புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_m10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_m10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_m10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_m10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_m10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_m10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_m10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_m10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_m10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_m10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_m10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_m10நடமாடும் எஃகுக் கோட்டை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடமாடும் எஃகுக் கோட்டை


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 03, 2012 4:04 pm


நடமாடும் எஃகுக் கோட்டை ஒன்றைத் தயாரித்து, அதை ஒரு போர்ச் சாதனமாக உபயோகிக்கலாம் என்று ஓர் எண்ணம். 1913-ல் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளில் ஒருவரான கேப்டன் எப்.ஜே.பூலர் என்பவர்தான் முதன்முதலாக இந்த யோசனையை வெளியிட்டார். அப்போது சமாதான காலமாக இருந்ததால், இதுபற்றி பிரிட்டிஷ் பாதுகாப்பு இலாகா உரிய கவனம் செலுத்தவில்லை.

பூலர் இந்த யோசனையைத் தெரிவித்த சில மாதங்களுக்குள்ளேயே, அதாவது 1914 ஆகஸ்ட் 4-ம் தேதி, முதலாவது உலக மகா யுத்தம் தொடங்கிவிட்டது. அப்போது ராணுவ அதிகாரியான லெப்-கர்னல் ஸ்வின்டன், நடமாடும் எஃகுக் கோட்டைகள் தயாரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, அவற்றை இயக்குவதற்குச் சங்கிலிச் சக்கரங்களைப் (Chain wheels) பயன்படுத்தலாம் எனவும் யோசனை கூறினார். அவர் கூறிய இந்த யோசனையின் அடிப்படையில் பிரிட்டிஷ் ராணுவ இன்ஜினீயர்கள் பலர் இது சம்பந்தமான ஆராய்ச்சிகளை உடனடியாக மேற்கொண்டனர்.

நடமாடும் எஃகுக் கோட்டை P67

''இந்த ஆராய்ச்சி பூர்த்தியாகி முதல் நடமாடும் எஃகுக் கோட்டை போர் முனையில் செயலாற்றத் தொடங்கும் வரை, இதுபற்றி துளி செய்திகூட யாருக்கும் தெரியக் கூடாது. பரம ரகசியமாக இந்தக் காரியம் நடந்தேற வேண்டும்'' என பிரிட்டிஷ் ராணுவ இலாகா கருதியது. இதனால், இந்த ஆராய்ச்சிபற்றி மூடி மறைப்பதற்காகப் பொய்யான செய்தி ஒன்றை அது வெளிக்கிளப்பியது. 'எந்த நிலையிலும் ஒழுகாத 'தண்ணீர்த் தொட்டி’ (Tank) ஒன்றைக் கண்டுபிடிப்பதிலேயே அந்த ராணுவ இன்ஜினீயர்கள் கவனம் செலுத்திவருகிறார்கள்’ என்பதே அந்தச் செய்தியாகும். ஆகவே, இதனால் முதல் நடமாடும் எஃகுக் கோட்டையை மேற்படி இன்ஜினீயர்கள் முதன்முதலாகத் தயாரித்து வெளிக்கொண்டுவந்தபோது, பிரிட்டிஷ் பொதுமக்கள் அதை ஒருவகைப் புதுத் தண்ணீர்த் தொட்டி என்றே நினைத்தார்கள். இதனால் 'டாங்க்’ என்றே அதை அழைத்தார்கள். தவறாக அவர்கள் இவ்விதம் நடமாடும் எஃகுக் கோட்டைக்கு 1916-ல் இட்ட பெயரே, பிறகு அப்படியே நிலைத்துவிட்டது.

பிரிட்டனில் தயாரான தனது முதல் டாங்கை, 1916 பிப்ரவரி 8-ம் தேதி முதன்முதலாக பிரிட்டன் போரில் ஈடுபடுத்தியது. இந்த முதல் டாங்குக்கு 'லிட்டில் வில்லி’ எனப் பெயரிடப்பட்டது.

ஆனால், இந்த 'லிட்டில் வில்லி’ போர் நடவடிக்கை களுக்கு அவ்வளவு சிறந்ததாக இல்லை. இதனால், அதில் பல மாற்றங்கள் செய்து 'பிக் வில்லி’ (Big willy) என மற்றொரு டாங்கைத் தயாரித்தார்கள். 10 ராணுவ வீரர்கள் ஏக காலத்தில் இதற்குள் இருக்கலாம்.

இந்த 'பிக் வில்லி’ டாங்கை முதன்முதலாக 1916 செப்டம்பர் 15-ம் தேதி பிரான்ஸில் சோம் (Somme) போர் முனையில் பிரிட்டன் ஈடுபடுத்தியது. அப்படி ஈடுபடுத்திய 49 டாங்குகளில் 17 டாங்குகளின் இன்ஜின்கள் சரியாகச் செயலாற்றவில்லை. 18 டாங்குகள் போர்முனைக்குக் கிளம்பவே மறுத்து விட்டன. 5 டாங்குகள் போரில் ஈடுபட்டு இருந்தபோதே நடுவில் செயலற்று நின்றுவிட்டன. 9 டாங்குகள்தான் கடைசி வரை நன்றாக இயங்கின.

நடமாடும் எஃகுக் கோட்டை P67a

தான் இவ்விதம் முதன்முதலில் போரில் அதிக அளவில் ஈடுபடுத்திய 'பிக் வில்லி’ டாங்குகளை 'மார்க்-1’ என பிரிட்டிஷ் ராணுவ இலாகா அழைத்தது. இதை ஆதாரமாகக்கொண்டு மேன்மேலும் அபிவிருத்தி செய்து, புது மாடல்களைத் தயாரிக்கத் தொடங்கியது. அபிவிருத்தி செய்யப்பட்ட டாங்குகளை 'மார்க்-2’ எனப் பெயரிட்டு 1917 ஏப்ரல் 8-ம் தேதி பிரான்ஸில் போர் முனையில் முதன்முதலாக பிரிட்டன் ஈடுபடுத் தியது. 1918 நவம்பரில் இரண்டாவது உலகப் போர் முடிவதற்குள்ளாக 'மார்க் 3, 4, 5’ ஆகிய மேலும் அபிவிருத்தி செய்யப்பட்ட டாங்குகளை பிரிட்டன் போரில் ஈடுபடுத்தியது.

இப்போது டாங்குகளில் பிரதானமாக மூன்று ரகங்கள் உள்ளன. லேசான டாங்குகள், நடுத்தர டாங்குகள், கனமான டாங்குகள் என்பவையே ஆகும். லேசான டாங்குகள் எந்த இடத்துக்கும் சுலபமாகக் கொண்டுசெல்ல ஏற்றவை. விமானங்கள், கப்பல்கள் மூலம் ஏற்றிச் செல்லவும் வசதியானவை. மலைப் பிரதேசங்களிலும் பயன்படும். ஓரளவு துரிதமாகவும் செல்லக் கூடியவை. லேசான டாங்கு, கனமான டாங்கு இரண்டுக்கும் இடைப்பட்டது நடுத்தர டாங்கு. சமவெளிகளில் சாதாரண யுத்த நடவடிக்கைகளுக்கு இதையே மிகுதியாகப் பயன்படுத்துவது வழக்கம். கனமான டாங்குகள் மற்ற எல்லாவற்றையும்விட சக்தி வாய்ந்தவை. அதிகப் பாதுகாப்பானவை. எவ்விதத் தாக்குதல்களையும் சமாளிக்கக்கூடியவை. ஆனால், அவை மிக மெதுவாகவே நகர்ந்து செல்லும். போர் முனைகளில் விசேஷமான நிலைகளில் மட்டும் பயன்படுத்துவதற்கு என இவை தயாரிக்கப்படு கின்றன.

இந்த மூன்று வகை டாங்குகள் தவிர, வேறு பல விசேஷ வகை டாங்குகளும் இப்போது உண்டு.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கும் நமக்கும் இடையே நடந்த போரில் பாகிஸ்தான் படைகள் 'பாட்டன்’ என்ற ஒரு வகை டாங்குகளை மிகுதியாகப் பயன்படுத்தின. இது நடுத்தர வகையைச் சேர்ந்தது; 1952 ஜூலையில் இரண்டாவது உலக மகா யுத்தம் முடிந்த பிறகு தயாரிக்கப்பட்டது. புகழ்பெற்ற அமெரிக்க ஜெனரலான ஜார்ஜ் எஸ்.பாட்டன் இதைக் கண்டு பிடித்ததால், 'பாட்டன் டாங்கு’ எனப் பெயர் பெற்றுள்ளது.

இதில் 'எம்-47’, 'எம்.-60’, 'எம்-113’ என்று பல ரகங்கள் உண்டு. 'எம்-113’ என்பது மிக நவீன ரகம். 'எம்-47’ என்பது மிகப் பழைய ரகம். 'எம்.’ என்றால் மீடியம் (நடுத்தரம்) எனப் பொருள்படும். அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு அளித்து அது நமக்கு எதிராக உபயோகித்த 'பாட்டன் கள்’ 'எம்-47’ ரகத்தைச் சேர்ந்தவையே.

இந்த வகை பாட்டன் டாங்குகளைக் கொரியப் போரில்தான் முதன்முதலாக அமெரிக்கா ஈடுபடுத்தியது. இதில் பொருத்தப்பட்டுள்ள பீரங்கி மிக சக்தி வாய்ந்த போர்க் கருவியாகும். 12 மைல் தூரம் குண்டுகளைச் சுடும் ஆற்றல் இந்தப் பீரங்கிக்கு உண்டு. இதில் இருந்து கிளம்பும் குண்டுகள் விநாடிக்கு 3,000 அடி (நிமிஷத்துக்கு 1,80,000 அடி) வேகத்தில் செல்லக் கூடியவை.

பாகிஸ்தான் படைகள் 'பாட்டன்’ அன்றி 'ஷெர்மன்’ என்ற மற்றொரு வகை டாங்குகளையும் நமக்கு எதிராக ஏவின. இவை 'எம்-4’ என்ற வகையைச் சேர்ந்தவை. 1941 செப்டம்பரில் முதன்முதலாக இவை தயாரிக்கப்பட்டன. இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்துகொண்டு இருந்தபோதே 49,234 'ஷெர்மன்’ டாங்குகள் தயாராகிவிட்டன. ஒரே ரகத்தில் இவ்வளவு அதிக டாங்குகள் உலகில் இதுவரை எங்கும் தயாரிக்கப்பட்டது இல்லை.

வட ஆப்பிரிக்காவில் ஜெனரல் ரோமலின், ஜெர்மன் டாங்குப் படை களோடு மோதி வெற்றி வாகை சூடியவை இந்த ஷெர்மன் டாங்குகளே. 3,000 மைல் பயணம் செய்தால்கூட இதன் இணைப்புப் பகுதிகள் தேய்வது இல்லை. இந்த டாங்குகளின் எடை 33 டன். இவற்றில் இப்போது ஏழு ரகங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பொருத்தப்பட்டுள்ள இன்ஜினின் ஆற்றல் வெவ்வேறு விதம். 1956-ல் இருந்து இந்த டாங்குகள் தயாரிப்பதை அமெரிக்கா நிறுத்திவிட்டது.

நம்மிடமும் பல ஷெர்மன் டாங்குகள் உண்டு. நாம், சொந்தமாக சென்னை அருகே ஆவடியில் டாங்குகள் தயாரிக்க இப்போது ஏற்பாடாகி வருகிறது. 1966 ஆரம்பத்தில் முதல் டாங்கு தயாராகி வெளிவரும்.

ஆவடியில் தயாராகும் இந்த இந்திய டாங்குகளுக்கு 'வைஜயந்த்’ எனப் பெயர்.

- அ.ராம்கோபால்

விகடன்.com

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 03, 2012 7:34 pm

தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா... நன்றி




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக