புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:21 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 2:08 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:21 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 2:08 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை!
Page 1 of 1 •
![தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Head5](https://2img.net/h/dailythanthi.com/magazines/IMAGES/GIF/Sm/Head5.jpg)
"என்ன மார்க் வாங்கியிருக்கிறாய்? அந்த பையனையும், பெண்ணையும் பார்'' என்று சதா நச்சரிக்கும் பெற்றோர். "உனக்கு ஒண்ணும் தெரியாது. உட்கார் மக்குப்பயலே'' என்று அவமானப்படுத்தும் ஆசிரியர். பணியில் அமர்த்த அந்த நுழைவுத் தேர்வு, இந்த டெஸ்ட், அரியர்ஸ் இல்லா ரெகார்டு என கிடுக்குப்பிடி பிடிக்கும் அரசும், தனியார் கம்பெனிகளும். இதையெல்லாம் கண்டு நடுங்கும் பிஞ்சு உள்ளம், "நான் இருக்கவேண்டிய உலகம் இதுவல்ல போலும்'' என்று வேறு உலகத்துக்குப் பயணிக்க முடிவெடுத்துவிடுகிறது.
"அரியதாய்க் கிடைத்த இந்த மானிடப்பிறப்பில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இதுதான் மிக, மிக அவசியம்; வேறு எதுவும் தலைபோகிற அளவுக்கு இருந்துதான் தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை'' என்ற ஞானமெல்லாம் பறந்துபோய்விட்டது. எப்படியாவது படித்துத்தான் தீர வேண்டும். எப்படியாவது மார்க் எடுத்துத் தான் ஆக வேண்டும். எப்படியாவது அந்த உத்தியோகத்தை பெற்றுத் தான் ஆகவேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு குழந்தை களை கொடுமைப்படுத்தும் நம்மைத்தவிர வேரு யாரும் குற்றவாளிகள் அல்ல.
வீட்டில் கூட்டம்; வகுப்பில் கூட்டம்; தேர்வறையில் கூட்டம்; உற்றார் உறவினர் கூட்டம்; நட்புக் கூட்டம். இவ்வளவு கூட்டம் தன்னைச் சுற்றியிருந்தும் `இதில் ஏதாவது ஒரு ஜீவனுக்காகவாவது நான் வாழ்ந்து தான் ஆக வேண்டும்` என்று தற்கொலை செய்து கொள்ளும் மாணவர் தன்முடிவை மாற்றிக் கொள்ளும் அளவுக்கு ஒருவரும் இல்லை என்பதுதான் வேதனையின் உச்சக்கட்டம்.
உடலை செம்மைப்படுத்தும் இடம் வீடு என்றால் உள்ளத்தை செம்மைப்படுத்தும் இடம் கல்விக் கூடங்கள்தான். இந்த மிக முக்கிய பொறுப்பிலிருந்து பள்ளி, கல்லூரிகளும், ஆசிரியர்களும் தப்பிக்க முடி யாது. மேலும், ஒரு சில நிகழ்வுகளைத் தவிர இன்றும் ஆசிரியர்களை தெய்வங்களாகவும், ரோல் மாடல்களாகவும்தான் மாணவர்கள் கருது கின்றனர். "சொல்லித்தருவது புத்தகத்தைப் பார்த்து; ஆனால் கற்றுத் தருவது வாழ்க்கையைப் பார்த்து'' என்ற அளவில் ஆசிரியர்களின் போதனை அமைய வேண்டும். அதாவது மார்க்குக்காக பாடங்கள் நடத்தும்போது லெக்சர் அடிக்கலாம்; தவறல்ல. ஆனால் வாழ்க்கைக் காக, நல்லதுகெட்டது தெரிந்துகொள்வதற்காக, பொறுமை, அன்பு, அமைதி கலந்த மனப்பக்குவத்தை மாணவர்கள் எட்ட ஆசிரியர்கள் `பேச' வேண்டும். ஆசிரியர்கள் அநேக மாணவர்களின் முகத்தைக் கூட கண்கொண்டு பார்ப்பதில்லை என்பதே கசப்பான உண்மை.
மார்க் ஓராண்டுக்குத்தான் உதவும். ஆனால் தன்னம்பிக்கை நூறாண்டுக்கு உதவும் என்று சரியாக படிக்காத மாணவர்களையும், ஆங்கிலம் அவ்வளவாக வராத மாணவர்களை உற்சாகப்படுத்தும் அளவுக்கு ஆசிரியர்கள் தங்கள் ஸ்டைலை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரமிது. ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக `கேஸ் ஸ்டடி' செய்து அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து `நிச்சயம் நீ உயர்வாய்' என்று சிலமுறை சொன்னாலே போதுமானது.
அதேபோல் நூற்றுக்கு நூறு மார்க் பெறுபவர்களையும், சரளமாக ஆங்கிலம் பேசும் மாணவர்களையும், லட்ச ரூபாய் சம்பளத்தில் கேம்பஸ் இன்டர்விïவில் வேலைபெறும் மாணவர்களையும் ஆகா ஓகோ என்று சான்றிதழ் தந்து, விளம்பரம் செய்து, விருதுகள் தந்து தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் வாடிக்கையை பள்ளிகளும், கல்லூரி களும், பல்கலைக் கழகங்களும், அரசும் கைவிட வேண்டும். ஏனெனில் அத்தகைய ஒரு சில அபூர்வ சாதனைகளுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து மற்ற பல மாணவர்கள் நம்பிக்கை இழந்து இருக்கும் திறமையைக்கூட தக்கவைத்துக் கொள்ளத் தவறிவிடு கிறார்கள்.
"இதைச் செய்தேன்; அதைச் செய்தேன்; இவ்வளவு பணம் செலவு செய்கிறேன்'' என்று தங்கள் பிள்ளைகளுக்காக தாங்கள் செய்வதை எந்த நேரமும் சொல்லிச் சொல்லி `எனவே நீ அவர் போல, இவர் போல வர வேண்டும்` என்ற மலையளவு எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள பெற்றோர்களைப் பார்த்து மாணவர்கள் பயப்படாமல் என்ன செய்வார்கள்? "என்மேல் இவ்வளவு எதிர்பார்க்கும் என் பெற்றோருக்கு நான் ஈடு கொடுக்க முடியாது போலிருக்கே. என்ன செய்யலாம்? எப்படி தப்பிக்கலாம்?'' என்ற விரக்தியில் மாணவச் செல்வங்கள் உள்ளனர். "என் பிள்ளையிடம் நான் இவ்வளவு எதிர்பார்க்கிறேனே. நான் எப்படிப் படித்தேன்? என் மார்க்கு எவ்வளவு? என்னிடம் உள்ள திறமைகள், பழக்க, வழக்கங்கள், குணாதிசயங்கள் என்ன? நானும் ஓரளவுக்கு முன்னேறி வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறேன்'' என்று பெற்றோர் பெருமக்கள் ஒரு கணம் சிந்தித்தாலே போதும்.
இத்தனை ஆண்டுகாலம் பள்ளிகளில், ஸ்டேட் ரேங்க் வாங்கியவர்களும், கல்லூரி பல் கலைக்கழகங்களில் கோல்டு மெடல் பெற்றவர்களும் இப்போது எங்கே. எப்படி இருக்கி றார்கள் என்று கண்டுபிடித்த ஒரு நிறுவனம் "இவர்கள் யாரும் எந்த நிறுவனத்திலேயும் சேர்மன், மேனேஜிங் டைரக்டர், பெரிய தொழிலதிபர் என்ற எந்தப் பிரபல பதவிகளிலும் இல்லை. மாறாக, வாழ்க்கையில் பெரிய வெற்றி பெற்று பிரபலங்களாக இருக்கும் யாரும் ஸ்டேட் ரேங்க் எடுத்தவர்களும் இல்லை'' என்று தெரிவிக்கிறது. இதை முதலில் உணர வேண்டியவர்கள் பெற்றோர்கள்தான். "பணமும், வசதியும், பிறர் மெச்சும் கவுரவமும்தான் வாழ்க்கை; அதுவே சந்தோஷம்" என்று கருதுவதை பெற்றோர்கள் கைவிட்டால், பிள்ளை களின் மேல் அவர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் குறையும்; இதனால் பிள்ளைகளின் மன அழுத்தம் குறையும். பின் தற்கொலைகள் தானாய் மறையும்.
மதிப்பெண்கள்உயர்கல்விபெரிய வேலை அதிக சம்பளம் பங்களா வாழ்க்கை வெளிநாட்டுப் பயணம் என்ற கனவுகளை பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து மாணவர்கள் மனதில் விதைக்கின்றன என்றால் அதற்கு இப்போது இருக்கும் கல்வி முறையும் உடந்தையாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு மார்க் ஷீட்டில் விளையாட்டு, நீதிபோதனை, தனித்திறன்கள், கதை சொல்லல், பாட்டு, இசை என மன அழுத்தத்தைக் குறைக்கும் எந்த விஷயத்திற்கும் இடமில்லை. மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் கல்வி முறை மாற அரசு வழிவகை செய்ய வேண்டும்.
கிராமப்புறங்களிலிருந்து நகருக்கு உயர்கல்விப் பயில வரும் மாணவர்களுக்கு `ஸ்மூத் டிரேன்சிஷன்' எனப்படும் கனிவான மாறுதலை உறுதி செய்ய அரசு சில கொள்கை முடிவு களை எடுத்தால் நன்று. ஒன்று, கிராமப் பள்ளிகளில்கூட ஆங்கிலம் சிறந்த முறையில் போதிக்கப்பட வேண்டும். அல்லது உயர் கல்வி வரை தமிழ் மீடியத்தில் பயிலவும், அப்படிப்படிப்பவர்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளிக்க அரசு திட்டமிட வேண்டும். அனைத்து கல்வி நிலையங்களிலும் மாணவர்களிடம் பேசுவதற்கென்றே கவுன்சலர்களை நியமிப்பதையும், அதற்கு வாரம் ஓரிரண்டு பீரியட் ஒதுக்குவதையும் அரசு கட்டாயமாக்க வேண்டும்.
தோல்விகள், ஏமாற்றங்கள், நெருக்கடிகள் வரும்போது அவற்றை எதிர்கொள்ளக்கூடிய மனோதைரியம் எல்லாப் பிள்ளைகளுக்கும் வர வேண்டுமென்றால் கல்விக்கூடங்களும், ஆசிரியர்களும், பெற்றோர் களும், அரசும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து அதன்படி செயல்படுவதே பெருகிவரும் மாணவ தற்கொலை களுக்கு தீர்வாக அமையும்.
கட்டுரை:பாபு புருஷோத்தமன், கல்வியாளர் - சென்னை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மார்க்கு மார்க்குன்னு மாரடிக்காம ஒரு கல்வி முறை அமுலுக்கு வந்தால் தாழ்வு மனப் பான்மை தற்கொலைக்கு இட்டுச் செல்லாமல் இருக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மதிப்பெண்களை வைத்து ஒரு மாணவனை தரம் பார்க்கும் முறை மாறினால் அப்பொழுது தான் அவனது தனிதிறமையும் அறிவும் அதிகரிக்கும்...
கொலவெறி wrote:மார்க்கு மார்க்குன்னு மாரடிக்காம ஒரு கல்வி முறை அமுலுக்கு வந்தால் தாழ்வு மனப் பான்மை தற்கொலைக்கு இட்டுச் செல்லாமல் இருக்கும்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மார்க் ஓராண்டுக்குத்தான் உதவும். ஆனால் தன்னம்பிக்கை நூறாண்டுக்கு உதவும்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்களுக்கு அம்புட்டு வயசாயிடிச்சா?பிரசன்னா wrote:மார்க் ஓராண்டுக்குத்தான் உதவும். ஆனால் தன்னம்பிக்கை நூறாண்டுக்கு உதவும்
![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஆமாம் இப்ப தான் அதை கொண்டாடிவிட்டு வருகிறேன்.... அண்ணாகொலவெறி wrote:உங்களுக்கு அம்புட்டு வயசாயிடிச்சா?பிரசன்னா wrote:மார்க் ஓராண்டுக்குத்தான் உதவும். ஆனால் தன்னம்பிக்கை நூறாண்டுக்கு உதவும்![]()
![]()
![]()
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பெண்களை வைத்து ஒரு மாணவனை தரம் பார்க்கும் முறை மாறினால் அப்பொழுது தான் அவனது தனிதிறமையும் அறிவும் அதிகரிக்கும்...
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
- GuestGuest
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|