புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு..... Poll_c10எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு..... Poll_m10எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு..... Poll_c10 
5 Posts - 63%
heezulia
எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு..... Poll_c10எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு..... Poll_m10எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு..... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு..... Poll_c10எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு..... Poll_m10எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு..... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு.....


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 25, 2012 10:18 am

எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு..... 428439_421270181245938_100000888786399_1298871_915117291_n




காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆரம்ப அறிகுறிகள்: "டெங்கு' காய்ச்சல் பரவுவதை தடுக்க கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் நீர்நிலைகளை சுத்தம் செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகள் குறித்து மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி குழந்தைகள் நல டாக்டர் கண்ணன் கூறியதாவது: பகலில் மட்டுமே கடிக்கும் தன்மையுள்ள "ஏடெஸ்' எனப்படும் கொசுவின் மூலம் டெங்கு வைரஸ் பரவுகிறது. இதில் நான்கு வித வைரஸ்கள் உள்ளன. இக்கொசுக்கள் நீர்த்தேக்கங்கள், தேங்கி நிற்கும் மழைநீரில் காணப்படுகிறது. குடிநீர் தொட்டிகளிலும் வசிக்கின்றன.

இக்கொசுக்கடியால் அதிகப்படியான காய்ச்சல், ரத்தக்கசிவு நோய், திடீரென ரத்த அழுத்தம் குறைதல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. கொசு கடித்த ஒருவாரத்திற்குள் நோய் அறிகுறிகளை காணலாம். தொடர்ச்சியான காய்ச்சல், தொண்டைவலி, மூக்கில் நீர்வழிதல், இருமல் ஆரம்ப அறிகுறி. உடலில் 103 முதல் 106 டிகிரி வெப்பம் இருக்கும். நெற்றி, கண்களில் தாங்க முடியாத வலி ஏற்படும். தோலில் மாற்றம் ஏற்படும். இது தொடர்ந்தால் ரத்த அழுத்தம் குறையும். தசை, மூட்டுகளில் வலி தோன்றும். கல்லீரல் வீக்கம் அடைவதால் வயிற்றில் வலி ஏற்படும். கருப்பு நிறத்தில் மலம், அதிக தூக்கம், வலிப்பு, ரத்தவாந்தி அறிகுறிகளாக இருக்கும். பெரும்பாலோருக்கு இந்நிலையில் நோய் முற்றிலும் அகன்றுவிடும். சிலருக்கு அடுத்தநிலையில், ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அணுக்கள் குறைந்து ரத்தக்கசிவை ஏற்படுத்தும். இது ஆபத்தான அறிகுறி. டாக்டரை அணுகி, உடலில் நீர்ச்சத்து குறைந்தது குறித்து அறிந்து, குளுக்கோஸ் மற்றும் சத்து பொருளை செலுத்த வேண்டும். பிளேட்லெட், பி.சி.வி., ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் மற்றவர்களுக்கும் வரவாய்ப்புகள் அதிகம். குழந்தைகளுக்கு கை, கால்களை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணியலாம். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இவ்வகை கொசுக்கள் அதிகம் உள்ளன. அவற்றை ஒழித்து நோயில் இருந்து பாதுகாக்கலாம். கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் நீர்நிலைகளை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


ஆஸ்பத்திரி டீன் எட்வின்ஜோவிடம் கேட்டபோது, ""டெங்கு காய்ச்சலுக்கு ரேபிட் டெஸ்ட், பி சிவி என இரு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். முதல் பரிசோதனையில் "பாசிட்டிவ்' ஆக முடிவு வந்துவிட்டது. மற்றொரு பரிசோதனை முடிவு வர 3 நாட்கள் ஆகும். அதன்பின்பே "டெங்கு' குறித்து முடிவு செய்ய முடியும். டெங்கு காய்ச்சல் பாதித்தோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டள்ளது. ஆஸ்பத்திரி வளாகம், வார்டுகளில் கொசுக்களை ஒழிக்க மருந்து அடிக்கப்படுகிறது,'' என்றார்.

டெங்கு பீதி வேண்டாம்: சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை: ""மதுரையில் "டெங்கு' பாதிப்பை தடுக்க, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என சுகாதார துறை துணை இயக்குனர் சண்முக சுந்தரம், மலேரிய அலுவலர் லதா பிரிடாஜோன் தெரிவித்தனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில், அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பலர் காய்ச்சலுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது குழந்தைகள் வார்டு மற்றும் மருத்துவ பிரிவுகளில் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு "டெங்கு" பாதிப்பு இல்லாவிட்டாலும், சந்தேக அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமிருப்பதை தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில், எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை வரும் நெல்லை பஸ்களுக்கு கொசு மருந்து அடிக்கப்படுகிறது. அதிகாரிகள் சண்முகசுந்தரம், லதா பிரிடாஜோன் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் வீடுவீடாக, குடிநீர் தொட்டிகளில் கொசுக்களின் "லார்வா'க்களை அழிக்க மருந்தை வழங்கி வருகிறோம். சுயஉதவிக்குழு, ஆசிரியைகள், கவுன்சிலர்கள் என பலதரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒரு யூனியனுக்கு 2 ஊழியர்களை நியமித்து, இதுபற்றிய பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு இருந்த இடங்களில், இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். இந்நடவடிக்கை 2 வாரங்களுக்கு இருக்கும். பின், மற்ற பகுதிகளில் சுழற்சி முறையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுரையில் இறந்த குழந்தையின் குடும்பத்தினர் தென்காசிக்கு மே 10 ல் சென்றுள்ளனர். கொசு கடித்த பின், பாதிப்பு ஏற்பட ஒரு வாரம் ஆகும். இக்குழந்தைக்கு 20ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன்பின், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, மதுரையில் டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை, என்றனர்.

MUKANUUL

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 25, 2012 10:30 am

பகிர்வுக்கு நன்றி பகவதி
யினியவன் என்கிற கொசு என்னை துரத்தி துரத்தி கடிக்குது என்ன செய்யலாம் ஒன்னும் புரியல

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 25, 2012 10:37 am

டெங்கு காய்ச்சல் இனியும் பரவாமல் மருத்துவத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 25, 2012 10:41 am

பகிர்வுக்கு நன்றி பகவதி
யினியவன் என்கிற கொசு என்னை துரத்தி துரத்தி கடிக்குது என்ன செய்யலாம்

அவரோட அசிரமத்துக்கு சாப்பாடு கொண்டு போகும் ஆயவை கொர்ரெக்ட் பண்ணி அவர் சாப்பாட்டில் மருந்து வச்சிட வேண்டியது தான்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 25, 2012 10:43 am

இரா.பகவதி wrote:
அவரோட அசிரமத்துக்கு சாப்பாடு கொண்டு போகும் ஆயவை கொர்ரெக்ட் பண்ணி அவர் சாப்பாட்டில் மருந்து வச்சிட வேண்டியது தான்
பகவதி
எங்க போனாலும் ஆயாவ கரெக்ட் பன்றதையே குறியா இருக்கீங்க ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 25, 2012 10:51 am

பகவதி
எங்க போனாலும் ஆயாவ கரெக்ட் பன்றதையே குறியா இருக்கீங்க

எல்லாம் உங்களூக்காக தான் பைத்தியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 25, 2012 10:53 am

இரா.பகவதி wrote:
பகவதி
எங்க போனாலும் ஆயாவ கரெக்ட் பன்றதையே குறியா இருக்கீங்க

எல்லாம் உங்களூக்காக தான் பைத்தியம்
இதமாதிரி எத்தனை பேருகிட்ட சொல்லி எத்தனை ஆயாவை கரெக்ட் செய்தீங்களோ என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 25, 2012 11:04 am

முரளிராஜா wrote:யினியவன் என்கிற கொசு என்னை துரத்தி துரத்தி கடிக்குது என்ன செய்யலாம் ஒன்னும் புரியல
மிருகமா மாறிடுங்க வீட்டில் - நடக்குற விஷயமா அது? புன்னகை

கொசுக் கடி பட்டு, அடி பட்டு வாழனூன்னு உங்க தலை விதி. என்ன செய்ய முடியும்?




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 25, 2012 11:12 am

யினியவன் wrote:
முரளிராஜா wrote:யினியவன் என்கிற கொசு என்னை துரத்தி துரத்தி கடிக்குது என்ன செய்யலாம் ஒன்னும் புரியல
மிருகமா மாறிடுங்க வீட்டில் - நடக்குற விஷயமா அது? புன்னகை

கொசுக் கடி பட்டு, அடி பட்டு வாழனூன்னு உங்க தலை விதி. என்ன செய்ய முடியும்?
வீட்டுல வாங்குற அடிய விடவா நம்ம இனியவன் அண்ணா அடிக்கிற அடி சாரி கடி.. ஹி ஹி.... (கொலவெறி கொலவெறி) சிப்பு வருது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 25, 2012 11:20 am

இதமாதிரி எத்தனை பேருகிட்ட சொல்லி எத்தனை ஆயாவை கரெக்ட் செய்தீங்களோ

எங்க கொர்ரெக்ட் பண்ண உடுரீங்க நீங்க எல்லாம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக