புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 2:45 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 8:39 am

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 8:34 am

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 2:49 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 8:36 am

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 8:34 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 2:48 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 4:55 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 4:54 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 4:52 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 4:51 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 10:28 am

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 10:23 am

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 8:49 am

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 8:40 am

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 8:31 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 8:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 8:01 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 5:15 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 1:37 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 1:34 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 9:03 am

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 8:50 am

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 8:25 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 7:50 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:22 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 3:32 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 3:30 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 3:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 8:05 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 6:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
46 Posts - 47%
heezulia
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
17 Posts - 2%
prajai
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
5 Posts - 1%
Jenila
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
4 Posts - 1%
jairam
உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_m10உன் பரஸ்பர புன்னைகையாலே.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பரஸ்பர புன்னைகையாலே..


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 7:35 pm

உன் பரஸ்பர புன்னைகையாலே.. 14377386


இருபத்தி இரண்டு வருடங்கள்
வாழ்வின் நேர்கோட்டில் மட்டுமே
பயணித்துக் கொண்டு இருந்த என்னை,
திரும்பி வர முடியாத உன்
இதயமென்னும் ஒருவழிப் பாதையில்
பயணிக்க வைத்தது நீதான்......

படுத்தவுடன் தூங்கிவிடும்
பழக்கம் இருந்ததெனக்கு..
இப்போதெல்லாம் தூக்கத்தையே தேடும்
பழக்கத்திற்கு ஆளாகி விட்டேன்.
காரணம் தூக்கத்தை விவாகரத்து செய்து,
கனவுகளை எனக்கு திருமணம்
செய்து வைத்தது நீதான்.

உலகுடன் சண்டையிட்டு
விழிகளை மூடிக்கொண்டேன்
கனவில் உன்னை மட்டுமே ரசிக்க. .
நீயும் வந்தாய் என்னுடன்
சண்டையிட்டு என்னை ரசிக்க.

எனக்கு தெரியும்
உன் செல்ல சீண்டல்களும்,
பொய் கோபங்களும்
என்னை ரசிக்கவே என்று..
ஆனாலும் கோபித்தபடியே
அதை நானும் ரசிப்பேன்.

அது சரி யாருமே நுழைய
இயலாத வண்ணம் இத்தனை காவல்கள்
போடப்பட்டிருக்கும் என் கனவு
தேசத்திற்குள் நீ மட்டும் எப்படி
எந்த வித தடங்கலும் இன்றி
எளிதாய் நுழைகிறாய்?

தேசம் விட்டு தேசம் செல்ல
பாஸ்போர்ட், விசா
எல்லாமும் தேவையாயிற்றே,
நீ எப்படி எந்த கடவுச்சீட்டும் இன்றி
என் கனவு தேசத்தில் நுழைகிறாய்?

நீ வருகிறாய்
என் கனவுகளும்
காதலிக்க தொடங்குகின்றன.
நீ சிரிக்கிறாய்
உதிர்ந்த சிறகுகளும்
ஒட்டிக்கொள்கின்றன
என் கற்பனை குதிரைக்கு..

குதிரைத்திறன் எல்லோருக்கும் தெரியும்
என் குதிரைக்கே திறன் கொடுக்கும்
உன் திறன் யாருக்கு தெரியும்?

அது எப்படி என்
ஒவ்வொரு செல்லும்
உன் சொல்லுக்கு மட்டும்
கட்டுப்படுகின்றன?

நீயோ சிறிதும் இடைவெளி இன்றி
புன்னகைத்துவிட்டு போகிறாய்
உன் புன்னகை தொடர்வண்டியின் கீழ் சிக்கி
சின்னா பின்னமாகும் என் மனதை
யார் வந்து காப்பாற்றுவது?

உன் பாஸ்பரஸ் புன்னகையினால்
பற்றி எரியும் என் மன"தீ"யை அணைக்க
ஒரு வழி சொல்.

புதிர் என்ற வார்த்தைக்கு
அகராதியில் அர்த்தம் தேடினேன்.
என்ன ஆச்சர்யம் அதற்கு நேரே
உன் பெயர். ஆம் அதுவும் சரிதான்.
நீயும் ஒரு புதிர்தானே?

உன் புன்னகையின் மர்மம்
மில்லியன் டாலர் கேள்வி மட்டும் அல்ல.
ட்ரில்லியன் டாலர் கேள்வியும்தான்.

எல்லா புதிருக்கும்
ஒரு விடை இருக்கும்.
உன் புன்னகை புதிருக்கு?

உனக்கு தெரியுமா?
ஒருமுறை நான் கடவுளிடம்
சண்டையிட்டு விட்டேன்.
என்னை பழி வாங்க நினைத்த
கடவுள் ஏதேதோ செய்தார்.
முடியவில்லை பாவம்
தோற்றுப்போய் நின்றார்.
நான் கை கொட்டிசிரித்தேன்.

கடவுள் யோசித்தார்
இறுதியாய் உன்னை அனுப்பினார்.
இப்போது அவர்
கை கொட்டி சிரிக்கிறார்.

நீ என் அருகிலிருக்கும் நேரங்களில்
கடவுளின் வரமாய் தெரிகிறாய் .
நீ என்னைவிட்டு
விலகி இருக்கும் நேரங்களில்
கடவுளின் சாபமாய் தெரிகிறாய்.
நீ எனக்கு வரமா? சாபமா?

நான் உன்னை பூங்கொத்து
கொடுத்து வரவேற்கிறேன்.
நீயோ என்னை உன்
புன்னகை"கொத்தால்" வரவேற்கிறாய்.
சூரியனின் முன் நிற்கும்
விட்டில் பூச்சியைப் போல்
என் பூக்கள் உன் புன்னகையின் முன்
வாடிப்போகின்றன.

இந்த உலகில் தோற்பதை
யாரவது விரும்புவார்களா?
இதோ நானிருக்கிறேன்.
ஆம். உன் முன்னால்
தோற்க நான் விரும்புவேன்.

நான் உன் விளையாட்டுக்களில்
தோற்றவுடன்தான் உன்
முகத்தில் எத்தனை மின்னல்கள்.
மகிழ்ச்சியில் உன் புருவங்கள்
உயர்ந்து கேசங்களாகும் அதிசயத்தை
காண்பதற்காகவே எத்தனை முறை
வேண்டுமானாலும் உன்னிடம் தோற்கலாம்.

உன் தேசத்தில்
உன்னிடம் தோற்பதற்காகவே
படைக்கப்பட்டவன் நான்.

எனக்கு தெரிந்தாலும்
தெரியாத மாதிரி
காட்டிக்கொள்வேன் நான்.
எனக்கு தெரியாது என்பதாய்
நினைத்து நீ விவரித்து கூறும்
அழகுக்காகவே.

பொதுவாய் அதிகமாய்
பேசுவேன் நான்.
உன் முன் மட்டும்
வார்த்தைகளை பூட்டி வைத்துவிட்டு
செவிகளை திறந்து வைத்துக் கொள்வேன்.

இந்த உலகில்
எனக்கான மிகப்பெரிய
சந்தோஷம் என்ன தெரியுமா?

உன் படிப்பு, உன் வேலை,
உன் திறமை, உன் நிறம்,
உன் பெற்றோர், உன் உடன் பிறப்புக்கள்,
உன் கடவுள், உன் சிரிப்பு,
உன் அழுகை, உன் தேவைகள்..
இப்படி உன் சம்மந்தப்பட்ட
அத்தனை விஷயங்களும்
எல்லோருக்கும் எதோ ஒரு
வகையில் தெரிந்திருக்கும்.

ஆனால் உன்னைப்பற்றி
யாருக்குமே தெரியாத ஒரு விஷயம்
எனக்கு மட்டுமே தெரியும்.
அது இந்த உலகில் வேறு
யாருக்கும் தெரியாது.

இவ்வளவு ஏன் உன் தாய்க்கு
கூட அது தெரியாது.
அது எனக்கு மட்டுமே தெரியும்.
அது உன் வாசனை.

அதை என்னால் மட்டுமே
உணர முடியும்.
வேறு யாராலும்
உணர முடியாது,
உன்னால் கூட... உன் பரஸ்பர புன்னைகையாலே.. 154550 உன் பரஸ்பர புன்னைகையாலே.. 154550 உன் பரஸ்பர புன்னைகையாலே.. 154550 உன் பரஸ்பர புன்னைகையாலே.. 599303 உன் பரஸ்பர புன்னைகையாலே.. 599303 உன் பரஸ்பர புன்னைகையாலே.. 599303 உன் பரஸ்பர புன்னைகையாலே.. 942



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக