புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_c10 
49 Posts - 52%
heezulia
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_c10 
91 Posts - 56%
heezulia
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப் பற்றி..!


   
   

Page 1 of 2 1, 2  Next

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sat May 26, 2012 10:29 pm

வாங்க யோசிக்கலாம் 'கடவுள்' எனும் கற்பனையைப் பற்றி..!

இதில் என்னுடைய சொந்த கருத்துக்களை பதித்துள்ளேன் .

இவை நாம் சிந்திப்பதற்கே...!



ஒவ்வொரு மதமும் ஒரு கடவுளை அல்லது ஒருவரை கடவுளாக கொண்டு செயல்பட்டுவருகிறது. ஏன் ?
முதலில் நாம் ஒன்றை உணர வேண்டும் . நமது தலையில் துப்பாக்கி வைத்து, ‘இரண்டாவது மாடியிலிருந்து குதி இல்லை என்றால் சுட்டுவிடுவேன்’ என்றால் நாம் என்ன செய்வோம்? ‘குதித்துவிட்டால் கூட பிழைத்துவிடலாம்’ என்று நினைத்து குதித்துவிடுவோம். அமெரிக்க இரட்டை மாடி இடிப்பில் இது போல் நடந்தது நமக்கு நினைவிருக்கும்.
காரணம் என்ன? "மரணபயம்". இது ஒருவனை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும்.

மதங்கள் யாவும் மனிதனை நெறிப்படுதவே தோற்றுவிக்கப்பட்டன. மனிதர்களுக்கு இடையில் நல்ல எண்ணங்களை வளர்த்து, தீய செயல்களில் அவர்களை ஈடுபடாமல் தடுக்க தோற்றுவிக்கப்பட்டன.
ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிதானதா? இல்லையே.
எனவே கடவுள் என்னும் கற்பனையை மதங்களை தோற்றுவித்தவர்கள் மதங்களில் புகுத்தினர்.
"அவன் ஒப்பற்றவன்","நம்மை படைத்தவன்","நம் நன்மை தீமைகளை கணக்கு வைத்திருப்பான்"
"தீயவர்களை தண்டிப்பான்" என்றெல்லாம் மதங்கள் வழியாக கற்பனைகளை பரப்பினர். மரணபயத்தை ஏற்படுத்தினர் .
மேற்கண்டவைகளுக்கு எந்த வித மாற்று கருத்துகளும் கொண்டிராத சூழலில் மனித சமூகம் இருந்ததால் இவற்றை எல்லாம் நம்பவும் தொடங்கின.
மனிதர்கள் எளிதில் புரிந்துகொள்ள கடவுளுக்கு உருவம் கொடுக்க எண்ணினர். உயிர்களில் மனித இனம் தான் உயர்ந்தது என எண்ணியிருந்ததால் கடவுளுக்கு மனித உருவமும், மனிதனிலிருந்து உயர்த்திக்காட்ட அதிக கைகள் போன்ற மாற்றங்களும், பயத்தை உண்டாக்க ஆயுதங்களும் தரப்பட்டன.
இவைகள் காலப்போக்கில் அழியக்கூடும் என்பதால் கோவில்கள் கட்டி காலத்தால் அழியாத கற்களில் சிலை செதுக்கி வைத்தனர்.

இந்த மதங்கள் எவ்வாறு பரவின என்று பார்த்தால், அதற்க்கு மன்னர்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்தனர் என்று உணரமுடியும். மதங்களின் பிறப்பு கண்டிப்பாக நன்மைகளை உண்டாக்கும் என்று உணர்ந்த மன்னர்கள் அதன் வளர்ச்சிகளுக்கு பெரிதும் வித்திட்டனர். அதை பரம்பரை பரம்பரைகளாக செய்தும் வந்தனர் என்பதற்கு அவர்களின் வரலாறுகளும், அவர்கள் கட்டிய கோவில்களுமே சாட்சி.
நம்மிடம்தான் ஒரு கெட்ட பழக்கம் உள்ளதே. பிரபலமானவர்களும், தலைவர்களும் என்ன செய்தாலும் நாமும் அதை செய்வது.
எனவே மதங்களும்,கடவுள்களும் வேகமாக பரவின.

“எப்போதும் கடவுளை நினைத்திருந்தால் நன்மைகள் நடக்கும்” என்று கூறுவதன் உள்-அர்த்தம் "தவறு செய்தல் கடவுள் தண்டிப்பார் " என்ற பயத்தை ஏற்படுத்தி, அவனை எப்போதும் கட்டுப்படுத்திவைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தான்.
ஆனால்,’கடவுள் தீயவர்களை தண்டிப்பார்’ என்று அவர்களால் நிரூபிக்க இயலவில்லை.
அதனால்,

" அரசன் அன்றே கொள்வான் , தெய்வம் நின்று கொள்ளும்"

என்றனர்.

நல்லவர்களுக்கு துன்பங்கள் ஏற்படும்போது
"நல்லவர்களை கடவுள் சோதிப்பார், கைவிடமாட்டார்"
என்றனர்.

நல்லவர்களுக்கு பெருந்துயர் உண்டாகும்போது கடவுளை நிரூபிக்க ,

"இவையெல்லாம் முற்பிறவி வினைகள்"

என்றனர்.
கடவுளுக்கு எதிராக கேள்விகள் எழும்போது

" நம்பினால் மட்டுமே கடவுளை உணரமுடியும் "

என்று சப்பை கட்டு கட்டி சமாளிக்க முயன்றனர்.

இவ்வாறு கடவுளை காப்பாற்றுகிறான் மனிதன்.

என்னதான் மதங்களின் நோக்கம் ‘மனித சமூகத்தை நெறிப்படுத்த’ எனினும் , அது கையாண்ட முறை (மக்களுள் பயத்தை விதைப்பது) தவறானது . இதுவே இதன் வீழ்ச்சிக்கும் காரணமாகவும் அமைகிறது.
பிற்காலத்து சுயநலவாதிகளும், மூடர்களும் மதங்களை கைப்பற்றி இவற்றின் உன்னத செயல்பாடுகளை மூட நம்பிக்கைகளாக மாற்றவிட்டனர்.
மத வெறியையும் , மதகலவரங்களையும் உண்டாக, மதங்கள் மற்றும் கடவுள்கள் உருவான நோக்கங்களை சரியாக புரிந்துகொள்ளததே காரணம் என்று தற்போது புரிந்துகொள்ள முடிகிறது.


எனது மற்றொரு பதிப்பில் கடவுள் என்பது உண்மையாக இருக்குமேயானால் அதை நாம் வணங்கவேண்டுமா என்று எழுதி உள்ளேன் அதை படிக்க இங்கே சுட்டவும்.

நன்றி

மாற்று கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 27, 2012 3:25 am

பகிர்விற்கு நன்றி அய்யா
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun May 27, 2012 3:34 am

நந்து அவர்களே,
என்னுடைய அறிவுக்கு எட்டியதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். அதாவது,
எந்த ஒரு மனிதனும் தான் நினைப்பதுபோல் அல்லது விரும்புவதுபோல் வாழமுடிவதில்லை.
வாழ்க்கையில் வெற்றியடைபவர்கள் எல்லோரும் புத்திசாலிகளும் இல்லை, புத்திசாலிகள் எல்லோரும் வெற்றியடைவதும் இல்லை. இது ஏன்?

எங்களுடைய முயற்சி, புத்தி, இவற்றையெல்லாம் மீறிக்கொண்டு எதோஒன்று எங்களை வழிநடத்துகிறது.
அந்த எதோஒன்று எங்களை வழிநடத்துகிறது என்றால் அது எங்களின் ஆற்றலைவிட நிச்சயம் பெரியதாகத்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது எங்களை வழிநடத்த முடியாது.


அந்த பெரிய எதோ ஒன்று எப்படி எங்களை வழிநடத்துகிறது , நாங்கள் என்னசெய்தால் அது என்னசெய்யும்? என்று ஆராய்ந்த முன்னோர்கள் " உயிர்,உடம்பு, பாவம்,புண்ணியம், முற்பிறப்பு,மறுபிறப்பு, என்று பல விஷயங்களை கண்டுபிடித்தார்கள்.

இவையெல்லாம் பொய்யானதகவல்கள் என்று யாராலும் மறுக்கமுடியவில்லை, காரணம் மறுப்பவரால் தான் நினைத்தபடி வாழ்ந்து காட்ட முடியாது. அவருடைய வாழ்க்கையும் அந்த பெரிய எதோ ஒன்றின் பிடியில் இருக்கிறது.

இறுதியில் எல்லோரையும், எல்லா உயிர்களையும் வழிநடத்துகிற அந்த பெரிய எதோ ஒன்றின் ஆற்றலுக்கு கடவுள் என்று பெயர் வைத்தார்கள். அந்த கடவுளை பணிந்தால் எங்கள் துன்பங்களை குறைக்கலாம் என்று கண்டார்கள்.


அதனால்தான் என்றோ உருவாகிய மாதங்கள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

நந்து அவர்களே, நல்லதொரு விஷயத்தை ஆராய முற்பட்டு இருக்கிறீர்கள். நல்லது
தொடருங்கள்.


நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sun May 27, 2012 8:37 am

அகிலன் wrote:நந்து அவர்களே,
எந்த ஒரு மனிதனும் தான் நினைப்பதுபோல் அல்லது விரும்புவதுபோல் வாழமுடிவதில்லை.

ஆம் நண்பா ,மனிதனும் தான் நினைப்பதுபோல் அல்லது விரும்புவதுபோல் வாழமுடிவதில்லை.

காரணம் என்னவாக இருக்கும்?
மனிதன் ஒரு சமூக விலங்கு. இதில் (அவனுடைய சமூகத்தில்) இவனுடைய ஒரு மூளை மட்டும் செயல் படுவதில்லை. இவனுக்கு நல்லதாக இருப்பது மற்றவனுக்கு தீமையாக இருக்கலாம்.
மேலும் இவனை சுற்றி குடும்பம் என்று ஒன்று உள்ளது. எனவே இவனுடைய விருப்பங்களை இவன் தியாகம் செய்ய வேண்டியுள்ளது.



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 27, 2012 11:07 am

இங்கு அனைத்து மதங்களை சேர்ந்த கடவுள் நம்பிக்கை கொண்ட சகோதரர்கள் இருக்கிறார்கள்.

உங்களுக்கு கடவுள் இல்லையென்றால் அதை உங்களுடன் வைத்துகொள்ளுங்கள்.

இது போல திரிகள் வேண்டாம்.

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sun May 27, 2012 12:57 pm

ராஜா wrote:இங்கு அனைத்து மதங்களை சேர்ந்த கடவுள் நம்பிக்கை கொண்ட சகோதரர்கள் இருக்கிறார்கள்.

உங்களுக்கு கடவுள் இல்லையென்றால் அதை உங்களுடன் வைத்துகொள்ளுங்கள்.

இது போல திரிகள் வேண்டாம்.
நாத்திகம் என்பது ஆன்மீகம் போன்ற ஒன்றுதான் ஆனால் அதற்கு எதிர்மறையானது.
ஆன்மீக கருத்துகள் வெளியாவது போல் நாத்திக கருத்துகளையும் வெளியிட்டு இருந்தேன்.
ஆனால் இந்த பதிவில் மதங்களும் கடவுள்களும் எவ்வாறு உருவாகி இருக்கும் என்று மட்டும்தான் பதித்துள்ளேன். யாருடைய மதத்தையும் குறிப்பிட்டு பதிவிடவில்லை.
மதங்களையும் இழிவு படுத்தவில்லை. சிந்திக்க மட்டும் கேட்டுக்கெண்டேன்.
இருப்பினும் இது உங்களுக்கு மனக்கசப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
தவறில்லை.ஏனெனில் சிலசமயம் நான் கூற முற்ப்பட்டது தங்களுக்கு முழுவதும் வந்து சேராமல் போக வாய்ப்புள்ளது.இது வழக்கமான ஒன்றுதான்.
இதனால்,ஒருவரின் கருத்து ஒருவருக்கு பிடிக்கும் மற்றொருவருக்கு பிடிக்காமல் போய்விடும்.

எனினும் தாங்களுக்கு இந்த பதிவில் எது குறிப்பாக பிடிக்கவில்லை என்று தெரியவில்லை.
எனவே சற்று விளக்கமாக நான் புரிந்து கொள்ளும்படி தங்கள் கருத்தை கூருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என் மேல் நீங்கள் ஏதோ கடுப்பில் நீங்கள் உள்ளீர் என உங்களது கடினமான வார்த்தைகள் எனக்கு கூறுகிறது. பெரியாரின் கடவுள் மறுப்பு மட்டுமின்றி, சுயமரியாதை கொள்கையிலும் நான் நம்பிக்கை வைத்துள்ளேன் என தங்களுக்கு கூற விளைகிறேன் .தவறுகளை திருத்திக்கெள்ளவும் எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவுமே தங்களது தளத்தை நாடியுள்ளேன். யாருடைய வெருப்பையும் பெற நான் விரும்ப வில்லை.
ஒருவேளை எனது பதிப்பு முற்றிலும் தவறானது என்றால் தயவுசெய்து சரியான கருத்தை பதிவிடுங்கள். இல்லை மதங்களின் நோக்கம் அதுவல்ல என்றால் சரியான நோக்கத்தை கூருங்கள்.
அது எனக்கு மட்டுமல்ல அணைவருக்கும் பயன்தரும். அதுவே தளத்தின் ஆக்க பூர்வ வளர்ச்சிக்கு வழிவகை செய்யும்.

பதிலை எதிர்பார்த்து காத்திருப்பேன். நன்றி.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 27, 2012 1:47 pm

இந்த பதிவு குறித்து என்னுடைய சொந்த கருத்தாக நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் ஆன்மிகம் தவிர இன்னும் ஏராளமான தகவல்களும் புதைந்துள்ளது அதை தேடி எடுத்து பயன்பெறுங்கள்.

இந்த தளத்தின் ஒரு தலைமை நடத்துனராக இங்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நிறைய பேர் இருப்பதால் இது போல உங்களது கற்பனைகளை ஆதரிக்க முடியாது. நீங்கள் உங்கள் வலைப்பூவில் சிந்தித்து கொள்ளுங்கள் அங்கு வருபவர்களை சிந்திக்க சொல்லுங்கள்.

நீங்கள் யாரோ நான் யாரோ , நான் எதற்கு உங்கள் மேல் கடுப்பில் இருக்கவேண்டும். சிரி

நன்றி. நன்றி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun May 27, 2012 1:47 pm

"கடவுள்" என்கிற மகத்தான விஷயத்தைத் தொட்டிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள் நந்து.

கடவுள் எங்கே இருக்கிறார்...எப்படி இருக்கிறார் என்பதுதான் உங்களின் கேள்வியாய் இருக்க முடியும்? இல்லையா நந்து!
உருவ வழிபாட்டினை மையமாக வைத்து...பல்வேறு...கேள்விகளுக்கும் வழி வகுத்து விட்ட..
தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட மகத்தான தத்துவம் "கடவுள்".
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா" என்றான் கவிஞன். அடங்கிப் புரிந்து கொள்ள வேண்டிய
தத்துவம் "கடவுள்"
வேறெங்கிலும் தேடிக் கிடைக்க முடியாத....நம்மிலிருந்தே...நாம் கண்டெடுக்க வேண்டிய...
அதுவே வாழ்க்கையின் லட்சியமாய் இருக்க வேண்டிய தத்துவம்.."கடவுள்".
எப்படிக் கடவுள் மறுப்பிற்கான விஷயங்களைத் தேடிப் படித்தீர்களோ...அப்படியே...
கடவுள் என்ற தத்துவத்தைப் புரிந்து கொள்ள உதவும் புத்தகங்களையும் படியுங்கள்.
அப்படிப்பட்ட ஒரு புத்தகமாக உங்களுக்கு நான் முக்கியமாய் சொல்ல வேண்டியது...
"தெய்வத்தின் குரல்" (ஏழு வால்யூம்கள் கொண்டது...வானதி பதிப்பக வெளியீடு)
"கடவுள்" குறித்தான உங்களுடைய கருத்துக்கள் மேம்பட எனது வாழ்த்துக்கள்.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 27, 2012 3:05 pm

கடவுளை கற்பனை பாத்திரமாக கூரிவிட்டிர்கள் அப்படியென்றால் நம் உடலில் உயிர் என்று ஒன்று உள்ளதாக ரொம்ப காலமாக நம்பப்படுகிறது அது எங்கே சரியாக எப்படி உள்ளது எந்த இடத்தில் உள்ளது எந்த நிறத்தில் உள்ளது என்பதை கூறமுடியுமா அப்படி இல்லையென்றால் உயிரும் கற்பனை தானா அப்பொழுது நாமெல்லாம் உயிரற்வர்கள் என கொள்ளமுடியுமா நான் முன்பே ஒரு பதிவில் இப்படி குறிப்பிட்டிருந்தேன் இல்லாததை எதற்கு இல்லை என்று நிருபிக்கவேண்டும் என்று ஆகவே இல்லாதை அல்லது தங்களுக்கு பயனில்லாதைதை பற்றி சிந்திப்பதை விட்டு தேவையானதை பற்றி சிந்திப்பது சாலசிறந்தது என்று நினைக்கிறேன் :வணக்கம்: :வணக்கம்:





ஈகரை தமிழ் களஞ்சியம் வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 27, 2012 3:20 pm

balakarthik wrote:இல்லாததை எதற்கு இல்லை என்று நிருபிக்கவேண்டும் என்று ஆகவே இல்லாதை அல்லது தங்களுக்கு பயனில்லாதைதை பற்றி சிந்திப்பதை விட்டு தேவையானதை பற்றி சிந்திப்பது சாலசிறந்தது என்று நினைக்கிறேன் :வணக்கம்: :வணக்கம்:
இது அவர் அவர் தனிப்பட்ட கருத்து - இருக்கு என்பதும் இல்லை என்பது. அதை விவாதித்தால் பயன் இல்லை. பாலா சொல்லுவது போல் - எனக்கு இல்லை தான் - ஆனால் இல்லை என்று இருப்பவரிடம் விவாதிப்பது இல்லை.

இல்லை(-) + இல்லை(-) = + (இல்லை எனும் நம் நம்பிக்கை + நிம்மதி)




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக