புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் ஒரு இனிய சந்திப்பு !
Page 1 of 12 •
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அன்புள்ள உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்கள் கடந்த ஏப்ரல் 23 ம் திகதி நான் கோவை நகருக்கு ஒரு சொந்த நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். போன மாதமே இதுகுறித்து நான் தம்பி பகவதியிடம் ஆலோசித்தேன். நான் இரண்டு நாட்கள் கோவையில் தங்குவதால், அச்சமயத்தில் நமது ரபீக் தம்பியை போய் பார்த்துவருவது என்று முடிவுசெய்தோம். பகவதியும், ரபீக் அவர்கள் மைசூரில் இருந்து மீண்டும் கோவையில் இரண்டாம் முறை ஹெமோதெரபிக்காக வந்திருப்பார், ஆகவே அப்போது பார்க்க இயலும் என்று கூறினார்.
ஆயினும் நடந்ததோ வேறு....இப்போது அன்னார் நம்மிடையே இல்லை எனினும் முன்பே குறித்தபடி நான் கோவை சென்றேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து நான் செல்கிறேன். எனது கால் முறிவு சரியாகிவிட்டது, இனிமேல் நான் சிற்றுந்துவை ஓட்டலாம் என்று எனது மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். எனவே பெங்களூர்ல் இருந்து எனது வேகனார் வண்டியிலேயே சென்றோம். கர்நாடகத்தை கடப்பதற்க்கு முன்பே தம்பி இராமனை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆயினும் தொடர்புகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட சேலம் தாண்டி சங்ககிரியை அடையும் பொழுது இராமனிடம் அலைபேசித்தொடர்பு கிடைத்தது. அவரிடம் விபரம் சொன்னேன். இப்போது விடுமுறை ஆதலால் அவர் அவரின் சொந்த ஊரில் இருப்பதாகத் தெரிவித்தார். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அவனாசி நகரத்தை கடந்து செல்வேன், வந்து என்னை சந்திக்க முடியுமா என்று இராமனிடம் கேட்டேன். அவனாசியில் இருந்து அவர் ஊர் வெறும் ஏழு கல் தொலைவுதான் என்பதால் அவ்வாறு கேட்டேன். ஆயினும் அவரோ.....இல்லை ஐயா....நான் உங்களை கோவையிலேயே வந்து சந்திக்கிறேன் என்று கூறினார். அதன்படி, கோவையில் நான் எப்போதும் தங்கும் “ கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதியில்” சந்திப்பது என்று முடிவு செய்தோம்.
இடையில் பகவதியோ, “அய்யா எங்குள்ளீர்கள்? எப்போது கோவை வந்து சேருவீர்கள்” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். மாலை ஆறு மணியளவில் கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதிக்கு வந்துவிடுங்கள் என்றேன். நாங்கள் கோவையை ஐந்து மணியளவில் வந்தடைந்து விடுதியில் தங்கினோம். தம்பி இராமன் தனது மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு கோவை வந்தடைந்து தம்பி பகவதியையும் சேர்த்து கூட்டிக்கொண்டு ஏழரை மணியளவில் நான் தங்கியுள்ள விடுதிக்கு வந்து சேர்ந்தார். இடையில் மேகமூட்டத்துடன், சுழல்காற்றும் சாரலும் சேர்ந்து கொண்டதால் வீரகேரளம் என்ற கிராமத்தில் இருந்த ஆராய்ச்சி நிலைய விடுதியை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்ததாம்.
எப்படியோ, ஈகரை உறவுகள் மூன்றுபேர் கோவையில் சந்தித்தோம். தம்பி எம்.ஆர். கார்த்திக், தேர்வின் காரணமாக வர இயலவில்லை. எங்களுடன் என் மனைவியும் சேர்ந்துகொண்டார். மூன்று நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று சொல்வதைவிட, நீண்ட நாட்கள் கழித்து ஒரு தந்தையும் இரண்டு மகன்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது எங்கள் சந்திப்பு. (பகவதியும், இராமனும் என்ன நினைத்தார்களோ என்பதை அவர்களே இந்தத் திரியில் பின்னுட்டமாக தெரிவிப்பார்கள்)
சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு இரவு உணவு உண்டோம். இந்த விடுதியில் உணட்வைப் பொறுத்தவரை வீட்டுச் சாப்பாடு போல்தான் தயாரிப்பார்கள். அதன் தரம் குறித்து நம்ம பகவதியும் இராமனும் தெரிவிப்பார்கள். உணவு முடிந்தவுடன் எனது அறைக்கு வந்தமர்ந்து பேச ஆரம்பித்தோம். முதலில் இரபீக் அவர்களின் மறைவு, அடிக்கடி பகவதி சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி உதவி செய்ததைக்குறித்து நான் பேசினேன்.
பின்பு எங்களின் கவனம் நமது ஈகரை உறவுகள் பக்கம் திரும்பியது. தினமும் ஈகரியில் வந்துபோகிற அனைவரைக் குறித்தும் பேசினோம். என்னென்ன பேசினோம் என்ற விபரம் எல்லாம் விரிவாகச் சொல்ல முடியாது இந்தத் திரியில். ஆயினும் கிழ்கண்ட புகைப்படத்தை நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் அப்போது நம்ம “கொலவெறியைக்” குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
எல்லோரையும் குறித்து பேசிமுடித்த பின்பு எங்களின் கவனம் கவிதைகளின் பக்கம் திரும்பியது. கிட்டத்தட்ட, இரண்டுமாதமாகவே வேலைப்பளுவின் காரணமாக நான் கவிதைகள் எதையும் எழுதவில்லை என்பதையும், அந்த நிலையை மாற்றவேண்டும் என்றும் பேசினோம். நின்றுபோய் இருக்கும் “பொழுதைக் கழிக்க ஓர் வழி” என்ற திரியை மீண்டும் துவக்கிட முடிவு செய்தோம். கிட்டத்தட்ட அதே நிலைமைதான் நம்ம இராமனுக்கும். தேர்வுகள், புராஜெக்ட் வேலைகள் காரணமாக அவரின் கவிதை பதிவுகளும் ஈகரையில் குறைந்து விட்டது. இந்த சந்திப்பில் மிக மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், நம்ம பகவதி என்னிடம் “ ஐயா, உங்களிடம் நான் வெண்பா கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கும் சொல்லித்தாருங்கள்” என்றதுதான். நிச்சயமாக, உடனே பாடத்தை ஆரம்பித்துவிடலாம் என்று அவரிடம் மகிழ்வுடன் சொன்னேன்.
இரவு பத்தரை மணி ஆகிவிட்டது. மின்சாரம் நின்றுபோய் ஒரே இருட்டாக இருந்தது. தம்பிகள் இருவரும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். கோவை நகரிலேயே உள்ள அவர்களின் நண்பர்களுடன் தங்கியிருந்து பின் காலையில் எழுந்து அவர்களின் இருப்பிடம் செல்வதாக சொன்னார்கள்.
இவ்வாறாக எங்களின் கோவை சந்திப்பு நிறைவடைந்தது, மிக மிக மன மகிழ்ச்சியுடன்.
தம்பிகள் பகவதியும், இராமனும் அவரவர் கருத்துக்களை, எண்ணங்களை இதே திரியில் பின்னுட்டமாக எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
ஆயினும் நடந்ததோ வேறு....இப்போது அன்னார் நம்மிடையே இல்லை எனினும் முன்பே குறித்தபடி நான் கோவை சென்றேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து நான் செல்கிறேன். எனது கால் முறிவு சரியாகிவிட்டது, இனிமேல் நான் சிற்றுந்துவை ஓட்டலாம் என்று எனது மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். எனவே பெங்களூர்ல் இருந்து எனது வேகனார் வண்டியிலேயே சென்றோம். கர்நாடகத்தை கடப்பதற்க்கு முன்பே தம்பி இராமனை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆயினும் தொடர்புகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட சேலம் தாண்டி சங்ககிரியை அடையும் பொழுது இராமனிடம் அலைபேசித்தொடர்பு கிடைத்தது. அவரிடம் விபரம் சொன்னேன். இப்போது விடுமுறை ஆதலால் அவர் அவரின் சொந்த ஊரில் இருப்பதாகத் தெரிவித்தார். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அவனாசி நகரத்தை கடந்து செல்வேன், வந்து என்னை சந்திக்க முடியுமா என்று இராமனிடம் கேட்டேன். அவனாசியில் இருந்து அவர் ஊர் வெறும் ஏழு கல் தொலைவுதான் என்பதால் அவ்வாறு கேட்டேன். ஆயினும் அவரோ.....இல்லை ஐயா....நான் உங்களை கோவையிலேயே வந்து சந்திக்கிறேன் என்று கூறினார். அதன்படி, கோவையில் நான் எப்போதும் தங்கும் “ கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதியில்” சந்திப்பது என்று முடிவு செய்தோம்.
இடையில் பகவதியோ, “அய்யா எங்குள்ளீர்கள்? எப்போது கோவை வந்து சேருவீர்கள்” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். மாலை ஆறு மணியளவில் கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதிக்கு வந்துவிடுங்கள் என்றேன். நாங்கள் கோவையை ஐந்து மணியளவில் வந்தடைந்து விடுதியில் தங்கினோம். தம்பி இராமன் தனது மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு கோவை வந்தடைந்து தம்பி பகவதியையும் சேர்த்து கூட்டிக்கொண்டு ஏழரை மணியளவில் நான் தங்கியுள்ள விடுதிக்கு வந்து சேர்ந்தார். இடையில் மேகமூட்டத்துடன், சுழல்காற்றும் சாரலும் சேர்ந்து கொண்டதால் வீரகேரளம் என்ற கிராமத்தில் இருந்த ஆராய்ச்சி நிலைய விடுதியை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்ததாம்.
எப்படியோ, ஈகரை உறவுகள் மூன்றுபேர் கோவையில் சந்தித்தோம். தம்பி எம்.ஆர். கார்த்திக், தேர்வின் காரணமாக வர இயலவில்லை. எங்களுடன் என் மனைவியும் சேர்ந்துகொண்டார். மூன்று நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று சொல்வதைவிட, நீண்ட நாட்கள் கழித்து ஒரு தந்தையும் இரண்டு மகன்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது எங்கள் சந்திப்பு. (பகவதியும், இராமனும் என்ன நினைத்தார்களோ என்பதை அவர்களே இந்தத் திரியில் பின்னுட்டமாக தெரிவிப்பார்கள்)
சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு இரவு உணவு உண்டோம். இந்த விடுதியில் உணட்வைப் பொறுத்தவரை வீட்டுச் சாப்பாடு போல்தான் தயாரிப்பார்கள். அதன் தரம் குறித்து நம்ம பகவதியும் இராமனும் தெரிவிப்பார்கள். உணவு முடிந்தவுடன் எனது அறைக்கு வந்தமர்ந்து பேச ஆரம்பித்தோம். முதலில் இரபீக் அவர்களின் மறைவு, அடிக்கடி பகவதி சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி உதவி செய்ததைக்குறித்து நான் பேசினேன்.
பின்பு எங்களின் கவனம் நமது ஈகரை உறவுகள் பக்கம் திரும்பியது. தினமும் ஈகரியில் வந்துபோகிற அனைவரைக் குறித்தும் பேசினோம். என்னென்ன பேசினோம் என்ற விபரம் எல்லாம் விரிவாகச் சொல்ல முடியாது இந்தத் திரியில். ஆயினும் கிழ்கண்ட புகைப்படத்தை நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் அப்போது நம்ம “கொலவெறியைக்” குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
எல்லோரையும் குறித்து பேசிமுடித்த பின்பு எங்களின் கவனம் கவிதைகளின் பக்கம் திரும்பியது. கிட்டத்தட்ட, இரண்டுமாதமாகவே வேலைப்பளுவின் காரணமாக நான் கவிதைகள் எதையும் எழுதவில்லை என்பதையும், அந்த நிலையை மாற்றவேண்டும் என்றும் பேசினோம். நின்றுபோய் இருக்கும் “பொழுதைக் கழிக்க ஓர் வழி” என்ற திரியை மீண்டும் துவக்கிட முடிவு செய்தோம். கிட்டத்தட்ட அதே நிலைமைதான் நம்ம இராமனுக்கும். தேர்வுகள், புராஜெக்ட் வேலைகள் காரணமாக அவரின் கவிதை பதிவுகளும் ஈகரையில் குறைந்து விட்டது. இந்த சந்திப்பில் மிக மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், நம்ம பகவதி என்னிடம் “ ஐயா, உங்களிடம் நான் வெண்பா கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கும் சொல்லித்தாருங்கள்” என்றதுதான். நிச்சயமாக, உடனே பாடத்தை ஆரம்பித்துவிடலாம் என்று அவரிடம் மகிழ்வுடன் சொன்னேன்.
இரவு பத்தரை மணி ஆகிவிட்டது. மின்சாரம் நின்றுபோய் ஒரே இருட்டாக இருந்தது. தம்பிகள் இருவரும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். கோவை நகரிலேயே உள்ள அவர்களின் நண்பர்களுடன் தங்கியிருந்து பின் காலையில் எழுந்து அவர்களின் இருப்பிடம் செல்வதாக சொன்னார்கள்.
இவ்வாறாக எங்களின் கோவை சந்திப்பு நிறைவடைந்தது, மிக மிக மன மகிழ்ச்சியுடன்.
தம்பிகள் பகவதியும், இராமனும் அவரவர் கருத்துக்களை, எண்ணங்களை இதே திரியில் பின்னுட்டமாக எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
//இடையில் பகவதியோ, “அய்யா எங்குள்ளீர்கள்? எப்போது கோவை வந்து சேருவீர்கள்” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.//
குச்சிமிட்டாய் வாங்கி வரேன்னு சொன்னீங்களோ?
//மேகமூட்டத்துடன், சுழல்காற்றும் சாரலும் சேர்ந்து கொண்டதால் வீரகேரளம் என்ற கிராமத்தில் இருந்த ஆராய்ச்சி நிலைய விடுதியை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்ததாம்.//
இரண்டு பேருக்கும் பகலிலேயே பசுமாடு தெரியாது......!!!
///மூன்று நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று சொல்வதைவிட, நீண்ட நாட்கள் கழித்து ஒரு தந்தையும் இரண்டு மகன்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது எங்கள் சந்திப்பு.///
நினைக்கும் பொழுதே மனதில் மகிழ்ச்சி ஆனந்தத் தாண்டவமாடது துவங்கிவிட்டது.
///பகவதியும், இராமனும் என்ன நினைத்தார்களோ என்பதை அவர்களே இந்தத் திரியில் பின்னுட்டமாக தெரிவிப்பார்கள்///
ஆம, உண்மைய மட்டும்தான் சொல்லனும்!
///கிழ்கண்ட புகைப்படத்தை நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் அப்போது நம்ம “கொலவெறியைக்” குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். ///
எப்படி பாஸ், பிளான் சக்சஸ்தானே! இன்னும் எத்தனை நாள்ல முடிச்சிடுவீங்க..!
///ஐயா, உங்களிடம் நான் வெண்பா கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்///
பாவம் அண்ணா நீங்கள், உள்ளதையும் மறந்துவிடப் போகிறீர்கள். எனவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.
///கோவை நகரிலேயே உள்ள அவர்களின் நண்பர்களுடன் தங்கியிருந்து பின் காலையில் எழுந்து அவர்களின் இருப்பிடம் செல்வதாக சொன்னார்கள்.///
உங்களுக்குத் தெரியாதா அண்ணா, அதான்.... அந்த உக்கடம் பஸ் ஸ்டாப்பில படுத்திருப்பாங்களே...!!!
மூவரும் சந்தித்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இதுபோன்ற உறவுகளின் சந்திப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும். நம் உறவுகள் பலப்பட்டுக் கொண்டே இருக்கட்டும்.
குச்சிமிட்டாய் வாங்கி வரேன்னு சொன்னீங்களோ?
//மேகமூட்டத்துடன், சுழல்காற்றும் சாரலும் சேர்ந்து கொண்டதால் வீரகேரளம் என்ற கிராமத்தில் இருந்த ஆராய்ச்சி நிலைய விடுதியை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்ததாம்.//
இரண்டு பேருக்கும் பகலிலேயே பசுமாடு தெரியாது......!!!
///மூன்று நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று சொல்வதைவிட, நீண்ட நாட்கள் கழித்து ஒரு தந்தையும் இரண்டு மகன்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது எங்கள் சந்திப்பு.///
நினைக்கும் பொழுதே மனதில் மகிழ்ச்சி ஆனந்தத் தாண்டவமாடது துவங்கிவிட்டது.
///பகவதியும், இராமனும் என்ன நினைத்தார்களோ என்பதை அவர்களே இந்தத் திரியில் பின்னுட்டமாக தெரிவிப்பார்கள்///
ஆம, உண்மைய மட்டும்தான் சொல்லனும்!
///கிழ்கண்ட புகைப்படத்தை நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் அப்போது நம்ம “கொலவெறியைக்” குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். ///
எப்படி பாஸ், பிளான் சக்சஸ்தானே! இன்னும் எத்தனை நாள்ல முடிச்சிடுவீங்க..!
///ஐயா, உங்களிடம் நான் வெண்பா கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்///
பாவம் அண்ணா நீங்கள், உள்ளதையும் மறந்துவிடப் போகிறீர்கள். எனவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.
///கோவை நகரிலேயே உள்ள அவர்களின் நண்பர்களுடன் தங்கியிருந்து பின் காலையில் எழுந்து அவர்களின் இருப்பிடம் செல்வதாக சொன்னார்கள்.///
உங்களுக்குத் தெரியாதா அண்ணா, அதான்.... அந்த உக்கடம் பஸ் ஸ்டாப்பில படுத்திருப்பாங்களே...!!!
மூவரும் சந்தித்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இதுபோன்ற உறவுகளின் சந்திப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும். நம் உறவுகள் பலப்பட்டுக் கொண்டே இருக்கட்டும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பதிந்து விட்டீர்களா ஐயா, மிக்க மகிழ்ச்சி ஐயா.. நான் கடந்த இரண்டு நாட்கள் தர்மபுரி மற்றும் ஹோகேனக்கல் நண்பர்களுடன் சென்றிருந்தேன், தாங்கள் இந்த பதிவை இரண்டு நாட்களில் பதிவதாக கூறியிருந்தீர்கள், நான் கைபேசியில் ஈகரையை திறந்து பார்த்தேன் பதிவு என் கண்ணுக்கு புலப் படவில்லை, உடனே பகவதிக்கு தொடர்பு கொண்டு ஐயா எந்த பகுதியில் பதிவு ஈட்டிருக்கிறார் என்று கேட்கலாம் என்று நினைத்து, தொடர்பு கொண்டேன், ஐயா இன்று இரவு பதிவதாக கூறியுள்ளார் என்று பகவதி கூறினார், பின் நாங்கள் இருவரும் சற்று உரையாடிவிட்டு இணைப்பை துண்டித்தோம்.
நீண்ட நாட்கள் கழித்து ஒரு தந்தையும் இரண்டு மகன்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது எங்கள் சந்திப்பு.
ஐயா, நாம் பேசிக்கொண்டிருந்த பொழுது எனக்குள் எழுந்த எண்ணத்தை அப்படியே கூறிவிட்டீர்கள், நாம் சாப்பிட டைனிங் டேபிள் இல் அமர்ந்திருந்த பொழுது நான் தங்களை அப்பா என்று அழைக்கலாமா என்று யோசித்தேன், இருந்தாலும் ஐயா என்றே அழைத்து பழகிவிட்டதால், அப்படியே தொடர்வோம் என்று ஐயா என்றே அழைத்து பேசினேன். தங்களை அப்பா என்று அழைக்கலாமே என்று சில முறையும் அப்பா என்று அழைக்காமல் விட்டு விட்டோமே என்று பைக் இல் திரும்பி செல்லும் பொது சில முறையும் எண்ணி பார்த்தேன். இனி அப்பா என்றே அழைக்க ஆசைப்படுகிறேன் அப்பா.
இனி நம் சந்திப்பை பற்றி கூறுகிறேன்
அப்பா என்னை தொலைபேசியில் ஒரு முறை அழைத்திருந்தார், நான் அப்பொழுது வெளியே இருந்ததால், எடுக்க முடியவில்லை, வந்து என் கைபேசியில் அப்பாவின் அழைப்பை கண்டதும் அச்சச்சோ என்று உடனே அப்பாவிற்கு தொடர்பு கொண்டு பேசியதும், அவர் கோவை வருவதாகவும் நாம் சந்திக்கலாமா என்றும் கூறினார், எனக்கு மிக்க மகிழ்ச்சியாகி விட்டது, உடனே சம்மதம் தெரிவித்து, பகவதியையும் தொடர்பு கொண்டு எங்கள் திட்டத்தை வகுத்துக் கொண்டோம். (எதையும் பிளான் பண்ணி பண்ணனும்) சில தவிர்க்க முடியாத சூல்நிலைகளால் அந்த பிளான் ஐ சரியாக நிறைவேற்ற இயலவில்லை.
நானும் பகவதியும் குறித்த இடத்திற்கு செல்ல கால தாமதம் ஆனது, நாங்கள் கரும்பு ஆராய்சியாளர்கள் தங்கும் விடுதிக்கு உள்ளே, செக்யூரிட்டி இன் அனுமதியோடு சென்று பார்த்தால், அப்பா எங்களுக்காக, தன்னுடைய குறுகியகால துணைவனான (அப்பாவின் ஊன்றுகோலை பற்றியும் நாங்கள் பேசினோம் ) தன் ஊன்றுகோலுடன் எங்கள் வருகைக்காக காத்திருந்து, நாங்கள் சென்றதும் வரவேற்றது எங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அங்கிருந்து விடுதியின் முகப்பிற்கு சென்றோம், அங்கு அம்மா நின்று எங்கள் இருவரையும் புன்சிரிப்புடனும் அன்புடனும் வரவேற்றார்கள்.
பின், விடுதிக்குள் நுழைந்து அப்பாவின் அறைக்கு சென்று, சிறந்த உரையாடலுக்கு முன் ஒத்திகை எடுப்பது போல சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம், உடனே அப்பா, உண்டு விட்டு வந்து ஆர அமர உரையாடலாம் என்று கூறினார், நாங்களும் அதை ஆமோத்திது உண்பதற்கு சென்றோம். அங்கே பற்பல வகையராக்கள், சிலபல தட்டுகளில் எடுத்து வைக்கப் பட்டிருந்தது, நானும் பகவதியும் அதை ஓரக்கண்ணில் பார்த்து விட்டு, டைனிங் டேபிள் இருக்கையில் அமர்ந்தோம். சப்பாத்தி, அன்னம், பருப்பு, ரசம், சப்பாத்தி குருமா, சாம்பார், தயிர், கேரட் பொரியல் என பல ஐட்டங்கள். அப்பா எங்களுக்காக நறுக் முறுக் எலும்பு வகை செயலாம் என்று எதிர்பார்திருக்க அது நிகழாமல் போகவே, எங்களுக்காக உணவு தயாரிப்பவர்களிடம் ஆம்ப்ளேட் செய்ய பணித்திருந்தார் அதேபோல் எங்களுக்கு வெங்காயமும் மிளகாயும் தூக்கலாய் ஆம்ப்ளேட் பரிமாறப் பட்டது. நானும் பகவதியும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சப்பாத்தியையும் அன்னத்தையும் பொரியலையும் விழுங்கினோம். ஒவ்வொரு உணவும் மிகவும் அருமையான சுவையுடன் இருந்தது. திரிஸ் மோர் ஃபோர்ஸ் மோர் என கேட்க தோன்றுகிறது.
நாங்கள் சரியாக உண்டு எழுந்து கை களுவ செல்லும் நேரத்தில், ஒரு சிங் கூட்டம், உணவை வேட்டையாட உள்ளே நுழைந்தார்கள், அப்பொழுது அப்பா நல்ல வேலை நாம் முதலிலேயே உண்டுவிட்டோம் இல்லையென்றால் என்ன ஆவது என்று நகைச்சுவையாக கூறியது எங்களுக்கு மெல்லிய சிரிப்பை உண்டாக்கியது. (கனத்த சிரிப்பு தான் வந்தது நாங்கள் இடம் பொருள் ஏவல் தெரிந்து அடக்கிக் கொண்டோம்). பின், உரையாடல் அப்பாவின் அறையில் துவங்கியது. மிகவும் அருமையான உரையாடல்கள்.
இங்கு நான் கூற விரும்பும் இன்னொரு விஷயம், நாங்கள் பேச பேச எங்களை அருமையாக புகைப்படம் எடுத்தது அம்மா தான். அம்மாவும் எங்களுடன் அம்மாவிற்கே உரித்தான அன்போடு பேசி உபசரித்தார்கள். நேரம் 9 ஐ தாண்டி இருந்தபொழுது அம்மா எங்களிடம் வந்து, நான் உறங்க செல்கிறேன், பத்திரமாக வீட்டிற்கு செல்லுங்கள் என்று கூறி விடைபெற்று உறங்கச் சென்றார். அம்மா எப்பொழுதும் விரைவில் தூங சென்று காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து விடும் பழக்கம் உடையவர்கள். இதை வைத்தும் எங்களின் உரையாடல் தொடர்ந்தது.
இந்த உரையாடலில் இருந்து நான் ஒரு மிகப் பெரிய விஷயத்தை தெரிந்து கொண்டேன், அது என்னவென்றால், எழில்மலர் அக்கா தன் தேர்விற்காக காலை நேரத்திலேயே எழுந்து படிக்கும்பொழுது ஐயாவும் அம்மாவும் எழில் அக்காவுடனேயே எழுந்து தாங்களும் ஏதாவது படிப்பதோ அல்லது தங்கள் வேலைகள் எதையாவதயோ பார்பார்க்கலாம், இது மிகவும் அருமையான செயல், குழந்தை படிக்கும் பொழுது வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தாள், குழந்தைக்கும் தூக்கம் வரவே வாய்ப்பு உள்ளது. ஆக, நாமும் அவர்களுடன் எழுந்து அந்த நேரத்தில் ஏதாவது பணியை செய்தோம் என்றால், இதுவே அவர்களுக்கு படிக்க மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும். பிற்காலத்தில் நானும் இதை பின்பற்ற வேண்டும் என்று அப்பொழுதே நான் முடிவெடுத்து விட்டேன்.
மொத்தத்தில், எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அப்பா, தங்களுடன் அந்த மாலைப் பொழுதை கழித்தது. மீண்டும் இதுபோன்றதொரு வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளேன்.
இன்னும் நிறைய கூறலாம், இன்னும் பகவதி வந்து தான் அனுபவத்தை கூற வேண்டும் என்பதற்காக என் அனுபவத்தை இத்துடன் முடிக்கிறேன்.
இனி நம் சந்திப்பை பற்றி கூறுகிறேன்
அப்பா என்னை தொலைபேசியில் ஒரு முறை அழைத்திருந்தார், நான் அப்பொழுது வெளியே இருந்ததால், எடுக்க முடியவில்லை, வந்து என் கைபேசியில் அப்பாவின் அழைப்பை கண்டதும் அச்சச்சோ என்று உடனே அப்பாவிற்கு தொடர்பு கொண்டு பேசியதும், அவர் கோவை வருவதாகவும் நாம் சந்திக்கலாமா என்றும் கூறினார், எனக்கு மிக்க மகிழ்ச்சியாகி விட்டது, உடனே சம்மதம் தெரிவித்து, பகவதியையும் தொடர்பு கொண்டு எங்கள் திட்டத்தை வகுத்துக் கொண்டோம். (எதையும் பிளான் பண்ணி பண்ணனும்) சில தவிர்க்க முடியாத சூல்நிலைகளால் அந்த பிளான் ஐ சரியாக நிறைவேற்ற இயலவில்லை.
நானும் பகவதியும் குறித்த இடத்திற்கு செல்ல கால தாமதம் ஆனது, நாங்கள் கரும்பு ஆராய்சியாளர்கள் தங்கும் விடுதிக்கு உள்ளே, செக்யூரிட்டி இன் அனுமதியோடு சென்று பார்த்தால், அப்பா எங்களுக்காக, தன்னுடைய குறுகியகால துணைவனான (அப்பாவின் ஊன்றுகோலை பற்றியும் நாங்கள் பேசினோம் ) தன் ஊன்றுகோலுடன் எங்கள் வருகைக்காக காத்திருந்து, நாங்கள் சென்றதும் வரவேற்றது எங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அங்கிருந்து விடுதியின் முகப்பிற்கு சென்றோம், அங்கு அம்மா நின்று எங்கள் இருவரையும் புன்சிரிப்புடனும் அன்புடனும் வரவேற்றார்கள்.
பின், விடுதிக்குள் நுழைந்து அப்பாவின் அறைக்கு சென்று, சிறந்த உரையாடலுக்கு முன் ஒத்திகை எடுப்பது போல சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம், உடனே அப்பா, உண்டு விட்டு வந்து ஆர அமர உரையாடலாம் என்று கூறினார், நாங்களும் அதை ஆமோத்திது உண்பதற்கு சென்றோம். அங்கே பற்பல வகையராக்கள், சிலபல தட்டுகளில் எடுத்து வைக்கப் பட்டிருந்தது, நானும் பகவதியும் அதை ஓரக்கண்ணில் பார்த்து விட்டு, டைனிங் டேபிள் இருக்கையில் அமர்ந்தோம். சப்பாத்தி, அன்னம், பருப்பு, ரசம், சப்பாத்தி குருமா, சாம்பார், தயிர், கேரட் பொரியல் என பல ஐட்டங்கள். அப்பா எங்களுக்காக நறுக் முறுக் எலும்பு வகை செயலாம் என்று எதிர்பார்திருக்க அது நிகழாமல் போகவே, எங்களுக்காக உணவு தயாரிப்பவர்களிடம் ஆம்ப்ளேட் செய்ய பணித்திருந்தார் அதேபோல் எங்களுக்கு வெங்காயமும் மிளகாயும் தூக்கலாய் ஆம்ப்ளேட் பரிமாறப் பட்டது. நானும் பகவதியும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சப்பாத்தியையும் அன்னத்தையும் பொரியலையும் விழுங்கினோம். ஒவ்வொரு உணவும் மிகவும் அருமையான சுவையுடன் இருந்தது. திரிஸ் மோர் ஃபோர்ஸ் மோர் என கேட்க தோன்றுகிறது.
நாங்கள் சரியாக உண்டு எழுந்து கை களுவ செல்லும் நேரத்தில், ஒரு சிங் கூட்டம், உணவை வேட்டையாட உள்ளே நுழைந்தார்கள், அப்பொழுது அப்பா நல்ல வேலை நாம் முதலிலேயே உண்டுவிட்டோம் இல்லையென்றால் என்ன ஆவது என்று நகைச்சுவையாக கூறியது எங்களுக்கு மெல்லிய சிரிப்பை உண்டாக்கியது. (கனத்த சிரிப்பு தான் வந்தது நாங்கள் இடம் பொருள் ஏவல் தெரிந்து அடக்கிக் கொண்டோம்). பின், உரையாடல் அப்பாவின் அறையில் துவங்கியது. மிகவும் அருமையான உரையாடல்கள்.
இங்கு நான் கூற விரும்பும் இன்னொரு விஷயம், நாங்கள் பேச பேச எங்களை அருமையாக புகைப்படம் எடுத்தது அம்மா தான். அம்மாவும் எங்களுடன் அம்மாவிற்கே உரித்தான அன்போடு பேசி உபசரித்தார்கள். நேரம் 9 ஐ தாண்டி இருந்தபொழுது அம்மா எங்களிடம் வந்து, நான் உறங்க செல்கிறேன், பத்திரமாக வீட்டிற்கு செல்லுங்கள் என்று கூறி விடைபெற்று உறங்கச் சென்றார். அம்மா எப்பொழுதும் விரைவில் தூங சென்று காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து விடும் பழக்கம் உடையவர்கள். இதை வைத்தும் எங்களின் உரையாடல் தொடர்ந்தது.
இந்த உரையாடலில் இருந்து நான் ஒரு மிகப் பெரிய விஷயத்தை தெரிந்து கொண்டேன், அது என்னவென்றால், எழில்மலர் அக்கா தன் தேர்விற்காக காலை நேரத்திலேயே எழுந்து படிக்கும்பொழுது ஐயாவும் அம்மாவும் எழில் அக்காவுடனேயே எழுந்து தாங்களும் ஏதாவது படிப்பதோ அல்லது தங்கள் வேலைகள் எதையாவதயோ பார்பார்க்கலாம், இது மிகவும் அருமையான செயல், குழந்தை படிக்கும் பொழுது வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தாள், குழந்தைக்கும் தூக்கம் வரவே வாய்ப்பு உள்ளது. ஆக, நாமும் அவர்களுடன் எழுந்து அந்த நேரத்தில் ஏதாவது பணியை செய்தோம் என்றால், இதுவே அவர்களுக்கு படிக்க மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும். பிற்காலத்தில் நானும் இதை பின்பற்ற வேண்டும் என்று அப்பொழுதே நான் முடிவெடுத்து விட்டேன்.
மொத்தத்தில், எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அப்பா, தங்களுடன் அந்த மாலைப் பொழுதை கழித்தது. மீண்டும் இதுபோன்றதொரு வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளேன்.
இன்னும் நிறைய கூறலாம், இன்னும் பகவதி வந்து தான் அனுபவத்தை கூற வேண்டும் என்பதற்காக என் அனுபவத்தை இத்துடன் முடிக்கிறேன்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இரண்டு பேருக்கும் பகலிலேயே பசுமாடு தெரியாது......!!!
உங்களுக்கு மட்டும் அப்டியே தெரிஞ்சிட்டாலும், வாரத்துக்கு எழு நாள் கண் டாக்டர் அ போயி பார்க்கிறவருக்கு குசும்ப பாரு......
ஆம, உண்மைய மட்டும்தான் சொல்லனும்!
எப்டி அண்ணா, உங்க கூட சேர்ந்ததுக்கு அப்றம் எங்க கிட்ட இருந்து மட்டும் எப்டி இப்டி எதிர்பார்க்கிறீங்க...குரு எவ்வழியோ சீடர்களும் அவ்வழி தான......உண்மையா சொல்லனுமாம் உனமைய, நாங்க பாட்டுக்கு உண்மையா சொல்ல போயி அதுல யாராவது நாலு பேரு கோவப்பட்டு எங்கள போட்டு தள்ள பிளான் போட்டா நீங்களா வந்து காப்பாத்துவீங்க......
உங்களுக்குத் தெரியாதா அண்ணா, அதான்.... அந்த உக்கடம் பஸ் ஸ்டாப்பில படுத்திருப்பாங்களே...!!!
ச்சே ச்சே, குருக்கு இணையா நாங்க படுக்குறது இல்லை, அதுனால ஏதாவது ஏசி ஹோட்டல் ல ரூம் போட்டு தான் படுக்குறது அண்ணா......
மூவரும் சந்தித்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இதுபோன்ற உறவுகளின் சந்திப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும். நம் உறவுகள் பலப்பட்டுக் கொண்டே இருக்கட்டும்.
ஃபுல் ஆ கலாய்சிட்டு, கடைசில இப்டி சொன்னா நாங்க விற்றுவோம் நு நினைப்பா அண்ணா...
மிக்க மகிழ்ச்சி அண்ணா, அருமையான பின்னூட்டம்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி சிவா விரும்பினேன் உங்களின் கலாய்ப்பைசிவா wrote:
[b]மூவரும் சந்தித்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இதுபோன்ற உறவுகளின் சந்திப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும். நம் உறவுகள் பலப்பட்டுக் கொண்டே இருக்கட்டும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமையான பதிவு அய்யா. நாங்களும் உங்களுடன் இருந்த உணர்வைத் தந்தது.
ராமனை முதலில் தொடர்பு கொள்ள முடியாததற்கு காரணம் அவர் கடலை சாகுபடியில் இருந்ததால் தான்.
பகவதியும் சரியான நேரத்தில் வராததற்கும் அதே காரணம் தான். இள ரத்தங்கள் நம் நாட்டை விவசாய நாடென அறிந்து அல்லும் பகலும் அயராது கடலை சாகுபடி செய்கிறார்கள்.
என்னைப் பற்றியும் பேசினேன் என்று சொன்னது மகிழ்வைத் தந்தது. சிவா சொல்ற மாதிரி என்னை போட்டுத் தள்ள பேசி இருந்தாலும் உங்கள் நாவிலும், எண்ணங்களிலும் நான் மின்னி மறைந்தது சந்தோஷமே.
ராமன் சொன்னாரே அம்மா இரவு 9 மணிக்கு உறங்க சென்று விடுவார்கள் என்று - நீங்கள் வெண்பா இயற்றும் சமயம் தானே அது? உங்களோடும் வெண்பாவோடும் மாரடிக்க முடியாது என்று உறங்க சென்று விடுவார்களோ?
படிக்கும் காலத்தில் சரியாக படிக்காமல் போனதால் தங்கள் மகளுடன் சேர்ந்து படிப்பது மிக நல்ல விஷயம் அய்யா.
என்ன ராமன் அய்யாவ ரொம்ப பயமுறுத்தி விடவில்லையே? அடுத்தமுறை நம் உறவுகளை சந்திக்கும் தைரியம் அய்யாவுக்கு இருக்கும்ல?
ராமனை முதலில் தொடர்பு கொள்ள முடியாததற்கு காரணம் அவர் கடலை சாகுபடியில் இருந்ததால் தான்.
பகவதியும் சரியான நேரத்தில் வராததற்கும் அதே காரணம் தான். இள ரத்தங்கள் நம் நாட்டை விவசாய நாடென அறிந்து அல்லும் பகலும் அயராது கடலை சாகுபடி செய்கிறார்கள்.
என்னைப் பற்றியும் பேசினேன் என்று சொன்னது மகிழ்வைத் தந்தது. சிவா சொல்ற மாதிரி என்னை போட்டுத் தள்ள பேசி இருந்தாலும் உங்கள் நாவிலும், எண்ணங்களிலும் நான் மின்னி மறைந்தது சந்தோஷமே.
ராமன் சொன்னாரே அம்மா இரவு 9 மணிக்கு உறங்க சென்று விடுவார்கள் என்று - நீங்கள் வெண்பா இயற்றும் சமயம் தானே அது? உங்களோடும் வெண்பாவோடும் மாரடிக்க முடியாது என்று உறங்க சென்று விடுவார்களோ?
படிக்கும் காலத்தில் சரியாக படிக்காமல் போனதால் தங்கள் மகளுடன் சேர்ந்து படிப்பது மிக நல்ல விஷயம் அய்யா.
என்ன ராமன் அய்யாவ ரொம்ப பயமுறுத்தி விடவில்லையே? அடுத்தமுறை நம் உறவுகளை சந்திக்கும் தைரியம் அய்யாவுக்கு இருக்கும்ல?
அருமையான பதிவு . நாங்களும் உங்களுடன் கலந்து கொண்ட உணர்வைத் தந்தது.
கொலைவெறி மற்றும் சிவாவின் பின்னூட்டம்
கொலைவெறி மற்றும் சிவாவின் பின்னூட்டம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ராமனை முதலில் தொடர்பு கொள்ள முடியாததற்கு காரணம் அவர் கடலை சாகுபடியில் இருந்ததால் தான்.
இளைஞர்கள் விவசாயத்தை மறந்து விட கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தான் நானும் பகவதியும் இப்படி கடலை சாகுபடியில் குதித்துள்ளோம்
என்ன ராமன் அய்யாவ ரொம்ப பயமுறுத்தி விடவில்லையே? அடுத்தமுறை நம் உறவுகளை சந்திக்கும் தைரியம் அய்யாவுக்கு இருக்கும்ல?
இல்லை இல்லை அப்படியெல்லாம் எதுவும் செய்ய வில்லை அண்ணா, தாங்களாக இருந்தால் தான் கொலைவெறியுடன் சில காரியங்களை செய்வோம்.....நீங்க சிக்காமயா போயிருவீங்க......அப்பா வச்சிக்கிறோம்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 12
|
|