புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
55 Posts - 63%
heezulia
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
50 Posts - 63%
heezulia
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
15 Posts - 19%
dhilipdsp
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_m10அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 25, 2012 1:52 pm

அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்  C987204a-310d-4262-861b-4faee995238b_S_secvpf

சர்வ அதிகாரங்களுடன் ஈராக் நாட்டை 25 ஆண்டுகள் ஆண்ட சதாம் உசேன், போரின் காரணமாக வீழ்ந்தார். அமெரிக்க படையிடம் அனாதை போல பிடிபட்டு ராணுவ கோர்ட்டு முன்பு விசாரணை கைதியாக கை விலங்குடன் நிற்கிறார். அமெரிக்காவுக்கு எதிராக சவால் விட்ட சதாம் உசேன் ஈராக் மக்கள் மத்தியில் சிங்கம் போல உலா வந்தார். ஆனால் 2003 மார்ச் மாதத்தில் நடந்த போர் சதாமுக்கு பெரும் சோதனையாக அமைந்தது. ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.

சதாம் உசேனின் வாழ்க்கைப்பாதை `திரில்' நிறைந்தது. சிறு வயதிலேயே புரட்சிக்காரராக வாழ்க்கையைத் தொடங்கினார். சதாம் உசேன் 1937 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அல் ஊஜா என்ற கிராமத்தில் பிறந்தார். தாய் பெயர் சுபா துல்பா. அவர் தாய் வயிற்றில் கருவாக இருந்த போதே தந்தையை இழந்து விட்டார். சதாம் உசேன் பிறந்த சிறிது நாட்களில், அவருடைய தாய் மறுமணம் செய்து கொண்டார்.

இறந்து போன கணவரின் தம்பியையே அவர் மணந்தார். இதனால் சதாம் உசேனை மற்ற சிறுவர்கள் ஏளனம் செய்வார்கள். வாழ்க்கையில் விரக்தி அடைந்த சதாம் உசேன், தனது 10 வயதிலேயே துப்பாக்கியை தூக்க விரும்பினார். ஒரு சிறிய இரும்புத் துண்டை துப்பாக்கி போல கருதி எப்போதும் தன்னுடனேயே எடுத்து சென்றார். 10 வது பிறந்த நாளின்போது, அவருக்கு ஒரு நிஜ துப்பாக்கி பரிசாகக் கிடைத்தது.

சதாம் உசேனுக்கு 19 வயது ஆனபோது, அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. தாய்மாமன் கைரல்லாவுக்கு விரோதி ஒருவன் இருந்தான். அவனை தீர்த்துக்கட்டும் பொறுப்பு சதாமுக்கு கிடைத்தது. விரோதியை ஒரே குண்டில் சுட்டு வீழ்த்திவிட்டு வெற்றி வீரராகத் திரும்பினார். அரபு மக்களுக்காக போராடும் "பா அத்" என்ற இயக்கத்தில் சதாம் உசேன் சேர்ந்தார்.

பா அத் இயக்கத்தின் ஆதரவாளராக இருந்த ராணுவ தளபதி குவாசம் மன்னர் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு அதிபரானார். பிறகு அவர் மனம் மாறிவிட்டார். இதனால் அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்து, அதற்காக சதாம் உசேன் உள்பட 8 பேர் கொண்ட ரகசியப்படை அமைக்கப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றும் விதமாக, குவாசமை நோக்கி சதாம் உசேன் சுட்டார். ஆனால் அவர் தப்பி விட்டார்.

இந்த சம்பவத்தில் காலில் காயம் அடைந்த சதாம் தப்பி ஓடி, சிரியா, எகிப்து ஆகிய நாடுகளில் தலைமறைவாக வாழ்ந்தார். 1963 ல் குவாசம் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. உடனே சதாம் உசேன் ஈராக் திரும்பி மீண்டும் பா அத் இயக்கத்தின் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 1968 ல் ஹசன் அல் பகர் ஈராக் அதிபரானார். அவரது மெய்க்காப்பாளராக சதாம் உசேன் நியமிக்கப்பட்டார். பின்னர் துணை அதிபரானார்.

1979 ல் சதாம்உசேன் ஈராக் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். `குர்த்' தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட்டதில் ஈராக் பெரும் நஷ்டம் அடைந்தது. மற்ற நாடுகள் ஈராக் நாட்டிற்கு உதவி செய்தன. ஆனால், குவைத் முட்டுகட்டையாக இருந்தது. அதனால் குவைத் நாட்டை எதிரி நாடாக சதாம் கருதினார். ஈரான் ஈராக் இடையே எல்லைத் தகராறு இருந்தது.

அது முற்றி 1980 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ந்தேதி இரு நாடுகளும் யுத்தத்தில் குதித்தன. சுமார் 8 ஆண்டுகள் போர் நீடித்தது. ஈரான் அதிபர் கோமேனி, ஈராக் அதிபர் சதாம் உசேன் பிடிவாதத்தால் போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்தது. 1988 ம் ஆண்டு இறுதியில் ஐ.நா.சபை தலையிட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தது.

இந்தப் போரில் இருதரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. 10 லட்சம் வீரர்கள், பொதுமக்கள் பலியானார்கள். 17 லட்சம் பேர் காயம் அடைந்தார்கள். 15 லட்சம் பேர் வீடுகளை இழந்து அகதிகள் ஆனார்கள். 1990 ம் ஆண்டு ஆகஸ்டு 2_ந்தேதி குவைத் நாட்டின் மீது ஈராக் அதிபர் சதாம்உசேன் திடீரென்று போர் தொடுத்து அந்த நாட்டைக் கைப்பற்றிக்கொண்டார். குவைத் மன்னர் அல்சமா குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.

ஈராக்கின் ஒரு லட்சம் ராணுவ வீரர்களும், 350 டாங்கிகளும் குவைத் நாட்டுக்குள் புகுந்தன. குவைத்துருப்புகள் எதிர்த்து போரிட்டன. இந்த சண்டையில் குவைத் நாட்டினர் 600 பேர் கொல்லப்பட்டார்கள். ஈராக் படை எளிதாக வென்று முக்கிய பகுதிகளை கைப்பற்றியது. "ஈராக் நாட்டுடன் குவைத் இணைந்துவிட்டது என்றும், ஈராக்கின் 19 வது மாநிலமாக குவைத் ஆகிவிட்டது என்றும் சதாம் உசேன் அறிவித்தார்.

சதாம் உசேனின் இந்தப் போக்கை உலக நாடுகள் ஒருமித்த குரலில் கண்டித்தன. குவைத்தில் இருந்து ஈராக் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றியது. இதை, சதாம் உசேன் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. சவுதி அரேபியாவையும் கைப்பற்றும் நோக்கத்துடன் அந்த நாட்டின் எல்லை நெடுகிலும் படைகளை நிறுத்தினார்.

"சதாம் உசேனிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்" என்று அமெரிக்காவுக்கு சவுதிஅரேபிய அரசு அவசர வேண்டுகோள் விடுத்தது. அது, அமெரிக்காவின் நேச நாடு. எனவே சதாம் உசேனுக்கு பாடம் கற்பிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் முடிவு செய்தார். 2 லட்சம் ராணுவ வீரர்கள், நவீன ஆயுதங்களுடன் போர் விமானங்கள் ஆகியவற்றை வளைகுடா பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியது.

இங்கிலாந்து படைகளும் உதவிக்கு சென்றன. 1991 ஜனவரி 15 ந்தேதிக்குள் குவைத்தை விட்டு வெளியேறும் படி ஐ.நா. சபை கெடு விதித்தது. ஆனால் சதாம் உசேன் பணிய மறுத்தார். இதனால் ஜனவரி 17 ந்தேதி வளைகுடா போர் மூண்டது. அமெரிக்க படைகள் ஈராக்கின் தென்பகுதிக்குள் புகுந்து தாக்கியது. ஆரம்ப கட்டத்தில், ஏவுகணை தாக்குதலில் ஈராக்கின் கை ஓங்கி இருந்தது.

ஆனால் பின்னர் ஈராக் படைகளை அமெரிக்க படைகள் நிர்மூலம் ஆக்கின. ஈராக் படையின் 3,700 டாங்கிகள், 2,140 கவச வண்டிகள், 3,110 பீரங்கிகள் அழிக்கப்பட்டன. 1 லட்சம் ஈராக் வீரர்கள் சரண் அடைந்தனர். மூன்றே நாள் போரில் குவைத் மீட்கப்பட்டது. ஈராக்குக்கு தொடர்ந்து கடும் சேதங்கள் ஏற்பட்டதால், போரை நிறுத்துவதற்கு சதாம் இணங்கினார்.

அதனால் பிப்ரவரி 28 ந் தேதி அமெரிக்கா போரை நிறுத்தியது. 42 நாள் வளைகுடா போர் முடிவுக்கு வந்தது. பின்னர் ஈராக்குக்கு ஐ.நா.சபை 8 நிபந்தனைகளை விதித்தது. அவற்றை முழுமையாக ஏற்பதாக ஈராக் அறிவித்தது. மகளுடன் சதாம். இந்தப் போரில் அமெரிக்க தரப்பில் ஏற்பட்ட உயிர் சேதம் 79 பேர்தான்.

ஆனால் ஈராக் தரப்பில் ஏற்பட்ட உயிர் சேதம் 35 ஆயிரத்துக்கு மேல் ஒரு லட்சம் வரை இருக்கும் என்று கூறப்பட்டது. ஈராக் ஆதிக்கத்தின் கீழ், குவைத் 7 மாத காலம் இருந்தது. இந்த சமயத்தில் குவைத்தின் செல்வ வளம் கொள்ளையடிக்கப்பட்டது. மக்கள் பல கொடுமைகளுக்கு ஆளானார்கள். நாட்டிற்கு அந்நிய செலாவணியை பெற்றுத்தந்த பெட்ரோல் கிணறுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

ஈராக் படைகள் குவைத்தை விட்டு வெளியேறியபின், வெளிநாட்டில் இருந்த குவைத் மன்னரும், அவர் குடும்பத்தினரும் நாடு திரும்பினார்கள். 1991 ஏப்ரல் மாதத்தில் ஈராக்கில் உள்ள `ஷியா' முஸ்லிம்கள் சதாம் உசேனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். ஈராக்கின் தெற்கு, வடக்கு பகுதிகளில் கிளர்ச்சி கலவரம் நடந்தது. கிளர்ச்சி செய்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அது 18 நாட்களில் நிறைவேற்றப்பட்டது.

3 ஆண்டுகளுக்கு பிறகு 1994 அக்டோபரில் மீண்டும் ஈராக் வால் ஆட்டத் தொடங்கியது. குவைத் எல்லைப்பகுதியில் படைகளைக் குவித்தது. சதாம் உசேனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. அதோடு 350 போர் விமானங்களை வளைகுடா பகுதிக்கு அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் உத்தரவிட்டார்.

செப்டம்பர் 3 ந்தேதி ஈராக் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையில் ஈராக்கில் உள்ள பேரழிவு ஆயுதங்களை சோதனையிட ஐ.நா. ஆய்வுக்குழுவை அனுமதிக்க வேண்டும் என்று அமெ ரிக்கா வற்புறுத்தியது. ஆனால் இதற்கு சதாம் உசேன் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் வளைகுடா பகுதியில் மீண்டும் போர் மேகம் சூழந்தது.

டிசம்பர் 17 ந்தேதி நள்ளிரவில் அமெரிக்காவின் 200 போர் விமானங்கள் அணி அணியாக சென்று ஈராக் தலைநகர் பாக்தாத் மீது சரமாரியாக குண்டு வீசின. ஏவுகணை தாக்குதலும் நடத்தப்பட்டது. சதாம் உசேனின் மாளிகையை குறி வைத்து விமானங்கள் குண்டு போட்டன. இதில் மாளிகையின் ஒரு பகுதியில் குண்டு விழுந்து கட்டிடம் பற்றி எரிந்தது. ஈராக் ராணுவ அலுவலகம் பலத்த சேதம் அடைந்தது.

3 நாட்களாக தொடர்ந்து குண்டு வீச்சு நடந்தது. பிறகு 4 நாள் போர் முடிவுக்கு வந்ததாக அமெரிக்காவும், இங்கிலாந்தும் அறிவித்தன. இந்த 4 நாள் தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர். ஈராக்கின் முக்கிய ராணுவ தளங்கள், ஆயுத கிடங்குகள் பெருத்த சேதம் அடைந்தன. என்றாலும் சதாம் உசேனின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

மாலைமலர்

avatar
Guest
Guest

PostGuest Wed Apr 25, 2012 3:45 pm

தலைப்பே தவறு நண்பா ... சதாம் உசேனிடம் அமெரிக்க நடத்திய போர் என்பது பொருத்தம்

இன்னும் படைகளை வெளியேற்ற முடியாமல் தினம் அமெரிக்க வீரர்கள் செத்து கொண்டு இருப்பது வருத்தம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 25, 2012 5:00 pm

இந்தியாவுடன் என்றும் இணக்கமாக இருந்தவர் சதாம்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக