எடுத்துக் கொண்டு மூவுலகமும் சுற்றிய வண்ணம் பிட்சை எடுத்தார் . கடைசியாக அவர் காசியில் நுழைந்ததும் அவர் கையில் இருந்த கபாலம் கீழே விழுந்து உடைய, அவரைத் துரத்திக் கொண்டு சென்ற பெண்ணும் மறைந்து போனாள். இந்த நிகழ்சிதான் காசிக்குச் சென்றால் கபால மோட்சம் கிடைக்கும் என்ற பழமொழி தோன்றக் காரணமாக அமைந்தது. அதன்படிதான் இறந்தவர்களின் சுற்றத்தினர் காசிக்குச் சென்று சிரார்தம் செய்து இறந்தவருக்கு மோட்சம் கிடைக்க காசியை பாதுகாக்கும் காவலராக தன்னை நியமித்துக் கொண்டு உள்ள பைரவரின் அருளைப் பெற்று வருகின்றனர் .
கால பைரவர் பெருமை
அவரை முறையாக வணங்குவதின் மூலம் தீராத விவகாரங்கள் முடிவிற்கு வரும், வெளியூர்களுக்குப் போகும் முன் அவரிடம் வேண்டிக் கொண்டு சென்றால் தடங்கல் அற்ற பயணம் கிடைக்கும் , தொல்லைகள் விலகும், எதிரிகள்நாசம் அடைவர் , சண்டை சச்சரவுகள் குறைகின்றன, திருடர்கள் பயந்து ஓடுவர் , தீய ஆத்மாக்களின் ஆக்ரமிப்புக்கள் விலகும் , பேய் , பிசாசுகளின் தொந்தரவு இருக்காது, வழக்குகளில் வெற்றி கிடைக்கும் என பலவிதங்களில் நம்பப் படுகின்றது. சிவபெருமானின் அவதாரம் அவர் . தான் குடிகொண்டு உள்ள ஆலயங்களைக் காப்பவர் என்ற பெருமைகளையும் பெற்றவர் அவர் . யாகம் ஹோமங்கள் , திருமணம் மற்றும் அனைத்து சுப காரியங்களிலும் பைரவர் பூஜையும் இடம் பெறுகின்றது. உணவு அருந்தும் முன் ஓதப்படும் மந்திரங்களில் காலபைரவர் கண்டிப்பாக இடம் பெறுகின்றார் . தந்திர மந்திர பூஜைகளில் வினாயகப் பெருமானுக்கும் காலபைரவருக்கும் முக்கிய பூஜைகள் செய்வதே சிறப்பு என பண்டிதர்கள் கூறுகின்றனர் .


சாய் பாபா அருளிய பரிகார முறை :

பைரவரை வழிபாடும் முறை :


தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்

சனி கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்

திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் விளக்கு போடலாம்

உங்கள் பிரார்த்தனை நிறைவடைந்த பிறகு பைரவருக்கு கடைசி சனி கிழமையாக வடை மாலையும் , தயிர் சாதமும் நிவேதனமாக படைத்தது உங்கள் பூஜையை நிறைவு செய்ய வேண்டும்

தகவல் : சாய் பாபா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக