புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
73 Posts - 37%
i6appar
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
1 Post - 1%
prajai
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
73 Posts - 37%
i6appar
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
1 Post - 1%
prajai
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_m10எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu May 03, 2012 7:49 pm


ஏதோ ஒன்று நடக்கப்போகிறது; பெரிதாக, மிகப்பெரிதாக என்று எல்லோருமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது.ஆயுதம் தாங்கிய போராளிகள் அனைவரும் தத்தம் பயிற்சிகளில் மும்முரமாக இருந்தார்கள். அரபு லீக் என்று சொல்லப்படுகிற அரபு நாடுகளின் கூட்டமைப்பின் வலுவான பின்புலத்தில் உருவாகியிருந்த பி.எல்.ஓ. பாலஸ்தீனில் மட்டுமல்லாமல் ஏனைய அரபு தேசங்கள் அனைத்திலும் பயிற்சிப் பாசறைகளை உருவாக்கி, தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது.


அதுவரை பி.எல்.ஓ.வில் சேராத யாசர் அராஃபத்தின் அல் ஃபத்தா மட்டும் குவைத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்தது.எல்லோருமே பெரியதொரு யுத்தத்தைத்தான் எதிர்நோக்கியிருந்தார்கள். எப்போது அது வெடிக்கும், யார் காரணமாக இருப்பார்கள் என்பதுதான் தெரியாமல் இருந்தது.ஜோர்டன் காரணமாயிருக்குமோ? எல்லைப் பிரச்னையில் இப்படி முட்டிக்கொள்கிறார்களே என்று பார்த்தால், வடக்கே சிரியாவின் எல்லையிலும் சிண்டுபிடிச் சண்டைதான் நடந்துகொண்டிருந்தது.


தெற்கே எகிப்துடன் எத்தனை முறை அமைதிப்பேச்சு நடத்த இஸ்ரேல் முயற்சி செய்துகொண்டிருந்தாலும் இஸ்ரேலை ஒரு பொருட்டாக மதித்துப் பேச அங்கும் யாரும் தயாராக இல்லை.இஸ்ரேலுக்கும் மிக நன்றாகத் தெரிந்துதான் இருந்தது. ஆயிரம் இருந்தாலும் அவர்கள் முஸ்லிம்கள். லட்சமே இருந்தாலும் தாங்கள் யூதர்கள். இது ஒட்டாது.


ஒருபோதும் ஒட்டவே ஒட்டாது.ஆகவே, இரு தரப்பிலுமே அமைதியை உதட்டில் தேக்கி வைத்துக்கொண்டு, உள்ளுக்குள் ஆயுதப்பயிர்தான் செய்துகொண்டிருந்தார்கள்.1952-ம் ஆண்டு எகிப்தில் ஒரு சம்பவம் நடந்தது. பின்னால் நடக்கப்போகிற மாபெரும் சம்பவங்களுக்கான முன்னோட்டம் போன்றதொரு சம்பவம் அது.பிரிட்டன் அரசின் கைக்கூலிபோலச் செயல்பட்டு, அதுவரை எகிப்தில் உப்புப் பெறாத ஆட்சி நடத்திக்கொண்டிருந்த மன்னர் ஃபாரூக் என்பவரை, ராணுவம் தூக்கியடித்தது.


பலகாலமாக உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்த பிரச்னைதான். அந்த வருஷம் வெடிக்க வேண்டுமென்றிருந்திருக்கிறது. அவ்வளவுதான்.அந்த வருடம் ஜூலை 23-ம் தேதி நடைபெற்ற அந்த ராணுவப் புரட்சியின் சூத்திரதாரி, எகிப்து ராணுவத்தின் முக்கியத் தளபதிகளுள் ஒருவராக அப்போதிருந்த கமால் அப்துல் நாசர் (Gamal Abdel Nasser). கவனிக்கவும்.நாசர் அப்போது தலைமைத் தளபதி கூட இல்லை. அவர் ஒரு லெப்டினண்ட் ஜெனரல். அவ்வளவுதான். எகிப்து ராணுவத்தின் மூத்த தளபதியாக இருந்தவர் பெயர் முகம்மது நஜிப் (Muhammad Naguib). அவருக்குக் கீழேதான் நாசர் பதவி வகித்து வந்தார்.மூத்த தளபதிகள் அனைவரும் கலந்து பேசி, மன்னரை ஒழித்துவிடலாம் என்று முடிவு செய்து பொறுப்பை நாசரிடம் விட்டார்கள்.


நாசரும் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைச் சரியாகச் செய்து முடித்து, எந்த வஞ்சகமும் செய்யாமல் முகம்மது நஜிப்பை நாட்டின் சர்வாதிகாரியாக அமர வைத்தார்.இந்தச் சம்பவம் பல மேலை நாடுகளை, குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை மிகவும் கவலையுறச் செய்தது.மன்னர் ஃபாரூக் இருந்தவரை, இங்கிலாந்தின் அறிவிக்கப்படாததொரு காலனி போலவேதான் இருந்தது எகிப்து. என்ன செய்வதென்றாலும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தைக் கேட்காமல் அவர் செய்யமாட்டார்.




முக்கியமாக, கடல் வாணிபத்தில் இங்கிலாந்து கொள்ளை லாபம் சம்பாதிக்க ஃபாரூக் ஏகப்பட்ட உதவிகள் செய்து வந்திருக்கிறார்.ஆனால், திடீரென்று ஏற்பட்ட புரட்சியும் ஆட்சி மாற்றமும் எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று யாராலும் உடனே கணித்துக் கூற முடியவில்லை.ஏனெனில், புரட்சி செய்தது நாசர் என்றாலும், பதவி ஏற்றது நஜிப். ஒரு கட்சி என்றால் அதன் சரித்திரத்தை, சமகாலத்தைப் பார்த்து எப்படி இருக்கும், என்ன செய்யும் என்று கணிக்கலாம்.


ஒரு தனிநபரை என்ன செய்து கணிக்க முடியும்? அவரது பின்னணியும் சரித்திரமும் தெரிந்தால் தானே சாத்தியம்?உலக நாடுகளுக்கு அப்போது நாசரையும் தெரியாது, நஜிப்பையும் தெரியாது. நஜிப் பிரசிடெண்ட் ஆனார் என்றால், நாசர் அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக உட்கார்ந்தார்.இங்கேதான் பிரச்னை ஆரம்பித்தது.


நாசர், நிறையப் படித்தவர். அரசியலில் பெரிய ஞானி. சுய சிந்தனையாளரும் கூட. பதவி ஏற்ற உடனே எகிப்தின் நலனுக்கு என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்தால் யார் யார் அதனால் பாதிக்கப்படக்கூடும், யார் சண்டைக்கு வரக்கூடும், என்ன செய்து சமாளிக்கலாம் என்று ஒரு பட்டியல் தயார் செய்தார் நாசர்.


இதனுடன்கூட ஒட்டுமொத்த மத்தியக்கிழக்குப் பிரச்னைகளையும் சேர்த்து வைத்து ஆராய்ந்து, அவற்றில் எகிப்தின் பங்களிப்பு மற்றும் ஈடுபாடு என்னவாக இருக்கலாம் என்றும் யோசித்து ஒரு பட்டியல் தயாரித்தார்.நாசரின் மூன்றாவது பட்டியல், ஐரோப்பிய தேசங்களால் தமக்கு ஏற்படக்கூடிய தொல்லைகள் பற்றியது.ஒரு சக்திமிக்க தலைவனாக, தான் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால், எகிப்தை ஒரு சர்வவல்லமை பொருந்திய தேசமாக மாற்றுவதோடு, மத்தியக்கிழக்கின் ஒரு தவிர்க்கமுடியாத மாபெரும் சக்தியாக நிறுவிவிடமுடியும் என்பதே அவரது எண்ணம்.பகிர்ந்துகொள்ளவில்லை.


மாறாக, சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்து, முகூர்த்தம் கூடி வந்த ஒரு வேளையில், தானே பதவியில் அமர்த்திய அதிபர் முகம்மது நஜிப்பை வீட்டுக்கு அனுப்பினார்.ஒருவரைப் பதவி நீக்க, ராணுவத்தினர் முடிவு செய்தால் அதற்காகப் பெரிய காரணங்களையெல்லாம் தேடவேண்டியதில்லை. ஊழல் ஒரு எளிய காரணம். அதைக்காட்டிலும் உத்தமமான எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.நஜிப்பைப் பதவியிலிருந்து தூக்க நாசர் சொன்ன காரணம், அவர் எகிப்தின் நலனுக்காகச் சிந்திப்பதை விடுத்து முஸ்லிம் சகோதரத்துவத்தைத் தூக்கிப்பிடித்து ஆதரித்து பொழுதை வீணடித்துக்கொண்டிருக்கிறார் என்பது.


1954-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி நஜிப் தூக்கியடிக்கப்பட்டார். நாசர், எகிப்தின் பிரசிடெண்டாகத் தன்னை அறிவித்துக்கொண்டு பதவியில் அமர்ந்தார். கொஞ்சம் கலவரம், அடிதடி, தீவைத்தல், கைகலப்பு, மோதல் எல்லாம் இருந்தது. ஆனாலும் நாசர் வெற்றியடைவதில் பெரிய பிரச்னை இருக்கவில்லை.


பதவிக்கு வந்ததுமே நாசர், தான் முன்னர் தீட்டிவைத்திருந்த திட்டங்களை ஒவ்வொன்றாகக் கையில் எடுத்துக்கொண்டு முழு வேகத்தில் வேலையைத் தொடங்கினார். மூன்று விஷயங்களில் அவர் தம் முதல் கவனத்தைச் செலுத்தினார்.முதலாவது, தொழில்துறையைத் தேசியமயமாக்குவது. இரண்டாவது நிலச்சீர்திருத்தம்.


மூன்றாவது, நீர்த்தேக்கங்கள் கட்டி விவசாயத்தைப் பெருக்குவது மற்றும் கடல் வர்த்தகத்தில் தீவிர கவனம் செலுத்துவது.இதன் அடிப்படையில்தான் அவர் தமது தேசத்தின் எல்லைக்குட்பட்ட அகபா வளைகுடா (Gulf of Aquaba) மற்றும் சூயஸ் கால்வாய் பகுதிகளை இழுத்து மூடினார்.வளைகுடாப் பிராந்தியத்தையும் கால்வாயையும் இழுத்து மூடுவதென்றால்?பிற நாட்டுக் கப்பல்கள் அந்த வழியே போவதைத் தடைசெய்வது என்று அர்த்தம்.நாசர் சூயஸ் கால்வாய்க்கு சீல் வைத்த சம்பவம் உலக சரித்திரத்தில் இடம்பெற்ற மிகப் பரபரப்பானதொரு சம்பவம்.


இத்தனை தைரியம், இத்தனை நெஞ்சுரம், இத்தனை துணிச்சல் கொண்ட எந்த ஒரு அரபுத் தலைவரையும் அதற்கு முன் உலகம் சந்தித்ததில்லை.அமெரிக்கா அரண்டு போனது. பிரிட்டன் பதறிக்கொண்டு எழுந்தது. பிரான்ஸ் மூக்குமேல் விரல் வைத்தது. உலகமே நாசரை வியந்து பார்த்தது.ஆனால், இதனால் உடனடிப் பாதிப்பு யாருக்கென்றால் இஸ்ரேலுக்குத்தான்.


இஸ்ரேலின் கப்பல்கள்தான் சூயஸ் கால்வாயை அதிகம் பயன்படுத்திக் கொண்டிருந்தன. வர்த்தகக் கப்பல்கள். எண்ணெய்க் கப்பல்கள். அவ்வப்போது போர்க்கப்பல்கள்.நாசர் என்ன சொன்னார்?'சூயஸ் கால்வாய் நமது தேசிய சொத்து. இதை நான் நாட்டுடைமை ஆக்குகிறேன். இதனைப் பயன்படுத்தி வேறு பல நாடுகள் கடல் வர்த்தகத்தில் கொழித்துக்கொண்டிருக்கின்றன. அதை அனுமதிக்க முடியாது.இதை நாட்டுடைமை ஆக்கி நமது வர்த்தகத்தைப் பெருக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாயில், 'நான் நைல் நதியின் குறுக்கே அஸ்வான் அணை (கிsஷ்ணீஸீ பிவீரீலீ ஞிணீனீ) கட்டுவேன்.


விவசாயத்தைப் பெருக்குவேன்.' ''இந்த அறிக்கைதான் இஸ்ரேலைச் சீண்டியது. பிரிட்டனுக்குக் கோபம் வரவழைத்தது. ஒட்டுமொத்த உலகையும் வியப்படையச் செய்தது.நாசரின் அஸ்வான் அணைத்திட்டம் மிகப்பெரியதொரு திட்டம். சொல்லப்போனால் அமெரிக்காவும் பிரிட்டனும் ஆளுக்குச் சரிபாதி நிதி உதவி செய்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் ஒட்டுமொத்த எகிப்துக்கும் மாபெரும் பலன் கிடைக்கும் என்று பேசி ஒப்பந்தமெல்லாம் செய்திருந்தார்கள்.


ஆனால் நாசர் திடீரென்று சூயஸ் கால்வாய் விஷயத்தில் தடாலடி அறிக்கை விடுத்து, கப்பல் போக்குவரத்தைத் தடை செய்ததோடல்லாமல், கம்யூனிஸ்ட் செக்கோஸ்லாவாக்கியாவிடமிருந்து ஆயுதங்களை வேறு வாங்கிச் சேர்த்தபடியால், அமெரிக்காவும் பிரிட்டனும் அந்தக் கணமே தமது ஒத்துழைப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டன.இதோடாவது நாசர் நிறுத்திக்கொண்டாரா என்றால், அதுதான் இல்லை!


முதலாளித்துவ தேசங்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இப்பட்டியலில் இஸ்ரேலையும் சேர்த்தார்.அந்த தேசங்களுக்கு எதெல்லாம் பிடிக்காது என்று பார்த்துப் பார்த்து, அதை மட்டும் செய்ய ஆரம்பித்தார்.உதாரணமாக கம்யூனிஸ்ட் தேசமான சீனாவுடன் நல்லுறவுக்கு வேலை செய்தார், சோவியத் யூனியனை நட்பாக்கிக்கொண்டார்.இதையெல்லாம் பார்த்து அப்போதைய பிரிட்டன் பிரதம மந்திரி சர் ஆண்டனி ஈடனுக்கு (Sir Anthony Eden) ரத்தக்கொதிப்பே வந்துவிட்டது.



'ஒரு யுத்தம் நெருங்கிக்கொண்டிருக்கிறது' என்று பகிரங்கமாகவே அவர் தம் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியொன்றில் குறிப்பிட்டார்.'நாசரின் தேசியவாதம் நல்லதுக்கே இல்லை. இது இத்தாலியில் முசோலினியும், ஜெர்மனியில் ஹிட்லரும் பேசிய தேசியவாதம் போன்றதுதான். அவர்களுக்கு நேர்ந்த கதிதான் நாசருக்கும் நேரும்' என்றே குறிப்பிட்டார் அவர்.எல்லாவற்றுக்கும் மூலகாரணம் சூயஸ்!



இவற்றுக்கு மட்டுமல்ல; இதற்கெல்லாம் பின்னால் சில வருடங்கள் கழித்து, இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே நடைபெற உள்ள ஆறு நாள் யுத்தம் என்று அழைக்கப்பட்டதொரு பெரிய போருக்குமேகூட அந்தக் கால்வாய்தான் மூலகாரணம் என்பதால் மிகவும் கொஞ்சமாகவாவது சூயஸ் கால்வாய் பிரச்னையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது இங்கே இன்றியமையாததாகிறது.இஸ்ரேல், பாலஸ்தீன் பிரச்னையின் இரண்டாம் பாகமும் இந்த சூயஸ் கால்வாயில்தான் பிறக்கிறது.



மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் பிரிக்கும் எகிப்தின் வடக்குப் பகுதியில் இந்தக் கால்வாயை வெட்டியதனால்தான் ஐரோப்பாவும் ஆசியாவும் கடல் வழியே மிக நெருக்கமாக இணைய முடிந்தது.விமானப் போக்குவரத்து, தரைவழிப் போக்குவரத்தெல்லாம் சரிப்படாத காரியங்களுக்கு முன்பெல்லாம் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டுதான் கடல் மார்க்கமாக ஆசியாவை அடைய முடியும்.இந்த ஒரு கால்வாய் ஒட்டுமொத்த உலக வர்த்தகத்தையே திசைமாற்றி வழி நடத்தச் செய்திருக்கிறது என்றால் நம்புவது சற்று சிரமமாகத்தான் இருக்கும்.


ஆனால் அதுதான் உண்மை.நீர் ததும்பும் இந்தப் பிராந்தியத்தில் தீப்பிழம்புகளும் அந்தச் சமயத்தில் எழவே செய்தன.காரணம், நாசர். சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கி, சர்வதேசக் கப்பல் வர்த்தகத்துக்குக் குண்டுவைத்த அவரது அந்த அறிவிப்பு.


கால்வாய்க்கு என்ன பெரிய சரித்திரம் இருந்துவிட முடியும்?ஆச்சர்யமாகத்தான் இருக்கும். சூயஸின் பெயர்தான் கால்வாயே தவிர, உண்மையில் அது ஒரு சிறிய கடல் என்றுதான் சொல்லவேண்டும்.அத்தனை நீளம். அத்தனை ஆழம். பிரும்மாண்டமான கப்பல்களெல்லாம் மிக அநாயாசமாக வரும். யுத்த தளவாடங்களை, போர் விமானங்களை ஏற்றிக்கொண்டு ராணுவக் கப்பல்கள் அங்கே அணிவகுக்கும். வெள்ளம் வரும். எல்லாம் வரும்.


மத்தியத் தரைக்கடலையும் செங்கடலையும் இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட கால்வாய் இது.இன்று நேற்றல்ல. கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இப்படியொரு கால்வாய்க்கான சாத்தியத்தையும் அவசியத்தையும் அந்நாளைய எகிப்து மன்னர்கள் யோசித்திருக்கிறார்கள்.


முதலில் நேரடியாக இரு கடல்களை ஒரு கால்வாய் வெட்டி இணைக்கலாம் என்று யாருக்கும் தோன்றவில்லை. மாறாக, ஒரு கால்வாயை வெட்டி எகிப்தின் அங்கவஸ்திரம் மாதிரி தேசமெங்கும் ஓடும் நைல் நதியில் எங்காவது இணைத்துவிட்டால், நைல் நதி கடலுக்குப் போகும் பாதை வழியே கப்பல்கள் செல்லலாம் என்றுதான் யோசித்தார்கள்.


இந்த யோசனை, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட மன்னர்கள் துத்மோசிஸ் 3 (Thuthmosis III), பராநெகோ (Pharaoh Necho) ஆகியோருக்கு இருந்திருக்கிறது. சில சில்லறை முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.


அதற்குச் சில காலம் கழித்து (எத்தனை காலம் என்று துல்லியமாகத் தெரியவில்லை) ஈரானியர்கள் (அப்போது பெர்சியர்கள்) எகிப்தின் மீது ஒரு சமயம் படையெடுத்து வென்றிருக்கிறார்கள். அப்போது எகிப்தின் ஆட்சிப்பீடத்தில் ஏறிய மன்னர் டேரியஸ் 1 (Darius I) இந்தக் கால்வாய்த்திட்டத்தை உடனே செய்துமுடித்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டதாகத் தெரிகிறது.



அப்போது ஒரே கால்வாயாக அல்லாமல் இரண்டு தனித்தனி கால்வாய்களை வெட்டி, இரு எல்லைகளில் இணைத்து, நடுவே ஒரு பொதுச் சரடாக நைல் நதியை இணைத்திருக்கிறார்கள். சிலகாலம் இந்தக் கால்வாய் ஒழுங்காக இருந்திருக்கிறது.இடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைச் சீற்றங்களால் நாசமாகி, மீண்டும் கால்வாய் சரி செய்யப்பட்டு, மீண்டும் நாசமாகி, ஒரு கட்டத்தில் கால்வாய்த் திட்டத்தையே கைவிட்டுவிட்டார்கள்.


சூயஸ் கால்வாய் என்பது கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்கிற முடிவுக்கு அப்போதைய எகிப்து மன்னர்கள் வந்துவிட்டார்கள்.சூயஸ் கால்வாய்த் திட்டத்துக்கு மறுபிறப்பு அளித்தவர் நெப்போலியன். அவர் பிரான்சின் சக்கரவர்த்தியாக இருந்தபோதுதான் (கி.பி. 1800 காலகட்டம்) ஐரோப்பாவையும் இந்தியாவையும் கடல் மூலமாக இணைப்பதற்கு இந்தக் கால்வாய்த்திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் முடியும் என்று சொன்னார்.


சொன்னதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய பொறியாளர்களையும் அங்கே அனுப்பி வேலையை உடனே ஆரம்பிக்கச் செய்தார். (நெப்போலியன் அப்போது எகிப்து மீது படையெடுத்து வெற்றி கண்டிருந்தார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.)நெப்போலியன் அனுப்பிய பிரெஞ்சு பொறியாளர்கள், எகிப்துக்கு வந்து பார்த்து முதலில் சர்வே எடுத்தார்கள்.


நிலப்பரப்பின் மீதான ஆய்வைத் தொடர்ந்து நடத்தி முடித்தவர்களுக்கு, அப்படியொரு கால்வாய் கட்ட சாத்தியமே இல்லை என்றுதான் முதலில் தோன்றியது.ஏனெனில், அவர்கள் கணக்குப்படி மத்திய தரைக்கடலுக்கும் செங்கடலுக்கும் பத்து மீட்டர் உயர இடைவெளி இருந்தது.அதை மீறி கால்வாய் வெட்டுவதென்றால் ஏகப்பட்ட நிலப்பரப்பு நீரில் மூழ்கி நாசமாகிவிடும். பரவாயில்லை என்றால் கால்வாய் வெட்டலாம் என்று சொன்னார்கள்.


நெப்போலியன் யோசித்தார். இறுதியில் அவரும் பின்வாங்கிவிட்டார்.ஆனால், அந்தப் பொறியாளர்களின் கணக்கு தவறு என்று சிறிதுகாலம் கழித்து வேறொரு பிரெஞ்சு பொறியியல் வல்லுநர் நிரூபித்தார். அவர் பெயர் ஃபெர்டினாண்ட் (Ferdinond de Lesseps). இவர் வெறும் பொறியாளர் மட்டுமல்ல. கெய்ரோவுக்கான பிரெஞ்சு தூதரும் கூட.ஃபெர்டினாண்ட் வகுத்தளித்த வரைபடம் மிகவும் சுத்தமாக இருந்தது. கால்வாய் கட்டுவதில் பெரிய பிரச்னை ஏதும் இருக்காது என்றே ஆட்சியாளர்கள் நினைத்தார்கள்.


ஆகவே 1859-ம் ஆண்டு எகிப்து அரசு கால்வாய் வெட்டத் தொடங்கிவிட்டது.ஆப்பிரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான அடிமைகள் தருவிக்கப்பட்டார்கள். இரவு பகலாக வேலை பார்க்க உத்தரவிடப்பட்டது. உண்மையிலேயே ஒரு வேள்வி போலத்தான் அந்த வேலையை எடுத்துக்கொண்டார்கள்.இறுதியில் 1867-ல் சூயஸ் கால்வாய் கட்டிமுடிக்கப்பட்டது.


எட்டு வருடங்கள்! மிகப்பெரிய விழாவெல்லாம் எடுத்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்ய மன்னர்களையெல்லாம் அழைத்து, ஊரைக்கூட்டிக் கொண்டாடினார்கள்.அன்றுமுதல் சர்வதேசக் கடல் வாணிபம் சூடுபிடிக்கத் தொடங்கியது.ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கெல்லாம் மாநகரப் பேருந்துகள் மாதிரி கப்பல்கள் அடிக்கடி வந்துபோகத் தொடங்கின. ஆப்பிரிக்காவை அணுகுவது சுலபமானது.


மத்தியக்கிழக்கின் வர்த்தகமே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது.இருபதாம் நூற்றாண்டில் இந்த வர்த்தகப் பாதைக்கு இன்னும் கணிசமான மவுசு உண்டானது. சூயஸ் கால்வாய் இல்லாத ஒரு சூழலை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது என்கிற நிலை ஏற்பட்டது. குறிப்பாக இஸ்ரேலுக்கு.புதிதாகத் தோன்றிய தேசமான இஸ்ரேல், தன்னுடைய உள்கட்டுமானத்தை வலுப்படுத்திக்கொள்ள வர்த்தக வருமானத்தையே பெரிதும் நம்பியிருந்த காலம் அது.இயந்திரங்கள், பேரீச்சம்பழங்கள், ஆயுத உதிரிபாகங்கள் ஆகியவைதான் அப்போது இஸ்ரேலின் பிரதானமான ஏற்றுமதிச் சரக்குகள். சூயஸ் கால்வாய் பக்கத்திலேயே இருந்தபடியால் இஸ்ரேலின் இவ்வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் சூடுபிடித்தன. நல்ல வருமானமும் இருந்தது.


ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் வலுவான வர்த்தகத் தளங்களை நிறுவும் முயற்சியில் அவர்களுக்குக் கணிசமான பலன் கிடைக்கத் தொடங்கியிருந்தது.வர்த்தக ரீதியில் மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களுக்காகவும் இந்தக் கால்வாய், மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது.


முதல் உலகப்போரின் போது பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் படைகள் சூயஸ் கால்வாயை மூடி, எதிரிக்கப்பல்கள் நகர முடியாதபடி செய்து திக்குமுக்காட வைத்தது சரித்திரத்தில் மிகப்பெரியதொரு சம்பவம். இரண்டாம் உலகப்போரிலும் சூயஸ் கால்வாயின் பங்கு இதே போல குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகவே விளங்கியிருக்கிறது. முசோலினியின் படைகள் (ஹிட்லரின் கூட்டணி நாடான இத்தாலியினுடைய படைகள்) ஆப்பிரிக்காவுக்குப் போவதைத் தடுக்கிற விஷயத்தில் இந்தக் கால்வாய்தான் ஒரு கதாநாயகன் போலச் செயல்பட்டிருக்கிறது!


இந்தப் பின்னணியில்தான் நாம் நாசர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்க முடிவு செய்ததை அணுக வேண்டும்.புவியியல் படி நாசர் முடிவெடுத்தது சரிதான். சூயஸ் கால்வாய் என்பது முழுக்க முழுக்க எகிப்து நாட்டுக்குள் ஓடும் ஒரு கால்வாய்.இரண்டு கடல்களை இணைக்கிற படியால் அது பொதுச்சொத்தாக இருந்ததே தவிர, எகிப்து அதைத் தன் தனிச்சொத்து என்று சொன்னால் சட்டப்படி யாரும் எதுவும் செய்யமுடியாது என்பதுதான் உண்மையும் கூட.


ஆனால், இந்தக் கால்வாயை எகிப்து மட்டுமே தன் கைக்காசைப் போட்டு வெட்டவில்லை அல்லது கட்டவில்லை. நிறைய வெளியார் உதவிகள் அதில் இருக்கிறது.குறிப்பாக சூயஸ் கால்வாய்த் திட்டத்துக்கு பிரான்ஸ் அளித்த உதவிகள் சாதாரணமானதல்ல. பின்னால் பிரிட்டனும் ஏகப்பட்ட நிதியுதவிகள் செய்திருக்கிறது.வேறு பல நாடுகளும் தம்மாலான உதவிகளைச் செய்திருக்கின்றன. கால்வாய்க் கட்டுமானப்பணிகள் நடந்துகொண்டிருந்தபோது எழுந்த பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்கள், அரசியல் பிரச்னைகள், பொருளாதார நெருக்கடிகள் அனைத்தையும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள்தான் முன்வந்து தீர்த்து வைத்திருக்கின்றன.


இப்படி சூயஸ் கால்வாய்த் திட்டத்தில் பல தேசங்கள் சம்பந்தப்பட்டதால், பங்குபெற்ற ஒவ்வொரு தேசத்துக்கும் அந்தக் கால்வாயைப் பயன்படுத்துவதில் பங்கு உண்டு என்று ஒப்பந்தம் ஆனது.'பங்கு' என்றால் நிஜமாகவே பங்கு. Share என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே, அந்தப் பங்கு. பத்திர வடிவில் எழுதிக் கொடுக்கப்பட்ட பங்கு. சூயஸ் கால்வாயில் எப்படிப் பிற தேசங்களுக்குப் பங்கு உண்டோ, அதே போல எகிப்துக்கும் ஒரு பங்கு மட்டும்தான் முதலில் இருந்தது. தனது தேசத்தின் வழியே அந்தக் கால்வாய் செல்ல அனுமதியும் இடமும் அளித்ததற்கான பங்கு.


என்ன பிரச்னை ஆனது என்றால், 1875-ம் ஆண்டில் எகிப்தை ஆண்டுகொண்டிருந்த மன்னர் இஸ்மாயில் பாஷா என்பவர் தாங்கமுடியாத பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக, தனது தேசத்துக்கான பங்குகளை பிரிட்டனிடம் விற்றுவிட்டார்.சூயஸ் கால்வாயில் தனக்கிருந்த பங்கை விற்று அவர்கள் கடனை அடைத்தார்களா, அல்லது புதிய நிதி உதவிகள் ஏதும் அப்போது பெறப்பட்டதா என்பது பற்றிய தெளிவான விவரங்கள் ஏதும் இப்போது கிடைக்கவில்லை. (கிடைக்கும் தகவல்கள் எதுவும் முழுவதுமாக நம்பக்கூடியவையாகவும் இல்லை.)ஆகவே, எகிப்திலேயே ஓடும் சூயஸ் கால்வாயைச் சொந்தம் கொண்டாட எகிப்துக்கு உரிமை கிடையாது என்று ஆகிவிட்டது.


இதெல்லாம் பத்திர அளவில் நிகழ்ந்த விஷயங்கள். அதற்காக எகிப்து கப்பல்கள் எதுவும் சூயஸ் கால்வாயைப் பயன்படுத்தாமலெல்லாம் இல்லை!ஆனால், கால்வாயின் கட்டுப்பாடு முழுவதுமாக அப்போது பிரிட்டன் வசம் போய்விட்டது. எப்படி ஒரு நிறுவனத்தின் பங்குகள் ஒரு நபரிடம் அதிகமாக இருந்தால், அந்நிறுவனம் அவரது முழுக்கட்டுப்பாட்டின்கீழ் வருமோ அப்படி!உடனே பிரிட்டன் சூயஸ் கால்வாயைப் பாதுகாக்கவென்று ஒரு தனி படைப்பிரிவு ஏற்படுத்தி, எகிப்துக்கு அனுப்பிவிட்டது.


இதெல்லாம் மன்னர்கள் காலத்தில் நடந்தது! அவர்கள் காலமெல்லாம் ஒரு முடிவுக்கு வந்து, நாசரின் சர்வாதிகார ஆட்சி வந்தபோது இந்தப் பழைய ஏற்பாடுகளையெல்லாம் முதலில் தூக்கி அதே சூயஸ் கால்வாயில் விட்டெறிந்துவிட்டார்.சூயஸை நாட்டுடைமை ஆக்குவதாகவும் அறிவித்தார்.அதனால்தான் உடனே அனைத்து நாடுகளும் வெகுண்டெழுந்து எகிப்துக்கு எதிராகப் போர் முரசு கொட்டின.இஸ்ரேல் ஏற்கெனவே கடும் கோபத்தில் இருந்தது.என்னதான் உதட்டளவில் அமைதி, அமைதி என்று பேசினாலும் எகிப்து எல்லையில் இஸ்ரேலுக்கு எப்போதும் பிரச்னைதான். இவர்கள் அந்தப் பக்கம் ஊடுருவுவது, அவர்கள் இந்தப் பக்கம் துப்பாக்கிச் சூடு நடத்துவது என்று ஒரு நாள் தவறாமல் ஏதாவது சம்பவம் நடந்தபடிதான் இருந்தது.


தவிரவும் 1948 யுத்தத்தின் இறுதியில் காஸா பகுதி எகிப்து வசம் போனதிலும் இஸ்ரேலுக்கு மிகவும் வருத்தம்.வாகான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் எகிப்தின் மீது போர் தொடுத்து, இழந்த பகுதியை மீட்டுவிடமாட்டோமா என்றுதான் அவர்கள் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தமாதிரியான சந்தர்ப்பத்தில்தான் நாசர் சூயஸ் கால்வாயை நாட்டுடைமை ஆக்கி, யுத்தத்தை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்கத் தயாரானார்.ஒரு பக்கம் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டுப் படைகள் இஸ்ரேலுடன் கைகோத்துப் போரிடத் தயாராக இருந்தன. எதிர்ப்பக்கம் எகிப்து.


இதில் பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் சூயஸ் கால்வாய்ப் பிரச்னை மட்டும்தான் போரிடக் காரணம்.இஸ்ரேலுக்கு நில ஆக்கிரமிப்பு ஆசையும் உடன் சேர்ந்து இருந்தது.இரண்டு பெரிய தேசங்களின் துணை இருப்பதால் எப்படியும் எகிப்தை யுத்தத்தில் வீழ்த்தி, ஓரளவுக்காவது நிலங்களைப் பிடிக்கலாம் என்பது இஸ்ரேலின் கனவு.பிரிட்டனுக்கு இஸ்ரேலின் இந்த எண்ணம் தெரியாமல் இல்லை. ஆனால் அரபு மண்ணில் பிரிட்டன் போன்ற முதலாளித்துவ தேசம் கூட்டணி வைக்க இஸ்ரேலை விட்டால் வேறு நாதி கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும்.


1956-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி அது நடந்தது. இஸ்ரேல் ராணுவம் எகிப்தின் வடகிழக்கு எல்லைப்பகுதியான சினாய்க்குள் அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்த எகிப்து ராணுவத்தினரை சூயஸ் கால்வாய் வரை ஓடஓட விரட்டிக்கொண்டே போகத் தொடங்கியது.
http://www.panithulishankar.com/2009/08/blog-post_183.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! 1357389எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! 59010615எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Images3ijfஎகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Images4px
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu May 03, 2012 8:04 pm

பின்னர் நடந்தது என்ன? அறிய ஆவலாக உள்ளேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக