புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10 
44 Posts - 61%
heezulia
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10 
236 Posts - 43%
heezulia
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 4:47 am

First topic message reminder :

தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 DSC_1075-200x300

முன்னுரை:

14ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் (1320-1323) பாண்டிய மன்னர்களுக்குள் உள்நாட்டுப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இசுலாமியர்கள் தமிழகத்தின் மீது தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். மாலிக்காப10ரின் படையெடுப்பு தொடங்கி முகமது துக்ளக் ஆட்சி வரை பல முறை இசுலாமியர் படையெடுப்பு நிகழ்ந்தது. முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் மதுரை டில்லி சுல்தானியத்தின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. முகமதுபின்துக்ளக் ஆட்சி காலத்தில் டெல்லியில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மதுரையின் ஆளுநராக இருந்த ஜலாலூதீன் ஆசான் ஷா 1335ல் தன்னை சுல்தானியத்திலிருந்து விடுவித்துக் கொண்டு மதுரை சுல்தனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவ்வாறு தோன்றிய மதுரை சுல்தானியர்கள் இங்குள்ள இந்துக்களை கொடுமைப்படுத்தியும் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டதால் மக்கள் சொல்லாத துன்பத்திற்கு ஆளானார்கள். தாங்களை இந்த துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கு தகுந்த நேரத்தையும் மீட்பவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த சூழ்நிலையில் விஜய நகர பேரரசின் அரசரின் மகனான (முதலாம் புக்கரின் மகன்) குமார கம்பணாவை மதுரையை கைப்பற்றுமாறு அனுப்பி வைத்தார். 1371 ல் திருச்சியை கைப்பற்றிய குமார கம்பணன் மதுரையையும் கைப்பற்றி விஜய நகர பேரரசின் ஆட்சியை மதுரையில் நிறுவினார்கள்.

இவ்வாறு தமிழகத்தில் ஆட்சி நடத்திய விஜய நகர பேரரசை தோப்ப10ர் 1616 போருக்கு பின்னால் தனது வலிமையை இழக்கத் தொடங்கியது. ஏற்கனவே விஜய நகர பேரரசின் கீழ் பணிபுரிந்த நாயக்கர்கள் மதுரையை தங்களின் சுதந்திர அரசாக அறிவித்தன. இதனைத் தொடாந்து தஞ்சை, செஞ்சி, ஆகிய நாயக்க அரசுகள் தோன்றின.

ஜமீன்தாரி முறை 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. 1801ல் கர்நாடக ஒப்பந்தத்தின் படி தென்தமிழகம் முழுவதும் ஆங்கிலேயர் கைவசம் ஆயிற்று. அதுவரை இருந்த பாளையஙகள் அனைத்தும் 1802 ல் ஜமீன்தாரி முறையாக மாற்றப்பட்டது. அதன்படி தலைவன் கோட்டை ஜமீன் உருவானது. தலைவன் கோட்டை ஜமீன் திருநெல்வேலி பாளையங்களில் ஒன்றாகும். இதன் தோற்றம் வளர்ச்சி, நிர்வாக முறை மற்றும் சமயத் தொண்டுகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

ஆய்வின் நோக்கம் :

19 ம் நூற்றாண்டில் ஸ்தல நிர்வாக முறையில் மிகவும் சிறப்பு பெற்று விளங்கியது ஜமீன்தாரி முறையாகும். தலைவன் கோட்டை ஜமீன் சங்கரன்கோவில் சங்கர நாராயணர்; கோவிலில் முதல் மரியாதை பெற்ற ஜமீன் ஆகும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தலைவன்கோட்டை ஜமீன் வரலாறு இதுவரை வெளிவராமல் இருந்தது. இந்த குறையைப் போக்கும் வகையில் தலைவன் கோட்டை ஜமீன்களின் மரபு வழி வரலாறும், ஆட்சி நிர்வாகம் போன்ற பல்வேறு தகவல்களையும் தொகுத்துக் கூறுவதே இந்த ஆய்வின் நோக்கம்.

மேலும் நம்மைச் சுற்றியுள்ள வரலாற்று நிகழ்வுகளை நாம் தெரிந்து கொள்வது மட்டுமின்றி இப்பகுதி மக்களும் தெரிந்து கொள்ள இவ்வாய்வு உதவும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்.



தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 5:03 am

தேவர் ஜெயந்தி:

இவ்வூரில் தேவர் சமுதாய மக்கள் ஆண்டுதோறும் அக்டோபர் 30ந் தேதி ஊர் பொது மக்களின் செலவிலும், மறவர் சமுதாய இளைஞர்கள் செலவிலும் தேவர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அப்போது இங்குள்ள இளைஞர்களுக்கு கபடி போட்டி, கண்ணைக் கட்டி பானை உடைத்தல் போட்டி, மோட்டார் சைக்கிள் போட்டி, சைக்கிள் போட்டி ஆகிய போட்டிகள் நடைப்பெறும்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒட்டப்போட்டி, இசை நற்காலி போட்டி, கோ – கோ விளையாட்டு போட்டிகள் நடைப்பெறும்.

அக்டோபர் 30 ந் தேதி காலையில் தேவர்க்கு பால் அபிஷேகம், தீர்த்தக்குடம் (குற்றாலம் நீர்) அபிஷேகம் நடைப்பெறும் இவ்வூர்

இளைஞர்கள் தேவர் சிலைக்கு முன் அமர்ந்து மொட்டைப் போடுவார்கள். பின்பு இனிப்புகள் வழங்கப்படும் அதற்கு பிறகு இரவு 7 மணி அளவில் விளையாட்டில் கலந்துக் கொண்டு வெற்றிப் பெற்ற இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த இவ்வூர் மாணவ, மாணவிகளுக்கு பரிசாக ரொக்கப் பணம் ரூ.1000 முதல் 3000 வரை வழங்கப்படும். இவ்வாறு இவ்வூர் மக்கள் தேவர் ஜெயந்தியை கோவில் திருவிழா போல் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

இயல்-6

தலைவன்கோட்டை மக்களின் பொருளாதார நிலை விவசாயம்

தலைவன் கோட்டையில் உள்ள மக்கள் அதிகம் பேர் விவசாயத் தொழிலை முக்கியத் தொழிலாக கொண்டுள்ளனர். இவர்கள் பழைய முறையில் இருந்து மாறுபட்டு நவீன யுக்தி முறைகளை கையாண்டு பயிரிடுகின்றனர். காய்கறிகள் மற்றும் வீரிய விதை வித்துக்களை பயிர் செய்கின்றனர். குறிப்பாக வறட்சிக் காலங்களில் ஒரு சிலர் மல்லிகைப் ப10 செடிகள் பயிர் செய்கின்றன. பருவ மழை காலத்தில் நெல்பயிர் செய்கின்றனர். பணப்பயிர்களான பருத்தி, சோளம், கம்பு, கேழ்வரகு ஆகியவை பயிர் செய்கின்றனர். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை செழிப்படைகிறது. மக்கள் விரும்பும் பொருட்கள் வாங்கி நுகரவும் இயலுகிறது.

பால் தொழில்:

தலைவன் கோட்டை கிராமத்தில் வாழ்கின்ற மக்களில் 65மூ பேர் பெண்கள் வீட்டில் பால் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த பால் மாடுகளை இவர்கள் கூட்டுறவு வங்கி மூலம் லோன் வாங்கி மாடு வாங்குகின்றனர். இந்த கூட்டுறவு வங்கி மூலம் அதிகமான ஏழை மக்கள் தவணை முறைக் கடன் பெற்று மாடுகளை வாங்குகின்றனர். மேலும் மாடுகளின் இனப்பெருக்கத்திற்கு ஊசி போடப்படுகிறது. கறவை மாடுகளை வைத்து பெரும்பாலான மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். இதன் மூலம் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் உயருகிறது.

கூலி வேலை:

இங்கு வாழ்கின்ற பெரும்பான்மையான மக்கள் விவசாய கூலியாக வேலை செய்கின்றனர். இவர்கள் பக்கத்து கிராமமக்களுக்குச் சென்று வேலை செய்வது அல்ல. ஒரு நாள் விவசாய வேலைக்கு பெண்களுக்கு கூலி ரூ. 80 ஆகும். ஆண்களுக்கு கூலி ரூ. 150 வாங்குகின்றனர். கூலி வேலைக்கு செல்கின்ற இவர்களுக்கு பருவ காலங்களில் மாதம் முழுவதும் வேலை கிடைக்கிறது. கோடை காலங்களில் மாதத்திற்கு 15 நாட்களுக்கு குறைவாக வேலை கிடைக்கிறது. இதன் மூலம் கிடைக்கின்ற வருவாயை வைத்து வாழ்க்கை நடத்துகின்றனர். இது அவர்களின் வாழ்வை வளம் செழிக்க செய்கிறது.

பீடி சுற்றும் தொழில்:

தலைவன் கோட்டை கிராமத்தில் உள்ள பெண்களில் 100 க்கும் மேற்பட்டவர்கள் பீடி சுற்றும் தொழில் புரிந்து வருகின்றனர். 20 வயது முதல் 25 வயது உள்ள பெண்களே அதிகமாக பீடி சுற்றும் தொழிலை செய்து வருகின்றன. இதன் மூலம் இவர்கள் ஒரு நாளைக்கு ரூ.60 வருமானம் கிடைக்கிறது. வருமானம் அதிகரிப்பது அவர்களது திறமைகளைப் பொறுத்தது ஆகும். இவர்களுக்கு தேவையான மூலப்பொருட்களை பீடி உரிமையாளர்கள் வாரத்திற்கு ஒருமுறை வழங்குகின்றனர். இதன் மூலம் பெண்கள் தங்களது சொந்த முயற்சியின் மூலம் உயருகின்றனர். இதன் மூலம் பெண்களின் முன்னேற்றம் தெரிகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் சரிசமமாக வாழ இயலும் என்று இதன் மூலம் அறியலாம்.

மரக்கொல்லர்:

இத்தொழிலைச் செய்பவர் ஆசாரி என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தலைவன் கோட்டை கிராமத்தில் 50 க்கு மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வீடுகளுக்குத் தேவையான கதவு, ஜன்னல் நிலைகள், உத்திரம், நாற்காலி, மேஜை போன்ற பொருட்கள் தயார் செய்கின்றனர். விவசாயத்திற்குத் தேவையான மண் வெட்டிகளை கொத்தி, கழப்பை போன்றவைகளை உற்பத்தி செய்வார்கள்.

அரசு பணியில் உள்ளவர்கள்:

இவ்வூரில் வாழ்கின்ற மக்களில் 100 க்கும் அதிகமான மக்கள் அரசு பணியில் பணியாற்றுகின்றனர். இவர்கள் வெளிய10ர் சென்று வேலை செய்கின்றனர். இதில் இராணுவத்தில் 40 பேரும், காவல் துறையில் 5 பேரும், மருத்துவராக 3 பேரும், ஆசிரியராக 15 பேரும், மதுப்பானக் கடையில் 3 பேரும், வழக்கறிஞராக 15 பேரும் சிறந்த முறையில் பணியாற்றுகின்றனர்.

இடம் பெயர்ந்து வேலை வாய்ப்பு (டவர் லையன் வேலை)
இங்குள்ள மக்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காடுகள் ஆண்கள் (டவர் லையன்) மின்சார கோபுரங்கள் அமைக்கும் பணியில் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் பணிபுரிகின்றன. இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாடுகளில் குறிப்பாக மஸ்கட், சவுதி அரேபியா, மலேசியா, துபாய், குவைத், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் பணிச் செய்கின்றன. இவ்வாறு வெளிநாடுகளில் பணி செய்வதால் நல்ல சம்பளம் பெறுவதின் மூலம் இவ்வூர் மக்களின் பொருளாதார நிலை சற்று மேம்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தொழிலில் இவர்கள் ஈடுபடுவதற்கு அடிப்படை காரணமாக இருந்தவர் “டாக்டர் திரு. அய்யாத்துரைப் பாண்டியன்” அவர்கள் ஆவார். இவர் இந்த தொழிலை மொத்தம் ஒப்பந்தத்தின் மூலமாக வேலை செய்தால் இவ்வூர் மக்கள் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிறார். ஆகவே தான் எத்தனை வகையான தொழில்கள் இருந்தும் டவர் லையன் என்று சொல்லப்படுகிறது. இந்த தொழிலில் இவ்வூர் மக்கள் அதிகமாக ஈடுபட்டு பொருள் சம்பாதிக்கின்றன. இத்தொழிலில் பலர் பொறியாளர்களாகவும், மேலாளராகவும் பணியாற்றுகின்றன.



தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 5:06 am

சாலைப்போக்குவரத்து வசதி:

இவ்வூருக்காக சாலை போக்குவரத்து வசதி நன்றாக உள்ளது. இந்த ஊர் சங்கரன்கோவிலிருந்து புளியங்குடி செல்லும் பிரதான சாலையிலிருந்து முள்ளிக்குளம் என்ற கிராமத்திலிருந்து பிரிந்து வாசுதேவநல்லூர் செல்லும் மாவட்ட நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதன் வழித்தடத்தில் கோவில்பட்டியிலிருந்து சிவகிரி, தளவாய் புரத்திற்கும், திருமலைக் கோவிலில் இப்பேருந்து தடத்தை இணைக்கின்றன.

இவ்வூருக்குள் நான்கு பேருந்துகள் வசதியுள்ளன. அவை பின்வருமாறு.
1. அரசு பேருந்தான 10 யு
2. தனியார் பேருந்துகள்
1. லையன்
2. சத்யா
3. எம்.ஆர் கோபாலன்
ஆகிய நான்கு பேருந்துகள் வசதியுள்ளன.

லையன் பேருந்து :
இப்பேருந்து 1997 ம் ஆண்டு முதல் இவ்வூருக்கு இயக்கப்பட்டது. இப்பேருந்து கோவில்பட்டி முதல் சிவகிரி வரை இயக்கப்படுகிறது. இவை காலை 8.10 மணிக்கும் மதியம் 1.45 மணிக்கும், மாலை 4 மணிக்கும் இரவு 10.15 மணிக்கும் இப்பேருந்து 4 முறை ஊர்க்குள் வந்து திரும்புகின்றது இப்பேருந்து.

சத்யா பேருந்து :
இப்பேருந்து 1999 லிருந்து இவ்வூர்க்கு இயக்கப்பட்டது. இப்பேருந்து கோவில்பட்டி முதல் தளவாய்ப்புரம் வரை இயக்கப்படுகிறது. இவை காலை 10.15 மணிக்கும், மதியம் 1.30 மணிக்கும் மாலை 6.20 மணிக்கும் இரவு 9.15 மணிக்கும் இப்பேருந்து 4 முறை ஊருக்குள் வந்து திரும்புகின்றது இப்பேருந்து.

எம்.ஆர்.கோபாலன் :
இப்பேருந்து 2000 லிருந்து இவ்வூர்க்கு இயக்கப்பட்டது. இப்பேருந்து கோவில்பட்டி முதல் திருமலைக்கோவில் வரை இயக்கப்படுகிறது. காலை 7 மணிக்கும், இரவு 8.15 மணிக்கும் இப்பேருந்து 2 முறை ஊருக்குள் வந்து திரும்புகின்றன.

அரசுப் பேருந்து 10 யு

இப்பேருந்து சங்கரன்கோவில் முதல் வாசுதேவநல்லூர் வரை இயக்கப்படுகிறது. தலைவன் கோட்டை, மலையடிக் குறிச்சி, தாருகாபுரம், வெள்ளாணைக் கோட்டை, சுப்பிரமணிய புரம் ஆகிய கிராமங்களுக்குள் சென்று வாசுதேவநல்லூர் செல்கிறது. இப்பேருந்து அதிகாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இயக்கப்படுகிறது. இவை 15 முறை இவ்வூர்க்குள் இப்பேருந்து வருகின்றன.

முடிவுரை:

தலைவன் கோட்டை குறுநில மன்னரின் வாரிசாக 93 வயதுடைய சந்திரன் என்ற இந்திரராமசாமி பாண்டியன் அவர்களது புதல்வர்களும் தாருகாபுரத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். தருக்களாகிய மரங்களும் மலை வளமும் நில வளமும் பெற்ற பழமையான ஊர் தாருகாபுரம். இவ்வாறு சிறப்பு வாய்ந்த வரலாற்றைத் தந்த தலைவன் கோட்டை இன்றும் சிறப்புடன் திகழ்கிறது. பல நூற்றாண்டுகளாக வெளிவராத இது போன்ற வரலாற்று உண்மைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் உள்ளது. அவற்றை வெளிக் கொண்டு வந்து வரலாற்றின் எதிர் கால சந்ததியினர் அறியும் பொருட்டு இவ்வாய்வு மேற்கொள்ள பட்டிருக்கிறது.

துணை நூல்கள்:

1. கு.ராசைய்யன், பாளைக்காரர் வரலாறு, மதுரை, 1973
2. தேவனேசன், தமிழக வரலாறு, மார்த்தாண்டம், 1990
3. திருக்குறள் இரா.நடராஜன், செந்தமிழ் நாட்டு செம்மை மறவர்கள், திருநெல்வேலி-1991
4. மு.ஞானத்தாய், மறவர் கதைப் பாடல்கள், சென்னை, 2006
5. ஜே.தர்மராஜ், தமிழக வரலாறு ராஜபாளையம்-2005.
6. வே.தி.செல்லம், தமிழக வரலாறும் பண்பாடும், சென்னை, 1995
7. ஊராட்சி நிர்வாகம், தமிழக ஊராட்சி சட்டம், சென்னை, 1994 அரசு வெளியீடு.
8. ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள், தலைவன் கோட்டை ஊராட்சி தகவல் சிற்றேடு
9. ந.சஞ்சீவி, கிருட்டினா சஞ்சீவி, திருநெல்வேலி சரித்திரம், சென்னை 2004.

www.thevarthalam.com



தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 11, 2012 9:04 am

சிவா அண்ணா அரிய அறிய பல தகவல்கள் அளிதமைக்கு நன்றி அன்பு மலர் நன்றி

alageshhariharasudhan
alageshhariharasudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 23/04/2012

Postalageshhariharasudhan Mon Apr 23, 2012 6:32 pm

[b]வணக்கம் திரு சிவா அவர்களே மேற்கண்ட வரலாற்று தகவல்களை படிதேன் மிகவும் அருமயக இருந்தது .மற்றும் உங்களுக்கு யென் குடும்பத்தின் (தளவாங்கோட்டை ஜமீன்தார்) சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன் ,,,எனது பூடனார் திரு இந்திரா ராமசாமி பாண்டியன் அவர்களின் குறிப்பு மிகவும் நன்றாக இருந்தது ,நீங்கள் கண்டிப்பாக எங்கள் வீட்டிற்கு வார வேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 23, 2012 6:35 pm

alageshhariharasudhan wrote:[b]வணக்கம் திரு சிவா அவர்களே மேற்கண்ட வரலாற்று தகவல்களை படிதேன் மிகவும் அருமயக இருந்தது .மற்றும் உங்களுக்கு யென் குடும்பத்தின் (தளவாங்கோட்டை ஜமீன்தார்) சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன் ,,,எனது பூடனார் திரு இந்திரா ராமசாமி பாண்டியன் அவர்களின் குறிப்பு மிகவும் நன்றாக இருந்தது ,நீங்கள் கண்டிப்பாக எங்கள் வீட்டிற்கு வார வேண்டும்

கண்டிப்பாக வருகிறேன் அழகேஷ்! ஆனால் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று கூறிவிட்டால் அதற்குத் தகுந்தார் போல் என் உடம்பைத் தயார் செய்து கொண்டு வருவேன்.

முன்புபோல் இப்பொழுது அதிகமாக அடிவாங்க முடியவில்லை. அதனால்தான் கேட்டேன்!



தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 23, 2012 6:59 pm

நீண்ட வரலாறை படித்து முடித்து விட்டேன் சிரி , தலைவன் கோட்டை ஜமீன் பற்றி அறியதந்தமைக்கு மிக்க நன்றி சிவா

alageshhariharasudhan
alageshhariharasudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 23/04/2012

Postalageshhariharasudhan Tue Apr 24, 2012 9:04 am

நான் உங்களை விருந்தாளியாகதான் அலைதேன் எதிரியாக அல்ல ,,,,உங்கள் சொந்த ஊர் எதுவென்று தெரிந்து கொள்ளலாமா தோலாறே,,,,,,,

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 24, 2012 1:41 pm

தல நானும் சிங்கம் பாட்டி ஜமீன் தான் அதனால எங்க வீட்டுக்கும் வாங்க அழகேஷ் அண்ணா கவனிக்குறத விட doublela கவனிச்சிருதேன் உடுட்டுக்கட்டை அடி வ

Dorai A Raj
Dorai A Raj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 24/07/2015

PostDorai A Raj Fri Jul 24, 2015 5:27 pm

Dear sir,
Splendid work u have done.Nice info.
As a member of Seithur House let me tell this to the world that no Seithur House member studied at Newton college when De La Ge murder happened in the year 1919.
My ancestors were innocent hence that detail may kindly be removed in this history about Thalaivanaars.
Regards,
Dorai M A Raj

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 24, 2015 7:42 pm

சிவா அவர்களே !
சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான் காப்பாட்சியராகப் பணி புரிந்தபோது அங்கிருந்த பாளையப்பட்டு வம்சாவளிச் சுவடிகளை
நன்றாக ஆராய்ந்தவன் ! அந்தப் பழைய நினைவுகளைக் கிளப்பிவிட்டீர்கள் ! மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு ! தொடர்ந்து இதுபோல் வழங்குங்கள் !

தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 1571444738 தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 103459460 தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 1571444738 தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு - Page 2 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக