புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
2 Posts - 2%
prajai
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
417 Posts - 48%
heezulia
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
28 Posts - 3%
prajai
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்னாடுடைய சிவனே போற்றி!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri May 18, 2012 6:58 pm

திரு.வி.க சொன்னது: -

௧ - 1 )
“தென்னாடுடைய சிவனே போற்றி! – எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்னும் பெருமொழியின் பொருள் வெள்ளிடைமலை. தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லது எந்நாட்டவர்க்கும் இறைவன் தென்னாடுடைய சிவன் என்பது அத்திருவாசகத்தின் கருத்து.

எந்நாட்டுக்கும் இறைவன் ஒருவனே. அவ்வொருவனுக்குப் பல நாட்டு மொழிகளில் பல பெயர்கள் வழங்குகின்றன. அப்பன்மைப் பெயர்கள் பெரிதும் அவ்வவ்நாட்டின் இயற்கை நிலையையொட்டிப் பிறந்திருத்தல் வேண்டும். பெயர் பல கொண்டு கடவுளர் பலர் என்னும் முடிவுக்கு வருதல் அறியாமை.

“ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரந்திருநாமம் பாடி நாம் தெள்ளேணங்கொட்டாமோ” என்றார் மாணிக்கவாசகர். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றார் திருமூலர்.

சிவம்:
தென்னாட்டவராகிய நாம் இறைவனைச் சிவம் என்னும் செம்மொழியால் வழுத்துகிறோம். தென்மொழிவல்லார் சிவம் என்பதற்குச் செம்மையென்று பொருள் கூறுகிறார். செம்மையெனுஞ்சொல் பல பொருளுடையது. ஈண்டு எடுத்துக் கொண்ட பொருளுக்கேற்பச் செம்மையன்பதற்குச் செந்நிறம் என்னும் ஒரு பொருளை மட்டும் கொள்கிறேன்.
தென்னாட்டார் பரம்பொருளைச் செந்நிறமாகக் கண்டு, அதனைச் சேயென்றுஞ் சிவமென்றும் போற்றலாயினர்.

இதற்குக் காரணமென்ன?

(தொடரும்)


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 18, 2012 7:02 pm

சாமி அண்ணா பதிவிற்கு நன்றி தொடருங்கள் உங்கள் பதிவை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 19, 2012 7:06 am

௨ - 2 )
இறையும் இயற்கையும்:
இறைவன் ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லாதவன். அவன் அறிவாய் யாண்டும் நீக்கமற நிற்பவன். “இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் என்று எழுதியுங்காட்டொணாதே” என்றார் அப்பர் சுவாமிகள்.

இத்தகைய அறிவுப் பொருளின் உண்மையை எங்ஙனம் உணர்வது? அதன் வடிவான இயற்கையைக் கொண்டே அதன் உண்மையையுணர்தல் வேண்டும். இயற்கை இறைவனது உடல். அவ்வுடலுள் உயிராயிருப்பவன் இறைவன். நமது உடலுள் உயிர் எங்ஙனம் நிலவுகிறதோ அங்ஙனே இயற்கையுள் இறைவன் நிலவுகிறான். கண்கூடாகக் காணும் நமது உடலைக்கொண்டே நமது உயிருண்மை உணர்கிறோம். அதுபோலவே கண்கூடாகக் காட்சியளிக்கும் இயற்கை வடிவங்களைக் கொண்டே இறையுண்மை உணரல் வேண்டும். இயற்கைவழி இறைவனை உணர்ந்தவரே ஞானிகளெனப்படுவர்.

இயற்கையில் வெம்மை
இயற்கை முதல் ஒன்றாயினும், அது காரியப்படும்போது பல இயல்புடையதாய்ப் பரிணமிக்கிறது. நமது நாட்டின் இயற்கை நிலை என்ன? நமது நாடு வெம்மை செறிந்த நாடு என்று எவருங் கூறுவர்.

நிரட்ச ரேகை (EQUATOR) நமது நாட்டின் பாங்கர் பாய்ந்து செல்கிறது. அக்கோட்டின் பாங்கருள்ள நாடுகள் வெம்மை செறிந்தனவாயிருத்தல் இயல்பு. நமது நாட்டின் காரியங்களைத் துருவித் துருவி ஆய்ந்து ஆய்ந்து சென்றால் அவைகளின் காரணங்கள் யாவும் வெம்மை மயமாயிருத்தல் பெறலாம். அவ்வியற்கை வெம்மை வழி இறைவனை நமது நாட்டு பெரியோர்கள் உணர்ந்தார்கள்.

இறைவனுடல் இயற்கை யென்று மேலே சொல்லப்பட்டிருக்கிறது. நமது நாட்டின் இயற்கையோ வெம்மையை அடிப்படையாகக் கொண்டது. ஈண்டு இறைவனுக்குரிய இயற்கை வடிவம் எத்தகையதாயிருத்தல் வேண்டும் என்று உன்னுவோமாக.

(தொடரும்)


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sat May 19, 2012 11:00 am

சாமி wrote:
இத்தகைய அறிவுப் பொருளின் உண்மையை எங்ஙனம் உணர்வது? அதன் வடிவான இயற்கையைக் கொண்டே அதன் உண்மையையுணர்தல் வேண்டும். இயற்கை இறைவனது உடல். அவ்வுடலுள் உயிராயிருப்பவன் இறைவன். நமது உடலுள் உயிர் எங்ஙனம் நிலவுகிறதோ அங்ஙனே இயற்கையுள் இறைவன் நிலவுகிறான். கண்கூடாகக் காணும் நமது உடலைக்கொண்டே நமது உயிருண்மை உணர்கிறோம். அதுபோலவே கண்கூடாகக் காட்சியளிக்கும் இயற்கை வடிவங்களைக் கொண்டே இறையுண்மை உணரல் வேண்டும்.

அருமை !!! :வணக்கம்:

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 21, 2012 10:39 pm

௩ - 3 )
தீவண்ணம்
அதனை வெம்மைக்குரிய நெருப்பு வடிவமென்று விளக்க வேண்டியதில்லை. அந்நெருப்பு மேனியைப் பெரியோர்கள் பலவாறு புகழ்ந்து போற்றியிருக்கிறார்கள். அவ்வுரைகளை ஈண்டு விரிக்கிற் பெருகும்.

மாணிக்கவாசகனார் அருளிய திருவாசகத்தினின்றுஞ் சில பொன்மொழிகளை மட்டும் ஈண்டு அகழ்ந்தெடுத்துக் காட்டுகிறேன்.

“தூயமேனிச் சுடர்விடு சோதி”
“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதியை”
“விரிசுடராய் நின்ற மெய்யன்”
“செந்தழல் போற்றிருமேனி”
“ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே”
“பார் பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப்பரப்பே”
“சோதியாய் தோன்றும் உருவமே”
“சோதியே சுடரே சூழொளி விளக்கே”
“கடுந்தழற் பிழம்பன்ன மேனி”
எனவரூஉஞ் செம்மொழிகளை உற்று நோக்குக

(தொடரும்)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 21, 2012 10:46 pm

மிகவும் அருமை சாமி...தொடருங்கள் மகிழ்ச்சி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 28, 2012 7:58 pm

௪ - 4 )
சேய் – சிவம்:
வெம்மை நெருப்பின் நிறமென்ன? செம்மையன்றோ? அச்செம்மையை சேயென்றும் சிவமென்றும் இயற்கை நுட்பமுணர்ந்த நம் முன்னோர்கள் போற்றினார்கள். “செய்யமேனியனே செய்வகை அறியேன்” என்றும், செஞ்சுடர் வெள்ளமே என்றும், “ஆடகச் சீர்மணிக் குன்றே” என்றும், வெம்பவள வெற்பிற்றேசுடைவாய்” என்றும், “செக்கர்போலுந் திருமேனி திகழ நோக்கிச் சிலிர்சிலிர்த்து” என்றும் வாதவூரடிகள் இறைவன் தீவண்ணத்தைச் சிறப்பித்துக் கூறுதல் காண்க.

சிவத்துக்குஞ் செம்மேனிக்கு முள்ள தொடர்பை “சிவனெனு நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்” என்று அப்பர் சுவாமிகளும் விளக்கியிருத்தலை ஓர்க. வேறு பல ஆன்றோர்கள் இறைவன் தீவண்ணத்தைக் குறித்துப்பாடிய பாக்கள் பலப்பல. அவைகளை ஈண்டு விரிக்கிற் பெருகும்.

இறைவனது இயற்கை வடிவஞ் செக்கச் செவேலெனத் திகழ்தல் நோக்கி மாணிக்கவாசகனார் “ தென்னாடுடைய சிவனே போற்றி” என்று வழுத்தி, அச்சிவனே மற்ற நாடுகளின் இயற்கைக்கேற்ப வெவ்வேறு பெயரான் அழைக்கப்படும். இறைவன் என்பதை அறிவுறுத்தப் பொதுவாக “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்றருளிச் செய்தார்.

இறைவன் என்னுந் தமிழ்ச் சொற்கு யாண்டும் நிறைந்துள்ள ஒருவன் அன்று பொருள். தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லது என்நாட்டவர்க்கும் இறைவன் இத்தென்னாடுடைய சிவன் என்று போற்றப்படுகிறானென்க.

இறைவன் எவர் எப்பெயரான் போற்றினாலென்ன? மொழி வேற்றுமையைப் பொருள் வேற்றுமையாகக் கோடல் அறியாமை.

(தொடரும்)


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 28, 2012 8:09 pm

மிக அருமையான தொடர் , தொடருங்கள் சாமி அவர்களே .. நன்றி நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Wed May 30, 2012 5:15 pm

சாமி wrote:இறைவன் என்னுந் தமிழ்ச் சொற்கு யாண்டும் நிறைந்துள்ள ஒருவன் அன்று பொருள். தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லது என்நாட்டவர்க்கும் இறைவன் இத்தென்னாடுடைய சிவன் என்று போற்றப்படுகிறானென்க.
மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 30, 2012 10:30 am

இந்தப் பகுதியை தொடருங்கள் சாமி!



தென்னாடுடைய சிவனே போற்றி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக