புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 6 Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 6 Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 6 Poll_c10 
5 Posts - 63%
heezulia
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 6 Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 6 Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 6 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 6 Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 6 Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 6 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 6 Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 6 Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 6 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்


   
   

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

avatar
Guest
Guest

PostGuest Thu 31 May 2012 - 21:31

First topic message reminder :

**இத்திரியில் அரட்டை உள்ளது , விரும்பினால் இணைந்து கொள்ளலாம்

விஜய் டி வி தமிழ் சேனல்களில் பெரிய புரட்சியை விளைவித்ததை யாரும் மறுக்க முடியாது.. எல்லா வீடுகளிலும் சன் டி வி யின் ஆதிக்கம் நிறைந்த போது தனது கிரியேட்டிவிட்டியை கூர் தீட்டி பல வித்தியாசமான படைப்புகளை முன் வைத்தது. இன்று முன்னணி சேனல்கள் விஜய் டி வி பார்த்து காப்பி அடிக்கின்றன என்றால் மிகை ஆகாது..
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 6 7-neeya-naana-gopinath-pics-images-photos-stills

விஜய் டி வியில் முதன் முதலாய் வந்த கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் உல்டா தான் சன் டி வி யின் அசத்தப்போவது யாரு?அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ராஜ் மோகன் அவர்களுக்கு அதிக சம்பள ஆசை காட்டி சன் டி வி அந்த குரூப்பை இழுத்துக்கொண்டது.. கலைஞர் டி வியில் எல்லாமே சிரிப்புத்தான்.. என பட்டியல் நீளும்..


நடன நிகழ்ச்சி, பாட்டுப்போட்டி, டாக் ஷோ என சொல்லிக்கிட்டே போலாம்.. அப்படிப்பட்ட விஜய் டி வியில் ஹிட் அடித்து டி ஆர் பி ரேட்டிங்க்கில் எகிறிய புரோகிராம் தான் நீயா? நானா? இந்த நிகழ்ச்சில ஒரு தலைப்பு கொடுத்துடுவாங்க.. 2 குரூப் பிரிஞ்சு எதிர் எதிரே அமர்ந்து அவங்கவங்க கருத்தை சொல்வாங்க.. இது கிட்டத்தட்ட குழு பட்டிமன்றம் போல்..

நாட்டில் நிகழும் கரண்ட் டாபிக்கை வைத்து அலசுவதால் வாரா வாரம் ஞாயிறு இரவு அன்று பல வி ஐ பிகள் உட்பட மேல் தட்டு மக்கள் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் ஆகிட்டாங்க.. ஆனா சி செண்ட்டர் ரசிகர்கள் ரசிக்க முடியாதபடி ஆங்கிலக்கலப்புகள், ஒரு அதி மேதாவித்தனம் அந்த நிகழ்ச்சில இரண்டற கலந்திருக்கும்.



கோபிநாத்- இவரை எனக்கு ஆரம்பத்தில் மிகவும் பிடிக்கும். இவர் பர்சனாலிட்டி, டிரஸ்சிங்க் சென்ஸ்,பேசுபவர்களை மடக்கும் விதம் எல்லாம் அபாரம்.எல்லா திறமைசாலிகளுக்கும் ஒரு மைனஸ் இருக்கும்.. கோபிநாத்திடம் உள்ள மைனஸ் அவரது தெனாவெட்டு, யாரையும் குறிப்பாக அவரை விட எளியோரை, படிப்பறிவு இல்லாதவரை ரொம்ப எகத்தாளமாக பார்க்கும் மனோ பாவம் கொண்டவர்..

27.5.2012 ஞாயிறு அன்று பவர்ஸ்டாரிடம் அவர் நடந்து கொண்ட விதம் மிக மட்டமானது. ஊருக்கு இளைச்சவர்னா என்ன வேணாலும் பேசலாமா? இந்த இடத்தில் கலாய்த்தல், எள்ளி நகையாடல் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் சொல்ல வேண்டும்..

கவுண்டமணி, சந்தானம் வகையறாக்கள் படங்களில் செய்வது கலாய்த்தல்.. அது அனைவராலும் ரசிக்கப்படுகிறது .. சில சமயங்களில் எல்லை மீறினாலும் நாம் அதிகம் பொருட்படுத்தாத அல்லது பொருட்படுத்த தேவை இல்லாத அளவில் தான் அவர்கள் காமெடி உள்ளது..


எள்ளி நகையாடல் என்பது ஜெ கேப்டனை பார்த்து “ தினமும் குடிக்காமல் அவரால் தூங்க முடியாது” என்று சொன்னதும் “ இவர் தான் அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா?” என்று இவர் கேட்டதும்.. இதுக்குப்பிறகும் சுயநலத்துக்காக எலியும் , பூனையுமாய் இருந்தவர்கள் கூட்டணி அமைத்து பின் மீண்டும் எதிரிகள் ஆனது கேவலமான தமிழக அரசியல் வரலாறு

வீட்டுக்கு வரசொல்லி பழி வாங்கிட்டாங்க என்று கிராமங்களில் ஒரு சொல்வடை உண்டு.. அந்த மாதிரி விஜய் டி வி சிறப்பு விருந்தினராய் பவர் ஸ்டாரை வரச்சொல்லி அப்படி அவமானப்படுத்தியது மாபெரும் தவறு..லட்சக்கணக்கான மக்கள் பார்க்கிற ஒரு நிகழ்ச்சியில் அப்படித்தான் ஒரு நடிகரை அவமானப்படுத்துவதா?

ஒரு ரஜினியோ விஜய்காந்த்தோ அங்கே வந்திருந்தால் அப்படி செய்யும் துணிவு கோபினாத்துக்கோ, விஜய் டி வி நிர்வாகத்துக்கோ உண்டா?

கொளுத்தும் கோடை வெய்யிலில் இப்படி கோட் சூட் மாட்டிக்கிட்டு ஏன் அவஸ்தைப்படறீங்க? காசுக்காகத்தானே? என்று லைவ் கமென்ட் கொடுத்தா அவருக்கு எப்படி இருக்கும்?மிஸ்டர் கோபிநாத்.. நீங்க வீட்ல பெட்ரூம்ல கூட கோட் சூட் போட்டுக்கிட்டுத்தான் தூங்குவீங்களா? நீங்க கோட்டடையானா? என்று சபையில் நக்கல் அடித்தால் அவர் முகம் எப்படி சுருங்கும்?


இவர் பற்றி ஒரு சம்பவம் இந்த டைமில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.. ஈரோடு மாவட்டம் பெருந்துறை என்ற ஊரில் நடந்த ஒரு கல்லூரி ஆண்டு விழாவுக்கு அண்ணன் கோபிநாத்தை சிறப்பு விருந்தினராக 2 ஆண்டுகளுக்கு முன் அழைத்திருந்தார்கள்.. அண்ணன் போட்ட கண்டிஷன்ஸ்

1. ஒரு மணி நேரம் மட்டுமே இருப்பேன், அதற்கான கட்டணம் ரூ 2 லட்சம் முழுத்தொகையும் இப்போதே கொடுத்துடனும்

2. சென்னையில் இருந்து பெருந்துறைக்கு காரிலேயே வந்து அழைத்துச்சென்று காரிலேயே விட்டு விட வேண்டும்..

3. காரில் ஏ சி இருக்க வேண்டும்.. ( ஏன்னா அண்ணன் கோட் சூட்டில் தானே இருப்பார்? அதனால்) பயண நேரத்தில் சரக்கு, சிகரெட், சாப்பாடு அனைத்து செலவுகளும் ஏற்க வேண்டும்

அவர் போட்ட அனைத்து கண்டிஷன்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை காரை நிறுத்தி தம் அடிச்சு, சரக்கு அடிச்சு அண்ணன் ஃபுல் மப்பில் தான் வந்தார்..

இது அவரது தனி உரிமை.. அவருக்கு மார்க்கெட் இருக்கு, கூப்பிடறாங்க.. அவர் டிமாண்ட் பண்றாரு.. நான் கேட்பது அந்த விழாவில் அனைத்து மாணவ மாணவிகள் முன்னிலையில் அண்ணன் இந்த மாதிரி அடாவடி பண்ணுனாரு, இப்போக்கூட ஃபுல் மப்புல தான் இருக்காரு என்று மேடையில் அவமானப்படுத்தி இருந்தால் எப்படி இருந்திருக்கும் அவருக்கு?

உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவங்களுக்கு ஒரு நியாயமா?


அலப்பறை மன்னன் அண்ணன் கோபிநாத்துக்கு சில ஆலோசனைகள்


1. உலகத்துலயே தான் தான் புத்திசாலிங்கற நினைப்பை முதல்ல விட்டுடுங்க..

2. விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.. அதாவது கூட்டிட்டு வந்து கும்மி அடிக்கக்கூடாது..

3. மற்றவங்களை பேச விடுங்க.. பெரிய அதி மேதாவி மாதிரி குறுக்கே பேசாதீங்க..

4. படிக்காதவங்க எல்லாம் முட்டாள், படிச்சவந்தான் அறிவாளிங்கற நினைப்பை மாத்திக்குங்க..

5. கிராமங்களில் இருந்து வரும் நேயர்களை வழி காட்டுங்க.. ஷூட்டிங்க் டைமில் அவங்க தடுமாற்றம் பார்த்து நக்கல் அடிக்காதீங்க.

6. முடிஞ்சா வருஷம் ஒரு டைமாவது வேட்டி சட்டைல வாங்க


பிரபல ட்வீட்டர் வேணு, perundurai சொன்னது கீழே உள்ள கருத்து (GD_Venu ‏@GD_Venu)

பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் என்ற தனி நபர் 'இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர், எதற்கு இந்த விளம்பரம்? ' என்ற பாணியில் பேசும்,தைரியம் தமிழ்நாட்டில் மக்கள் அங்கிகாரம் இல்லாமல் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகள் , ஜாதிகட்சி, தலைவர்களை அழைத்து கேட்கும் தைரியம் கோபிநாத்திற்கு இருக்கிறதா?

டாக்டராக இருந்த நீங்கள் ஏன் சினிமா துறைக்கு வரணும் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது ? என்று கேட்டவர் , கண்டக்டர் , ரைஸ் மில் அதிபராக இருந்த ரஜினி,விஜயகாந்தை பார்த்து
ஏன் சினிமாவுக்கு வந்தீர்கள் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது என கேட்க முடியுமா ?கேட்டால் உங்கள் நிலைமை என்ன ?..

பிரபாகரன் இறந்த பின்னும் , அவர் இறந்ததை சொல்லாமல் ஏமாத்தும் தலைவர்களை , அழைத்து 'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை"என கேட்க முடியுமா ?

ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளி வந்து விட்டு , ஜாமீனில் வெளி வந்ததால்
2ஜி வழக்கு நீர்த்து போகும் ன்னு சொன்ன முதல்வரை அழைத்து ஏன் என்று கேட்க'போலி வாழ்க்கை என கேட்க முடியும்மா?



250 கோடிக்கு விளம்பரம் கொடுத்து , தான் செய்த நல திட்ட உதவிகளை விளம்பர படுத்தும் தமிழக அரசை இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர்'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை " என கேட்க முடியுமா?.. ..

----------------
வி சதீஷ் குமார் அவர்கள் கருத்து

ஒரு பொது நிகழ்வில் ஒரு நடிகரை (மருத்துவர் சீனிவாசன்)அல்லது ஒரு மனிதரை எப்படி நடத்த வேண்டுமென்ற குறைந்தபட்ச நாகரீகம் கூடத் தெரியாத கோபிநாத் ஒரு வக்கிரம் கொண்ட மனித கழிவு.சக நடிகரை ஒரு தொலைகாட்சி அவமான படுத்தி உள்ளது... ’’நடிகர் சங்கம்’’ என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?நடிகர் சங்க தலைவர்,செயளாலர் இதற்கு பதில் சொல்லுவார்கலா?



மிகைப்படுத்தி பேசுவதை தவிர எந்த குறையும் இல்லாத மனிதர் பவர் ஸ்டார்...
எதையும் எதிர்கொள்ளும் மனநிலையும்,
தோற்றாலும் போராடும் தன்னம்பிக்கையும்,
கேலி செய்தாலும் பொறுமை மாறாது பதில் சொல்லும் கோணத்திலும் ஒப்பிடும் போது...
ஒரு டி ஆர் பி ரேட்டிங் கூட்டி காண்பிக்க உபயோகப்படுத்தி , ஒரு மனிதனை வெளிச்சத்தில் இகழ்ச்சி செய்யும் கோபிநாத்& டீமை விட
பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த விதத்திலும்
குறைந்துவிடவில்லை...

சொந்த காசில் சினிமா எடுத்ததை தவிர தப்பான தொழில் செய்யவில்லை...
படங்கள் காணாமல் போனாலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் என்று எந்த புகாரும் இல்லை...
விஜய் டிவியின் டி ஆர் பி வெறியை விட
சீனிவாசனின் சினிமா வெறி தவறாக தோன்றவில்லை...

"நான் அவர் படமும் பார்த்தது இல்லை.."
ஏற்றுக்கொள்ள முடியாத நடிகனாக இருக்கலாம்...
தனிமனிதனாக பவர் ஸ்டார் சீனிவாசன் நல்ல மனிதர் என்பது சத்தியமாக உண்மை என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்...

மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்...
தனக்காக பிறரை இகழ்ச்சி செய்யும் விஜய் டி வி போல் அல்லாது..
உங்கள் கருத்தும் வரவேற்கப்படுகிறது

------------
Sankarkumar -சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அன்றையத் தலைப்புக்குப்
பொருத்தமான ஒரு நபரையே விஜய் டிவி அழைத்திருந்தது. கோபிநாத் கேட்ட
கேள்விகளும் பவர் ஸ்டாரின் அவர் தற்போது அணிந்திருக்கும் போலிமுகத்தின்
பின்னால் இருக்கும் உண்மையான முகம் என்ன என்பதை அறியவே தொடுக்கப்பட்டன.
ஒருவேளை, அவர் உள்ளே வருவதற்கு முன், அவரது 11 நபர் குழு போட்ட
கெடுபிடிகள் நிகழ்ச்சியாளரை எரிச்சல் அடையச் செய்திருக்கலாம். ஆனாலும்
கேள்விகள் கண்ணியமாகவே அமைந்திருந்தன. அதற்கு பவர் ஸ்டார் அளித்த
பொறுமையான பதில்கள் அவரது இமேஜை உயர்த்தியே காட்டியது.

ஒபாமாவைக் கூட அழைத்து கேள்வி கேட்கக்கூடிய சுதந்திர நாட்டில் இருப்பதாலோ
என்னவோ, இந்த நிகழ்ச்சியில் எந்தத் தவறும் எனக்குத் தெரியவில்லை. பவர்
ஸ்டார் அவமதிக்கப்பட்டதாகவும் நான் கருதவில்லை. அவரேகூட அப்படிச்
சொல்லவில்லை. 'ஒருவேளை நீங்கள் எனக்கு எதிரியாக இருக்கலாம்' என மட்டுமே
அவர் சொன்னார்!


ஆயினும், சதிஷ் சார்பில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இதே கோபிநாத்
எம்ஜியாரை அழைத்து, 'நீங்க ஏன் தொப்பி கண்ணாடி அணிஞ்சிருக்கீங்க? கொஞ்சம்
கழட்டி உண்மையான முகத்தைக் காட்டுங்க' எனக் கேட்டிருக்க முடியது;
கேட்டுவிட்டு, உயிர் பிழைத்திருக்கவும் முடியாது!புன்னகை) பவர் ஸ்டார்
என்பதால் கேட்டுவிட்டார். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிவிட்டு, கைகளை
அசைத்து விடை பெற்று சென்றும் விட்டார்!

-----------

அட்ரா சக்க


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sat 2 Jun 2012 - 18:11

உங்க கேள்வியிலேயே விடை இருக்கு ராமன். ஒரு சாமானியன் ஒரு பெண்ணைக் கற்பழித்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். அதை வழக்கமாக வரும் செய்தியாகவே பெரும்பாலானோர் பார்ப்பார்கள். அதையே ஒரு பிரபலம் செய்துவிட்டால் இந்த மனுஷன் இப்படி செய்துவிட்டாரே என்றுதான் பேசுவார்கள். அதிலும் கோபிநாத் தன்னை ஒரு சமுதாய அக்கறை கொண்ட மனிதராகவே அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவரிடமிருந்து இதுபோன்ற கேள்விகள் வரும்போது நிச்சயம் அது ஒரு விவாதப் பொருளாகவே இருக்கும்.

அடுத்ததாக வளர்கிர்ரர் என்று நீங்கள் சொல்லும் கோபிநாத் அவர்களுக்கு இத்தகையே கேள்விகள் அவர் வளர்ச்சிக்கு அவரே போடும் முட்டுக்கட்டையாகவே இருக்கும். மற்றபடி அவரது வளர்ச்சியில் ஒரு சாமானியனுக்கு என்ன ஒரு பொறாமை இருந்துவிடப்போகிறது.? அப்படிப் பார்த்தால் இவ்வுலகில் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவோ பேர் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எல்லோரையம் குறை சொல்லிக்கொண்டிருந்தால் வேறு வேலையே நாம் பார்க்க முடியாது.


அருமை அண்ணா.....நன்றிகள்........

இந்த மனுஷன் இப்படி செய்துவிட்டாரே என்றுதான் பேசுவார்கள்

இது போன்ற கனிவான கருத்து வரவில்லையே அண்ணா...அவரை குதறித்தல்லுவது போன்ற கருத்துகள் தானே வந்துள்ளது......இதனால் தான் எனக்கு அந்த சந்தேகம் வந்தது அண்ணா....நன்றிகள் புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 2 Jun 2012 - 18:13

பிஜிராமன் wrote:அதே போல
நடிக்கருக்கு முக்கியமானது நடிப்பு.....அதுவே இவரிடம் இல்லை...

அடுத்து, ரஜினி ஸ்ரீனிவாசன் இருவரின் முதல் திரைப்படங்களை பார்த்தால், யாரிடம் இந்த கேள்வியை கேட்க தகுதி உடையவர்கள் என்று முடிவு செய்யலாம் அண்ணா.....
என்ன நடிப்பு இல்லை?ரஜினி.. விஜய்.. இவர்களுடன் ஒப்பிடும் போது..? நான் மிக பெரிய ரஜினி ரசிகன் தான்.. ஆனாலும் ரஜினி எங்கே நடித்திருக்கிறார்..? அவர் ஸ்டைல்.. அவரின் தன்னடக்கமும் மட்டும் தான் மக்கள் மனதில் உள்ளது.. மற்றபடி அவரிடம் ஒன்றும் இல்லை... முதல் திரைப்படம் பெரிய இயக்குனரிடம் போகாவிட்டால் ரஜினி படமும் பவர் ஸ்டார் படம் போல தான் இருக்கும்..




முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 6 Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 2 Jun 2012 - 18:17

பிஜிராமன் wrote:அருமை அண்ணா.....நன்றிகள்........

இது போன்ற கனிவான கருத்து வரவில்லையே அண்ணா...அவரை குதறித்தல்லுவது போன்ற கருத்துகள் தானே வந்துள்ளது......இதனால் தான் எனக்கு அந்த சந்தேகம் வந்தது அண்ணா....நன்றிகள் புன்னகை
அதான் கனிவான என்று ஆப்பிள் வந்ததே - அப்புறம் என்ன?

மொய் வசூலுக்கு ரெடி ஆவுங்க வேட்டிய கட்டிக்கிட்டு - இங்க வெட்டியா கோபிநாத்துக்கு கொடி பிடிக்கிறத விட்டுட்டு...




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sat 2 Jun 2012 - 18:19

என்ன நடிப்பு இல்லை?ரஜினி.. விஜய்.. இவர்களுடன் ஒப்பிடும் போது..? நான் மிக பெரிய ரஜினி ரசிகன் தான்.. ஆனாலும் ரஜினி எங்கே நடித்திருக்கிறார்..? அவர் ஸ்டைல்.. அவரின் தன்னடக்கமும் மட்டும் தான் மக்கள் மனதில் உள்ளது.. மற்றபடி அவரிடம் ஒன்றும் இல்லை... முதல் திரைப்படம் பெரிய இயக்குனரிடம் போகாவிட்டால் ரஜினி படமும் பவர் ஸ்டார் படம் போல தான் இருக்கும்..

ரஜினி அப்டின்னு சொன்னவே ஸ்டைல் தான்.....அது அவரோட தனி அடையாளம்...முதல் படமே ஒரு மிகப்பெரிய இயக்குனரிடம் நடிக்க வேண்டும் என்றால், அவரிடம் திறமை இல்லாம எடுத்திருப்பாரா திரு பாலச்சந்தர்.

முதல் திரைப்படம் பெரிய இயக்குனரிடம் போகாவிட்டால் ரஜினி படமும் பவர் ஸ்டார் படம் போல தான் இருக்கும்..

சரி நண்பா........ புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sat 2 Jun 2012 - 18:21

அதான் கனிவான என்று ஆப்பிள் வந்ததே - அப்புறம் என்ன?

மொய் வசூலுக்கு ரெடி ஆவுங்க வேட்டிய கட்டிக்கிட்டு - இங்க வெட்டியா கோபிநாத்துக்கு கொடி பிடிக்கிறத விட்டுட்டு...


அந்த ஆப்பிள் எ கூட நான் தான் அண்ணா சொன்னேன்..... சிரி

ச்சே ச்சே நான் லாம் மொய் வசூல் பண்ண மாட்டேன்.....வேட்டிய கட்டிட்டு போட்டோ கு போஸ் குடுகுரதொட சரி......நான் பத்திரிகை அடிச்சதும் ஈகரைல போடுறேன்...வந்துருங்க அண்ணா...வர முடியலைனாலும்..அட்ரஸ் தரேன்...மொய் பணத்த அனுப்பிருங்க......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 2 Jun 2012 - 18:22

பார்த்திபன் wrote:ஒரு சாமானியன் ஒரு பெண்ணைக் கற்பழித்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். அதை வழக்கமாக வரும் செய்தியாகவே பெரும்பாலானோர் பார்ப்பார்கள். அதையே ஒரு பிரபலம் செய்துவிட்டால் இந்த மனுஷன் இப்படி செய்துவிட்டாரே என்றுதான் பேசுவார்கள். அதிலும் கோபிநாத் தன்னை ஒரு சமுதாய அக்கறை கொண்ட மனிதராகவே அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவரிடமிருந்து இதுபோன்ற கேள்விகள் வரும்போது நிச்சயம் அது ஒரு விவாதப் பொருளாகவே இருக்கும்.

அடுத்ததாக வளர்கிர்ரர் என்று நீங்கள் சொல்லும் கோபிநாத் அவர்களுக்கு இத்தகையே கேள்விகள் அவர் வளர்ச்சிக்கு அவரே போடும் முட்டுக்கட்டையாகவே இருக்கும். மற்றபடி அவரது வளர்ச்சியில் ஒரு சாமானியனுக்கு என்ன ஒரு பொறாமை இருந்துவிடப்போகிறது.? அப்படிப் பார்த்தால் இவ்வுலகில் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவோ பேர் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எல்லோரையம் குறை சொல்லிக்கொண்டிருந்தால் வேறு வேலையே நாம் பார்க்க முடியாது.
நல்ல முதிர்ச்சியான விளக்கம் அருமையிருக்கு




முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 6 Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Sat 2 Jun 2012 - 18:27

என்ன ஆச்சு பிஜி ... நீயா இப்படி எல்லாம் பேசுற ?

பவர் ஸ்டார் அமர்ந்து இருந்த இடத்தில நமது தந்தையை வைத்து கற்பனை செய்து பார்க்கவும் ...

அப்பவும் உனக்கு சீரியஸ் நெஸ் புரியலேன உன் வயசு அப்படி ...

நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 2 Jun 2012 - 18:36

புரட்சி wrote:என்ன ஆச்சு பிஜி ... நீயா இப்படி எல்லாம் பேசுற ?

பவர் ஸ்டார் அமர்ந்து இருந்த இடத்தில நமது தந்தையை வைத்து கற்பனை செய்து பார்க்கவும் ...

அப்பவும் உனக்கு சீரியஸ் நெஸ் புரியலேன உன் வயசு அப்படி ...

நன்றி
இள ரத்தம் - வேதனை புரியவில்லை - அதான்.




avatar
Guest
Guest

PostGuest Sat 2 Jun 2012 - 18:38

யினியவன் wrote:
புரட்சி wrote:என்ன ஆச்சு பிஜி ... நீயா இப்படி எல்லாம் பேசுற ?

பவர் ஸ்டார் அமர்ந்து இருந்த இடத்தில நமது தந்தையை வைத்து கற்பனை செய்து பார்க்கவும் ...

அப்பவும் உனக்கு சீரியஸ் நெஸ் புரியலேன உன் வயசு அப்படி ...

நன்றி
இள ரத்தம் - வேதனை புரியவில்லை - அதான்.

உண்மைதான் அண்ணே சோகம்
இருந்தாலும் இனி புரிந்து கொள்வார் பிஜி என நம்புகிறேன் ...
தவறாக ஏதும் கூறி இருந்தால் மன்னிக்கவும் ...

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Sat 2 Jun 2012 - 18:42

விநாயக மெஸ் address
[quote="பிஜிராமன்"]
என்ன நடிப்பு இல்லை?ரஜினி.. விஜய்.. இவர்களுடன் ஒப்பிடும் போது..? நான் மிக பெரிய ரஜினி ரசிகன் தான்.. ஆனாலும் ரஜினி எங்கே நடித்திருக்கிறார்..? அவர் ஸ்டைல்.. அவரின் தன்னடக்கமும் மட்டும் தான் மக்கள் மனதில் உள்ளது.. மற்றபடி அவரிடம் ஒன்றும் இல்லை... முதல் திரைப்படம் பெரிய இயக்குனரிடம் போகாவிட்டால் ரஜினி படமும் பவர் ஸ்டார் படம் போல தான் இருக்கும்..

ரஜினி அப்டின்னு சொன்னவே ஸ்டைல் தான்.....அது அவரோட தனி அடையாளம்...முதல் படமே ஒரு மிகப்பெரிய இயக்குனரிடம் நடிக்க வேண்டும் என்றால், அவரிடம் திறமை இல்லாம எடுத்திருப்பாரா திரு பாலச்சந்தர்.

முதல் திரைப்படம் பெரிய இயக்குனரிடம் போகாவிட்டால் ரஜினி படமும் பவர் ஸ்டார் படம் போல தான் இருக்கும்..

சரி நண்பா........ புன்னகை [/கியோடே முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 6 Vinayaga



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக