புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
107 Posts - 49%
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
7 Posts - 3%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
234 Posts - 52%
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
18 Posts - 4%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
2 Posts - 0%
Barushree
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4


   
   

Page 11 of 19 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 21, 2012 9:12 pm

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 11 154550


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 06, 2012 4:55 am

28. ஓசியா

அ) பின்னணி:


ஆசிரியர்: ஓசியா

காலம்: ஏறக்குறைய கி.மு.760 - 723 - இரண்டாம் யெரோபெயாம் ஆட்சி (ஓசியா: 1:1)

எந்நிலையில் எழுதப்பட்டது:

ராஜாவாகிய இரண்டாம் யெரோபெயாம் முதல், கடைசி இராஜாவாகிய ஓசியா வரையிலான ராஜாக்களின் ஆட்சி காலங்களில், விக்கிரக ஆராதனையிலும், விபச்சாரத்திலும் ஈடுபட்ட உண்மையில்லாத இஸ்ரவேல் ஜனங்களின் மீது தேவன் தம் அன்பை வெளிப்படுத்துவதற்காக ஓசியாவின் மூலம் பேசினார். ஓசியா இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தினுடைய கடைசி தலைமுறையின் தீர்க்கதரிசி என்பது குறிப்பிடத்தக்கது. (2இராஜாக்கள்: 14:23 - 20:21).

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “ஓசியா”

எபிரேயு: “ஓஷியா” (Hoshea) “இரட்சிப்பு”

கிரேக்கு: “ஓசி” (Osee) “ஓசியா”

கருப்பொருள்:

மனஸ்தாபங்கொண்டுள்ள தம்முடைய “மனைவி” திரும்ப வீட்டிற்கு வரவேண்டுமென்று பொறுமையுடன் காத்திருக்கும் ஒரு அன்பின் தேவனிடம் வாருங்கள்.

நோக்கம்:

தம்மைவிட்டு வழிவிலகிப்போன இஸ்ரவேல் மக்களைத் தம்முடைய வழிகளுக்குத் திருப்பும்படி விடாது அழைக்கும் தேவனுடைய இரக்கத்தையும், அன்பையும் எடுத்துக்காட்டி பறைசாற்றுவது.

முக்கியவசனம்: ஓசியா: 14:1 - “இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 06, 2012 5:12 am

29. யோவேல்

அ) பின்னணி:

ஆசிரியர்: யோவேல்

காலம்: உறுதியாகத் தெரியவில்லை கி.மு.835 முதல் 500 வரை

எப்போது எழுதப்பட்டது:

வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட நான்கு மடங்கான அழிவும், பஞ்சமும், தேவனுடைய மக்களின் தலைவர்கள் ஜெபத்திற்காகவும், உபவாசத்திற்காகவும், மனந்திரும்புதலுக்காகவும் ஒன்று கூடும்படி ஒரு தீர்க்கதரிசன அழைப்பை விடுக்கின்றன.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “யோவேல்”

எபிரேயு: “யோவேல்” (Yoel) “தேவன் யாவ‌ேயானவர்”

கிரேக்கு: லோயேல் (Loel) “யோவேல்”

கருப்பொருள்: வெட்டுக்கிளிகளின் கொள்ளையினால் ஏற்ப்பட்ட அழிவிலிருந்து மனந்திரும்புதலின் வாயிலாக விடுதலை

நோக்கம்: கர்த்தர் இஸ்ரவேல் தேசத்தை மீட்டு, கர்த்தருடைய நாளில் தேசங்களை நியாயந்தீர்ப்பதற்காக, அவர்கள் மனந்திரும்ப வேண்டுமென்று ஆவிக்குரிய தலைவர்கள் அவர்களுக்கு அழைப்பு விடுக்கும்படி அவர்களை அறிவுறுத்துதல்.

முக்கிய வசனம்: யோவேல்: 2:25,26 - “நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் ... என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டுப் போவதில்லை.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 06, 2012 5:27 am

30. ஆமோஸ்

அ) பின்னணி:


ஆசிரியர்: ஆமோஸ் (யூதாவிலுள்ள தெக்கோவாவிலிருந்து)

காலம்: ஏறக்குறைய கி.மு.760 - 750 வரை. இரண்டாம் யெரோபெயாம் ஆட்சி.

எந்நிலையில் எழுதப்பட்டது:

இரண்டாம் யெரோபெயாமின் ஆட்சி காலத்திலிருந்த மிகுதியான செழிப்பும், ஆவிக்குரிய சோர்வும், பெருமை, சுயநலம், பேராசை, அடக்குமுறை மற்றும் ஒழுக்கச் சீர்கேடு ஆகியவற்றிற்கு வழி நடத்தியது; எனவே, தேவன் ஆமோஸின் மூலமாக மனந்திரும்புதலின் அழைப்பை விடுத்தார். (2இராஜாக்கள்: 14:23-15:7; 2நாளாகமம்: 26 ம் அதிகாரம் பார்க்கவும்.)

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: ஆமோஸ்

எபிரேயு: “ஆமோஸ்” (Amos) “பாரம், பாரம் சுமப்பவர்”

கிரேக்கு: “ஆமோஸ்” (Amos) “ஆமோஸ்”

கருப்பொருள்:

தேவனுடைய உடன்படிக்கையைக் காத்துக் கொள்ளத் தவறிய இஸ்ரவேலுக்கு அளிக்கப்படவிருக்கும் நியாயத்தீர்ப்பின் பாரம்.

நோக்கம்:

தேவனுக்கு உண்மையற்றவர்களாய் இஸ்ரவேல் நடப்பித்த சமுதாய மற்றும் ஆவிக்குரிய பாவங்களின் விளைவாக அத்தேசத்திற்கு அளிக்கப்படவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்து எச்சரித்தல்.

முக்கிய வசனம்: ஆமோஸ்: 8:11 - “இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமுமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கா்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன்.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 06, 2012 5:42 am

31. ஒபதியா

அ) பின்னணி:


ஆசிரியர்: ஒபதியா

காலம்: உறுதியாக அறியப்படவில்லை. ஒருவேளை கி.மு.586 க்குப் பிறகு இருக்கலாம்.

எப்போது எழுதப்பட்டது:

இப்புத்தகம் எருசல‌ேம் வீழ்ச்சியடைந்த காலத்தை (கி.மு.586) சோ்ந்ததாக இருக்குமென்றால், பாபிலோனியா்கள் யூதாவை முறியடிக்கும்படி, அவர்களுக்கு ஏதோமியர்கள் அளித்த தவறான, சூழ்ச்சியான உதவியின் காரணமாக இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கலாம்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: ஒபதியா

எபிரேயு: ஒபதியா (Obedya) “தேவனுடைய ஊழியன்”

கிரேக்கு: “ஒப்படியு” (Obdiou) “ஒபதியா”

கருப்பொருள்:

ஏதோமின் பெருமை அதனுடைய வீழ்ச்சிக்கும், நியாயத்தீர்ப்புக்கும் காரணமானது. ஏனெனில், அது, தான் விதைத்தை அறுத்தது.

நோக்கம்:

இஸ்ரவேல் தேசத்திற்கு தொடர்ந்து “சரீரத்தின் முள்ளாக” இருந்த ஏதோமின் மீது வரவிருக்கும் நியாயத்தீர்ப்பின் காரணத்தையும், தன்மையையும் ஆராய்தல்.

முக்கியவசனம்:

ஒபதியா: வசனம் 3 - “கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம் போக்குகிறது.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 06, 2012 2:55 pm

32. யோனா

அ) பின்னணி:


ஆசிரியர்: யோனா

காலத்தின் தேவை:

நினிவேயினுடைய பாவத்தின் காரணமாகஅப்பட்டணத்திற்கு அளிக்கப்படவிருக்கும் தெய்வீக நியாயத்தீர்ப்பை அவர்கள் புற ஜாதிகளாக இருப்பதால் தடுக்க முடியுமென்றாலும், அவர்களுக்கு மனந்திரும்புதலை போதிக்கும்படி தேவன் ஒரு தீர்க்கதரிசியை அழைத்தார். நினிவேயின் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட “இயற்கை அழிவுகளின்” (கி.மு.765 மற்றும் 759 ல் ஏற்பட்ட கொள்ளை நோய்கள்; கி.மு.763 ல் ஏற்பட்ட சூரிய கிரகணம்) காரணமாக, யோனாவின் மூலம் தேவனால் அளிக்கப்பட்ட செய்தியைக் கேட்பதற்கு “ஆயத்தமாக இருந்தார்கள்”.

ஆ) உள்ளடக்கம்:


தலைப்பு: “யோனா”

எபிரேயு: “ஜோனா” (Jonah) “புறா”

கிரேக்கு: “ஜோனாஸ்” (Jonas) “யோனா”

கருப்பொருள்: மனந்திருமபிய புறஜாதி தேசங்களிடம் தேவன் பாராட்டிய எலலையில்லாத இரக்கம்.

நோக்கம்:

புறஜாதிகளிடம் தேவன் காண்பித்த அன்பிற்கும், இரக்கத்திற்கும் மாறாக, குறுகிய சிந்தையுள்ள ஒரு யூத தீர்க்கதரிசியின் அறியாமையையும், தவறான எண்ணத்தையும் எடுத்தக்காட்டுதல்.

முக்கியவசனம்:

யோனா: 4:2 - “...இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷிசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.” (அநீதிக்கான நியாயத்தீர்ப்பை அளிப்பதன் மூலம் தீங்கு செய்வதைக் குறித்து துயரப்படுகிறவர்).


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 06, 2012 5:23 pm

33. மீகா

அ) பின்னணி:


ஆசிரியர்: மீகா

காலம்: யோதாம், ஆகாஸ் மற்றும் எசேக்கியாவின் ஆட்சியில் (மீகா: 1:1) ஏறக்குறைய கி.மு.735 - 700வரை.

எப்போது எழுதப்பட்டது:

பின்னணியில், மீகாவின் காலத்தைச் சோ்ந்த ஏசாயாவின் பின்னணியைப் போன்றது. ஏசாயா அரசியல் சார்ந்த தீங்குகளைக் குறித்த கரிசனை கொண்டிருந்தார்; மீகா ஆவிக்குரிய மற்றும் சமுதாய தீச்செயல் குறித்து கரிசனை கொண்டிருந்தார்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: மீகா

எபிரேயு: “மிக்காயாகூ” (Mekayahu) “தேவனைப் போன்றவர்” (மீகா: 7:18-20)

கிரேக்கு: “மிகையாஸ்” (Michaias) “மீகா”

கருப்பொருள்: தேவனுடைய நீதி மற்றும் சர்வ வல்லமையை அடிப்படையாகக் கொண்ட சமுதாய சீர்திருத்தம் மற்றும் தனிப்பட்ட நீதி.

நோக்கம்:

யூதாவிலுள்ள தேவனுடைய மக்கள் தேவனிடம் காண்பித்த மாறுபாட்டைக் குறிப்பிட்டு, அவர்கள் தனிநபர்களாகவும், ஒரு தேசமாகவும் மனந்திரும்பி, கர்த்தரிடம் திரும்பும்படி அவர்களுக்காக பரிந்து ப‌ேசுதல்.

முக்கியவசனம்: மீகா: 6:8 - “மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து இரக்கத்தை சிந‌ேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 07, 2012 8:41 am

34. நாகூம்

அ) பினினணி:


ஆசிரியர்: “நாகூம்”

காலம்: ஏறக்குறைய கி.மு.660-630

எந்நிலையில் எழுதப்பட்டது:

கி.மு.627அசர்பனிபலின் மரணத்திற்கு பின்பு, கி.மு.626 ல் பாபிலோன் தன்னுடைய சுதந்தரத்தை நிலைநாட்டி, இறுதியாக மேதியருடன் சோ்ந்து அசீரியாவைத் தாக்கி, கி.மு.612 ல் அசீரியாவின் தலைநகரான நினிவேயை முற்றுகையிட்டபோது, அசீரியாவின் சாம்ராஜ்யம் தன்னுடைய முடிவைச் சந்தித்தபோது எழுதப்பட்டது.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “நாகூம்”

எபிரேயு: “நாகூம்” (Nahum) “தேறுதல், ஆறுதல்”

கிரேக்கு: “நாவோம்” (Naoum) “நாகூம்”

கருப்பொருள்: யூதாவுக்கான ஆறுதல் மற்றும் நினிவேயின் யுத்த மனப்பான்மைக்கான நியாயத்தீர்ப்பு.

நோக்கம்:

நினிவேயின் முற்றுக‌ையையும் மற்றும் எருசலேமின் கொடிய அநீதியினாலும், கடுமையினாலும் ஏற்பட்ட அழிவையும், குறித்து எச்சரித்தல்.

முக்கியவசனம்:

நாகூம்: 1:7,8 - “கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டு வருகிற வெள்ளத்தினால் சர்வகாரம் பண்ணுவார்; இருள் அவர் சத்துருக்களைப் பின் தொடரும்.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 07, 2012 8:56 am

35. ஆபகூக்

அ) பின்னணி:

ஆசிரியர்: ஆபகூக்

காலம்: கி.மு.605-598

எந்நிலையில் எழுதப்பட்டது:

யோயாக்கீம் ராஜாவாயிருந்த காலத்தில், யூதாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களின் முதல் தொகுதியினர் பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அநீதி நிறைந்த மக்களின் கரங்களால் நீதிமான்கள் அனுபவிக்கும் துன்பத்தின் பிரச்சினையைக் குறித்து ஆபகூக் தீர்க்கதரிசி விவாதிக்கிறார்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “ஆபகூக்”

எபிரேயு: “ஆபகூக்” (Habakkuk) “அணைத்தல்”

கிரேக்கு: “அம்பாகவோம்” (Ambakoum) “ஆபகூக்”

கருப்பொருள்:

தேவனுடைய மக்கள் அநீதி நிறைந்த ஒரு தேசத்தினால் கொடுமைப்படுத்தப்படும்போது, அவர்கள் தேவனுடைய இரக்கத்திலும் நீதியிலும், விசுவாசம் கொள்ளச் செய்தல்.

நோக்கம்:

தேவனுடைய மக்கள் தேவனை விசுவாசிப்பதற்காக, ‌அவருடைய நியாயத்தீர்ப்பு மற்றும் அழைப்பின் வழிகளை வெளிப்படுத்துதல்.

முக்கிய வசனம்:

ஆபகூக்: 2:3,4 - “குறித்த காலத்தக்குத் தரிசனம் இன்னு‌ம் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவில‌ே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 07, 2012 9:09 am

36. செப்பனியா

அ) பின்னணி:


ஆசிரியர்: செப்பனியா (எசேக்கியா ராஜாவின் பேரனுடைய மகன்)

காலம்: ஏறக்குறைய கி.மு.640-620 (ஏசாயா மற்றும் மீகாவிற்குப் பிறகு யூதாவின் முதல் தீர்க்கதரிசி)

எப்போது எழுதப்பட்டது:

தீய எண்ணம் படைத்த மனாசே மற்றும் ஆமோனின் ஆட்சி காலங்களில், மேற்கு யூதா மற்றும் பெலிஸ்திய தேசங்கள் சீத்தியர்களால் தாக்கப்படக்கூடிய அச்சுறுத்தல், மனந்திரும்புதலின் ஒரு அழைப்பிற்குக் காரணமாயிருந்திருக்கக் கூடும்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “செப்பனியா”

எபிரேயு: “செப்பனியா” (Sepanya) “தேவன் மறைத்து வைக்கிறார்”

கிரேக்கு: “சோபோநியாஸ்” (Sophonias) “செப்பனியா”

கருப்பொருள்:

தங்களைத் தாழ்த்தி, நீதியைத் தேடும் மக்களை கோபாக்கினையின்போது பாதுகாப்புடன் மறைத்து வைக்கும் தேவனுடைய இரக்கம்.

நோக்கம்:

நியாயத்தீர்ப்பின் கோபாக்கினையில் கர்த்தருடைய இரக்கத்தைத் தேடும்படி தாழ்மையுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்தல்.

முக்கியவசனம்:

செப்பனியா: 2:3 - “தேசத்திலுள்ள எல்லா சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள்; மனத் தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒரு வேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 07, 2012 1:26 pm

37. ஆகாய்

அ) பின்னணி:


ஆசிரியர்: ஆகாய்

காலம்: ஏறக்குறைய கி.மு.520

எந்நிலையில் எழுதப்பட்டது:

செருபாபேல் மற்றும் ஆகாயின் கீழ் நாடு கடத்தப்பட்டவர்கள் தங்கள் தேசத்திற்கு திரும்பினபோது, ஆலயத்தைத் திரும்பக் கட்டாதபடி, புறம்பான எதிர்ப்புகளும் உள்ளான நெருக்கங்களும் அவர்களைத் தடுத்தன. எனவே, ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி ஆகாய் மக்களை ஊக்குவிக்கிறார்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: ஆகாய்

எபிரேயு: “ஹாகாய்” (Haggai) “பண்டிகை”

கிரேக்கு: “அகாயோஸ்” (Aggaios) “ஆகாய்”

கருப்பொருள்: ஆலயத்தைத் திரும்பக் கட்டுதல்

நோக்கம்:

தேசத்திற்கு திரும்பியவுடன் நாடு கடத்தப்பட்டவர்கள் ஆலயத்தைக் கட்டத் துவங்கும்படி அவர்களைத்தூண்டுதல், ஏனெனில், ஆலயத்தைக் கட்டும் பணியில் தேவன் அவர்களோடிருப்பார் என்று ஆறுதல் கூறுதல்.

முக்கியவசனம்:

ஆகாய்: 2:4,5 - “வேலையை நடத்துங்கள், நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லகிறார். நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கையை பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலை கொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்”



தொடரும்...


Sponsored content

PostSponsored content



Page 11 of 19 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக