புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
31 Posts - 44%
jairam
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
2 Posts - 3%
சிவா
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
1 Post - 1%
Manimegala
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
13 Posts - 4%
prajai
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
9 Posts - 3%
Jenila
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
4 Posts - 1%
jairam
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாசுமிகு சென்னை !


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jun 14, 2012 6:07 pm

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்திலிருந்து வந்த ஓர் ஆய்வர் குழு 1998 முதல் 2006 வரை சென்னையின் வளிமண்டலத்தை ஆய்வு செய்தது.

சென்னைவாசிகளில் பலர் குண்டாயிருப்பதற்கு அரிசி உணவு, கொழுப்பு நிறைந்த துரித உணவு, இருக்கையைவிட்டு எழாத பணியாற்றல், உடற்பயிற்சியின்மை போன்ற காரணிகளுடன் மாசடைந்த காற்றுடன் பல வகையான ரசாயன ஆவிகளையும் சேர்த்துச் சுவாசிப்பதும் ஒன்றாக இருக்கலாமென்று அவர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.

டீசல் புகையில் இடம்பெறும் பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்கள் வகை ஆவிகள் சிறு குழந்தைகளின் உபரியான பருமனுக்குக் காரணமாக இருக்கலாம்.

பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்கள் வகை ஆவிகள் டீசல் வாகனங்களிலிருந்து பெருமளவு வெளிப்படுகின்றன. விறகு, மரக்கரி, சிகரெட் ஆகியவை எரியும்போதும் அவை தோன்றுகின்றன.

2011 ஆம் ஆண்டில் சென்னைக் காற்றில் கனமீட்டருக்கு 325.7 முதல் 790.8 நானோ கிராம் வரை பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. இது கவலைப்பட வேண்டிய கணக்கு. சென்னையில் ஐம்பது விழுக்காடு வாகனங்கள் டீசலில் ஓடுகின்றன.

பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்கள் ஆவிகள் மண்ணிலும் நீரிலும் எளிதாக உட்கவரப்பட்டு விடும். எனவே அவற்றின் வெளியீட்டை உடனடியாகக் குறைக்க வேண்டிய அவசியம் தோன்றியுள்ளது.

பிளாஸ்டிக்குகளை எரிக்கும்போது வெளிப்படும் பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்கள், டையாக்சின், எளிதில் சிதையா கரிம ஆவிகள் போன்றவை கணைய செல்களை அழித்து உடல் பெருத்தல், நீரிழிவு ஆகியவற்றால் நகரவாசிகள் பீடிக்கப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. சிறு குழந்தைகளையும் இவை பீடிப்பதற்கு வாய்ப்புள்ளது எனச் சென்னை நீரிழிவு ஆய்வு நிறுவனத்தின் மருத்துவர் மோகன் கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே அதிகமான உடல்நலக் குறைவு உள்ளவர்களாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள சென்னை நகரப் பள்ளி மாணவர்கள் உடல் பருமனுடனும் நீரிழிவுடனும் தொடர்புள்ள உடல் அழற்சிகளால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றுக்கு வளிமண்டல மாசுகள் பொதுவான காரணியாக உள்ளன.

அன்றாட வாழ்வில் கையாளப்படும் பொருள்களில் உள்ள பல ரசாயனங்கள் ஹார்மோன்களைப்போல நடித்து உயிரினங்களில் கோரமான உருக்குலைவுகளை உண்டாக்கி வருகின்றன. நெற்றியில் ஒற்றைக் கண்ணுடன் ஆடு பிறந்ததாக அண்மையில் செய்தி வந்தது நினைவிருக்கலாம்.

பரவலாகப் பயன்படுத்தப்படுகிற ஒரு களைக்கொல்லி பெண்மை ஹார்மோனைப்போல நடித்து ஆண் விலங்குகளில் பெண்மைத் தன்மையை உண்டாக்குகிறது.
பிளாரிடாவில் உள்ள ஓர் ஏரியில் பிறக்கும் ஆண் அலிகேட்டர் முதலைக் குட்டிகளின் ஆண் குறிகளின் நீளம் வரவரக் குறைந்துகொண்டே வருவதற்கு இத்தகைய ரசாயனங்களே காரணம் என்று ஆய்வர்கள் கருதுகிறார்கள்.

மற்ற நீர்நிலைகளில் ஆண் தவளைகளில் பெண் உறுப்புகள் உருவானதற்கும் ஆண் மீன்கள் முட்டையிடத் தொடங்கியதற்கும் நீரில் கலக்கும் ஹார்மோன் போலிகளே காரணம் என்கிறார்கள்.
இந்த வகை வேதிகள் மனிதர்களையும் பாதிக்கத் தொடங்கிவிட்டன. முலைப் புற்றுநோய், கருத்தரியாமை, விந்தணுக்குறைவு, இனப்பெருக்க உறுப்புகளில் ஊனம், மிகச் சிறு வயதிலேயே பூப்படைதல், நீரிழிவு, உடல் பெருத்தல் போன்றவை இத்தகைய பாதிப்புகளில் சில.

ஆண் சிசுக்களின் ஆண் குறியில் சிறுநீர் வெளிப்படும் துளை முனையில் அமையாமல் அடிப்பகுதியில் அமைந்து விடுகிற பிறவிக்குறைபாடு கடந்த சில ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்திருப்பதாக பிலிப் லான்ட்ரிகன் என்ற குழந்தை நல மருத்துவர் அமெரிக்காவில் செய்த ஆய்வுகள் காட்டுகின்றன.

ஹார்மோன்களின் உற்பத்தி, அளவு, தரம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான நாளமில்லாச் சுரப்பி அமைப்பைச் சீர்குலைக்க வல்ல சில வேதிகளின் பேரில் அவர் குற்றம் சாட்டுகிறார்.
துரதிருஷ்டவசமாக இத்தகைய வேதிகள் எதிர்ப்படாத இடமேயில்லை. தானியங்கிப் பணம் வழங்கும் கருவிகள், கடைகளில் பில் அச்சிட்டுத் தரும் கருவிகள், மின்னிதய வரைவிகள், மின் மூளை வரைவிகள் போன்றவை சூடு காட்டி அச்சிடும் முறையைப் பயன்படுத்துகின்றன. அவற்றில் பயன்படுத்தப்படும் மெழுகுக் காகிதங்களில் ஹார்மோன் போலி வேதிகள் உள்ளன.

கவர்ச்சியான வண்ணங்களில் அச்சிட்ட உணவு டப்பிகளிலும் அட்டைப் பெட்டிகளிலும் பயன்படுத்தப்படும் அச்சு வர்ணங்களிலும், சாயங்களிலும், ஒப்பனைப் பொருள்கள், பிளாஸ்டிக்குகள் எனப் பல பொருள்களிலும் இந்த வேதிகள் உண்டு.

அண்மைக்காலங்களில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ரத்தம், சிறுநீர், முலைப்பால், தொப்புள் கொடித் திரவம் போன்றவற்றில் இந்த வேதிகளின் இருப்பு அதிகமாவதாகத் தெரிய வந்திருக்கிறது.
அமெரிக்காவிலுள்ள நாளமில்லாச் சுரப்பி ஆய்வுச் சங்கம் உண்பொருள் பொதியப்படும் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் அச்சு மைகளில் உள்ள பிஸ்பீனால் - ஏ என்ற வேதி நாளமில்லாச் சுரப்பிகளைக் குலைப்பதாக அறிவித்தபின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அதைத் தடை செய்ய முனைந்துள்ளது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இவ்வாறான நாளமில்லாச் சுரப்பிக் குலைப்பான்களை உடனடியாகத் தடை செய்யக் கோரி "சயின்ஸ்' என்ற சஞ்சிகையில் பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.

அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் வெளித்தெரிய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகும் என்பது அவற்றின் அபாய அளவை அதிகரிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வரை கருச் சிதைவதையும் மசக்கைக் கோளாறுகளையும் தடுப்பதற்காகக் கருத்தரித்த பெண்களுக்கு டிஇஎஸ் என்ற செயற்கை ஈஸ்ட்ரோஜன் போலி ஹார்மோன் பரவலாகப் பரிந்துரைக்கப்பட்டு வந்தது.

அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தியதாக அப்போது தெரியவில்லை. ஆனால், அப்பெண்களுக்குப் பிறந்த பெண் குழந்தைகள் வளர்ந்த பிறகு, பெண்குறி மற்றும் முலைப் புற்றுநோய்களால் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்ட பின் இப்போது அந்த மருந்து தடை செய்யப்பட்டு விட்டது.
உடலில் ஹார்மோன் செறிவு நுண்ணிய அளவுகளில் ஏறி இறங்கினாலும் தாயின் வயிற்றில் வளரும் சிசுவின் உடலில் பாதிப்பு ஏற்படும் என்பது நீண்டகாலமாகவே அறியப்பட்டிருப்பதுதான்.
எடுத்துக்காட்டாகக் கருப்பையில் ஒன்று ஆணாகவும் மற்றது பெண்ணாகவும் இரட்டைக் குழந்தைகள் தோன்றியிருக்குமானால் ஆண்மைக்கான ஹார்மோன்களில் சில பெண் சிசுவின் உடலிலும் ஊடுருவும். அந்தச் சிசு லேசான ஆண்மைக்கூறுகள் உள்ளதாக வளரும்.

பிற்காலத்தில் அவள் ஆண்களைப் போன்ற முரட்டுத்தனமும் பரபரப்புத் தேடும் குணமும் பெற்றுவிடக் கூடும். ஆனால், அவர்களுக்கு ஆண்களைவிடக் குறைவான அளவிலேயே உணவு மண்டலக் கோளாறுகள் ஏற்படும்.

டஊஞஅ என்ற நாளமில்லாச் சுரப்பிக் குலைப்பான் உடலில் அதிகமாகச் சேர்ந்துவிட்ட, கருவுற்ற பெண்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகள் பிற்காலத்தில் அதிகமான உடல் பருமனுள்ளவர்களாக மூன்று மடங்கு அதிகமாக வாய்ப்புள்ளது.

இந்த வேதி மைக்ரோ அவனில் சோளப் பொறி தயாரிக்க உதவும் பிளாஸ்டிக் உறைகள் முதல் தரை விரிப்புகளைச் சுத்தம் செய்ய உதவும் கரைசல்கள் வரையான பல வீட்டு உபயோகப் பொருள்களில் இடம்பெறுகிறது.

நாளமில்லாச் சுரப்பிக் குலைப்பான்களும் இதேபோன்ற நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அவற்றின் தீய விளைவுகளைப் பற்றிய ஆய்வுகள் மூலம் கணிசமான தகவல்கள் திரட்டப்பட்டு அபாய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

வேதி ஆய்வு முறைகளிலும் பத்திரமான அளவை நிர்ணயிக்கும் முறைகளிலும் பல அடிப்படையான அபிவிருத்திகள் தேவைப்படுகின்றன. அவற்றுக்கான நடவடிக்கைகள் அமெரிக்காவிலேயே இன்னமும் முழுமையாகத் தொடங்கப்படவில்லை என்கிறபோது நம் நாட்டைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?

(நன்றி - கே.என். ராமசந்திரன் - தினமணி )

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jun 14, 2012 6:14 pm

பயனுள்ள பகிவிற்கு நன்றி அருமையிருக்கு



செந்தில்குமார்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 14, 2012 6:28 pm

மிகவும் நன்று...தொடருங்கள் சாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jun 15, 2012 10:55 am

அதிர்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 15, 2012 11:13 am

பயனுள்ள பதிவு சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 15, 2012 11:38 am

பகிர்வுக்கு நன்றி சாமி.

மனித மனங்களில் தேங்கிய மாசினையும் நாம் அப்புறப் படுத்த முயல வேண்டும்.




வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun Jun 24, 2012 3:50 pm

பயனுள்ள பதிவு ..நன்றி .ஒரே தற்காலிக தீர்வு ,CNG வாயு பொருத்திய வாகனகள் மற்றும் அதிகமாக பொது போக்குவக்ரத்து வாகனங்களை பயன் படுத்துவது ஓரளவுக்கு நன்மை தரும் . மேலும் புகைவண்டி சேவை ஒரு நல்ல தீர்வாக இருக்கும் ..

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 24, 2012 8:58 pm

ஒரே வரியில் சொல்லவேன்டுமென்றால் மக்களுக்கு அது இல்ல, எது?
சாலையில் சென்றால் ரோடு சென்ஸ்,
மருத்துவமணை சென்றால் காமன்சென்ஸ்
வீட்டு குடியிருப்புகளில் இருப்பவர்கள் ஆக்குவார்கள் ரோட்டை நான்சென்ஸ்
வேலையில் இருப்பவர்கள் செய்வார்கள் நியூசென்ஸ்
மொத்தத்தில் அது இல்லை, எது?

எது எங்க இருக்கனுமோ? அது?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக