புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
37 Posts - 37%
heezulia
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
31 Posts - 31%
Dr.S.Soundarapandian
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
4 Posts - 4%
mruthun
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
106 Posts - 44%
ayyasamy ram
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
காட்சியால் வெற்றி கொள்! Poll_c10காட்சியால் வெற்றி கொள்! Poll_m10காட்சியால் வெற்றி கொள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்சியால் வெற்றி கொள்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:39 pm

காட்சியால் வெற்றி கொள்! BT_1334880358காட்சியால் வெற்றி கொள்! E_1334910735

ஓர் அழகான பெண் என்று உங்களிடம் சொன்னால் உங்களுக்கு யார் ஞாபகம் வரும்? ஒரு சினிமா நடிகை, ஒரு சீரியல் நடிகை - இப்படி யாராவதுதான், அல்லவா? நீங்கள் திருமணமமாகாதவராக இருந்தால் இது ஓ.கே. ஆனால் திருமணமானவராக இருந்தால் இது ரொம்பத் தப்பு என்கிறார்கள் மனைவிமார்கள் (கணவன்மார்களும்தான்)! இது ஒரு முக்கியமான பிரச்னைதான். இது பற்றி “சினிமாவுக்குப் போன சித்தாளு’ என்று ஜெயகாந்தன் ஒரு கதையே எழுதியிருக்கிறார். ஒரு நடிகரை நினைத்துக் கொண்டு அவர் உருவம் பதியப்பட்ட பனியனை அணிந்திருக்கும் கணவனின் நெஞ்சில் விழுந்து புரளும் சித்தாளு-மனைவி பற்றி! போகட்டும், இங்கே நான் சொல்ல வருவது அது பற்றியல்ல. ஆனால் அது தொடர்பானது.

ஒரு வார்த்தையைச் சொன்னவுடன் நமக்கு அநத வார்த்தை மனத்தில் தோன்றுவதில்லை. அந்த வார்த்தை எந்தப் பொருளைக் குறிக்கிறதோ, அந்தப் பொருள்தான் நம் மனத்தின் திரையில் தோன்றுகிறது. குழந்தை என்று சொன்னால், நமக்கு தெரிந்த ஒரு குழந்தையின் உருவம் நம் மனத்தில்விரியும். ஜனநாயகம், அழகு, அரசியல் என்று அரூபமான விஷயங்களைக் குறிப்பிடும் வார்த்தைகளைச் சொன்னாலும் அது தொடர்பாக நம் மனத்தில் பதிந்த காட்சிகள்தான் உடனே நினைவுக்கு வரும்.
“ஜனநாயகம்’ என்று சொன்னவுடன், பெங்களூருவில் சட்டசபை உறுப்பினர்கள் அலை பேசியில் நீலப்படம் பார்த்தது நினைவுக்க வரலாம்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், மனிதன் வார்த்தைகளில் சிந்திப்பதில்லை. காட்சிகள் வழியாகத்தான் சிந்திக்கிறான். ஏனெனில் அதுதான் உலகளாவிய, காலம் கடந்த, மொழி கடந்த, ஜாதி, இனம் என்று எல்லாவற்றையும் கடந்த, எல்லாருக்கமுõன உண்மையாக இருக்கிறது. ஆங்கிலத்தில் இதை விஷûவலைசேஷன் என்று கூறுகிறார்கள். இந்த உண்மையை, இந்த நன்மையை நாம் அனைவரும் நமது முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துவதில்லை.

ஆனால் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பெருவெற்றி பெற்ற, சாதனை படைத்த யாருடைய வாழ்விலும் இந்தக் காட்சிப்படுத்திப் பார்க்கும் பண்பு பெரும் பங்கு வகித்திருப்பது புரியும்.

அவர் பெயர் மோரிஸ் குட்மேன். பெயருக்கேற்றாற்போல் நல்ல மனிதர். ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியின் ஏஜன்டாக வேலை. நல்ல வருமானம். பணம், புகழ் எல்லாம் கிடைத்தது. கூடவே சொந்தமாக ஒரு விமானமும். அங்கேதான் பிரச்னை ஆரம்பமானது. ஏதோ ஓர் இடத்தில் இறங்கும்போது அது விபத்துக்குள்ளானது. அது மோரிஸின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. அவருடைய கழுத்தெலும்பு இரண்டு இடங்களில் உடைந்து போனது. முதுகுத்தண்டு முற்றிலுமாக நசுங்கிப் போனது. அவருடைய சிறுநீரகம், குடல்கள், வயிறு, உதரவிதானம் எல்லாமே செயலற்றுப்போயின. அவரால் சாப்பிடவோ, குடிக்கவோ, பேசவோ முடியாது. உயிர் மட்டும் மீதியுள்ள பிணம்போல அவர் மருத்துவமனையில் கிடந்தார். அவரால் செய்ய முடிந்ததெல்லாம் இரண்டு காரியங்கள்தான். வேண்டும் என்றால் ஒரு முறையும், வேண்டாமென்றால் இரண்டு முறையும் கண்களை முடித்திறப்பார். அவ்வளவுதான் அவரது இயக்கம்.

ஆனால் அந்தச் சூழ்நிலையிலும் அவருக்கு ஒன்று தெளிவாகத் தெரிந்திருந்தது. ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ அதுவாகவே அவன் ஆகிறான் என்பதுதான் அது. எனவே அவரும் நினைக்க ஆரம்பித்தார். காட்சி வடிவத்தில். நமக்கிருக்கும் பிரச்னைகளை ஒவ்வொன்றாகத் தீர்க்கலாம் என்ற முடிவோடு.

அவரது முதல் முயற்சி தம் மீது பொருத்தியிருக்கும் வேண்டிலேட்டரை எடுத்துவிட்டு இயற்கையாக மூச்சு விடுவதுதான். அதற்கான முதல் முயற்சியாக கொஞ்சம் காற்றை அந்த யந்திரம் மூலம் உறிஞ்சி உள்ளே இழுக்க முயன்றார். அப்படி அவர் ஒவ்வொரு முறை முயன்றபோதும் அவரத நுரையீரல் எதிலோ போய் இடித்தக் கடுமையான வேதனை கொடுத்தது. என்றாலும் அவர் விடவில்லை. கடுமையாக முயன்று நூறு முறை மூச்சு விட்டார். பிறகு 200 முறை, பிறகு 300 முறை! அப்படிச் செய்த போது அவரது நுரையீரல் மூன்று மடங்கு பெரிதானது! வெண்டிலேட்டரை மருத்துவர்கள் எடுத்துவிட்டார்கள். ஆனால், எப்படி அவரால் மூச்சுவிட முடிந்தது என்ற அதிசயம் மட்டும் அவர்களுக்குப் புரியவே இல்லை.

அவரது அடுத்த ப்ராஜக்ட் கிறிஸ்துமஸுக்கு முன் எழுந்து நடப்பதுதான்! அதற்காக அவர் தினமும் செய்தது ஒன்றுதான். நடப்பது மாதிரி கற்பனை செய்தார். ஆனால், அவர் காட்சி வடிவத்தில் நினைத்தது போலவே, அடுத்த கிறிஸ்துமஸில் அவர் எழுந்து நடமாடவும் செய்தார்! டயஃப்ரம் எனப்படும் அவரது உதரவிதானம் முழுமையாகக் கெட்டுக் கிடந்ததால், தனது மன உறுதியின் மூலமும், காட்சிப்படுத்துதலின் மூலமும் அதற்கு பதிலாக தன் வயிற்றுத் தசையை அவர் பயன்படுத்தினார்! இப்படி இந்த உலகில் செய்ய முடிந்த ஒரே மனிதர் இவர்தானாம்! ஒரு வாக்கியத்தைப் பேச அவருக்கு இரண்டு ஆண்டுகளானது. ஆனால் பிடிவாதமாக, காட்சிப்படுத்திப் பார்த்தலின் மூலமாக மட்டுமே குணமடைந்த இவர் “அற்புத மனிதர்’ என்று மிகச் சரியாக வர்ணிக்கப்படுகிறார்.
“தளபதி’ திரைப்படத்தில் மம்மூட்டி கடுமையாக வெட்டுப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பார். அவரைப் பார்த்துவிட்டு வரும் அவரது தளபதி ரஜினி, அவர் மனைவி கீதாவிடம் போய், “தேவா பிழைத்துக் கொள்வான்’ என்று கூறுவார். “டாக்டர் சொன்னாரா’ என்று மனைவி கீதா கேட்பார். அதற்கு ரஜினி, “இல்லை, அவனே சொன்னான்’ என்று சொல்வார். அதைக் கேட்ட ஆடியன்ஸ் சிரித்தார்கள். ஆனால் அது சிந்திக்க வேண்டிய அற்புதமான வசனம். எண்ணம்தான் வாழ்வு. இன்னும் சரியாகச் சொன்னால், காட்சி ரீதியான எண்ணம்தான் வாழ்வாக மலர்கிறது.

கூடைப்பந்து மேதை மைக்கேல் ஜோர்டான் உடலை இரண்டு முறை முழுமையாக 720 டிகிரி திருப்பி, பின்பு பந்தை கூடைக்குள் செலுத்தி “கோல்’ போடுவார். அவர் கையில் பந்து போய்விட்டதென்றால் அடுத்தது “கோல்தான்’. தினசரி, அடிக்கடி, பந்து கோலில் விழுவது போன்ற காட்சியைத் தன் மனத்திரையில் பார்த்ததுதான் அவரது அபார விளையாட்டின் ரகசியமாக உள்ளது.
கால்ஃப் பந்து விளையாட்டில் உலகில் முதல் இடத்தில் இருக்கும் டைகர் உட்ஸ் என்பவர் பயன்படுத்தியதும் இந்த உத்திதான். பந்து எங்கே போய், எந்தக் குழியில் விழ வேண்டுமோ அதில் விழுவதாக அவர் அடிக்கடி கற்பனை செய்வார்.

எதை நாம் காட்சி ரீதியாக மனத்தில் அடிக்கடி ஓட்டுகிறோமோ அதுதான் நடக்கிறது. விரைவாகவோ தாமதமாகவோ. நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான். விடாப்பிடியாக ஒரு காரியத்தைத் தொடர்ந்து நாம் செய்து வரும்போது, நமக்கு இயல்பாகவே அமைந்திருக்கும் காட்சிப்படுத்தும் திறமையும் வேகமாக வளரும். ஆனால், அதற்கு சில மனத்தடைகளைத் தாண்டி வந்தாக வேண்டும்.

- நாகூர் ரூமி

கல்கி செய்தி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 21, 2012 2:46 pm

அருமையான பதிவு பிரசன்னா சூப்பருங்க

தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்று உணர வைத்திருக்கிறார்.


யார் முயற்சி செய்கிறாரோ அவர் அதை பெற்றுக்கொள்வார்(அரபி பழமொழி)
முஹைதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:51 pm

முஹைதீன் wrote:அருமையான பதிவு பிரசன்னா சூப்பருங்க

தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்று உணர வைத்திருக்கிறார்.

யார் முயற்சி செய்கிறாரோ அவர் அதை பெற்றுக்கொள்வார்(அரபி பழமொழி)

நன்றி முஹைதீன் மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக