புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகை மாற்றிவைப்போம்...  I_vote_lcapஉலகை மாற்றிவைப்போம்...  I_voting_barஉலகை மாற்றிவைப்போம்...  I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
உலகை மாற்றிவைப்போம்...  I_vote_lcapஉலகை மாற்றிவைப்போம்...  I_voting_barஉலகை மாற்றிவைப்போம்...  I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
உலகை மாற்றிவைப்போம்...  I_vote_lcapஉலகை மாற்றிவைப்போம்...  I_voting_barஉலகை மாற்றிவைப்போம்...  I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
உலகை மாற்றிவைப்போம்...  I_vote_lcapஉலகை மாற்றிவைப்போம்...  I_voting_barஉலகை மாற்றிவைப்போம்...  I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
உலகை மாற்றிவைப்போம்...  I_vote_lcapஉலகை மாற்றிவைப்போம்...  I_voting_barஉலகை மாற்றிவைப்போம்...  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
உலகை மாற்றிவைப்போம்...  I_vote_lcapஉலகை மாற்றிவைப்போம்...  I_voting_barஉலகை மாற்றிவைப்போம்...  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகை மாற்றிவைப்போம்...  I_vote_lcapஉலகை மாற்றிவைப்போம்...  I_voting_barஉலகை மாற்றிவைப்போம்...  I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
உலகை மாற்றிவைப்போம்...  I_vote_lcapஉலகை மாற்றிவைப்போம்...  I_voting_barஉலகை மாற்றிவைப்போம்...  I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
உலகை மாற்றிவைப்போம்...  I_vote_lcapஉலகை மாற்றிவைப்போம்...  I_voting_barஉலகை மாற்றிவைப்போம்...  I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகை மாற்றிவைப்போம்...  I_vote_lcapஉலகை மாற்றிவைப்போம்...  I_voting_barஉலகை மாற்றிவைப்போம்...  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகை மாற்றிவைப்போம்...  I_vote_lcapஉலகை மாற்றிவைப்போம்...  I_voting_barஉலகை மாற்றிவைப்போம்...  I_vote_rcap 
18 Posts - 3%
prajai
உலகை மாற்றிவைப்போம்...  I_vote_lcapஉலகை மாற்றிவைப்போம்...  I_voting_barஉலகை மாற்றிவைப்போம்...  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உலகை மாற்றிவைப்போம்...  I_vote_lcapஉலகை மாற்றிவைப்போம்...  I_voting_barஉலகை மாற்றிவைப்போம்...  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உலகை மாற்றிவைப்போம்...  I_vote_lcapஉலகை மாற்றிவைப்போம்...  I_voting_barஉலகை மாற்றிவைப்போம்...  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உலகை மாற்றிவைப்போம்...  I_vote_lcapஉலகை மாற்றிவைப்போம்...  I_voting_barஉலகை மாற்றிவைப்போம்...  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உலகை மாற்றிவைப்போம்...  I_vote_lcapஉலகை மாற்றிவைப்போம்...  I_voting_barஉலகை மாற்றிவைப்போம்...  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகை மாற்றிவைப்போம்...


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Apr 14, 2012 4:39 pm

உலகை மாற்றிவைப்போம்...

ஒரு நாள் காலைநேரம், ஒரு முதியவர் கடற்கரையில் மெல்ல நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கண்ட ஒரு காட்சி அவரது கவனத்தைக் கவர்ந்திழுத்தது. ஒரு இளைஞன் ஒருவன், அலைகளினூடேயும், கரையிலும் மாறி மாறி ஓடிக் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.

முதியவருக்கு அவன் என்ன செய்கிறான் என்று அறியும் ஆர்வம் மேலிட்டது. அவன் அருகில் சென்றார். அவன் குனிந்து கரையோரம் ஒதுங்கிக்கிடக்கும் நட்சத்திர மீன்களை ஒன்றொன்றாகப் பொறுக்கி, மெல்ல கடலுக்குள் வீசிக்கொண்டிருந்தான். "தம்பி! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார் முதியவர். "ஐயா! வெயில் ஏறிக்கொண்டிருக்கிறது, அலை உள்வாங்குகிறது. எனவே, கரையோரம் இரவில் ஒதுங்கியுள்ள இந்த நட்சத்திர மீன்களை நான் கடலுக்குள் எறிந்துகொண்டிருக்கிறேன். இல்லையென்றால் அவை செத்துவிடும்." என்றான் இளைஞன்.

"தம்பி! இந்தக் கடற்கரையோ பல மைல்கள் நீளமானது. கரை முழுவதும் ஏராளமான மீன்கள் ஒதுங்கியுள்ளன. உன் முயற்சியால் ஒரு மாற்றமும் விளையப்போவதில்லை." என்றார் முதியவர். இளைஞன் புன்னகைத்தான். குனிந்து மற்றொரு மீனை எடுத்துக் கடலில் வீசியவாறே "மாற்றம் இந்த மீனுக்கு விளைந்துள்ளது ஐயா!" என்றான்.

ஆம். நம்முடைய ஒவ்வொரு சிறிய நல்ல செய்கையும் மற்றவர்கள் மீது தாக்கத்தை உண்டாக்க வல்லது. பார்ப்பதற்கு மிகச்சிறியதாக ஒருவருக்குத் தோன்றக்கூடிய உதவி, மற்றொருவருக்கு மிகப்பெரியதாக இருக்கலாம். உதவியோ, நல்ல செயல்களோ மட்டுமல்ல, நாம் சரியான நேரத்தில் கூறும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவரது வாழ்வை மாற்றியமைக்க இயலும்.

ஈசுவர சந்திர வித்யாசாகர் என்ற பெரிய கல்வியாளர் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தார். அங்கொரு சிறுவன் அவரிடம் ஒரு ரூபாய் பிச்சை போடுமாறு கேட்டான். அவர் அவனைப்பார்த்து "நான் உனக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டதற்கு அச்சிறுவன் ஐம்பது பைசாவை என் அம்மாவிடம் கொடுத்துவிட்டு ஐம்பது பைசாவிற்குப் பழம் வாங்கிவந்து விற்பேன்" என்று சொன்னான். ஈசுவர சந்திரர் அவனுக்கு ஒரு ரூபாய் கொடுத்தார்.

வருடங்கள் கழிந்தன. மீண்டும் அதே ஊருக்கு ஈசுவர சந்திரர் விஜயம் செய்தார். அப்பொழுது ஒரு பெரிய மனிதர் வந்து அவரைப் பணிந்து வணக்கம் செய்து "ஐயா! என்னைத் தெரிகிறதா?" என்று கேட்டார். "மன்னிக்கவும். எனக்கு உங்களை அடையாளம் தெரியவில்லையே! நீங்கள் யார்?" என்று வினவினார் ஈசுவர சந்திரர். "நீங்கள் சில வருடங்களுக்கு முன்பு இந்த ஊருக்கு வந்த பொழுது ஒரு சிறுவன் தங்களிடம் ஒரு ரூபாய் பிச்சை கேட்டான். தாங்களும் கொடுத்தீர்கள். அந்த ஒரு ரூபாயை முதலீடாகக் கொண்டு அவன் பழ வியாபாரம் தொடங்கி, சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்து இப்பொழுது ஒரு பெரிய பணக்காரனாகி விட்டான். அந்தச் சிறுவன் நான்தான். இப்பொழுது மீண்டும் நீங்கள் இந்த ஊருக்கு வருகிறீர்கள் என்று கேள்விப்பட்டு உங்களைக் கண்டு நன்றி தெரிவிக்க வந்தேன்" என்று சொன்னாராம் அந்தப் பெரிய மனிதர்.

ஒரு ரூபாய் என்பது பெரிய தொகையல்ல. ஆனால் அது ஒரு சிறுவனின் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கிவிட்டது அல்லவா? நம்மாலும் பிறர் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான வல்லமை நம்மிடம் உண்டு. இத்தகைய சிறிய நன்மைகள் பிறருக்கு உதவுவதற்காக மட்டுமல்ல, நம் மனதில் நம்மைப்பற்றியே ஒரு நல்ல மதிப்பீடும் நேர்மறையான உணர்வும், ஒரு திருப்தியும் உண்டாக இவை வழி வகுக்கும்.

என்னுடைய நண்பர் ஒருவர், பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதைக் கடுமையாகக் கண்டனம் செய்வார். நான் எதிர்ப்படும் பிச்சைக்காரர்களுக்கு ஓரிரு ரூபாய் கொடுத்தால் கேலி செய்வார். "நீ பிச்சை எடுப்பதை ஊக்குவிக்கிறாய்" என்றும் சொல்வார். ஒரு முறை ஒரு வயதான மனிதர், மலிவுவிலை ஊதுபத்திகளை விற்றுக்கொண்டு வந்தார். என் நண்பரை அவர் அணுகி ஒரு பாக்கெட் வாங்கிக்கொள்ளுமாறு கெஞ்சியும் அவர் வாங்கவில்லை. நான் அந்த முதியவரிடம் இருந்து இரு பாக்கெட் ஊதுபத்தியை வாங்கிக்கொண்டேன். பின் என் நண்பரிடம் கேட்டேன் "நீங்கள் பிச்சை எடுப்பதை ஊக்குவிக்காதே என்கிறீர்கள். சரி. அப்படியானால், உழைத்தே பிழைக்கவேண்டும் என்ற உணர்வுடன் இந்தத் தள்ளாத வயதில் வந்து ஊதுபத்தி வியாபாரம் செய்பவரையாவது ஊக்குவிக்கவேண்டுமல்லவா? அதையும் செய்யவில்லை என்றால் எப்படி?" என்று.

முகமது யூனுஸ் என்ற வங்காள தேசத்தைச் சேர்ந்த பொருளாதார மேதையைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். அவரும் பிச்சையிடுவதைக் கண்டிக்கிறார்தான். ஆனால் என் நண்பர் போல் வறட்டு வாதமல்ல அது. பிச்சை எடுக்க நேர்வது, வறுமையினால்தானே! அந்த வறுமையை நீக்கிக்கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கவேண்டும் என்பது அவர் கருத்து. அவர் அதைச் செய்து காட்டியவர். தாம் துவங்கிய கிராம வங்கிகள் (Grameen Bank) மூலம் பல்லாயிரக்கானவர்களை வறுமைக்கோட்டை விட்டு வெளியில் வரச்செய்தவர். சின்ன விதையாகத் தோன்றிய அந்த மௌனப்புரட்சிதான் இன்று உலகளாவிய முறையில் சுய உதவிக்குழுக்களாகப் பரிணாமம் பெற்று, பல விழுதுகளுடன் ஆலமரமாய்ப் பலரையும் தாங்கி நிற்கிறது. இது இத்தனை பெரிய அளவில் வெற்றி பெறும் என்று அவரே முதலில் கருதியிருக்கமாட்டார்.

ஆனால், நம்மில் பலர் என்ன செய்கிறோம்? நாம் "பிச்சை ஒரு சமூகக்கேடு" என்று கண்டிக்கிறோம். அது சமூகக்கேடு எனில் அதைக்களைவதற்கு நாம் என்ன முயற்சி செய்யலாம் என்று நாம் யோசிப்பதில்லை. 'அபியும் நானும்' திரைப்படத்தில் வருவது போல் ஒருவரை நாம் வீட்டில் சேர்ப்போமா? பிச்சை எடுக்கின்ற ஒருவரை நமது பணியாளராக நியமிப்போமா? அத்தனை பரந்த மனப்பான்மை நமக்கு உண்டா? இல்லை. முகமது யூனுஸ் போல அவர்களுக்குக் கடனுதவி செய்து, சுய தொழில் செய்ய ஊக்குவிப்போமா? இல்லை. நம்மால் முடிந்த அளவு, ஒரு வேளை உணவோ, ஒரு பழைய உடையோ, அல்லது ஒன்றிரண்டு ரூபாய் பணமோ தரக்கூட நமக்கு மனமிருப்பதில்லையே!

இது மட்டும்தான் நல்ல செயல் என்றில்லை. வழியில் கிடக்கும் வாழைப்பழத்தோலை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடுவது கூட ஒரு சேவைதான். ஒரு கண்பார்வையற்றவர் சாலை கடக்க உதவுவதும், ஒரு முதியவர் அல்லது கர்ப்பிணிப்பெண்ணுக்கு நாம் அமர்ந்திருக்கும் இருக்கையை விட்டுக்கொடுப்பதும், நம்மிடமிருக்கும் பழைய புத்தகங்களை யாருக்கேனும் தானமளிப்பதும், பள்ளிக்கு நேரமாகிவிட்டது என்று பரிதவிக்கும் மாணவனை அல்லது நேர்முகத்தேர்விற்குப் போகவேண்டிய ஒருவரை நமது வாகனத்தில் ஏற்றிச் செல்வதும்... இப்படி எத்தனை எத்தனையோ நல்ல செயல்களை நாம் செய்யலாம்.

ஒரு நாளைக்கு ஒரு சிறு நல்ல செயலாவது செய்வது என்று உறுதி எடுத்துக்கொள்வோம். நமது வாழ்வை மட்டுமல்ல.. நமது அருகில் இருக்கும் எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றலாம். ஒரு மாற்றத்தை உலகில் உண்டாக்கலாம்.

இணையத்திலிருந்து....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 14, 2012 5:54 pm

பணம் கொடுத்டுதவுவது மட்டும் தர்மமில்லை. பிறருக்கு தேவப்படுகின்ற எதை கொடுத்தாலும் தர்மம்தான்.

நல்ல அருமையான கருத்துக்கள் றினா சூப்பருங்க
முஹைதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக