புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_m10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_m10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_m10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_m10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_m10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_m10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10 
8 Posts - 3%
prajai
ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_m10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_m10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_m10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_m10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_m10ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை


   
   
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 20, 2012 6:56 am

அமைதியாக இருந்து கொண்டிருந்த ஜனாதிபதி தேர்தல் களத்திற்குள், ஜெயலலிதா மற்றும் நவீன் பட்நாயக் ஆகிய இருவரும், அதிரடியாக கல் எறிந்து கலக்கிவிட்டிருப்பதால், தேசிய அரசியலே கலங்கிப் போய் அனல் அடிக்கிறது.

புதிய ஜனாதிபதி ஒருமனதாக தேர்வாகலாம் என்ற நிலையில், போட்டி ஏற்படுமோ என்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த இரு தலைவர்களது அறிவிப்பும், மத்தியில் ஆளும் கூட்டணியிலும், எதிர்தரப்பான பா.ஜ., கூட்டணிக்குள்ளும், புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதால், பரபரப்பு கிளம்பியுள்ளது.

ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை Tamil_News_large_470189

புது திருப்பம்: புதிய ஜனாதிபதிக்கான வேட்பாளர் யார் என்ற பரபரப்பு, ஆரம்பத்தில் சில நாட்கள் காணப்பட்டாலும், அது அப்படியே அமுங்கிப்போய் கிடந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா டில்லிக்கு வந்திருந்தபோது கூட, இதுதொடர்பாக, யாரும் தன்னை அணுகவில்லை என்று பேட்டியளித்துவிட்டு சென்றார். எல்லா கட்சிகளும் பேசிக் கொண்டிருந்தனவே தவிர, காங்கிரஸ் மட்டும் அமைதியாக இருந்தது. இதை, சற்று தாமதமாக புரிந்து சுதாரித்துக் கொண்ட எதிர்க்கட்சிகள், தனது வேட்பாளர் யார் என்பதை, முதலில் காங்கிரஸ் அறிவிக்கட்டும். அதன்பிறகு பார்க்கலாம் என்று தீர்மானித்து விட்டன. காங்கிரசின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி அல்லது அமீத் அன்சாரி இருவரில் ஒருவராகத் தான் இருக்கும் என்பதே, பரவலான கருத்தாக இருந்தது. இந்நிலையில் தான், முன்னாள் சபாநாயகரான சங்மாவின் பெயரை, பிஜு ஜனதா தளமும், அ.தி.மு.க.,வும் முன்னிறுத்தியுள்ளன. மிக அமைதியாக இருந்த ஜனாதிபதி தேர்தல் களமானது, நவீன் பட்நாயக் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது அறிவிப்புகளுக்கு பிறகு, புதிய திருப்பத்தில் சிக்கியுள்ளது. சாதுர்யத்துடன் கூடிய இந்த இருவரது முடிவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், புதிய குழப்பத்தை உருவாக்கலாம். அதே வேளையில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, புதிய தெம்பை தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசைக்கு வந்த சிக்கல்: எதிர்ப்பே இல்லாமல், ஒருமனதாக தனது வேட்பாளரையே ஜனாதிபதியாக்கி விடலாம் என்ற காங்கிரசின் ஆசை, தற்போது சிக்கலாகியுள்ளது. வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த, அதுவும் பழங்குடியின தலைவர் ஒருவரை, எதிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பழங்குடியின மக்கள் கணிசமாக உள்ள குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், சட்டசபைத் தேர்தல்கள் வரவுள்ளன. இதை, காங்கிரஸ் யோசித்தே ஆக வேண்டும். தவிர, திரிணமுல், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள், இன்னும் தங்களது முடிவை எடுத்துவிட்டதாகவும் தகவல் இல்லை. எனவே, பழங்குடியின வேட்பாளரை எதிர்க்க வேண்டிய நிலையை, அவ்வளவு எளிதாக இந்த கட்சிகள் எடுத்துவிட இயலாது.

தயக்கம் ஏன்? அடுத்த பொதுத் தேர்தலுக்கு பிறகு, காங்கிரசின் பலம் மிகவும் குறையும். ஆட்சிக்கு வருவது அவ்வளவு எளிதல்ல என்ற கருத்தும் இருப்பதால், அவசரப்பட்டு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, ஜனாதிபதியாக்குவதில் மாயாவதி, முலாயம், மம்தா உள்ளிட்ட காங்கிரசின் நிகழ்கால நண்பர்களுக்கும், தயக்கம் இருப்பதாகவும் செய்தி உள்ளது. இதில், மம்தாவின் ஆதரவு மிக முக்கியமானதும் கூட. 2007ம் ஆண்டு இடதுசாரிகளால் முன்னிறுத்தப்பட்டவர் அமீத் அன்சாரி. தவிர, மேற்கு வங்கத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கும் விஷயத்தில், பிரணாப் முகர்ஜியோடும் மம்தாவுக்கு உறவு சரியாக இல்லை. எனவே, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்காமல், சங்மாவை மம்தாவும், முலாயம் சிங்கும் ஆதரிக்கும் சூழ்நிலை உருவானால், அதுவே அடுத்த பொதுத் தேர்தலுக்கான காங்கிரஸ் பா.ஜ., அல்லாத மூன்றாவது அணிக்கான அடித்தளமாக ஆகிவிடும்.

தர்ம சங்கடம்: இதுமட்டுமல்லாது, தற்போது, சங்மாவின் பெயரை களத்தில் எழுதி போட்டிருப்பதால், தனது வேட்பாளர் யார் என்பதை சொல்லியாக வேண்டிய கட்டாயமும், காங்கிரசுக்கு உருவாகியுள்ளது. இனியும் காலம் தாழ்த்தி, தங்களை ஆழம் பார்க்கும் வேலையை, காங்கிரஸ் செய்து விடமுடியாது என்ற ஒரு மகிழ்ச்சியும், நட்பு கட்சிகளுக்கு வந்துள்ளது. இதனால், பொதுக் கருத்து அடிப்படையில், தேர்வா அல்லது போட்டி அடிப்படையில் தேர்வா என்பதை, சொல்லியாக வேண்டிய இக்கட்டு, காங்கிரசுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா, பட்நாயக் ஆகிய இருவரது அறிவிப்பும், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள், இப்படி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அதே வேளையில், எதிர் கூட்டணியிலும் சுறுசுறுப்பை உண்டாக்கியுள்ளது. அவசரப்பட்டு கருத்து தெரிவித்து, சொந்த கூட்டணி கட்சிகளின் கோபத்துக்கு ஆளான பிறகு, அமைதியாக பா.ஜ., இருந்து வந்தது. ஏறத்தாழ, ஜனாதிபதி தேர்தல் களத்தில் இருந்து, தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகக் கூட, கடந்த சில வாரங்களாக, பா.ஜ., இருந்தது. அந்த நிலையும், தற்போது மாறியுள்ளது. பிரணாப், அன்சாரி ஆகிய இரண்டு பேரையுமே, வேண்டாம் என ஆரம்பத்திலேயே அறிவித்திருந்த பா.ஜ.,வுக்கு, சங்மாவை ஆதரிப்பதன் மூலம், சங்கடம் ஏதும் வந்துவிடாது. ஏற்கனவே, மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரை, சங்மா சந்தித்துப் பேசிவிட்டார். அடுத்த வாரம், மும்பையில் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில், தனது இறுதி முடிவை பா.ஜ., எடுக்கவுள்ளது. இருப்பினும், கூட்டணி கட்சிகளையும் கலந்து, கூட்டாகவே அந்த அறிவிப்பு வரும் என தெரிகிறது. அடுத்த வாரம், இடதுசாரி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடாகியிருப்பதால், அவர்களது முடிவும் தெரிந்துவிடும்.

வாய்ப்பு குறைவு: தற்போதைய சூழலில், சங்மாவுக்கு மிக மிக வாய்ப்பு குறைவு என்றாலும், இவரது பெயர், முக்கிய கட்சிகளுக்கு பல்வேறு தர்ம சங்கடங்களையும் கூடுதல் நிர்பந்தங்களையும் உருவாக்கியுள்ளது. இதனால், ஜனாதிபதிக்கான தேர்தல் களம், முற்றிலுமாக மாறிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோனியாவின் முடிவு சங்மாவுக்கு சாதகமாகுமா? ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள சரத்பவார் கட்சியின் மிக முக்கிய நிறுவனத் தலைவர்களுள் சங்மாவும் ஒருவர். இப்போதும், கட்சியின் மூத்த பொதுச் செயலர்களில் ஒருவர். இவரின் மகள் அகதா சங்மா, மத்திய அரசில் அமைச்சராகவும் உள்ளார். மேகாலயா முதல்வர், லோக்சபா சபாநாயகர், மத்திய அமைச்சர் என, நெடிய அனுபவம் இருந்தாலும் கூட, சங்மாவுக்கு ஆதரவு அளிக்க, சரத்பவார் முன்வரவில்லை. "நாங்கள் சிறிய கட்சி. போதிய பலம் இல்லாத போது, மிகப்பெரிய பதவிக்கு ஆசைப்படுவதில் அர்த்தம் இல்லை' என்று, பவார் கூறிவிட்டு, நாசூக்காக ஒதுங்குவதன் மூலம், காங்கிரஸ் வேட்பாளருக்கே ஆதரவு என்ற நிலையில் உள்ளார். பவாரை பொறுத்தவரை, தேசிய அரசியலில் பெரிய பதவியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர். எனவே, தன்னை தாண்டிச் செல்ல, தனது கட்சியின் இன்னொரு தலைவரை அனுமதிக்க மாட்டார் என்பதே உண்மை. இருப்பினும், "பவாரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். சோனியாவையும் கூட சந்திக்கவுள்ளேன். நான் தான் என்றில்லை. அது காங்கிரசிலேயே தற்போது அமைச்சராக இருக்கும் கி÷ஷார் சந்திரதேவ், அரவிந்த், பா.ஜ.,வின் கரியமுண்டா என, யாராக இருந்தாலும் பரவாயில்லை. இம்முறை, ஒரு பழங்குடியினத்தவரே ஜனாதிபதியாக வேண்டும். கட்சிகள் முடிவெடுக்கட்டும். பார்க்கலாம்' என்கிறார் சங்மா.

-தினமலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக