புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4


   
   

Page 14 of 19 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 21, 2012 9:12 pm

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 14 154550


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 09, 2012 3:13 pm

2. பாலஸ்தீனத்தின் சமூகப் பிரிவுகள்

அ) ஆயக்காரர்:

இவர்கள் வரிவசூலிக்கிறவர்கள். தனிப்பட்ட மனிதன் வரி செலுத்த வேண்டும். இது குடியுரிமை வரி. இதற்காக குடிமதிப்பு அல்லது மக்கட் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இது தவிர விற்பனை செய்யும் பொருட்களுக்கு சுங்கவரி விதிக்கப்பட்டது. வரிவசூலிக்கிறவர்கள் ரோம அரசாங்கத்திற்காக வேலை செய்தபடியாலும், தங்கள் மன விருப்பத்தின்படி அநியாயமாய் கடுமையான வரியை வசூலித்தபடியினாலும் நாட்டுப் பக‌ைஞர்கள் எனக் கருதப்பட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களாக இருந்தார்கள். மத்தேயு, சகேயு இவ்வித வேலை செய்தவர்கள்.

ஆ) பாவிகள்:

இவர்கள் பாவம் செய்தபடியால் பாவிகள் என அழைக்கப்படவில்லை. பரிசேயர், சதுசேயரைப்போல வேத பிரமாணங்களையும், மார்க்க சடங்காச்சாரங்களையும் கற்றுத் தேறாதவர்கள்.

பரிசேயர்கள் ஓய்வு நாளை கைக்கொள்வதற்கு மட்டும் 600 மார்க்க சடங்காச்சார சட்டதிட்டங்களை எழுதி வைத்திருந்தார்கள். தச்சுத் தொழில், விவசாயம், மீன்பிடித்தல் போன்ற தொழில்களை செய்து வந்த நடுத்தர கூட்டத்தாராகிய இம்மக்கள் இக்கட்டளைகளை பின்பற்ற இயலாதபடியால் பரிசேயரும், சதுசேயரும் இவர்களை பாவிகள், சபிக்கப்பட்டவர்கள், கல்லாதவர்கள் என பல பெயர்களில் அழைத்தார்கள். (யோவான்: 7:49; 9:34).

இ) ஏரோதியர்:

இவர்கள் யூதர் மத்தியில் காணப்பட்ட அரசியல் கட்சியினர், ரோம ஆட்சி பாலஸ்தீனத்தில் நிலவவேண்டும் என விரும்பியவர்கள். இது தங்கள் சொந்த குடும்ப ஆதாயத்திற்காக கொண்டிருந்த நிலையே ஆகும்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 09, 2012 6:44 pm

3. பிற சமூக நிலைகள்
அ) குடும்ப நிலை:

கிரேக்கக் கலாச்சாராத்தில் பெண்கள் மிகவும் தாழ்வாக மதிக்கப்பட்டார்கள். என்றாலும், அலெக்சாண்டர் காலத்திற்குப் பின்பு பெண்களுடைய நிலை உயர்த்தப்பட்டது. ரோமப் பேரரசின் காலத்திலும் இந்நிலை தொடர்ந்தது. என்றாலும், யூத சமுதாயத்தில் கிரேக்க ரோம சமூகங்களைப் போலவே விவாகரத்துப் பெருகியிருந்தது. பெண்களுக்கு யூதர்கள் ஆராதனையில் சம அந்தஸ்து கொடுக்கவில்லை.

ஆ) ஒழுக்க நிலை:

கிரேக்க ரோம கலாச்சாரத்தின் கீழ் புதிய ஏற்பாட்டு உலகத்தில் ஒழுக்கநிலை மிகவும் சீர்கெட்டதாயிருந்தது. அடிமைகள் கொடுமைப்படுத்தப்படுதல், விலைமாதரின் பெருக்கம், அடிமைகள் விபசாரத்தில் பயன்படுத்தப்படுதல், போன்ற இழிநிலைகள் காணப்பட்டது. அத்துடன் 1கொரிந்தியர்: 5; கலாத்தியர்: 5; ரோமர்: 1 அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ள பாவங்களால் நிறைந்து காணப்பட்டது புதிய ஏற்பாட்டு உலகம்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 09, 2012 6:54 pm

4. கலாச்சாரம்
கிரேக்க-ரோம ஆளுகைகளில் இலக்கியம், கட்டிடக் கலை, இசை, நாடகம், மொழிகள், கல்வி ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கலையரங்கங்கள், விளையாட்டு மைதானங்கள் பொழுது போக்கு இடங்களாக காணப்பட்டன. இந்த அரங்குகளில் பசியோடுள்ள மிருகங்களுடன் அடிமைகள் அல்லது குற்றவாளிகள் சண்டைபோட அனுப்பப்படுவார்கள். அந்த விலங்குகள் இவா்களை அடித்துத் தின்பதை மக்கள் வேடிக்கை பார்த்தார்கள்.

லத்தீன், கிரேக்க, அரமேயு, எபிரேயு அகிய மொழிகள் பிரதான மொழிகளாயிருந்தன.

வேதாகமம் எபிரேயு மொழியில் எழுதப்பட்டது. ஆனால், மக்கள் அரமேயு மொழியை ப‌ேசினார்கள். எனவே, எபிரேய மொழி எழுத்தளவில் உள்ள மொழி என்றும், அரமேயு மொழி பேச்சளவில் உள்ள மொழி என்றும் சொல்லப்படலாம்.

அப்படியே லத்தீன் மொழி - நீதிமன்றங்கள் மற்றும் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது.

கிரேக்க மொழி - அறிஞர்கள், கல்விமான்களால் பயன்படுத்தப்பட்டது.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 09, 2012 7:16 pm

மார்க்க உலகம் (அல்லது) சமய உலகம்
புதிய ஏற்பாட்டு உலகத்தை சமய உலகம் என்றும் அழைக்கலாம். இவற்றை 4 பிரிவாகப் பிரிக்கலாம்.

1. கிரேக்கரின் சமய நிலை

2. ரோமரின் சமய நிலை

3. தத்துவங்கள்

4. யூதரின் சமய நிலை

கிரேக்கர்களும், ரோமர்களும் ஆவி வணக்கம் மற்றும் பல தேவ வணக்கம் உடையவர்கள். மூடநம்பிக்கை, குறி சொல்லுதல் போன்றவை மிகுந்து காணப்பட்டது.

ஸீயஸ் கிரேக்கர்களின் பிரதான தெய்வம். ஆனால், ரோமர்கள் தங்களது அரசன் கடவுளின் பிரதிநிதியாய் இருக்கிறான் என்று நம்பினார்கள். என்வே, பிற்காலத்தில் அகஸ்து, கலிகுலா, டொமிசியன் போன்ற ரோம மன்னர்கள் தங்களை கடவுள் நிலைக்கு உயர்த்தி, மக்கள் தங்களை வணங்க வ‌ேண்டுமென்று கட்டாயப்படுத்தினர்.

யாரை வணங்கவேண்டுமென்று மக்கள் குழம்பிப்போன சூழ்நிலையில் கிரேக்க - ரோம உலகில் தத்துவ ஞானிகள் தோன்றினார்கள். சாக்கரடீஸ், பிளாட்டோ, அரிஷ்டாடில் போன்றவர்கள் முக்கிய தத்துவ ஞானிகள்.

சினிசிசம், எப்பிகூரியனிசம், நாஸ்டிசிசம், செப்டிசிசம் போன்றவை முக்கிய தத்துவங்கள்.

இவை தவிர மர்ம மார்க்கங்கள், மறை சமயங்கள், ஆர்டிக் சமயம், மாபெரும் தாய் சமயம், மித்ரா சமயம், எகிப்து நாட்டு ஐசிஸ் தொழுகை போன்ற மார்க்கங்களும் புதிய ஏற்பாட்டு உலகில் தலைதூக்கி நின்றன.

மேற்கூறியவற்றை விரிவாக படிக்க இங்கு இடம் போதாது. எனவே, யூதரின் மார்க்க நிலை குறித்து சற்று விரிவாகப் பார்த்து தொடர்ந்து முன்னேறுவோம்...


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 09, 2012 9:05 pm

யூத மாா்க்கம்
ஆபிரகாமின் வழிவந்தவர்கள்தான் யூதர்கள். இவர்களுடைய மதம் யூத மதம். ஒரே தெய்வ வணக்கத்தை வற்புறுத்திய மதம். “யெகோவா” தான் யூதரின் கடவுள். இந்த யூத மார்க்த்திலிருந்து பிறந்ததுதான் கிறிஸ்தவ மார்க்கம்.

ஒரே தெய்வத்தை வணங்க வேண்டிய யூதர்கள், பாலஸ்தீனத்தை சுற்றியிருந்த புறஜாதிகளின் பல தெய்வங்களை வணங்கி தேவ கோபத்திற்கு ஆளானார்கள்.

இதற்குத் தணடனையாக வடக்கு இராஜ்யம் கி.மு.722 ல் அசீரியாவிற்கும், தெற்கு இராஜ்யம் கி.மு.586 ல் பாபிலோனிற்கும் சிறைப்பட்டுப் போனார்கள்.

சிறையிருப்பின் காலத்தில் இவர்கள் யெகோவாவை மட்டும்தான் வணங்குவோம் என தீர்மானம் பண்ணினார்கள். சிறையிருப்புக்குப் பின் யூதர் விக்கிரக ஆராதனை என்ற பாவத்தை மறுபடியும் செய்யவில்லை.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 09, 2012 9:20 pm

யூத மார்க்கத்தின் அடிப்படை இறையியல்
1. தேவனாகிய கர்த்தர் ஒருவரே (உபாகமம்: 6:4)

2. தேவன் பிதா என்னும் நிலையில் இஸ்ரவேலின் தகப்பன். எனவே, பிள்ளைகள் (உபாகமம்: 14:11) த‌ேவனுடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வ‌ேண்டும்.

3. தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சுயாதீனத்தின்படி யூதர்கள் தேவ கட்டளைக‌ளுக்குக் கீழ்ப்படிந்தால் ஜீவனும், கீழ்ப்படியா விட்டால் மரணமும் கிடைக்கும்.

4. தேவன் கொடுத்த 10 கட்டளைகள் மற்றும் எல்லா ஒழுங்குகளையும் (பண்டிகை, விருத்தசேதனம்) ஆசரிக்க வ‌ேண்டும்.

5. உயிர்த்தெழுதலில் நம்பிக்கை உண்டு.

யூதர்கள் கீழ்க்காணும் காரியங்களை தேவனோடு தொடர்பு கொள்ளும் ஏதுக்களாகப் பயன்படுத்தினர்.

- நியாயப்பிரமாணம்

- ஆசரிப்புக் கூடாரம்

- பண்டிகைகள்

- பலிகள்

- ஆசாரியத்துவம்


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 09, 2012 9:36 pm

தேவாலயம்
யூதர்களுக்கு மிகமிக முக்கியமான இந்த தேவாலயம் சாலமோன் காலத்தில் கட்டப்பட்டது. இந்த ஆலயம் இஸ்ரவேலின் 12 கோத்திரத்தை இணைக்கும் மையமாக எருசல‌ேமில் இருந்தது.

கி.மு. 586 ல் இந்த தேவாலயம் நேபுகாத்நேச்சாரால் அழிக்கப்பட்டது. கி.மு.536 ல் சிறையிருப்பில் இருந்து திரும்பி வந்தவர்களால் திரும்பவும் கி.மு.516 ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கி.மு.168 ல் அந்தியோக்கஸ் எப்பிபனேஸ் என்பவன் இந்த தேவாலயத்தை தீட்டுப்படுத்தினான். மூன்று ஆண்டுகள் கழித்து யூதாஸ் மக்கபேயு இந்த ஆலயத்தை சுத்திகரித்தான்.

கி.மு.37 ல் தேவாலயத்தின் ஒரு பகுதி தீப்பிடித்தது. அதற்குப்பிறகு இந்த ஆலயத்தை புதுப்பிக்க 40 வருஷம் ஆனது. அதனால், இது மகா ஏரோது வின் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு கி.மு.19, 20 ல் பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் கட்டப்பட்டது.

இந்த பரிசுத்த ஸ்தலத்தில் சமூகத்தப்ப மேஜை, ஏழு அகல்கள் உள்ள குத்துவிளக்கு, தூபபீடம் ஆகியவை இருந்தன. மகா பரிசுத்தஸ்தலத்தில் ஒரு தொங்கு திரை இருந்தது.

இந்த தேவாலயத்தில் பெண்கள் , புறஜாதியார், ஆசாரியர் ஆகியோருக்கு தனித்தனி இடங்கள் இருந்தன. இந்த தேவாலயம் கி.பி.70 ம் ஆண்டு தீத்து என்ற ரோம பேரரசனால் முற்றிலும் அழிக்கப்பட்டது.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 09, 2012 9:55 pm

ஜெப ஆலயம்
இந்த ஜெபாலயங்கள் யூதர்களின் பாபிலோனிய சிறையிருப்பின் காலத்தில் உருவாக்கப்பட்டது. சிறையிருப்பின் காலத்தில் யூதர்களுக்கு தேவாலயமோ, ஆராதிக்க தனி இடமோ இல்லை. ஆகவே, தாங்கள் கூடி ஆராதிக்க பல இடங்களில் ஜெப ஆலயங்களை ஆரம்பித்தனர். இந்த ஜெப ஆலயங்கள் சமூகக் கூடமாகவும், கல்வி கூடமாகவும், வழிபாட்டு இடமாகவும் இயங்கி வந்தது. இந்த ஜெப ஆலயங்களில் ரபிமார்கள் முக்கியமானவர்களாக கருதப்பட்டனர். (மாற்கு: 5:22).

ஒவ்வொரு ஜெப ஆலயத்திலும் நியாயப்பிரமாணத்தை பாதுகாக்க ஒரு இடம் இருந்தது. ஜெப ஆலயத்தின் ஆராதனையில் நியாயப்பிரமாணம் வாசிக்கப்பட்ட பிறகு ஒரு ஜெபம் ஏறெடுக்கப்படும். ஆதியாகமம் முதல் உபாகமம் வரையுள்ள ஆகமங்களை 154 பகுதிகளாக பிரித்திருந்தார்கள்.

ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட காலங்களில் வாசிப்பார்கள். இது தவிர தீர்க்கதரிசன புத்தகங்களையும் வாசித்தார்கள். (லூக்கா: 4:16). வாசிக்கப்பட்ட வேத பகுதிக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் பிரசங்கம் பண்ணப்படும்.

இந்த ஜெப ஆலயத்தின் ஆராதனையைத் தான் ஆதி அப்போஸ்தலர் தங்கள் ஆராதனையில் பின்பற்றினர். இயேசுவும், அவருடைய சீஷரும், பவுலும் ஜெப ஆலயம் இருந்த இடங்களுக்கு சென்றனர் என வேதம் கூறுகிறது. (அப்போஸ்தலர்: 13:5, 15-43; 14:1; 17:1-3, 10:17; 18:4,8).

இயேசு எல்லா ஜெப ஆலயத்திலும் தேவனுடைய ராஜ்ஜியத்தை குறித்த பிரசங்கித்தார். (மத்தேயு: 4:23). கி.பி.70 ல் எருசலேம் அழிந்தபோது சிதறிப்போன யூதர்கள் புறஜாதி மக்கள் மத்தியில் ஜெப ஆலயங்களை கட்டினார்கள். (அப்போஸ்தலர்: 6:9; 13:14; 17:1).


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jun 10, 2012 4:22 am

யூதரின் பண்டிகைகள்
இஸ்ரவேலர் கொண்டாடும்படி தேவனால் கொடுக்கப்பட்ட பிரதான பண்டிகைகள் மூன்று. (உபாகமம்: 16:16; யாத்திராகமம்: 23:14-19). அவ‌ை:

1. பஸ்கா பண்டிகை - வருடத்தின் முதல் மாதத்தில் கொண்டாடப்பட்டது.

2. பெந்தெகொஸ்தே - பண்டிகை வருடத்தின் மூன்றாம் மாததத்தில் கொண்டாடப்பட்டது.

3. கூடாரப் பண்டிகை - வருடத்தின் ஏழாம் மாததத்தில் கொண்டாடப்பட்டது.

இவை மூன்றும் ஏழு பண்டிகைகளாகப் பிரித்து கொண்டாடப்பட்டன. அவை:

1. பஸ்கா பண்டிகை (லேவியராகமம்: 23:4,5)

2. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை (ல‌ேவியராகமம்: 23:6-8)

3. முதல் கனிகளின் பண்டிகை (லேவியராகமம்: 23:9-14)

4. பெந்தெகொஸ்தே பண்டிகை (லேவியராகமம்: 23:15-22)

5. எக்காளப் பண்டிகை (லேவியராகமம்: 23:23-25)

6. பிராயச்சித்த நாள் பண்டிகை (லேவியராகமம்: 23:23-25)

7. கூடாரப் பண்டிகை (லேவியராகமம்: 23:33-34)


விளக்குப் பண்டிகையும், பூரிம் பண்டிகையும் மோசேயின் பிரமாணத்தில் கொடுக்கப்படாமல், சிறையிருப்பின் காலத்துக்குப் பின்பு தோன்றியவையாகும்.

இவற்றில் 3 பிரதான பண்டிகைப் பிரிவுகளில் உள்ள பண்டிகைகள் குறித்த குறிப்புக்களை சுவிசேஷங்களில் நாம் காண்கிறோம்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jun 10, 2012 4:32 am

யூதரின் கல்வி முறை
யூத மார்க்கத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. யூத குழந்தைகளுக்கு நியாயப்பிரமாணத்தை எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொடுக்கப்பட்டது. ஜெப ஆலயத்திலும், எருசலேம் தேவாலயத்திலும் வைத்து கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. யூதருடைய பாடப் புத்தகம் பழைய ஏற்பாடு. 16 வயதிற்குட்ப்பட்ட எல்லா பிள்ளைகளுக்கும் கட்டாயக் கல்வி கொடுக்கப்பட்டது. யூத மார்க்கத்தின் சடங்காச்சாரங்களும், பாரம்பரியங்களும் நியாயப்பிரமாணத்துக்கடுத்து படித்தறிய வேண்டியவைகள்.

கி.மு.75 க்குப் பின் பாலஸ்தீனத்தின் எல்லா பட்டணங்களிலும் பொதுவான பள்ளிகள் நிறுவப்பட்டன. நியாயப் பிரமாணம், யூத பாரம்பரியங்கள், மற்றும் சடங்காச்சாரங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டதோடு, தொழிற் கல்வியும் பிரதானமாய் கற்றுக் கொடுக்கப்பட்டது. (மாற்கு: 6:3; அப்போஸ்தலர்: 18:3). ஜெப ஆலயங்களில் பெண்களுக்கு கல்வி கொடுக்கப்படவில்லை.


தொடரும்...


Sponsored content

PostSponsored content



Page 14 of 19 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக