புதிய பதிவுகள்
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04
by ayyasamy ram Today at 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சின மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் பாதிப்பில்லாமல் தீர்வுகாணச் சில யோசனைகள்
Page 1 of 1 •
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சின மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் பாதிப்பில்லாமல் தீர்வுகாணச் சில யோசனைகள்
#772577ஓட்டு தேடும் அதிகார வெறியர்களும் பரபரப்புச் செய்திகளில் மயங்கும் ஊடகங்களும் சேர்ந்து அவிழ்த்துவிட்டிருக்கும் மிதமிஞ்சிய பீதியில் உருவான பதற்றத்தை முல்லைப் பெரியாறு அணைக்கட்டு முதல் எர்ணாகுளம் வரையிலான பகுதியில் வாழும் மலையாளிகள் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்றையும் அதன் மூலம் உண்டான நன்மை தீமைகளையும் புறவயமாகப் பார்த்தும் இன்றைய சிக்கலான நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த என்னசெய்ய முடியுமென்று சிந்தித்தும் அவசியமான செயல்களை நோக்கிச் செல்வதே இன்றைய தேவை. அதைப் போலவே பழமையான அணை தொடர்பாகச் சில நியாயமான அச்சங்கள் மலையாளிகளுக்கு உள்ளன என்பதை அணையின் மூலம் பயன் பெறும் தமிழ் மக்களுக்குப் புரியச் செய்து அவற்றைப் போக்கவும் தயாராக வேண்டும்.
இந்தியாவின் முதலாவது நதி மாற்று அணைத் திட்டம் (ணூடிதிஞுணூ ஞீடிதிஞுணூண்டிணிண ஞீச்ட்) முல்லைப் பெரியாறு அணைத் திட்டம். கடலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பெரிய நதியின் போக்கைத் திருப்பித் தமிழகத்திலுள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாத புரம் ஆகிய மாவட்டங்களில் வறண்டு கிடந்த விளைநிலங்களை ஈரமாக்கவும் அங்கே தண்ணீர் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்தவர்களுக்குத் தன்ணீர் கிடைக்கச் செய்யவும் ஓர் அணையை 116 ஆண்டுகளுக்கு முன்பு (1886இல்) கர்னல் ஜான் பென்னி குயிக் என்னும் பொறியாளர் நிர்மாணித்தார். பென்னி குயிக் தாய்ப் பாசத்துடன் ஆற்றைத் திருப்பிவிட்டு வாடிக்கொண்டிருந்த மக்களின் பசிக்கும் தாகத்துக்கும் முடிவுகண்டார் என்ற பொருளில் அந்தோணி முத்துப் பிள்ளை என்னும் தமிழக நாட்டுப்புறக் கவிஞர் எழுதியது முற்றிலும் சரி. ஒரு மக்கள்திரளுக்கு ஜீவ ஜலம் வழங்கக் குயிக் என்னும் பொறியாளர் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டார். அது ஒப்பற்ற சேவை.
அதே சமயம், 116 ஆண்டுகள் பழமை வாய்ந்த அணை இப்போது வலுவிழந்த நிலையிலிருக்கிறது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பழைய காலத்தில் சுர்க்கியில் நிர்மாணிக்கப்பட்ட 20 அடிக்கும் அதிகமான உயரமுள்ள பல அணைகளும் தடுப்பணைகளும் இன்று புதுப்பிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் கட்டுமானங்கள் பாதுகாப்பற்றவையாக மாறும் என்பதைத் தமிழ்நாடு புரிந்துகொண்டிருப்பதைத்தானே இது காட்டுகிறது. முல்லைப் பெரியாறு அணைப் பகுதிகளில் அண்மைக் காலமாக அதிக அளவில் சிறு நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றைவிடப் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படாது என யாராலும் உறுதிகூற முடியாது. ரிக்டர் அளவில் ஆறுக்கும் அதிகமான புள்ளியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் முல்லைப் பெரியாறு அணைக்கட்டு உடைந்து நொறுங்கும் என்பது உறுதி. இது போன்று ஓர் ஆபத்து ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக மூன்று பதிற்றாண்டுகளுக்கு முன்பே நிபுணர்கள் முன்னெச்சரிக்கை செய்துமிருக்கிறார்கள். எனவே முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பலவீனமடையவில்லை எனச் சொல்லிக்கொண்டு இன்று தமிழக அரசு எதுவும் செய்யாமலிருப்பது சரியானதல்ல.
முல்லைப் பெரியாறு அணைக் கட்டு உடைவதைத் தடுக்க இன்னொரு அணை தேவை எனக் கேரள அரசு இன்று கோருகிறது. தற்போதைய அணையிலிருந்து 1,300 அடி தூரம் தள்ளிப் புதிய அணையைக் கட்ட ஆலோசிக்கிறது. அந்த இடம் இன்றைய அணையின் மட்டத்துக்கு 40 அடி கீழே அமைகிறது. அப்படியானால் புதிய அணைக்கட்டு இப்போதைய அணையின் உயரமான 15 அடியைவிட மேலும் 40 அடி உயரமுள்ளதாக இருக்க வேண்டும். ஒருவேளை இன்றுள்ள அளவு நீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டுமானால் புதிய அணையை இதைவிடவும் உயரமானதாகக் கட்ட வேண்டி வரும். தற்போதைய 152 அடி உயர அணையே பாதுகாப்பற்றது என்றால் 192 அடியோ அதற்கும் அதிகமாகவோ உயரமுள்ள அணை பாதுகாப்பானதாக இருக்குமா?
ரிக்டர் அளவில் ஆறுக்கும் அதிகமான புள்ளிகள் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டால் புதிய அணைக்கட்டும் நொறுங்குவதற்கான சாத்தியமே அதிகம். எனவே புதிய அணை நிர்மாணம் கேரளீயர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யாது. புதிய அணைகட்டும் யோசனை தமிழகத்துக்கும் நன்மையளிக்காது. ஏனெனில் 999 வருடப் பயன்பாட்டுக்கு ஓர் அணைக்கட்டு போதுமானதல்ல; ஐந்தோ ஆறோ அணைக்கட்டுகள் தேவைப்படும். அவ்வளவுக்கும் போதுமான நிலம் முல்லைப் பெரியாறு பகுதியில் இல்லை.
பாதுகாப்பை முன்னிறுத்திப் புதிய அணையைக் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டால் கூட மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அதற்கு அனுமதியளிக்காது. ஏனெனில் பெரியார் தேசியப் புலிகள் சரணாலயத்தையும் உலக மரபுச் சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பீர்மேடு தாலுக்கா வனங்களையும் புதிய அணைக்கட்டு அழித்துவிடும். அதற்குச் சுற்றுச் சூழல் துறை அனுமதி வழங்க இயலாது.
அதனால் கேரளத்துக்குப் பாதுகாப்பும் தமிழகத்துக்குத் தண்ணீரும் வழங்கக்கூடிய தீர்வே இன்றைய தேவை. கேரளத்திலும் வெளியிலுமிருக்கும் நிபுணர்கள் பலருடன் கலந்து பேசித் தயாரிக்கப்பட்ட அத்தகைய ஆலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாற்று யோசனைக்கு இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று உடனடியாகச் செய்ய வேண்டியது. அடுத்தது, பிரச்சினையின் நிரந்தரத் தீர்வுக்கானது.
1. உடனடியாகச் செய்ய வேண்டியது:
தற்போது தமிழகத்துக்குத் தண்ணீர் கொண்டுசேர்க்கும் சுரங்க வழி 104 அடி உயரத்தில் உள்ளது. இதை இறக்கி 90 அடியில் சுரங்கக் குழாயை உருவாக்கலாம். அதன் மூலம் அணைக்கட்டின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 104 அடியாகக் குறைக்க முடியும். அதற்காக இப்போது நீர் கொண்டு செல்லும் 2.5 கி.மீ. கால்வாயின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு கி. மீ. தூரத்துக்குப் பாறையைத் துளைத்து ஒரு சுரங்க வழியை ஏற்படுத்த வேண்டும். இன்று புதிய தொழில்நுட்பம் வசமாக இருப்பதால் இதை எளிதாகச் செய்ய முடியும். அதன் மூலம் தமிழகத்துக்கு இன்று கிடைப்பதுபோலவே தண்ணீர் கிடைக்கும். அணைக்கட்டிலுள்ள நீரின் அழுத்தம் குறையுமென்பதால் அணைக்கட்டு நொறுங்கி ஆபத்து ஏற்படும் என்ற பயத்தையும் போக்க முடியும்.
2. பிரச்சினையில் நிரந்தரத் தீர்வுக்காகச் செய்ய வேண்டியது:
தமிழ்நாட்டில் நீர் பெறும் பகுதியைவிட 1,300 அடி உயரத்தில் தான் இப்போது முல்லைப் பெரியாறு அணைக்கட்டு அமைந்திருக்கிறது. இதை 50 அடி குறைக்க வேண்டும். பின்னர் அணையையொட்டிய பகுதியிலேயே 50 அடி உயரமும் 20 அடி விட்டமும் கொண்ட புதிய சுரங்க வழியை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் தற்போது தமிழகத்துக்கு தரும் அளவைவிட மேலும் ஒன்றோ இரண்டோ டிஎம்சி அளவு அதிக நீரைத் தர முடியும். இதன் மூலம் அணையின் நீர்மட்டம் 50 அடிவரை குறையும். எனவே அணையின் மேலுள்ள நீரின் அழுத்தமும் 90 சதவீதம் குறையும். முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யவும் முடியும். நிபுணர்கள் இந்த யோசனைகளை ஆராய்ந்து தேவையான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
(முல்லைப் பெரியாறு அணை உடையுமானால் கேரளத்துக்கு ஏற்படக்கூடிய இழப்புகளைத் தவிர்க்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரிக் கோட்டயம் மாவட்டத்தில் நடந்த போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர் பேராசிரியர் பி. சி. ராய். அவர் நிபுணர்களுடன் நீண்ட ஆலோசனை நடத்தி முன் வைத்திருப்பவையே மேற்சொன்ன மாற்று யோசனைகள். இவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் அவரைத் தொடர்புகொள்ளலாம். பேராசிரியர் ராயின் தொடர்பு எண் 09447200707).
டாக்டர் எம். கங்காதரன் (1933) வரலாற்று ஆசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர் ஆகிய நிலைகளில் அறியப்படும் டாக்டர் எம். கங்காதரன் அடிப்படையில் சிந்தனையாளர். கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியில் வசிக்கிறார். 1998இல் மொழிபெயர்ப்புக்கான கேரள சாகித்திய அக்காதெமி விருதுபெற்றவர்.
டாக்டர் எம். கங்காதரன்
தமிழில்: சுகுமாரன்
இந்தியாவின் முதலாவது நதி மாற்று அணைத் திட்டம் (ணூடிதிஞுணூ ஞீடிதிஞுணூண்டிணிண ஞீச்ட்) முல்லைப் பெரியாறு அணைத் திட்டம். கடலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பெரிய நதியின் போக்கைத் திருப்பித் தமிழகத்திலுள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாத புரம் ஆகிய மாவட்டங்களில் வறண்டு கிடந்த விளைநிலங்களை ஈரமாக்கவும் அங்கே தண்ணீர் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்தவர்களுக்குத் தன்ணீர் கிடைக்கச் செய்யவும் ஓர் அணையை 116 ஆண்டுகளுக்கு முன்பு (1886இல்) கர்னல் ஜான் பென்னி குயிக் என்னும் பொறியாளர் நிர்மாணித்தார். பென்னி குயிக் தாய்ப் பாசத்துடன் ஆற்றைத் திருப்பிவிட்டு வாடிக்கொண்டிருந்த மக்களின் பசிக்கும் தாகத்துக்கும் முடிவுகண்டார் என்ற பொருளில் அந்தோணி முத்துப் பிள்ளை என்னும் தமிழக நாட்டுப்புறக் கவிஞர் எழுதியது முற்றிலும் சரி. ஒரு மக்கள்திரளுக்கு ஜீவ ஜலம் வழங்கக் குயிக் என்னும் பொறியாளர் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டார். அது ஒப்பற்ற சேவை.
அதே சமயம், 116 ஆண்டுகள் பழமை வாய்ந்த அணை இப்போது வலுவிழந்த நிலையிலிருக்கிறது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பழைய காலத்தில் சுர்க்கியில் நிர்மாணிக்கப்பட்ட 20 அடிக்கும் அதிகமான உயரமுள்ள பல அணைகளும் தடுப்பணைகளும் இன்று புதுப்பிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் கட்டுமானங்கள் பாதுகாப்பற்றவையாக மாறும் என்பதைத் தமிழ்நாடு புரிந்துகொண்டிருப்பதைத்தானே இது காட்டுகிறது. முல்லைப் பெரியாறு அணைப் பகுதிகளில் அண்மைக் காலமாக அதிக அளவில் சிறு நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றைவிடப் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படாது என யாராலும் உறுதிகூற முடியாது. ரிக்டர் அளவில் ஆறுக்கும் அதிகமான புள்ளியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் முல்லைப் பெரியாறு அணைக்கட்டு உடைந்து நொறுங்கும் என்பது உறுதி. இது போன்று ஓர் ஆபத்து ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக மூன்று பதிற்றாண்டுகளுக்கு முன்பே நிபுணர்கள் முன்னெச்சரிக்கை செய்துமிருக்கிறார்கள். எனவே முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பலவீனமடையவில்லை எனச் சொல்லிக்கொண்டு இன்று தமிழக அரசு எதுவும் செய்யாமலிருப்பது சரியானதல்ல.
முல்லைப் பெரியாறு அணைக் கட்டு உடைவதைத் தடுக்க இன்னொரு அணை தேவை எனக் கேரள அரசு இன்று கோருகிறது. தற்போதைய அணையிலிருந்து 1,300 அடி தூரம் தள்ளிப் புதிய அணையைக் கட்ட ஆலோசிக்கிறது. அந்த இடம் இன்றைய அணையின் மட்டத்துக்கு 40 அடி கீழே அமைகிறது. அப்படியானால் புதிய அணைக்கட்டு இப்போதைய அணையின் உயரமான 15 அடியைவிட மேலும் 40 அடி உயரமுள்ளதாக இருக்க வேண்டும். ஒருவேளை இன்றுள்ள அளவு நீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டுமானால் புதிய அணையை இதைவிடவும் உயரமானதாகக் கட்ட வேண்டி வரும். தற்போதைய 152 அடி உயர அணையே பாதுகாப்பற்றது என்றால் 192 அடியோ அதற்கும் அதிகமாகவோ உயரமுள்ள அணை பாதுகாப்பானதாக இருக்குமா?
ரிக்டர் அளவில் ஆறுக்கும் அதிகமான புள்ளிகள் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டால் புதிய அணைக்கட்டும் நொறுங்குவதற்கான சாத்தியமே அதிகம். எனவே புதிய அணை நிர்மாணம் கேரளீயர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யாது. புதிய அணைகட்டும் யோசனை தமிழகத்துக்கும் நன்மையளிக்காது. ஏனெனில் 999 வருடப் பயன்பாட்டுக்கு ஓர் அணைக்கட்டு போதுமானதல்ல; ஐந்தோ ஆறோ அணைக்கட்டுகள் தேவைப்படும். அவ்வளவுக்கும் போதுமான நிலம் முல்லைப் பெரியாறு பகுதியில் இல்லை.
பாதுகாப்பை முன்னிறுத்திப் புதிய அணையைக் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டால் கூட மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அதற்கு அனுமதியளிக்காது. ஏனெனில் பெரியார் தேசியப் புலிகள் சரணாலயத்தையும் உலக மரபுச் சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பீர்மேடு தாலுக்கா வனங்களையும் புதிய அணைக்கட்டு அழித்துவிடும். அதற்குச் சுற்றுச் சூழல் துறை அனுமதி வழங்க இயலாது.
அதனால் கேரளத்துக்குப் பாதுகாப்பும் தமிழகத்துக்குத் தண்ணீரும் வழங்கக்கூடிய தீர்வே இன்றைய தேவை. கேரளத்திலும் வெளியிலுமிருக்கும் நிபுணர்கள் பலருடன் கலந்து பேசித் தயாரிக்கப்பட்ட அத்தகைய ஆலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாற்று யோசனைக்கு இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று உடனடியாகச் செய்ய வேண்டியது. அடுத்தது, பிரச்சினையின் நிரந்தரத் தீர்வுக்கானது.
1. உடனடியாகச் செய்ய வேண்டியது:
தற்போது தமிழகத்துக்குத் தண்ணீர் கொண்டுசேர்க்கும் சுரங்க வழி 104 அடி உயரத்தில் உள்ளது. இதை இறக்கி 90 அடியில் சுரங்கக் குழாயை உருவாக்கலாம். அதன் மூலம் அணைக்கட்டின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 104 அடியாகக் குறைக்க முடியும். அதற்காக இப்போது நீர் கொண்டு செல்லும் 2.5 கி.மீ. கால்வாயின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு கி. மீ. தூரத்துக்குப் பாறையைத் துளைத்து ஒரு சுரங்க வழியை ஏற்படுத்த வேண்டும். இன்று புதிய தொழில்நுட்பம் வசமாக இருப்பதால் இதை எளிதாகச் செய்ய முடியும். அதன் மூலம் தமிழகத்துக்கு இன்று கிடைப்பதுபோலவே தண்ணீர் கிடைக்கும். அணைக்கட்டிலுள்ள நீரின் அழுத்தம் குறையுமென்பதால் அணைக்கட்டு நொறுங்கி ஆபத்து ஏற்படும் என்ற பயத்தையும் போக்க முடியும்.
2. பிரச்சினையில் நிரந்தரத் தீர்வுக்காகச் செய்ய வேண்டியது:
தமிழ்நாட்டில் நீர் பெறும் பகுதியைவிட 1,300 அடி உயரத்தில் தான் இப்போது முல்லைப் பெரியாறு அணைக்கட்டு அமைந்திருக்கிறது. இதை 50 அடி குறைக்க வேண்டும். பின்னர் அணையையொட்டிய பகுதியிலேயே 50 அடி உயரமும் 20 அடி விட்டமும் கொண்ட புதிய சுரங்க வழியை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் தற்போது தமிழகத்துக்கு தரும் அளவைவிட மேலும் ஒன்றோ இரண்டோ டிஎம்சி அளவு அதிக நீரைத் தர முடியும். இதன் மூலம் அணையின் நீர்மட்டம் 50 அடிவரை குறையும். எனவே அணையின் மேலுள்ள நீரின் அழுத்தமும் 90 சதவீதம் குறையும். முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யவும் முடியும். நிபுணர்கள் இந்த யோசனைகளை ஆராய்ந்து தேவையான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
(முல்லைப் பெரியாறு அணை உடையுமானால் கேரளத்துக்கு ஏற்படக்கூடிய இழப்புகளைத் தவிர்க்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரிக் கோட்டயம் மாவட்டத்தில் நடந்த போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர் பேராசிரியர் பி. சி. ராய். அவர் நிபுணர்களுடன் நீண்ட ஆலோசனை நடத்தி முன் வைத்திருப்பவையே மேற்சொன்ன மாற்று யோசனைகள். இவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் அவரைத் தொடர்புகொள்ளலாம். பேராசிரியர் ராயின் தொடர்பு எண் 09447200707).
டாக்டர் எம். கங்காதரன் (1933) வரலாற்று ஆசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர் ஆகிய நிலைகளில் அறியப்படும் டாக்டர் எம். கங்காதரன் அடிப்படையில் சிந்தனையாளர். கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியில் வசிக்கிறார். 1998இல் மொழிபெயர்ப்புக்கான கேரள சாகித்திய அக்காதெமி விருதுபெற்றவர்.
டாக்டர் எம். கங்காதரன்
தமிழில்: சுகுமாரன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சின மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் பாதிப்பில்லாமல் தீர்வுகாணச் சில யோசனைகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சின மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் பாதிப்பில்லாமல் தீர்வுகாணச் சில யோசனைகள்
#773017- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பகிர்விற்கு நன்றி சிவா....
தகவலுக்கு நன்றி கொலவெறி deleted ...
தகவலுக்கு நன்றி கொலவெறி deleted ...
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சின மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் பாதிப்பில்லாமல் தீர்வுகாணச் சில யோசனைகள்
#773025- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பிரசன்னா இது ரிபீட்டு - டெலீட் பண்ணிடுவோமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Re: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சின மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் பாதிப்பில்லாமல் தீர்வுகாணச் சில யோசனைகள்
#773289- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
முல்லைப் பெரியாறு அணை உடையுமானால் கேரளத்துக்கு ஏற்படக்கூடிய இழப்புகளைத் தவிர்க்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரிக் கோட்டயம் மாவட்டத்தில் நடந்த போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர் பேராசிரியர் பி. சி. ராய். அவர் நிபுணர்களுடன் நீண்ட ஆலோசனை நடத்தி முன் வைத்திருப்பவையே மேற்சொன்ன மாற்று யோசனைகள். இவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் அவரைத் தொடர்புகொள்ளலாம். பேராசிரியர் ராயின் தொடர்பு எண் 09447200707
பேராசிரியர் பி. சி. ராய் அவர்களுக்கு நன்றி... அரசியல்வாதிகள் இதை நடைமுறையில் சாத்தியம் என்று ஏற்று கொள்ளவேண்டுமே... !
Re: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சின மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் பாதிப்பில்லாமல் தீர்வுகாணச் சில யோசனைகள்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|