புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
8வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_m108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
8வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_m108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
8வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_m108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
8வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_m108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
8வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_m108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
8வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_m108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
8வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_m108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
8வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_m108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c10 
8 Posts - 2%
prajai
8வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_m108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
8வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_m108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
8வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_m108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c10 
4 Posts - 1%
mruthun
8வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_m108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
8வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_m108வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

8வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Apr 25, 2012 3:58 pm

தமிழகத்தில் 110க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் முகாம் உள்ளன. இவை சாதாரணமான மக்கள் வாழும் முகாம்கள். செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம் என்ற பெயரில் இரண்டு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. செங்கல்பட்டில் இருந்த கிளைச் சிறையை 1991ம் ஆண்டு தமிழக அரசு, சிறப்பு முகாமாக மாற்றியது. இதே போல 2008 வரை பூந்தமல்லியில் சிறப்பு கிளைச் சிறையாக இருந்த சிறையை இலங்கைத் தமிழர்களின் சிறப்பு முகாமாக மாற்றப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து உயிருக்குத் தப்பி ஓடி வந்த தமிழர்களை மண்டபம் முகாமில் வைத்திருந்து பின்னர் அவர்கள் இயக்கம் தொடர்பானவர்களாக அடையாளம் காணப்பட்டாலோ, அல்லது தமிழகத்தில் ஏதாவது வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியோ, அவர்களை இந்த இரண்டு முகாம்களுக்குள் அடைத்து வைப்பதை தமிழக அரசு வழக்கமாக செய்து வருகிறது.

கடந்த 2007 முதல் 2009 வரையான காலகட்டங்களில் ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் கொலைவெறித் தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தபோது அவர்களுக்கான அத்தியாவசிய மருந்துகளை, உயிர்காக்கும் மருந்துகளை தமிழகத்திலிந்து இலங்கைக்கு கடத்த முயன்றதாக பலர் கைது செய்யப்பட்டு இந்த முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். அதே போல, அத்தியாவசிய பொருட்களான பேட்டரி, டார்ச் லைட், சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள், பெட்ரோல், டீசல் மற்றும் என்ஜின்கள் ஆகியவற்றை கடத்தியதாகவும், பீடி, போன்றவற்றை கடத்தியதாகவும் பலர் கைது செய்யப்பட்டு மேற்படி முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

இந்த சிறப்பு முகாம்கள் இலங்கையில் இருக்கும் முள்வேலி முகாம்களுக்கு எந்த வகையிலும் குறைவானதில்லை. பெயருக்கு முகாம் என்று அழைக்கப்பட்டாலும், இது ஒரு சிறையை விட கொடிய இடமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அடைக்கப்பட்டவர்கள், தங்களை இந்த கொடிய கொட்டடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, பல்வேறு காலகட்டங்களில் உண்ணாவிரதம் போன்ற பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வந்தனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முகாமிலிருக்கும் மரத்திலேறி, அதிலிருந்து குதித்து தற்கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளனர். பல்வேறு நேர்வுகளில், போராட்டங்களைத் தொடர்ந்து அவ்வப்போது சிலர் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டும் வந்துள்ளனர்.

02.02.2010 அன்று இது போல தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த ஈழத் தமிழர்களை நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் முகாம் உள்ளே புகுந்து அவர்களை அடித்து, காயப்படுத்தி அவர்களில் 15 பேர் மீது பொய்யான வழக்கை போட்டு அவர்களை வேலூர் சிறையில் அடைத்தனர்.

பலர் இலங்கையில் நடந்த சிங்களர்களின் தாக்குதலில் குண்டுக்காயத்தோடு வந்தவர்களுக்கு முகாமில் சரிவர சிகிச்சை அளிக்காமல் அவதிப்பட்டு இருந்தனர். இவ்வாறு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட அவர்கள் தங்களின் உரிமைக் கோரிக்கைக்காக தொடர்ந்து உண்ணாவிரதம் என்ற காந்திய வழியில் போராடி வந்துள்ளனர்.

தற்போது செங்கல்பட்டு முகாமில் 32 ஈழத் தமிழர்களும், பூந்தமல்லி முகாமில் 5 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தில் அகதியாக வந்து தங்களுக்கு எந்தவொரு உரிமையும் கொடுக்கப் படாததால், வெளிநாடுகளுக்கு கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்றார்கள் என்பதும், இவர்களில் 6 பேர், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்கள். இவர்களில் சிலர் மீதான குற்றச்சாட்டு, பாஸ்பார்ட் போன்ற பயண ஆவணங்கள இல்லாமல் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்பதாகும். இன்னும் 8 பேர் மீது எந்தவொரு வழக்கும் நிலுவையில் இல்லை. இவர்களில் சிலர் மீது 2009 காலகட்டத்தில் உயிர்காக்கும் மருந்துகளையும், ரத்த உறைகளையும், இலங்கைக்கு அனுப்ப முயற்சித்தார்கள் என்பதாகும். இவ்விரண்டு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட, வெடி பொருட்களை கடத்தியதாகவோ, ஆயுதங்களை கடத்தியதாகவோ, குற்றச்சாட்டுகள் இல்லை.

செங்கல்பட்டு முகாமில் உள்ளவர்களில் இன்றைய தேதியில் 17 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இன்றிலிருந்து 54 வயதான சந்திரகுமார் நீர் கூட அருந்தாமல், தனது உண்ணாவிரதத்தை துவங்கியிருக்கிறார். அவர்களின் கோரிக்கை மற்ற முகாம்களில் இருக்கும் தங்களுடைய உறவினர்களோடு தங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்பது மட்டுமே. இல்லாவிட்டால், இலங்கை அல்லாத வேறு நாட்டிற்கு செல்வதற்கு தங்களை அனுமதிக்க வேண்டும் என்பதே.

இவர்களில் யாரேனும் இலங்கைக்குச் செல்ல நேரிட்டால், அவர்களைப் பற்றிய தகவல்களை இலங்கை உளவுத்துறைக்கு தமிழக க்யூ பிரிவு காவல்துறையினரே கொடுத்து விடுவதால் அவ்வாறு முகாமிலிருந்து செல்பவர்கள் அங்கு கைது செய்யப்பட்டு அவர்கள் குறித்த விபரமே தெரியாத சம்பவங்கள் நடந்துள்ளன.

இலங்கையில் சிங்கள உளவுத்துறை ஈழத் தமிழர்களை பிடித்து சித்திரவதை செய்து, துன்புறுத்துவதற்கு ஈடாக, தமிழகத்தில் உள்ள உளவுத்துறையான க்யூ பிரிவு காவல்துறையினர் ஈழத் தமிழர்களை தொடர்ச்சியாக பொய் வழக்கு போட்டும், பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து சித்தரவதை செய்தும், அவர்களிடம் பணம் பறிப்பதுமான வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் க்யூ பிரிவு காவல்துறையினர், இந்த ஏதிலிகளை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே, அவர்கள் நீதிமன்றத்தின் மூலம் உத்தரவு பெற்று, பிணையில் வந்தால் கூட, அவர்களை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் உள்ள சித்திரவதைக் கூடங்களில் அடைத்து வைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

இதற்கு முன்பு உண்ணாவிரதம் இருந்தால், அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி விடுவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், கடந்த ஆறு மாத காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இது வரை யாரும் விடுவிக்கப்படவில்லை. அதிகாரிகள் பல்வேறு உறுதிமொழிகள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இலங்கையில் முள்வேலி முகாம்களில் ஈழத்தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டு சிங்கள இனவெறி அரசால் சித்திரவதை செய்யப்படுவது போலவே தமிழகத்தில் இந்த இரண்டு முகாம்கள் இருப்பதென்பது அனைத்து ஜனநாயக சக்திகளாலும், மனித உரிமை அமைப்புகளாலும், அரசியல் கட்சிகளாலும் கண்டிக்கப் பட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், இந்த இரண்டு முகாம்களை மூடுவதற்கு தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் இயங்கி வரும் இரண்டு முகாம்களையும் மூடுவதோடு, அதில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்து, அவர்களுடைய உறவினர்களோடு அவர்களை தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். இனியும் எந்த ஈழத் தமிழர்களும் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ், தடுப்புக் காவலில் வைக்கப் படக் கூடாது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, உண்ணாவிரதப் போராட்டத்தில் இருக்கும் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் உள்ள ஈழ ஏதிலிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.

சவுக்கு

avatar
Guest
Guest

PostGuest Wed Apr 25, 2012 4:00 pm

8வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம்

எட்டாவது நாளாக செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் உண்ணாநிலையை தொடர்கின்றனர். உண்ணாநிலை இருந்து வரும் 13 பேரும், மிகவும் சோர்வாக காணப்படுகின்றனர். ஆனாலும், விடுதலை கோரிக்கையில் உறுதியாக உள்ளனர்.

நேற்று திரு. விக்கிரமசிங்கம் மற்றும் திரு. சிறீ செயன் ஆகியோர் 90 அடி மரத்திலேறி, அரசு விடுதலை கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், மரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்வோம் என அறிவித்திருந்தனர்.

அதுசமயம், முகாமிற்கு வெளியே, ஏதிலிகளின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த திரு. மல்லை சத்தியா, "சிறப்பு முகாமில் உள்ள ஏதிலிகளில் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற செய்வோம், என கொடுத்த உறுதி மொழியை அடுத்து, மரத்திலிருந்தவர்கள் தற்கொலை அறிவிப்பை தற்போதைக்கு தள்ளி வைப்பதாக ஏற்றுக் கொண்டனர்.

நேற்று மாலை 7.30 மணிக்கு செங்கல்பட்டு நகர தாசில்தார் அரசின் சார்பாக முகாமின் நிலைமையை பார்வையிட்டார். அவர் அரசின் உயர் அதிகாரிகளுக்கு முகாமின் நிலை குறித்து தெரிவிக்க உள்ளார்.

இதனிடையே, முகாமில் உள்ள ஏதிலிகள், அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாத வேளையில், அடுத்த கட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

நாளை, அதாவது செவ்வாய்க்கிழமை திரு. சந்திரகுமார் (வயது: 55) நீர், ஆகாரம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல், கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாநிலையை மேற்கொள்ளவும், புதன்கிழமையன்று உண்ணாநிலை மேற்கொண்டு வரும் திரு. சிறீ செயன் திரும்பவும், முகாமினுள் உள்ள மரத்தில் ஏறி தற்கொலைப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதேவேளை, தமிழகத்தில் உள்ள உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் மற்றும் உலகத் தமிழர்களும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என செங்கல்பட்டு முகாம் ஏதிலிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விடுதலை கோரிக்கைகளை முன் வைத்து உயிருக்கு போராடும் ஏதிலிகளை கண்டு, காணாததுமாக இருக்கின்ற தமிழக ஊடகளும், தங்களின் நிலையை உலகுக்கு விளக்க வேண்டும் என அன்புடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 25, 2012 4:28 pm

தமிழக அரசுக்கு புதுக்கோட்டை தேர்தல் பணி உள்ளது. இவற்றையெல்லாம் கவனிக்க அவர்களுக்கு நேரம் இல்லை போலும் ...
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
Guest
Guest

PostGuest Wed Apr 25, 2012 8:04 pm

சரி தான் பாலாஜி அண்ணே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 9:11 pm

அனைத்தயும் கோட்டை விட்டவர்களுக்கு நிவாரணம் தேடாமல் கோட்டையைப் பிடித்தவர்கள் புதுக்கோட்டையில் முகாமிட்டிருப்பது சரி இல்லையென அம்மா உணர்ந்து நல்லது செய்வாரா?




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக