புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐந்திணைப் பெயர் மூலம்..............
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மொழி ஞாயிறு .தேவநேயப்பாவாணர் உலகறிந்த வேர்ச்சொல் ஆய்வாளராவார்.இவர் தம் வாழ்நாளில் தமிழ் மொழியின் தொன்மை,தனிச்சிறப்பு ஆகியவற்றை தம் படைப்புக்கள் வாயிலாக எடுத்தியம்பினார். இவரின் பல்வேறு நூல்களும் தமிழ் இணையப்பல்கலைக்கழக் நூலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவற்றை அவ்விணையதளம் தரும் டேப் என்னும் எழுத்துரு கொண்டே படிக்க இயலும் என்பது ஒரு குறைபாடாக உள்ளது.தமிழ் இணையப்பல்கலைக்கழகம் யுனிகோடு முறைக்கு மாறினால் தமிழுலகம் மேலும் பயன் பெறும்.
தமிழர் வரலாறு என்னும் நூல் பாவாணர் படைப்புகளில் ஒன்றாகவுள்ளது.இந்நூலில்
ஐந்திணைப்பெயர் மூலம் பற்றி வேர்ச்சொல் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள கருத்து தமிழுலகம் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகவுள்ளது. முதல், கரு, உரி என்ற அடிப்படையிலேயே சங்கப்பாடல்களைப் பார்த்த நமக்கு வேர்ச்சொல் அடிப்படையிலான கருத்து புதுமையாகவுள்ளது.அதனைக் கீழே காணலாம்.
ஐந்திணைப்பெயர் மூலம் குறிஞ்சி
குறி = அடையாளம், காலம், அளவு, தடவை.
குறி - குறிஞ்சி = ஒரு பல்லாண்டுக்காலஅளவைக் குறிக்கும் பூ, அப் பூப்பூக்கும் செடி, அச்செடி இயற்கையாக வளரும் மலை, மலையும் மலை சார்ந்தஇடமும், மலைநாடு.
ஒ.நோ: நெரி - நெரிஞ்சி - நெருஞ்சி.
கோடைக்கானல் மலையிலும்நீலமலையிலும் உள்ள குறிஞ்சிச் செடிகள்,பன்னீராண்டிற் கொருமுறை பூக்கின்றன. நீலமலையிலுள்ள தொதுவர் (தோடர்), குறிஞ்சி பூக்குந்தடவையைக் கொண்டே தம் அகவையைக் கணக்கிட்டுவந்தனர். குமரிநாட்டுக் குறிஞ்சிநில வாணரும்இங்ஙனமே செய்திருத்தல் வேண்டும்.
ஆங்கிலேயர், இந்தியா முழுதுமுள்ளகுறிஞ்சிச்செடிகளை யெல்லாம் ஆய்ந்து, குறிஞ்சிவகைகள் மொத்தம் 46 என்றும், அவை பூக்கும்காலவிடையீடு ஓராண்டு முதல் 16 ஆண்டுவரை பல்வேறுஅளவுபட்டதென்றும், கண்டறிந்திருக்கின்றனர்.குமரிநாட்டில் எத்தனைவகை யிருந்தனவோ அறியோம்.
முல்லை
முல் - முன் - முனை = கூர்மை, கடலிற்குள்நீண்டுசெல்லும் கூரிய நிலப் பகுதி.
முல் - முள் = 1. கூர்மை. "முள்வாய்ச்சங்கம்" (சிலப். 4:78). 2. கூரிய நிலைத்திணையுறுப்பு. "இளைதாக முண்மரங் கொல்க" (குறள். 879).3. ஊசி. 4. பலாக்காய் முனை.
முள் - முளை = கூரிய முனை. "முள்ளுறழ்முளையெயிற்று" (கலித்.4)
தனிநிலைக் காண்டம் 101
________________________________________
முல்-முல்லை=கூரிய அரும்புவகை, அஃதுள்ளகொடி, அக் கொடி வளரும் காடு, காடும் காடு சார்ந்தஇடமும். "முல்லை வைந்நுனை தோன்றவில்லமொடு" (அகம். 4:1).
என்பதில், முல்லையரும்பை வைந்நுனைஎன்று அதன் கூர்மையைச் சிறப்பித்திருத்தல்காண்க. வை = கூர்மை.
பாலை
பால் - பாலை = இலையிற் பாலுள்ளசெடியுங்கொடியும் மரமுமான பல்வேறு நிலைத்திணையினங்கள், அவை (முது) வேனிலில் தழைக்கும்நிலப்பகுதி, குறிஞ்சி நிலத்திற்கும் முல்லைநிலத்திற்கும் இடைப்பட்ட வறண்ட காடு, மாரியில்தழைத்தும் கோடையில் வறண்டும் இருக்கும்வன்னிலம்.
பகல் (பகுப்பு) என்னும் சொல்லின்மரூஉத் திரிபான பால் என்னும் வகைப்பெயர்க்கும்,பாலை என்னும் நிலைத்திணைப் பெயர்க்கும்தொடர்பில்லை.
மருதம்
மல் = வளம். "மற்றுன்றுமாமலரிட்டு" (திருக்கோ.178)
மல் - மல்லல் = 1. வளம் ."மல்லல்வளனே." (தொல்.788). 2. அழகு. "மல்லற்றன்னிறமொன்றில்" (திருக்கோ.58, பேரா.) 3.பொலிவு(சூடா.).
மல் - மல்லை = வளம். "மல்லைப்பழனத்து" (பதினொ. ஆளுடை. திருவுலா.8).
மல் - (மர்)-மருது=ஆற்றங்கரையும்பொய்கைக்கரையும் போன்ற நீர்வளம் மிக்கநிலத்தில் வளரும் மரம்.
ஒ.நோ: வெல் - வில்-(விர்) - விருது =வெற்றிச் சின்னம்.
"பருதி.....விருது மேற்கொண்டுலாம்வேனில்" (கம்பரா. தாடகை.5)
மருது - மருதம் = பெரிய மருது, மருது, மருதமரம் வளரும் நீர்வள நிலம், வயலும் வயல் சார்ந்தஇடமும், நீர்வளமும் நிலவளமும் மிக்க அகநாடு.
"அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத்
துறையணி மருது தொகல்கொள வோங்கி" (அகம். 97)
"வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரின்" (புறம்.52)
"பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
தேங்கொண் மருதின் பூஞ்சினை முனையின்
காமரு காஞ்சி துஞ்சும்
ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே." (புறம்.351)
"மருதுயர்ந் தோங்கிய விரிபூம்பெருந்துறை" (ஐங்.33)
"கரைசேர் மருத மேவி" (ஐங்.74)
"திசைதிசை தேனார்க்குந் திருமருதமுன்றுறை" (கலித்.27)
"மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்
மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு" (பதிற்.23)
"வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை" (சிலப்.14:72)
"......................................................காவிரிப்
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த" (குறுந்.258)
இம் மேற்கோள்களிலெல்லாம்,மருதமரம் ஆற்றையும் பொய்கையையும் வயலையுமேஅடுத்திருந்ததாகக் கூறப்பட்டிருத்தல் காண்க.
நெய்தல்
நள்ளுதல் = 1. அடைதல்."உயர்ந்தோர் தமைநள்ளி" (திருவானைக்.கோச்செங்.25). 2. செறிதல். "நள்ளிருள்யாமத்து" (சிலப்.15:105).3. கலத்தல், பொருந்துதல்.4.நட்புச்செய்தல். "நாடாது நட்டலின்கேடில்லை" (குறள்.761) நள்ளார் = பகைவர்.
நள் - நண். நண்ணுதல் = 1.கிட்டுதல்."நம்பனையுந் தேவ னென்று நண்ணுமது"(திருவாச.12:17). 2.பொருந்துதல். 3.நட்புச் செய்தல்.நண்ணுநர் = நண்பர் (பிங்.). நண்ணார் = பகைவர்."நண்ணாரும் உட்குமென் பீடு" (குறள்.1088)
நள் - நளி. நளிதல் = 1. செறிதல்."நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்"(மலைபடு.197). 2. ஒத்தல். "நாட நளிய நடுங்கநந்த" (தொல்.1232)
நள் - நௌ¢ - நெய். நெய்தல் = 1.தொடுத்தல். "நெய்தவை தூக்க" (பரிபா.19:80). 2.ஆடை பின்னுதல். "நெய்யு நுண்ணூல்" (சீவக.3019).3.ஒட்டுதல்.
நெய் = ஒட்டும் பொருளாகிய உருக்கினவெண்ணெய். "நீர்நாண நெய்வழங்கியும்"(புறம்.166:21).2. வெண்ணெய். "நெய்குடை தயிரினுரையொடும்" (பரிபா.16:3).3. எண்ணெய்."நெய்யணி மயக்கம்"
(தொல்.பொருள்.146).4.புனுகுநெய். "மையிருங் கூந்தல்நெய்யணி மறப்ப" (சிலப்.4:56). 5. தேன்."நெய்க்கண் ணிறாஅல்" (கலித்.42). 6.அரத்தம்."நெய்யரி மற்றிய நீரெலாம்"(நீர்நிறக்.51).7.கொழுப்பு. "நெய்யுண்டு"(கல்லா.71).8. நேயம், நட்பு. "நெய்பொதிநெஞ்சின் மன்னர்" (சீவக.3049).
நெய் - நேய் - நேயம் = 1. நெய் (பிங்.).2. எண்ணெய் (பிங்.). 3.அன்பு. "நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்து" (திருக்கோ.39).4.தெய்வப் பற்று. "நேயத்தே நின்ற நிமலனடிபோற்றி" (திருவாச.1:13)
நேயம்-நேசம்= 1.அன்பு. "நேசமுடையவடியவர்கள்" (திருவாச.9:4) .2. ஆர்வம்."வரும்பொரு ளுணரு நேசம்" (இரகு. இரகுவு.38).
நேசம்-நேசி. நேசித்தல். 1. அன்புவைத்தல். "நேசிக்குஞ் சிந்தை" (தாயு.உடல்பொய்.32).2. மிக விரும்புதல்.
"நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்" (தாயு. பரிபூர.13).
நெய் - நெய்தல் = நீர் வற்றியகாலத்திலும் குளத்துடன் ஒட்டியிருக்கும் செடிவகை,அச் செடி வளரும் கடற்கரை நிலம், கடலும் கடல்சார்ந்த இடமும்.
"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு" (மூதுரை,17)
என்பதை நோக்குக.
பண்டைக்காலத்தில், இடப்பெயர்கள்பெரும்பாலும் நிலைத் திணைச் சிறப்புப்பற்றியேஏற்பட்டன.
எ-டு :
ஊர்ப்பெயர் - தில்லை, ஆலங்காடு,பனையூர், நெல்லூர், விராலிமலை, காஞ்சிபுரம்.
நாட்டுப்பெயர்- ஏழ்தெங்கநாடு,ஏழ்குறும்பனை நாடு.
பெருந்தீவுப் பெயர்- நாவலந்தீவு,இலவந்தீவு, தெங்கந்தீவு.
ஒவ்வொரு பெருந்தீவும் பொழில்(சோலை) என்றும் பொதுப் பெயர் பெற்றது. இதனால்,உலகமும் பொழிலெனப்பட்டது.
"ஏழுடையான் பொழில்" (திருக்கோ.7)
குறிஞ்சி முல்லை முதலிய ஐந்திணைநிலப்பெயர்களும், அவ்வந் நிலத்திற்குரியகருப்பொருளும் தட்பவெப்பமும்பற்றியநிலைமையையும், உரிப்பொருள் என்னும் புணர்தல்இருத்தல் முதலிய மக்கள் காதலொழுக்க வகையையும்,இருமடி ஆகுபெயராய்க் குறிக்கும். இவ்வகையிலேயே,
"பாலை நின்ற பாலை நெடுவழி" (சிறுபாண்.11)
"முல்லை சான்ற முல்லையம் புறவின்" (சிறுபாண்.169)
"மருதஞ் சான்ற மருதத் தண்பணை" (சிறுபாண்.186)
என்னும் அடிகளில், முன்னிற்கும்திணைப்பெயர்கள் அமைகின்றன. குறிஞ்சி முல்லைபாலை மருதம் நெய்தல் என்பன, பண்ணுப் பெயர்களாய்அமைவதும் இம் முறையிலேயே.
மேற்காட்டிய சிறுபாணாற்றுப்படையடிகட்கு, "பாலைத் தன்மை நிலைபெற்றமையாற்பிறந்த பாலைநிலமாகிய தொலையாத வழி";"பாலைத் தன்மையாவது, காலையும் மாலையும்நண்பகலன்ன கடுமை கூடிச் சோலை தேம்பிக் கூவல்மாறி, நீரும் நிழலுமின்றி நிலம்பயந் துறந்து,புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம்பெறுவதொரு காலம்" என்றும்;
"கணவன் கூறிய சொற்பிழையாதுஇல்லிருந்து நல்லறஞ் செய்து ஆற்றியிருந்ததன்மையமைந்த முல்லைக்கொடி படர்ந்தஅழகினையுடைய காட்டிடத்து" என்றும்;
"ஊடியுங் கூடியும் போகநுகருந்தன்மையமைந்த மருதநிலத்திற் குளிர்ந்தவயலிடத்து" என்றும்;
நச்சினார்க்கினியர் உரைகூறியிருத்தலைக் காண்க.
இங்ஙனமே, மதுரைக்காஞ்சியிலும்,ஐந்திணை நிலப் பெயர் களும் அவற்றிற்குரியஉரிப்பொருளை ஆகுபெயராகவுணர்த்து கின்றன.
மருதஞ் சான்ற = ஊடலாகியஉரிப்பொருளமைந்த.
முல்லை சான்ற = இருத்தலாகியஉரிப்பொருளமைந்த.
குறிஞ்சி சான்ற = புணர்ச்சியாகியஉரிப்பொருளமைந்த.
பாலை சான்ற = பிரிவாகியஉரிப்பொருளமைந்த.
நெய்தல் சான்ற = இரங்கலாகியஉரிப்பொருளமைந்த.
குறிஞ்சி முதலிய ஐந்திணைப்பெயர்களும் நிலைத்திணையைக் குறிக்கும்போது,மருதம் பாலை என்பன இயற்பெயரும், குறிஞ்சி முல்லைஎன்பன சினையாகுபெயரும், நெய்தல் என்பதுதொழிலாகு
பெயரும் ஆகும்.
ஐந்தும் முன்பு நிலத்தைக்குறித்துப் பின்பு நிலவொழுக்கத்தைக்குறிக்கும்போது, மருதம் பாலை என்பன இருமடியாகுபெயரும் ஏனைய மும்மடி யாகுபெயரும் ஆகும்.
இடத்தின் பெயர் இடவொழுக்கத்தைக்குறிப்பது, கும்ப கோணம் பண்ணிவிட்டான் என்னுங்கொச்சை வழக்குப் போன்றது.
நிலவொழுக்கத்தின் பெயரேநிலத்தைக் குறித்தது என்று சொல்வது, தோகைஎன்னும் பெயர் முதலிற் பெண்ணையே குறித்துப்பின்னர் மயிலுக்காயிற்று என்று சொல்வதொத்ததே.
காதலர் இருவரின் மணவாழ்க்கை, தெய்வஏற்பாட்டால், ஒரோவழி பெற்றோர்க்கும்மற்றோர்க்கும் தெரியாத களவொழுக்க மாகத்தொடங்குவது முண்டு. அது இருமாதத்திற்குள்வெளிப்பட்டு விடும். அதன் பிற்பட்ட வெளிப்படையொழுக்கம் கற்பெனப்படும். மணவாழ்க்கை ஆயிரங்காலத்துப் பயிராதலால், தமிழர் களவொ ழுக்கம்ஆரியர் கூறும் அற்றைப் புணர்ச்சியான யாழோர்(கந்தருவர்) மணமன்று; நல்லாசிரியரிடம்கல்லாதவரும் அயல்நாட்டாரும் கருதுகின்றவாறு,இல்வாழ்க்கை யேற்படாத அநாகரிகக் காலத்துக்காமப் புணர்ச்சியு மன்று.
கற்பில் தொடங்கும் மணவாழ்க்கையேபெரும்பான்மை; களவில் தொடங்குவது மிகமிகச்சிறுபான்மை. கற்பாகத் தொடராத களவு இழிந்தோரொழுக்கமெனப் பழிக்கப்படுவது. இறைவன் ஏற்பாடும்இன்பமிகுதியும் களவின் சிறப்பியல்புகள்.
காதலர் வாழ்க்கை தொடக்கம்முதல்முடிவுவரை நானூறு துறைகளாக வகுக்கப்பட்டு, கோவைஎன்னும் நாடகமாகக் கூறப்பெறும். இது வடவர் கூறும்காமநூலன்று. இம்மை யின்ப விருப்பினர்க்குநுகர்ச்சியால் உவர்ப்பு விளைவித்தும், உலகப்பற்றற்றவர்க்கு உவமை காட்டியும், சிற்றின்பச்செய்தி வாயிலாக மக்களைப் பேரின்பத்திற்குவழிப்படுத்த வேண்டுமென்பதே முதனூலாசிரியர்நோக்கம். இதை மாணிக்கவாசகர் உணர்ந்தேஇறுதியில் திருச்சிற்றம்பலக் கோவை பாடினார்.
"ஆரணங்காண் என்பர் அந்தணர் யோகியர்ஆகமத்தின்
காரணங்காண் என்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்
சீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே"
என்னும் மதிப்புரைத் தனிப்பாடலைநோக்குக.
கோவைஎன்னும் நாடகமாகக் கூறப்பெறும். இது வடவர் கூறும்காமநூலன்று. இம்மை யின்ப விருப்பினர்க்குநுகர்ச்சியால் உவர்ப்பு விளைவித்தும், உலகப்பற்றற்றவர்க்கு உவமை காட்டியும், சிற்றின்பச்செய்தி வாயிலாக மக்களைப் பேரின்பத்திற்குவழிப்படுத்த வேண்டுமென்பதே முதனூலாசிரியர்நோக்கம். இதை மாணிக்கவாசகர் உணர்ந்தேஇறுதியில் திருச்சிற்றம்பலக் கோவை பாடினார்.
"ஆரணங்காண் என்பர் அந்தணர் யோகியர்ஆகமத்தின்
காரணங்காண் என்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்
சீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே"
என்னும் மதிப்புரைத் தனிப்பாடலைநோக்குக
-தமிழர் வரலாறு பக்கம் -100-105.
தமிழர் வரலாறு என்னும் நூல் பாவாணர் படைப்புகளில் ஒன்றாகவுள்ளது.இந்நூலில்
ஐந்திணைப்பெயர் மூலம் பற்றி வேர்ச்சொல் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள கருத்து தமிழுலகம் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகவுள்ளது. முதல், கரு, உரி என்ற அடிப்படையிலேயே சங்கப்பாடல்களைப் பார்த்த நமக்கு வேர்ச்சொல் அடிப்படையிலான கருத்து புதுமையாகவுள்ளது.அதனைக் கீழே காணலாம்.
ஐந்திணைப்பெயர் மூலம் குறிஞ்சி
குறி = அடையாளம், காலம், அளவு, தடவை.
குறி - குறிஞ்சி = ஒரு பல்லாண்டுக்காலஅளவைக் குறிக்கும் பூ, அப் பூப்பூக்கும் செடி, அச்செடி இயற்கையாக வளரும் மலை, மலையும் மலை சார்ந்தஇடமும், மலைநாடு.
ஒ.நோ: நெரி - நெரிஞ்சி - நெருஞ்சி.
கோடைக்கானல் மலையிலும்நீலமலையிலும் உள்ள குறிஞ்சிச் செடிகள்,பன்னீராண்டிற் கொருமுறை பூக்கின்றன. நீலமலையிலுள்ள தொதுவர் (தோடர்), குறிஞ்சி பூக்குந்தடவையைக் கொண்டே தம் அகவையைக் கணக்கிட்டுவந்தனர். குமரிநாட்டுக் குறிஞ்சிநில வாணரும்இங்ஙனமே செய்திருத்தல் வேண்டும்.
ஆங்கிலேயர், இந்தியா முழுதுமுள்ளகுறிஞ்சிச்செடிகளை யெல்லாம் ஆய்ந்து, குறிஞ்சிவகைகள் மொத்தம் 46 என்றும், அவை பூக்கும்காலவிடையீடு ஓராண்டு முதல் 16 ஆண்டுவரை பல்வேறுஅளவுபட்டதென்றும், கண்டறிந்திருக்கின்றனர்.குமரிநாட்டில் எத்தனைவகை யிருந்தனவோ அறியோம்.
முல்லை
முல் - முன் - முனை = கூர்மை, கடலிற்குள்நீண்டுசெல்லும் கூரிய நிலப் பகுதி.
முல் - முள் = 1. கூர்மை. "முள்வாய்ச்சங்கம்" (சிலப். 4:78). 2. கூரிய நிலைத்திணையுறுப்பு. "இளைதாக முண்மரங் கொல்க" (குறள். 879).3. ஊசி. 4. பலாக்காய் முனை.
முள் - முளை = கூரிய முனை. "முள்ளுறழ்முளையெயிற்று" (கலித்.4)
தனிநிலைக் காண்டம் 101
________________________________________
முல்-முல்லை=கூரிய அரும்புவகை, அஃதுள்ளகொடி, அக் கொடி வளரும் காடு, காடும் காடு சார்ந்தஇடமும். "முல்லை வைந்நுனை தோன்றவில்லமொடு" (அகம். 4:1).
என்பதில், முல்லையரும்பை வைந்நுனைஎன்று அதன் கூர்மையைச் சிறப்பித்திருத்தல்காண்க. வை = கூர்மை.
பாலை
பால் - பாலை = இலையிற் பாலுள்ளசெடியுங்கொடியும் மரமுமான பல்வேறு நிலைத்திணையினங்கள், அவை (முது) வேனிலில் தழைக்கும்நிலப்பகுதி, குறிஞ்சி நிலத்திற்கும் முல்லைநிலத்திற்கும் இடைப்பட்ட வறண்ட காடு, மாரியில்தழைத்தும் கோடையில் வறண்டும் இருக்கும்வன்னிலம்.
பகல் (பகுப்பு) என்னும் சொல்லின்மரூஉத் திரிபான பால் என்னும் வகைப்பெயர்க்கும்,பாலை என்னும் நிலைத்திணைப் பெயர்க்கும்தொடர்பில்லை.
மருதம்
மல் = வளம். "மற்றுன்றுமாமலரிட்டு" (திருக்கோ.178)
மல் - மல்லல் = 1. வளம் ."மல்லல்வளனே." (தொல்.788). 2. அழகு. "மல்லற்றன்னிறமொன்றில்" (திருக்கோ.58, பேரா.) 3.பொலிவு(சூடா.).
மல் - மல்லை = வளம். "மல்லைப்பழனத்து" (பதினொ. ஆளுடை. திருவுலா.8).
மல் - (மர்)-மருது=ஆற்றங்கரையும்பொய்கைக்கரையும் போன்ற நீர்வளம் மிக்கநிலத்தில் வளரும் மரம்.
ஒ.நோ: வெல் - வில்-(விர்) - விருது =வெற்றிச் சின்னம்.
"பருதி.....விருது மேற்கொண்டுலாம்வேனில்" (கம்பரா. தாடகை.5)
மருது - மருதம் = பெரிய மருது, மருது, மருதமரம் வளரும் நீர்வள நிலம், வயலும் வயல் சார்ந்தஇடமும், நீர்வளமும் நிலவளமும் மிக்க அகநாடு.
"அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத்
துறையணி மருது தொகல்கொள வோங்கி" (அகம். 97)
"வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரின்" (புறம்.52)
"பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
தேங்கொண் மருதின் பூஞ்சினை முனையின்
காமரு காஞ்சி துஞ்சும்
ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே." (புறம்.351)
"மருதுயர்ந் தோங்கிய விரிபூம்பெருந்துறை" (ஐங்.33)
"கரைசேர் மருத மேவி" (ஐங்.74)
"திசைதிசை தேனார்க்குந் திருமருதமுன்றுறை" (கலித்.27)
"மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்
மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு" (பதிற்.23)
"வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை" (சிலப்.14:72)
"......................................................காவிரிப்
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த" (குறுந்.258)
இம் மேற்கோள்களிலெல்லாம்,மருதமரம் ஆற்றையும் பொய்கையையும் வயலையுமேஅடுத்திருந்ததாகக் கூறப்பட்டிருத்தல் காண்க.
நெய்தல்
நள்ளுதல் = 1. அடைதல்."உயர்ந்தோர் தமைநள்ளி" (திருவானைக்.கோச்செங்.25). 2. செறிதல். "நள்ளிருள்யாமத்து" (சிலப்.15:105).3. கலத்தல், பொருந்துதல்.4.நட்புச்செய்தல். "நாடாது நட்டலின்கேடில்லை" (குறள்.761) நள்ளார் = பகைவர்.
நள் - நண். நண்ணுதல் = 1.கிட்டுதல்."நம்பனையுந் தேவ னென்று நண்ணுமது"(திருவாச.12:17). 2.பொருந்துதல். 3.நட்புச் செய்தல்.நண்ணுநர் = நண்பர் (பிங்.). நண்ணார் = பகைவர்."நண்ணாரும் உட்குமென் பீடு" (குறள்.1088)
நள் - நளி. நளிதல் = 1. செறிதல்."நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்"(மலைபடு.197). 2. ஒத்தல். "நாட நளிய நடுங்கநந்த" (தொல்.1232)
நள் - நௌ¢ - நெய். நெய்தல் = 1.தொடுத்தல். "நெய்தவை தூக்க" (பரிபா.19:80). 2.ஆடை பின்னுதல். "நெய்யு நுண்ணூல்" (சீவக.3019).3.ஒட்டுதல்.
நெய் = ஒட்டும் பொருளாகிய உருக்கினவெண்ணெய். "நீர்நாண நெய்வழங்கியும்"(புறம்.166:21).2. வெண்ணெய். "நெய்குடை தயிரினுரையொடும்" (பரிபா.16:3).3. எண்ணெய்."நெய்யணி மயக்கம்"
(தொல்.பொருள்.146).4.புனுகுநெய். "மையிருங் கூந்தல்நெய்யணி மறப்ப" (சிலப்.4:56). 5. தேன்."நெய்க்கண் ணிறாஅல்" (கலித்.42). 6.அரத்தம்."நெய்யரி மற்றிய நீரெலாம்"(நீர்நிறக்.51).7.கொழுப்பு. "நெய்யுண்டு"(கல்லா.71).8. நேயம், நட்பு. "நெய்பொதிநெஞ்சின் மன்னர்" (சீவக.3049).
நெய் - நேய் - நேயம் = 1. நெய் (பிங்.).2. எண்ணெய் (பிங்.). 3.அன்பு. "நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்து" (திருக்கோ.39).4.தெய்வப் பற்று. "நேயத்தே நின்ற நிமலனடிபோற்றி" (திருவாச.1:13)
நேயம்-நேசம்= 1.அன்பு. "நேசமுடையவடியவர்கள்" (திருவாச.9:4) .2. ஆர்வம்."வரும்பொரு ளுணரு நேசம்" (இரகு. இரகுவு.38).
நேசம்-நேசி. நேசித்தல். 1. அன்புவைத்தல். "நேசிக்குஞ் சிந்தை" (தாயு.உடல்பொய்.32).2. மிக விரும்புதல்.
"நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்" (தாயு. பரிபூர.13).
நெய் - நெய்தல் = நீர் வற்றியகாலத்திலும் குளத்துடன் ஒட்டியிருக்கும் செடிவகை,அச் செடி வளரும் கடற்கரை நிலம், கடலும் கடல்சார்ந்த இடமும்.
"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு" (மூதுரை,17)
என்பதை நோக்குக.
பண்டைக்காலத்தில், இடப்பெயர்கள்பெரும்பாலும் நிலைத் திணைச் சிறப்புப்பற்றியேஏற்பட்டன.
எ-டு :
ஊர்ப்பெயர் - தில்லை, ஆலங்காடு,பனையூர், நெல்லூர், விராலிமலை, காஞ்சிபுரம்.
நாட்டுப்பெயர்- ஏழ்தெங்கநாடு,ஏழ்குறும்பனை நாடு.
பெருந்தீவுப் பெயர்- நாவலந்தீவு,இலவந்தீவு, தெங்கந்தீவு.
ஒவ்வொரு பெருந்தீவும் பொழில்(சோலை) என்றும் பொதுப் பெயர் பெற்றது. இதனால்,உலகமும் பொழிலெனப்பட்டது.
"ஏழுடையான் பொழில்" (திருக்கோ.7)
குறிஞ்சி முல்லை முதலிய ஐந்திணைநிலப்பெயர்களும், அவ்வந் நிலத்திற்குரியகருப்பொருளும் தட்பவெப்பமும்பற்றியநிலைமையையும், உரிப்பொருள் என்னும் புணர்தல்இருத்தல் முதலிய மக்கள் காதலொழுக்க வகையையும்,இருமடி ஆகுபெயராய்க் குறிக்கும். இவ்வகையிலேயே,
"பாலை நின்ற பாலை நெடுவழி" (சிறுபாண்.11)
"முல்லை சான்ற முல்லையம் புறவின்" (சிறுபாண்.169)
"மருதஞ் சான்ற மருதத் தண்பணை" (சிறுபாண்.186)
என்னும் அடிகளில், முன்னிற்கும்திணைப்பெயர்கள் அமைகின்றன. குறிஞ்சி முல்லைபாலை மருதம் நெய்தல் என்பன, பண்ணுப் பெயர்களாய்அமைவதும் இம் முறையிலேயே.
மேற்காட்டிய சிறுபாணாற்றுப்படையடிகட்கு, "பாலைத் தன்மை நிலைபெற்றமையாற்பிறந்த பாலைநிலமாகிய தொலையாத வழி";"பாலைத் தன்மையாவது, காலையும் மாலையும்நண்பகலன்ன கடுமை கூடிச் சோலை தேம்பிக் கூவல்மாறி, நீரும் நிழலுமின்றி நிலம்பயந் துறந்து,புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம்பெறுவதொரு காலம்" என்றும்;
"கணவன் கூறிய சொற்பிழையாதுஇல்லிருந்து நல்லறஞ் செய்து ஆற்றியிருந்ததன்மையமைந்த முல்லைக்கொடி படர்ந்தஅழகினையுடைய காட்டிடத்து" என்றும்;
"ஊடியுங் கூடியும் போகநுகருந்தன்மையமைந்த மருதநிலத்திற் குளிர்ந்தவயலிடத்து" என்றும்;
நச்சினார்க்கினியர் உரைகூறியிருத்தலைக் காண்க.
இங்ஙனமே, மதுரைக்காஞ்சியிலும்,ஐந்திணை நிலப் பெயர் களும் அவற்றிற்குரியஉரிப்பொருளை ஆகுபெயராகவுணர்த்து கின்றன.
மருதஞ் சான்ற = ஊடலாகியஉரிப்பொருளமைந்த.
முல்லை சான்ற = இருத்தலாகியஉரிப்பொருளமைந்த.
குறிஞ்சி சான்ற = புணர்ச்சியாகியஉரிப்பொருளமைந்த.
பாலை சான்ற = பிரிவாகியஉரிப்பொருளமைந்த.
நெய்தல் சான்ற = இரங்கலாகியஉரிப்பொருளமைந்த.
குறிஞ்சி முதலிய ஐந்திணைப்பெயர்களும் நிலைத்திணையைக் குறிக்கும்போது,மருதம் பாலை என்பன இயற்பெயரும், குறிஞ்சி முல்லைஎன்பன சினையாகுபெயரும், நெய்தல் என்பதுதொழிலாகு
பெயரும் ஆகும்.
ஐந்தும் முன்பு நிலத்தைக்குறித்துப் பின்பு நிலவொழுக்கத்தைக்குறிக்கும்போது, மருதம் பாலை என்பன இருமடியாகுபெயரும் ஏனைய மும்மடி யாகுபெயரும் ஆகும்.
இடத்தின் பெயர் இடவொழுக்கத்தைக்குறிப்பது, கும்ப கோணம் பண்ணிவிட்டான் என்னுங்கொச்சை வழக்குப் போன்றது.
நிலவொழுக்கத்தின் பெயரேநிலத்தைக் குறித்தது என்று சொல்வது, தோகைஎன்னும் பெயர் முதலிற் பெண்ணையே குறித்துப்பின்னர் மயிலுக்காயிற்று என்று சொல்வதொத்ததே.
காதலர் இருவரின் மணவாழ்க்கை, தெய்வஏற்பாட்டால், ஒரோவழி பெற்றோர்க்கும்மற்றோர்க்கும் தெரியாத களவொழுக்க மாகத்தொடங்குவது முண்டு. அது இருமாதத்திற்குள்வெளிப்பட்டு விடும். அதன் பிற்பட்ட வெளிப்படையொழுக்கம் கற்பெனப்படும். மணவாழ்க்கை ஆயிரங்காலத்துப் பயிராதலால், தமிழர் களவொ ழுக்கம்ஆரியர் கூறும் அற்றைப் புணர்ச்சியான யாழோர்(கந்தருவர்) மணமன்று; நல்லாசிரியரிடம்கல்லாதவரும் அயல்நாட்டாரும் கருதுகின்றவாறு,இல்வாழ்க்கை யேற்படாத அநாகரிகக் காலத்துக்காமப் புணர்ச்சியு மன்று.
கற்பில் தொடங்கும் மணவாழ்க்கையேபெரும்பான்மை; களவில் தொடங்குவது மிகமிகச்சிறுபான்மை. கற்பாகத் தொடராத களவு இழிந்தோரொழுக்கமெனப் பழிக்கப்படுவது. இறைவன் ஏற்பாடும்இன்பமிகுதியும் களவின் சிறப்பியல்புகள்.
காதலர் வாழ்க்கை தொடக்கம்முதல்முடிவுவரை நானூறு துறைகளாக வகுக்கப்பட்டு, கோவைஎன்னும் நாடகமாகக் கூறப்பெறும். இது வடவர் கூறும்காமநூலன்று. இம்மை யின்ப விருப்பினர்க்குநுகர்ச்சியால் உவர்ப்பு விளைவித்தும், உலகப்பற்றற்றவர்க்கு உவமை காட்டியும், சிற்றின்பச்செய்தி வாயிலாக மக்களைப் பேரின்பத்திற்குவழிப்படுத்த வேண்டுமென்பதே முதனூலாசிரியர்நோக்கம். இதை மாணிக்கவாசகர் உணர்ந்தேஇறுதியில் திருச்சிற்றம்பலக் கோவை பாடினார்.
"ஆரணங்காண் என்பர் அந்தணர் யோகியர்ஆகமத்தின்
காரணங்காண் என்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்
சீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே"
என்னும் மதிப்புரைத் தனிப்பாடலைநோக்குக.
கோவைஎன்னும் நாடகமாகக் கூறப்பெறும். இது வடவர் கூறும்காமநூலன்று. இம்மை யின்ப விருப்பினர்க்குநுகர்ச்சியால் உவர்ப்பு விளைவித்தும், உலகப்பற்றற்றவர்க்கு உவமை காட்டியும், சிற்றின்பச்செய்தி வாயிலாக மக்களைப் பேரின்பத்திற்குவழிப்படுத்த வேண்டுமென்பதே முதனூலாசிரியர்நோக்கம். இதை மாணிக்கவாசகர் உணர்ந்தேஇறுதியில் திருச்சிற்றம்பலக் கோவை பாடினார்.
"ஆரணங்காண் என்பர் அந்தணர் யோகியர்ஆகமத்தின்
காரணங்காண் என்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்
சீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே"
என்னும் மதிப்புரைத் தனிப்பாடலைநோக்குக
-தமிழர் வரலாறு பக்கம் -100-105.
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
நல்ல பதிவுக்கு நன்றி நண்பரே
செந்தில்குமார்
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
நல்ல பதிவு நன்றி நண்பரே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் அருமையான பதிவு பூவென் ...விரும்பினேன். தேவநேயப்பாவாணர் அவர்களின் நூல்கள் வேறு எங்குமே கிடைக்காதா? அவரின் படைப்புகளைப் படிக்கவேண்டும் என்று நீண்டநாள் ஆவல்.
- Sponsored content
Similar topics
» உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ? ஆன்லைன் மூலம் கண்டறிய !
» உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ? ஆன்லைன் மூலம் கண்டறிய !
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
» உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ? ஆன்லைன் மூலம் கண்டறிய !
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|