புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
20 Posts - 65%
heezulia
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
62 Posts - 63%
heezulia
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பரஸ்பர புன்னைகையாலே..


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 11:05 pm

உன் பரஸ்பர புன்னைகையாலே.. 14377386


இருபத்தி இரண்டு வருடங்கள்
வாழ்வின் நேர்கோட்டில் மட்டுமே
பயணித்துக் கொண்டு இருந்த என்னை,
திரும்பி வர முடியாத உன்
இதயமென்னும் ஒருவழிப் பாதையில்
பயணிக்க வைத்தது நீதான்......

படுத்தவுடன் தூங்கிவிடும்
பழக்கம் இருந்ததெனக்கு..
இப்போதெல்லாம் தூக்கத்தையே தேடும்
பழக்கத்திற்கு ஆளாகி விட்டேன்.
காரணம் தூக்கத்தை விவாகரத்து செய்து,
கனவுகளை எனக்கு திருமணம்
செய்து வைத்தது நீதான்.

உலகுடன் சண்டையிட்டு
விழிகளை மூடிக்கொண்டேன்
கனவில் உன்னை மட்டுமே ரசிக்க. .
நீயும் வந்தாய் என்னுடன்
சண்டையிட்டு என்னை ரசிக்க.

எனக்கு தெரியும்
உன் செல்ல சீண்டல்களும்,
பொய் கோபங்களும்
என்னை ரசிக்கவே என்று..
ஆனாலும் கோபித்தபடியே
அதை நானும் ரசிப்பேன்.

அது சரி யாருமே நுழைய
இயலாத வண்ணம் இத்தனை காவல்கள்
போடப்பட்டிருக்கும் என் கனவு
தேசத்திற்குள் நீ மட்டும் எப்படி
எந்த வித தடங்கலும் இன்றி
எளிதாய் நுழைகிறாய்?

தேசம் விட்டு தேசம் செல்ல
பாஸ்போர்ட், விசா
எல்லாமும் தேவையாயிற்றே,
நீ எப்படி எந்த கடவுச்சீட்டும் இன்றி
என் கனவு தேசத்தில் நுழைகிறாய்?

நீ வருகிறாய்
என் கனவுகளும்
காதலிக்க தொடங்குகின்றன.
நீ சிரிக்கிறாய்
உதிர்ந்த சிறகுகளும்
ஒட்டிக்கொள்கின்றன
என் கற்பனை குதிரைக்கு..

குதிரைத்திறன் எல்லோருக்கும் தெரியும்
என் குதிரைக்கே திறன் கொடுக்கும்
உன் திறன் யாருக்கு தெரியும்?

அது எப்படி என்
ஒவ்வொரு செல்லும்
உன் சொல்லுக்கு மட்டும்
கட்டுப்படுகின்றன?

நீயோ சிறிதும் இடைவெளி இன்றி
புன்னகைத்துவிட்டு போகிறாய்
உன் புன்னகை தொடர்வண்டியின் கீழ் சிக்கி
சின்னா பின்னமாகும் என் மனதை
யார் வந்து காப்பாற்றுவது?

உன் பாஸ்பரஸ் புன்னகையினால்
பற்றி எரியும் என் மன"தீ"யை அணைக்க
ஒரு வழி சொல்.

புதிர் என்ற வார்த்தைக்கு
அகராதியில் அர்த்தம் தேடினேன்.
என்ன ஆச்சர்யம் அதற்கு நேரே
உன் பெயர். ஆம் அதுவும் சரிதான்.
நீயும் ஒரு புதிர்தானே?

உன் புன்னகையின் மர்மம்
மில்லியன் டாலர் கேள்வி மட்டும் அல்ல.
ட்ரில்லியன் டாலர் கேள்வியும்தான்.

எல்லா புதிருக்கும்
ஒரு விடை இருக்கும்.
உன் புன்னகை புதிருக்கு?

உனக்கு தெரியுமா?
ஒருமுறை நான் கடவுளிடம்
சண்டையிட்டு விட்டேன்.
என்னை பழி வாங்க நினைத்த
கடவுள் ஏதேதோ செய்தார்.
முடியவில்லை பாவம்
தோற்றுப்போய் நின்றார்.
நான் கை கொட்டிசிரித்தேன்.

கடவுள் யோசித்தார்
இறுதியாய் உன்னை அனுப்பினார்.
இப்போது அவர்
கை கொட்டி சிரிக்கிறார்.

நீ என் அருகிலிருக்கும் நேரங்களில்
கடவுளின் வரமாய் தெரிகிறாய் .
நீ என்னைவிட்டு
விலகி இருக்கும் நேரங்களில்
கடவுளின் சாபமாய் தெரிகிறாய்.
நீ எனக்கு வரமா? சாபமா?

நான் உன்னை பூங்கொத்து
கொடுத்து வரவேற்கிறேன்.
நீயோ என்னை உன்
புன்னகை"கொத்தால்" வரவேற்கிறாய்.
சூரியனின் முன் நிற்கும்
விட்டில் பூச்சியைப் போல்
என் பூக்கள் உன் புன்னகையின் முன்
வாடிப்போகின்றன.

இந்த உலகில் தோற்பதை
யாரவது விரும்புவார்களா?
இதோ நானிருக்கிறேன்.
ஆம். உன் முன்னால்
தோற்க நான் விரும்புவேன்.

நான் உன் விளையாட்டுக்களில்
தோற்றவுடன்தான் உன்
முகத்தில் எத்தனை மின்னல்கள்.
மகிழ்ச்சியில் உன் புருவங்கள்
உயர்ந்து கேசங்களாகும் அதிசயத்தை
காண்பதற்காகவே எத்தனை முறை
வேண்டுமானாலும் உன்னிடம் தோற்கலாம்.

உன் தேசத்தில்
உன்னிடம் தோற்பதற்காகவே
படைக்கப்பட்டவன் நான்.

எனக்கு தெரிந்தாலும்
தெரியாத மாதிரி
காட்டிக்கொள்வேன் நான்.
எனக்கு தெரியாது என்பதாய்
நினைத்து நீ விவரித்து கூறும்
அழகுக்காகவே.

பொதுவாய் அதிகமாய்
பேசுவேன் நான்.
உன் முன் மட்டும்
வார்த்தைகளை பூட்டி வைத்துவிட்டு
செவிகளை திறந்து வைத்துக் கொள்வேன்.

இந்த உலகில்
எனக்கான மிகப்பெரிய
சந்தோஷம் என்ன தெரியுமா?

உன் படிப்பு, உன் வேலை,
உன் திறமை, உன் நிறம்,
உன் பெற்றோர், உன் உடன் பிறப்புக்கள்,
உன் கடவுள், உன் சிரிப்பு,
உன் அழுகை, உன் தேவைகள்..
இப்படி உன் சம்மந்தப்பட்ட
அத்தனை விஷயங்களும்
எல்லோருக்கும் எதோ ஒரு
வகையில் தெரிந்திருக்கும்.

ஆனால் உன்னைப்பற்றி
யாருக்குமே தெரியாத ஒரு விஷயம்
எனக்கு மட்டுமே தெரியும்.
அது இந்த உலகில் வேறு
யாருக்கும் தெரியாது.

இவ்வளவு ஏன் உன் தாய்க்கு
கூட அது தெரியாது.
அது எனக்கு மட்டுமே தெரியும்.
அது உன் வாசனை.

அதை என்னால் மட்டுமே
உணர முடியும்.
வேறு யாராலும்
உணர முடியாது,
உன்னால் கூட... உன் பரஸ்பர புன்னைகையாலே.. 154550 உன் பரஸ்பர புன்னைகையாலே.. 154550 உன் பரஸ்பர புன்னைகையாலே.. 154550 உன் பரஸ்பர புன்னைகையாலே.. 599303 உன் பரஸ்பர புன்னைகையாலே.. 599303 உன் பரஸ்பர புன்னைகையாலே.. 599303 உன் பரஸ்பர புன்னைகையாலே.. 942



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக