புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_m10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_m10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10 
24 Posts - 44%
mini
திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_m10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_m10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_m10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10 
381 Posts - 58%
heezulia
திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_m10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_m10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10 
20 Posts - 3%
prajai
திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_m10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_m10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_m10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10 
4 Posts - 1%
mini
திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_m10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_m10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10 
3 Posts - 0%
Guna.D
திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_m10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10 
2 Posts - 0%
Barushree
திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_m10திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:18 pm

திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் BT_1334737609திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன் E_1334738086

“பூமாது... புகழ்மாது புவி போற்றும் அருள்மாது தேமாது திருமாது திகழ்கின்ற ஒரு மாது’

இந்த அம்மன் பாடலைக் கேட்டாலே அனைவருக்கும் ஒரு பக்திப் பரவச நிலை உடலெங்கும் பொங்கி எழும்.
அப்படிப்பட்ட பூமாது என்னும் தேவியை தரிசித்திருக்கிறீர்களா?

அந்த அம்பிகையை தரிசிக்க வேண்டுமெனில் வடபாதி என்ற திருத்தலத்திற்குத்தான் செல்ல வேண்டும்.
ஊரைச் சுற்றி பச்சைப் பசேலென்று மரம், செடி, கொடிகள் சூழ்ந்திருக்க, ஊரின் நடுநாயகமாக கோயில் கொண்டுள்ளாள் பூமாத்தம்மன்.

மிக ஆற்றல் வாய்ந்த தெய்வமாகக் கோயில் கொண்டிருக்கும் பூமாத்தம்மனை ஒருமுறை தரிசிப்பவர்களுக்கு சங்கடங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும் என்ற நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் இத்தலத்திற்கு வருகைதரும் பக்தர்கள்.
லலிதா சகஸ்ரநாமத்தில் அம்பிகையை தட்சிணாமூர்த்தி ரூபிணி என்று வர்ணித்திருக்கிறார் சங்கரர். அவ்வாறே கல்லாழ மரத்தை விருட்சமாகக் கொண்டவளாகவும், இடது ஒரு விழி மேல் நோக்கியபடியும் வலதுகண் பூமியை நோக்கியபடியும் ஒருகாதில் குழந்தையைக் குண்டலமாகவும் இடப்புறக் காதில் மகர குண்டலமும் அணிந்தவாறு பிரம்ம தேஜசுடன் பூணூலை அணிந்து காட்சியளிக்கிறாள் அம்பிகை.

தட்சிணாமூர்த்திக்கு உரியது போல சிரசில் அக்னி ஜுவாலை காணப்படுகிறது. நான்கு திருக்கரங்களில் வலது கையில் சூலமும், கீழ்க்கையில் அபய முத்திரையும், இடதுபுற கையில் பாசமும், அதன் கீழ்க்கையில் பிரம்ம கபாலமும் அமைந்துள்ளன. அம்பிகை வழிபாட்டு நூல்கள், “அம்பாள் நான்கு கரங்கள் உடையவளாக இருந்து வேத சொரூபிணி என்று தன்னை உணர்த்துகிறாள்’ என்கின்றன.

மகிமைகள் நிறைந்த இந்த மலர் மாதரசியைப் பற்றி கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகான் கந்தசாமி சித்தர், “பூமாது தில்லைப் பூமாது’ எனும் துதியை (1880-ம் ஆண்டு) 108 விருத்தங்களாக ஓலைச்சுவடியில் எழுத்தாணியால் எழுதி வைத்துள்ளார். எந்த எழுத்தாணியும், சுவடிகளும் இன்றும் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் அம்பிகையைப் பற்றிய பூமாது தாலாட்டும், பூமாத்தம்மன் விருத்தமும் இத்தலத்தின் ஆராதனை மற்றும் கூட்டுப் பிரார்த்தனைப் பாடல்களாக திகழ்கின்றன.
தேவியை தரிசிக்க வருகின்ற பக்தகோடிகள் சன்னதி முன் நின்று எதை நினைத்து வேண்டினாலும் தனது ஆசியை வழங்குவது போன்று தன் திருமேனியில் இருந்து பூவிழச் செய்வாள் என்பது வணங்குபவர்களின் நம்பிக்கையான சொல். இங்கே பூமாத்தம்மன் கோயில் கொண்டதற்குக் காரணமாக ஒரு புராணச் சம்பவம் சொல்லப்படுகிறது.

ஒரு சமயம் சிவபெருமான் திருக்கயிலாயத்தின் மலர்ச்சோலையில் பார்வையைச் செலுத்தியபோது, உமாதேவியார் அவருடைய இருகண்களையும் பின்புறமாக வந்து பொத்திவிட, அண்டசராசரங்களும் ஈரேழு உலகங்களும் இருண்டு போயின.
ஒரு கணத்தில் நிலை தடுமாறிய பரமன், தேவியின் கரங்களை உதறிவிட்டு, “நீ விளையாடுவதற்கு நான் தான் பொருளாகக் கிடைத்தேனா? அன்று ஓர் எறும்பை உணவிடாமல் பேழைக்குள் அடைத்து வைத்து, எல்லா ஜீவராசிகளுக்கும் உணவிட்டீர்களா என்று கேட்டாய். இன்று இரு கண்களையும் பொத்தி அகிலமனைத்தையும் ஒரு கணம் இருண்டு விடச் செய்தாய். ஏன் இவ்வாறு செய்தாய்? இதற்குப் பிராயச்சித்தம் செய்ய பூவுலகில் திருக்கடிகை (தற்போது கெடிலம்) ஆற்றங்கரைக்கு வடபால் ஒரு காத தூரத்தில் உள்ள மல்வனத்திற்குச் சென்று விரதம் இருப்பாய். தக்க சமயத்தில் உன்னை நேரில் வந்து ஆட்கொள்வோம்’ என்று தேவியை விட்டுச் சினத்துடன் விலகினார்.

பரமனின் சொல் பாறாங்கல்லை விட உறுதியானது என்றறிந்த தேவி, அவர் குறிப்பிட்ட தலத்திற்கு வந்து ஒரு அழகான மலர்வனத்தில் சப்தமாதர்களுடன் தங்கி சிவபூஜையைத் தொடர்ந்தார். சில காலம் ஆனதும் பங்குனி உத்திரத் திருநாள் வந்தது. பங்குனி உத்திரத் திருநாட்களில் அம்பிகை திருக்கயிலாயத்தில் பரமனுடன் சேர்ந்திருந்து திருக்கல்யாண தினத்தினைக் கொண்டாடுவது வழக்கம். தேவி தேவியரின் திருக்கல்யாண நாளில் ஈரேழு பதினான்கு லோகவாசிகளும், கயிலாயத்தில் கூடி தம்பதி சமேதராக இறைவனையும் இறைவியையும் தரிசிப்பர். எனவே, சப்தமாதர்களுள் ஒருத்தியான கௌமாரியை மலர்வனக் காவலுக்கு வைத்துவிட்டு திருக்கயிலாயக் காட்சியைக் காண மற்ற ஆறு மாதர்களும் அம்பிகையோடு சென்று விட்டனர்.

தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு கந்தர்வர்கள், கௌமாரியை மயங்கச் செய்து, மலர்வனப் பூக்களைப் பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இறைவியும் மற்ற கன்னியரும் திரும்பி வந்தபோது கௌமாரி மயங்கிக் கிடப்பதையும், மலர்வனம் காய்ந்து கிடப்பதையும் கட்டனர். தேவி தன்திருநோக்கால் கந்தர்வர்கள் வந்து சென்றதை அறிந்து வெகுண்டெழுந்தாள். தேவி, தன் வாயிலிருந்து தீப்பிழம்பை அனுப்பி, அவர்களை சம்ஹாரம் செய்து விட்டு பின்னர் சாந்த சொரூபிணியாக, “இவ்வனத்தின் வடபாதியிலேயே நாம் ஆருளாட்சியை நடத்துவோம்! அதோடு இப்பூவனச்சோலையை யாமே காத்துவருவோம். சப்தமாதர்களான நீங்கள் என்னோடு இங்கே அமர்வீர்!’ என்று கூறினாள்.

அன்றிலிருந்து பூமணமும், காய்மணமும், கனித்தென்றலும் வீசும் இந்தப் பூவனச் சோலையில் அன்னை பார்வதிதேவியே சர்வாபரண பூஷணியாகக் கோயில் கொண்டு, தன்னை நாடி வந்து வணங்கும் பக்த கோடிகளின் கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறாள்.

பூமாத்தம்மனின் தாலாட்டைப் பாடிட, கருவில் குழந்தை மலர்கிறது. விருத்தத்தைப் படித்தால் மன வருத்தங்கள் நீங்குகிறது. அவ்வளவு ஏன் “பூமாத்தம்மா’ என்று ஒரு முறை சொன்னாலே போதும், வாழ்வு மணக்கிறது... என் வியக்கிறார்கள் பக்தர்கள்.
ஆலயத்தினுள் நுழைந்ததும் இணைந்து நிற்கும் அரசு, வேம்பு மரங்கள் லக்ஷ்மிகரமாய் நம்மை வரவேற்கின்றன. இந்த மேடையை வணங்கிச் சென்றால் விஜயகணபதி, நாகலிங்கேஸ்வரர் சன்னதியும்; அதனுள் ஒரு பகுதியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட எட்டு நாகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த நாகங்களை வழிபட்டால், அஷ்டசர்ப்ப தோஷங்கள் விலகுமாம்.

திருச்சுற்றில் அங்காளபரமேஸ்வரி சன்னதியும், நவகிரக மேடையும் அமைந்துள்ளன. தொடர்ந்து வலம் வருகையில் ஷீரடி சாய்பாபா, துவாரகாமயி பாபா, தன்வந்திரி பகவான், சப்தமாதர்கள், லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள், மந்திரவராகி, பிரத்யங்கிரா தேவி ஆகியோர் தரிசனம் கிட்டுகிறது. அடுத்த பகுதியில் பக்த ஆஞ்சநேய சுவாமி, புட்டபர்த்தி பாபா, அதர்வண பத்ரகாளி, உக்ர பிரத்யங்கரா மூர்த்தி, சிவபெருமான் ஆகியோர் தனிச்சன்னதியிலும்; தொடர்ந்து அபிராமி அம்மன் சமேத சர்ப்ப லிங்கேஸ்வரர், பாலமுருகன், பாலகணேஸ்வரர், அகத்திய மகாமுனிவர், தேணுகா பரமேஸ்வரி ஆகியோரும் உள்ளனர்.

திருச்சுற்றை நிறைவு செய்து மூலஸ்தானத்திற்குள் நுழையும் முன்பு அர்த்த மண்டபமும், பாலாற்று வெள்ளத்தில் ஒதுங்கிய ஞானசக்தி கணபதியும், வடக்கு முகம் பார்த்த தீபதுர்க்காவும், ஐந்துதலை நாகராஜ மூர்த்தியும், வள்ளி-தெய்வானை சமேத செல்வ முத்துக்குமார சாமி; இவர்கள் வலப் பாகத்தில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளும், இடப்பாகத்தில் அருணகிரிநாதரும் உள்ளனர்.

தென்முகம் பார்த்தபடி அஷ்ட புஜ பைரவரும், சன்னதிக்கு முன் காவல் தெய்வமாக கருப்பண்ணசாமியும் வீற்றிருக்க, எதிரில் சிம்ம பலிபீடம் உள்ளது. கருவறை முன்பாக இருமருங்கிலும், பல்லவர் காலக் கட்டடக் கலை நுட்பத்தில் செதுக்கப்பட்ட தீபநாச்சியார்கள் விளக்கேற்றியபடி நிற்க, மூலஸ்தான சக்தி தேவியாக பூமாத்தம்மன் பத்ம பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.

அஷ்ட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷங்கள் நீங்க வெள்ளி, செவ்வாய், பௌர்ணமி அன்று அஷ்ட நாகங்களுக்கு தீபம் ஏற்றி பூமாத்தம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தல் வேண்டும். மாங்கல்ய தோஷம் விலக கௌரி மங்கள பூஜை செய்து தங்கத்தால் தாலி செய்து சுமங்கலி கையால் தாலிகட்டச் செய்வது தல வழக்கம்.

தலவிருட்சமாக கல்வாழை மரமும், அரச மரமும் அருகருகே உள்ளன. பொருளாதாரத்தில் உயர்நிலை பெறவும், தொழிலில் வளர்ச்சி காணவும், அமாவாசை-பௌர்ணமி, அஷ்டமி தினங்களில் விசேஷ யாகம், பிரார்த்தனைகள் பக்தர்களால் நடத்தப்படுகிறது. வருடாந்திர உற்சவங்களாக வசந்த நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை விஷû, ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், சாரதா நவராத்திரி, மார்கழி பாவை விழா, தை வெள்ளி அலங்காரம், மாசி மகம் மற்றும் சிவராத்திரி பூஜைகள் நடத்தப்படுகின்றன. பூமாத்தம்மனை தரிசித்தால் புதுவாழ்வு மலரும் என்பது உறுதி.

சென்னை - திண்டிவனம் சாலையில், மாமண்டூரில் இறங்கி மேற்கே ஒன்றரை கி.மீட்டரில் வடபாதி தலத்தை அடையலாம்.

- கே. குமார சிவாச்சாரியார், வழுதலம்பேடு.

குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக