புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரியுமா ? தெரியுமே !
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
தண்டனை .
தண்டனைகள் அளிப்பதில் இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. ஒன்று, தவறு செய்தவர் வருந்த வேண்டும் என்பது. இன்னொன்று, அவருக்கு அளிக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து குற்றங்கள் குறைய வேண்டும் என்பது.
ஆன்மிகத்திலும் ஏறக்குறைய அனைத்துக் கடவுளர்களும் தவறு செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கியிருப்பதைப் பார்க்கலாம். தவறு செய்தால் நரகம் போக வேண்டும் என்பது பல மதங்களிலும் சுட்டிக்காட்டப்படும் அல்டிமேட் தண்டனை.
தண்டனைகளிலேயே அதிக பட்சம் மரண தண்டனைதான். மனித உரிமை அமைப்புகளின் நீண்ட நெடிய போராட்டங்களின் முயற்சியாக, பல நாடுகளில் மரண தண்டனை அடியோடு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்தியாவிலும் rare among the rarest குற்றங்களுக்கே மரண தண்டனை வழங்கப்படுகிறது .
மரண தண்டனையை நிறைவேற்றுவதிலும் நாட்டுக்கு நாடு வேறு வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஜப்பானிய மக்களில் சிலர் தங்கள் மன்னர் இறந்துவிட்டால் துக்கம் தாங்காமல் வயிற்றைக் கிழித்துக்கொண்டு மண்டியிட்ட நிலையில் அமைதியாக உயிர் துறப்பார்களாம். இதை ஹராக்கி என்பார்கள்.
சிலர் தங்களுக்குத் தாங்களே சுயதண்டனைகள் கொடுத்துக் கொள்வர். மகாத்மா காந்தி இதுபோல தமக்குத் தாமே தண்டனைகள் வழங்கிக் கொண்டதுண்டு.
திருவள்ளுவர் கொடுக்கச் சொல்லும் தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. ஆம்! தவறு செய்பவர்களூக்குக் கொடுக்கும் பெரிய தண்டனை அவர்களை மன்னிப்பது என்கிறார்.
' இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.'
அர்த்தப் புதையல் .
சூர்பகர்ணாயே
நமஹ:
சூர்பம் -- முறம்;
கர்ணம் -- காது.
முறம் போன்று இருக்கும் யானையின் காது, அரிசியை புடைக்கும்போது, முறம் தூசிகளை கீழேதள்ளி விடுகிறது. தூசியில்லா அரிசிதான் முறத்தில் எஞ்சியிருக்கும். அதுபோல், காதில் விழும் வார்த்தைகளில் நல்லதை தேர்ந்தெடுத்து, தீயதை தள்ள வேண்டும் என்று விநாயக அஷ்டோத்தரத்தில் வருகிறது.
-- அனகா, சென்னை. தீபம். அக்டோபர் 5, 2011 .
-
ஒற்றுமை !
ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ஹனுமனுக்கும் உள்ள ஒற்றுமை :
** இருவருமே தூது போனார்கள். தூது பலிக்காமல் மாபெரும் யுத்தம் நடந்தது .
** இருவருமே விஸ்வரூபம் எடுத்தார்கள்.
** இருவருமே மலையைத் தூக்கினார்கள். கோவர்த்தனம். சஞ்சீவி.
** இருவருக்குமே வெண்ணெய் பிடிக்கும்.
** இருவருமே பாரிஜாத மரத்தினடியில் இருப்பார்கள். ' ச்யாயாம் பாரிஜாதஸ்ய ஹேம சிம்மாஸனோ பரி ' --
ஸகஸ்ரநாமத்தில் வரும் வரிகள். ஹனுமன் பாரிஜாத மரத்தினடியில் ராமத்யானம் செய்து கொண்டிருப்பார்.
** இருவருமே தானாக கட்டுண்டார்கள். கண்ணன் -- யசோதைக்காக, உரலில் கட்டுண்டார். ஹனுமன் பிரம்மாஸ்திரத்துக்கு
கட்டுப்பட்டார்.
** பாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தார் கிருஷ்ணர். கொடியில் இருந்து ஜெயிக்க வைத்தார் ஹனுமன்.
-- லக்ஷ்மி ஸந்தானம், ஸ்ரீரங்கம். தீபம். அக்டோபர் 5, 2011 .
-- இதழ் உதவி: P.சம்பத் ஐயர், திருநள்ளாறு.
காது குத்த...
குழந்தைகளுக்கு காது குத்த கனிவான நாள் :
குழந்தை பிறந்து 6, 7, 8 வது நாளில் அல்லது முதல் பிறந்த நாளில் காது குத்தும் விழா செய்யலாம். இரண்டு திதி அல்லது இரண்டு நட்சத்திரம் வராத நாளாக அது இருக்க வேண்டும் . திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 கிழமைகளும், வளர்பிறை, த்விதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திரயோதசி ஆகிய 6 திதிகளும், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஹஸ்தம், சித்திரை, திருவோணம், அவிட்டம், ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்களும் சிம்மம், விருச்சிகம், கும்பம் தவிர மற்ற 8 லக்னங்களும், கர்ணவேதை ( காது குத்ததல் ) செய்ய உகந்தவை . லக்னத்துக்கு 8 -ம் இடத்தில் பாவ கிரகங்கள் இருக்கக் கூடாது .குழந்தைக்கும், பெற்றோர்களுக்கும் சந்திராஷ்டமம் இருக்கக்கூடாது . குழந்தையின் தாய் மாமாவின் மடியில் அமர்த்தி காது குத்தல் செய்ய வேண்டும் .
--- ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன், கல்கி . 26 . 2 . 2012 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .
தெரியுமா ? தெரியுமே !
* தலைக்கு உள்ளே இருக்கின்ற காதுகளினாலும், உடலாலும் மீன்கள் தண்ணீருக்குள்ளே, தங்களைச் சுற்றி எழும்
சப்தங்களை உள்வாங்கிக் கொள்கின்றன என்கிறது நேஷனல் வைல்ட்டு லைப் பெடரேஷன் ஆய்வு !
* இயற்கையாக மனிதர்களுக்கு வயது ஏறஏற முளையின் அளவு சிறியதாகிப் போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1.9
சதவீதம் மூளை தன்னுடைய கன அளவை இழக்கிறதாம் .இதனால் நினைவாற்றல் குறைகிறது . அதனால்தான்
ஞாபகமறதி ஏற்படுகிறது .
* ' ப்ரளீயந்தே அஸ்மின் தோஹா ' என்பது ப்ரதோஷம் என்ற சொல்லின் வடமொழி இலக்கணம் . அதாவது அனைத்து
தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள் .
* வள்ளலார் 30 . 1 . 1874 ஸ்ரீமுக வருஷம் தை மாதம் வெள்ளிக்கிழமையுடனான தைப்பூச நன்நாளில் நள்ளிரவு 12 மணிக்கு
சித்தியடைந்தார் .
கணபதி ஹோமம் .
வீட்டில் ஹோமங்களை அடிக்கடி செய்து கொண்டேயிருங்கள் . பிறறையும் செய்யச்சொல்லுங்கள் . ஹோமப்புகையும் மந்திரங்களும் உங்கள் வீட்டை மட்டுமல்ல; உங்கள் ஊரையே காப்பாற்றும் . இப்படி எல்லா ஊர்களிலும் எல்லோரும் செய்யத் துவங்கிவிட்டால், காற்றில் மாசு கலப்பது தவிர்க்கப்படுகிறது . உரிய காலத்தில் மழை பெய்யும் . இயற்கை சீற்றங்கள் ஏற்படாது . ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படும் . எத்தனை அணுமின் நிலையங்கள் துவங்கினாலும் கவலைப்படவேண்டாம் . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழந்த போபால் விஷவாயு விபத்தில் தினமும் ஹோமம் செய்து கொண்டிருந்த ஒருவர் வீட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
--- ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார் , மயிலாடுதுறை .
--- தினமலர் இணைப்பு , 26 . 1 . 2012 .
தாலியின் 9 நூலிழை .
தாலியின் 9 நூலிழை தத்துவம் .
மாங்கல்யச் சரடு 9 இழைகளைக் கொண்டுள்ளது . ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது . தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு, தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல், இத்தனை குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்ய சரடு அணியப்படுகிறது.
--- தினமலர் , 26 . 1 . 2012 .
அம்மி மிதித்தல் .
மணமக்கள் அக்னியை வலமாக வருகிறபோது வலப்பக்கத்திலே ஒரு கல் இருக்கும் . மணமகளின் பாதத்தை அந்தக் கல்லின் மீது வைக்குமாறு மணமகன் செய்வான் .
அதன் பொருள் , ' இந்தக் கல்லைப்போல் உறுதியாக இரு ' என்பதாகும் . தன்மேல் வைக்கும் பாரம் அதிகமானால் இரும்பு வளையும் . ஆனால், கல்லோ வளையாது . மாறாக பிளந்துபோகும் .
மணமகளே, கற்பில் நீ கல்லைப்போல் உறுதியாக இரு . அந்தக் கற்பில் கொஞ்சம் உறுதி தளர்ந்ததால் அகலிகையைக் கல்லாயிருக்கச் சொன்னார் கவுதமர் . அதனாலேதான், நீ கல்லைப் போல் உறுதியாக இரு என்று கணவன் கூறும் பாங்கில் மனைவியின் காலைப்பற்றி அந்த அம்மியின் மீது வைப்பான் .
அம்மி மிதித்தபின் அருந்ததியை வணங்குவார்கள் . ' அருந்ததி ' என்ற சொல்லுக்கு கணவனின் சொல்லுக்குக் குறுக்கே நில்லாதவள் என்று பொருள் .
--- தினமலர் , 25 . 1 . 2012 .
திசை .
ஆயுளை விரும்புகிறவன் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டும், கீர்த்தியை விரும்புகிறவன் தெற்கு முகமாக உட்கார்ந்து கொண்டும், சம்பத்தை விரும்புகின்றவன் மேற்கு முகமாக உட்கார்ந்து கொண்டும், சத்தியத்தை விரும்புகின்றவன் வடக்கு முகமாக உட்கார்ந்து கொண்டும் சாப்பிட வேண்டும் . சாப்பிடும் போது அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும்
நீலமேகச் சியாமளன் .
" தண்ணீருக்கு நிறம் கிடையாது . காற்றுக்கும் நிறம் கிடையாது . ஆனால், நீர் கடலாகவும், காற்று வானமாகவும் பரந்து விரிந்து கிடக்கும் போது பார்ப்பவர் கண்களுக்கு நீல நிறமாகத் தெரிகிறது . எல்லா இடத்திலும் பரந்து அகன்று நிற்கும் இந்த பொருள்கள் நீல நிறமாக இருப்பதைப் போலவே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளான மகாவிஷ்ணுவும் நீல நிறமாகக் காட்சி தருகிறார் . அதனால்தான் அவரை நீலமேக சியாமளன் என்று அழைக்கின்றனர் .
--- இந்து தர்ம சாஸ்திரம் ."
--- தினமலர் , இணைப்பு . 19 . 1 . 2012 .
பூஜைக்கு உரிய மலர்கள் !
பூஜைக்கு ஒவ்வொரு வேளைக்கும் ஒரு சில மலர்கள் விசேஷம் என்பார்கள் . அதிகாலை பூஜைக்கு உரியவை -- புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவட்டம், நீலோற்பவம், அலரி, செந்தாமரை .
காலை பூஜைக்கு உரியவை -- அலரி, நாயுருவி, மல்லிகை, எருக்கு, வில்வம், நந்தியாவட்டம், தாமரை, பவளமல்லி .
உச்சிகாலத்துக்கு உரியவை -- பொன் ஊமத்தை, புலிநகக் கொன்றை, பாதிரி, வன்னி, கத்திரி, மந்தாரை, சரக்கொன்றை, துர்மை .
மாலைக்கும் அர்த்த ஜாமத்திற்கும் உரியவை -- மல்லிகை, காட்டுமல்லி, மரமல்லி, மகிழ், கொன்றை, செண்பகம், சிறு செண்பகம், மரிக்கொழுந்து .
--- தினமலர் 15 .12. 2011.
கும்பாபிஷேகம் .
மூலஸ்தானத்தைக் கருவறையிலிருந்து யாக சாலைக்கு சுவாமியை அழைத்து வருவதற்கு ஒரு சாதனமாக இருப்பது கலசமாகும் . இதற்கென ஒரு குடத்தை தெய்வத் திருமேனியாகவே அதாவது சராசரி உடல் போன்று எண்ணி அலங்கரிக்க வேண்டும் என ஆகம நூல்கள் கூறுகின்றன .
குடம், நமது உடலைப் போன்றது . அதன் மீது சுற்றப்படும் முப்புரி நூல், உடலின் நாடி நரம்புகள் . உள்ளே ஊற்றப்படும் புனித நீர், உடலின் உள் உறுப்புகள் மற்றும் ரத்தம் போன்றது . குடத்தின் உள்ளே போடப்படும் நவரத்தினக் கற்கள், தங்கம், வெள்ளி போன்றவை வீரிய சக்தியைக் குறிக்கிறது .
முப்பத்தாறு தர்ப்பைகளை ஒன்றாக முடிந்து குடத்தின் நடுவே வைக்க வேண்டும் . இதை முதுகெலும்பாகவும், மாவிலைக் கொத்தை கழுத்துப் பகுதியாகவும், தேங்காயை முகமாகவும் எண்ணி அவற்றிற்குரிய மந்திரங்களைச் சொல்லி அலங்கரிக்க வேண்டும் .
கும்பாபிஷேகத்தின் யாகசாலை முதற்காலத்திற்கு முன்பாக ' கும்பாலங்காரம் ' என இந்நிகழ்ச்சியை விரிவாகச் செய்வார்கள். எனவே, புனித நீர் என்பது இறைவன் திருமேனியின் உள்ளுறுப்புகள் மற்றும் ரத்தம் போன்றது . இதன் நடுவேதான் இறைவனின் தெய்வசக்தி எனப்படும் உயிர்ச்சக்தியை மூல மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும் .
--- தினமலர் இணைப்பு , ஜனவரி 13, 2011 .
ஆன்மிக முன்னேற்றம் .
ஆன்மிக முன்னேற்றத்திற்கான தர்ம வழிகளில் நான்கு வகைகள் !
முதல் வகையின் பெயர், ' சாமானிய தர்மம் '. அதாவது மாதா, பிதா, குடும்பத்தினர், சக மனிதர்கள், குரு ஆகியோரிடம் மதிப்பு மரியாதையோடு நடந்து கொள்ளுதல் . இதைத் தனது வாழ்க்கையால் அறிவுறுத்தினார், ஸ்ரீராமர் !
2 -வது வகையின் பெயர், ' சேஷ தர்மம் '. அதாவது, ' பூலோக உறவுகள் நிலையானவை அல்ல; தெய்வீக நெருக்கமே நிலையானது ' என்ற ஞானப் பக்குவத்துடன், தெய்வத்தின் பாதங்களைச் சரணடைதல்... வாழ்க்கை முழுவதும் ஸ்ரீராமரை நிழல் போலத் தொடர்ந்து, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் லட்சுமணன் !
3 - வது வகையின் பெயர், ' விசேஷ தர்மம் ' அதாவது, எப்போதும் தெய்வீக சிந்தனையோடு இருத்தல் ... ஸ்ரீராமரை விட்டு பிரிந்திருந்த வேளையிலும் மனம் முழுக்க அவரையே நிறைத்து, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் பரதன் !
4 -வது வகையின் பெயர், ' விசேஷர தர்மம் '. அதாவது, இறையடியார்க்குத் தொண்டு புரிவதற்கே வாழ்க்கையை அர்ப்பணித்தல்.. ஸ்ரீராமரின் பூரண பக்தரான பரதனை நிழல் போலத் தொடர்ந்து, அவருக்குத் தொண்டு செய்வதையே . வாழ்க்கை நோக்கமாகக் கொண்டு, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் சத்ருக்கனன் !
நான்கு வகை தர்மங்களும் சிறப்பானவையே ; இருப்பினும், சரணாகதி தர்மமான ' சேஷ தர்ம ' முறை மிக மிகச் சிறப்பு .
--- தினமலர் இணைப்பு . மார்ச் 26 , 2011 . .
தெரியுமா? தெரியுமே !
* பஞ்சாங்கம் படிப்பதற்கு பஞ்சாங்க படலம் என்று பெயர் . கேட்பதற்குப் பஞ்சாங்க சிரவணம் என்று பெயர் .
* திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கர்ணங்கள் என்பவை பஞ்சாங்கம் எனப்படுகிறது . .
* பஞ்சாங்கத்தில் அவ்மாகம் என்றும், திரிதினஸ்பிர்க் என்றும் இருப்பதைப் பார்த்திருக்கலாம் . ஒரு நாளில் மூன்று நட்சத்திரங்களும் சேர்ந்திருந்தால், அந்த நாளை அவமாகம் என்பர் ஒரு திதி அல்லது நட்சத்திரம் அல்லது யோகம் மூன்று நாட்களில் கலந்திருந்தால் அந்த நாளை திரிதினஸ்பிர்க் என்பர் . இத்தகைய நாட்களில் சுபகாரியங்களைச் செய்யக் கூடாது .
* பஞ்சாங்கத்தின் ஐந்து உறுப்புக்களில் கரணம் ஒன்று . ஒரு நாளில் இரண்டு கரணங்கள் இடம்பெறும் . கரணங்கள் 11 . அவற்றுள் சர கரணங்கள் 7 . அவை : பவம், பாலவம், கெவுலவம், தைதுலம், சுரஜை, வனிஜை, பத்ரம் என்பார்கள் . சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் என்ற நான்கும் ஸ்திர கரணங்கள் ஆகும் .
* பூமியைச் சுற்றியுள்ள அண்டப் பெருவெளி ஒரு வட்டமாகக் கருதப்படுகிறது . அந்த வட்டத்துக்கு 360 டிகிரிகள் . அவை 12 ராசிகளாக பிரிக்கப்படுகின்றன .ஒரு ராசிக்கு 30 டிகிரிகள் சூரியன் ஒரு ராசியில் தங்கியிருக்கும் காலம் ஒரு மாதம் என்று சொல்லப்படுகிறது .
* சூரியன் ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு ஒரு மாதம் . அந்த நேரத்தில் சந்திரனோ 12 ராசிகளையும் ஒருமுரை கடந்து வந்து விடுகிறது .
* ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு . சந்திரன் சஞ்சரிக்கும் பாதையில் சந்திரனுக்கு முன்னால் உள்ள தூரம் ( அதாவது 6.6 டிகிரிகள் ) நட்சத்திரத்த்தின் முதல் இரண்டு பாதங்கள் . பின்னால் இருப்பது அந்த நட்சத்திரததிற்குரிய பின் இரு பாதங்கள் .
* ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு . ( ஒரு பாதம் என்பது 3.3 டிகிரி . ஒரு நட்சத்திரம் 13.2 டிகிரி ) .
--- தினமலர் இணைப்பு , ஏப்ரல் 7 . 2011 .
எந்த யோகத்தில் என்ன செய்யலாம் ?
அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் என்பவை யோகத்தின் வகைகள் . பஞ்சாங்கத்தில் இன்று என்ன யோகம் என்று இருக்கும் . யோகங்கள் 27 . இவற்றுக்கு தனித்தனி பலன் உண்டு .
விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வியாகாதம், வஞ்ரம், வியதீபாதம், பரிகம், வைதீருதி என்பவை தவிர்க்க வேண்டிய யோக நாட்கள் . யோகத்தின் பெயர்களும், அவற்றிற்குரிய பலன்களும் பின்வருமாறு :
விஷ்கம்பம் -- மனநடுக்கம்; ப்ரீதி -- பிரியம் ; ஆயுஷ்மான் -- வாழ்நாள்; சவுபாக்கியம் -- புண்ணியம்; சோபனம் -- நலம்; அதிகண்டம் -- பெரிய கண்டங்கள்; சுகர்மம் -- அறம்; திருதி -- துணை; சூலம் -- சில திசைப் பயண இடையூறுகள்; கண்டம் -- ஆபத்துக்கள்; விருத்தி -- ஆக்கம்; துருவம் -- ஸ்திரத்தன்மை பெறுதல்; வியாகாதம் -- பாம்பு முதலானவற்றால் ஆபத்து; அரிசனம் -- மகிழ்ச்சி; வச்சிரம் -- ஆயுதங்களால் தொல்லை; சித்தி -- வல்லமை; வியதீபாதம் -- கொலை; வரியான் -- காயம்; பரிகம் -- தாழ்வு; சிவம் -- காட்சி; சித்தம் -- திறம்; சாத்தியம் -- புகழ்; சுபம் -- காவல்; சுப்பிரம் -- தெளிவு; பிராம்மம் -- பிரமை; மாஹேத்திரம் -- இந்திரனைப் பற்றிய அறிவு; வைத்திருதி -- பேய்களால் தொல்லை .
--- தினமலர் இணைப்பு , ஏப்ரல் 7 . 2011 .
பலன்கள் !
தானதர்மத்தில் கிடைக்கும் பலன்கள் !
தீர்த்தங்களில் ( அதாவது, புண்ணிய நதிகளில் ) ஸ்நானம் செய்வது, தீர்த்தக் கரைகளில் பித்ரு காரியங்ககள் செய்வது, தான தர்மம் செய்வது எல்லாம் விசேஷ பலன்களைத் தரும் . கங்கையில் ஸ்நானம் செய்வதும், காசி விஸ்வநாதர் தரிசனமும் முக்திக்கு வழி .
பிரசித்தி பெற்ற இடம் பிரயாகை . இது, அலகாபாத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது . இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் சங்கமமாகின்றது . இதற்கு தனிப்பெருமை உண்டு . அனேக கோடி புண்ணிய தீர்த்தங்களில் சிறந்தது பிரயாகை என்றும் சொல்லப்படுகிறது . இந்த இடத்தை, திருவேணி சங்கமம் என்றும் கூறுவர் . கங்கையை விண்ணவரும், யமுனையை சூரியனும், பிரயாகையை இந்திரனும் காப்பதாக ஐதீகம் .
மனித வாழ்க்கையில் ஒரு முறையாவது பிரயாகை கங்கை ஸ்நானம் அவசியம் . இந்த பிரயாகையில் செய்யும் தானங்களுக்கு, பிரமாதமான பலன்கள் உண்டு .
பிரயாகையில் ஒரு மாதமோ, குறைந்தது மூன்று தினங்களோ தங்கி ஸ்நானம் செய்து, தான தர்மங்கள் செய்யவேண்டும் . இந்த இடத்தில் கோதானம் செய்தால், அந்தப் பசுவின் உடலில் எத்தனை ரோமங்கள் உள்ளதோ, அத்தனை வருட காலம் சிவலோக வாசம் கிடைக்கும் என்பது ஐதீகம் .
எந்த தானம் கொடுத்தாலும், அது பித்ருக்களின் பிரீதிக்காக கொடுப்பதாக நினைக்கவேண்டும் . தானம் வாங்குபவர்களும், பித்ருக்கள் திருப்தியடைவதாக எண்ணி வாங்க வேண்டும் .
கோதானம் கொடுப்பது என்றால், நன்றாகக் கறக்கும் பசுவை, கன்றுடன் சேர்த்து ( இளங்கன்று சிறந்தது ) பசுவுக்கு அலங்காரம் செய்து, கொம்பில் கொப்பிகள், குளம்புகளில் வெள்ளி காப்பு, கழுத்தில் பட்டாடை இவைகளுடன் தானம் செய்ய வேண்டும் . கிழ மாட்டையும், நோய் பிடித்த மாட்டையும், தானம் செய்வதால் பலனில்லை .
--- வைரம் ராஜகோபால் , ஞானானந்தம் தொடரில் .
--- தினமலர் , பக்தி மலர் , 6 . 3 . 2011 . ( திருச்செந்தூர் ).
பத்தும் பறந்து போகும் !
' பத்தும் பறந்து பொகும்....எப்போது ? ' எனக் கேட்டால், ' பசி வந்தால் ' என பதில் வரும் . ' நமச்சிவாய ' என்று சொன்னாலும் கூட பத்தும் பறந்து விடும் .
திருப்புகழில் அருணகிரியார்
" ஆவியீர் ஐந்தை அபரத்தே வைத்தோதில்
ஆவி ஈரைந்தை அகற்றலாம் " என்கிறார் .
" உலகமக்களே ! ஐந்தெழுத்து மந்திரமான ' சிவாயநம ' என்பதை மனதில் ஓதினால் ' ஆவி பத்தும் ' பறந்து விடும் .
அதென்ன ' ஆவி பத்து ! '
' ஆ ' என்ற எழுத்துடன் பத்தைச் சேர்த்தால் ' ஆபத்து ' . ' வி ' யுடன் சேர்த்தால் ' விபத்து '. ஆபத்து உடலுக்கு வரும் கஷ்டத்தையும், விபத்து உயிருக்கு வரும் துயரையும் குறிக்கும் . உடலுக்கு பசி, நோய் முதலிய துன்பங்களும், உயிருக்கு பிறப்பு, இறப்பு என்னும் துன்பங்களும் வருகிறது . இதனால்தான் ' சிவாயநம ' என்று சிந்தித் திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை ' என்கிறார்கள் ஆன்மிக அறிஞர்கள் .
--- தினமலர் , பக்தி மலர் , 6 . 3 . 2011 . ( திருச்செந்தூர் ).
தெரிந்ததும் தெரியாததும் !
* அத்திரிமுனிவரின் மனைவி -- அனுசூயா .
* ராவணன் -- கரனின் தம்பி .
* அழகியாக மாறிய சூர்ப்பனகையின் பெயர் -- காமவல்லி .
* சூரியனின் அம்சமாகப் பிறந்த குரங்கு மன்னன் -- சுக்ரீவன் .
* தேவலோகத்தில் பணிசெய்யும் தலைமைத்தச்சர் -- மயன் .
* வினதைக்குப் பிள்ளையாக அவதரித்த பறவை -- கருடன் .
* பிரம்மாவின் அம்சமான கரடி இனத்தலைவர் -- ஜாம்பவான் .
* ஆதிகவி என்று சிறப்பிக்கப்படும் வேடன் -- வால்மீகி .
* தசரத்ருக்கு அந்திமக்கிரியை செய்த பிள்ளை -- சத்ருக்கனன் .
* அனுமனுக்கு ' சிரஞ்சீவி ' பட்டம் அளித்தவள் -- சீதாதேவி .
--- தினமலர் , பக்தி மலர் , 6 . 3 . 2011 . ( திருச்செந்தூர் ).
கண்டுபிடிப்பு !
இந்து சமய குறியீடுகள் கண்டுபிடிப்பு !
வட அமெரிக்கா அரிசோனா மாநிலத்தில் பலாட்க்கி என்ற சிகப்பு நிறமுடைய மலைப்பகுதியில் ஜாக் அண்ட்ரூஸ் என்பவராலும், மற்றொரு குறியீடு தென்னாப்பிரிக்கா பூம்பலாசில் உள்ள சுபாஸ் சந்திரபோஸ் சதுக்கத்தில் ரோப் மில்லன் என்பவராலும் இந்த ஓம் குறியீடுகள் கண்டறியப்பட்டுள்ளன .
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓம் குறியீடு மாறுபட்ட வடிவில், அதாவது 90 டிகிரி திரும்பியது போல் கருஞ்சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ளது . தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓம் குறியீடு பாறை மீது பொறிக்கப்பட்டுள்ளது . அதில் தசமகா வித்யாக்களின் பத்து பெண் தெய்வங்களில் ஒன்றான ஸ்ரீதாராவின் இருபத்தோரு அம்சங்களை குறிப்பிடும் இருபத்தோரு கோடுகள், ஒளி ரேகைகள் போலும், ஸ்தூல, சூட்சும, காரண நிலைகளை குறிப்பிடும் மூன்று வட்டங்களும், அடுத்து பிரபஞ்ச குறியீடும், அதற்கு நடுவே இமயமலையில் உள்ள ஓம் பர்வதம் எனும் மலையில் காணப்படும் ஓம் - வடிவம் போன்றும், அதனைச் சுற்றிலும் ஒளி ரேகைகளுடன் தீர்க்க பிரணவ மந்திரமாகிய ஓம் குறியீடும் காணப்படுகின்றது . இந்த குறியீட்டில் காணப்படும் பிரபஞ்ச குறியீட்டின் வடிவத்தை தமிழகத்தின் பெரும்பான்மையான கோயில்களில் காணலாம் . இதேபோல் குறியீடு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள பெருமாள் கோயில் மகாமண்டபத்தின் வடபுற வாயில் படிக்கட்டில் பொறிக்கப்பட்டுள்ளது .
இந்தியாவின் ஆன்மிகத் தத்துவங்களும், தீர்க்க பிரணவ மந்திரமான ஓம் குறியீடும் பல்வேறு நாடுகளை சென்றடைந்துள்ளது என்பதற்கு இந்த 2 குறியீடுகள் மிகச்சிறந்த சான்றுகளாகும் .
--- தினமலர் ,18 . 3. 2011 .
சதாபிஷெகம் !
இன்னல்கள் தீர இறைவனை நாம் வணங்குகிறோம் . அந்த இறைவன் சிலரை வணங்குகிறானாம் . சகஸ்ர சந்ர தர்சீ, நித்யாக்னி ஹோத்ரி, அஸ்வத்த சேவி முதலியவர்கள் அவர்கள் .
இவர்களுள் சகஸ்ர சந்ர தர்சீ என்றால் ஆயிரம் பிறை கண்டவர் என்று அர்த்தம் . அதாவது 80 வயது மூத்தவர் என்று பொருள் .
--- தினமலர் , இனைப்பு . மார்ச் 10, 2011 .
தெய்வம் !
தெய்வம் என்ற வார்த்தை, திவ்யம் என்ற சொல்லில் இருந்து பிறந்தது . ' ஒளிமயமானது ' என்று அர்த்தம் . இதனால்தான் தெய்வ தரிசனத்தை திவ்யதரிசனம் என்கிறோம் ; தெய்வத் திருத்தலங்களை திவ்யஷேத்திரம் என்கிறோம் .
' தெய்வீகமானது ' என்பதை ஆங்கிலத்தில் ' டிவைன் ' ( Divine ) என்கிறார்கள் . இந்த வார்த்தை, நமது சமஸ்கிருத மொழியின் ' திவ்ய ' என்ற சொல்லில் இருந்துதான் பிறந்திருக்கிறது . எல்லா மதங்களிலும், ஒளிக்கு பிரதான இடம் அளிக்கப்பட்டுள்ளது . எல்லா மதங்களும், சொர்க்கத்தை ஒளிமயமான இடமாகவும் சித்தரிக்கின்றன .
ஒவ்வொரு மதத்திலும், ' இருளில் இருக்கும் எங்களை ஒளிமயமாக மாற்றுவாயாக ! ' என்ற பிரார்த்த்னை இடம்பெற்றிருக்கிறது . இதன் உட்பொருள் : ' மனிதப்பிறவி எடுத்தவர்கள், தெய்வமாக முன்னேற வேண்டும் ! '.
ஒளி, பஞ்சபூதத்தில் ஒன்றான நெருப்பில் இருந்து பிறக்கிறது . நெருப்பின் விசேஷ தன்மை : இது மட்டுமே, மேல் நோக்கி எழும்பும் ! இதனால்தான் ஒவ்வொரு மதத்திலும் ஒளியேற்றி வழிபடும் பாரம்பரியம் இருந்து வருகிறது . ' மனிதத்தன்மை என்ற கீழ்நிலையில் இருந்து மேல் நோக்கி முன்னேறுங்கள் ' என்பதே ஒளிவழிபாட்டின் உட்பொருள்
தண்டனைகள் அளிப்பதில் இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. ஒன்று, தவறு செய்தவர் வருந்த வேண்டும் என்பது. இன்னொன்று, அவருக்கு அளிக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து குற்றங்கள் குறைய வேண்டும் என்பது.
ஆன்மிகத்திலும் ஏறக்குறைய அனைத்துக் கடவுளர்களும் தவறு செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கியிருப்பதைப் பார்க்கலாம். தவறு செய்தால் நரகம் போக வேண்டும் என்பது பல மதங்களிலும் சுட்டிக்காட்டப்படும் அல்டிமேட் தண்டனை.
தண்டனைகளிலேயே அதிக பட்சம் மரண தண்டனைதான். மனித உரிமை அமைப்புகளின் நீண்ட நெடிய போராட்டங்களின் முயற்சியாக, பல நாடுகளில் மரண தண்டனை அடியோடு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்தியாவிலும் rare among the rarest குற்றங்களுக்கே மரண தண்டனை வழங்கப்படுகிறது .
மரண தண்டனையை நிறைவேற்றுவதிலும் நாட்டுக்கு நாடு வேறு வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஜப்பானிய மக்களில் சிலர் தங்கள் மன்னர் இறந்துவிட்டால் துக்கம் தாங்காமல் வயிற்றைக் கிழித்துக்கொண்டு மண்டியிட்ட நிலையில் அமைதியாக உயிர் துறப்பார்களாம். இதை ஹராக்கி என்பார்கள்.
சிலர் தங்களுக்குத் தாங்களே சுயதண்டனைகள் கொடுத்துக் கொள்வர். மகாத்மா காந்தி இதுபோல தமக்குத் தாமே தண்டனைகள் வழங்கிக் கொண்டதுண்டு.
திருவள்ளுவர் கொடுக்கச் சொல்லும் தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. ஆம்! தவறு செய்பவர்களூக்குக் கொடுக்கும் பெரிய தண்டனை அவர்களை மன்னிப்பது என்கிறார்.
' இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.'
அர்த்தப் புதையல் .
சூர்பகர்ணாயே
நமஹ:
சூர்பம் -- முறம்;
கர்ணம் -- காது.
முறம் போன்று இருக்கும் யானையின் காது, அரிசியை புடைக்கும்போது, முறம் தூசிகளை கீழேதள்ளி விடுகிறது. தூசியில்லா அரிசிதான் முறத்தில் எஞ்சியிருக்கும். அதுபோல், காதில் விழும் வார்த்தைகளில் நல்லதை தேர்ந்தெடுத்து, தீயதை தள்ள வேண்டும் என்று விநாயக அஷ்டோத்தரத்தில் வருகிறது.
-- அனகா, சென்னை. தீபம். அக்டோபர் 5, 2011 .
-
ஒற்றுமை !
ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ஹனுமனுக்கும் உள்ள ஒற்றுமை :
** இருவருமே தூது போனார்கள். தூது பலிக்காமல் மாபெரும் யுத்தம் நடந்தது .
** இருவருமே விஸ்வரூபம் எடுத்தார்கள்.
** இருவருமே மலையைத் தூக்கினார்கள். கோவர்த்தனம். சஞ்சீவி.
** இருவருக்குமே வெண்ணெய் பிடிக்கும்.
** இருவருமே பாரிஜாத மரத்தினடியில் இருப்பார்கள். ' ச்யாயாம் பாரிஜாதஸ்ய ஹேம சிம்மாஸனோ பரி ' --
ஸகஸ்ரநாமத்தில் வரும் வரிகள். ஹனுமன் பாரிஜாத மரத்தினடியில் ராமத்யானம் செய்து கொண்டிருப்பார்.
** இருவருமே தானாக கட்டுண்டார்கள். கண்ணன் -- யசோதைக்காக, உரலில் கட்டுண்டார். ஹனுமன் பிரம்மாஸ்திரத்துக்கு
கட்டுப்பட்டார்.
** பாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தார் கிருஷ்ணர். கொடியில் இருந்து ஜெயிக்க வைத்தார் ஹனுமன்.
-- லக்ஷ்மி ஸந்தானம், ஸ்ரீரங்கம். தீபம். அக்டோபர் 5, 2011 .
-- இதழ் உதவி: P.சம்பத் ஐயர், திருநள்ளாறு.
காது குத்த...
குழந்தைகளுக்கு காது குத்த கனிவான நாள் :
குழந்தை பிறந்து 6, 7, 8 வது நாளில் அல்லது முதல் பிறந்த நாளில் காது குத்தும் விழா செய்யலாம். இரண்டு திதி அல்லது இரண்டு நட்சத்திரம் வராத நாளாக அது இருக்க வேண்டும் . திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 கிழமைகளும், வளர்பிறை, த்விதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திரயோதசி ஆகிய 6 திதிகளும், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஹஸ்தம், சித்திரை, திருவோணம், அவிட்டம், ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்களும் சிம்மம், விருச்சிகம், கும்பம் தவிர மற்ற 8 லக்னங்களும், கர்ணவேதை ( காது குத்ததல் ) செய்ய உகந்தவை . லக்னத்துக்கு 8 -ம் இடத்தில் பாவ கிரகங்கள் இருக்கக் கூடாது .குழந்தைக்கும், பெற்றோர்களுக்கும் சந்திராஷ்டமம் இருக்கக்கூடாது . குழந்தையின் தாய் மாமாவின் மடியில் அமர்த்தி காது குத்தல் செய்ய வேண்டும் .
--- ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன், கல்கி . 26 . 2 . 2012 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .
தெரியுமா ? தெரியுமே !
* தலைக்கு உள்ளே இருக்கின்ற காதுகளினாலும், உடலாலும் மீன்கள் தண்ணீருக்குள்ளே, தங்களைச் சுற்றி எழும்
சப்தங்களை உள்வாங்கிக் கொள்கின்றன என்கிறது நேஷனல் வைல்ட்டு லைப் பெடரேஷன் ஆய்வு !
* இயற்கையாக மனிதர்களுக்கு வயது ஏறஏற முளையின் அளவு சிறியதாகிப் போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1.9
சதவீதம் மூளை தன்னுடைய கன அளவை இழக்கிறதாம் .இதனால் நினைவாற்றல் குறைகிறது . அதனால்தான்
ஞாபகமறதி ஏற்படுகிறது .
* ' ப்ரளீயந்தே அஸ்மின் தோஹா ' என்பது ப்ரதோஷம் என்ற சொல்லின் வடமொழி இலக்கணம் . அதாவது அனைத்து
தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள் .
* வள்ளலார் 30 . 1 . 1874 ஸ்ரீமுக வருஷம் தை மாதம் வெள்ளிக்கிழமையுடனான தைப்பூச நன்நாளில் நள்ளிரவு 12 மணிக்கு
சித்தியடைந்தார் .
கணபதி ஹோமம் .
வீட்டில் ஹோமங்களை அடிக்கடி செய்து கொண்டேயிருங்கள் . பிறறையும் செய்யச்சொல்லுங்கள் . ஹோமப்புகையும் மந்திரங்களும் உங்கள் வீட்டை மட்டுமல்ல; உங்கள் ஊரையே காப்பாற்றும் . இப்படி எல்லா ஊர்களிலும் எல்லோரும் செய்யத் துவங்கிவிட்டால், காற்றில் மாசு கலப்பது தவிர்க்கப்படுகிறது . உரிய காலத்தில் மழை பெய்யும் . இயற்கை சீற்றங்கள் ஏற்படாது . ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படும் . எத்தனை அணுமின் நிலையங்கள் துவங்கினாலும் கவலைப்படவேண்டாம் . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழந்த போபால் விஷவாயு விபத்தில் தினமும் ஹோமம் செய்து கொண்டிருந்த ஒருவர் வீட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
--- ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார் , மயிலாடுதுறை .
--- தினமலர் இணைப்பு , 26 . 1 . 2012 .
தாலியின் 9 நூலிழை .
தாலியின் 9 நூலிழை தத்துவம் .
மாங்கல்யச் சரடு 9 இழைகளைக் கொண்டுள்ளது . ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது . தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு, தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல், இத்தனை குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்ய சரடு அணியப்படுகிறது.
--- தினமலர் , 26 . 1 . 2012 .
அம்மி மிதித்தல் .
மணமக்கள் அக்னியை வலமாக வருகிறபோது வலப்பக்கத்திலே ஒரு கல் இருக்கும் . மணமகளின் பாதத்தை அந்தக் கல்லின் மீது வைக்குமாறு மணமகன் செய்வான் .
அதன் பொருள் , ' இந்தக் கல்லைப்போல் உறுதியாக இரு ' என்பதாகும் . தன்மேல் வைக்கும் பாரம் அதிகமானால் இரும்பு வளையும் . ஆனால், கல்லோ வளையாது . மாறாக பிளந்துபோகும் .
மணமகளே, கற்பில் நீ கல்லைப்போல் உறுதியாக இரு . அந்தக் கற்பில் கொஞ்சம் உறுதி தளர்ந்ததால் அகலிகையைக் கல்லாயிருக்கச் சொன்னார் கவுதமர் . அதனாலேதான், நீ கல்லைப் போல் உறுதியாக இரு என்று கணவன் கூறும் பாங்கில் மனைவியின் காலைப்பற்றி அந்த அம்மியின் மீது வைப்பான் .
அம்மி மிதித்தபின் அருந்ததியை வணங்குவார்கள் . ' அருந்ததி ' என்ற சொல்லுக்கு கணவனின் சொல்லுக்குக் குறுக்கே நில்லாதவள் என்று பொருள் .
--- தினமலர் , 25 . 1 . 2012 .
திசை .
ஆயுளை விரும்புகிறவன் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டும், கீர்த்தியை விரும்புகிறவன் தெற்கு முகமாக உட்கார்ந்து கொண்டும், சம்பத்தை விரும்புகின்றவன் மேற்கு முகமாக உட்கார்ந்து கொண்டும், சத்தியத்தை விரும்புகின்றவன் வடக்கு முகமாக உட்கார்ந்து கொண்டும் சாப்பிட வேண்டும் . சாப்பிடும் போது அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும்
நீலமேகச் சியாமளன் .
" தண்ணீருக்கு நிறம் கிடையாது . காற்றுக்கும் நிறம் கிடையாது . ஆனால், நீர் கடலாகவும், காற்று வானமாகவும் பரந்து விரிந்து கிடக்கும் போது பார்ப்பவர் கண்களுக்கு நீல நிறமாகத் தெரிகிறது . எல்லா இடத்திலும் பரந்து அகன்று நிற்கும் இந்த பொருள்கள் நீல நிறமாக இருப்பதைப் போலவே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளான மகாவிஷ்ணுவும் நீல நிறமாகக் காட்சி தருகிறார் . அதனால்தான் அவரை நீலமேக சியாமளன் என்று அழைக்கின்றனர் .
--- இந்து தர்ம சாஸ்திரம் ."
--- தினமலர் , இணைப்பு . 19 . 1 . 2012 .
பூஜைக்கு உரிய மலர்கள் !
பூஜைக்கு ஒவ்வொரு வேளைக்கும் ஒரு சில மலர்கள் விசேஷம் என்பார்கள் . அதிகாலை பூஜைக்கு உரியவை -- புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவட்டம், நீலோற்பவம், அலரி, செந்தாமரை .
காலை பூஜைக்கு உரியவை -- அலரி, நாயுருவி, மல்லிகை, எருக்கு, வில்வம், நந்தியாவட்டம், தாமரை, பவளமல்லி .
உச்சிகாலத்துக்கு உரியவை -- பொன் ஊமத்தை, புலிநகக் கொன்றை, பாதிரி, வன்னி, கத்திரி, மந்தாரை, சரக்கொன்றை, துர்மை .
மாலைக்கும் அர்த்த ஜாமத்திற்கும் உரியவை -- மல்லிகை, காட்டுமல்லி, மரமல்லி, மகிழ், கொன்றை, செண்பகம், சிறு செண்பகம், மரிக்கொழுந்து .
--- தினமலர் 15 .12. 2011.
கும்பாபிஷேகம் .
மூலஸ்தானத்தைக் கருவறையிலிருந்து யாக சாலைக்கு சுவாமியை அழைத்து வருவதற்கு ஒரு சாதனமாக இருப்பது கலசமாகும் . இதற்கென ஒரு குடத்தை தெய்வத் திருமேனியாகவே அதாவது சராசரி உடல் போன்று எண்ணி அலங்கரிக்க வேண்டும் என ஆகம நூல்கள் கூறுகின்றன .
குடம், நமது உடலைப் போன்றது . அதன் மீது சுற்றப்படும் முப்புரி நூல், உடலின் நாடி நரம்புகள் . உள்ளே ஊற்றப்படும் புனித நீர், உடலின் உள் உறுப்புகள் மற்றும் ரத்தம் போன்றது . குடத்தின் உள்ளே போடப்படும் நவரத்தினக் கற்கள், தங்கம், வெள்ளி போன்றவை வீரிய சக்தியைக் குறிக்கிறது .
முப்பத்தாறு தர்ப்பைகளை ஒன்றாக முடிந்து குடத்தின் நடுவே வைக்க வேண்டும் . இதை முதுகெலும்பாகவும், மாவிலைக் கொத்தை கழுத்துப் பகுதியாகவும், தேங்காயை முகமாகவும் எண்ணி அவற்றிற்குரிய மந்திரங்களைச் சொல்லி அலங்கரிக்க வேண்டும் .
கும்பாபிஷேகத்தின் யாகசாலை முதற்காலத்திற்கு முன்பாக ' கும்பாலங்காரம் ' என இந்நிகழ்ச்சியை விரிவாகச் செய்வார்கள். எனவே, புனித நீர் என்பது இறைவன் திருமேனியின் உள்ளுறுப்புகள் மற்றும் ரத்தம் போன்றது . இதன் நடுவேதான் இறைவனின் தெய்வசக்தி எனப்படும் உயிர்ச்சக்தியை மூல மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும் .
--- தினமலர் இணைப்பு , ஜனவரி 13, 2011 .
ஆன்மிக முன்னேற்றம் .
ஆன்மிக முன்னேற்றத்திற்கான தர்ம வழிகளில் நான்கு வகைகள் !
முதல் வகையின் பெயர், ' சாமானிய தர்மம் '. அதாவது மாதா, பிதா, குடும்பத்தினர், சக மனிதர்கள், குரு ஆகியோரிடம் மதிப்பு மரியாதையோடு நடந்து கொள்ளுதல் . இதைத் தனது வாழ்க்கையால் அறிவுறுத்தினார், ஸ்ரீராமர் !
2 -வது வகையின் பெயர், ' சேஷ தர்மம் '. அதாவது, ' பூலோக உறவுகள் நிலையானவை அல்ல; தெய்வீக நெருக்கமே நிலையானது ' என்ற ஞானப் பக்குவத்துடன், தெய்வத்தின் பாதங்களைச் சரணடைதல்... வாழ்க்கை முழுவதும் ஸ்ரீராமரை நிழல் போலத் தொடர்ந்து, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் லட்சுமணன் !
3 - வது வகையின் பெயர், ' விசேஷ தர்மம் ' அதாவது, எப்போதும் தெய்வீக சிந்தனையோடு இருத்தல் ... ஸ்ரீராமரை விட்டு பிரிந்திருந்த வேளையிலும் மனம் முழுக்க அவரையே நிறைத்து, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் பரதன் !
4 -வது வகையின் பெயர், ' விசேஷர தர்மம் '. அதாவது, இறையடியார்க்குத் தொண்டு புரிவதற்கே வாழ்க்கையை அர்ப்பணித்தல்.. ஸ்ரீராமரின் பூரண பக்தரான பரதனை நிழல் போலத் தொடர்ந்து, அவருக்குத் தொண்டு செய்வதையே . வாழ்க்கை நோக்கமாகக் கொண்டு, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் சத்ருக்கனன் !
நான்கு வகை தர்மங்களும் சிறப்பானவையே ; இருப்பினும், சரணாகதி தர்மமான ' சேஷ தர்ம ' முறை மிக மிகச் சிறப்பு .
--- தினமலர் இணைப்பு . மார்ச் 26 , 2011 . .
தெரியுமா? தெரியுமே !
* பஞ்சாங்கம் படிப்பதற்கு பஞ்சாங்க படலம் என்று பெயர் . கேட்பதற்குப் பஞ்சாங்க சிரவணம் என்று பெயர் .
* திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கர்ணங்கள் என்பவை பஞ்சாங்கம் எனப்படுகிறது . .
* பஞ்சாங்கத்தில் அவ்மாகம் என்றும், திரிதினஸ்பிர்க் என்றும் இருப்பதைப் பார்த்திருக்கலாம் . ஒரு நாளில் மூன்று நட்சத்திரங்களும் சேர்ந்திருந்தால், அந்த நாளை அவமாகம் என்பர் ஒரு திதி அல்லது நட்சத்திரம் அல்லது யோகம் மூன்று நாட்களில் கலந்திருந்தால் அந்த நாளை திரிதினஸ்பிர்க் என்பர் . இத்தகைய நாட்களில் சுபகாரியங்களைச் செய்யக் கூடாது .
* பஞ்சாங்கத்தின் ஐந்து உறுப்புக்களில் கரணம் ஒன்று . ஒரு நாளில் இரண்டு கரணங்கள் இடம்பெறும் . கரணங்கள் 11 . அவற்றுள் சர கரணங்கள் 7 . அவை : பவம், பாலவம், கெவுலவம், தைதுலம், சுரஜை, வனிஜை, பத்ரம் என்பார்கள் . சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் என்ற நான்கும் ஸ்திர கரணங்கள் ஆகும் .
* பூமியைச் சுற்றியுள்ள அண்டப் பெருவெளி ஒரு வட்டமாகக் கருதப்படுகிறது . அந்த வட்டத்துக்கு 360 டிகிரிகள் . அவை 12 ராசிகளாக பிரிக்கப்படுகின்றன .ஒரு ராசிக்கு 30 டிகிரிகள் சூரியன் ஒரு ராசியில் தங்கியிருக்கும் காலம் ஒரு மாதம் என்று சொல்லப்படுகிறது .
* சூரியன் ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு ஒரு மாதம் . அந்த நேரத்தில் சந்திரனோ 12 ராசிகளையும் ஒருமுரை கடந்து வந்து விடுகிறது .
* ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு . சந்திரன் சஞ்சரிக்கும் பாதையில் சந்திரனுக்கு முன்னால் உள்ள தூரம் ( அதாவது 6.6 டிகிரிகள் ) நட்சத்திரத்த்தின் முதல் இரண்டு பாதங்கள் . பின்னால் இருப்பது அந்த நட்சத்திரததிற்குரிய பின் இரு பாதங்கள் .
* ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு . ( ஒரு பாதம் என்பது 3.3 டிகிரி . ஒரு நட்சத்திரம் 13.2 டிகிரி ) .
--- தினமலர் இணைப்பு , ஏப்ரல் 7 . 2011 .
எந்த யோகத்தில் என்ன செய்யலாம் ?
அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் என்பவை யோகத்தின் வகைகள் . பஞ்சாங்கத்தில் இன்று என்ன யோகம் என்று இருக்கும் . யோகங்கள் 27 . இவற்றுக்கு தனித்தனி பலன் உண்டு .
விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வியாகாதம், வஞ்ரம், வியதீபாதம், பரிகம், வைதீருதி என்பவை தவிர்க்க வேண்டிய யோக நாட்கள் . யோகத்தின் பெயர்களும், அவற்றிற்குரிய பலன்களும் பின்வருமாறு :
விஷ்கம்பம் -- மனநடுக்கம்; ப்ரீதி -- பிரியம் ; ஆயுஷ்மான் -- வாழ்நாள்; சவுபாக்கியம் -- புண்ணியம்; சோபனம் -- நலம்; அதிகண்டம் -- பெரிய கண்டங்கள்; சுகர்மம் -- அறம்; திருதி -- துணை; சூலம் -- சில திசைப் பயண இடையூறுகள்; கண்டம் -- ஆபத்துக்கள்; விருத்தி -- ஆக்கம்; துருவம் -- ஸ்திரத்தன்மை பெறுதல்; வியாகாதம் -- பாம்பு முதலானவற்றால் ஆபத்து; அரிசனம் -- மகிழ்ச்சி; வச்சிரம் -- ஆயுதங்களால் தொல்லை; சித்தி -- வல்லமை; வியதீபாதம் -- கொலை; வரியான் -- காயம்; பரிகம் -- தாழ்வு; சிவம் -- காட்சி; சித்தம் -- திறம்; சாத்தியம் -- புகழ்; சுபம் -- காவல்; சுப்பிரம் -- தெளிவு; பிராம்மம் -- பிரமை; மாஹேத்திரம் -- இந்திரனைப் பற்றிய அறிவு; வைத்திருதி -- பேய்களால் தொல்லை .
--- தினமலர் இணைப்பு , ஏப்ரல் 7 . 2011 .
பலன்கள் !
தானதர்மத்தில் கிடைக்கும் பலன்கள் !
தீர்த்தங்களில் ( அதாவது, புண்ணிய நதிகளில் ) ஸ்நானம் செய்வது, தீர்த்தக் கரைகளில் பித்ரு காரியங்ககள் செய்வது, தான தர்மம் செய்வது எல்லாம் விசேஷ பலன்களைத் தரும் . கங்கையில் ஸ்நானம் செய்வதும், காசி விஸ்வநாதர் தரிசனமும் முக்திக்கு வழி .
பிரசித்தி பெற்ற இடம் பிரயாகை . இது, அலகாபாத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது . இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் சங்கமமாகின்றது . இதற்கு தனிப்பெருமை உண்டு . அனேக கோடி புண்ணிய தீர்த்தங்களில் சிறந்தது பிரயாகை என்றும் சொல்லப்படுகிறது . இந்த இடத்தை, திருவேணி சங்கமம் என்றும் கூறுவர் . கங்கையை விண்ணவரும், யமுனையை சூரியனும், பிரயாகையை இந்திரனும் காப்பதாக ஐதீகம் .
மனித வாழ்க்கையில் ஒரு முறையாவது பிரயாகை கங்கை ஸ்நானம் அவசியம் . இந்த பிரயாகையில் செய்யும் தானங்களுக்கு, பிரமாதமான பலன்கள் உண்டு .
பிரயாகையில் ஒரு மாதமோ, குறைந்தது மூன்று தினங்களோ தங்கி ஸ்நானம் செய்து, தான தர்மங்கள் செய்யவேண்டும் . இந்த இடத்தில் கோதானம் செய்தால், அந்தப் பசுவின் உடலில் எத்தனை ரோமங்கள் உள்ளதோ, அத்தனை வருட காலம் சிவலோக வாசம் கிடைக்கும் என்பது ஐதீகம் .
எந்த தானம் கொடுத்தாலும், அது பித்ருக்களின் பிரீதிக்காக கொடுப்பதாக நினைக்கவேண்டும் . தானம் வாங்குபவர்களும், பித்ருக்கள் திருப்தியடைவதாக எண்ணி வாங்க வேண்டும் .
கோதானம் கொடுப்பது என்றால், நன்றாகக் கறக்கும் பசுவை, கன்றுடன் சேர்த்து ( இளங்கன்று சிறந்தது ) பசுவுக்கு அலங்காரம் செய்து, கொம்பில் கொப்பிகள், குளம்புகளில் வெள்ளி காப்பு, கழுத்தில் பட்டாடை இவைகளுடன் தானம் செய்ய வேண்டும் . கிழ மாட்டையும், நோய் பிடித்த மாட்டையும், தானம் செய்வதால் பலனில்லை .
--- வைரம் ராஜகோபால் , ஞானானந்தம் தொடரில் .
--- தினமலர் , பக்தி மலர் , 6 . 3 . 2011 . ( திருச்செந்தூர் ).
பத்தும் பறந்து போகும் !
' பத்தும் பறந்து பொகும்....எப்போது ? ' எனக் கேட்டால், ' பசி வந்தால் ' என பதில் வரும் . ' நமச்சிவாய ' என்று சொன்னாலும் கூட பத்தும் பறந்து விடும் .
திருப்புகழில் அருணகிரியார்
" ஆவியீர் ஐந்தை அபரத்தே வைத்தோதில்
ஆவி ஈரைந்தை அகற்றலாம் " என்கிறார் .
" உலகமக்களே ! ஐந்தெழுத்து மந்திரமான ' சிவாயநம ' என்பதை மனதில் ஓதினால் ' ஆவி பத்தும் ' பறந்து விடும் .
அதென்ன ' ஆவி பத்து ! '
' ஆ ' என்ற எழுத்துடன் பத்தைச் சேர்த்தால் ' ஆபத்து ' . ' வி ' யுடன் சேர்த்தால் ' விபத்து '. ஆபத்து உடலுக்கு வரும் கஷ்டத்தையும், விபத்து உயிருக்கு வரும் துயரையும் குறிக்கும் . உடலுக்கு பசி, நோய் முதலிய துன்பங்களும், உயிருக்கு பிறப்பு, இறப்பு என்னும் துன்பங்களும் வருகிறது . இதனால்தான் ' சிவாயநம ' என்று சிந்தித் திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை ' என்கிறார்கள் ஆன்மிக அறிஞர்கள் .
--- தினமலர் , பக்தி மலர் , 6 . 3 . 2011 . ( திருச்செந்தூர் ).
தெரிந்ததும் தெரியாததும் !
* அத்திரிமுனிவரின் மனைவி -- அனுசூயா .
* ராவணன் -- கரனின் தம்பி .
* அழகியாக மாறிய சூர்ப்பனகையின் பெயர் -- காமவல்லி .
* சூரியனின் அம்சமாகப் பிறந்த குரங்கு மன்னன் -- சுக்ரீவன் .
* தேவலோகத்தில் பணிசெய்யும் தலைமைத்தச்சர் -- மயன் .
* வினதைக்குப் பிள்ளையாக அவதரித்த பறவை -- கருடன் .
* பிரம்மாவின் அம்சமான கரடி இனத்தலைவர் -- ஜாம்பவான் .
* ஆதிகவி என்று சிறப்பிக்கப்படும் வேடன் -- வால்மீகி .
* தசரத்ருக்கு அந்திமக்கிரியை செய்த பிள்ளை -- சத்ருக்கனன் .
* அனுமனுக்கு ' சிரஞ்சீவி ' பட்டம் அளித்தவள் -- சீதாதேவி .
--- தினமலர் , பக்தி மலர் , 6 . 3 . 2011 . ( திருச்செந்தூர் ).
கண்டுபிடிப்பு !
இந்து சமய குறியீடுகள் கண்டுபிடிப்பு !
வட அமெரிக்கா அரிசோனா மாநிலத்தில் பலாட்க்கி என்ற சிகப்பு நிறமுடைய மலைப்பகுதியில் ஜாக் அண்ட்ரூஸ் என்பவராலும், மற்றொரு குறியீடு தென்னாப்பிரிக்கா பூம்பலாசில் உள்ள சுபாஸ் சந்திரபோஸ் சதுக்கத்தில் ரோப் மில்லன் என்பவராலும் இந்த ஓம் குறியீடுகள் கண்டறியப்பட்டுள்ளன .
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓம் குறியீடு மாறுபட்ட வடிவில், அதாவது 90 டிகிரி திரும்பியது போல் கருஞ்சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ளது . தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓம் குறியீடு பாறை மீது பொறிக்கப்பட்டுள்ளது . அதில் தசமகா வித்யாக்களின் பத்து பெண் தெய்வங்களில் ஒன்றான ஸ்ரீதாராவின் இருபத்தோரு அம்சங்களை குறிப்பிடும் இருபத்தோரு கோடுகள், ஒளி ரேகைகள் போலும், ஸ்தூல, சூட்சும, காரண நிலைகளை குறிப்பிடும் மூன்று வட்டங்களும், அடுத்து பிரபஞ்ச குறியீடும், அதற்கு நடுவே இமயமலையில் உள்ள ஓம் பர்வதம் எனும் மலையில் காணப்படும் ஓம் - வடிவம் போன்றும், அதனைச் சுற்றிலும் ஒளி ரேகைகளுடன் தீர்க்க பிரணவ மந்திரமாகிய ஓம் குறியீடும் காணப்படுகின்றது . இந்த குறியீட்டில் காணப்படும் பிரபஞ்ச குறியீட்டின் வடிவத்தை தமிழகத்தின் பெரும்பான்மையான கோயில்களில் காணலாம் . இதேபோல் குறியீடு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள பெருமாள் கோயில் மகாமண்டபத்தின் வடபுற வாயில் படிக்கட்டில் பொறிக்கப்பட்டுள்ளது .
இந்தியாவின் ஆன்மிகத் தத்துவங்களும், தீர்க்க பிரணவ மந்திரமான ஓம் குறியீடும் பல்வேறு நாடுகளை சென்றடைந்துள்ளது என்பதற்கு இந்த 2 குறியீடுகள் மிகச்சிறந்த சான்றுகளாகும் .
--- தினமலர் ,18 . 3. 2011 .
சதாபிஷெகம் !
இன்னல்கள் தீர இறைவனை நாம் வணங்குகிறோம் . அந்த இறைவன் சிலரை வணங்குகிறானாம் . சகஸ்ர சந்ர தர்சீ, நித்யாக்னி ஹோத்ரி, அஸ்வத்த சேவி முதலியவர்கள் அவர்கள் .
இவர்களுள் சகஸ்ர சந்ர தர்சீ என்றால் ஆயிரம் பிறை கண்டவர் என்று அர்த்தம் . அதாவது 80 வயது மூத்தவர் என்று பொருள் .
--- தினமலர் , இனைப்பு . மார்ச் 10, 2011 .
தெய்வம் !
தெய்வம் என்ற வார்த்தை, திவ்யம் என்ற சொல்லில் இருந்து பிறந்தது . ' ஒளிமயமானது ' என்று அர்த்தம் . இதனால்தான் தெய்வ தரிசனத்தை திவ்யதரிசனம் என்கிறோம் ; தெய்வத் திருத்தலங்களை திவ்யஷேத்திரம் என்கிறோம் .
' தெய்வீகமானது ' என்பதை ஆங்கிலத்தில் ' டிவைன் ' ( Divine ) என்கிறார்கள் . இந்த வார்த்தை, நமது சமஸ்கிருத மொழியின் ' திவ்ய ' என்ற சொல்லில் இருந்துதான் பிறந்திருக்கிறது . எல்லா மதங்களிலும், ஒளிக்கு பிரதான இடம் அளிக்கப்பட்டுள்ளது . எல்லா மதங்களும், சொர்க்கத்தை ஒளிமயமான இடமாகவும் சித்தரிக்கின்றன .
ஒவ்வொரு மதத்திலும், ' இருளில் இருக்கும் எங்களை ஒளிமயமாக மாற்றுவாயாக ! ' என்ற பிரார்த்த்னை இடம்பெற்றிருக்கிறது . இதன் உட்பொருள் : ' மனிதப்பிறவி எடுத்தவர்கள், தெய்வமாக முன்னேற வேண்டும் ! '.
ஒளி, பஞ்சபூதத்தில் ஒன்றான நெருப்பில் இருந்து பிறக்கிறது . நெருப்பின் விசேஷ தன்மை : இது மட்டுமே, மேல் நோக்கி எழும்பும் ! இதனால்தான் ஒவ்வொரு மதத்திலும் ஒளியேற்றி வழிபடும் பாரம்பரியம் இருந்து வருகிறது . ' மனிதத்தன்மை என்ற கீழ்நிலையில் இருந்து மேல் நோக்கி முன்னேறுங்கள் ' என்பதே ஒளிவழிபாட்டின் உட்பொருள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![தெரியுமா ? தெரியுமே ! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![தெரியுமா ? தெரியுமே ! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![தெரியுமா ? தெரியுமே ! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![தெரியுமா ? தெரியுமே ! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இரா.பகவதி wrote:கேசவன் அண்ணா என்ன அண்ணா இப்படி ஒரேடியா கொடுத்திட்டிங்க என் ம ண்டையில மொத்ததையும் ஸ்டோர் பண்ணுர அளவுக்கு கேப்பாசிட்டி இல்ல அதனால் கொஞ்சம் கொஞ்சம அப்ப அப்ப படிச்சிகிறேன்![]()
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![தெரியுமா ? தெரியுமே ! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![தெரியுமா ? தெரியுமே ! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![தெரியுமா ? தெரியுமே ! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![தெரியுமா ? தெரியுமே ! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- Sponsored content
Similar topics
» என் பாஸ்வேர்டு உங்களுக்குத் தான் தெரியுமே!
» எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» ஏன் தெரியுமா?
» எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» ஏன் தெரியுமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|