புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் I_vote_lcapதெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் I_voting_barதெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் I_vote_lcapதெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் I_voting_barதெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் I_vote_lcapதெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் I_voting_barதெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் I_vote_lcapதெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் I_voting_barதெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் I_vote_lcapதெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் I_voting_barதெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம் ... முத்திரைத்தாள்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 2:27 pm

தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் 21sm4

முத்திரைத் தாள்

இப்போது புழக்கத்திலுள்ள முத்திரைத் தாள் முறைக்கு முதன் முதலில் வித்திட்ட நாடு நெதர்லாந்து.
அங்கு கி.பி.1624}ம் ஆண்டு இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதனையடுத்து, கி.பி.1694-ல் இங்கிலாந்து நாட்டில் முத்திரைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஐக்கிய அமெரிக்காவில் இச்சட்டம் கி.பி.1766}ல் கொண்டு வரப்பட்டது.

1797-ம் ஆண்டு, இங்கிலாந்து அரசு, இந்தியாவில் முத்திரைத் தாள் வரியை அறிமுகப்படுத்தியது. அப்போது நிலத்திலிருந்து பெறப்படும் வரியை மட்டுமே நம்பியிருந்தது ஆங்கிலேயே அரசு.

முதலில் வங்காளம், பீகார், வாரணாசி மற்றும் ஒரிசாவில்தான் முத்திரைத்தாள் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன் பின்னர், ஆங்கிலேய அரசு விரிவடைந்த பகுதிகளிலும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

உயரமான கட்டடங்களில் இடிதாங்கி என்று ஒன்று இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டுவதைப் பார்த்திருப்பீர்கள்.

இடிதாங்கி என்பது செம்பினால் ஆனது. இதன் முனை கூர்மையாக அமைக்கப்பட்டிருப்பதால், இடி, மின்னல் எற்படும் போது பூமியை நோக்கிப் பாயும் மின் அடர்த்தியை அப்படியே உள்வாங்கிக் கொண்டு பூமிக்கடியில் இறக்கி விடுகின்றது. இதனால் இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் பாதிப்படைவதில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி (அறுவை சிகிச்சை) நடைமுறையில் இருந்தது என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்! இந்திய மருத்துவத்தின் தந்தை சுஸ்ருதா என்பவர் விபத்துக்களால் முகத்தில் பாதிப்பு அடைந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து, அவர்களுடைய முகங்களைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள உழைப்பாளர் சிலை மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சிற்பி தேவி பிரசாத் ராய் செüத்ரி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ராய் செüத்ரி சென்நை, எழும்பூரில் உள்ள சித்திரக் கலைக் கல்லூரி முதல்வராக அப்போது பணியாற்றி வந்தார். இந்தச் சிலைக்கு மாடலாக இருந்தவர்களில் தமிழ்நாட்டு பிரபல பத்திரிகை ஓவியரான ராமுவும் ஒருவர்.

சவுக்கு மரம், தைல மரம் மற்றும் கரும்புச் சக்கை ஆகியவை காகிதம் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்கள். கரும்புச் சாறு பிழிந்தபின் மீதமாகும் சக்கைகள் காகித ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
டார்பிடோ

மிகவும் வலிமை வாய்ந்தவர்களை டார்பிடோ என்று அழைப்பது வழக்கம். டார்பிடோவின் வலிமை அபாரமானது என்ற காரணத்தால்தான் இப்படிப் பெயரிட்டு அழைக்கும் பழக்கம் வந்தது.

பிரிட்டனைச் சேர்ந்த இராபர்ட்ஒயிட்ஹெம் என்பவர் 1866}ம் ஆண்டு டார்பிடோ என்ற கடற்போர் ஆயுதத்தைக் கண்டுபிடித்தார். அது சுருட்டு போன்று நீண்ட வடிவம் கொண்ட தானியங்கி விசைப் படகு.

நீருக்கடியில் அதிவேகமாகச் செல்லக் கூடியது. தற்போது அதில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. நவீன டார்பிடோ, எதிரிகளின் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் சில நிமிடப் பயணத்தில் அழித்து விடும் வல்லமை படைத்தவை.
டார்பிடோவின் பின்பகுதியில் வெடிமருந்து வைக்கப்பட்டிருக்கும். முன்பகுதியில், சதுர அங்குலத்துக்கு 20 ஆயிரம் கிலோ அழுத்தத்தைத் தாங்கக்கூடிய காற்றுக் கலன்கள் உள்ளன. நடுப்பகுதியில் கியர், சார்ஜிங் வால்வு, ஸ்டாப் வால்வு போன்ற கருவிகள் உள்ளன. வால்பகுதிதான் மிகவும் முக்கியமானது. இங்குதான் என்ஜின், ஸ்டியரிங், டார்பிடோவை இயக்கும் எரிபொருள் ஆகியவை உள்ளன. அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நுண்ணிய கருவிகளும் இப்பகுதியில்தான் இருக்கும்.

நீருக்கடியில் அதிவேகமாகப் பாய்ந்து சென்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கான கப்பலையோ, நீர்மூழ்கிக் கப்பலையோ ஊடுருவித் தாக்கும். தாக்கிய வேகத்திலேயே இது வெடிக்கும். இதனால் அந்தக் கப்பலும் பெரும்பாதிப்புக்குள்ளாகும். டார்பிடோவின் அளவுக்கு ஏற்ப அதனால் ஏற்படும் பாதிப்பும் அதிகமாக இருக்கும். முழுக் கப்பலையுமே அழித்துவிடக் கூடிய சக்தி வாய்ந்த டார்பிடோக்களும் உள்ளன.
தொகுப்பு: அ.ச.குருசாமி, செவல்குளம்

உலகம் முழுவதும் 2000 வகைக்கும் மேற்பட்ட கடும் விஷத்தன்மை கொண்ட பாம்புகள் உள்ளன. ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு வகைப் பாம்புதான் மிகவும் பயங்கரமான விஷத்தன்மை கொண்டது. இதன் பெயர் நசிக். இந்தப் பாம்பு ஒரே சமயத்தில் 3 பேரைக் கடித்துக் கொல்லும் அளவுக்கு விஷத்தன்மை கொண்டது.

உலகின் நீளமான பாம்பு வகைகளும் ஆப்பிரிக்கக் காடுகளில்தான் உள்ளன. பச்சை நிறம் கொண்ட இந்தப் பாம்புகள் ஒவ்வொன்றும் 10 மீட்டர் நீளம் வரை கூட இருக்கும்.

நினைவாற்றலை அதிகரிக்கும் மூலிகைகளில் மிகச் சிறந்தது வல்லாரை. விஷ்ணு கரந்தை, பொன்னாங்கண்ணி, கொட்டக் கரந்தை, வெள்ளயிறகு ஆகியவையும் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் மூலிகைகளாகும்.

சூரியனுடைய சுட்டெரிக்கும் ஒளியை உள்வாங்கிக் கொண்டு நம்மை உயிருடன் வாழ வைப்பது கடல்தான். பூமியில் தண்ணீரின் அளவு 70.8 சதவீதம்.

இந்தக் கடலுக்குள் 40 ஆயிரம் மைல்களுக்கு மேற்பட்ட நீளம் கொண்ட மலைத் தொடர்கள் உள்ளன. உலகின் பெருங்கடல்களில் சில இடங்களில் 36 ஆயிரம் அடிக்கும் கீழ் வரை ஆழம் இருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

மொராக்கோ நாட்டில் காஸô பிளாங்கோ எனும் மசூதி உள்ளது. இதுதான் உலகிலுள்ள மசூதிகளிலேயே மிகவும் உயரம் என்று கருதப்படுகிறது. இது சுமார் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் உயரம் 576 அடிகள். இது 1993}ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. உலகின் எட்டாவது அதிசயமாக இது கருதப்படுகிறது.
தொகுப்பு: சு.இலக்குமண சுவாமி, திருநகர்.

தர்பூசணி!
வெயில் காலம் வந்தாலே சூரியச் சூட்டைத்தணிப்பதற்காக ஏகப்பட்ட நவீன குளிர் பானங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மக்களும் அவற்றை விரும்பிக் குடித்து மகிழுகின்றனர். ஆனால் இயற்கையே நமக்கு நல்ல குளிர்பானத்துக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது தர்ப்பூசணி பழத்தின் முலம்.

இயற்கை தரும் இந்தப் பழம் வெயில் சூட்டைத் தணிப்பதோடு உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகின்றது.

இது இயற்கை வைத்திய மூலிகையாக செயல்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதுடன் தன்னிடமிருக்கும் நீர்ச் சத்தால் உடல் சூட்டையும் தணிக்கின்றது.

தர்ப்பூசணியில் ஏ, பி, சி வைட்டமின்கள் உள்ளன. மற்றப் பழங்களை விட இதில் கலோரிகள் குறைவாகவே உள்ளன. எளிதில் ஜீரணமாகும். 92 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. எந்தவிதமான கொழுப்புச் சத்தும் இந்தப் பழத்தில் அறவே கிடையாது. ஓரளவுக்கு கால்சியம் கொண்டது.

இதய நோய், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியைத் தரும் பழம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிறுவர்கள் இந்தப் பழத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுதல் அவசியம்.
க.பரமசிவன், மதுரை.

நல்ல புத்தகங்கள்!


ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு மகாத்மா காந்திஜி கூறிய பதில்: நூலகம் கட்டுவேன்!
தனிமையாக ஒரு தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு நேருஜி அளித்த பதில்: நல்ல புத்தகங்கள் மட்டும் கிடைத்தால் போதும்! அங்கேயே மகிழ்ச்சியாக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருப்பேன்!

புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத அறை போன்றது. எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கின்றது என்கிறார் சிந்தனையாளர் பிளேட்டோ.

புத்தகங்கள் வெறும் காகிதமல்ல. ஆயுதங்கள்! அதுவும் அறிவாயுதங்கள்! அறிவை வளர்க்கவும் சிந்தனையைத் தூண்டவும் துணையாக இருப்பவை நல்ல நூல்களே! மிகப்பெரிய சமுதாய மாற்றங்களுக்கும் பூமியையே புரட்டிப் போட்ட புரட்சிகளுக்கும் நூல்களே ஆயுதங்களாகப் பயன்பட்டன.
ராஜேஸ்வரி ரவிக்குமார்

தினமணி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Jul 12, 2012 8:49 pm

அருமையான தகவல்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் 1357389தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் 59010615தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Images3ijfதெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Images4px
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 12, 2012 9:54 pm

அருமையான தகவல்கள் சூப்பருங்க

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Thu Jul 12, 2012 10:47 pm

தெரியாத தகவல்கள் பாயனுள்ள பதிவு ... பதிவுக்கு மிக்க நன்றி ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக