புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10அறியா அறிவிலியா தமிழன்? Poll_m10அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10அறியா அறிவிலியா தமிழன்? Poll_m10அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10அறியா அறிவிலியா தமிழன்? Poll_m10அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10அறியா அறிவிலியா தமிழன்? Poll_m10அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10அறியா அறிவிலியா தமிழன்? Poll_m10அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10அறியா அறிவிலியா தமிழன்? Poll_m10அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10 
19 Posts - 3%
prajai
அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10அறியா அறிவிலியா தமிழன்? Poll_m10அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10அறியா அறிவிலியா தமிழன்? Poll_m10அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10அறியா அறிவிலியா தமிழன்? Poll_m10அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10அறியா அறிவிலியா தமிழன்? Poll_m10அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10அறியா அறிவிலியா தமிழன்? Poll_m10அறியா அறிவிலியா தமிழன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியா அறிவிலியா தமிழன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri May 25, 2012 7:45 am

ஒரு காலத்தே இமயமுதல் குமரிவரை ஒரு மொழியைக் கொண்ட தமிழன், பின்னொரு காலத்தே ‘தமிழன்’ எனத் தன் பெயர் சொல்லவும் வாயும் மனமும் கூசும் நிலையடைந்தான்; தன்னை ‘நான் ஒரு தமிழன்’ எனப் பெருமையோடு கூறிக் கொள்ளவும் குற்றமெனக் கடிந்து கூறப்படும் நிலையை அடைந்தான்.

தமிழ் எனது தாய்மொழி, தமிழ் ஒரு தனிமொழி, தமிழ் இனிய எளிய இயல்பு மொழி எனக் கூறுவது தவறெனப்பட்டது. தமிழர் ஒரு தனியினம் என்பதை அறியா அறிவிலியானான் தமிழன்.

இமயத்தில் புலிவிற்கெண்டை பொறித்து ஏக்கழுத்தமுடன் வாழ்ந்த தமிழன் தன்னாட்சியிழந்து தன்னுரிமையிழந்து, தன்னிலை தாழ்ந்து, தன்னியல் பிறழ்ந்து அயலார்க்கு அடிமையானான். மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்ன மானமுடைய மறத்தமிழன் தன்மானத்தையும் இழந்தான்.

இமயவரம்பன், நெடுஞ்சேரலாதன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கங்கை கொண்ட சோழன் எனத் தன் முன்னோர் பெயரை மொழிவதும் குற்றமெனக் கருதினான்; தமிழரைப் பழித்த கனகவிசயர் என்னும் ஆரிய வரசரின் முடித்தலையில் கண்ணகி படிமக்கல் ஏற்றிவந்த சேரன் செங்குட்டுவன் பெயரைச் சிந்திப்பதும் தீதென எண்ணினான்; தமிழரின் வலியறியாது வந்த வடபுலத்தரசனான மோரியனின் புறத்தைக் கண்டு செம்மாப்போடு சிரித்து நின்ற பழையன் மோகூரின் பண்பைப் பகர்வதும் பழுதெனக் கொண்டான்;

புகழொடு வாழ்ந்த தன் முன்னோர் பெயரையும் அறியாத முழுமகன் ஆனான் தமிழன்; இல்லை, ஆக்கப்பட்டான். தான் யார், தன் முன்னோர் யார், அன்னாரின் வாழ்க்கை வரலாறு என்ன, தன் வழி மரபு யாது? என்பன போன்ற தன்னிலை அறியா ஊமனான் தமிழன்.

தமிழ்நாட்டில், தமிழ் மக்கள் கூட்டத்தில் பேசப்படும் பேச்சுக்களில், ஆரியப் பாதுகாப்பு நூல்களான கீதையும், பாரதமும், இராமாயணமும் எடுத்துக்காட்டு நூல்களாக விளங்கினவேயன்றி, திருக்குறள் முதலிய தமிழ் நூல்கள் இடம் பெறவில்லை. எங்கு பார்த்தாலும் இராமாயணச் சொற்பொழிவுகள், பாரதச் சொற்பொழிவுகள், புராணப் பேச்சுக்கள். திருக்குறட் பேச்சோ, சிலப்பதிகாரப் பேச்சோ இல்லை. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, முதலிய சங்க நூல்கள் தமிழ்மக்கட்குத் தெரியாப் பொருள்களாயின. தொல்காப்பியம் என்ற ஒரு சிறந்த பழந்தமிழ் நூல் உண்டு என்பது தமிழர்க்கு அறவே தெரியாது.

“ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவு மிலக்கணஞ் செய்து கொடுத்தான்” ( பாரதியார்)

எனத் தமிழ்மொழியும் கூட ஆரியமக்கள் பெற்று வளர்த்து அன்போடு தமிழர்க்குக் கொடுத்தார்கள் எனப்பேசப்பட்டது.

(தொடரும்)
(புலவர் குழந்தை எழுதியது)


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 25, 2012 9:26 am

தமிழ் பற்றிய அருமையான பதிவை அளித்தமைக்கு நன்றி அய்யா தொடருங்கள் சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Fri May 25, 2012 9:48 am

சூப்பருங்க அருமை அண்ணா ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 25, 2012 10:10 am

நல்ல பகிர்வு சாமி.

ஒரு காலத்தில் பத்திரிகைத் துறை, ஆளும் வர்க்கம் இவற்றில் ஆரிய ஆதிக்கம் இருந்தது. தற்பொழுது அந்த அளவுக்கு இல்லை எனினும் இன்னும் கொஞ்சம் இருக்கத் தான் செய்கிறது.

இன்று இணைய, தொழில் நுட்ப வளர்ச்சியினால் அனைவருக்கும் வேண்டியதும் வேண்டாததும் நிறையவே கிடைக்கிறது - நாம் நல்லதை அறிந்து பயன்பெறுவோம் - இதுபோல் செய்திகளையும் அறிந்து கொள்வோம்.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 25, 2012 11:08 am

தமிழன் ஆட்சிக்கு வந்தபிறகும் இதையெல்லாம் மறந்து போனான் பதவிக்காக.... இன்றைய தொலைக்காட்சிகள் பழையனவற்றை மறைக்கும் செயலை தான் செய்துக்கொன்டிருக்கிறது. அருமையான பகிர்வு..இது.. பாராட்டுக்கள்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri May 25, 2012 11:39 pm

கீதை ஆரியர் நூல் அல்ல !கிரிச்னர் காலத்தில் பிராமணர்கள் ஆதிக்கமில்லை ! வால்மீகி விசுவாமித்திரர் வசிச்ட்டார் வியாசர் அகத்தியர் முதலானோர் திராவிடர்களே !பிராமணர்கள் அல்ல !



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat May 26, 2012 2:00 am

நன்றாயிருந்தபோது என்ன பாவம் செய்தானோ தமிழன் இன்று இந்த இழிநிலை அடைய?
ஆனால் காலம் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. நிச்சயம் தமிழன் உலகையாளுவான்.

நல்ல பதிவு , நன்றி சாமி அவர்களே.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 27, 2012 7:24 am

> உடன்பிறப்பன்புக்கு (சகோதர அன்பு) பாண்டுவின் மக்களும் தசரதன் மக்களும் எடுத்துக்காட்டாக விளங்கினார்களேயொழிய நெடுங்சேரலாதன் மக்கள் விளங்கவில்லை (நெடுஞ்சேரலாதன் மக்கள்-செங்குட்டுவனும் – இளங்கோவும். இளங்கோ, அரசு தனக்குரியதெனக் கூறிய நிமித்திகன் சொல்லைப் பொய்யாக்கித் துறவு பூண்டு அண்ணனுக்கு அரசு கிடைக்கும்படி செய்தவன்.)

> மாதர் பண்புக்குச் சீதையும் துரோபதையும் சான்றானார் களேயன்றிக் கோப்பெருந்தேவியும் மாதவியும் சான்றாகவில்லை (கோப்பெருந்தேவி – கோவலனைக் கொன்ற நெடுஞ்செழியன் மனைவி. கோவலனைக் கொன்றது தவறெனவுணர்ந்து பாண்டியன் இறந்ததும் உயிர் நீத்தவள். மாதவி – பொதுமகளாக இருந்தும் கோவலனிறந்ததும் துறவு பூண்டவள்.)

> ஆண்மைக்கு அர்ச்சுனனும் இராமனும் முன்னின்றார்களேயல்லாமல் செங்குட்டுவனும் கரிகாலனும் முன்னிற்கவில்லை.

> கொடைக்குக் கர்ணனும் நளனும் முன்வந்தார்களே தவிரக் காரியும் பாரியும் முன்வரவில்லை.

> அருந்ததி கற்பரசியானாளே யல்லது கண்ணகி கற்பரசியாகவில்லை.

> அரசியற் அறிவிற்குச் சாணக்கியன் சான்றானானே தவிர வள்ளுவன் சான்றாகவில்லை.

> காரிகையர் தீரத்துக்குக் கைகேசியும் ஜான்சி ராணியும் கை கொடுத்தார்களேயன்றி அல்லியும் முத்துநாச்சியும் கொடுக்கவில்லை (அல்லி-அர்ச்சுனன் மனைவி; பாண்டிக்குமரி; பாண்டவரைப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்தவள். முத்துநாச்சி – கட்டபொம்மன் தங்கை; ஆண்கோலம் பூண்டு வெள்ளைப் படையோடு வீரப்போர் புரிந்தவள்.)

> நட்புக்கு நரநாராயணர் (அர்ச்சுனனும் கண்ணனும்) எடுத்துக்காட்டானார்களேயல்லாமல் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் எடுத்துக் காட்டாகவில்லை ( கோப்பெருஞ்சோழன் – உறையூர், பிசிராந்தையார் – பாண்டுநாடு. இருவரும் கேள்விமூலம் உணர்ச்சியொன்றி நண்பரானவர். கோப்பெருஞ்சோழன் உண்ணாநோன்பிருந்து உயிர்விட, பிசிராந்தையார் உணர்ச்சியால் அறிந்து உறையூர் வந்து உடனுயிர் விட்டவர்.)

> ஆடலுக்கு அரம்பையர் அரங்கேறினார்களே யொழியத் தமிழ் விறலியர் அரங்கேறவில்லை.

> இசைக்குக் கந்தருவர் பண்ணமைத்தார்களேயல்லது பாணர் பண்ணமைக்கவில்லை.

இதைப்போல சொல்லிக் கொண்டே போகலாம். இடம் போறாது.

ஒரு காலத்தே இமயமுதல் குமரிவரை ஒரு மொழியைக் கொண்ட தமிழன், பின்னொரு காலத்தே ‘தமிழன்’ எனத் தன் பெயர் சொல்லவும் வாயும் மனமும் கூசும் நிலையடைந்தான்; தன்னை ‘நான் ஒரு தமிழன்’ எனப் பெருமையோடு கூறிக் கொள்ளவும் குற்றமெனக் கடிந்து கூறப்படும் நிலையை அடைந்தான்.

(புலவர் குழந்தை எழுதியது)

(பின் குறிப்பு: தமிழன் தன்னையறியத் தலைப்படுவது எப்போது? யார் என்றே தெரியாத அயலார்களை எடுத்துக்காட்டுவதை விடுத்து நம்மவர்களை சான்றுகாட்டப்போவது எப்போது? பண்பாடு, ஒழுக்கம் உள்ள நமது முன்னோர்களை சான்றுகாட்டப்போவது எப்போது? எதற்கும் பயன்படாத திரைத்துறை நிழல் கதாநாயகர்களை விடுத்து உண்மைக் கதாநாயகர்களை கொண்டாடப் போவது எப்போது? தாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒடுக்கப்படுகிறோம் என்பதை உணரப்போவது எப்போது? டாஸ்மாக் சாகசங்களை, தொலைக்காட்சி நேரப்போக்குகளை, வெட்டிப் பேச்சுக்களை விடுத்து தமிழன் வரலாறைப் பேசப் போவது எப்போது?????

இதை அறிந்து திருந்தும் வரை….
தமிழன் அறிவிலிதான் ! அறியா அறிவிலிதான் !! அறிந்தும் திருந்தா அறிவிலிதான் !!!)






பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon May 28, 2012 9:58 am

அருமையான கட்டுரை சாமி!!!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 28, 2012 7:53 pm

அகிலன் wrote:நன்றாயிருந்தபோது என்ன பாவம் செய்தானோ தமிழன் இன்று இந்த இழிநிலை அடைய? ஆனால் காலம் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. நிச்சயம் தமிழன் உலகையாளுவான்.
பாவம் எதுவும் செய்யவில்லை. அவனது நல்ல குணங்களே, பண்பாடுகளே அவனுக்கு வினையானது.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக