புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
2 Posts - 1%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
429 Posts - 48%
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
29 Posts - 3%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
8 Posts - 1%
sugumaran
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4


   
   

Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 21, 2012 9:12 pm

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 8 154550


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu May 31, 2012 9:57 pm

“பரிசுத்த வ‌ேதாகமத்தில் உள்ள 66 புத்தகங்களின் சுருக்கமான தொகுப்பு”



1. ஆதியாகமம்

அ) பின்னணி:


ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. மோசேயென கருதப்படுகிறது

காலம்: ஏறக்குறைய கி.மு.1400 - 1200

மூலாதாரம்: “ஆதாமின் வம்ச வரலாறு” (ஆதியாகமம்: 5:1)

எந்நிலையில் எழுதப்பட்டது: இஸ்ரவேல் மக்கள் தேவன் தங்களை ஒரு தேசமாக்கி, எகிப்திலிருந்து விடுதலை பெறச் செய்ததை உணரவும், தேவ நியாயப் பிரமாணங்களை அறிந்து கொள்ளவும் செய்ய எழுதப்பட்டது.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: ஆதியாகமம்

எபிரேயு: பெரிஷித் (Bereshith) (“ஆதியில்”)

கிரேக்கு: ஜெனிசிஸ் (Genesis) (“ஆதி”)

கருப்பொருள்: உலகம் மற்றும் தேவனுடைய மக்களின் துவக்கம்

நோக்கம்: தேவனால் தொிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேல் மக்களின் தொடக்கங்கள‌ை எடுத்துக் காட்டுதல்

முக்கிய வசனம்: (ஆதியாகமம்: 1:26; 12:2,3). “பின்பு தேவன்; தமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக... ஆபிரகாமே, நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவ‌ேன்... பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 01, 2012 7:32 am

2. யாத்திராகமம்

அ) பின்னணி:


ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. மோசேயெனக் கருதப்படுகிறது.

காலம்: ஏறக்குறைய கி.மு. 1400 - 1200

மூலாதாரம்: “உடன்படிக்கையின் புத்தகம்” (யாத்திராகமம்: 24:4,7)

எந்நிலையில் எழுதப்பட்டது:

1. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவன் அளித்த விடுதலையை பஸ்கா பண்டிகையாக கொண்டாடும் இஸ்ரவேல் மக்கள், அவ்விடுதலையின் மூலம் தாங்கள் எவ்வாறு ஒரு தேசமாக உருவாக்கப்பட்டார்கள் என்பதையும்,

2. தேவனுடைய சட்டங்களையும், கட்டளைகளையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியதற்காக எழுதப்பட்டது.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: யாத்திராகமம்

எபிரேயு: “ஷீமோத்” (Shemoth) “பெயர்கள்”

கிரேக்கு: “எக்சோடஸ்” (Exodus) “வெளியே செல்லும் வழி”

கருப்பொருள்: தேவனால் தொிந்து கொள்ளப்பட்ட மக்கள் ஒரு விடுதலையும், மீட்பும் பெற்று ஒரு தேசமாக உருவாகுதலை விளக்குவது.

நோக்கம்: தேவன் தம்முடைய இரட்சிப்பையும் மகத்துவத்தையும் எடுத்துக் காட்டுவதற்காக, இஸ்ரவேல் மக்களோடு உடன்படிக்கை செய்யும் பொருட்டு, அவர்கள‌ை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர் எவ்வாறு விடுவித்தார் என்பதை விளக்குதல்.

முக்கிய வசனம்: யாத்திராகமம்: 19:4-6

“நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளின் செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னடையிலே சோ்த்துக் கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் என் வாக்கை உள்ளபடி க‌ேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது, நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 01, 2012 5:16 pm

3. லேவியராகமம்

அ) பின்னணி:


ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. மோசேயென கருதப்படுகிறது.

காலம்: ஏறக்குறைய கி.மு.1400 - 1200

மூலாதாரம்: சீனாய் மலையில் வெளிப்பாடு தேவனால் அளிக்கப்பட்டு, மோசேயினால் எழுதப்பட்டது.

எந்நிலையில் எழுதப்பட்டது: தேவனுடைய உடன்படிக்கை மக்களாகிய இஸ்ரவேல் மக்கள், த‌ேவனுடைய கட்டளைகளை அறிந்து கொள்ளும்படி அவர்களுக்காக எழுதப்பட்டது.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “லேவியராகமம்”

எபிரேயு: “வேயிகிரா” (Wayyigra) “அவர் அழைத்தார்”

கிரேக்கு: “லியுடிகான்” (Leuitikon) “லேவியரைக் குறித்தவை”

கருப்பொருள்: தேவனுடைய சேவைக்காகவும், மகிமைக்காகவும் பிரித்தெடுக்கப்பட்ட மக்களுடைய பரிசுத்த வாழ்க்கைக்கான கையேடு.

நோக்கம்: தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட தேசமாகிய இஸ்ரவேல் மக்கள், தேவனிடம் வழி நடத்தப்படுவதையும், தேவனுக்காக வாழுவதையும் குறித்த விதிமுறைகளை தெளிவாக வகுப்பது.

முக்கிய வசனம்: லேவியராகமம்: 11:45 - “நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 01, 2012 5:54 pm

4. எண்ணாகமம்

அ) பின்னணி:


ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. மோசேயெனக் கருதப்படுகிறது.

காலம்: ஏறக்குறைய கி.மு.1400 - 1200

மூலாதாரம்: கர்த்தருடைய யுத்த புத்தகம் (எண்ணாகமம்: 21:5)

எந்நிலையில் எழுதப்பட்டது: த‌ேவனுடைய மக்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிவதற்கான காரணத்தை அவர்களுக்கு, நினைப்பூட்டுவதை தேவன் அவர்களுடைய இருதயங்களில் வெளிப்படுத்துவதற்கு முயற்சித்தார் என்பது அக்காரணமாகும். அவர்கள் தங்களுடைய தேவனைக் கர்த்தரென்று விசுவாசிப்பார்களா?

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “எண்ணாகமம்”

எபிரேயு: “பெமிட்பார்” (Bemidbar) “வனாந்திரத்தில்”

கிரேக்கு: “அரித்மாய்” (Arithmoi) “எண்கள்”

இரண்டு கணக்கெடுப்புகள் (எண்ணிக்கைகள்) எடுக்கப்பட்டன (எண்ணாகமம்: 1 மற்றும் 26 ஆகிய அதிகாரங்கள்)

கருப்பொருள்: தேவன் அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்படி வனாந்திரத்தில் அலைந்து திரியச் செய்தார்.

நோக்கம்: த‌ேவனுடைய மக்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைச் சுதந்தரிப்பதைத் தடுத்தது குறைவான விசுவாசமே என்ற உண்மையை வற்புறுத்துதல்.

முக்கிய வசனம்: எண்ணாகமம்: 32:3 - “அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின் மேல் மூண்டது; கர்த்தருடைய சமூகத்தில் பொல்லாப்புச் செய்த அந்த சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்திரத்தில‌ே நாற்பது வருசம் அலையப்பண்ணினார்.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 01, 2012 6:23 pm

5. உபாகமம் (துணை ஆகமம்)

அ) பின்னணி:


ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. மோசேயெனக் கருதப்படுகிறது.

காலம்: ஏறக்குறைய கி.மு.1400 - 1200

மூலாதாரம்: மோசேயின் வாழ்க்கைக் குறிப்புகளோடு, லேவியராகமத்திலிருந்து மாற்றியமைக்கப்பட்ட சில குறிப்புகளும்.

எந்நிலையில் எழுதப்பட்டது: ஒரு புதிய தலைவனின் கீழ் யோசுவாவுடன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைய தயாராயிருந்த மக்களிடம் மோசே ப‌ேசும்போது, அனைவரும் த‌ேவனுடைய கட்டளைகளைப் புரிந்து கொண்டு, அவைகளுக்கு கீழ்ப்படியக்கூடிய ஒரு “தனிப்பட்ட மனிதனின் தோராவை” (Torah) அவர் அளித்தார்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “உபாகமம்”

எபிரேயு: எல்லெ ஹாடேபொிம் (Ellah Haddebarim) “இந்த வார்த்தைகள்”

கிரேக்கு: “டியுடெரோநாமியோன்” (Deuteronomion) “இரண்டாம் முறையாக நியாயப்பிரமாணத்தை அளித்தல்”

கருப்பொருள்: மோசேயின் கடைசி சாசனமாக, தேவனுடைய நியாயப்பிரமாணத்தை ஒத்திகை செய்தல்.

நோக்கம்: தேவனுடைய மக்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரிக்கும்போது, அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து வாழும்படி, தேவனுடைய எதிர்பார்ப்புகளை மீண்டுமாக அறிவுறுத்துதல்.

முக்கிய வசனம்: உபாகமம்: 4:1 - “இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கும், நீங்கள் கைக்கொள்வதற்கு நான் உங்களுக்கு போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் க‌ேளுங்கள்.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 01, 2012 10:55 pm

வரலாற்று புத்தகங்களுக்கு ஒரு முன்னுரை

யோசுவா முதல் எஸ்தர் வரை


1. எபிரேய சபைக் கட்டளைகள்:
(8 புத்தகங்கள்)

அ) முந்தின தீர்க்கதரிசிகள்:

யோசுவா, நியாயாதிபதிகள், சாமுவேல், இராஜாக்கள் (4 புத்தகங்கள்)

ஆ) எழுத்துப் படைப்புகள்:

நாளாகமம், எஸ்றா, நெகேமியா, ரூத், எஸ்தர் (4 புத்தகங்கள்)

கிரேக்கக் கட்டளைகள்: 12 புத்தகங்கள் (யோசுவா மு‌தல் எஸ்தர் வரை)


2. எழுத்துப் படைப்பின் காலம்:

அ) யோசுவா முதல் 2இராஜாக்கள் வரை - ஏறக்குறைய கி.மு.561.

ஆ) நாளாகமம் - ஏறக்குறைய கி.மு.450.


3. வரலாற்றுக் கால அளவு:

அ) யோசுவா முதல் 2இராஜாக்கள் வரை: கானானுக்குள் நுழைந்தது முதல் பாபிலோனிய சிறையிலிருந்து ராஜாவாகிய யோயாக்கீனின் விடுதலை வரை - கி.மு.1400, 1200 - 561.
மொத்தம்: 650 - 850 வருடங்கள்.

ஆ) நாளாகமம்: சவுல் ராஜாவின் மரணம் முதல் எஸ்றா மற்றும் நெகேமியாவின் ஊழியம் வரை (கி.மு.1011 - 450)
மொத்தம்: 550 வருடங்கள்.


4. கருப்பொருட்கள்:

அ) தீர்க்கதரிசன வரலாறு

ஆ) ராஜத்துவம்

இ) ஆசாரிய வரலாறு: ஆலயம் மற்றும் ஆராதனை

ஈ) மனிதனின் பங்கு




தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 01, 2012 11:18 pm

6. யோசுவா
அ) பின்னணி:

ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. யோசுவா அல்லது சாமுவேல் எனக் கருதப்படுகிறது.

காலம்: ஏறக்குறைய கி.மு.1440 அல்லது கி.மு.1250

மூலாதாரம்: யாசேரின் புத்தகம் (யோசுவா: 10:13).

எந்நிலையில் எழுதப்பட்டது: நியாயாதிபதிகளின் காலத்தில் (ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பார்வைக்கு சரியாகத் தோன்றினவைகளைச் செய்த ஒரு காலம்) அப்போதிருந்த இஸ்ரவேலர்கள், தேவனுடைய நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படியும்படி தங்களை அறிவுறுத்தும் “சாட்சியின் கல்லைச்” சுமந்து கொண்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைத் தாங்கள் மேற்கொண்டதை நினைவுபடுத்திக் கொள்வதன் தேவை. (யோசுவா: 4:19-24; 24:26,27).

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “யோசுவா”

எபிரேயு: யெகோசுவா (Yehoshua) “யேகோவா இரட்சிப்பானவர்”

கிரேக்கு: “யேசஸ்” (Yesus) “இரட்சிப்பு” , “விடுவிப்பவர்”

கருப்பொருள்: தேவனுடைய மக்கள் கர்த்தருக்குள் கீழ்ப்படியும்போது, தங்களுடைய சுதந்திரத்தைச் சுதந்தரிப்பதில் பெற்றிருக்கும் பெரிய வல்லமை.

நோக்கம்: தேவனுடைய மக்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை யோசுவாவின் காலத்தில் பெற்றுக் கொண்டதையும், அதன் பின்பு, ஆபிரகாமிற்கு அளிக்கப்பட்ட தேவ வாக்குத்தத்தின் நிறைவேறுதலாக ஒவ்வொரு கோத்திரத்திற்கும் அத்தேசம் பிரித்தளிக்கப்பட்டதையும் எடுத்துரைப்பது.

முக்கிய வசனம்: யோசுவா: 21:43,45 - “இந்தப் பிரகாரமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவா்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளை சுதந்தரித்துக் கொண்டு , அவைகளிலே குடியிருந்தார்கள்... கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தார்க்குச் சொல்லியிருந்த நல் வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப் போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.”



தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 02, 2012 7:49 am

7. நியாயாதிபதிகள்
அ) பின்னணி:

ஆசிரியர்: தெரியவில்லை. சாமுவ‌ேல் எனக் கருதப்படுகிறது.

காலம்: ஏறக்குறைய 1000 கி.மு.

(நாம் பெற்றிருக்கும் இப்புத்தகத்தின் இறுதியான படிவம், பிற்பாடு கி.மு.721 - ல் இறுதியாக வடிவமைக்கப்பட்டது. (நியாயாதிபதிகள்: 18:30).

மூலாதாரம்: வீரகாவியங்களும், பாடல்களும்

எந்நிலையில் எழுதப்பட்டது:

யோசுவாவிற்கும் சாமுவேலிற்கும் இடையே இருந்த குழப்பமான கொள்கைகள், இஸ்ரவேல் தேசத்திற்கு உறுதியை அளிக்கக்கூடிய ஒரு முடியாட்சியின் தேவையைப் பிரதிபலித்தன.


ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “நியாயாதிபதிகள்”

எபிரேயு: “சோபெடிம்” (Shopetim) “நியாயாதிபதிகள்” “ஆட்சித்தலைவர்கள்”

கிரேக்கு: “கிரிடாய்” (Kritai) “நியாயாதிபதிகள்”

கருப்பொருள்:

இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளத் தவறியபடியால், நியாயமற்ற பழி மற்றும் விடுதலையின் சுழற்சியில் அவர்கள் அகப்பட்டார்கள்.

நோக்கம்:

இஸ்ரவேலின் தேவனுடைய உடன்படிக்கை - ஆளுகையின் முழுமையையும், பரிசுத்தத்தையும் பாதுகாப்பதற்காக, மையத்தில் தலைமுறை வழியான அரசாட்சி தேவையென்பதை எடுத்துக்காட்டுதல்.

முக்கியவசனம்:

நியாயாதிபதிகள்: 2:16,17 - “கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப் பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள். அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல் அந்நிய தேவர்களை பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்து கொண்டார்கள்...”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 02, 2012 8:02 am

8. ரூத்
அ) பின்னணி:

ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. சாமுவ‌ேல் எனக் கருதப்படுகிறது.

காலம்: ஒருவேளை ஏறக்குறைய கி.மு.1000 (ரூத்: 4:7)

மூலாதாரம்: அறியப்படவில்லை

எந்நிலையில் எழுதப்பட்டது:

தாவீது ராஜாவின் வம்ச வழியைக் காட்டி தேவனுடைய அன்பு யூத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை எடுத்துக் காட்டுவது.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “ரூத்”

எபிரேயு: “ரூட்” (Rut) “ரூத்”, “தோழி”

கிரேக்கு: “ரோட்” (Rout) “ரூத்”

கருப்பொருள்: ஒரு புற ஜாதியானுக்கு மீட்பு

நோக்கம்:

ஒரு விதவையான புறஜாதிப் பெண்ணிடம் இன சகிப்புத்தன்மையுயைம், இரக்கத்தையும் காண்பிப்பதன் மூலம், தாவீது ராஜாவிற்கு ஒரு குடும்ப மரபுக் கிளை வழியை அளித்தல்.

முக்கிய வசனம்:

ரூத்: 1:16 - “நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மை விட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து, என்னோடே பேச வேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்மடைய தேவன் என்னுடைய தேவன்.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 02, 2012 2:06 pm

9. “1சாமுவேல், 2சாமுவேல்”
அ) பின்னணி:

ஆசிரியர்: பெயர் அறியப்படாதவர். சாமுவேல் எனக் கருதப்படுகிறது.

(எபிரேய பழைய ஏற்பாட்டில் 1சாமுவேல் மற்றும் 2சாமுவேல் ஆகிய இவ்விரண்டு புத்தகங்களும் ஒரே புத்தகமாக உள்ளது)

காலம்: கி.மு.930 மற்றும் கி.மு.722 க்கும் இடைப்பட்ட காலம்

மூலாதாரம்: சாமுவேல், நாத்தான் மற்றும் காத்தின் நடபடிகள் (1நாளாகமம்: 29:29).

குறிப்பிடப்பட்டுள்ள காலம்: ஏறக்குறைய கி.மு.1100 - 1000

(நியாயாதிபதிகளின் முடிவிலிருந்து, தாவீதினுடைய ஆட்சியின் உச்ச நிலை வரை)

எந்நிலையில் எழுதப்பட்டது:

நியாயாதிபதிகளின் ஒரு பெலவீனமான ஆட்சிக்குப் பதிலாக, சாமுவேல், சவுல் மற்றும் தாவீது ஆகியோரின் காலத்தில் ஒரு பலமான முடியாட்சி இடம் பெற்றதைக் கருத்தில் கொள்ள வேண்டிய தேவை.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “சாமுவ‌ேல்”

எபிரேயு: “செமுயேல்” (Shemuel) “தேவன் செவி கொடுத்தார்”

கிரேக்கு: “பேசிலியோன் A.B” (Basileion A.B) “ராஜயம் 1,2”

கருப்பொருள்:

1சாமுவ‌ேல்: தீர்க்கதரிசியாகிய சாமுவ‌ேலும், சவுல் ராஜாவின் உயர்வும், வீழ்ச்சியும்.

2சாமுவேல்: தேவனால் ராஜாவாக தெரிந்து கொள்ளப்பட்ட தாவீது - ராஜாவின் குறிப்பிடத்தக்க ஆட்சி

நோக்கம்:

1சாமுவேல்: இஸ்ரவேலின் ஒரு இறையாட்சி (தேவன் நியாயாதிபதிகளின் மூலமாக ஆட்சி செய்தல்), ராஜாவாகிய சவுலின் கீழ் ஒரு முடியாட்சியாக (மனிதனின் ஆட்சி) மாற்றமடைந்ததை எடுத்துக் காட்டுதல்.

2சாமுவேல்: தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ராஜாவாகிய தாவீதின் கீழ், முடியாட்சி நிலை நிறுத்தப்பட்டதை எடுத்துக் காட்டுதல்.

முக்கிய வசனம்:

1சாமுவேல்: 8:7; 12:14 - “... அவர்கள் உன்னைத் தள்ளவில்லை; நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்... நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்”

2சாமுவேல்: 7:8,16 - “... நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டு மந்தையை விட்டு எடுத்தேன்... உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்படடிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்”.


தொடரும்...


Sponsored content

PostSponsored content



Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக