புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு
Page 7 of 12 •
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
First topic message reminder :
ராஜ் சிவா !
ஈகரை அன்பர்களுக்கு நன்கு தெரிந்த பெயர் ,,,,
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' என்ற சுவாரசியமான கட்டுரையின் ஆசிரியர் .
அவர் வேறொரு கட்டுரை தொடரை உயிரோசையில் ஆரம்பித்துள்ளார் அதுதான்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன"
இந்த கட்டுரை பற்றிய அறிமுகத்தில் ராஜ் சிவா இப்படி குறிப்பிடுகிறார்
நான் எழுதப் போகும் அனைத்தும் உங்களால் நம்ப முடியாதவையாகவே இருக்கும். ஆனால் ஒரு நேரத்தில் நம்ப வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு வந்தே தீரும். இவற்றை நீங்கள் நம்ப வேண்டும், நம்பாமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இப்படியெல்லாம் உலகில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியப்படுத்துவதே என் முதல் நோக்கமாக இருக்கிறது.
அப்படி என்ன தான் சொல்லபோகிறார் ராஜ் சிவா!
உங்களோடு அறிய நானும் ஆவல்கொண்டிருக்கிறேன் ..படிப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்
இதோ முதல் பகுதி .......
நன்றி :உயிரோசை
ராஜ் சிவா !
ஈகரை அன்பர்களுக்கு நன்கு தெரிந்த பெயர் ,,,,
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' என்ற சுவாரசியமான கட்டுரையின் ஆசிரியர் .
அவர் வேறொரு கட்டுரை தொடரை உயிரோசையில் ஆரம்பித்துள்ளார் அதுதான்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன"
இந்த கட்டுரை பற்றிய அறிமுகத்தில் ராஜ் சிவா இப்படி குறிப்பிடுகிறார்
நான் எழுதப் போகும் அனைத்தும் உங்களால் நம்ப முடியாதவையாகவே இருக்கும். ஆனால் ஒரு நேரத்தில் நம்ப வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு வந்தே தீரும். இவற்றை நீங்கள் நம்ப வேண்டும், நம்பாமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இப்படியெல்லாம் உலகில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியப்படுத்துவதே என் முதல் நோக்கமாக இருக்கிறது.
அப்படி என்ன தான் சொல்லபோகிறார் ராஜ் சிவா!
உங்களோடு அறிய நானும் ஆவல்கொண்டிருக்கிறேன் ..படிப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்
இதோ முதல் பகுதி .......
நன்றி :உயிரோசை
பகிர்வுக்கு நன்றி , அடுத்த பகுதியில் சந்திப்போம்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- svbalakumar2001புதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 06/07/2012
படிக்க படிக்க ஆச்சர்யத்தையும் விந்தையையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -part =10
!["இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 7 Photo%201](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-203/Photo%201.jpg)
இந்த வாரத்துடன், இந்தத் தொடர் பத்தாவது அத்தியாயத்தில் காலடியெடுத்து வைக்கிறது. தொடரில் இதுவரை சொல்லப்பட்டவற்றை நீங்கள் என்ன விதத்தில், எந்தக் கோணத்தில் மனதில் உள்வாங்கிக் கொண்டீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பேய்க்கதைகள் கேட்பது போல மர்மத்தையும், திகிலையும் மட்டும் எதிர்பார்த்து, இதை வாசித்திருப்பீர்களானால், நான் மாபெரும் தோல்வியுற்றவனாவேன். பேய்கள் போன்று பகுத்தறிவுக்கே ஒத்துவராதவற்றைப் பார்த்ததாகச் சிலர் தலையிலடித்துச் சத்தியம் செய்வது போல, இவற்றையும் ஒரு மூடநம்பிக்கையாக நான் உங்களுக்குள் விதைக்கப் பார்க்கிறேன் என்று வாசிப்பவர்கள் யாராவது நினைத்தாலும், எனது நோக்கம் தோல்வியடைந்துவிடும். சிலர் ஒருபடி மேலே போய், "ஏலியனா! இதென்ன பைத்தியக்காரத்தனம்? ஏலியனும் இல்லை. பறக்கும்தட்டும் இல்லை. எல்லாமே ஏமாத்து வேலை" என்று ஏளனம் செய்வார்கள். ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன். மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்களில் நான் யாருக்கும் குறைந்தவனல்ல. மூடநம்பிக்கையின் எந்த மூலையிலும் உங்களை நான் விட்டுவிட்டுத் திரும்பிச் செல்ல மாட்டேன். அறிவியலினதும், ஆராய்ச்சியினதும் கைகள் எந்தெந்த இடங்களில் நீண்டு கொண்டிருக்கிறதோ அங்கே மட்டும்தான் நான் உங்களை அழைத்துச் செல்வேன்.
ஏலியன்களும், பறக்கும் தட்டுகளும் இருக்கின்றன என்பதை முற்றாக மறுத்து, அதுபற்றிப் பேசுபவர்களை முட்டாள்கள் போலப் பார்ப்பவர்களுக்கு மட்டும் ஒரு விசயத்தைச் சொல்லிவிட்டுத் தொடர்கிறேன். ஏலியனையோ, பறக்கும் தட்டையோ கண்ணால் காணும்வரை அவை இருக்கின்றன என்று கூற முடியாது என்பது உண்மைதான். ஆனால், அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என அனைத்து நாடுகளும் சேர்ந்து SETI (Search for ExtraTerrestrial Inteligence) என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் நோக்கமே ஏலியன்கள், அயல்கிரகங்களில் இருக்கின்றனவா என்று தேடுவதுதான். உலகின் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அதியுயர் விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். 'ஹார்வார்ட்' உட்பட பல்கலைக்கழகம் அடக்கமாக பிரபலமான அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இதில் சேர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுகின்றன. ஆண்டொன்றுக்குப் பில்லியன் கணக்கான டாலர்கள் இதற்கெனச் செலவு செய்யப்படுகின்றன. உலகம் முழுவதும் 'ஆப்ஸர்வேட்டரி' (Observatory) என்னும் பாரிய தொலைநோக்கிக் கருவிகளை அமைத்து, விண்வெளியை அங்குலம் அங்குலமாக, ஒவ்வொரு செக்கனும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படித் தேடுபவர்கள் யார்? அனைவரும் படிப்பில் மாமேதைகள். ஒன்றுமே இல்லாத ஒரு பைத்தியக்காரத்தனத்துக்கு இப்படி நேரத்தையும் பணத்தையும் இவர்கள் செலவழிப்பார்களா? அப்படி இவர்கள் செலவளிப்பதை அரசுகள் பார்த்துக் கொண்டு பண உதவி அளிக்குமா? ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டுத்தானே இப்படிச் செய்கிறார்கள். அந்த உலக மகாவிஞ்ஞானிகள் அனைவரும் முட்டாள்களா? அவர்கள் முட்டாள்களாக இருக்கும் பட்சத்தில், நாமும் முட்டாளாக இருப்பதில் தவறில்லைதானே!
!["இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 7 Photo%202](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-203/photo%202.jpg)
பல நாட்களுக்குப் பின்னர் நாம் மீண்டும் பயிர் வட்டங்களின் இடத்திற்கு வந்திருக்கிறோம். எனவே இன்று கொஞ்சம் விசேசமாக பயிர்வட்டங்கள் பற்றிப் பார்க்கலாம். மனிதர்களே உருவாக்கவில்லை என்று அடித்துச் சொல்லும் பயிர்வட்டச் சம்பவங்களிலிலிருந்து இன்று ஆரம்பித்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். அதனால் ஆச்சரியங்களின் ஊற்றாக இருக்கும் ஸ்டோன் ஹெஞ்சுக்கு அருகே சென்று, அந்த இடத்தில் பயிர்களுக்கு ஏதாவது நடந்ததா எனப் பார்க்கலாம் வாருங்கள்.
1996ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் திகதி, மாலை 6 மணியளவில் லூஸி பிரிங்கெல் (Lucy Pringle) என்னும் பெண்மணி, தன்னுடைய மகனைப் பார்ப்பதற்கு டாக்ஸி ஒன்றில், ஸ்டோன் ஹெஞ்சுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் A303 நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். இருபக்கமும் பச்சையாய்ப் பரவியிருக்கும் வயல்வெளிகள். ஸ்டோன் ஹெஞ்சை டாக்ஸி அண்மித்ததும், சாலையில் மறுபுறமாக இருந்த வயல்வெளியில் காற்றின் சுழற்சியால் ஏற்பட்ட புழுதிபோன்று, ஏதோ ஒன்று உருவாவதை அவதானித்தார். ஏனோ அவருக்கு அது வினோதமான காட்சியாகத் தெரிந்தது. டாக்ஸி ஓட்டுனரிடம் டாக்ஸியைச் சாலையில் நிறுத்தும்படி கூறிவிட்டு நடப்பதை அவதானித்தார். வயலில் இருந்து ஒரு மீட்டர் உயரத்துக்கு மிகப்பெரிய வட்டவடிவத்தில், புகை போன்று காற்றுச சுழன்றபடி அந்த வயல்வெளிப் பிரதேசத்தில் அங்கும் இங்கும் அலைவதை அவதானித்தார். அவதானித்தது அவர் மட்டுமல்ல, அவருடனிருந்த டாக்ஸி ஓட்டுனரும்தான். யூலை மாதங்களில் ஐரோப்பாவெங்கும் இருட்டாவதற்கு மாலை 9 மணிக்கு மேலாகும். இங்கிலாந்திலும் நல்ல வெளிச்சமான பகல் நேரம் அது. திடீரென அந்த வட்டச் சுழற்சி நின்று மறைந்து போனது. அங்கே லூஸி கண்ட காட்சி யாருமே நம்பமுடியாதது. 115 மீட்டர் அகலமான மிகப்பெரிய பயிர்வட்டம் அங்கே காட்சியளித்தது. 151 வட்டங்களைக் கொண்டு அந்தப் பயிர்வட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. முன்னர் ஒருமுறை நான் சொன்னது போன்று 'ஜூலியா செட்' (Julia Set) என்னும் வடிவுடைய ஃப்ராக்டல் (Fractal) சித்திரமாக அது இருந்தது. ஃப்ராக்டல் என்பது மிகவும் சிக்கல் வாய்ந்த கணித வரைவு ஆகும்.
.!["இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 7 Photo%203](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-203/photo%203.jpg)
பட்டப்பகலில் பலர் சாட்சியாக இருக்கும்போது உருவானது 'ஜுலியா செட்' பயிர்வட்டம். லூஸியின் சாட்சியத்தின்படி மொத்தமாக 20 நிமிசங்களில் அந்தப் பயிர்வட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. லூஸியினதும், டாக்ஸி ஓட்டுனரதும் சாட்சியை நாம் பொய்யென்று வைத்தாலும், ஸ்டோன் ஹெஞ்சை வானத்தில் இருந்து பார்ப்பதற்கு ஆயத்தமான சிறு விமானம் ஒன்றின் விமானியும் அதில் அமர்ந்தவர்களும் மாலை 5.30 மணியளவில் அதற்கு மேலாகப் பறந்து சென்றிருக்கிறார்கள். அந்த இடத்தில் எதுவும் காணப்படவில்லை. பின்னர் மீண்டும் மாலை 6.15 மணி போலத் திரும்பி வந்தபோது, இந்தப் பயிர்வட்டம் காட்சியளித்திருக்கிறது.அதாவது 45 நிமிடங்களில் அது உருவாக்கப்பட்டிருகிறது என்று விமானி சொல்லியிருக்கிறார். அதோடு ஸ்டோன் ஹெஞ்சின் பாதுகாவலர்களாகக் கடமையாற்றியவர்களும் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். இவையெல்லாவற்றையும் விட, 'A303 நெடுஞ்சாலை' மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலை. எப்போதும் வாகனப் போக்குவரத்துடன் காட்சியளிக்கும் ஒரு நெடுஞ்சாலை அது. அந்த இடத்தில் யாருக்கும் தெரியாமல் மனிதர்கள் பட்டப்பகலில் அந்தப் பயிர் வட்டத்தை உருவாக்கியிருக்கவே முடியாது. அப்படி உருவாக்கினோம் என்று யாராவது கூறினாலும் நம்பவே முடியாததாகவே இருக்கும்.
இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், இரண்டுமே நம்ப முடியாத சம்பவமாகவே இருக்கிறது. மனிதர்கள் உருவாக்காமல் வேறு ஒரு சக்தி உருவாக்கியது என்பதையும் நம்ப முடியவில்லை. மனிதர்கள் பட்டப்பகலில் உருவாக்கினார்கள் என்பதையும் நம்பமுடியவில்லை. ஆனால் அந்த பயிர்வட்டம் உருவாகியதை மட்டும் நம்பித்தான் ஆக வேண்டும்.
மீடியாக்கள், மக்கள் என அனைவரிடமும் இந்தச் சம்பவம் மிகப்பரபரப்பாகப் பேசப்படத் தொடங்கியது. மக்கள் அங்கு கூட்டமாகக் கூடத் தொடங்கினர். அப்போது, அந்தப் பயிர்வட்டத்தை நாங்கள்தான் உருவாக்கினோம் என்று இரண்டு இளைஞர்கள் பேட்டி கொடுத்தனர். அந்த இளைஞர்கள் சில பயிர்வட்டங்களை ஏற்கனவே உருவாக்கியிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த அளவுக்கு மீடியாவில் விளம்பரம் கிடைத்த ஒன்றில் அதுவும் பட்டப்பகலில், பலரின் கண்முன்னே உருவான ஒன்றை அவர்கள் உருவாக்கினார்கள் என்று சொன்னதை யாரும் நம்பவில்லை. விளம்பரத்துக்காக பல வித்தியாசமான பயிர்வட்டங்களை நாம்தான் உருவாக்கினோம் என்று மூலைக்கு மூலை புறப்பட்டு வரும் சம்பவங்கள் அந்த நேரங்களில் அதிகமாகவே நடக்கத் தொடங்கியிருந்தன. இந்த ஜூலியா செட் பயிர்வட்டத்தை நாங்கள்தான் உருவாக்கினோம் என்று சொன்ன இளைஞர்களின் பேட்டியில் பல தடுமாற்றங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். எது எப்படியாயினும் இந்தப் பயிர்வட்டத்தை மனிதர்கள் உருவாக்கினார்கள் என்று நம்புவது மிகவும் கடினமாகவே இருந்தது. மனிதர்கள் உருவாக்கவில்லை என்பதை மேலும் உறுதி செய்வதற்கு, இன்னுமொரு பயிர் வட்டமும் உருவாகியது. அது அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கியது.
!["இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 7 Photo%204](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-203/photo%204.jpg)
மேலே சொல்லப்பட்ட ஜூலியா செட் பயிர்வட்டம் உருவாகி, சரியாக 11 வருடங்களின் பின்னர் அதே நாளில் நடந்தது இன்னுமொரு ஆச்சரியமான சம்பவம். 2007ம் வருடம் ஜூலை மாதம் 7ம் திகதி அந்தச் சம்பவம் நடந்தது. வின்ஸ்டன் கீச்சும் (Winston Keech), காரி கிங்கும் (Gary King) நண்பர்கள். வின்ஸ்டன் ஒரு எஞ்சினியராக இருந்தாலும், அவருக்கு ஏலியன்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நெடுநாட்களாக உண்டு. இரவில் படம் பிடிக்கும் காமெராக்கள் சகிதமாக வைல்ட்ஷையரில் உள்ள வயல்வெளிப் பிரதேசங்களில் திரிந்தபடி கண்காணிப்பதே அவர் வேலை. 07.07. 2007 அன்று, 'ஈஸ்ட்ஃபீல்ட்' (East Field) என்னும் இடத்திலுள்ள மலையில் நண்பர் காரியுடன் அமர்ந்தபடி வயல்வெளிகளை அவதானித்துக் கொண்டிருந்தார். தன்னிடம் இருந்த காமெராக்களை ஓடவிட்டுக் கொண்டு உடனிருந்த காரியுடன் பேசிக்கொண்டிருந்தார். நள்ளிரவு தாண்டி, நேரம் அதிகாலை 1.35 ஐ நெருங்கியது. கும்மிருட்டில் திடீரென 'ஃப்ளாஷ்' வெளிச்சங்கள் போல ஒளி வட்டங்கள் தோன்றின. இதற்கென்றே தயாராக இருந்த அவர்கள் ஆச்சரியத்துடனும், சந்தோசத்துடனும், ஒருவித பயத்துடனும் அங்கு நடப்பதை வீடியோக் காமெராவினால் பதிவு செய்தனர். அத்துடன் 'நைட்விஷன்' பொருத்தப்பட்ட வேறு கமெராவில் பார்த்தபோது, எங்கும் மனித நடமாட்டமோ, வாகனங்களோ காணப்படவில்லை. அவர்கள் அமர்ந்திருந்தது சிறிய மலைப்பிரதேசம் என்றபடியினால், அனைத்தையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதிகாலை 3 மணிவரை அந்த ஃப்ளாஷ் வெளிச்சங்கள் ஆங்காங்கே எரிந்து அணைவதைக் கண்டார்கள். 3.13 மணிவரை அவர்களுக்கு முன்னால் காட்சி தந்த பெரிய வயல்வெளியில் எதுவுமே இருக்கவில்லை. ஆனால் ஏழே நிமிடங்களின் பின்னர் 3.20க்குப் பார்த்த போது அவர்களால், அவர்கள் கண்களை நம்பவே முடியவில்லை. வயல்வெளியில் நீளமான வடிவமொன்றைக் கண்டார்கள். அது என்ன எதுவென்று தெரியவில்லை. உடன் சென்று பார்க்கவும் பயமாக இருந்தது. நான்கு மணியளவில் கொஞ்சம் வெளிச்சம் வரத்தொடங்கியதும் பார்த்த போதுதான் தெரிந்தது. அது ஒரு மிகப்பெரிய பயிர்வட்டம் என்பது.
!["இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 7 Photo%205](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-203/photo%205.jpg)
நடந்தவை அனைத்துமே காட்சிகளாக, சாட்சிகளாக வின்ஸ்டனின் காமெராக்களில் பதிவாகியிருந்தன. உருவாக்கப்பட்டிருந்த பயிர்வட்டம் 300 மீட்டர் நீளமாகப் பிரமாண்டமானதாக இருந்தது. 150 தனித்தனி வட்டங்களால் அது உருவாக்கப்பட்டிருந்தது. அந்தச் சம்பவத்தைப் பொய்யென்று யாருமே மறுக்க முடியாதபடி, உண்மையான வீடியோ ஆதாரங்களுடன் அவர்கள் கொடுத்த பேட்டி ஐரோப்பாவையே உலுக்கியெடுத்தது. அனைத்துப் பத்திரிகைகளும் அது பற்றிய செய்திகளை வெளியிட்டன. இதில் என்ன ஆச்சரியமென்றால், 'மைக்ரோவேவ்' (Microvave) என்று சொல்லப்படும் வெப்பக் கதிர்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது உடனடியான பரிசோதனைகள் மூலம் அவதானிக்கப்பட்டது. யாரும் இதை நாங்கள்தாம் செய்தோம் என்று சொந்தம் கொண்டாடி வரவுமில்லை. மனிதனால் செய்யப்படாத பயிர்வட்டத்துக்கு மிகவும் ஆணித்தரமான சாட்சியாக இந்தப் பயிர்வட்டம் காட்சியளித்தது.
இதுவரை பயிர்வட்டங்களைப் பற்றி பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் எவராலும், எதுவும் சொல்ல முடியவில்லை. ஏழே நிமிடங்களில் 300 மீட்டர் அதாவது இரண்டு ஃபுட்பால் மைதானங்கள் அளவு பெரிய பயிர்வட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இது எப்படிச் சாத்தியமாக முடியும்? சரி, இதை மனிதன்தான் உருவாக்கினான் என்றால் அவனுக்குக் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் இதைச் செய்வதற்குத் தேவைப்பட்டிருக்கும். சரி, இவை மனிதனால் செய்யப்படவில்லை என்றால், யாரால் செய்யப்படுகின்றன? பகலில் காற்றுச் சுழல்கள் போலவும், இரவில் வெளிச்சப் பந்துகள் போலவும் காட்சி தருபவை என்ன? இப்படியான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், இந்தப் பயிர்வட்டத்தை ஆராய்ந்த சிலர் வேறு ஒரு விளக்கத்துடன் நிற்கிறார்கள். அந்த விளக்கத்தை நீங்கள் அறிந்தால் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பீர்களோ தெரியவில்லை. ஆராய்ச்சியாளர்களில் சிலர் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா...?
அதைப் படத்திலேயே பாருங்கள் தெரியும்.......!
!["இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 7 Photo%206](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-203/photo%206.jpg)
ஆம்! சாட்சாத் இந்துக்களின் 'ஓம்' என்னும் அடையாளம்தான் இது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களில் சிலர். இப்படிப் பர்க்கும்போது நிலைமை மேலும் சிக்கலான ஒரு வடிவத்தையே எடுக்கிறது என்று நம்பக் கூடிய நிலைக்கு நாம் வந்துவிடுவோம். இந்த அளவுக்கு மேல் இன்று யோசித்தால் தலையே வெடித்துவிடும். எனவே இந்த வாரம் இவை பற்றிச் சிந்திப்பதை விட்டுவிட்டு, அடுத்த வாரம் மீண்டும் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்
!["இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 7 Photo%201](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-203/Photo%201.jpg)
இந்த வாரத்துடன், இந்தத் தொடர் பத்தாவது அத்தியாயத்தில் காலடியெடுத்து வைக்கிறது. தொடரில் இதுவரை சொல்லப்பட்டவற்றை நீங்கள் என்ன விதத்தில், எந்தக் கோணத்தில் மனதில் உள்வாங்கிக் கொண்டீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பேய்க்கதைகள் கேட்பது போல மர்மத்தையும், திகிலையும் மட்டும் எதிர்பார்த்து, இதை வாசித்திருப்பீர்களானால், நான் மாபெரும் தோல்வியுற்றவனாவேன். பேய்கள் போன்று பகுத்தறிவுக்கே ஒத்துவராதவற்றைப் பார்த்ததாகச் சிலர் தலையிலடித்துச் சத்தியம் செய்வது போல, இவற்றையும் ஒரு மூடநம்பிக்கையாக நான் உங்களுக்குள் விதைக்கப் பார்க்கிறேன் என்று வாசிப்பவர்கள் யாராவது நினைத்தாலும், எனது நோக்கம் தோல்வியடைந்துவிடும். சிலர் ஒருபடி மேலே போய், "ஏலியனா! இதென்ன பைத்தியக்காரத்தனம்? ஏலியனும் இல்லை. பறக்கும்தட்டும் இல்லை. எல்லாமே ஏமாத்து வேலை" என்று ஏளனம் செய்வார்கள். ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன். மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்களில் நான் யாருக்கும் குறைந்தவனல்ல. மூடநம்பிக்கையின் எந்த மூலையிலும் உங்களை நான் விட்டுவிட்டுத் திரும்பிச் செல்ல மாட்டேன். அறிவியலினதும், ஆராய்ச்சியினதும் கைகள் எந்தெந்த இடங்களில் நீண்டு கொண்டிருக்கிறதோ அங்கே மட்டும்தான் நான் உங்களை அழைத்துச் செல்வேன்.
ஏலியன்களும், பறக்கும் தட்டுகளும் இருக்கின்றன என்பதை முற்றாக மறுத்து, அதுபற்றிப் பேசுபவர்களை முட்டாள்கள் போலப் பார்ப்பவர்களுக்கு மட்டும் ஒரு விசயத்தைச் சொல்லிவிட்டுத் தொடர்கிறேன். ஏலியனையோ, பறக்கும் தட்டையோ கண்ணால் காணும்வரை அவை இருக்கின்றன என்று கூற முடியாது என்பது உண்மைதான். ஆனால், அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என அனைத்து நாடுகளும் சேர்ந்து SETI (Search for ExtraTerrestrial Inteligence) என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் நோக்கமே ஏலியன்கள், அயல்கிரகங்களில் இருக்கின்றனவா என்று தேடுவதுதான். உலகின் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அதியுயர் விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். 'ஹார்வார்ட்' உட்பட பல்கலைக்கழகம் அடக்கமாக பிரபலமான அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இதில் சேர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுகின்றன. ஆண்டொன்றுக்குப் பில்லியன் கணக்கான டாலர்கள் இதற்கெனச் செலவு செய்யப்படுகின்றன. உலகம் முழுவதும் 'ஆப்ஸர்வேட்டரி' (Observatory) என்னும் பாரிய தொலைநோக்கிக் கருவிகளை அமைத்து, விண்வெளியை அங்குலம் அங்குலமாக, ஒவ்வொரு செக்கனும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படித் தேடுபவர்கள் யார்? அனைவரும் படிப்பில் மாமேதைகள். ஒன்றுமே இல்லாத ஒரு பைத்தியக்காரத்தனத்துக்கு இப்படி நேரத்தையும் பணத்தையும் இவர்கள் செலவழிப்பார்களா? அப்படி இவர்கள் செலவளிப்பதை அரசுகள் பார்த்துக் கொண்டு பண உதவி அளிக்குமா? ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டுத்தானே இப்படிச் செய்கிறார்கள். அந்த உலக மகாவிஞ்ஞானிகள் அனைவரும் முட்டாள்களா? அவர்கள் முட்டாள்களாக இருக்கும் பட்சத்தில், நாமும் முட்டாளாக இருப்பதில் தவறில்லைதானே!
!["இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 7 Photo%202](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-203/photo%202.jpg)
பல நாட்களுக்குப் பின்னர் நாம் மீண்டும் பயிர் வட்டங்களின் இடத்திற்கு வந்திருக்கிறோம். எனவே இன்று கொஞ்சம் விசேசமாக பயிர்வட்டங்கள் பற்றிப் பார்க்கலாம். மனிதர்களே உருவாக்கவில்லை என்று அடித்துச் சொல்லும் பயிர்வட்டச் சம்பவங்களிலிலிருந்து இன்று ஆரம்பித்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். அதனால் ஆச்சரியங்களின் ஊற்றாக இருக்கும் ஸ்டோன் ஹெஞ்சுக்கு அருகே சென்று, அந்த இடத்தில் பயிர்களுக்கு ஏதாவது நடந்ததா எனப் பார்க்கலாம் வாருங்கள்.
1996ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் திகதி, மாலை 6 மணியளவில் லூஸி பிரிங்கெல் (Lucy Pringle) என்னும் பெண்மணி, தன்னுடைய மகனைப் பார்ப்பதற்கு டாக்ஸி ஒன்றில், ஸ்டோன் ஹெஞ்சுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் A303 நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். இருபக்கமும் பச்சையாய்ப் பரவியிருக்கும் வயல்வெளிகள். ஸ்டோன் ஹெஞ்சை டாக்ஸி அண்மித்ததும், சாலையில் மறுபுறமாக இருந்த வயல்வெளியில் காற்றின் சுழற்சியால் ஏற்பட்ட புழுதிபோன்று, ஏதோ ஒன்று உருவாவதை அவதானித்தார். ஏனோ அவருக்கு அது வினோதமான காட்சியாகத் தெரிந்தது. டாக்ஸி ஓட்டுனரிடம் டாக்ஸியைச் சாலையில் நிறுத்தும்படி கூறிவிட்டு நடப்பதை அவதானித்தார். வயலில் இருந்து ஒரு மீட்டர் உயரத்துக்கு மிகப்பெரிய வட்டவடிவத்தில், புகை போன்று காற்றுச சுழன்றபடி அந்த வயல்வெளிப் பிரதேசத்தில் அங்கும் இங்கும் அலைவதை அவதானித்தார். அவதானித்தது அவர் மட்டுமல்ல, அவருடனிருந்த டாக்ஸி ஓட்டுனரும்தான். யூலை மாதங்களில் ஐரோப்பாவெங்கும் இருட்டாவதற்கு மாலை 9 மணிக்கு மேலாகும். இங்கிலாந்திலும் நல்ல வெளிச்சமான பகல் நேரம் அது. திடீரென அந்த வட்டச் சுழற்சி நின்று மறைந்து போனது. அங்கே லூஸி கண்ட காட்சி யாருமே நம்பமுடியாதது. 115 மீட்டர் அகலமான மிகப்பெரிய பயிர்வட்டம் அங்கே காட்சியளித்தது. 151 வட்டங்களைக் கொண்டு அந்தப் பயிர்வட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. முன்னர் ஒருமுறை நான் சொன்னது போன்று 'ஜூலியா செட்' (Julia Set) என்னும் வடிவுடைய ஃப்ராக்டல் (Fractal) சித்திரமாக அது இருந்தது. ஃப்ராக்டல் என்பது மிகவும் சிக்கல் வாய்ந்த கணித வரைவு ஆகும்.
.
!["இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 7 Photo%203](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-203/photo%203.jpg)
பட்டப்பகலில் பலர் சாட்சியாக இருக்கும்போது உருவானது 'ஜுலியா செட்' பயிர்வட்டம். லூஸியின் சாட்சியத்தின்படி மொத்தமாக 20 நிமிசங்களில் அந்தப் பயிர்வட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. லூஸியினதும், டாக்ஸி ஓட்டுனரதும் சாட்சியை நாம் பொய்யென்று வைத்தாலும், ஸ்டோன் ஹெஞ்சை வானத்தில் இருந்து பார்ப்பதற்கு ஆயத்தமான சிறு விமானம் ஒன்றின் விமானியும் அதில் அமர்ந்தவர்களும் மாலை 5.30 மணியளவில் அதற்கு மேலாகப் பறந்து சென்றிருக்கிறார்கள். அந்த இடத்தில் எதுவும் காணப்படவில்லை. பின்னர் மீண்டும் மாலை 6.15 மணி போலத் திரும்பி வந்தபோது, இந்தப் பயிர்வட்டம் காட்சியளித்திருக்கிறது.அதாவது 45 நிமிடங்களில் அது உருவாக்கப்பட்டிருகிறது என்று விமானி சொல்லியிருக்கிறார். அதோடு ஸ்டோன் ஹெஞ்சின் பாதுகாவலர்களாகக் கடமையாற்றியவர்களும் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். இவையெல்லாவற்றையும் விட, 'A303 நெடுஞ்சாலை' மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலை. எப்போதும் வாகனப் போக்குவரத்துடன் காட்சியளிக்கும் ஒரு நெடுஞ்சாலை அது. அந்த இடத்தில் யாருக்கும் தெரியாமல் மனிதர்கள் பட்டப்பகலில் அந்தப் பயிர் வட்டத்தை உருவாக்கியிருக்கவே முடியாது. அப்படி உருவாக்கினோம் என்று யாராவது கூறினாலும் நம்பவே முடியாததாகவே இருக்கும்.
இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், இரண்டுமே நம்ப முடியாத சம்பவமாகவே இருக்கிறது. மனிதர்கள் உருவாக்காமல் வேறு ஒரு சக்தி உருவாக்கியது என்பதையும் நம்ப முடியவில்லை. மனிதர்கள் பட்டப்பகலில் உருவாக்கினார்கள் என்பதையும் நம்பமுடியவில்லை. ஆனால் அந்த பயிர்வட்டம் உருவாகியதை மட்டும் நம்பித்தான் ஆக வேண்டும்.
மீடியாக்கள், மக்கள் என அனைவரிடமும் இந்தச் சம்பவம் மிகப்பரபரப்பாகப் பேசப்படத் தொடங்கியது. மக்கள் அங்கு கூட்டமாகக் கூடத் தொடங்கினர். அப்போது, அந்தப் பயிர்வட்டத்தை நாங்கள்தான் உருவாக்கினோம் என்று இரண்டு இளைஞர்கள் பேட்டி கொடுத்தனர். அந்த இளைஞர்கள் சில பயிர்வட்டங்களை ஏற்கனவே உருவாக்கியிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த அளவுக்கு மீடியாவில் விளம்பரம் கிடைத்த ஒன்றில் அதுவும் பட்டப்பகலில், பலரின் கண்முன்னே உருவான ஒன்றை அவர்கள் உருவாக்கினார்கள் என்று சொன்னதை யாரும் நம்பவில்லை. விளம்பரத்துக்காக பல வித்தியாசமான பயிர்வட்டங்களை நாம்தான் உருவாக்கினோம் என்று மூலைக்கு மூலை புறப்பட்டு வரும் சம்பவங்கள் அந்த நேரங்களில் அதிகமாகவே நடக்கத் தொடங்கியிருந்தன. இந்த ஜூலியா செட் பயிர்வட்டத்தை நாங்கள்தான் உருவாக்கினோம் என்று சொன்ன இளைஞர்களின் பேட்டியில் பல தடுமாற்றங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். எது எப்படியாயினும் இந்தப் பயிர்வட்டத்தை மனிதர்கள் உருவாக்கினார்கள் என்று நம்புவது மிகவும் கடினமாகவே இருந்தது. மனிதர்கள் உருவாக்கவில்லை என்பதை மேலும் உறுதி செய்வதற்கு, இன்னுமொரு பயிர் வட்டமும் உருவாகியது. அது அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கியது.
!["இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 7 Photo%204](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-203/photo%204.jpg)
மேலே சொல்லப்பட்ட ஜூலியா செட் பயிர்வட்டம் உருவாகி, சரியாக 11 வருடங்களின் பின்னர் அதே நாளில் நடந்தது இன்னுமொரு ஆச்சரியமான சம்பவம். 2007ம் வருடம் ஜூலை மாதம் 7ம் திகதி அந்தச் சம்பவம் நடந்தது. வின்ஸ்டன் கீச்சும் (Winston Keech), காரி கிங்கும் (Gary King) நண்பர்கள். வின்ஸ்டன் ஒரு எஞ்சினியராக இருந்தாலும், அவருக்கு ஏலியன்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நெடுநாட்களாக உண்டு. இரவில் படம் பிடிக்கும் காமெராக்கள் சகிதமாக வைல்ட்ஷையரில் உள்ள வயல்வெளிப் பிரதேசங்களில் திரிந்தபடி கண்காணிப்பதே அவர் வேலை. 07.07. 2007 அன்று, 'ஈஸ்ட்ஃபீல்ட்' (East Field) என்னும் இடத்திலுள்ள மலையில் நண்பர் காரியுடன் அமர்ந்தபடி வயல்வெளிகளை அவதானித்துக் கொண்டிருந்தார். தன்னிடம் இருந்த காமெராக்களை ஓடவிட்டுக் கொண்டு உடனிருந்த காரியுடன் பேசிக்கொண்டிருந்தார். நள்ளிரவு தாண்டி, நேரம் அதிகாலை 1.35 ஐ நெருங்கியது. கும்மிருட்டில் திடீரென 'ஃப்ளாஷ்' வெளிச்சங்கள் போல ஒளி வட்டங்கள் தோன்றின. இதற்கென்றே தயாராக இருந்த அவர்கள் ஆச்சரியத்துடனும், சந்தோசத்துடனும், ஒருவித பயத்துடனும் அங்கு நடப்பதை வீடியோக் காமெராவினால் பதிவு செய்தனர். அத்துடன் 'நைட்விஷன்' பொருத்தப்பட்ட வேறு கமெராவில் பார்த்தபோது, எங்கும் மனித நடமாட்டமோ, வாகனங்களோ காணப்படவில்லை. அவர்கள் அமர்ந்திருந்தது சிறிய மலைப்பிரதேசம் என்றபடியினால், அனைத்தையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதிகாலை 3 மணிவரை அந்த ஃப்ளாஷ் வெளிச்சங்கள் ஆங்காங்கே எரிந்து அணைவதைக் கண்டார்கள். 3.13 மணிவரை அவர்களுக்கு முன்னால் காட்சி தந்த பெரிய வயல்வெளியில் எதுவுமே இருக்கவில்லை. ஆனால் ஏழே நிமிடங்களின் பின்னர் 3.20க்குப் பார்த்த போது அவர்களால், அவர்கள் கண்களை நம்பவே முடியவில்லை. வயல்வெளியில் நீளமான வடிவமொன்றைக் கண்டார்கள். அது என்ன எதுவென்று தெரியவில்லை. உடன் சென்று பார்க்கவும் பயமாக இருந்தது. நான்கு மணியளவில் கொஞ்சம் வெளிச்சம் வரத்தொடங்கியதும் பார்த்த போதுதான் தெரிந்தது. அது ஒரு மிகப்பெரிய பயிர்வட்டம் என்பது.
!["இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 7 Photo%205](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-203/photo%205.jpg)
நடந்தவை அனைத்துமே காட்சிகளாக, சாட்சிகளாக வின்ஸ்டனின் காமெராக்களில் பதிவாகியிருந்தன. உருவாக்கப்பட்டிருந்த பயிர்வட்டம் 300 மீட்டர் நீளமாகப் பிரமாண்டமானதாக இருந்தது. 150 தனித்தனி வட்டங்களால் அது உருவாக்கப்பட்டிருந்தது. அந்தச் சம்பவத்தைப் பொய்யென்று யாருமே மறுக்க முடியாதபடி, உண்மையான வீடியோ ஆதாரங்களுடன் அவர்கள் கொடுத்த பேட்டி ஐரோப்பாவையே உலுக்கியெடுத்தது. அனைத்துப் பத்திரிகைகளும் அது பற்றிய செய்திகளை வெளியிட்டன. இதில் என்ன ஆச்சரியமென்றால், 'மைக்ரோவேவ்' (Microvave) என்று சொல்லப்படும் வெப்பக் கதிர்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது உடனடியான பரிசோதனைகள் மூலம் அவதானிக்கப்பட்டது. யாரும் இதை நாங்கள்தாம் செய்தோம் என்று சொந்தம் கொண்டாடி வரவுமில்லை. மனிதனால் செய்யப்படாத பயிர்வட்டத்துக்கு மிகவும் ஆணித்தரமான சாட்சியாக இந்தப் பயிர்வட்டம் காட்சியளித்தது.
இதுவரை பயிர்வட்டங்களைப் பற்றி பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் எவராலும், எதுவும் சொல்ல முடியவில்லை. ஏழே நிமிடங்களில் 300 மீட்டர் அதாவது இரண்டு ஃபுட்பால் மைதானங்கள் அளவு பெரிய பயிர்வட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இது எப்படிச் சாத்தியமாக முடியும்? சரி, இதை மனிதன்தான் உருவாக்கினான் என்றால் அவனுக்குக் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் இதைச் செய்வதற்குத் தேவைப்பட்டிருக்கும். சரி, இவை மனிதனால் செய்யப்படவில்லை என்றால், யாரால் செய்யப்படுகின்றன? பகலில் காற்றுச் சுழல்கள் போலவும், இரவில் வெளிச்சப் பந்துகள் போலவும் காட்சி தருபவை என்ன? இப்படியான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், இந்தப் பயிர்வட்டத்தை ஆராய்ந்த சிலர் வேறு ஒரு விளக்கத்துடன் நிற்கிறார்கள். அந்த விளக்கத்தை நீங்கள் அறிந்தால் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பீர்களோ தெரியவில்லை. ஆராய்ச்சியாளர்களில் சிலர் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா...?
அதைப் படத்திலேயே பாருங்கள் தெரியும்.......!
!["இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 7 Photo%206](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-203/photo%206.jpg)
ஆம்! சாட்சாத் இந்துக்களின் 'ஓம்' என்னும் அடையாளம்தான் இது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களில் சிலர். இப்படிப் பர்க்கும்போது நிலைமை மேலும் சிக்கலான ஒரு வடிவத்தையே எடுக்கிறது என்று நம்பக் கூடிய நிலைக்கு நாம் வந்துவிடுவோம். இந்த அளவுக்கு மேல் இன்று யோசித்தால் தலையே வெடித்துவிடும். எனவே இந்த வாரம் இவை பற்றிச் சிந்திப்பதை விட்டுவிட்டு, அடுத்த வாரம் மீண்டும் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்
ஒவ்வொரு பதிவும் ஆர்வத்தையும் அதிசயத்தையும் அதிகரித்து கொண்டே செல்கிறது
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
www.pakeecreation.blogspot.com
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...
பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா... !["இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 7 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
!["இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 7 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பகிர்வுக்கு நன்றி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- sathishkumarபுதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 01/05/2012
மிகவும் அருமை.....
- Sponsored content
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 12
|
|