புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
37 Posts - 39%
heezulia
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
1 Post - 1%
mruthun
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
106 Posts - 45%
ayyasamy ram
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
17 Posts - 7%
mohamed nizamudeen
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
2 Posts - 1%
mruthun
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயையும் நிலையாமையும்


   
   
shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Fri May 18, 2012 9:45 pm

இவை இரண்டும் ஒரே பொருளையே தருகின்றன என்ற பரவலான, தவறான கருத்து பல காலமாக நிலவி வருகிறது.

மாயை என்பது முழுக்க முழுக்க பொய்த் தோற்றமாகும். மனப்பிரமை, சுய ஏமாற்ற விருப்பம் ஆகியவையே இப்பிரமையான மனத்தோற்றத்துக்கு அடிகோலுகின்றன. இல்லாத இடத்தில் ஏதாவது ஒரு பொருள் இருப்பதாகக் கருதுவதே மாயையாகும். இதற்குச் சரியான ஆங்கிலப்பதமாக Illusion- ஐக் கூறலாம்.

நிலையாமையானது மாயையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இப்பொழுது பிரத்தியட்சமாகக் காட்சியளித்துப் பின்னர் வேறுபடவோ, அழிந்துபடவோ கூடிய எல்லாக் காரியங்களும் நிலையமைத் தன்மை உடையனவாகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு அழகிய இளம்பெண்ணைக் காண்கிறீர்கள்; காதலிக்கிறீர்கள்; மணந்துகொள்கிறீர்கள். நாட்கள் மாதங்களாகின்றன; மாதங்கள் வருடங்களாகின்றன. நீங்கள் பார்த்த அந்த இளம்பெண்ணின் அழகு அங்கே இருக்கப்போவதில்லை. நீங்கள் முத்தமிட்ட முகம் சுருங்கிப் போயிருக்கிறது; திருமண மேடையில் நேராக நின்ற அவள் இப்பொழுது காலத்தால் வளைக்கப்பட்டிருக்கிறாள். அந்த அழகு அங்கே இருந்தது என்பது நிச்சயம். ஆனால் இப்போழுது அது எங்கே? அதாவது அழகு என்ற அந்தக் காரியம் நிலையாமைத் தத்துவத்துக்கு உள்ளடக்கப்படுகிறது. அழகு அழியவில்லை. அந்தப் பெண்ணிடம் இருந்த அழகு இல்லாமற்போய்விட்டது. விரைவில் அந்தப் பெண்ணும் மண்ணுக்குள் மறைந்து விடுவாள். அழகு, பெண் என்ற இரு காரியங்களுமே சில வருடங்களுக்கு முன் இருந்தன. ஆனால் இப்பொழுது அவை இல்லை. அக்காரியங்கள் நிலையாமையின் பாற்பட்டவை. நிலையாமைக்குச் சரியான ஆங்கிலப்பதமாக Vanity-ஐக் குறிப்பிடலாம்.

அனைத்து மதத் தத்துவங்களும் மாயாவாதம் அல்லது நிலையாமைவாதத்தைத் தங்கள் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்றாகக் கொண்டுள்ளன.

இறைமறுப்பாளனாகிய நான் நிலையாமைக் கோட்பாட்டினை ஏற்றுக் கொள்கிறேன். நிலையாமை என்பதைப் பரிணாமவாதக் கோட்பாட்டுடன் சார்புடையதாகக் கொள்ளலாம். நிலையாமையைக் காரணமாகக் கொண்டு தவம் செய்யுங்கள் என்று நான் கூறப்போவது இல்லை. நிலையற்ற இவ்வாழ்வில், மனிதகுலம் நீடித்திருப்பது வரை நிலைக்கும் புகழையே குறிக்கோளாகக் கொண்டு மனிதர்கள் செயல்பட வேண்டும் என்பதே எனது அவா.

மாயாவாதக் கோட்பாடு அடிப்படையிலேயே பிழையானதாகும். இந்திய தத்துவ மரபில் மிகத்தீவிரமாக அக்கோட்பாட்டை முன்னிறுத்தியவர் ஆதிசங்கரர். அவர் கயிற்றரவு உபமானத்தை மாயைக்கு நேராக உபயோகப்படுத்தினார். கயிற்றரவு உபமானம் மாயாவாதக் கோட்பாட்டுக்கு உதவி செய்யப்போவது இல்லை.

கயிற்றைப் பாம்பு என்று நினைக்கும் மனப்பிரமையோடு மாயையை ஒப்பிட்டார் ஆதி சங்கரர். இதனை ஒரு மனத்திரிபு என்று கொள்ளலாமேயொழிய மாயை என்று கருத முடியாது. ஏனென்றால் கயிறு என்ற பொருள் பார்ப்பவர் கண்ணுக்குப் பாம்பாகத் தெரிகிறது. அவர் தெளிவாகப் பார்க்க முற்பட்டால் அந்த மனத்திரிபு நீங்கி விடும். மட்டுமல்லாமல் பாம்பு என்ற தோற்றம் ஏற்பட கயிறு என்ற காரணி உதவுகிறது. ஆனால் மாயைக்குக் காரணிகள் இருக்கக் கூடாது.

கானல் நீரை மாயைத் தோற்றத்துக்கு ஒப்பிடலாம். ஆனால் வெளித்தன்மைக்கான விளக்கங்கள் மட்டுமே அவையிரண்டுக்கும் பொருந்துகின்றன. கானல்நீர் என்ற தோற்றத்துக்கு அடிப்படைக் காரணிகள் உள்ளன. ஆனால் மாயைக்கு அடிப்படைக் காரணிகள் எதுவுமில்லை.

மட்டுமல்லாமல் மாயாவாதக் கோட்பாடு மனித முன்னேற்றத்துக்குத் தேவையற்ற ஒன்று; மனிதனின் அழகான பல உணர்ச்சிகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. பாரதியார் மாயைத்தத்துவத்தைப் பற்றிப் பேசும்போது கேட்டார், "அப்படியானால் என் எதிரில் நிற்கும் என் அன்புக்குரிய மனைவி ஒரு பொய்த்தோற்றம் என்கிறீர்களா?".

நீங்கள் காண்பதைப் பொய்த்தோற்றம் என்று கூறினால் உண்மை எது என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர்கள் கூறுகிறார்கள், "இறையருள் பெற்றவர்கள் அதனை அறிவார்கள்".

இதைக் கேட்கும் போது ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சனின் Danish fairy legends and tales என்ற நூலிற்படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. உடைகள் இல்லாமலிருந்தும் அழகிய உடைகளைக் காணச் சக்தி படைத்தவர்களாகக் கூறி தங்களைத் தாங்களே ஏமாற்றும் வகையினரே இவர்கள். இறையருள் இருந்தால் புரிந்து கொள்ளலாம் என்பார்கள். ஆனால் அவர்களுக்கே அது புரியப் போவதில்லை.





வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக