புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயன்கள் வரலாறு Poll_c10மாயன்கள் வரலாறு Poll_m10மாயன்கள் வரலாறு Poll_c10 
52 Posts - 61%
heezulia
மாயன்கள் வரலாறு Poll_c10மாயன்கள் வரலாறு Poll_m10மாயன்கள் வரலாறு Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
மாயன்கள் வரலாறு Poll_c10மாயன்கள் வரலாறு Poll_m10மாயன்கள் வரலாறு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மாயன்கள் வரலாறு Poll_c10மாயன்கள் வரலாறு Poll_m10மாயன்கள் வரலாறு Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
மாயன்கள் வரலாறு Poll_c10மாயன்கள் வரலாறு Poll_m10மாயன்கள் வரலாறு Poll_c10 
1 Post - 1%
viyasan
மாயன்கள் வரலாறு Poll_c10மாயன்கள் வரலாறு Poll_m10மாயன்கள் வரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயன்கள் வரலாறு Poll_c10மாயன்கள் வரலாறு Poll_m10மாயன்கள் வரலாறு Poll_c10 
244 Posts - 43%
heezulia
மாயன்கள் வரலாறு Poll_c10மாயன்கள் வரலாறு Poll_m10மாயன்கள் வரலாறு Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
மாயன்கள் வரலாறு Poll_c10மாயன்கள் வரலாறு Poll_m10மாயன்கள் வரலாறு Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாயன்கள் வரலாறு Poll_c10மாயன்கள் வரலாறு Poll_m10மாயன்கள் வரலாறு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மாயன்கள் வரலாறு Poll_c10மாயன்கள் வரலாறு Poll_m10மாயன்கள் வரலாறு Poll_c10 
13 Posts - 2%
prajai
மாயன்கள் வரலாறு Poll_c10மாயன்கள் வரலாறு Poll_m10மாயன்கள் வரலாறு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மாயன்கள் வரலாறு Poll_c10மாயன்கள் வரலாறு Poll_m10மாயன்கள் வரலாறு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மாயன்கள் வரலாறு Poll_c10மாயன்கள் வரலாறு Poll_m10மாயன்கள் வரலாறு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மாயன்கள் வரலாறு Poll_c10மாயன்கள் வரலாறு Poll_m10மாயன்கள் வரலாறு Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாயன்கள் வரலாறு Poll_c10மாயன்கள் வரலாறு Poll_m10மாயன்கள் வரலாறு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயன்கள் வரலாறு


   
   

Page 1 of 2 1, 2  Next

மாயன்2012
மாயன்2012
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 12/04/2012

Postமாயன்2012 Thu Apr 12, 2012 5:58 pm

மாயன் நாகரிகம் அமெரிக்காவில் வசித்த செவ்விந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இந்த நிலப்பகுதிகள் காலத்தின் போக்கால் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன. அவை மெக்ஸிகோ, கௌதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ், எல் சால்வடார் ஆகியனவாகும்.


கி.மு 11,000 – மாயன் பகுதிகளில் மக்கள் முதன் முதலாக குடியேறத் துவங்கினர். இவர்கள் அக்கம்பக்க நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதபடுகிறது. இவர்கள் தங்கள் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை பச்சையாக சாப்பிட்டு வாழ்ந்தார்கள்.

கி.மு. 2600 - மாயன் நாகரிக தொடக்கம். மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல், விவசாயத்தில் ஈடுபட துவங்கினர். கி.மு. 700 - மாயங்களின் எழுத்துக்கள் தொடங்கின. இவை சித்திர எழுத்து என்ற வகை. அதாவது வாசிக்கும் முறையில் இல்லாமல் படம் வரைந்து விளக்கும் முறை. கி.மு. 400 - இந்த காலகட்டத்திலோ அல்லது இதற்க்கு முன்பாகவோ காலண்டர்கள் கண்டுபிடிக்கபட்டிருக்கலாம். கி.மு. 300 - மன்னர்கள், பிரபுக்கள்,பூசாரிகள் என்று சீரான ஆட்சிமுறை. ஒவ்வொரு பதவிக்குமான பொறுப்புகள் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

கி.மு. 100 - டேயோட்டிவாக்கன் (Teotihuacan) என்ற நகரம் மாயன் மக்களால் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் இன்றும் இருக்கிறது. கலை, மதம், வாணிபம், பிரமிடுகள், கோயில்கள், அரண்மனைகள், பொதுச்சதுக்கங்கள் பிரம்மாண்டமாக இருந்த ஊர் இது. கி.மு.50 - சேர்ரோஸ் (cerros) என்ற நகரம் உருவானது. கோவில்கள் மண்டபங்கள் ஆகியவை நிறைந்த நகரம் இது.

கி.பி. 1511 கோன்சலோ குரேரோ என்ற ஸ்பெயின் நாட்டுகாரரின் கப்பல் புயலில் சிக்கி மாயன் பகுதியில் கரை தட்டியது. அவர் அங்கு வாழும் உள்ளூர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கி.பி. 1517 ஸ்பெயின் நாடு மாயன் மக்கள் மேல் போர் தொடுத்தது. 90 சதவீத மாயன் மக்கள் கொல்லபட்டார்கள். அத்தோடு மாயன் மக்கள் கலாச்சாரம் மறைந்தது.


இவர்கள் சோளத்தை முக்கிய உணவாக பயன்படுத்தினார்கள். கோகோ இவர்களின் முக்கிய பானமாக இருந்திருக்கிறது. மாயன்கள் கடவுள்களை மிக நம்பினார்கள். மொத்தம் 166 கடவுள்கள் இவர்களது வழிபாட்டில் இருந்திருக்கிறது. பிரமாண்டமான கோயில்கள் திருவிழாக்கள் என இருந்த இவர்கள் பலியிடுவதில் விலங்குகள் மட்டுமின்றி கைதிகள், அடிமைகள், குழந்தைகள் என பலியிட்டுள்ளனர். இயற்கையை பற்றி கவலை படாமல் காடுகளை அழித்து விவசாயம் செய்தனர். இதனால் மழை குறைந்து பசி பட்டினி வறட்சி என்ற நிலைமையில், பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்பெயினின் படையெடுப்பால் தொண்ணூறு சதவிகிதத்திற்கு மேல் கொல்லப்பட்டனர். சிலர் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள பெரு போன்ற நாடுகளுக்கு ஓடினர் என்று வரலாறு கூறுகிறது..
மாயன்கள் வரலாறு 248px-Maya.svg

வாழ்ந்த பிரதேசம்

இவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் காலத்தின் போக்கு மற்றும் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன .அவை மெக்ஸிகோ,கவுதமாலா ,பெலீஸ் ஹொண்டுரஸ் எல்சல்வடோர் என்பனவாகும் .

நாகரிகத்தின் மைல்கற்கள்

கி.மு 2600 : மாயன் நாகரிகத்தின் ஆரம்பம் மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல் விவசாயத்திலும் ஈடுபட ஆரம்பித்தனர் .
கி.மு 700 : Hieroglyph எனும் சித்திர எழுத்து முறையினை மாயன்கள் ஆரம்பித்தனர் .இச் சித்திர எழுத்து முறையானது வாசிக்கும் முறையில் இல்லாமல் படம் வரைந்து விளக்கும் முறையாக இருந்தது .
கி.மு 400 : இக்காலகட்டத்தில் இவர்களால் நாட்காட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கி.மு 300 : மன்னர்கள் ,பிரபுக்கள் ,பூசாரிகள் என ஒவ்வொரு பதவிக்குமான பொறுப்புக்கள்,அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டன .
கி.மு 100 : Teotihuacan என்ற நகரம் மாயன் மக்களால் உருவாக்கப்பட்டது .இந்த நகரம் இன்றும் இருக்கிறது .கலை,மதம் வர்த்தகம் என்பன இங்கு காணப்பட்டன.
கி.மு 50 : Cerrors என்ற நகரம் உருவாகியது. இது கோயில்கள் ,மண்டபங்கள் நிறைந்த நகரமாகும்.
கி.பி 100 : பல உள்நாட்டுக் கலவரங்கள் ஆரம்பமாகின .மாயன் நாகரிகம் முதன்முதலாக சரிவுப் பாதையில் காலெடுத்து வைத்தது .
கி.பி 900 : மேற்குப் பகுதியில் நகரங்கள் ஒவ்வொன்றாக மறைந்தன.மாயன் நாகரிகம் வீழ்ச்சியின் ஆரம்பம் .
கி.பி 1511 : கோன்ஷலோ குரேரோ (Gonzalo Gurrero) என்ற ஸ்பானியர் புயலில் சிக்கி மாயன் பகுதியில் இறங்கினார்.
கி.மு 1517 : ஸ்பெயின் நாடு மாயன் மக்கள் மீது போர்தொடுத்து 90 % மாயன் மக்களைக் கொன்றொழித்தது .அதனால் மக்கள் மாத்திரமின்றி,அவர்களின் கலாச்சாரமும் மறைந்தது.

உணவும் உடையும்

மாயன் மக்களின் பிரதான உணவாக சோளமும் பிரதான பானமாக கொக்கோவும் இருந்தது .உணவில் உப்பும் முக்கியமாக சேர்க்கப்பட்டது .காய்கறி ,இறைச்சி போன்றவற்றை உப்பில் இட்டுப் பதப்படுத்தினார்கள் .பருத்தி ,கம்பளி ,சணல்,கற்றாழை நார் போன்றவற்றால் நெய்யப்பட்ட உடைகளை அணிந்தனர்.

மத வழிபாடுகள்

மத நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் மாயன் மக்களிடத்தில் முக்கிய இடத்தை வகித்தன .மழை,காற்று,பிறப்பு ,இறப்பு ஆகாயம் ,கல்வி ,சூரியன் ,சந்திரன் ,அன்பு ,வியாபாரம் ,பாதாள உலகம் என 166 கடவுள்கள் இருந்தன .மிகப்பிரமாண்டமான கோயில்களை கட்டி அடிக்கடி திருவிழாக்களை நடத்தினர் .விலங்குகள் ,கைதிகள்,அடிமைகள் ,குழந்தைகள் என பலிகள் சாதாரணமாக நடந்தன.

கலைத்துறை

மன்னர்களின் அரண்மனைகள் ,கோயில்கள் ,எகிப்திய பிரமிட் போன்ற கட்டடங்கள் கலை நயத்தோடு நிர்மாணிக்கப்பட்டன .மனித உருவங்கள் துல்லியமாக செதுக்கப்பட்டன .மனித சக்தியே கட்டிடங்களை உருவாக்கப் பயன்பட்டது .கருங்கல் ,நீர் கலந்த சுண்ணாம்பு ஆகியவையே கட்டட மூலப்பொருட்களாக விளங்கின .மாயன்கள் அற்புதம் நிறைந்த சிற்பங்களைக் கல்லிலும் மண்ணிலும் உருவாக்கினார்கள் . விதவிதமான மட்பாண்டங்கள் செய்தார்கள். பீங்கான் ,பாத்திரங்கள் ,மரப்பட்டைகள் என்பனவற்றில் கடவுள்கள் ,இயற்கைக்காட்சிகள் ,மிருகங்கள் ,பறவைகள் ,என ஓவியங்களை தீட்டினார்கள் .தங்கத்தில் ஆலய மணிகளையும் கடவுள்களின் வடிவத்தில் முகமூடிகளையும் செய்தார்கள் .மாயன் மக்களின் எழுத்து சித்திர எழுத்தாகும்.இவற்றில் முந்நூறு குறியேடுகள் இருந்ததன .கல்வெட்டுக்கள்,மான்தோல் மற்றும் மர இலைகளால் தயாரிக்கப்பட்ட காகிதம் ஆகியவற்றில் இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்தி,தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர் .

வானியல் அறிவு

இம்மக்களின் வானியல் தொடர்பான அறிவு வியக்கத்தக்கது .சூரிய ,சந்திர இயக்கங்களைப் பதவு செய்ய மாயன் மக்கள் வான் ஆய்வுகூடங்களை அமைத்திருந்தனர்.இவற்றில் தொலைநோக்குகள் போன்ற கருவிகளும் இருந்தன .1945க்குப் பின்னர்தான் விஞ்ஞானிகளால் "பால் வீதி "(Milkway )பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.ஆனால்,அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாயன் மக்கள் பால்வீதி பற்றி அறிந்திருந்தார்கள்.

நாட்காட்டிகள்

பல்வேறு நாட்காட்டிகள் பாவனையில் இருந்தன. அதில் ஒரு நாட்காட்டியானது,365 நாட்களைக் கொண்டது. ஆண்டுகளுக்கு 18 மாதங்கள் .ஒவ்வொரு மாதமும் 20 நாட்களை கொண்டிருந்தது.இதனை "ஹாப்" (Haab ) என அழைத்தனர் .இதன்படி,வருடத்தில் 360 நாட்கள் சாதாரண எஞ்சிய 5 நாட்களை அதிஷ்டம் இல்லாத நாட்கள் என்றும் கருதினர் .கி.மு 550 இல் இந்த நாட்காட்டி முறை வந்திருக்கலாம் என கருதப்படுகிறது .மற்றொரு வகை நாட்காட்டியில் மொத்தம் 260 நாட்கள் ஒவ்வொரு ஆண்டும் 13 மாதங்களைக் கொண்டது .மாதமொன்றில் 20 நாட்கள். இதற்கு "ஸோல்கின் "(Tsolkin ) என்று பெயர். இது "புனித நாட்காட்டி "என்று அழைக்கப்பட்டது .மாதமொன்றின் 20 நாட்களுக்கும் 20 கடவுள்களின் பெயரை வைத்திருந்தனர்.

நாகரிகத்தின் வீழ்ச்சி

இரு பிரதான காரணங்கள் மாயன் நாகரிகத்தின் மறைவுக்கு வித்திட்டன .மாயன் மக்கள் தமது இயற்கைச் சூழலைக் காப்பாற்றுவதில் அக்கறை செலுத்தவில்லை .காடுகள் நிறைந்த தமது பகுதிகளில் மரங்களை வெட்டிச் சாய்த்தார்கள் இதனால் மலை குறைந்து வறட்சி ,பஞ்சம் ,பட்டினி ,நோய்கள் என்பன பெருகின .மாயன் சமுதாயம் இவற்றுக்குப் பலியாகின .

அடுத்த காரணம் .15 ஆம் நுற்றாண்டில் படையெடுத்த ஸ்பானியர்கள் 90 % மாயன் மக்களை கொன்றொழித்தனர் .எஞ்சியவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு தொலைவிலுள்ள பேரு நாட்டுக்கு உயிர் தப்பிச் சென்றனர்.மாயன் மக்கள் அழிந்ததனாலும் சொந்த இடத்தைவிட்டு ஓடியதன் காரணமாகவும் மாயன் நாகரிகமும் கலாச்சாரமும் காலப்போக்கில் மறைநது போயின .

மாயர் எண் முறைமை 20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டுமுறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.

மாயன் வானியல்

மற்றைய பெரு நாகரிகங்களைப் போல் மாயன்களும் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியோட்டியே சடங்குகளை நடத்தினர். ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன.

மாயன் நம்பிக்கைகள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள் பல்வேறு மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவர்.

இலக்கியம்/நூல்கள்

ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில் எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள் பல மாயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள் தாம்.

வீழ்ச்சி

இவ்வளவு வளமையாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய புல், பூண்டு இல்லாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை. இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில் முக்கியமானது, அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மாயன்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தாண்டி சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 6:51 pm

மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது நண்பரே

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Apr 12, 2012 7:11 pm

வித்தியாசமாக இருக்கிறது.
அத்துடன் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.
இன்னும் எதிர்பாகிறேன்(றோம்).
பதிவுக்கு நன்றிகள் மாயன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 11:02 pm

மாயன்களின் அழிவு என்பது இன்னும் ஒரு புதிராகவே உள்ளது. ஒரே நேரத்தில் அனைவரும் மறைந்துள்ளனர் என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. எலும்புக் கூடுகள் நிறைந்து காணப்படுகிறது, அவை போரினால் ஏற்பட்ட இழப்பு அல்லது நோய்த்தொற்று காரணமாக இருக்கலாம்.

எப்படி அப்பொழுதே இவ்வளவு அறிவுத் திறன் பெற்றவர்களாக வாழ்ந்தார்கள் என்பது விந்தையிலும் விந்தை. மாயன்களின் மர்மம் வெளிவருமா?



மாயன்கள் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Apr 13, 2012 11:03 am

நம்பவும் முடியலை
நம்பாம இருக்கவும் முடியலை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 2:20 pm

சிவா wrote:மாயன்களின் அழிவு என்பது இன்னும் ஒரு புதிராகவே உள்ளது. ஒரே நேரத்தில் அனைவரும் மறைந்துள்ளனர் என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. எலும்புக் கூடுகள் நிறைந்து காணப்படுகிறது, அவை போரினால் ஏற்பட்ட இழப்பு அல்லது நோய்த்தொற்று காரணமாக இருக்கலாம்.

எப்படி அப்பொழுதே இவ்வளவு அறிவுத் திறன் பெற்றவர்களாக வாழ்ந்தார்கள் என்பது விந்தையிலும் விந்தை. மாயன்களின் மர்மம் வெளிவருமா?
ஆமோதித்தல்
வரும் ஆனா வராது...,

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 13, 2012 2:23 pm

2012 உலகம் அழியும் என்று சொன்னவர்கள் ஏன் காடுகளை அழித்து விவசாயம் செய்தார்கள் . 2012 உலகம் அழியும் என்று சொன்னவர்கள் காடுகளை அழித்தால் நாம் இனம் அழியும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Apr 13, 2012 2:24 pm

வை.பாலாஜி wrote:2012 உலகம் அழியும் என்று சொன்னவர்கள் ஏன் காடுகளை அழித்து விவசாயம் செய்தார்கள் . 2012 உலகம் அழியும் என்று சொன்னவர்கள் காடுகளை அழித்தால் நாம் இனம் அழியும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை .
அவங்க தாங்க சொன்னதா நிரூபிக்க போறாங்க போல அண்ணா

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 21, 2012 6:17 pm

வை.பாலாஜி wrote:2012 உலகம் அழியும் என்று சொன்னவர்கள் ஏன் காடுகளை அழித்து விவசாயம் செய்தார்கள் . 2012 உலகம் அழியும் என்று சொன்னவர்கள் காடுகளை அழித்தால் நாம் இனம் அழியும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை .
சியர்ஸ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மாயன்2012
மாயன்2012
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 12/04/2012

Postமாயன்2012 Sat Apr 21, 2012 6:39 pm

கே. பாலா wrote:
வை.பாலாஜி wrote:2012 உலகம் அழியும் என்று சொன்னவர்கள் ஏன் காடுகளை அழித்து விவசாயம் செய்தார்கள் . 2012 உலகம் அழியும் என்று சொன்னவர்கள் காடுகளை அழித்தால் நாம் இனம் அழியும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை .
சியர்ஸ்

உங்களால் நினைத்தால் பாவமாக இருக்கிறது ஜி , மாயன் கணிப்பு பற்றி நீங்கள் பதிவிடும் எதிர் கட்டுரை படிதால் சிரிப்பாக வருகிறது ஜி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக